காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 28 அக்டோபர், 2023

அன்புள்ள சிறைவாசிகளே

நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கை நோவா, அல்லது மோசேயின் நாட்களில் நீங்கள் வாழ்ந்திருந்தால் நீங்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும், ஏனென்றால் நீங்கள் அதே ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள். இப்போது உங்களிடம் இருக்கும் அதே ஆவி அப்போது மக்களிடம் இருந்தது.

நீங்கள் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், அப்போது யாருடைய பக்கம் இருந்திருப்பீர்கள்? பேழையைக் கட்டுவதற்கும் மக்களை வழிநடத்துவதற்கும் தேவன் தெரிந்து கொண்டவர் நோவா என்று நீங்கள் விசுவாசித்து அவருடன் பேழைக்குள் பிரவேசித்திருப்பீர்களா அல்லது “என்னாலும் கூட ஒரு பேழையைக் கட்ட முடியும். நான் ஒரு தலைவனையும், பேழையை கட்டுபவரையும் போல் நல்லவன்”? என்று கூறியிருந்திருப்பீர்களா?

நீங்கள் மோசேயின் காலத்தில் வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் மோசேயுடன் தரித்திருந்து, மக்களை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்டவர் அவரே என்று விசுவாசித்திருப்பீர்களா, அல்லது தாத்தானும் கோராகும் "நாங்களும் பரிசுத்தமானவர்கள், நாங்களும் ஏதாவது சொல்ல வேண்டும். தேவன் எங்களையும் கூட தெரிந்துகொண்டாரே" என்று அவர்கள் கூறினபோது அவர்களுடன் சென்றிருப்பீர்களா”?

நாம் ஒவ்வொருவரும், இந்த நாளை, மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையே தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்தப் பக்கம் என்று கூறினாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே, ஒவ்வொரு நாளும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்கிறது. நாம் ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கிறோம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் வார்த்தையில் இருக்கிறீர்களா? நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தருடைய பரிபூரண சித்தத்தைத் தேடி, ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பது முற்றிலும் அவசியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் இன்றைக்கான தேவனுடைய சத்தமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

நம்மைப் பொறுத்தவரை, பதிலோ ஆம் என்பதாகவே உள்ளது. நாம் நம்முடைய நாளுக்கான தேவனுடைய வார்த்தைக்கும், அவருடைய செய்திக்கும், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்திற்கும் சிறைவாசிகளாய் இருக்கிறோம் என்று உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆம், 7-ம் சபைக் கால செய்தியாளரே மணவாட்டியை வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆம், ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தமே கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமாய் இருக்கிறது.

தேவனுடைய அன்பும், அவருடைய சத்தமும், இந்தச் செய்தியும், மிகவும் பிரமாண்டமானதாயும், நமக்கு அப்பேர்ப்பட்ட ஒரு வெளிப்பாடாயும் உள்ளது, அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. நாம் இதற்கு ஒரு சிறைவாசியாகிவிட்டோம்.

நாம் மற்ற எல்லாவற்றுக்கும் விற்றுவிட்டோம். மற்றவர்கள் என்ன கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல், நாம் சேணம் பூட்டப்பட்டிருக்கிறோம். நாம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாதபடிக்கு இதைக் குறித்து ஏதோ ஒரு காரியம் உள்ளது. இது நம்முடைய ஜீவியங்களின் சந்தோஷமாக இருக்கிறது. இது இல்லாமல் நம்மால் ஜீவிக்க முடியாது.

நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், கர்த்தருக்கும் அவருடைய செய்திக்கும் ஒரு சிறைவாசியாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்; ஏனெனில் அவை ஒன்றே. இது நமக்கு ஜீவனை விட மேலானது. ஒவ்வொரு நாளும் நாம் அவருடைய மணவாட்டி என்பதை இது தெளிவாகவும் அதிக உண்மையுமாக்குகிகிறது. நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம். நாம் வார்த்தையைப் பேச முடியும், ஏனென்றால் நாம் மாம்சமான வார்த்தையாயிருக்கிறோம்.

