
அன்புள்ள நினிவே பயணிகளே,
பிதாவே, உம்முடைய பிணம் எங்கே இருக்கிறதோ, அங்கே உம்முடைய கழுகுகள் ஒன்று கூடுகின்றன. உம்முடைய தெய்வீக மன்னாவில் நீர் எங்களை போஷித்துக்கொண்டிருக்கிறீர். எங்களுக்கு உண்மையாகவே தேவையாயிருக்கிறதை எங்களுடைய ஆத்மாக்களுக்கு தாரும். பிதாவே, நாங்கள் உமக்காக தாகமாக இருக்கிறோம். நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம்.
உம்முடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் நாங்கள் உம்முடைய சமுகத்தில் இருந்து கொண்டு, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். மணவாட்டி தங்களுடைய சிந்தனைகளை உறுதி செய்து அதை எதிர்கொள்ள வேண்டும். அது சரியாக அல்லது தவறாக இருக்க வேண்டும். உம்முடைய ரூபகாராப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பது உம்முடைய மணவாட்டி செய்ய வேண்டிய முக்கியமான காரியமா அல்லது இல்லையா? இது சரியாக இருந்தால், நாம் அதை செய்வோமாக. இனி காத்திருக்க வேண்டாம், எது சத்தியம், எது சரி என்பதை இப்போது கண்டறிந்து, அதனுடன் தரித்திருங்கள். இதுவே சத்தியம் என்பதையும், இதுவே இந்நாளுக்கான உம்முடைய அருளப்பட்ட வழி என்பதையும் நாங்கள் அறிவோம்.
நான் முறையிட வேண்டும், “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? தேவன் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?” நாம் அதை வார்த்தையில் காண்கிறோம். நீர் அதை வாக்களித்தீர். யார் அமைதியாக இருக்க முடியும்?
நமக்கு புகழ் வாய்ந்த கருத்து தேவையில்லை; நமக்கு சத்தியமே தேவை. தேவன் சத்தியம் என்று கூறியிருக்கிறதைத் தவிர வேறொன்றையும் நாம் எதிர்கொள்ளத் தேவையில்லை- நமக்குத் (தேவை) தேவையில்லை
நீங்கள் எந்த கப்பலில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நீங்கள் மனுஷகுமாரனிடமிருந்து நேரடியாக உரைக்கப்பட்ட வார்த்தையை புசிக்கிறீர்களா, அல்லது வேறு ஏதாவதா? அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் மற்ற சத்தங்களை கேட்க வேண்டும் என்று யாராவது உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா? உங்களுடைய வீடுகளிலோ அல்லது உங்களுடைய சபைகளிலோ ஒலிநாடாக்களை இயக்குவது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் அல்லவா?
நீங்கள் யாருடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அந்தச் சத்தம் உங்களுக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது? உங்களுக்காகவும், மற்றும் உங்களுடைய குடும்பத்தின் நித்திய இலக்கிற்காக எந்த சத்தத்தை முன் வைக்கிறீர்கள்?
அது நானல்ல, அது ஏழாம் தூதன் அல்ல, ஓ, இல்லை; அது மனுஷகுமாரனுடைய வெளிப்படுத்துதலாயிருந்தது. அது தூதனுடைய, அவனுடைய செய்தி அல்ல; அது தேவன் வெளிப்படுத்தின இரகசியமாயிருந்தது. அது ஒரு மனிதன் அல்ல; அது தேவனாயிருக்கிறது. தூதன் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த செய்தியாளனாயிருந்தார். மனுஷகுமாரன் கிறிஸ்துவாயிருக்கிறார்; அவரைத்தான் நீங்கள் போஷித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதன், அவனுடைய வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நீங்கள் மனுஷ குமாரனுடைய தவறாத சரீரத்தின்- வார்த்தையினால் போஷித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அந்த சத்தத்தை, மனுஷகுமாரனுடைய தவறாத சரீரதத்தின்-வார்த்தையாக, முதலில் உங்கள் முன் வைக்காத எந்த சத்தத்தையும் கேட்காதீர்கள். அவர்கள் பிரசங்கிக்கலாம், கற்பிக்கலாம் அல்லது தேவன் அவர்களை செய்யும்படி அழைத்துள்ள அனைத்தையும் செய்யலாம், ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அவை அல்ல.
