அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையாயுள்ளவர்களே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உலகெங்கிலும் உள்ள இந்த "ஒலிநாடாவை கேட்கிற ஜனங்கள்" மூலம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பல சபைகள் திகைப்புற்று, பதற்றமடைந்து, திகைப்படைந்து, பிரமிப்படைந்து, குழப்பமுற்று, தடுமாற்றமடைந்தும் கூட இருக்கின்றன.
இது கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பாய், குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, நம்மை ஆயத்தப்படுத்துகிறதாயுள்ளது. நம்முடைய பரலோக மணவாளன் அவரோடு இருக்கும் நம்முடைய வருங்கால வீட்டைப் பற்றி நம்மிடம் சொல்லிக்கொண்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு அவர் நம்மிடம் கூறினார்: “இந்த உலகம் உங்களுடைய வீடு அல்ல, இது சாத்தானின் ஏதேன், நான் அதை அக்கினியால் அழிப்பேன். நீங்கள் என்னுடைய இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், உலகத் தோற்றத்திற்கு முன்பே என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி நான் தெரிந்துகொண்டேன். இப்போது, இந்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு என்னுடைய அதிசீக்கிரமான வருகையான ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்."
இப்படிப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் நாம் இருக்கிறோம். நம்மால் அதை ஆகாயத்தில் உணர முடியும். காரியங்களோ மிக துரிதமாக சம்பவித்துக் கொண்டிருக்கிறன.
இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறினதோ, அதுவே ஒவ்வொரு நாளும் சம்பவித்துக்கொண்டிருக்கிறது. காரணம், இது அங்கே வேகமாக, அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து கொண்டிருக்கிறது, அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன, என்னால் அவைகளை தொடர்ந்து மனதில் வைத்திருக்கக் கூட முடியவில்லை. நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருந்து, அவருடைய சபையுடன் ஒன்றாக இணைக்கப்படத்தக்கதாக, வார்த்தையோடு வார்த்தையாகிறோம்.
இந்த நாளின் மணவாட்டியான, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியான நமக்காக இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் காரியங்கள் வெளிப்படுவதை நாம் மாத்திரமே காண்கிறவர்களாக இருக்கிறோம்.
அவர் இந்த காலத்திற்கென நம்மை முன்குறித்திருக்கிறார், எவருமே நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. நாம் அவரோடு ஐக்கியங்கொள்ளும்படியாக குமாரரும் குமாரத்திகளுமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறோம்; அதுதான் அவருக்குத் தேவையாயிருக்கிறது.
நாம் வார்த்தையின் மேல் வார்த்தையாகவும், மூல உயிரணுவின் மேல் உயிரணுவாயும், ஜீவனின் மேல் ஜீவனாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் பரிபூரண வளர்ச்சியாயுமிருக்கிறோம்.
உங்களுக்கு தேவை இருந்தால், அதைப் பேசுங்கள். நீங்கள் வார்த்தையின் மேல் வார்த்தையாய் இருக்கிறீர்கள். நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் உள்ள இருளைப் பார்க்காதீர்கள்; சுகவீனம், வியாதி, கொலை, விரக்தி, அவர்கள் ஒரு மனிதனா அல்லது ஒரு ஸ்திரீயா என்று தெரியாத ஜனங்களின் பைத்தியக்காரத்தனம். நாம் மணவாட்டியாய், முன்குறிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
எதற்கும் பயப்படாதீர்கள். மகிழ்ச்சியாயிருந்து களிகூருங்கள். காலம் சமீபித்துவிட்டது. நாம் இந்த தொற்றுநோய் மருத்துவமனை வீட்டை விட்டுச் செல்ல ஆயத்தமாயிக் கொண்டிருக்கிறோம். மகிமை!!!
ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற செய்தியைக் கேட்பதற்காக எங்களுடன் வந்து ஆயத்தமாகுங்கள். நீங்கள் இருந்து வருகிற விதமாக ஒருபோதும் இருக்க மாட்டீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
சங்கீதம் 27:1-5
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியே,
கர்த்தராகிய இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீட்டிற்கு வந்து, உங்களுடைய ஓய்விருக்கையில் அமர்ந்து, உங்களுடைய கண்களைப் பார்த்து, உங்களிடம் நேரடியாகப் பேசுவதற்கு நீங்கள் என்னக் கொடுப்பீர்கள்
உங்களால் பேச முடியாது. நீங்கள் பேச விரும்பமாட்டீர்கள். நீங்கள் செய்ய விரும்புவதெல்லாம் அவரைப் பார்த்து அழுவதுதான். நீங்கள் உங்களுடைய வாயைத் திறக்கக்கூட பயப்படுவீர்கள். உங்களால் என்னக் கூற முடியும்? கர்த்தாவே, நீர் இங்கே என்னுடைய வீட்டில் இருக்க நான் மிகவும் அப்பாத்திரனாயிருக்கிறேன் என்றே, நீங்கள் உங்களுடைய சிந்தையில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நான் தாழ்ந்தவர்களிலேயே மிகவும் தாழ்ந்தவனாயிருக்கிறேன். கர்த்தாவே நான் அநேக முறை உம்மிடத்தில் தவறியிருக்கிறேன், ஆனாலும் கர்த்தாவே, நான் உம்மை மிகவும் நேசிக்கிறேன்.
நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் சரியாக அறிந்திருக்கிறார் என்பதையும், அவருக்கு மறைவானது எதுவுமில்லை என்றும், அப்பொழுது நீங்கள் உங்களுடைய இருதயத்தில் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். என் இருதயத்தின் இரகசியங்களை அவர் அறிந்திருக்கிறார்.