கிறிஸ்துவோடும் இந்த மணிநேரத்திற்கான அவருடைய செய்தியையும் தவிர வேறு எதனுடனும்; நம்முடைய தந்தை, நம்முடைய தாய், நம்முடைய சகோதரன், நம்முடைய சகோதரி, நம்முடைய கணவன், நம்முடைய மனைவி, யாரேனும் கூட நாம் இணைக்கப்பட்டிருக்கவில்லை. நாம் கிறிஸ்துவோடு மாத்திரமே இணைக்கப்பட்டிருக்கிறோம், அவருடன் மட்டுமே. நாம் இந்த செய்திக்கும், இந்த சத்தத்திற்கும் இணைக்கப்பட்டு, நுகத்திலே பூட்டப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் இது இந்த நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது, வேறு வழியே இல்லை.

நாம் இனி நம் சுயநலத்திற்கும், நமது லட்சியத்திற்கும் சிறைவாசிகள் அல்ல. நாம் நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, அவரிடம் நுகத்தில் பூட்டப்பட்டிருக்கிறோம். உலகத்தில் உள்ள மற்றவர் என்ன நினைத்தாலும், உலகத்தில் உள்ள மற்றவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், நாம் அவருக்கும் அவருடைய சத்தத்திற்கும் அன்பின் சங்கிலிகளினால் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

சிறைவாசிகளாக இருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பிதாவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். நாங்கள் செய்கிற, நாங்கள் கூறுகிற ஒவ்வொரு காரியத்திலும், மற்றும் எப்படி செயல்பட வேண்டும் என்றும் உம்முடைய சத்தம் எங்களுக்கு அறிவுறுத்தட்டும். நாங்கள் உம்மைத் தவிர வேறு எதையும் அறிய விரும்பவில்லை.

எப்படி சிறைவாசியாக வேண்டும் என்பதற்காக: ஒரு சிறைவாசி 63-0717 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சத்தத்திற்கும் சேணம் பூட்டப்படும்படிக்கு எங்களோடு வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்

பிலேமோன் 1:1

பிற்சேர்க்கை: சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் பிலேமோன் என்று உச்சரிக்கும் விதத்தை நாங்கள் விரும்புகிறோம், அது மணவாட்டிக்கு பரிபூரணமாயுள்ளது.

 

 

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 21 அக்டோபர், 2023

அன்புள்ள தேவனுடைய கூடாரங்களே,

நான் அவருடைய சபையாயிருக்கிறேன். நீங்கள் அவருடைய சபையாயிருக்கிறீர்கள். நாம் தேவன் வாசம் செய்கிற கூடாரமாயிருக்கிறோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கிறோம்; நம்முடைய உள்ளத்தில் ஜீவனுள்ள தேவன் ஜீவிக்கிறார். நமது செய்கைகள் தேவனுடைய செய்கைகளாயிருக்கின்றன. மகிமை!!

உலகம் முழுவதிலுமிருந்து சிறிய இடங்களில், நாம் அனைவரும் ஒன்று கூடுகிறோம்; இன்றைக்கான அவருடைய வார்த்தையான தேவனுடைய சத்தத்தின் பேரில் அனைவரும் ஒன்றுசேர்கின்றனர்.

இது மிகவும் அற்புதமாயுள்ளது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் மட்டுமேயன்றி, வேறு எதனோடும் இதற்கு இணைப்பு இல்லை. அது தான், முற்றிலுமானதே. நாம் தேவனுடைய சத்தத்தால் பரிபூரணப்படுத்தப்பட்டு உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் முழுமையாக முடிவுவரைக்குமாய் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவருமே! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும், வயதான பெண்ணாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் அல்லது ஒரு இளைஞனாக இருந்தாலும், நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, நாம் அனைவருமே சென்று கொண்டிருக்கிறோம். நம்மில் ஒருவரும் கைவிடப்படப்போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்கிறோம், மேலும் "நாம் வேறெதற்காகவும் நிற்கப்போவதில்லை."

நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு மகத்தான ஒன்றுபட்ட குழு, அந்த மகிமையான வருகைக்காக காத்திருக்கிறது. நாம் பிரிக்கப்படக்கூடாது, ஆனால் மனிதன் சுவிசேஷத்தின் போதனையின் பாதையிலிருந்து வெளியேறிவிட்டான்.

எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காட்ட ஏதாவது வழி இருக்க வேண்டும். நீங்கள் எப்போதுமே செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த வியாக்கியானத்தையும் கொடுக்காமல், அதை அப்படியே படித்து, அதை அப்படியே விசுவாசியுங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வியாக்கியானத்தை முன்வைக்கிறான், அது வித்தியாசமான ஏதோக் காரியத்தை கூற வைக்கிறது. மணவாட்டிக்கு ஒரே ஒரு தேவனுடைய சத்தம் மாத்திரமே உள்ளது. இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்!

இந்த கூட்டத்தினருக்காக, நான் இதை இந்த ஒலிநாடாவில் கூறுகிறேன், நான் பரிசுத்த ஆவியின் ஏவுதலின் கீழ் இதைச் சொல்கிறேன்: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர் யார், அவர் இந்த வார்த்தையின் கீழ் வரட்டும்!

நம்முடைய நாளுக்கான வார்த்தைக்கு ஒரு சத்தம் உள்ளது. நம்முடைய தீர்க்கதரிசியே அந்த சத்தம். அந்த சத்தம் நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையாயிருக்கிறது. அந்தக் சத்தத்தைக் கேட்பதற்கும் இந்த மணிநேரத்தைப் பார்ப்பதற்கும் நாம் முன்குறிக்கப்பட்டிருந்தோம், மேலும் அந்த சத்தத்தைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுக்கப்போவது எதுவுமேயில்லை.

நம்முடைய விசுவாசம் அதைக் கண்டு, யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல் அதைக் கேட்கத் தேர்ந்தெடுக்கிறது. நாம் ஒரு வித்தியாசமான வழியில் நோக்கிப் பார்க்கும்படிக்கு நம்முடைய பார்வைகளை கீழ் நோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் வார்த்தையின் பேரிலான நடு மையத்தில் குறி வைத்து, நம்முடைய செவிகளை அந்த சத்தத்திற்கு செவி கொடுக்கிறோம்.

கர்த்தாவே, உம்மிடத்தில் ஒரு அர்ப்பணிப்புடன், எங்களுடைய இதயங்களிலிருந்து உம்முடைய செவிகளுக்கு ஏறெடுக்கும், இதுவே எங்களுடைய உத்தமமான ஜெபமாயுள்ளது.

இந்தநாள் முதற்கொண்டு, நம்முடைய ஜீவியங்கள் மாற வேண்டும் என்றும், அதாவது நம்முடைய சிந்தனையில் நாம் அதிக உறுதியாயிருப்போம் என்று அர்ப்பணிப்போமாக. நாம் இனிமையானவர்களாய், தாழ்மையுள்ளவர்களாய் ஜீவிக்க முயற்சித்து, அதாவது, நாம் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறதை, தேவன் ஒவ்வொருவருக்கும் அருளுவார் என்று விசுவாசிப்போமாக. நாம் ஒருவருக்கொருவர் விரோதமாக, அல்லது எந்த மனிதனுக்குமே விரோதமாக பொல்லாங்காய் பேசாதிருப்போமாக. நாம் நம்முடைய சத்துருக்களுக்காக ஜெபித்து, அவர்களை நேசித்து, நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நன்மை செய்வோமாக. யார் சரி என்றும், யார் தவறு என்பதையுங் குறித்து தேவனே நியாதிபதியாயிருக்கிறார்.

முறையிடுகிறது என்ன? சொல்! 63-0714M என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தை கேட்பதனால் உங்களுடைய விசுவாசத்தை அபிஷேகிக்கும்படிக்கு எங்களோடு வரும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 14 அக்டோபர், 2023

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,

நாம் யாவரும் ஒன்றுகூடி, ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த ஞாயிறு பிற்பகல் 5:00 மணிக்கு, குற்றச்சாட்டு 63-0707m என்ற செய்தியைக் கேட்போமாக.

