காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
புதன், 20 டிசம்பர், 2023

அன்புள்ள அடையாளத்தை வைத்துக்கொண்டிருக்கிற மணவாட்டியே,

புத்தாண்டுக்கு முந்தின மாலை, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 அன்று மிகவும் சிறப்பாக வீட்டில் இராபோஜன ஆராதனைக்கு நாம் அனைவரும் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள நான் விரும்புகிறேன். 63-0901E பதறல்கள் என்ற செய்தியை நாம் கேட்போம், அதில் சகோதரன் பிரான்ஹாம் ஒலிநாடாவில் செய்தியின் முடிவில் இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல் ஆராதனைகளுக்குச் செல்கிறார்.

இந்தச் செய்தி வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில் மட்டும்) ஒலிபரப்பப்படும், மேலும் கடந்தகால வீட்டில் நடந்த இராபோஜன ஆராதனைகளில் நாம் செய்ததைப் போலவே ஆராதனையின் ஒழுங்கைப் பின்பற்றவும், இராப்போஜன ஆராதனையின் பாகத்தில் பியானோ இசையும் மற்றும் கால்களைக் கழுவும் போது சுவிசேஷ பாடல்களும் சேர்த்து ஒலிபரப்பப்படும். நாங்கள் ஜெபர்சன்வில் நேரப்படி, மாலை 5:00 மணிக்கு ஆராதனையைத் தொடங்குவோம். உங்களில் வெளிநாட்டில் இருப்பவர்கள், 2023-ம் ஆண்டு நள்ளிரவுக்கு முன் இராப்போஜனத்தை நடத்துவதற்காக, ஒலிநாடாவை இயக்கி, உங்கள் உள்ளூர் நேரப்படி இராப்போஜனத்தை நடத்துங்கள்.

நாம் இந்த 2023-ம் ஆண்டை முடித்து, 2024-ல் கர்த்தருக்கு ஒரு புதிய வருட ஆராதனையைத் தொடங்கலாம், அவருக்கு முன்பாக அமைதியாக இருப்பது, அவருக்காக மிகவும் பதறல் கொள்வது, அவருடைய இராபோஜனத்தில் பங்குகொள்வது, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பது மற்றும் மன்னிப்பது, அவருடைய பரிசுத்தவான்களின் பாதங்களை கழுவுதல், அவருடைய வார்த்தையைக் கேட்பது போன்ற ஒரு சிறந்த வழியைக் காட்டிலும் மேலானதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது என்னே ஒரு விஷேஷித்த மாலை நேரமாய் இருக்கும்.

இராப்போஜன திராட்சை ரசம் பெறுவதற்கான/ அப்பம் தயாரிப்பதற்கான வழிகளுக்கான இணைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இத்தகைய ஒரு புனிதமான சந்தர்ப்பத்தில் ஒன்றுபடுவதற்கு நமக்காக கர்த்தர் ஒரு வழியை அருளியிருக்கிறார் என்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் அவருடைய பந்தியில் சந்திக்க நான் நிச்சயமாகவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஏன் சிறிய பெத்லகேம்? 58-1228: என்ற கிறிஸ்துமஸ் செய்தியை நாம் கேட்போம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 24, 2023

58-1228 ஏன் சிறிய பெத்லகேம்?
பிற்பகல் 12.00 மணி. ஜெபர்சன்வில் நேரம்

 

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31, 2023

63-0901E பதறல்கள் / வீட்டில் இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல்
மாலை 5:00. ஜெபர்சன்வில் நேரம்

 

 



அப்பம் சுடுவதற்கான / திராட்சை ரசம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்

இராப்போஜன திராட்சை ரசம் / கால் கழுவும் தொட்டிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்



 


சனி, 16 டிசம்பர், 2023

என்னுடைய அன்பான இனிய இருதயமே,

நான் என்னுடைய தூதன் மூலமாக உங்களிடம் பேசும்போது, நீங்கள் அனைவரும் என் சத்தத்தின் பேரில் ஒன்று கூடி, என் வார்த்தையைக் கேட்ப்பதை நான் காணும்போது, என் இருதயம் பொங்கி வழிகிறது.