அவருடைய விலையேறப்பெற்ற கண்களை நீங்கள் பார்க்கும்போது, அத்தகைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் காண்பீர்கள். அவர் வாய் திறவாமலே உங்களிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் உண்மையாகவே இங்கே, என்னுடைய வீட்டில், என்னுடன் இருக்கிறார் என்று, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
அவர் உங்களிடம் ஏதோ சொல்லப் போகிறார் என்பதை நீங்கள் கண்டவுடனே, உங்களுடைய இருதயமும் கூட இன்னும் அதிகமாக துடிக்கத் தொடங்கும். உடனே, நீங்கள் இதுவரை கேட்டிராத இனிமையான சத்தம், “என்னுடைய அன்பான இனிய இருதயமே, கவலைப்படாதே, உன்னுடைய பெயர் என்னுடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உள்ளது. உன்னுடைய இயற்கை இணைப்பையொட்டிய பழைய புத்தகத்தில் அல்ல, ஆனால் என்னுடைய புதிய மணவாட்டிப் புத்தகத்திலே. இது என்னுடனான உன்னுடைய விவாகச் சான்றிதழ்.
என் அன்பே, உன்னுடைய பாவங்கள் மற்றும் தோல்விகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருக்கிறது மட்டுமின்றி, நீ எனக்கு நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். என்னுடைய பார்வையில், நீ ஒருபோதும் எந்த தவறையும் செய்யவேயில்லை.
நீ என்னுடைய விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமற்ற மகனாயும் மகளாயும் இருக்கிறாய். என்னுடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரால் கழுவப்பட்டிருக்கிற என்னுடைய கலப்படமற்ற மணவாட்டியாய்; நீ சுத்தமாக நின்றுகொண்டிருக்கிறாய்.
ஒரு சந்திரனோ, நட்சத்திரங்களோ அல்லது ஒரு மூலக்கூறோ இருப்பதற்கு முன்பே, நீ என்னுடைய மகனாய், மகளாய் இருந்தாய். நீ ஆரம்பத்தில் என்னில் இருந்த தன்மைகளின் சரீரப்பிரகாரமான வெளிப்படுத்தலாய் இருக்கிறாய்.
நீங்கள் என்னுடைய தன்மைகளின், என்னுடைய சிந்தனைகளின் வெளிப்படுத்துதலாய் இருக்கிறபடியால் உங்களுடைய ஆவிக்குரிய மரபணுக்கள் எனக்குள் இருந்தன. உலகத் தோற்றத்திற்கு முன்பே நீங்கள் எனக்குள் இருந்தீர்கள்.
நீங்கள் என்னுடைய ஆவிக்குரிய மணவாட்டியாய் குமாரனின் பிரசன்னத்தில் இருந்து, என்னுடைய வார்த்தையை கேட்பதன் மூலம் முதிர்ச்சியடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரு எழுப்புதலை பெற்றுக்கொள்ளத் துவங்கி, திரும்பி வந்து, என்னுடைய வார்த்தையோடு உங்களை சரிபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியான மணவாட்டியாய் இருக்கிறீர்கள்.
நீங்கள் இப்பொழுது என்னுடன் ஒரு ஆவிக்குரிய இணைப்பில் இருந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக் கொண்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்டு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாளில் என்ன சம்பவிக்கும் என்று நான் உங்களிடத்தில் சொன்னேனோ, அது நாளுக்கு நாள், அப்படியே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. வார்த்தையே வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது.
நீ இந்த கடைசி நாளுக்கான உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளாய்; இந்த செய்தியின் மூலம் என்னுடைய மணவாட்டியை ஒன்றுசேர்தல். வேறு எந்தக் காலத்திலும் நான் அதை வாக்களிக்கவேயில்லை. நான் அதை உனக்கு இந்தக் காலத்தில் வாக்களிக்கிறேன்: மல்கியா 4, லூக்கா 17:30, பரிசுத்த யோவான் 14:12, யோவேல் 2:38.
இந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நன்றி தெரிவிக்கும் விருந்து ஒன்றைக் கொண்டாடப்போகிறோம், அப்பொழுது நான் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் சொல்வேன். நான் உங்களுடன் பல மணிநேரம் செலவழித்து, ஐக்கியங்கொண்டு, என்னுடைய வார்த்தையின் பேரில் விருந்துண்பேன். என்னுடைய வார்த்தையோடும், என்னுடைய தீர்க்கதரிசியோடும், என்னுடைய சத்தத்தோடும், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தரித்திருப்பதனால், நீங்கள் என்னுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நான் வாசலண்டையிலே நின்று, தட்டிக் கொண்டிருக்கிறேன் என்று, நான் என்னுடைய வார்த்தையில் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். அநேகர் செவிகொடுத்து தங்களுடைய வாசலைத் திறக்கமாட்டார்கள், ஆனால் வெளிப்பாட்டினால், நீங்கள் உங்களுடைய வாசலைத் திறந்து என்னை உள்ளே வரவேற்றிருக்கிறீர்கள்.
அவர்கள் தங்களுடைய சபைகளில் என்னுடைய சத்தத்தை தொனிக்கச் செய்ய உடன்படுகிறதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தங்களுடைய மனதை வார்த்தையால் ஆராய அனுமதித்தால், அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். கிறிஸ்து, அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையானது, உங்களுடைய சொந்த மனசாட்சியை ஆராயட்டும். அது உண்மையா அல்லது இல்லையா என்று பார்க்கும்படி, அவர் உங்களுக்குள் வரட்டும்.