நாம் அதைக் கேட்டப் பிறகு, 63-0707e இராப்போஜனம் என்ற செய்தியைக் கேட்கையில், நம்முடைய வீடுகளில் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்ளும் புனிதமான வாய்ப்பிற்காக நம்மைத் ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக. பிறகு நாம் இராப்போஜனம் மற்றும் பாதங்களைக் கழுவுதல் ஆராதனைகளை நடத்துவோம். குற்றச்சாட்டு செய்தி இயக்கப்பட்டதுபோலவே, வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில் மட்டும்) இராப்போஜனம் என்ற செய்தி ஒலிநாடா இயக்கப்படும், அதைத் தொடர்ந்து பியானோ இசை, கால்களைக் கழுவுதலை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு மேற்கோள் மற்றும் நற்செய்தி கீதங்கள் இயக்கப்படும், நாம் வழக்கமாக வீட்டில் இராப்போஜன ஆராதனைகளில் செய்வது போலவே.

இராபோஜன திராட்சை ரசம் பெறுவதற்கான/மற்றும் அப்பம் தயாரிப்பதற்கான வழிமுறைகளுக்காக இணைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ராஜாதி ராஜாவாகிய அவருடன் ஒரு விசேஷித்த நாளாக நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் அவரை அழைக்க கர்த்தர் ஒரு வழியை நமக்கு அருளியிருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் அவரது மேசையில் சந்திக்க நான் நிச்சயமாகவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக,

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 



அப்பம் சுடுவதற்கு / திராட்சை ரசம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்

இராபோஜன திராட்சை ரசம் / கால் கழுவும் தொட்டிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்



 


தொடர்புடைய சேவைகள்
சனி, 7 அக்டோபர், 2023

அன்பான தேவனுடைய தீர்க்கதரிசியின் மந்தையே,

நாம் ஜெபம் செய்வோமாக.

பரலோகப் பிதாவே, நித்தியத்தின் இந்தப் பக்கம் உலகம் முழுவதிலுமிருந்து மற்றொரு முறை ஒன்றுகூடியதற்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உம்முடைய சத்தம் எங்களிடத்தில் பேசுவதை கேட்பதற்கு; உம்மோடு ஏக சிந்தையும் ஏக மனதும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் முன்னோக்கி செல்லும் பயணத்திற்காக எங்களுக்கு தைரியத்தையும் பெலனையும் தரும்படிக்கு, உம்மிடமிருந்து வருகிற புதுப்பித்தலின் பெலனுக்காக மீண்டும் ஒருமுறை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.

எங்களுக்காக அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக்கொள்ள நாங்கள் ஒன்று கூடுகிறோம். பயணத்திற்கான பெலனை எங்களுக்குத் தரும்படிக்கு அந்த ஆவிக்குரிய மன்னாவை நீர் சேமித்து வைத்தீர். அதுவே வருகின்ற நாட்களினூடாக எங்களை தாங்கக்கூடிய ஒரே காரியமாய் இருக்கிறது.

நீர் உம்முடைய சபையை ஒழுங்கில் அமைப்பதற்கு முன்பு, நீர் எங்களை ஒரே இடத்தில் ஒருமனதாக, ஒன்று சேர்க்க வேண்டும் என்று, நீர் எங்களிடத்தில் சொன்னீர். அப்பொழுது நீர் வழிநடத்துவதற்காக எங்களுக்கு உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்புவீர்; ஏதோ உலக ஆலோசனை சபை சங்கத்தை அல்ல, சில மனிதக் குழுக்களை அல்ல, ஆனால் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதற்கே.

நீர் உம்முடைய தூதன் மூலமாக உரைத்து எங்களிடம் சொன்னீர்:

"நீங்கள் உங்கள் போதகரிடமும், இங்கு உங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள போதகத்திலும் நிலைகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த வார்த்தையில் தரித்திருங்கள். நீங்கள் அதை விட்டுவிடாதீர்கள்! என்ன வந்தாலும், போனாலும் பரவாயில்லை, நீங்கள் வார்த்தையில் தரித்திருங்கள். அந்த வார்த்தையிலே தரித்திருங்கள்!"

