
அன்புள்ள மேம்பட்ட ஆவிக்குரிய ராஜரீக வித்தான மணவாட்டியே,
இனி காத்திருக்க வேண்டாம், இனி யோசிக்க வேண்டாம், நாம் வந்தடைந்துவிட்டோம்! நாம் மேம்பட்ட ஆவிக்குரிய ராஜரீக வித்தான மணவாட்டியாக இருக்கிறோம். ராஜரீக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்கு ஆவிக்குரிய வித்து. எதிர்காலத்தில் சில குழு அல்ல; வரப்போகும் அடுத்த சந்ததி அல்ல; நாம் கடைசி நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், நாம் இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்புவதைக் காணும் சந்ததியாய் இருக்கிறோம்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
அதே சுவிசேஷம், அதே வல்லமை, நேற்று இருந்த அதே மனுஷகுமாரன், இன்றும், என்றும் இருப்பார்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஐக்கிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் இந்த ஒலிநாடாவை தொலைபேசி இணைப்புகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிற அன்பான நண்பர்களே; கிழக்கில் வந்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவ கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அதே தேவ கு-மா-ர-னா-ய் இருந்து கொண்டு, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக, இன்றிரவு சபைக்கு மத்தியில் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
அந்த காலத்திற்கான வாக்குத்தத்த வார்த்தையோடு தம்மை அடையாளங் காண்பித்து, அவருடைய நாளில் மேடையில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த மேசியாவின் சத்தமானது, உலகத்தை சுற்றிலும் உள்ள இன்றைய அவருடைய மணவாட்டியினிடத்தில்: நான் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவ சத்தமாய் இருக்கிறேன். என்னுடைய வார்த்தையோடு தரித்திருக்கிற நீங்கள் என்னுடைய ராஜரீக ஆவிக்குரிய வித்தான மணவாட்டியாய் இருக்கிறீர்கள் என்று ஒலிநாடாவிலே நம்மிடத்தில் சொல்லுகிற அதே மேசியாவின் சத்தமாய் இருக்கிறது.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
இன்றைக்கு ஜனங்களுக்கு மத்தியில் அப்பேர்ப்பட்ட ஒரு கொந்தளிப்பு நிலவுகிறபடியால், அவர்கள் தேவனுடைய சத்தியத்தை காணத் தவறுகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பல வியாக்கியானங்கள் இருப்பதால் தான் அது அவ்வாறு உள்ளது. அவருடைய வார்த்தையை வியாக்கியானிப்பதற்கு தேவனுக்கு எவரும் தேவைப்படுகிறதில்லை. அவரே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க அவருடைய வெளிப்படுத்தின விசேஷம் 10 7-ல் உள்ள சத்தத்தின் நாட்களில் தீர்க்கதரிசியாகிய தூதனை தம்முடைய மணவாட்டிக்கு அனுப்பினார். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
நீங்களோ, "இயேசு பூமியில் இருந்தபோது நான் அங்கு இருந்திருந்தால், நான் இன்ன- இன்னதை செய்திருப்பேன்" என்று கூறலாம். சரி, அது உங்களுடைய காலமாய் இருக்கவில்லை. ஆனால், இது உங்களுடைய காலம், இது உங்களுடைய நேரம். எந்த சத்தத்தை நீங்கள் தேவனுடைய சத்தம் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?
எந்த சத்தம் உங்களுக்கு மிக முக்கியமான சத்தமாக இருக்கிறது?