உங்களை ஒன்று சேர்ப்பது ஒரு ஸ்தாபனமாக இருக்காது என்று நான் உங்களுக்கு சொன்னேன், வேதாகமத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளின் பேரில் கூட அவர்களால் ஒத்துப்போக முடியாது. அது ஒரு மனிதக் குழுவாக இருக்கும் என்று நான் எப்போதாவது உங்களிடத்தில் சொன்னேனா? இல்லையே! இது ஒரு மனிதனின் செய்தி என்றே நான் உங்களிடத்தில் சொன்னேன்; நீங்கள் கேட்டு கீழ்ப்படிந்தீர்கள்.
அவர்கள் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய மூல திட்டத்தைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாததால், நான் அவர்களுக்கு பிரசங்கிமார்களையும், போதகர்களையும், அப்போஸ்தலர்களையும், மேய்ப்பர்களையும் மற்றும் தீர்க்கதரிசிகளையும் அனுப்பினேன். ஆனால் என்னுடைய மூல மற்றும் பரிபூரண திட்டத்திற்கு, என்னுடைய பலமுள்ள தூதனிடத்திற்கு, திரும்பிச் செல்லும்படி சுட்டிக்காட்ட அவர்கள் அனுப்பப்பட்டனர். ஏனென்றால் அது உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் உள்ளது.
அவர்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள், ஆனால் உங்களை வழிநடத்த எனக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் மாத்திரமே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே தீர்க்கதரிசியாயிருக்கிறார். அவர் மூலமாக உரைக்கப்பட்ட என்னுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்றும், அவர் கூறின எந்த காரியத்தோடு எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப் போடுவோ வேண்டாம் என்றும், ஒலிநாடாக்களில் அவர் அவைகளை கூறினவாறே அப்படியே கூறுங்கள் என்றும், நான் உங்களுக்கு அநேக முறை சொல்லியிருக்கவில்லையா? அதுவே தீர்க்கதரிசி, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறதாகும்.
உங்களை என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி அழைக்க நான் அனுப்பின ஒருவராய் அவர் இருக்கிறார். அவரே உங்களை என்னிடத்தில் அறிமுகப்படுத்துகிற ஒருவராய் இருக்கிறார். என்னுடைய மணவாட்டியான, உங்களைப் பற்றிய முன்னோட்டத்தை அவருக்குக் காண்பித்த போது நான் உடன் நின்றவர் அவரே. சபைகளில், இவைகளை உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்க, இயேசுவாகிய நான் என்னுடைய தூதனை அனுப்பியிருக்கிறேன் என்று நான் சொன்னபோது, அவரைக் குறித்த எல்லாவற்றையும் வெளிப்பாடுகளில் நான் உங்களிடத்தில் சொன்னேன். இது நான் தான், நான் அவருடைய சரீரத்தையும், அவருடைய சத்தத்தையும் உங்களிடம் பேச பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்."
நாம் அவரோடு ஒன்றுகூடியிருப்பது என்னே ஒரு அற்புதமான நாள். நம்முடைய ஜீவியங்களில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தியாகவோ இருந்ததில்லை. இதுதான் அதுவாகும். இதற்காகத்தான் நம்முடைய ஜீவிய காலமெல்லாம் நாம் காத்துக்கொண்டு வருகிறோம்.
நம்முடைய இருதயங்களிலோ அல்லது நம்முடைய சிந்தைகளிலோ சந்தேகத்தின் ஒரு நிழலும் இல்லை. ஏனென்றால், நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உங்களை ஒன்றிணைக்கும், உங்களை பரிபூரணப்படுத்தும் மற்றும் உங்களை ஒன்றாகக் கொண்டு வரும்…நான், நானே என்னுடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறேன். அவருடைய வார்த்தைகள் அல்ல, என் வார்த்தைகள். இதுவே என்னுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.
மேஜையானது விரிக்கப்பட்டிருக்கிறது. இது முட்டைக்கோஸ், கிழுங்கு வகைகள் மற்றும் முள்ளங்கிகளால் நிறைந்ததுள்ளது…வார்த்தையின் மேல் வார்த்தை, வார்த்தையின் மேல். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் நன்றி தெரிவிக்கும் விருந்தினைக் கொண்டாடப்போகிறோம். மணவாட்டி தங்களுடைய மேஜைகளை சுற்றி ஒன்று கூடி அவர்களிடம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கப்போகிறபடியால், அது உலகத்தைச் சுற்றிலும் ஒரு யூபிலியாக இருக்கும். நம்முடைய வீடுகளும் சபைகளும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படும். நம்முடைய மகிமையான, அல்லேலூயாக்கள், கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதைத் தவிர நாம் பேசாமல் இருப்போம்.
அவர் நம்மை போஷிக்கிறபடியால், மணவாட்டியினுடைய குடும்ப நன்றி கூறும் கூடுகையின் ஒரு பாகமாக இருக்க வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை, சரியாக பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி நாங்கள் விருந்தினை துவங்கவுள்ளதால், தாமதமாக வரவேண்டாம். அவர் அங்கு இருப்பார், ஏனென்றால் அவர் அங்கிருப்பேன் என்று என்னிடம் கூறினார்.
நான் வருகிறேன், உங்களுடைய கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பைக் குறித்த 65-1125 எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருப்பேன்.
நான் உங்களை அங்கே மேஜையண்டையில் காண்பேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
மற்றொரு பெயரான: அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டி
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பத்து இலட்சத்தில் ஒருவரே,
நான் உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்து வருகிறேன். நீங்கள் என்னுடைய அன்பான இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், மேலும் நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் உங்களுக்கு வாக்களித்தபடி, நான் உங்களுக்கு ஒரு புதிய வீட்டை உருவாக்கிக்கொண்டு வருகிறேன், அங்கு நாம் நித்தியத்தினூடாக ஒன்றுசேர்ந்து ஜீவிப்போம். நீங்கள் விரும்பியதைப் போலவே அவை எல்லாவற்றையும் நான் செய்துள்ளேன்.
