அன்புள்ள பயமற்ற மணவாட்டியே,
எச்சரிக்கை!! எச்சரிக்கை!! சிவப்பு விளக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. திரையானது இறங்கும் நேரம் வந்துவிட்டது. நாம் எல்லாவற்றையும், ஒவ்வொரு காரியத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆயத்தமாக இருக்க வேண்டும். நாம் முடிவில் இருக்கிறோம். ஆரம்பம் முதல் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
1963-க்கு அப்பால் அறுபது வருடங்கள் தொடங்கி இன்று செப்டம்பர் 2023 வரை, நம்முடைய நாளில் நடக்கும் அனைத்தையும் பார்க்க தேவன் தம்முடைய வல்லமையான கழுகு செய்தியாளரை உயரே பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார்…உலகத்தின் நிலைமை, ஸ்திரீகளின் ஒழுக்கக்கேடு, சபையில் அதனுடைய நிலை, ஜனங்களின் பைத்தியக்காரத்தனம்; பொல்லாதவர், குருடர், நிர்வாணமானவர், அரசாங்கத்தின் அனைத்துக் கிளைகளிலும் மகா வேசி, அரசியலில் ஊழல் எப்படி இருக்கும் என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும் எச்சரித்துள்ளார்.
அது எவ்வாறு இருக்கும் என்று அவர் நமக்கு சொன்னபடியே அது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுவதை இப்பொழுது நாம் காண்கிறோம். இந்த எல்லா காரியங்களும் நடந்தேறுவதை கண்டிருக்கிறவர்கள் நாம்தான். ஒவ்வொரு காரியமும் அந்த நிலையில் உள்ளது. அது பெரிய அளவிலான ஒரு பெரிய அசுத்தமான பானையாக மாறிவிட்டது.
உலகம் முழுவதும் பீதி நிலையில் உள்ளது. நம்பிக்கை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. பூமியை அச்சம் மூடிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் போய்விட்டது, காரணமே இல்லாமல் கொலைகள், பெண்கள் ஆண்களாக இருக்க விரும்புகின்றனர், ஆண்கள் பெண்களாக இருக்க விரும்புகின்றனர். எந்தக் காரியமும் மற்றும் ஒவ்வொரு காரியமும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்த நேரத்திலும் என்ன நடக்கலாம்? அது ஒரு எரிமலை போன்று உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியும்; அது எந்த நொடியும் வெடிக்கும். அவர்களின் முகங்களில், அவர்களின் செயல்களில் நீங்கள் அதைக் காண்கிறீர்கள், நம்பிக்கையேயில்லை, பயமே.
கிறிஸ்தவ சபைகள் என்று அழைக்கப்படுபவை கூட திருநங்கைகளை போதகர்களாக, மக்களின் ஆவிக்குரிய தலைவர்களாக அரவணைத்து வருகின்றன. அது சோதோம் கொமோராவை விட மோசமாகிவிட்டது. சாத்தானும் அவனுடைய ராஜ்யமும் ஒன்றுபட்டு ஒன்றாகிவிட்டன. அவன் தன்னுடைய இலக்கை அடைந்துவிட்டான்.
ஆனால் தேவனுக்கே மகிமை, இந்த குழப்பம் மற்றும் பயத்தின் மத்தியில், பிதாவானவர் நம்மை, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனக்குழுவை, அவருடைய இனிய இருதயமான மணவாட்டியை, பாதுகாப்பாக அவருடைய கரங்களில் காத்துக்கொண்டார், மேலும் நாம் அவருடன் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு ஆவிக்குரிய ஐக்கியத்தை உடையவர்களாயிருக்கிறோம். இதுவே நம்முடைய ஜீவியங்களின் மிகப் மகத்தான நேரம். இது அற்புதம். இது மகிமையானது. இது இயற்கைக்கு மேம்பட்டது. இது நாம் வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
நம்முடைய மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டது. வேதம் இந்த நாளில் என்ன நடக்கும் என்று கூறினதோ, அதுவே நாளுக்கு நாள், நடந்து கொண்டிருக்கிறது.
காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, நம்மால் அதை கணக்கிட கூட முடியாத அளவிற்கு மிக வேகமாக சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம்; அவருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும், அங்கு வார்த்தை வார்த்தையாகிறது.