உனக்கு நான் சத்தமாய் இருக்கும்படி தெரிந்துகொண்ட ஒருவரை குறித்த வெளிப்பாட்டை நீ பெற்றிருப்பதை அறிந்துகொள்வது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. தீர்க்கதரிசி உரைத்த ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பது, அவருடைய வார்த்தையாயில்லாமல், உனக்கு என்னுடைய வார்த்தையாகவே இருக்கிறது.

இது எனக்கு மிகவும் முக்கியமானதாயிருந்தது, நான் அதை உனக்காக பதிவுசெய்து சேமித்து வைத்திருந்தேன், எனவே நீ அதை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். என் இருதயத்திலிருந்து நான் கூறினதை நீ மறக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை. நாம் ஒன்று சேர்ந்திருக்கும்படியாக, உனக்குத் தேவையான பரிபூரண விசுவாசத்தை நான் உனக்கு வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்று எனக்குத் தெரியும்.

என் மணவாட்டியிடம் என் வார்த்தையைப் பேசவும் வெளிப்படுத்தவும் நான் எப்போதும் ஒரு மனிதனைப் பயன்படுத்தியுள்ளேன். நான் மோசேயுடன் செய்ததைப் போலவே. அவன் எதைக் கேட்டுக்கொண்டானோ, அதையே அவன் பெற்றுக்கொண்டான், ஏனென்றால் அவன் என் வார்த்தைகளை மட்டுமே பேசினான். நான் உன்னை ஒரு தேவனாக்குவேன் என்று, நான் அவனிடத்தில் கூட சொன்னேன். நீ ஒரு தேவனாய் இருப்பாய், ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். நான் உன்னுடைய சத்தத்தை உபயோகித்து, நான் உன்னோடு சிருஷ்டிப்பேன். நான் பேசுவேன், ஜனங்கள் அதை மறுதலிக்க முடியாது. நீ என்ன கூறினாலும், நடக்கும்.

இப்பொழுது நீ என்னுடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தைப் பெற்றுள்ளபடியால், நான் யாரை என் சத்தமாயிருக்க உனக்கு அனுப்பினேன் என்பதை நீ அடையாளங் கண்டுகொள்வது மட்டுமல்லாமல், என் வார்த்தை ஜீவிக்கிறது என்றும், உனக்குள் வாசம் செய்கிறது என்றும் உனக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது என்பதையும் நீ இப்பொழுது அடையாளங் கண்டு கொள்கிறாய்.

நீ யார் என்று உனக்குத் தெரியும். நீ என்னிலும், என் வார்த்தை உன்னிலும் நிலைத்திருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் என்று கேள்; அது உனக்கு கொடுக்கப்படும். என் நாமத்தினாலே நீ பிசாசுகளைத் துரத்துவாய்; நான் துரத்துவேன் என்றல்ல, நீ துரத்துவாய். நீ இந்த மலையிடம் சொன்னால்; நான் சொன்னால் என்று அல்ல, நீ இந்த மலையிடம் சொன்னால்.

உன்னுடைய சத்துருவுக்கு உன் மீது எந்த அதிகாரமும் இல்லை. நீயும் என் வார்த்தையும் ஒன்றாயுள்ளது. உன்னுடைய பிள்ளைகளோ அல்லது அன்புக்குரியவர்களோ இருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லாதிருந்தால், அவர்களை உரிமை கோரவும். இது உன் பேரில் கிரியை செய்திருந்ததானால், அப்பொழுது உன்னில் நிலைத்திருக்கும் என்னுடைய பரிபூரண வார்த்தையில் உள்ள உன்னுடைய பரிபூரண விசுவாசத்தைப் பயன்படுத்து, நீ கேட்பதை நீ பெற்றுக்கொள்ள முடியும்.

ஓ, நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்காக நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். என் வார்த்தையைக் கேட்பதனால் உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதைக் காண்பதற்கே. அந்த நேரம் இறுதியாக வந்துவிட்டது என்றே நான் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன்.

உனக்காக நான் பேசி, சேமித்து வைத்த அந்த பரிபூரண வார்த்தை இன்றைக்கு ஒவ்வொரு விசுவாசிக்கும் என்னுடைய அடையாளமாகும். அது பரிசுத்த ஆவி; இரத்தமோ, இராசயணமோ அல்ல, ஆனால் அது என்னுடைய பரிசுத்த ஆவி, என் வார்த்தை, உன்னில் ஜீவித்து, வாசம் செய்கிறது.