என்னால் இப்பொழுது உங்களை நோக்கிப் பார்த்து, நீங்கள் என்னுடைய பிரதிபலிப்பாயிருக்கிறீர்கள் என்பதைக் காணமுடிகிறது. நீங்கள் என்னுடைய குணாதிசயத்தையும், என்னுடைய மாம்சத்தையும், என்னுடைய எலும்புகளையும், என்னுடைய அதே ஆவியையும், அப்படியே சரியாக, என்னுடைய எல்லா காரியத்தையும் உடையவர்களாக இருக்கிறீர்கள்.
சாத்தானின் ஏதேனிலிருந்து உங்களை அழைக்க நான் என்னுடைய பலமுள்ள தூதனை பூமிக்கு அனுப்பினேன். என்னுடைய சிந்தனைகளையும், என்னுடைய தன்மைகளையும், வரவிருக்கின்ற காரியங்களையும் உங்களுக்கு சொல்லி வெளிப்படுத்தும்படியாக நான் அவரை அனுப்பினேன். நான் அவைகளை வெளிப்படுத்தும்படிக்கு அவருடைய வாயையும், அவருடைய சத்தத்தையும் உபயோகித்தேன். அவர் அவைகளைக் கூறினப் பிறகு, நான் அவைகளை நிறைவேற்றினேன், ஏனென்றால் வானங்களும் பூமியும் ஒழிந்துபோகும் என்னுடைய வார்த்தையோ உங்களுக்கு ஒருபோதும் ஒழிந்துபோகாது.
என் தூதனுடைய சத்தத்தை உபயோகித்து, நான் பேசுவதை நீங்கள் கேட்கும்போது, உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், அது அவராயிருக்கவில்லை, அது நான் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன், அது நான் உங்களுக்கு ஒரு காதல் கடிதத்தை அனுப்பி, நீங்கள் என்னுடைய இனிய இருதயமாகிய மணவாட்டியாய் இருக்கும்படி நான் தெரிந்துகொண்டுள்ளேன் என்று உங்களுக்கு சொல்லுகிறதாய் இருந்தது.
என்னுடைய பார்வையில், உங்களைப்போல யாருமே இல்லை. உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் என்னிடத்தில் உண்மையாகவும் உத்தமமாகவும் தரித்திருக்கிறீர்கள். நான் உங்களை நோக்கிப் பார்க்கும்போது, என்னுடைய இருதயம் சந்தோஷத்தால் துடிக்கிறது.
இனிய இருதயமே, நீங்கள் எதற்கு செவி கொடுக்கிறீர்கள் என்பதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்று, நான் உங்களிடத்தில் சொன்னேன், அபிஷேகிக்கப்பட்ட அநேகர் என்னுடைய வார்த்தைகளை உபயோகிப்பார்கள், ஆனாலும் அவர்கள் போலியாய் இருக்கிறார்கள். நீங்கள் வெளிப்பாட்டினால் என்னுடைய எச்சரிக்கையை புரிந்துகொண்டு உண்மையாயும் என்னுடைய சத்தத்திற்கு உத்தமமாகவும் தரித்திருந்தீர்கள்.
நீங்கள் எந்த சபையோடு ஐக்கியங்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள் ஊக்கமாக ஜெபித்தபோது நான் மிகவும் பெருமைப்பட்டேன். நான் உங்களுக்கு சரியான தெரிந்துகொள்ளுதலை செய்யும்படி உங்களிடத்தில் கூறி, பரிபூரணமான சபை என்னவாயிருக்கும் என்பதை குறித்த உதாரணங்களை உங்களுக்கு அளித்தேன். அவர்கள் யாவரும் வேறு ஆவிகளை பெற்றுள்ளனர் என்று நான் கூறினதை நீங்கள் நினைவில் கொண்டு, பரிபூரண சபையைத் தெரிந்துகொண்டீர்கள்.
உங்களுடைய போதகர் யாராயிருக்கிறார் என்பதை குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூட நான் உங்களிடத்தில் சொன்னேன். எனவே உங்களை என்னிடத்தில் கொண்டு வரும்படிக்கு நான் அனுப்பின மேய்ப்பரோடு நீங்கள் தரித்திருந்ததை நான் கண்டபோது என்னுடைய இருதயம் எப்படியாய் மகிழ்ச்சியால் துள்ளிற்று என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். அது என்னிடத்திற்கு உங்களை வழிநடத்த என்னுடைய தீர்க்கதரிசிக்குள் ஜீவித்த என்னுடைய பரிசுத்த ஆவியாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்.
உங்களை குறித்த ஒரு முன்னோட்டத்தை நான் அவருக்கு காண்பிக்கும்படியாக ஒரு உயரிய இடத்தில் என்னுடைய தூதனை நான் அழைத்தபோது, நீங்கள் மிகவும் சந்தோஷமாய், உணர்ச்சிவசப்பட்ட அந்த நாளை நான் நினைவுகூருகிறேன். எங்களுக்கு முன்னால் கிறிஸ்தவ போர் வீரர்களே முன்னோக்கி செல்லுங்கள் என்னும் பாடலுக்கான ஒத்திசைவிற்கு நீங்கள் அணிவகுத்து சென்றபோது நாங்கள் அங்கே நின்று உங்களை கவனித்துக் கொண்டிருந்தோம்.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து; நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, நீங்கள் அனைவரும் உங்களுடைய தேசிய உடையை அணிந்திருப்பதை அவர் எவ்வளவாய் விரும்பினார். மிகவும் அருமையாக உங்களுடைய நீளமான கூந்தலில் ஒவ்வொருவரும் சரியாக இருந்தீர்கள். உங்களுடைய பாவாடைகள் அழகாக கீழ் வரை இருந்தன. அவர் திரும்பிச் சென்று உங்களை உற்சாகப்படுத்தி, அவர் உங்களை அங்கே கண்டதை உங்களிடம் சொல்லும்படிக்கு, உங்கள் அனைவரையும் அவரிடம் காண்பிப்பதில் நான் மிகவும் பெருமையும் உற்சாகமுமடைந்தேன்,
ஒவ்வொரு கண்ணும் நம் மீதுதான் இருந்தது. ஒரு சில பெண்கள், வரிசையின் பின்புறத்தில், மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கியபோது, அவர், "அப்படிச் செய்யாதீர்கள்! வரிசையை விட்டு வெளியேறாதீர்கள்!" என்று கூச்சலிட்டார்.
