
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே,
நம்முடைய ஜீவியத்தில் எந்த காரியத்தைக் குறித்தாவது ஒரு கேள்வியைக் நாம் கேட்டால், அதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு நெருக்கமாக ஏதாவது இருக்கலாம், ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உண்மையான, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, நம்முடைய ஜீவியங்களில் எழும் ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நமக்கு ஒரு வேதாகம கேள்வி இருந்தால், ஒரு வேதாகம பதில் இருக்க வேண்டும். இது மனிதக் குழுவிலிருந்தோ, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஐக்கியத்தின் மூலமாகவோ, அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ, அல்லது சில ஸ்தாபனத்திடமிருந்தோ வருவதை நாம் விரும்பவில்லை. அது வேதத்திலிருந்து நேராக வர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: தேவனை ஆராதிக்கும்படியான அவருடைய உண்மையான, சரியான இடம் எது?
தேவன் மனிதனை சந்திக்கும்படி தெரிந்து கொண்டது; ஒரு சபையில் அல்ல, ஒரு ஸ்தாபனத்தில் அல்ல, ஒரு கோட்பாட்டில் அல்ல, ஆனால் கிறிஸ்துவிலே. அதுவே தேவன் ஒரு மனிதனை சந்திக்கும் ஒரே ஸ்தலமாக உள்ளது, அவனால் தேவனை ஆராதிக்க முடிந்தது, கிறிஸ்துவில் இருக்கிறது. அதுதான் ஒரே ஸ்தலமாக உள்ளது. நீங்கள் மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கர், பிராட்டஸ்டென்ட் என எதுவாக இருந்தாலும், நீங்கள் தேவனை சரியாக ஆராதிக்க ஒரே ஒரு ஸ்தலம் மட்டுமே உள்ளது, அது கிறிஸ்துவில் உள்ளது.
தேவனை ஆராதிக்கும்படி அவர் தெரிந்து கொண்ட, சரியான ஸ்தலம் இயேசு கிறிஸ்துவில் மாத்திரமே உள்ளது; அது மாத்திரமே அவருடைய அருளப்பட்ட வழியாய் உள்ளது.
மல்கியா 4-ல் ஒரு கழுகை வேதம் நமக்கு வாக்களித்தது; நாம் பின்பற்ற வேண்டிய ஒரு அக்கினி ஸ்தம்பம். தவறிழைக்கும் சபையை அவர் எபிரேயர் 13:8, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், மாறாதவர் என்று காட்டுவார். லூக்கா 17:30-ல் மனுஷகுமாரன் (கழுகு) தம்முடைய மணவாட்டிக்குத் தம்மை வெளிப்படுத்துவார் என்றும் கூட நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படுத்துதல் 4:7-ல், நான்கு ஜீவன்கள் இருந்ததாக அது நமக்குச் சொல்கிறது, முதலாவது சிங்கம். அடுத்த ஜீவன் ஒரு காளையாயிருந்து. அதன் பின்னர், அடுத்து வருவது ஒரு மனிதனாயிருந்தது; அந்த மனிதர் சீர்திருத்தவாதிகளாய், மனிதனின் கல்வி, இறையியல் போன்றவற்றை உடையவர்களாக இருந்தனர்.
ஆனால் சாயங்கால நேரத்தில், வரவிருந்த கடைசி ஜீவன் ஒரு பறக்கும் கழுகு என்று வேதம் கூறியுள்ளது. தேவன் தம்முடைய கடைசி கால மணவாட்டிக்கு ஒரு கழுகை அருளுவார்; மனுஷகுமாரன் தாமே, தம்முடைய மணவாட்டியை வழிநடத்த மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்.
பழைய ஏற்பாட்டில் உள்ள, பழைய காரியங்கள் அனைத்தும், வரவிருக்கும் காரியங்களின் நிழல்களாயிருந்தன என்று வேதாகமம் கூட கூறுகிறது. அந்த நிழல் நெருங்க நெருங்க, எதிர்மறையானது நேர்மறையில் விழுங்கப்படுகிறது. அப்பொழுது என்ன நடந்தது என்பதோ இன்றைக்கு என்ன நடக்கும் என்பதற்கு ஒரு நிழலாய் உள்ளது.
I சாமுவேல் 8-ல், ஜனங்களை வழிநடத்துவதற்கு தேவன் சாமுவேல் தீர்க்கதரிசியை அருளியிருந்ததாக பழைய ஏற்பாடு நமக்குச் சொல்கிறது. ஜனங்கள் அவரை அணுகி, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று சொன்னார்கள். சாமுவேலினுடைய இருதயம் கிட்டத்தட்ட நின்றுவிடுமளவிற்கு அவன் மிகவும் கலக்கமடைந்தான்.
இந்த அர்ப்பணிக்கப்பட்ட வேதத்தால்- ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினூடாக தம்முடைய ஜனங்களை தேவன் வழிநடத்திக் கொண்டிருந்தார், ஆயினும் அவன் புறக்கணிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தான். அவன் ஜனங்களைக் கூட்டி, பிள்ளைகளை போல் சுமந்து வந்து, அவர்களை செழிப்படைய செய்து, அவர்களை ஆசிர்வதித்திருந்த தேவனை விட்டு அவர்கள் விலகாதபடிக்கு அவர்களிடத்தில் மன்றாடினான். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக இருந்தனர்.
அவர்கள் சாமுவேலிடம், “உம்முடைய வழிநடத்துதலில் நீர் ஒருபோதும் தவறாயிருந்து வரவில்லை. உம்முடைய நிதி பரிவர்த்தனைகளில் நீர் ஒருபோதும் நேர்மையற்றவராக இருந்ததில்லை. கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்ப எங்களை வைத்திருக்க உம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளீர். தேவனுடைய அற்புதங்கள், ஞானம், தேவைகளை சந்தித்தல் மற்றும் பாதுகாப்பை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் அதில் விசுவாசங் கொண்டுள்ளோம். நாங்கள் அதை விரும்புகிறோம். மேலும் அது இல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் எங்களை யுத்தத்திற்கு வழிநடத்த ஒரு ராஜா எங்களுக்கு வேண்டும் என்பதேயாகும்.