காட்டப்பட வேண்டிய அந்த அடையாளத்தின் வேளையோ சமீபத்துவிட்டது. இரவும் பகலும் நீ அடையாளத்தை உன்னோடு கொண்டு செல்ல வேண்டும்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் அல்ல, நீ எல்லா நேரத்திலுமே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க வேண்டும்.

அவர் அடையாளத்தை மாத்திரமே அங்கீகரிக்கின்றார். இதுவே இந்த மணி நேரத்தின் செய்தியாயுள்ளது! இதுவே இந்த நாளின் செய்தியாயுள்ளது, இதுவே இக்காலத்தின் செய்தியாயுள்ளது! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்!

அங்கு ஏராளமான செய்திகள் உள்ளன, ஆனால் என்னுடைய சத்தமே இந்த மணிநேரத்தின் செய்தியாயுள்ளது. நீ ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொண்டு, விசுவாசிக்க வேண்டும். இது சாயங்கால நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.

நீங்கள் உலகம் முழுவதும், ஒலிநாடாக்களில் கேட்கிறீர்கள், இந்த மணிநேரத்துக்கான அடையாளம் இங்கே உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய ஒரு அடையாளம் உள்ளது, வேறு எந்த நேரத்திலும் அது வந்திருக்க முடியாது.... நீங்கள் இதைப் புரிந்துகொள்கிறீர்களா?

மணவாட்டிக்கான என்னுடைய செய்தியான அடையாளம் 63-0901M என்ற செய்தியை: நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, என்னுடைய மணவாட்டியோடு உங்களுடைய ஜீவியத்திற்கு என்னுடைய அடையாளத்தை பயன்படுத்த வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

ஆதியாகமம் 4:10
யாத்திராகமம் 12-வது அதிகாரம்
யோசுவா 12-வது அதிகாரம்
அப்போஸ்தலர் 16:31 / 19:1-7
ரோமர் 8:1
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 2:12 / 4:30
எபிரெயர் 6:4 / 9:11-14 / 10:26-29 / 11:37 / 12:24 / 13:8, 10-20
பரி. யோவான் 14:12

 

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 9 டிசம்பர், 2023

அன்புள்ள பரிபூரண விசுவாச மணவாட்டியே,

நம்முடைய விசுவாசம் கேட்பதன் மூலம், வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது.

தீர்க்கதரிசி என்பது:

வார்த்தை மாம்சமானது! அல்லேலூயா! ஒரு பரிபூரண எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக உங்களை ஒரு பரிபூரண விசுவாசத்திற்கு கொண்டுவரும்படிக்கு, வார்த்தையானது மானிட மாம்சத்தில் சரீரப்பிரகாரமான அடையாளங்களினாலும், பொருள் ரீதியான அடையாளங்களினாலும், வேத பிரகாரமான அடையாளங்களினாலும் பரிபூரணமாக செயல்படுகிறது.

பரிபூரண விசுவாசத்தை நமக்கு கொடுக்கும்படிக்கு மானிட மாம்சத்தினூடாக அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி, ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் பேசுகிறதை மாத்திரமே கேட்பதனால் நாம் செய்யும்படி வார்த்தை என்ன கூறுகிறதோ அதையே நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள்…ஆவியானவர் கூறுகிறதைத் தவிர வேறு எதற்கும் உங்களுடைய செவிகள் செவிடாக உள்ளன. புரிகிறதா? "காதுள்ளவன் (கேட்கிறவன்), ஆவியானவர் சபைகளுக்கு கூறுகிறதை புரிந்துகொள்கிறான்”, கேட்கக்கூடிய நிலையமாக இருக்கிற ஒருவன், ஆவியானவர் சபைகளுக்கு சொல்கிறதை புரிந்துகொள்கிறான். புரிகிறதா?

நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து புரிந்துகொள்ளுகிற அவருடைய கேட்டக்கூடிய நிலையமாக இருக்கிறோம். அவர் நமக்கு கட்டளைகளை கொடுக்கிறபோது: “ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அதையேக் கூறுங்கள். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன், நீங்கள் என்னை உங்களுடைய மேய்ப்பன் என்று அழைக்கிறீர்கள், நீங்கள் நன்றாக கூறுகிறீர்கள், ஏனென்றால் நான் அவ்வண்ணமாகவே இருக்கிறேன்.” நாம் அவைகளை நிறைவேற்றுகிறோம். அவர் என்னவெல்லாம் கூறுகிறாரோ, அதில் எங்குமே ஒரு சந்தேகத்தின் நிழலும் கிடையாது. நாம் அதிலே தொடர்ந்து நடக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அதிலிருந்து நம்மை மாற்றக்கூடிய ஒருவரும் உலகில் இல்லை, நாம் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்கிறோம்.