நான் உங்களைப் போஷிக்கும்படியாக உங்களுக்காக ஆகாரத்தை நான் சேமித்துக்கொண்டிருந்தேன் என்று நான் உங்களிடத்தில் சொன்னபோது, நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் சரியாக அறிந்திருந்தீர்கள். நீங்கள் என்னுடைய சுத்தமான வார்த்தையான கன்னிகை மணவாட்டியாய் இருக்க விரும்பினீர்கள். நீங்கள் வேறு யாருடனும் சரசமாடுவதை நான் ஒருபோதும் காணவில்லை. அது எப்பொழுதுமே நானாகவும், என்னுடைய வார்த்தையாகவும் இருந்தது. அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்கினது.
நீங்கள், என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி, நான் உங்களை தெரிந்து கொண்டுள்ளேன். நீங்கள் என்னோடு அன்பாய் இருக்கிறதுபோலவே, நான் உங்களோடும் மிகுந்த அன்பாய் இருக்கிறேன். திடனற்றுப்போகாதீர்கள், உற்சாகமாயிருங்கள், மகிழ்ச்சியாய் இருங்கள், களிகூருங்கள், நான் உங்களுக்காக வரும் நாள் தீவிரமாக சமீபத்துக்கொண்டிருக்கிறது. நாம் என்னே ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருப்போம்.
ஏனையோராகிய நீங்களும், மனந்திரும்புங்கள், பூமியானது கக்கிக் கொண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் ஒரு நாளில் பூமிக்கு அடியில் மூழ்கிவிடும் என்று, நான் உங்களிடத்தில் கூறினது போலவே அது மூழ்கிவிடும். அது கீழே என்னுடைய கோபாகினையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. நான் அந்த மணல் தடையை இனி நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கமாட்டேன். நீ ஒரு மைல் ஆழமான கடலுக்குள் சறுக்கி, மீண்டும் சால்டன் சமுத்திரத்துக்குள் செல்வாய். இது பாம்பேயின் கடைசி நாளை விட மோசமாக இருக்கும்.
நான் சீக்கிரத்தில் இந்த பூமியை அக்கினியால் சுத்திகரிக்கப்போகிறேன். அதன் மீதும் அதன் கீழும் உள்ள அனைத்தையும் கொன்றுபோடுவேன். நான் உங்களுக்கு சொன்னதுபோல, உலகம் முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொன்னது போலவே, என்னுடைய மணவாட்டி என் வார்த்தையின் பேரில் இணைவதை நீங்கள் காண்கிறீர்கள்.
இப்பொழுதே அந்த நேரம். இப்பொழுதே அந்தக் காலம். உங்களை ஆயத்தப்படுத்துங்கள்!
அவருடைய கோபாக்கினையின் வேளையானது பூமியின் மீது உள்ளது. விரைந்தோடுவதற்கு நேரமுள்ளபோதே விரைந்தோடி, கிறிஸ்துவுக்குள் வாருங்கள்.
_______________________________________________________________இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் பேசி, மணவாட்டியை தெரிந்துகொள்ளுதல் 65-0429E: என்ற செய்தியை எங்களுக்கு கொண்டு வருவதை கேட்கப்போகிறபடியால், நாங்கள் அவருடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்துகையில், அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான, எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஆதியாகமம் 24:12-14
ஏசாயா 53:2
வெளிப்படுத்தின விசேஷம் 21:9
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பூலோக மணவாட்டியே,
மல்கியா 4 என்பது தேவனுடைய வார்த்தையாகும், மேலும் இது அவருடைய மணவாட்டியான, நமக்கு, அதனுடைய தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இது பரிசுத்த ஆவியாகிய, இயேசு கிறிஸ்து என்னும் நபர், செயலில், நம் இருதயங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும்; ஒரு அந்நியனை அவைப் பின் தொடராது.”
ஜெபர்சன்வில்லில் தீர்க்கதரிசியைப் பின்தொடர்ந்த, கடந்த மாதங்கள் எவ்வளவு அற்புதமானவைகளாக இருந்து வந்துள்ளன. தேவன் தம்முடைய பலமுள்ள தூதன் மூலமாகப் பேசி, தேசம் முழுவதிலும் உள்ள அவருடைய ஒரு சிறிய பண்டகசாலையிலிருந்து அவருடைய சேமிக்கப்பட்ட ஆகாரத்தினால் நம்மை போஷித்து வந்துள்ளார். இது அவருடைய மணவாட்டிக்கான, மறைவான மன்னாவாக உள்ளது.