இவை அனைத்தும் நம்மைச் சுற்றி நடப்பதால், நாம் மகிழ்ச்சியாகவோ, அதிக மனநிறைவாகவோ அல்லது திருப்தியாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் சொல்லி முடியாத சந்தோஷத்தினாலும் மகிமையினாலும் நிரம்பி வழிகின்றன. இது ஒரு நம்ப முடியாத உண்மை.
ஆரம்பத்திலிருந்தே, நாம் தேவனுடைய ஒரு குமாரனாக குமாரத்தியாக இருக்க முன்குறிக்கப்பட்டிருந்தோம் என்பதை அறிந்து, முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுதல் அடைந்துகொண்டிருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாய், கிறிஸ்துவின் இரத்தத்தில் கழுவப்பட்டவர்களாய் இருக்கிறோம். விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமில்லாத தேவனுடைய குமாரன், ஒரு தூய்மையான, அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரினால் கழுவின கலப்படமற்ற வார்த்தை மணவாட்டியுடன் நிற்கிறார். காலத்தின் துவக்கத்திற்கு முன்பே நாம் பிதாவின் மடியில் முன்குறிக்கப்பட்டோம்; அவர் எப்படி இருந்தாரோ அதே போல...மகிமை!! அல்லேலூயா!
நாம் அது மட்டுமல்லாமல், முன்குறிக்கப்பட்ட விவாக அடையாளச் சின்னத்தை அணிந்துகொண்டு, மிக விரைவில் நாம் ஆகாயத்தில் கலியாணத்திற்கு செல்லவிருக்கிறோம். அவர் நம்மை அறிந்திருக்கிறார்…அதை பற்றி தியானியுங்கள், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருந்தார், அதனால் அவர் விவாக அடையாளச் சின்னத்தை அங்கே நமக்கு அணிவித்து, அவருடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் நம்முடைய பெயரை எழுதினார், மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீதிமானாக்கப்பட்டோம்.
இவை அனைத்தையும் பெறுவதற்கு ஒரே ஒரு வழி உள்ளது, நீங்கள் தேவன் அருளிய ஒரே வழியின் மூலம் வர வேண்டும். மூல வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
இந்த வெளிப்படுத்துதலைப் பெற்றதற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் தெளிவாக உள்ளது. மாம்சமும் இரத்தமும் அதை நமக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்தில் உள்ள நம்முடைய பிதாவே அதை வெளிப்படுத்தினார், அதற்காக நாம் அவரை எப்படி நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த நம்முடைய சொற்களஞ்சியத்தில் வார்த்தைகளே இல்லை...ஆச்சரியமான கிருபை.
தேவனுடைய சத்தம் உங்களிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதைப் போன்றது எதுவுமே இல்லை. நம்முடைய ஆத்துமாவில் பெருக்கெடுக்கும் சந்தோஷம். வியப்பதற்கு ஒன்றுமேயில்லை, யூகிக்க ஒன்றுமேயில்லை, இல்லை, யோசிப்பதற்கு கூட ஒன்றுமேயில்லை, நமக்குத் தெரியும், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது. அந்த 100% உத்தரவாதத்தை ஒலிநாடாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் உங்களால் பெற முடியாது.
அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு 63-0623E: என்ற செய்தியை அவர் தம்முடைய வல்லமையான கழுகு தீர்க்கதரிசியின் மூலமாக பேசி நமக்கு கொண்டு வருகையில், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நாளைக் குறித்த எல்லாவற்றையும் தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் சொல்வதை நாங்கள் கேட்கப்போகிறபடியால் நீங்களும் எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
நாங்கள் ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடுவோம். உங்களால் எங்களுடன் சேர்ந்துகொள்ள முடியாவிட்டால், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், இயங்கு பொத்தானை அழுத்தி நித்திய ஜீவனின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 5:28 / 22:20 / 24வது அதிகாரம்
2 தீமோத்தேயு 4வது அதிகாரம்
யூதா 1:7
ஆதியாகமம் 6வது அதிகாரம்
அன்பான தெரிந்துகொள்ளப்பட்டவர்களே,
நம்முடைய கர்த்தராகிய இயேசு நம்மை மிகவும் நேசிக்கிறார், அதாவது நம்முடைய நாளில் நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவது அவருக்கு பிரியமாயிருந்தது. ஒருவர் பேரில் அவருக்கு 100% நம்பிக்கை இருந்தது. அந்த ஒருவருக்குள் அவர் வந்து ஜீவித்து, தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க அந்த மானிட சரீரத்தினூடாக அவரால் தம்மை வெளிப்படுத்த முடிந்தது.