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
பிசாசு அவருடைய மணவாட்டியைத் தாக்குவதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சென்று கொண்டிருக்கிறான். நீங்கள் ஒரு வியாதியைப் பெற்றுக் கொண்டீர்கள் என்றோ அல்லது ஏதோ ஒரு விதமான சுகவீனம் அல்லது உங்களுடைய குடும்பத்தை தாக்குவதைக் குறித்தோ அவன் உங்களை சிந்திக்க வைக்கலாம். சில நேரங்களில் தேவன் நீங்கள் மேலோ, சுற்றிலுமோ அல்லது வேறு எங்குமே காண முடியாதபடிக்கு மிகுந்த இருளை அனுமதிக்கிறார். அதன் பின்னர் நீங்களோ, “நான் ஆகாரினுடைய வித்தும் அல்ல, நான் சாராளினுடைய வித்தும் அல்ல, நான் மரியாளுடைய வித்தும் கூட அல்ல, நான் தேவனுடைய மேம்பட்ட ராஜரீக ஆவிக்குரிய ஆபிரகாமின் வித்தாயிருக்கிறேன். நான் எனக்காக தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை எடுத்துக் கொள்கிறேன், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். நான் அசைக்கப்படேன். அது எவ்விதமாய் காணப்பட்டாலும், பிசாசு என்னக் கூறினாலும் அதை பொருட்படுத்துகிறதில்லை. எனக்கு எது தேவையாயிருந்தாலும், நான் தேவனை அவருடைய வார்த்தையில் ஏற்றுக்கொள்வேன்” என்று கூறும்படியாக, அவர் வந்து உங்களுக்காக அதனூடாக ஒரு வழியை உருவாக்குகிறார்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
தேவனுடைய சத்தம் உரைத்திருக்கிறது, உங்களுக்கு தேவையான எல்லா ஆவிக்குரிய ஆதாரத்தையும் நான் சேமித்து வைத்துள்ளேன். அவைகள் ஒலிநாடாக்களில் உள்ளவைகள் மாத்திரமே என்று கூறுங்கள். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன். என்னுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. வம்பு செய்யவோ அல்லது சண்டையிடவோ வேண்டாம், ஒருவரையொருவர் நேசியுங்கள், ஆனால் என்னுடைய வார்த்தையோடு தரித்திருங்கள்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
மடிந்துவிட வேண்டாம். மனச்சோர்வடைய வேண்டாம். உங்கள் சந்தோஷத்தை சாத்தான் கொள்ளையிட விடாதீர்கள். நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அந்த மகத்தான கலியாண விருந்திலே அது என்னவாயிருக்கப் போகிறது என்பதையும், அவர் உங்களுக்காக கட்டியிருக்கிற அந்த அழகான நகரத்தில் ஜீவிக்கப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரோடும், இதற்கு முன்பே சென்றுள்ள யாவரோடும் அங்கே நீங்கள் நித்தியத்தினூடாக இருக்கப்போகிறீர்கள்.
இனி சுகவீனமே இல்லை. இனி கவலைகளே இல்லை. இனி மரணமே இல்லை. இனி யுத்தங்களே இல்லை. அவரோடு நித்திய ஜீவன் மாத்திரமே. அப்பொழுது நாம் இவ்வாறு கூறுவோம்:
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
நாம் மந்தமான நிலையில், “நான் இந்த இடத்தைக் குறித்து மிகவும் வெறுப்பாயிருக்கிறேன். நான் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்” என்று கூறாதிருப்போமாக. நாம் இதை இந்தவிதமாகக் கூறுவோமாக: “அவர் இப்பொழுது எனக்காக எந்த நிமிடமும் வருவார்...மகிமை! என்னால் காத்திருக்க முடியாது. என்னுடைய அன்புக்குரியவர்கள் அனைவரையும் பார்க்கப் போகிறேன். அவர்கள் என் முன் தோன்றப்போகிறார்கள், அப்பொழுது நான் அறிந்து கொள்வேன், அது முடிந்துவிட்டது, நாம் வந்தடைந்துவிட்டோம்.”
அப்பொழுது, ஒரு இமைப் பொழுதிற்குள்ளாகவே, நாம் மறுபுறத்தில் ஒன்றாக இருப்போம்.
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் சமீபமாயிருக்கிறபடியால், நாம் சந்தோஷப்பட்டு களிகூருவோமாக, அவளுடைய மணவாட்டி…அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று 65-0219
என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், எங்களுடன் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் கலந்துகொள்ள விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வந்து ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16