இப்பொழுது நீங்கள் பரிபூரண விசுவாசத்திற்குள் வந்து கொண்டிருக்கிறீர்கள், பரிபூரண பரிபூரணம் தவறிப்போக முடியாது. அந்த விசுவாசம் ஒருபோதும் தவறிப்போகிறதில்லை.

நாம் இப்போது அவருடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டுள்ளோம். நாம் நம்மையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நாம் யோபுவைப் போல, எதற்கும் பயப்படவில்லை. நாம் பேதுருவைப் போல மிகப் பெரிய அலைகளைக் கண்டு பயமடைந்து தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கவில்லை. அந்த நாட்கள் முடிவுற்றுவிட்டன.

இப்பொழுது நமக்குள் ஜீவிக்கிற வாசம் செய்கிற அந்த பரிபூரண வார்த்தையையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் மணவாட்டியின் மூலக்கூறுகளுக்குள்ளாக வந்துகொண்டிருக்கிறோம். நாம் எடுத்துக் கொள்ளப்படும் நிலைக்குள்ளாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஜெபிக்கையில், நாம் கேட்டுக் கொள்கிறதை பெற்றுக்கொள்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறபோது, நாம் அதை பெற்றுக்கொள்வோம்; அது நமக்கு கொடுக்கப்படும். காலமோ, இடமோ, எதுவுமே அதை எப்போதுமே மாற்றாது. அது முடிந்துவிட்டது என்று நமக்குத் தெரியும். அது ஏற்கனவே முடிந்துவிட்டது. நமக்கு எப்படி தெரியும்? ஏனென்றால், அது நம்முடைய வார்த்தையல்ல, ஆனால் அவருடைய வார்த்தையே, அதாவது அவரே நமக்கு உரைத்து, கொடுத்திருக்கிறார். அதைப் பேசுவதற்கான அதிகாரமும், பரிபூரண விசுவாசமும் நமக்கு உண்டு.

இயேசு தமக்காக செய்ததைப் போலவே, நாம் யார் என்னும், நம்முடைய ஸ்தானத்தை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். அப்போது நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் விசுவாசம் வைப்பதேயாகும். நாம் என்னவாக இருக்கிறோம் என்று வார்த்தை கூறுகிறதில் விசுவாசம் வையுங்கள்! அப்பொழுது தேவனுடைய வார்த்தை நமக்குள் வந்து தம்மை வெளிப்படுத்துகிறது; ஏனென்றால் நாம் விசுவாசிகள். ஒரு விசுவாசி என்பது "நமக்குள் அசைவாடுகிற தேவனுடைய விசுவாசமே."

இப்பொழுது, நாம் அதே ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக, அவர் தமுடைய ஜனங்களில், பரிசுத்த ஆவியின் ரூபத்தில், அவர் மரித்து விடவில்லை என்பதை காண்பிக்கும்படிக்கு, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பிரகாசிக்க; அவளிடத்தில் காதல் கொண்ட படியால் தம்மை அவளுக்குள்ளாக ஊற்றி, தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அசைவாடுகிறபடியால், கடைசி நாளின் மேசியாக்களாகிறோம். அவர்கள் கல்யாண விருந்துக்காக ஒன்றாகிக் கொண்டு இருக்கிறார்கள்; அதே அடையாளங்கள் அதே தேவனால் வாக்களிக்கப்பட்டு அதே வார்த்தையில், தம்முடையதே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அதை விசுவாசிப்பதை தவிர நமக்கு வேறெதுவும் விடப்பட்டிருக்கவில்லை; விசுவாசிப்பதன் மூலம் இது ஒரு பரிபூரண விசுவாசத்தை உருவாக்கும் உறுதியாயுள்ளது. அதை மீண்டும் கேளுங்கள், அதை விசுவாசிப்பதன் மூலம் பரிபூரண விசுவாசத்தை உண்டாக்குகிற உறுதியாய் அது இருக்கிறது.