இப்போது நிச்சயமாக நாங்கள் யுத்தத்திற்கு செல்லும்போது யூதாவைப் பின்தொடர்ந்து ஆசாரியர்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது இன்னும் எங்கள் நோக்கம், நாங்கள் எக்காளங்களை ஊதி ஆரவாரம் செய்து பாடுவோம். நாங்கள் அதை நிறுத்த நினைக்கவில்லை. ஆனால் எங்களை வழிநடத்த எங்களில் ஒருவரான ராஜா வேண்டும்.
இது அந்த நாளின் ஸ்தாபன ஜனங்களாக இருக்கவில்லை. இது உண்மையாகவே அவர் ஜனங்களை வழிநடத்த தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தார் என்று அவர்கள் உரிமைக் கோரினதாயிருந்தது.
“ஆம், நீர் ஒரு தீர்க்கதரிசி. நாங்கள் செய்தியை விசுவாசிக்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையை உமக்கு வெளிப்படுத்துகிறார், நாங்கள் அதை விரும்புகிறோம், அது இல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை, ஆனால் உம்மைத் தவிர வேறு யாராவது எங்களை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; எங்களுக்கு சொந்தமான ஒருவர். நீர் எங்களுக்குக் கொண்டு வந்த செய்தியை நாங்கள் விசுவாசிக்கிறோம் என்று நாங்கள் இன்னும் சொல்ல விரும்புகிறோம். இது வார்த்தை. நீர் தீர்க்கதரிசி, ஆனால் நீரோ அல்லது உம்முடைய சத்தமோ மாத்திரமே மிக முக்கியமானது அல்ல.”
இன்றைக்கு உலகில் அருமையான ஜனங்கள், அருமையான சபைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு திருமதி. இயேசு கிறிஸ்துதான் இருக்கிறாள். நாமே அவளாக இருக்கிறோம், அந்த ஒருவளுக்காகவே அவர் வருகிறார்; அவருடைய கற்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டி கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருக்கும்படியான தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட ஒரே சத்தத்தோடு தரித்திருப்பாள்.
நீங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினால், அப்பொழுது நாங்கள் உலகம் முழுவதும் தொலைபேசி இணைப்பில் கேட்டுக் கொண்டிருப்போம். இதுதான் சம்பவிக்கப் போகிறது.
இன்றிரவு இந்த இடத்தில் இங்கே இருக்கிற என் சகோதர, சகோதரிகள், என் நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் தூரத்தில் இருப்பவர்கள் மேலும் அசைவாடும். கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரையிலும் பல்வேறுபட்ட மாநிலங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள தேவனே, அங்கே டூசான் வனாந்தரத்தினூ டாகவும், கலிபோர்னியாவிலும், மேலே நெவேடா மற்றும் ஐடாஹோவிலும், கிழக்கிலும் மற்றும் சுற்றிலுமுள்ள, கீழே டெக்ஸாஸிலும், இந்த அழைப்பு கொடுக்கப்பட்டு, ஜனங்கள் சிறு சபைகளிலும், பெட்ரோல் நிரப்பும் நிலையங்களிலும், வீடுகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். ஓ தேவனே, இழக்கப்பட்ட மனிதனோ அல்லது ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ, இந்த வேளையில் உம்மண்டை வருவார்களாக. இதை இப்பொழுதே அருளும். நேரம் இருக்கும்பொழுதே அவர்கள் இந்த பாதுகாப்பான ஸ்தலத்தை கண்டடைய வேண்டுமென்று, நான் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்.
இப்பொழுதும், கர்த்தாவே, இந்த சவால் சந்திக்கப்பட்டாயிற்று, பெரிய பொய்யுரைத்து ஏமாற்றும், அந்த சாத்தான், ஒரு தேவனுடைய பிள்ளையை பிடித்து வைத்திருக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அவன் தோற்கடிக்கப்பட்டவனாயிருக்கிறான். இயேசு கிறிஸ்து, ஒரே ஆராதனை ஸ்தலம், ஒரே உண்மையான நாமம், அவனை கல்வாரியில் தோற்கடித்தது. ஒவ்வொரு சுகவீனத்தையும், ஒவ்வொரு வியாதியையும் அவர் தோற்கடித்தார் என்று நாங்கள் இப்போது அவருடைய இரத்தத்தை உரிமை கோருகிறோம்.
இந்தக் கூட்டத்தாரை விட்டுப் போகும்படி நான் சாத்தானுக்கு கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த ஜனங்களை விட்டு வெளியே வா, அவர்கள் விடுதலையடைவார்களாக.
எழுதப்பட்ட வார்த்தையின் அடிப்படையில் தங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும், நீங்கள் உங்களுடைய காலூன்று எழும்பி நின்று, “நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இப்பொழுதே என்னுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்கிறேன்” என்று உங்களுடைய சாட்சியைக் கூறுங்கள்.
தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! அங்குதான் காரியம். ஊனமுற்றவர்களும் மற்றவர்களும் எழுவதை, இங்கே பாருங்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! அவ்வளவுதான். அப்படியே விசுவாசியுங்கள். அவர் இங்கே இருக்கிறார்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் 65-0220
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
உபாகமம் 16:1-3
யாத்திராகமம் 12:3-6
மல்கியா 3வது & 4வது அதிகாரங்கள்
லூக்கா 17:30
ரோமர் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:7