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியோடும், நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொண்டு களிகூருகிறோம்; "இந்தச் செய்திகளை நான் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனால் நான் இப்பொழுது கேட்பதுபோல ஒருபோதும் கேட்டதில்லை." இது உண்மையிலேயே நமக்குள் பொங்கி வழிகின்ற ஜீவத் தண்ணீரின் ஒரு ஊற்றாயுள்ளது. நாம் நமக்குள்ளேயே அதை அடக்கிக்கொள்ள முடியாது. நாம் பேச விரும்புவது அவ்வளவுதான். நாம் யார் என்றும், நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றும் நம்முடைய ஜீவியங்களில் ஒருபோதும் நிச்சமுடையவர்களாக இருந்ததில்லை.
இனி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை:
“எனக்குத் தெரியாது. நான் என்னுடைய வாழ்க்கையில் பல பயங்கரமான காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் கர்த்தரிடம் பலமுறை தவறியிருக்கிறேன். நான் எப்போதும் குழப்பமடைவது போல் தெரிகிறது.
இனிமேல் சந்தேகத்திற்கு இடமேயில்லை:
"நான் ஒருவேளை உண்மையாகவே ஒரு தேவனுடைய பிள்ளை என்று நம்புகிறேன். நான் அவ்வாறிருக்க விரும்புகிறேன். நான் அவ்வாறிருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்."
அந்த நாட்கள் எல்லாம் முற்றுபெற்று விட்டன. இப்பொழுதே நாம் அறிவோம். தேவனுக்கே மகிமை!!
நமக்கு எப்படித் தெரியும்? "நான் உங்களுக்குள் இருக்கிறேன், நீங்கள் எனக்குள் இருக்கிறீர்கள். நாம் ஒன்றாய் இருக்கிறோம். நான் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களைத் தெரிந்துகொண்டேன். நீங்கள் என்னுடைய மாம்சத்தின் மாம்சமும், எலும்பின் எலும்புமாயிருக்கிறீர்கள்" என்று ஒலிநாடாக்களில் அவருடைய சத்தத்தின் மூலமாக நம்மிடத்தில் நேரடியாக பேசிக்கொண்டும், திரும்பத் திரும்ப இதை நமக்கு சொல்லிக் கொண்டும் வருகிறார்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் எப்படி நம்முடையது அல்ல என்றும், அது சாத்தானின் ஏதேன் என்பதைப் பற்றி நமக்குச் சொல்ல தேவன் ஞாயிற்றுக்கிழமை நம்மிடம் என்னே ஒரு பரிபூரணமான செய்தியைப் பேசினார். அவன் ஆதியிலே ஏவாளை எப்படி வெறுமனே ஒரு வார்த்தையை சந்தேகித்து கேள்விக் கேட்கும்படி வஞ்சித்தான். அவள் தேவனுடைய பரிசுத்தத் திரையை எடுத்துவிட்டு, அறிவின் திரையை அணிந்துகொண்டாள், அப்பொழுதே அவளுடையக் கண்கள் திறக்கப்பட்டு, அவள் நிர்வாணமாக்கப்பட்டதை அறிந்து கொண்டாள்.
சாத்தான் மூல வார்த்தையைத் தாறுமாறாக்கி, அவள் இன்னமும் நிர்வாணமாயிருப்பதை அறியாதிருக்கும்படி இப்பொழுதும் அவளை குருடாக்கியிருக்கிறான். அவள் சாத்தானின் இராணியாகிவிட்டாள், இந்த பூமி அவளுடைய ஏதேன் இராஜ்யமாயிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, நம்முடைய பரலோக மணவாளன் தம்முடைய பூலோக மணவாட்டிக்கு நம்முடைய வருங்கால வீடு எங்கே உள்ளது என்றும், அது என்னவாயிருக்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறார். “அன்பான இனிய இருதயமே, இந்த உலகத்தைக் குறித்த எல்லாவற்றையும் மற்றும் அது எப்படி சாத்தானின் ஏதேன் என்றும் நான் இப்பொழுது உங்களுக்குக் சொல்லியிருக்கிறேன், என்னுடன் உங்களுடைய வருங்கால வீட்டைப் பற்றி மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு மிக விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி நான் பலமுறை கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் காத்திருங்கள், இந்த முறை நான் உங்களிடம் சொல்வது நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கேட்காதது போல் இருக்கப்போகிறது.
நான் மிக விரிவாகக் கூற விரும்புகிறேன். என்னுடைய வார்த்தையுடனும் என்னுடைய தீர்க்கதரிசியுடனும் தரித்திருப்பதன் மூலம் நீங்கள் என்னுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் வாழப்போகும் புதிய நகரத்தின் ஒரு பரிபூரண மாதிரியாக இன்று நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
நாம் உண்மையாகவே ஏதோவொன்றினை அடையப் போகிறோம். நான் உங்களுக்கு சிறிதாக ஏதோ ஒரு காரியத்தை கூறவுள்ளேன்; நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடன் அந்த நகரத்தில் வாழ்வீர்கள். என்னுடைய தீர்க்கதரிசி உங்களுடைய பக்கத்து வீட்டில் வசிப்பார். அவர் உங்களுடைய அண்டை வீட்டாராக இருப்பார். நீங்கள் அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து, என்னுடைய நீரூற்றிலிருந்து பருகுவீர்கள். தேவதூதர்கள் வட்டமிட்டு, கீதங்களை பாடுவதோடு நீங்கள் தேவனுடைய பரதேசிக்குள்ளாக நடந்து கொண்டிருப்பீர்கள்.
என்னுடைய தீர்க்கதரிசியின் கிரீடத்தில் நீங்கள் இரத்தினங்களாக இருப்பீர்கள். அந்த நாளில், நீங்கள் உலகில் உள்ள அனைத்தையும் மிஞ்சிவிடுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு நிறைய வெளிப்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றுசேர்ந்திருக்கப்போவது என்ன ஒரு அற்புதமான நாளாயிருக்கும்.”