உங்களுடைய சரீரத்தில் ஒரு வார்த்தையை சந்தேகிக்கும் தசைநார் உள்ளதா: இல்லை
நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்களா: ஆம்
அவர் இந்த செய்தியை குறித்த ஒரு வெளிப்பாட்டை உங்களுக்கு அளித்திருக்கிறாரா: ஆம்
மணவாட்டி மாத்திரமே அந்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றிருப்பாளா: ஆம்
நீங்கள் அவருடைய மணவாட்டி என்று உங்களுக்குத் தெரியுமா: ஆம்
ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதன் மூலம் அது உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தை அளிக்கும் என்று அவர் கூறினாரா: ஆம்
அப்படியானால் நீங்கள் பரிபூரண விசுவாச வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறீர்களே!!

ஓ கர்த்தாவே உமது வார்த்தையைக் கேட்க ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடும் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்களை ஆயத்தப்படுத்தும். எப்போதும் போல மீண்டும் எங்களையே நாங்கள் நோக்கிப் பாராமல், நீர் எங்களுக்காக உரைத்த உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும். மூன்றாம் இழுப்பு செயல்முறையில் உள்ளதை நாங்கள் கண்டுகொண்டு, அது எங்களுக்குள் வாசம் செய்கிறதையும் நாங்கள் அறிந்துகொள்ளுகிறோம். நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பேசி விசுவாசிக்க வேண்டும்.

நீர் உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டிக்காக சீக்கிரமாக வருகிறீர் என்பதை நாங்கள் அறிவோம். பிதாவே, எங்களுடைய தேவை என்னவாயிருந்தாலும், எங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும், நாங்கள் அதை பெற்றுக்கொள்வோம் என்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால் நீர் எங்களுக்காக ஏற்கனவே உரைத்திருக்கிற உம்முடைய வார்த்தையாக இது இருக்கிறது. அதை விசுவாசிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. பிதாவே நாங்கள் விசுவாசிக்கிறோம், நாங்கள் விசுவாசிக்கிறோம். இப்பொழுது நாங்கள் உம்முடைய வார்த்தையின் பேரில் செயல்படுவோமாக.

நாங்கள் எங்களுடைய எல்லா தோல்விகளையும், பாவங்களையும் மீறுதல்களையும் அறிக்கை செய்கிறோம். உம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற உம்முடைய குமாரனின் இரத்தத்தினூடாகவே நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் உம்முடைய மணவாட்டிக்குள் ஒரு மாற்றம் உண்டாகட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியை எங்கள் மீது ஊற்றி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.

வியாதியஸ்தர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் குணமடைவார்கள். பின்வாங்கிப்போனவர்கள் வார்த்தைக்கு திரும்பி வருவார்கள். உலகெங்கிலுமுள்ள உம்முடைய மணவாட்டி இன்றைக்காக உம்முடைய அருளப்பட்ட வழியைக் கண்டு விசுவாசிப்பாள்.

உங்கள் மீது கரங்களை வைக்கும்படிக்கு எந்த ஒருவரையும் நீங்கள் உடையவராயில்லையென்றால்… நீங்களே உங்கள் மீது கரத்தை வைத்துக்கொள்ளுங்கள்…நீங்கள் ஒரு விசுவாசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையாகிவிட்டீர்கள்; நீங்கள் வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் வார்த்தையாக மாறுகிறீர்கள்.

கர்த்தராகிய இயேசுவே வாரும், உம்முடைய வார்த்தையின் பிரசன்னத்தில் இருப்பதன் மூலம் உம்முடைய மணவாட்டி முதிர்ச்சியடைந்து, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். நாங்கள் உம்முடைய வார்த்தையால் அலங்கரிக்கப்பட்டு, உடுத்தப்பட விரும்புகிறோம்.

ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி,பரிபூரண விசுவாசம் 63-0825E: என்ற செய்தியில் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீர் பேசி எங்களுக்கு வெளிப்படுத்துவதை உம்முடைய மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்று கூடி கேட்கப்போகிறபடியால், முன் எப்போதும் இல்லாத வகையில் எங்களை அபிஷேகிக்க வாரும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மாற்கு 11:22-26 / 16:15-18
பரி. யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21

 

 