அவருடைய தீர்க்கதரிசி நம்மை மிகவும் நேசித்ததால், எந்த புதிய செய்தியும் அவருடைய சிறிய கூடாரத்திலிருந்தே வரும் என்று அவர் நமக்கும், தேவனுக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தார். அவர் மறைந்துபோனபோதும் கூட தேவனுடைய மணவாட்டி ஆவிக்குரிய ஆகாரத்தை விருந்துண்ணும்படியாக அவர் அதைப் பதிவுசெய்து, சேமித்து வைத்தார்.
தேவன் அவருடைய தூதனான தீர்க்கதரிசி அவருடைய வார்த்தையை நமக்கு காத்துக் கொள்ளும்படியாக அவருடைய தீர்க்கதரிசிக்கு அவ்வளவாய் உதவி செய்தார்.
தேவன் தம்முடைய பலமுள்ள தூதனின் மூலமாக உரைத்து, முழுமையாக வெளிப்படுத்தி, நமக்கு முழு வேதாகமத்தையும் வியாக்கியானித்தார், எழுதப்பட்டிராமல் கூட இருந்த, அந்த கூர்நுனி கோபுரம் போன்ற கற்பாறையின் உச்சியை அவர் திறந்து, அதை தம்முடைய தூதனுக்கு வெளிப்படுத்தினார், எனவே அவரால் அவருடைய மணவாட்டியாகிய, நமக்கு அவருடைய மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் கூற முடிந்தது.சகோதரன் ராபர்சனுக்கு கூட தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார், அங்கு அவர் அக்கினி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியைத் தூக்கி மேற்கு நோக்கி கொண்டு சென்று, பின்னர் அவரைத் திரும்பக் கொண்டு வந்து, மாற்றப்பட்டிருந்த அவரை மேசையின் தலைப் பகுதியில் அமர வைத்ததையும் கண்டார்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவரிடம் பேசி, “இவர் என் ஊழியக்காரன். மோசே செய்தது போல ஜனங்களை வழி நடத்துவதற்கு, இந்த காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும்படிக்கு நான் அவரை அழைத்திருக்கிறேன். பேசி சிருஷ்டிக்கும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னார்.
மோசேயின் அழைப்பு என்னவாயிருந்தது? அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது? வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஜனங்களை வழிநடத்தும்படிக்கு தேவன் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால் தேவன் மோசேக்கு அளித்திருந்த ஆணையில் தலையிட முடிவு செய்த மனிதர் அங்கு எழுந்து, "நீ மிஞ்சிப் போகிறாய். இந்தக் கூட்டத்தில் நீ ஒருவன் மாத்திரமே இன்னார் இன்னார் என்று கூறி உன்னை பெரிதாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கிறாய்" என்றனர்.
தேவன் மோசேயினிடத்தில், “அவர்கள் மத்தியிலிருந்து உன்னைப் பிரித்துக் கொள். நான் அந்த முழு கூட்டத்தையும் கொன்று போட்டு, ஒரு புதிய சந்ததியை உருவாக்கி உன்னோடு அனுப்புவேன்" என்று சொல்லுமளவிற்கு இந்த செயல் அவரை மிகவும் கோபமூட்டினது. மோசே தேவனுடைய சந்நிதியில் விழுந்து, அப்படியானால் அவர் அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கூறினான்.
தேவன் நம்முடைய நாளில் ஜனங்களை அதம்பண்ணப்போகிறார் என்றால், மோசேயைப் போல ஜனங்களுக்கு யார் நிற்பார்? அவ்வாறு நிற்கக் கூடிய, அல்லது நிற்க முடிந்த ஒரு நபரை, தேவன் மோசையை ஏற்றுக்கொண்டதுபோல ஏற்றுக்கொள்ளக்கூடிய யாரையாவது நாம் எங்கே கண்டறிவோம்? தேவனுடைய கோபத்தையே தடை செய்து நிறுத்துமளவுக்கு இந்த பூமியில் அவருடைய வல்லமையான ஏழாம் தூதனான, அந்த ஒரு மனிதனுடைய ஜீவியம் மாத்திரமே அவருக்கு அதிக விசேஷித்ததாயிருக்கிறது.