பிதாவே, நாங்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எங்களுடைய போதகரோடு தரித்திருக்கிறோம். இது எங்களுடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிற உம்முடைய தூய வார்த்தையை மட்டுமே பேசுகிற இன்றைக்கான தேவனுடைய சத்தமாய் உள்ளது.

சோதோமின் நாட்களில் இருந்ததுபோலவே, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும் என்று நீர் எங்களுக்குச் சொன்னீர்; அதாவது எங்களை வழிநடத்த இரண்டு காரியங்களை நாங்கள் பெற்றிருக்க வேண்டும், ஏனைய உலகத்திற்கு இரண்டு காரியங்கள் இருக்கும். அவர்களுடைய இரண்டு காரியங்கள் இரண்டு பிரசங்கிகளாக இருந்தன.

ஆனால் உங்களுடைய ஆவிக்குரிய சபைக்காக, உங்களுடைய முன்குறிக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாளாகிய மணவாட்டிக்காக, எங்களுடைய இரண்டு காரியங்களாக நீர் இருப்பீர், ஒரு மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியினால் எங்களை வழிநடத்தவே.

காற்று ஊளையிடட்டும். புயல்கள் அசைக்கட்டும். நாங்கள் எப்போதும், பாதுகாப்பாக இருக்கிறோம். உம்முடைய வார்த்தையில் நாங்கள் அங்கே இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். நேரமோ இங்கே வந்துவிட்டது. ஆவிக்குரிய யாத்திரை வந்துவிட்டது. நாங்கள் அனுதினமும் உம்மோடு சஞ்சரித்து, பேசி, உம்முடைய சத்தத்தைக் கேட்கிறோம். நாங்கள் உம்மோடு நிலையான ஐக்கியத்தில் இருக்கிறோம்.

நாங்கள் உம்முடைய கரங்களாகவும், உம்முடைய கண்களாகவும், உம்முடைய நாவாகவும் இருக்க விரும்புகிறோம். நீரே திராட்சை செடி, நாங்கள் உம்முடைய கொடிகள். பிதாவே, உம்முடைய கனியை தரும்படிக்கு, எங்களை ஊக்கப்படுத்தும்.

உம்முடைய சுவிசேஷத்திற்கு தகுதியான ஒரு ஜீவியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே வாஞ்சையாய் இருக்கிறது. பிதாவே, உமது பணியைத் தொடரவும், உமது வாக்களிக்கப்பட்ட வார்த்தையை நிறைவேற்றவும், எங்களின் மூலம் உம்மைப் பிரதிபலியும். எல்லா நீதியையும் நிறைவேற்றும்படிக்கு, இன்றைக்கான உம்முடைய செய்தியாளர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வாஞ்சையாய் இருக்கிறது.

நீர் எங்களிடம் கூறுவதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்:

"வானொலியில் அல்லது உள்ளே இதை கேட்பவர்களுக்கும்…அநேக நாடுகளில் ஒலி நாடாக்களில் இதை கேட்பவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: எல்லா கிருபையும் கொண்ட பரலோகத்தின் தேவன் தாமே, ஆசீர்வாதமான தமது பரிசுத்த ஆவியை நம்மெல்லோர் மேலும் பிரகாசிக்கச் செய்து, அதாவது நாம், இன்றிரவு முதல், இது முதற்கொண்டு, ஒரு தகுதியுள்ள வாழ்க்கை வாழும்படி செய்யக்கூடிய தேவன், “நான் இங்கே பிரியப்படுகிறேன், உலகத்தோற்ற முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய சந்தோஷத்துக்குள் பிரவேசியுங்கள்” என்பாராக! பரலோகத்தின் தேவன் தாமே தமது ஆசீர்வாதங்களை ஜனங்களாகிய உங்கள் எல்லோர் மேலும் அனுப்புவாராக!