சனி, 2 டிசம்பர், 2023

அன்புள்ள குளத்து லீலிபுஷ்பமே,

இப்பொழுது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞாயிற்றுக்கிழமை நம்முடைய கர்த்தர் பேசி நம்மிடத்தில் சொல்லும்போது நம்முடைய இருதயங்கள் சந்தோஷத்தால் எப்படியாய் துள்ளின. நாம் வார்த்தையுடன் இணைந்துகொண்டு, அவருடன் ஒன்றாகிக்கொண்டிருக்கிறோம். வெகு சீக்கிரத்தில் நமக்கு முன் சென்றுள்ள பரிசுத்தவான்களோடு நாம் ஒன்றாக இருக்கும்படி நாம் இணைக்கப்படுவோம். பின்னர் ஆட்டுக்குட்டியின் கலியாண விருந்துக்காக நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் ஒன்றாக இணைக்கப்படுவோம்.

ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, என்ன நடக்கிறது என்று உலகமும் கூட அறியாது என்பதை அவர் நம்மைச் சிந்திக்கச் சொன்னபோது, நம் ஆத்துமாக்கள் என்னே சந்தோஷத்தால் நிறைந்திருந்தன; ஆனால் திடீரென்று, நம்முடைய கண்களுக்கு முன் முன்னதாகவே சென்றுள்ள நம் அன்புக்குரியவர்களைக் நாம் காண்போம், நாம் அவர்களுடன் மீண்டும் இணைக்கப்படுவோம்.

நம்முடைய தகப்பன்மார்கள், நம்முடைய தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், கணவர்கள், மனைவிகள், குழந்தைகள், நம் தீர்க்கதரிசியையும் கூட, ஒரு நொடியில், நம் முன் நிற்பதை நாம் காண்போம் என்பதை நினைக்கும்போது என்ன ஒரு எதிர்பார்ப்பு நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. நாம் அவர்களை, மாம்சத்தில் காண்போமே!!

இதுதான் அது என்பதையும்; அந்த நேரம் வந்துவிட்டது என்பதையும், நாம் அதை அடைந்துவிட்டோம் என்பதையும், அது முற்றுப்பெற்றுவிட்டது என்பதையும், நாம் அப்பொழுதே அறிந்துகொள்வோம். வெளிப்பாட்டினால் உண்டாகும் ஊக்கமளித்தலை குறித்து பேசுகிறோமே!!

அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பேசுகையில், நீங்கள் மகிமை, அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று, ஆரவாரமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.

நமக்காக விடப்பட்டிருக்கிற இந்த காதல் கடிதங்களின் பேரில் நாம் விருந்துண்டு, என்னே ஒரு நேரத்தை உடையவர்களாய் இருந்துகொண்டிருக்கிறோம். காதல் கடிதங்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுத்து மேலும் மேலும், மீண்டும் மீண்டும் படிக்கலாம். அதுமட்டுமல்ல, ஆனால் அதைப் பார்க்கிலும் கூட மகத்தானது, நம்முடைய கர்த்தர் தாமே மானிட உதடுகளினூடாக பேசி, “என் இனிய இருதயமே, நான் உனக்காக இந்தக் காதல் கடிதங்களை சேமித்து வைத்தேன். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும், நீ என்னுடையவள் என்பதையும் நான் உனக்கு சொல்வதை நீ கேட்க வேண்டிய நேரம் வரும் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது.

"சத்துரு உன்னைத் தாக்குகிறபோது, உன்னுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாக கடந்து செல்லும்போது, நீ என்னுடையவள் என்று ஒவ்வொரு நாளும் நான் உனக்குச் சொல்ல விரும்பினேன். நான் ஏற்கனவே கிரையத்தை செலுத்திவிட்டேன். என்னவாயிருந்தாலும் நான் ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டேன்...என்று நான் கூறினதை என் இனிய இருதயமே நீ கேட்டாயா? உனக்கு என்னவெல்லாம் தேவையோ, நான் ஏற்கனவே உனக்காக ஜெயங்கொண்டுள்ளேன், ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன்".

“உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் உன்னை அறிந்திருந்தேன். அப்பொழுதே நீ என்னில் ஒரு பாகமாக இருந்தாய். உனக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் எனக்கு நினைவிருக்கிறது. நான் உனக்குச் சொன்னதை மறந்துவிடாதே, நீ என் மாம்சத்தின் மாம்சமும், என் ஆவியின் ஆவியும், என் எலும்பின் எலும்புமாயிருக்கிறாய்”.

