ஞாயிறு
02 ஜூன் 2024
65-0218
வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை

அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக சந்ததியே,

பரலோகத்தில் இருந்து விழுந்து கொண்டிருக்கிற புதிய மன்னாவினால் தங்களுடைய ஆத்மாக்களை போஷிக்கும்படி, தொலைபேசி இணைப்புகள் மூலமாக கேட்டு, உலகம் முழுவதிலும் ஒன்று கூடியிருக்கிற அவர்களுக்கு, நான் வாழ்த்துக்களை அனுப்புகிறேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கிரையமாய் இருக்கிறீர்கள்.

கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு தெய்வீக ஒலியின் கீழ் கேட்கிற ஒவ்வொரு செவிக்கும் இந்த வார்த்தைகளை நீர் அபிஷேகிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். இங்கே இருக்கிற சிலராய் இருந்தாலும், அல்லது தேசத்தில் எங்கிருந்து கேட்கிறவர்களாயிருந்தாலும் சரி.

உலகம் முழுவதிலுமிருந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்மிடத்தில் பேசுகிற தேவனுடைய சத்தத்தின் தெய்வீக ஒலியைக் கேட்க, தேவன் நம் ஒவ்வொருவருடைய செவிகளையும் அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார்.

அது என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், எந்த காரியத்தையும் எதிர்கொள்ளும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிற, அசலான, மீண்டும் பிறந்த தேவனுடைய சபையாக நாம் இருக்கிறோம், ஏனென்றால் இது உண்மையான கலப்படமற்ற தேவனுடைய சத்தம் பேசுகிறதாயுள்ளது.

தேவன் தம்முடைய மணவாட்டி சபையாகிய, நம்மில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருகிறார். நாம் வித்தை சுமந்து செல்லும் தண்டுகள் அல்ல. நாம் ராஜரீக வித்தாக இருக்கிறோம். அவருக்குள் இருந்த அவருடைய ஜீவியத்தின் முழுமையும் உண்மையான, அசலான, மணவாட்டி சபையாகிய, நமக்குள் மீண்டும் உருவாகி, முழு தேவனுடைய வார்த்தையானது அதனுடைய முழுமையிலும், அதனுடைய வல்லமையிலும் வெளிப்படுகிறது.

இதற்குப் பிறகு சபைக் காலங்கள் இருக்க முடியாது. நாம் முடிவில் இருக்கிறோம், சகோதர சகோதரிகளே. நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!

நாம் முடிவில் இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். நாம் யாராய் இருக்கிறோம் என்பதை மணவாட்டி அடையாளம் கண்டு கொண்டாள். இது வித்தான மணவாட்டியின் நேரம். பதர்கள் மரித்துவிட்டன. பதர்கள் காய்ந்துவிட்டன. நாம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையின் கன்னிப் பிறப்பாக இருக்கிறோம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

நாம் தொடப்படமாட்டோம். நமக்குள் மனித கையாளுமையே இருக்காது. நாம் மணவாட்டியின் கன்னிப் பிறப்பாய் இருக்கிறோம். நாம் சுத்தமான கன்னி வார்த்தைக்கு உண்மையாக தரித்திருக்கும்படிக்கு தேவனால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். வித்தானது முதிர்ச்சடையும்படியாக குமாரனுடைய பிரசன்னத்தில், பரிசுத்த ஆவிக்குள், மனுஷகுமாருடைய சத்தத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நமக்கு, ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு: இயங்கு பொத்தானை அழுத்தி மனுஷ குமாரனுடைய சத்தத்தை கேட்பதேயாகும்.

இந்த உலகத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு சபை எங்கோ உள்ளது, அது வெளியே இழுக்கப்பட்டு, அந்த காரியங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டபடியால், தேவனுடைய வெளிப்படுத்துதல் அதனுடைய கவனத்தை கவர்ந்துள்ளது என்றே நான் கூறுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம்.