தேவன் எப்பொழுதுமே ஒரு திட்டத்தை உடையவராயிருக்கிறார். அவருடைய மணவாட்டி அந்த திட்டத்தை அடையாளங் கண்டுகொண்டு, வார்த்தைக்கு வார்த்தை அதனோடு தரித்திருப்பாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சென்றடையும்படிக்கு அவர்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருக்கிற அந்த சத்தத்தோடு அவர்கள் தரித்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, நோவா புறா மற்றும் காகத்துடன் பேழையில் செய்தது போல், வேறு திசையில் செல்ல நிறைய இடம் கொடுத்தார். ஆனால் எப்போதும் பேழைக்குத் திரும்பும் புறாவைப் போலவே, மணவாட்டி எப்போதும் செய்திக்கும், அந்த சத்தத்திற்கும், ஒலிநாடாக்களுக்கும் திரும்புவாள்.
நம்முடைய நாளின் தீர்க்கதரிசி யாராயிருந்தார்? காலங்களினூடாக தம்முடைய ஜனங்களை வழிநடத்த இதற்கு முன்பு தேவன் அழைத்து அனுப்பியிருந்த வல்லமையான தீர்க்கதரிசிகள் இருந்து வந்திருக்கின்றனர்: ஆபிரகாம், மோசே, எலியா, எலிசா, ஆனால் அவர்களில் எவருமே நம்முடைய நாளின் வல்லமையான தீர்க்கதரிசியைப் போன்று இருந்ததில்லை. இவர் அவர்கள் எல்லோரைக் காட்டிலும் ஒரு மிக உயரிய பதவிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேவனுடைய எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்றை பேசி உருவாக்கும்படிக்கு தேவன் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். மூன்றாம் இழுப்பை வெளிப்படுத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார்.
நாம் என்னே ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஜனங்களாய், தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாய் இருக்கிறோம். நாம் எப்படி தாழ்ந்தவராக இருக்க முடியும்? நாம் எப்படி சோகமாக இருக்க முடியும்? சாத்தான் நம்மை மனத் தளர்வடையச் செய்ய முயற்சிக்கிறான், ஆனால் நமக்கோ ஜெயம் உண்டு, நாமோ பாதுகாப்பாக பேழையில், முத்திரையிடப்பட்டுள்ளோம். கதவுகள் மூடப்பட்டுள்ளன. எதுவுமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. நாமே அவருடைய திரும்பளிக்கப்பட்ட ஆதாம்.
அவர் நமக்காக, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்காக வருகிறார். நம்மில் சிலர் மரணத்தை ருசி பார்க்காமல், ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். மகிமை!!
உங்கள் ஒவ்வொருவரையும் போலவே, ஒவ்வொரு நாளும், அவருடைய வார்த்தையிலும், அவர் எனக்குக் கொடுத்துள்ள என் வெளிப்பாட்டிலும், மேலும் மேலும் பலமடைடைந்து, நானும் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். நான் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அவர் இன்று வரவில்லையென்றால், நாளை வரலாம், ஆனால் அவர் மிக விரைவில் வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் எனக்காகவும் உங்களுக்காகவும் வருகிறார்.
ஒரு சிறு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுருக்கிற ஆகாரமான இடைவெளியில் நிற்றல் 63-0623M என்ற செய்தியை நாங்கள் உற்று நோக்கி கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள். நாம் எண் 27-ம் பத்தியிலிருந்து செய்தியைத் தொடங்குவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
எண்ணாகமம 16:3-4
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,
நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்! என்னே ஒரு மகத்தான நேரம்! இரகசியங்கள், அந்தரங்கங்கள் யாவுமே அனுதினமும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் கடந்து வந்துள்ளதைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தையும் மற்றும் முன்னால் என்ன இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்.
என்ன சம்பவிக்கப்போகிறது என்பது வசனத்திற்கு வசனம் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் யார், யார் அங்கே இருப்பார்கள், நாமும் கூட என்ன செய்வோம் என்று அவர் தெளிவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். 1,44,000 யூதர்கள், உபத்திரவத்தால் சுத்திகரிக்கப்பட்ட சபை, திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் நகரத்திற்குள் தங்களுடைய கனத்தையும் மகிமையையும் கொண்டு வருவார்கள்.