“நான் உன்னிடத்தில் சொல்லிக் கொண்டு வந்துள்ளதை குறித்ததான நேரம் இப்பொழுது வந்துவிட்டது. இனி துக்கங்களே இருக்காது, சோதனைகளும் பரிசோதனைகளும் இருக்காது; அவைகளின் நாட்கள் முடிவுற்றுவிட்டன. இப்போது நித்தியம் முழுவதும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்”.

“தைரியமாக இரு. தொடர்ந்து முன்னேறிக்கொண்டிரு. அந்த நாளின் விடியல் சமீபித்துவிட்டது. அனுதினமும் நீ கடந்து சென்று கொண்டிருக்கிற இறுக்கம் யாவும் உன்னை என்னுடன் நெருக்கமாக கொண்டு வருவதற்காகவே உள்ளது”.

"உன் மீது எந்த காரியமாவது வரும்போது, நீ மிகவும் நொருங்குண்டு, களைப்புற்று, சோர்ந்து போவதை நீ உணருகிறாய், மேலும் உன்னால் தொடர்ந்து செல்ல முடியாதுபோல் தோன்றினால், நான் அங்கே உன்னோடு இருக்கிறேன் என்பதை, நீ ஒருபோதும் மறந்து விட வேண்டாம். என் வார்த்தை உனக்குள் ஜீவிக்கிறது. நீ என்னுடைய வார்த்தையாக இருக்கிறாய்.”

“வார்த்தையைப் பேசு என்று, நான் உனக்குச் சொன்னேன். நீ வாஞ்சிக்கிறக் காரியங்கள் என்னவாயிருந்தாலும், நீ ஜெபிக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்வாய் என்று விசுவாசி, அப்பொழுது அது உனக்கு உண்டாயிருக்கும். அது உனக்கு கொடுக்கப்படும். உனக்காக நான் அதை ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டேன்”.

இந்த வார்த்தைகள் நமக்கு என்ன பொருட்படுத்துகின்றன. அவை அனுதினமும் நம்மைத் தாங்குகின்றன. அது நம்முடைய ஆவிகளை உயர்த்தி, உன்னதங்களில் அவரோடு நம்மை உட்கார வைக்கிறது. நாம் தேவனுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவுமே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு ஒரு குறிக்கோள் உள்ளது, அது இயேசு கிறிஸ்துவே. அதைத் தவிர, வேறு எதுவும் கணக்கிடப்படுகிறதில்லை.

நாம் தரிசனத்தை புரிந்துகொண்டோம். திரை நீக்கப்பட்டு நாம் அவரை காண்கிறோம், அவருடைய வார்த்தை மாம்சமாக்கப்பட்டு, மானிட உதடுகளினூடாக நம்மிடத்தில் பேசுகிறார். இந்த வார்த்தையையும், இந்த செய்தியையும், அந்த சத்தத்தையும் நாம் நேசிக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து சேர்ந்துகொண்டு, உங்களுடைய ஜீவியத்தின் மகத்தான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். சாத்தான் உங்களுடைய வழியில் தொடுக்கிற ஒவ்வொரு யுத்தத்தையும் எப்படி ஜெயங்கொள்வது என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி என்பதை அறிந்துகொள்வதனால் உங்களுடைய இருதயம் சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

வெளிப்படுத்தின விசேஷம் 3:21-22

 

 


சனி, 25 நவம்பர், 2023

அன்புள்ள அவருடைய மாம்சத்தின் மாம்சமும், அவருடைய வார்த்தையின் வார்த்தையும், அவருடைய ஜீவனின் ஜீவனும், அவருடைய ஆவியின் ஆவியுமானவர்களே,

என்னுடைய விலையேறப்பெற்ற சகோதர சகோதரிகளே, அந்த ஒரு அறிக்கையை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். தேவன் தாமே உங்களை என்னவென்று அழைத்தார் என்பதை வாசியுங்கள். அப்படியிருக்க அது என்ன பொருள்படுகிறது என்பதை நமக்கு வெறும் மனித வார்த்தைகளால் எப்படி எவரேனும் எழுத முடியும். அது வெளிப்படுத்த இயலாததாயுள்ளது. நாம் நம்முடைய முழு இருதயங்களோடும், சிந்தனைகளோடும் மற்றும் ஆத்துமாக்களோடும் முழுமையாகப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தினால், அப்பொழுது ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் உண்மையாகவே நிகழ வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? இதைக் குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது? சாத்தான் நம்மை எதிர்த்துப் போராடுகிறான், நம்மைத் துன்புறுத்துகிறான், சுகவீனங்களை நம்மீது போடுகிறான், ஒவ்வொரு விதமான தீய எண்ணங்களால் நம்முடைய மனங்களைத் தாக்குகிறான், ஆனால் நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எதுவும் இல்லையே. இயேசுவுக்கு ஏதாவது தீங்கு செய்ய முடியுமா? இல்லையே, அப்படியானால் எதுவும் நமக்கும் தீங்கு செய்ய முடியாது. அவர்: நாம் அவருடைய மாம்சமும், அவருடைய வார்த்தையும், அவருடைய ஜீவனும், அவருடைய ஆவியுமாயிருக்கிறோம் என்று கூறினார்.