அவர்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாகக் கூடும் போது, அவர்கள் அந்தக் சத்தத்தை ஒலிக்கச் செய்து, “இந்தச் சத்தமே, கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம். இது, இது மட்டுமே, கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உங்களுக்கு சொல்வார்கள்.
நீங்கள் எந்த சத்தத்தை விரும்புகிறீர்கள்? ஏன் அவர் தம்முடைய சத்தத்தை பதிவு செய்து சேமித்து வைத்தார்? நம்முடைய நாளுக்காக தம்முடைய வார்த்தையைப் பேச தேவன் யாருடைய சத்தத்தை தெரிந்து கொண்டார்?
அவர் அருளிய தீர்க்கதரிசியின் மூலம், அங்கு போய் அந்த செய்தியை பிரசங்கிக்கும் படி அவர் நியமித்த ஒருவன், இப்பொழுது, அவர் வேறொரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம் என்பது போன்று காணப்பட்டது, ஆனால் அவர் யோனாவை அதற்கென்று நியமித்தார். எலியாவும் கூட அதைச் செய்திருக்க முடியாது. எரேமியாவும் அதை செய்திருக்க முடியாது, மோசேயும் அதை செய்திருக்க முடியாது, அது யோனா மாத்திரமே நினிவேக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. அவ்வளவு தான். அவர் அவனுக்கு கட்டளையிட்டு, அவனைப் போகும்படி சொன்னார். அவர், “அங்கே போ, யோனா, நினிவேக்குப் போ” என்று கூறுகிறபோது, யோனாவைத் தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாது.
இந்த ஜீவியத்திற்கு தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார். இந்த சத்தம் நமக்கு நித்திய ஜீவனின் வார்த்தைகளை உரைக்கிறது. நமக்கு, இதுவே தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது. இதுவே நம்முடைய கப்பல். நீங்கள் தர்ஷீசுக்கு செல்லும் கப்பலில் இருந்தால், மிகத் தாமதமாகிவிடும் முன் இறங்கிவிடுங்கள்.
நீங்கள் எந்த வழியில் செல்வது அல்லது என்ன செய்வது என்று உங்களுடைய இருதயத்தில் யோசித்துக்கொண்டிருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, எங்களிடம் வாருங்கள். எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள்ளுங்கள். நாங்கள் கூக்குரலிட, நினிவேக்கு சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் விரும்பினால் கீழ் நோக்கி செல்லுகிற அந்த தர்ஷிஷ் கப்பலில் போக நாங்கள் விட்டுவிடுகிறோம். நாம் தேவனுக்கு முன்பாக ஒரு கடமையைப் பெற்றுள்ளோம், அதுவே நாம் பொறுப்பேற்க வேண்டிய ஒரு செய்தி.
ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யாத சபைக்கு நீங்கள் சென்றால், அது தர்ஷிஷுக்கு போகிற ஒரு கப்பல் என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக யாராவது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை முன் வைக்கவில்லையென்றால், உங்கள் கப்பலின் தலைமையில் யார் இருக்கிறார்கள் என்றும், உங்களுடைய கப்பல் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க நீங்கள் சரிபார்ப்பது நல்லது.
கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் 65-0217 என்ற செய்தியை எங்களுக்கு கப்பலின் தலைவர் கொண்டு வந்து பேசப் போகின்றபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
நாம் உடனடியாக இந்த எழுப்புதலைத் தொடங்குவோமாக. சரியே! நீங்கள் எதற்காக தாமதிக்கிறீர்கள்? கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், அவர் ஒரு மணவாட்டியைப் பெற்றுக் கொள்வார், அது ஆயத்தமாயுள்ளது. நமக்கு தர்ஷீசுக்குப் போகும் கப்பல்கள் எதுவும் வேண்டாம். நாம் நினிவேக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஹூ! நாம் மகிமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஆமென்! அது உண்மை. தேவன் ஆசீர்வதிக்கப் போகும் இடத்திற்கு நாம் போய்க்கொண்டிருக்கிறோம், அதைத்தான் நாம் செய்ய விரும்புகிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யோனா 1:1-3மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30