ஆனால் அப்பொழுது அது நீங்களாக இருக்காது என்று அவர் நம்மிடம் சொல்கிறார்...ஓ இல்லை, நீ என்னுடைய மணவாட்டி, நீ அந்த நகரத்தில் என்னுடன் இருக்கிறாய். நீ திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்யப்போவதில்லை, நீ என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறாய். உன்னுடைய இராஜாவாகிய, என்னோடு நீ என்னுடைய இராணியாயிருக்கிறாய். உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் தெரிந்துகொண்ட ஐந்தின் ஒரு பாகத்தில் உள்ள நூறில் ஒரு பாகமாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த இடத்தை உங்களுக்காகவே…நீங்கள் அதை விரும்புகிற விதத்தில் நான் ஆயத்தம் செய்தேன்.
அவர் வாரந்தோறும், நாளுக்கு நாள், ஒவ்வொரு மணிநேரமும், அவருடைய அற்புதமான வார்த்தைகள் அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மிடம் பேசுகிறபடியால் நாம் அவருடைய மேஜையைச் சுற்றி ஒன்று கூடுவதை, சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் யார் என்பதையும்; அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும்; என்ன இருந்தது, என்ன உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பதையும் மீண்டும் மீண்டும் அவர் நமக்குச் சொல்கிறார்.
இது நமக்கு என்னப் பொருட்படுத்துகிறது, அல்லது அவர் இந்தக் காரியங்களை நம்மிடம் பேசுவதை நாம் கேட்கும்போது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தி, அந்த சத்தத்தைக் கேட்கும்போது, நாம் இந்த உலகத்தை விட்டு வெளியேறி, உடனடியாக அவருடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆத்துமாக்கள் ஆறுதலடைகின்றன. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு உள்ளிந்திரியங்களையும் அவருடைய ஆவியால் நிரப்புவதை நாம் உணர்கிறோம். இது விவரிக்கப்பட முடியாத ஒரு சந்தோஷமாக இருக்கிறது. தேவன் நம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு உரைக்கப்பட்ட வார்த்தையையும், அவர் நமக்காகவே உரைத்தார். நாம் எதைக் கேட்க வேண்டும், எப்போது அதைக் கேட்க வேண்டும் என்று சரியாக அவருக்குத் தெரியும்...பலமுறை நாம் அதைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும்... ஒவ்வொரு முறையும் அது நம்முடைய ஆத்துமாவை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.
தரிசனங்கள், சொப்பனங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது, காலத்தின் திரைக்கபால், வெள்ளை அங்கிகளில் நம்மைக் கண்டது, மூன்றாம் இழுப்பு, அணில்களைச் சிருஷ்டித்தல், தேவனுடைய பட்டயம் அவருடைய கரத்தில் பரிபூரணமாக பொருந்தியது, சேமித்து வைக்கப்பட்ட ஆகாரம், மேஜையின் தலைப்பகுதியில் அமர வைக்கப்பட்டிருப்பது, இடிமுழக்கங்கள், வல்லமையான தூதர்கள் வந்து அவரை தூக்கிச் சென்றது, அந்த விசேஷித்த ஏழாம் தூதன் அவருக்கு மிக முக்கியமானவராக காணப்பட்டது, பிரான்ஹாம் என்று உச்சரிக்கிற ஏழு மலைச் சிகரங்களின் நித்திய அடையாளம், ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அவைகளை மாத்திரமே கூறுங்கள் என்பதையும், நான் வார்த்தையின் பிழையின்மையைக் கொண்டிருக்கிறேன் என்பதையும், அவர் மிக உன்னத அழைப்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதையும், நான் உங்களுக்கு என்னுடைய வெளிப்பாட்டைச் சொல்வேன் என்பதையும், நான் உங்களுக்கு தேவ சத்தமாய் இருக்கிறேன், ஒலிநாடா உபதேசத்தோடு தரித்திருங்கள், நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப்போகிறேன், இலக்கணமற்ற கொச்சையான வார்த்தைகளில் இவைகளை குறித்து அவர் நமக்கு சொல்லுகிறதை நாம் கேட்க ஒருபோதும் களைப்படைகிறதில்லை…நாம் அவை யாவற்றையுமே விரும்புகிறோம்.
இதுவே என்னுடைய தரிசனம். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே தேவனுடைய பரிபூரண சித்தமாயும், நிறைவானதாயும் உள்ளது. ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண சித்தமாயும், நிறைவானதாயுமுள்ளது. உங்களால் பிரசிங்கிமார்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள் பேசுவதைக் கேட்க முடியும், ஆனால் ஒலிநாடாக்களோ, நீங்கள் கேட்கக் கூடிய மிக முக்கியமான சத்தமாயும், நிறைவானதாயும், இருக்க வேண்டியதாய் இருக்கிறது. ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் தேவன் தாமே அவருக்கு செவி கொடுங்கள் என்று கூறின ஒரே சத்தமாயும், நிறைவானதாயும் இருக்கிறது.