நாம் தேவனுடைய கழுகுகள். நமக்குள் எந்த சமரசமும் இல்லை. நாம் புதிய மன்னாவை மட்டுமே புசிக்க முடியும். நாம் கொழுத்த கன்றுகளைப் போல இருக்கிறோம். சேமித்து வைக்கப்பட்டு நமக்காக அருளப்பட்டிருக்கிற ஆகாரத்தை மாத்திரமே நாம் புசிக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள தேவனுடைய கழுகுகள் புதிய மன்னாவை விரும்புவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை அவைகள் அதைத் தொடர்ந்து தேடிக்கொண்டேயிருக்கும். அவை மேலும் மேலும் உயர பறக்கும். இந்த பள்ளத்தாக்கில் ஏதுமில்லையென்றால், அது இன்னும் சற்று உயர எழும்பும். தேவனுடைய சத்தத்திலிருந்து வருகிற புதிய தேவனுடைய வார்த்தையே அவைகளுக்குத் தேவை. அவைகளினுடைய நித்திய இலக்கு அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருப்பதாய் இருக்கிறது. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடுகின்றன.

அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய அவருடைய ஆவி நம்மீது வந்திருக்கிறது. இது மீண்டும் தானியத்தின் மறுஉற்பத்தியாகும். நாம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் ஏற்றுக் கொண்டு, இல்லாததை இருக்கிறது போல் அழைக்கிற ஆபிரகாமினுடைய ராஜரீக விசுவாச சந்ததியாக இருக்கிறோம். நாம் சந்தேகிக்க முடியாது அல்லது தேவனுடைய வார்த்தையை தவறான இடத்தில் பொருத்த முடியாது, ஏனென்றால் நாம் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், மாறாதவராயிருக்கிறார்.

அன்புள்ள தேவனே, உலகின் சில முட்டாள்தனங்களுக்காக, நாங்கள் அதன் பேரில் பின்வாங்காமல் இருப்போமாக, ஆனால் எங்களுடைய முழு இருதயத்தோடு நாங்கள் அவரை இன்றிரவு ஏற்றுக் கொள்வோமாக. கர்த்தாவே, நான் உம்முடைய எல்லா வார்த்தைகளையும் விசுவாசித்து, நேற்றும், இன்றும், என்றும் மாறாதிருக்கிற வார்த்தையாகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, இந்த காலத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிற பாகமானதை இன்றைக்கு விசுவாசிக்கும்படியாக, எனக்குள்ளாக ஒரு நல்ல ஆவியை, ஜீவனின் ஆவியை சிருஷ்டியும். கர்த்தாவே, இதை அருளும். நான் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

அவர் எங்களுக்கு தேவனுடைய வாக்குத்தத்தமான: கழுகின் ஆகாரத்தை அளிக்கிறபடியால் கடைசி காலத்திற்கான தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை கேட்கும்படி வர நான் உங்களை அழைக்கிறேன். அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு இந்த தேவனுடைய வார்த்தையில் ஒரு கன்னி விசுவாசமே இதற்கு தேவைப்படுகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

நேரம்:
பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்

செய்தி:
வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை 65-0218

வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி லூக்கா 17:30
பரி. யோவான் 5:24 / 14:12
ரோமர் 8:1
கலாத்தியர் 4:27-31
எபிரெயர் 13:8
1 யோவான் 5:7
வெளிப்படுத்துதின விசேஷம் 10
மல்கியா 4

 


 

ஆனால், "நானும் என் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று நீர் கூற வரும்போது, இந்த மற்ற காரியங்கள், அப்பொழுது அதிலிருந்து பதரானது விலகிவிடுகிறது. ஆனால் உண்மையான, அசலான மணவாட்டி சபை தேவனுடைய முழு வார்த்தையையும் அதன் முழுமையிலும், அதன் வல்லமையிலும் வெளிப்படுத்தும், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

65-0218 - "வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை"

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்

 

இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார், அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய மணவாட்டி மீது ஒரு ஆவி வருகிறது. புரிகிறதா? இது தானியத்தை மீண்டும் மறு உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

65-0218 - "வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை"

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்