அதற்கு முன் அவர் வந்து நம்மை அழைத்துச் செல்லாவிட்டால், அடுத்த சில வாரங்களில் அவர் நமக்காக நிறைய சேமித்து வைத்திருக்கிறார். வாராவாரம், நாம் யார், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், அங்கு எப்படி இருக்கும் என்று நமக்கு சொல்லுகிறார். அவரைத் துதித்து ஆராதிப்பதைத் தவிர வேறொன்றினாலும் நிரப்பப்படாமல், நமக்கு எப்போதும் இருந்து வருகிறதான மிகவும் மகிமையான ஈஸ்டர் வாரத்திற்கு அவர் நம்மை வழிநடத்துவார்.
என்ன ஒரு உற்சாகமான நேரம். நம்முடைய கண்களுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வார்த்தை நமக்குள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவருடைய வருகை எந்த நேரத்திலும் இருக்கலாம். கரங்களில் பூங்கொத்துடன் நாம் வாசலண்டையில் நிற்கிறோம். குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவருவதையும், சக்கரங்களின் கீழிருந்து மணலைக் கிளப்புவதையும் நம்மால் கேட்க முடிகிறது.
குதிரைகள் இழுத்துகொண்டு வரும் வண்டியோ சீக்கிரத்தில் நிறுத்தப்படும். நாம் இந்த பழைய சரீர வாசலிலிருந்து குதித்து, அவருடைய கரங்களுக்குள் பறந்து செல்வோம். அவர் நம்மை நோக்கிப் பார்த்து, "இப்பொழுது எல்லாம் முற்றுபெற்றுவிட்டது, தேனே, நான் உன்னை இப்போது உன்னுடைய வருங்கால வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று கூறுவார்.
உலகம் இதுவரை கண்டிராத மகத்தான நாட்களின் ஒரு பாகமாயிருக்கும்படி இருக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்பதைக் குறித்து தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசி அவளிடத்தில் சொல்லப் போவதைக் கேட்க உலகெங்கிலுமிருந்து கழுகுக் குஞ்சுகள் ஒன்று கூடிவரும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நினைவூட்டல்: பகல் சேமிப்பு நேரத்தைக் குறித்து மறந்துவிடாதீர்கள்.
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 19:28
பரி. யோவான் 14:1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21:1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-வது அதிகாரம் / 28:10 / 65:17-25
மல்கியா 3:6
என்னுடைய அன்பான பிள்ளைகளே,
நீங்கள் உங்களுடைய பரலோகப் பிதாவாகிய, எனக்கு ஒரு தன்மையாயிருக்கிறீர்கள். நீங்கள் ஆதியிலிருந்தே எனக்குள் இருந்தீர்கள். உங்களுக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நீங்கள் என்னுடன் அங்கே இருந்தீர்கள். உங்களைத் தொடர்புகொள்ளவும், உங்களுடன் பேசவும், உங்களை நேசிக்கவும், உங்களுடைய கரங்களை குலுக்கவும் நான் விரும்பியதால், உங்களை அறிய நான் மிகவும் ஏங்கினேன்.
பூமியின்மேல் ஒரு தேவனுடைய குடும்பமாக நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளும்படியாக நான் மாம்சமாக்கப்பட்டதுபோலவே என்னுடைய பிள்ளையாய் இருக்கிறபடியால் நீங்களும் மாம்சமாக்கப்பட்டு, என்னுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அதுவே என்னுடைய நோக்கமும், ஆதியிலிருந்தே நான் விரும்பினதுமாயிருந்தது.
நாம் ஐக்கியங்கொள்ளும்படியாக உங்களுக்காகவே ஒரு ஏதேன் தோட்டத்தை உருவாக்கினேன், ஆனால் என்னுடைய சத்துரு வஞ்சகத்துடன் உள்ளே நழுவி வந்து என்னுடைய திட்டத்தை உங்களுக்கு தவறாக வியாக்கியானிப்பதன் மூலம் இந்த உலகத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
இது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு துரோகமான நேரமாயுள்ளது, ஆனால் இது எல்லா காலங்களிலும் மிகவும் மகிமையான காலமாயுங்கூட உள்ளது, ஏனென்றால் நீங்கள் இப்போது மீண்டும் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் மீண்டும் ஏதேனை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய ஆவி உங்களுக்குள் கற்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இது என்னுடைய முன்னறிவினால் உங்களுக்குள் என்னுடைய வல்லமையான கரத்தினால் நான் முன் குறித்த ஒன்றாக உள்ளது. இப்பொழுது, "நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோங்கள்"; என்று என்னுடைய மணவாட்டியை பற்றிக்கொள்ளும்படியாக சென்று கொண்டிருக்கிற என்னுடைய கடைசி அழைப்பாயுள்ளது.
இன்றைக்கு அவர்கள் என்னுடைய வார்த்தையை ஜனங்களுடைய இருதயங்களில் நிலைநிறுத்த முயற்சிக்கவில்லை, அவர்கள் தங்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். சபைகள் ஒரு நபருடைய இருதயத்தில் சபையின் கோட்பாட்டையே நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும், “நான் இதைச் செய்தேன். எனக்கு, நான், என்னுடையது, என்னுடைய ஸ்தாபனம், எனக்கு, இது” என்றே கூறுகிறான். அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்கிறார்களேயன்றி, என்னுடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட என்னுடைய வார்த்தையை அல்ல.
நான் கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை, நான் கூறினவண்ணமாகவே நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், அதுவே இதற்கு என்றென்றைக்குமான தீர்வாகிறது.