என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் யாருக்கும் எதிரானவன் அல்ல, நான் அந்த சத்தத்திற்காகவே இருக்கிறேன். இந்தச் செய்தியை நேசிப்பதாகவும் விசுவாசிப்பதாகவும் அறிவிக்கும் அனைவரையும் நாமும், நானும் நேசிக்க வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் என்று நான் ஜனங்களிடத்தில் தவறாக சொல்லிக் கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும் கூட, நான் உங்களை நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். நாம் அனைவரும் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். தயவு செய்து தேவன் உங்களை அழைத்ததை தொடர்ந்து செய்யுங்கள்; பிரசங்கிக்கவும், போதிக்கவும், ஒரு மேய்ப்பராகவும் இருங்கள், உங்கள் மந்தைக்கு அவர்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் எது என்பதைச் சொல்லுங்கள்.
ஒலிநாடாவில் உள்ள அந்த சத்தம் மாத்திரமே ஒவ்வொரு முறையும் மாறாமல் அதையே கூறுகிறது. அது ஒருபோதும் மாறுகிறதில்லை. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மணவாட்டி மாத்திரமே ஆமென் என்று கூற முடியும், ஆனால் மணவாட்டி மற்ற மனிதன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்றோ, நிறைவானது என்றோ சொல்ல முடியாது.
நீங்கள் அதை நம்பவில்லையென்றால், நீங்கள் மணவாட்டி அல்ல. நீங்கள் அதை நம்பினால், அப்பொழுது ஒலிநாடாவைக் கேட்பதே அவர்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் என்று உங்கள் மந்தையிடம் சொல்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் தங்களுடைய போதகர்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் மற்றும் அவர்களுடைய சபைகளை விட்டு வெளியேறுங்கள் என்று நான் சொல்கிறேன் என்று பல ஊழியக்காரர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன், இது உண்மையல்ல. நான் அதை ஒருபோதும் கூறவுமில்லை, எனவே அதை நம்பாதீர்கள்.
நான் இதுவரை கூறாத, எப்போதும் நம்பாத விஷயங்களை பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் அவர்களுக்காக பொறுப்பேற்க முடியாது, ஆனால் நான் என்ன கூறியிருக்கிறேனோ அதை மாத்திரமே நான் விசுவாசிக்கிறேன். நான் வெளிப்படையாய் தெளிவாகப் பேசி, நான் எதை விசுவாசிக்கிறேனோ அதை சரியாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் / நீங்கள் நான் என்ன கூறிக் கொண்டிருக்கிறேனோ / பொருட்படுத்துகிறேனோ அதன் பேரில் உங்களுடைய திரித்தலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
மணவாட்டி அனைவரும் ஒரே காரியத்தையே கூறிக் கொண்டிருப்பர். இரண்டு மனிதர் ஒரே காரியத்தை கூறுகிறதில்லை. ஒரே சத்தம். ஒரே தீர்க்கதரிசி. ஒரே மணவாட்டி.
உலகெங்கிலும் உள்ள பல விசுவாசிகள் அவருடைய மணவாட்டியாக இருக்க, நீங்கள் ஒரே நேரத்தில் செய்தியைக் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை…ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தைக் நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்…அந்த சத்தத்திற்கே முதலிடம் அளியுங்கள்.
ஏழாவது முத்திரை 63-0324E, என்ற செய்தியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பகுதியினர் ஒரே நேரத்தில் அந்த சத்தத்தைக் கேட்கப்போகிறபடியால்: நீங்களும் எங்களோடு கேட்கும் படி அழைக்கப்படுகின்றீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
உபாகமம் 29:16-19 I இராஜாக்கள் 12:25-30 எசேக்கியேல் 48:1-7, 23-29 மத்தேயு 24:31-32 வெளிப்படுத்தின விசேஷம் 7 வெளிப்படுத்தின விசேஷம் 8:1 வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7 வெளிப்படுத்தின விசேஷம் 14
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சகோதரன் பிரான்ஹாம்,
அவருடைய மணவாட்டியை அழைக்க தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளராக நீர் அனுப்பப்பட்டிருக்கிறீர் என்று என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். நீர் உலகத்துக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள தேவ சத்தமாய் இருக்கிறீர். வேதாகமத்தின் இரகசியங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்த அவர் தெரிந்துகொண்ட ஒருவராக நீர் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒலிநாடாக்களில் நீர் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன்.