மகிமை…பிதாவே, அது ஒலிநாடா தேசத்தில் உள்ள உம்முடைய மணவாட்டியான எங்களுக்கானதாயுள்ளது. உண்மையாகவே, நீர் உம்முடைய ஆசீர்வாதங்களை எங்கள் மேல் அனுப்பிக் கொண்டும், உம்முடைய வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்திக்கொண்டும், நாங்கள் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், நீர் பிரியப்படுகின்றீர் என்றும், நாங்கள் உம்முடைய மணவாட்டி என்றும் எங்கள் இடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்.

அவருடைய மணவாட்டியை வெளியே அழைக்கவும், வழி நடத்தவும் அனுப்பப்பட்டிருக்கிற உலகத்திற்கான தேவனுடைய மேய்ப்பரான, எங்களுடைய மேய்ப்பர் பேசுவதை நீங்கள் கேட்க விரும்பினால், உன்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா? 63-0630E என்ற ஒரு செய்தியை தேவனிடத்திலிருந்து அவர் எங்களுக்கு கொண்டு வருகின்றபடியால், அவர் பேசுகிற நித்திய ஜீவனின் வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

சிறப்பு அறிவிப்பு: கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அக்டோபர் 15-ஆம் தேதி, வீட்டில் ஒரு இராப்போஜனம் / கால் கழுவும் ஆராதனையையும் நாம் நடத்துவோம்.

 


சனி, 30 செப்டம்பர், 2023

அன்புள்ள யாத்ரீக மணவாட்டியே,

இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காரியங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க முடியாது; அது இன்று தான் நடந்துகொண்டிருக்கிறது. இதுதான் வேளை! இதுவே நேரம்! அது நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இதுவே. தேவன் அதை வாக்களித்தார், அது இங்கே உள்ளது.

நமக்கு ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் உண்டு; இந்த தேசத்தின் அக்கிரமம் நிறைவாக்கப்பட்டுள்ளது. வேளையானது வந்துவிட்டது. அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இதுவே. வெறுமனே மற்றொரு நாட்டுக்கு செல்வது அல்ல, ஆனால் நம்முடைய வருங்கால பரலோக வீட்டிற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள், நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பது ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானதாகும். இதை நிரூபிக்கும்படிக்கு தேவன் தம்முடைய வார்த்தையினால், நமக்கு மத்தியிலே மாம்சத்தில் வெளிப்பட்டதாய் இது உள்ளது. மற்ற எந்த தீர்க்கதரிசியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக செய்த ஒரு தீர்க்கதரிசி. இது அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு, ஆயிர வருட அரசாட்சிக்கு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிற அக்கினி ஸ்தம்பமாகும்.

அவர் நம்முடைய தீர்க்கதரிசியைத் தெரிந்துகொண்டு, அவர் தவறாக புரிந்து கொள்ளப்படாதபடிக்கு, இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளமான அக்கினி ஸ்தம்பத்தை அவருக்கு அளித்தார். தீர்க்கதரிசி என்னக் கூறினாரோ அது தேவனுடைய வார்த்தைகளாய் இருக்கின்றன. அவர் நம்முடைய தீர்க்கதரிசியைக் கொண்டு சென்று, அவருக்குப் பயிற்சியளித்து, அதன்பின்னர் நமக்குத் தம்மை ரூபகாரப்படுத்தும்படிக்கு, அவருடைய வார்த்தையின் முழு வெளிப்பாட்டையும் நமக்குத் தரும்படிக்கு அக்கினி ஸ்தம்பத்தோடு அவரை நம்மிடத்திற்கு திரும்ப அனுப்பினார்.

அந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நாம் செல்ல விரும்பினால், நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது, தேவனால் தம்முடைய திட்டத்தை மாற்ற முடியாது, அவர் மாற்றவும் மாட்டார். அவர் தேவனாய் இருக்கிறார், அவரால் அதை மாற்ற முடியாது. அவர் ஒரு குழுவுடன் ஒருபோதும் தொடர்புகொள்ளமாட்டார். அவர் ஒருபோதும் அவ்வாறு தொடர்பு கொண்டதில்லை. அவர் நம்முடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறார். இந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த மல்கியா 4-ஐ அனுப்புவதாக அவர் தம்முடைய வார்த்தையில் நமக்கு வாக்களித்து, அதையே அவர் செய்துள்ளார்.