என்னுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் செயலில் இருக்கிறார். இது உங்களுக்குள் ஒரு ஜீவனாயுள்ளது, ஒரு உணர்ச்சியாயல்ல; ஒருவித மாம்சப்பிரகாரமான அத்தாட்சியாய் அல்ல, ஆனால் இது ஒரு நபராயுள்ளது, நான், இயேசு கிறிஸ்து, தேவனுடைய வார்த்தை, உங்களுடைய இருதயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இது இந்தக் காலத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உயிர்ப்பிக்கிறது. வார்த்தையின்படி உங்களில் செயல்படுவது என்னுடைய பரிசுத்த ஆவியாகும்.
என்னுடைய முதல் மணவாட்டி சாத்தானுடைய தர்க்க அறிவிற்கு செவி கொடுத்ததினால் தவறிப்போனாள். ஆனால் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிற, நானே உங்களை மீட்டுக்கொண்டேன். நீங்கள் என்னை ஏமாற்றிவிடமாட்டீர்கள். நீங்கள் சாத்தானின் தர்க்க அறிவிற்க்கு செவிசாய்க்காத என்னுடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டியாக இருக்கிறீர்கள். நீங்கள் என் வார்த்தையுடன் தரித்திருப்பீர்கள்.
ஆயிர வருட அரசாட்சி முடிவுற்ற பிறகு, அதன்பின்னர் மீண்டும் ஏதேன் மீண்டும் நிலைநாட்டப்படும்; என்னுடைய மகத்தான இராஜ்யம் திரும்பக் கைப்பற்றப்படும். நான் கெத்செமனே தோட்டத்தில் சாத்தானுடன் அதற்கு போராடினேன், என்னுடைய ஏதேனை மீண்டும் வென்றேன். இப்போது நான் பரலோகத்தில் உங்கள் புதிய ஏதேனை ஆயத்தம் செய்யப்போயிருக்கிறேன். நான் விரைவில் உங்களுக்காக மீண்டும் வருவேன், எனவே உங்கள் இருதயங்கள் கலங்காதிருப்பதாக.
இனி சமுத்திரமே இருக்காது, ஏனென்றால் முதலாம் வானமும் முதலாம் பூமியும் ஒழிந்துபோகும். பூமியின் மேலிருந்த ஒவ்வொரு கிருமியையும், ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு சுகவீனத்தையும், மற்றும் ஒவ்வொரு அசுத்தமான காரியத்தையும் கொன்றுபோடும் ஒரு அக்கினி அபிஷேகத்தின் மூலம் அதை நான் புதுப்பிப்பேன்.
பூமியானது வெடிக்கும், ஒரு புதிய பூமி உண்டாகும். இந்த முதலாம் வானமும் முதலாம் பூமியும் ஒழிந்துபோகும். பரலோகத்தில் என்னிடத்திலிருந்து இறங்கி வருகிற ஒரு புதிய எருசலேம் இருக்கும். நான் உங்களோடு, என் உண்மையான தன்மைகளான, என்னுடைய குமாரர் மற்றும் குமாரத்திகளோடு இருப்பேன். எந்தப் பாவத்திற்கும் குருடாக்கப்பட்ட உங்களுடைய கண்களோடு, நாம் பரிசுத்தத்தில் ஐக்கியங்கொள்ளுவோம்.
நான் வருவேன் என்று உங்களுக்கு வாக்களித்தபடியே நான் உங்களிடத்திற்கு மீண்டும் வந்துள்ளேன். நான் உங்களுக்காக என் வார்த்தையைக் காத்துக்கொண்டேன். தவறான புரிந்து கொள்ளுதலோ, எந்தக் கேள்வியோ இல்லாதபடிக்கு, உங்களுக்கான என்னுடைய சுத்தமான வார்த்தையை, நான் என்னுடைய வார்த்தையை காந்த ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளேன்; ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது.
உங்களுடைய மனசாட்சியை தூய்மையாக வைத்திருங்கள். உங்களுடைய இருதயங்கள் திரையிடப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு பெரிய நபராகாதபடிக்கு உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களுடைய கண்களை திரையிடப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த நாட்களில் ஒன்றில், நான் மீண்டும் மேற்கில் சவாரி செய்வேன் என்பதை, ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதுவரை, என் நாமத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்; அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும், நீங்கள் எங்கு சென்றாலும், இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், அதைக் கொண்டு செல்லுங்கள்.
ஒரு வார்த்தையின் பேரிலும் சமரசமாகாதீர்கள். ஒலிநாடாவில் உள்ள என்னுடைய வார்த்தைக்கு வியாக்கியானமே தேவையில்லை. நீங்கள் என்னுடைய பாகமாய், என்னுடைய தன்மையாய் இருக்கிறீர்கள். இந்த உலகம் சாத்தானின் ஏதேனாய் இருக்கிறது, ஆனால் நாம் ஒருமித்து நித்தியத்தை கழிக்கும்படி நான் உங்களுக்கு ஒரு புதிய ஏதேனை உருவாக்கியிருக்கிறேன். அதுவரையில், என்னுடைய வார்த்தையின் பேரில் இணைந்திருங்கள். ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, சாத்தானின் ஏதேன் 65-0829 என்ற செய்தியில் என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசியின் மூலமாக நான் பேசுவதைக் கேட்கவும், என்னுடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்கப்போகிறபடியால், பிரான்ஹாம் கூடாரத்தில் அவர்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்.
அவருடைய சார்பில்,
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
2 தீமோத்தேயு 3:1-9வெளிப்படுத்தின விசேஷம் 3:14
2 தெசலோனிக்கேயர் 2:1-4
ஏசாயா 14:12-14
மத்தேயு 24:24