நான் உம்மிடத்தில் கேட்க விரும்புகிற ஒரு கேள்வி என்னுடைய இருதயத்தில் உண்டு. கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலவிதமான காரியங்களைச் சொல்லுகிற பல மனிதர்களும், பல சத்தங்களும் உள்ளன. நான் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நான் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டிருக்க விரும்புகிறேன். நான் எவருக்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நீர் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன்.
எது மணவாட்டியை ஒன்று சேர்த்து நமக்குத் தேவையான எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை நமக்கு அளிக்கும்?
எடுத்துக் கொள்ளப்படுவதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக, வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், ஏழு இரகசியங்களுக்கு ஒப்பான ஏழு இடிமுழக்கங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டதா? அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டதா, ஆனால் இன்னும் இடிமுழக்கங்களாக நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லையா?
இல்லை, அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன; அதுதான் இடிமுழக்கங்களைக் குறித்தாயிருந்தது. அவை எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால்...ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முழங்கின, அவை என்னவென்று யாருமே அறிந்துகொள்ள முடியவில்லை…அவை என்னவென்று யோவான் அறிந்திருந்தான், ஆனால் அவன் அதை எழுத தடை செய்யப்பட்டான். அவர், “ஏழாம் தூதன், தன் நாட்களில் தன் சத்தத்தை முழங்கும்போது, ஏழு இடிமுழக்கங்களின் ஏழு இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்” என்றார். ஏழாம் தூதன் என்பவர் ஏழாம் சபை காலத்தின் ஒரு செய்தியாளர்.
தேவனுக்கு மகிமை. அதுதான் என்னுடைய பதில். ஏழு இடிமுழக்கங்களின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயும், இப்பொழுது மணவாட்டியை ஒன்றாக இணைத்துக்கொண்டு, நமக்கு தேவைப்படுகிற எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறது.
சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய கேள்விக்கு பதிலளித்தமைக்காக, உங்களுக்கு நன்றி. நான் என்னுடைய இருதயத்தில் கொண்டிருந்த கேள்விக்கான பதில் ஒலிநாடாக்களில் இருக்கும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
நான் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். நான் அனுதினமும் தொடர்ந்து இயங்கு பொத்தானை அழுத்தி, இன்னும் அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, முத்திரைகளின் பேரிலான கேள்விகளும் பதில்களும் 63-0324M என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை எங்களோடு பெற்றுக் கொள்ள வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தீர்க்கதரிசியின் தேவனுடைய ஜனங்களே,
கவனியுங்கள், நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அது அவ்வளவு நன்மையானதாக உள்ளது, அது என் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. பாருங்கள், நீங்கள் அதை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அவருடைய பிரசனத்தில், நான் இதைக் கூறட்டும். அவருடைய கிருபையினால், அண்மையில், நான் என்னுடைய ஜனங்களை, வெள்ளை அங்கிகளில் காண அவரும் கூட என்னை அனுமதித்தார்.
கிழக்கு கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரை, நாடு முழுவதும், நாம் ஒன்று கூடுகிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் தேவனுடைய தீர்க்கதரிசி ஜனங்களாக ஒன்றாக இருக்கிறோம். நாம் ஒரு குழுவினராக இருக்கிறோம்.
தேவனுடைய தீர்க்கதரிசி இங்கே பூமியில் இருந்தபோது, மணவாட்டி இருக்க விரும்பிய, மகத்தான, மற்றும் ஒரே இடம், தொலைபேசி இணைப்புகளில் ஒன்றாக இணைந்து, அந்த சத்தம் "காலை வணக்கம் நண்பர்களே" என்று கூறுகிறதைக் கேட்க காத்திருந்ததேயாகும்.
எட்டாவது பென் தெருவின் மூலையில் அந்த கூட்டத்தார்களில் அமர்ந்திருப்பதை அவர்கள் எப்படி விரும்பியிருப்பார்கள். அவர்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் சந்தோஷமாக ஒரு இரவு காத்திருந்து ஒரு இருக்கையைப் பெறுவதற்கோ, அல்லது மணிக்கணக்கில் சுவர்களின் பக்கமாக நின்று சாய்ந்துகொள்வதற்கோ கழித்திருந்திருப்பார்கள். அந்த ஒரு ஆராதனையில் இருப்பதற்கு, தங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று, தங்களுடைய வேலையையும் இழந்துபோயிருப்பார்கள்.