ஆனால், நீங்கள் பாருங்கள், கர்த்தரால் உண்டாயிருந்தது என்று ஆகாப் கருதியிருந்த ஒரு முறைமையை அவன் உடையவனாயிருந்தான். அவன், "நான் அவர்களில் நானூறு பேருக்கு, பள்ளிப்படிப்பும் பயிற்சியும் அளித்து வைத்துள்ளேன்" என்றான். இன்றைக்கு ஊழியக் குழுக்கள் செய்வது போல, அவர்கள் எபிரெய தீர்க்கதரிசிகளாக உரிமை கோருகிறார்கள்.

அநேகர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் தேவனுடைய ஏழாம் தூதனான செய்தியாளர், நம்முடைய மேய்ப்பர், அவருடைய மணவாட்டியை வழிநடத்த உலகின் மேய்ப்பராக இருக்கிறார், பண்டைய எலியாவைப் போலவே.

அவர் மல்கியா 4:5-ஆகவும், வெளிப்படுத்துதல் 10:7-ஆகவும் இருக்கிறார். வேதம் அவரைக் குறித்து முன்னறிவித்த அனைத்து வேதவாக்கியங்களின் நிறைவேறுதலாய் அவர் இருக்கிறார். அதுவே இந்தச் செய்தியாய், இந்தச் சத்தமாய், அதுவே தம்முடைய மணவாட்டியை அழைக்கிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறது. இதுவே இன்றைக்கான தேவனுடைய திட்ட வரைபடமாக இருக்கிறது.

இது அதே அபிஷேகிக்கப்பட்ட முறைமையினால், அதே அக்கினி ஸ்தம்பமாக இருக்கிறது. அதே தேவன் அதே காரியங்களைச் செய்கிறார்.

இப்பொழுது வார்த்தை மாம்சமாகி, அவருடைய வார்த்தையான மணவாட்டியாகிய, நம்முடைய மாம்சத்தில் நம்மிடையே வாசமாயிருக்கிறது.

நம்மை இரட்சித்த, நம்மை முன்குறித்த, நம்மை நீதிமான்களாக்கின, அவர் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும்: நாம் அவரிடத்தில் கதறி, அவருக்கு நன்றி கூறி, அவரைத் துதித்து, அவரை ஆராதிப்போமாக.

அவர் இப்போது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்; நமக்கு வெளிப்பாட்டின் மேல் வெளிப்பாட்டை தந்து, நாம் யாராய் இருக்கிறோம் என்பதை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நமக்காக எல்லாவற்றையும் செய்யப் போகிறார்…நித்தியத்தினூடாக அவரோடு இருக்கும்படியாக, அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கிற நம்முடைய வருங்கால பரலோக வீட்டிற்கு நம்மை கொண்டு செல்ல அவருடைய மணவாட்டியான நம்மை அழைத்துச் செல்லவே வருகிறார்.

நமக்கு தேவை என்னவாயிருந்தாலும், அவரிடத்தில் முறையிடுவோம். அதைத்தான் அவருடைய பிள்ளைகள் செய்யும்படிக்கு அவர் விரும்புகிறார். நாம் திருப்தியடைந்து நமக்குத் தேவைப்படுகிறதை பெற்றுக் கொள்ளும்படியாக அவரிடத்தில் முறையிடுவோம்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மூன்றாம் யாத்திரை 63-0630M என்ற செய்தியை குறித்த எல்லாவற்றையும் உலகத்திற்கு தேவனுடைய மேய்ப்பராயிருக்கிற வில்லியம் மரியன் பிரான்ஹாம் எங்களிடத்தில் சொல்வதைக் கேட்க அவருடைய மணவாட்டியின் ஒரு பாகத்தோடு வந்து இணைந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

யாத்திராகமம் 3:1-12
ஆதியாகமம் அதிகாரம் 37
ஆதியாகமம் அதிகாரம் 43