
அன்புள்ள ஒலிநாடா குடும்பத்தினரே,
நான் உங்களை, என்னுடைய குடும்பமாக, நாம் இருக்கும்…நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பமாகவே பொருட்படுத்திக் கூறுகிறேன்.
அது நாம், தீர்க்கதரிசியினுடைய ஒலிநாடா குடும்பம் என்பதாய் உள்ளது; உலகம் முழுவதும் சிதறியிருக்கும் அவருடைய பிள்ளைகள், அவர் கிறிஸ்துவுக்குப் பெற்றவர்கள். இந்த கடைசி நாட்களில் பிதாவானவர் தம்மைக் குறித்து அளித்துள்ள வெளிப்பாட்டைப் பெற்றவர்கள்.
இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட விரும்புகிறேன், பாருங்கள், பிதாவானவர் அவ்விதம் செய்வார், அப்பொழுது நாம்—நாம் ஒருபோதும் அலைந்து திரிய வேண்டிய அவசியமிராத ஒரு வீடு உண்டாகும்.
நான் அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்ட விரும்புகிறேன். அது இப்போதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி, அவருடைய வார்த்தை, இந்த ஒலி நாடாக்கள் அதைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றன: மணவாட்டி அனைவரையும் ஒன்றிணைத்து, உலகம் முழுவதிலும் இருந்து நம்மை ஒரு தனிப் பிரிவாக ஒன்றிணைக்கிறது. அவருடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே, அவரது மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்.
நீங்கள், நீங்கள் ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்: அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். புரிகிறதா? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும், மேலும்—மேலும் ஓ, என்னே, ஒவ்வொரு காரியமும் முன்பு இருந்ததைவிட (புரிகிறதா?) வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த ஆவி.
நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதபடி, நம்முடைய இருதயங்களும், சிந்தனைகளும் மற்றும் ஆத்துமாக்களும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றால் நிறைந்துள்ளன. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் அதிக வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது. அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நாம் யார் என்றும், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். தேவன் நம்முடைய இருதயங்களில் வைத்துள்ளவற்றிலிருந்து நம்மை அசைக்க எதுவுமே இல்லை. இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இந்நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் இருக்கிறது. எந்த யூகமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை, பரிசுத்த ஆவியிடம், "நான் கேட்டது உண்மையான வார்த்தையா?" "நான் அதை வார்த்தை மூலம் சரிபார்க்க வேண்டுமா?" என்று கேட்கிறதில்லை.
நாம் அல்ல. ஒலிநாடாக்களில் நாம் கேட்பது வார்த்தைதான். ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் அந்த வார்த்தையே மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருக்கும்படி, அக்கினி ஸ்தம்பத்தால், பரிசுத்த ஆவியானவராலே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே வார்த்தையாயுள்ளது.
யாராவது நம்மிடம், “ஒலிநாடாக்களில் சகோதரன் பிரான்ஹாம் பேசிய யாவுமே, அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை அல்ல. அது வெறுமனே மனிதன் தான். எது வார்த்தை என்றும், எது சகோதரன் பிரான்ஹாம் பேசிக்கொண்டிருந்தது என்பதற்கும் பரிசுத்த ஆவியானவராலே நாம் வழிநடத்தப்படுகிறோம்” என்று கூறினால்.
நமக்கல்ல. நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று தீர்க்கதரிசி நமக்கு சொன்னதை நாம் அப்படியே எளிமையாக விசுவாசிக்கிறோம்.
நீங்கள் ஒருபோதும் அந்த வார்த்தையை மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மோசே கூறினதை, தேவன் கனப்படுத்தினார், ஏனென்றால் தேவனுடைய வார்த்தை மோசேக்குள் இருந்தது.
தீர்க்கதரிசி கூறினதை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம், நாம் அதை விசுவாசிக்கிறோம்; ஏனென்றால் அது நம்முடைய இருதயங்களில் இரும்பு பேனாவால் பொறிக்கப்பட்டுள்ளது. ஒலிநாடாவில் அவர் என்ன கூறினாரோ, தேவன் அதை கனப்படுத்தினார், நாம் அதை விசுவாசிக்கிறோம்.
தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதை உட்கார்ந்து கேட்பதை விட பெரிய கனத்துக்குரியது வேறெதுவும் இல்லை. 64-0830E கேள்விகளும் பதில்களும் #4 என்ற செய்தியில் அவர் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தம்முடைய மணவாட்டியிடம் பேசி, கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பார். எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன். இது நீங்கள் ஒருபோதும் வருத்தப்படாத ஒரு முடிவு.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்