அவர்களுடைய முழு ஜீவியமும் தீர்க்கதரிசி உரைத்த ஒவ்வொரு வார்த்தையிலும் நிலைக்கொண்டிருந்தது. அவர்கள் ஒரு காரியத்தையும் தவறவிட விரும்பவில்லை. ஒரு நாள் அந்த ஒலிநாடாவைப் பெற முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தாலும், தேவன் மனித உதடுகளால் உரைத்தத் தருணத்தில் மணவாட்டியுடன் இணைக்கப்பட்டிருக்க விரும்பினர்.
இதுவே அவர்களுடைய ஜீவியமாக இருந்தது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் அவர்கள் காத்திருந்தனர். அடுத்த செய்தியைக் கேட்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் பொருட்படவில்லை. இப்பொழுது, தேவனுடைய ஏழாம் தூதனான தீர்க்கதரிசி அவர்களுக்காக கூறினதை, ஒரே நேரத்தில், வார்த்தைக்கு வார்த்தை கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது என்பதை அவர்கள் அறிந்ததபடியால் எவ்வளவு உற்சாகமடைந்திருந்தார்கள்.
தேவன் ஒரு வழியைக் அருளியிருந்தார். அவர் தம்முடைய மணவாட்டி அவருடைய சத்தத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவருடைய மணவாட்டி ஒரே நேரத்தில் அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய தூதனான செய்தியாளர் மூலம் உரைக்கப்பட்ட அவருடைய சத்தமே அவருடைய மணவாட்டியை இணைக்கும் ஒரே சத்தமாய் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவருடைய மகத்தான திட்டம் நடந்து கொண்டிருந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் தங்களுடைய சபைகள் தொலைபேசி இணைப்பில் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமில்லை என்ற தரிசனத்தை அவர்கள் புரிந்திருந்தனர்.
அதைத்தான் அவர்கள் தங்களுடைய சபைகளுக்குப் போதித்திருந்தனர். “கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு, தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கிறார், அவர் அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறார். இது உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறது. இது மல்கியா 4, மற்றும் வெளிப்படுத்துதல் 10:7. அவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தேவனால் அழைக்கப்பட்ட மனிதனாயிருக்கிறார். நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசி இவர்தான். இப்பொழுது நாம் அனைவரும் அவருக்கு செவிகொடுக்க வேண்டும். பண்டைய யோவானைப் போல, நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்.
தேவனுடைய திட்டம் இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மணவாட்டி இன்னும் அவருடைய சத்தத்தில் இணைந்துகொண்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுது நாம் உலகம் முழுவதிலுமிருந்து இணைந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினர், ஒவ்வொரு வார்த்தையையும், ஒரே நேரத்தில் கேட்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை இந்தச் செய்தியை இதற்கு முன் நூறு முறை கேட்டிருக்கலாம், ஆனால் இந்த முறையோ முதல் முறை போல் உணர்கிறோம். முன்னெப்போதையும் விட ஒரு மகத்தான வெளிப்பாட்டைப் பெறப் போகிறோம் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
நாம் வேறெந்த இடத்திலும் இருக்க விரும்பவில்லை. இதைவிட முக்கியமானது எதுவுமில்லை. நமக்கு, இது தான் அது. இது நமக்கான தேவனுடைய திட்டமாயுள்ளது. இந்த சத்தம் அவருடைய மணவாட்டியை அழைத்துக்கொண்டும், ஒன்றிணைத்துக்கொண்டும், பரிபூரணப்படுத்திக்கொண்டும் இருக்கிறது...நாமே அந்த மணவாட்டியாய் இருக்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில், ஆறாவது முத்திரையை 63-0323: அவர் எங்களுக்கு வெளிப்படுத்துகிறபோது தேவனுடைய சத்தத்தை கேட்க நாங்கள் ஒன்றிணைகிறபடியால் எங்களுடன் சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யாத்திராகமம் 10:21-23
ஏசாயா 13:6-11
தானியேல் 12:1-3
மத்தேயு 24:1-30
மத்தேயு 27:45
பரி. யோவான் 10:27
வெளிப்படுத்தின விசேஷம் 6
வெளிப்படுத்தின விசேஷம் 11:3-6