அவர் நமக்குச் சொல்லிக் கொண்டு வருகிறதை நாம் தியானிக்கும்போது நம்முடைய இருதயத்தில் எவ்வளவு மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது. முழு நிறைவான ஒலிநாடாவில், தொடர்ந்து அடுத்தடுத்த முழு நிறைவான ஒலிநாடாவில், அதன்பின்னர் ஒவ்வொரு முழு நிறைவான ஒலிநாடாவிலும், வெளிப்படுத்தல்களை தேவன் நமக்கு வெளிப்படுத்தி வருகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய ஆர்ட்டீசியன் ஊற்றைப் போல நமக்குள் பொங்கிக் கொண்டிருக்கிறார்.

அதைப் புரிந்துகொள்ளவும் கேட்கவும் நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் விழமாட்டோம், விழுந்துபோகவும் முடியாது அல்லது தவறாகவும் வழிநடத்தப்படமாட்டோம். நம்முடைய தலைமைத்துவத்தை, நம்முடைய மீட்பரை, நம்முடைய கணவரை, நம்முடைய ராஜாவை, நம்முடைய கர்த்தரை, நம்முடைய நேசரை, நம்முடைய இரட்சகரை, அருளப்பட்டுள்ள சந்திக்கும் ஸ்தலத்தில் சந்திக்கும்படியாக நாம் நம்முடைய வழியில் இருக்கிறோம்.

இதை மீண்டும் கேளுங்கள்: இப்பொழுது தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக நமக்குள்ளே, அவருடைய சபையில் வாசம் செய்து, முதன்மையான ஸ்தானம் வகிக்கிறது. தேவனாயிருந்த எல்லாவற்றையும், அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார்; கிறிஸ்துவாயிருந்த எல்லாவற்றையும், சபைக்குள்; நமக்குள், அவருடைய மணவாட்டிக்குள் ஊற்றிவிட்டார். இது எப்போதாவது என்றோ ஒரு நாளில் நடக்கப்போகிறது என்பதல்ல, அது இப்பொழுதே நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

ஆதிகாலம் முதற்கொண்டு, தேவன் தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான மர்மமான ரகசியத்தை இந்நாள் வரை, ஒருவருக்கும் அளிக்கவேயில்லை என்பதை, உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா. அவர் ஏன் அப்படி செய்தார்? அவர் வாக்களித்தபடி இந்த கடைசி நாட்களில் அதை நமக்கு தெரியப்படுத்த அவர் காத்துக்கொண்டிருந்த காரணத்தினாலேயே. அவர் நமக்காக காத்துக்கொண்டிருந்தார். நாம் மாத்திரமே அதை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியும் என்றும், புரிந்து கொள்வோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்…மகிமை!!!

நாம் விழமாட்டோம் என்பதை அவர் அறிந்திருந்ததால், அவருடைய மணவாட்டியாக இருக்கும்படிக்கு அவர் நம்மைத் தெரிந்துகொண்டார். முழு உலகமும் அதைக் குறித்து என்னக் கூறினாலும் நாம் அந்த வார்த்தையை பற்றிக்கொண்டிருப்போம். நாம் அந்த வார்த்தையை, அந்த வார்த்தையை மாத்திரமே பற்றிக்கொள்வோம்! நாம் அங்கே நிலைத்திருக்க முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவினால் புத்திரசுவிகாரராக்கப்பட்ட பிள்ளைகளாக இருக்கிறோம்.

இன்னமும் கூட இருக்கிறது. உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள்...உங்களை விழிப்புள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். தலைமைத்துவமும் (தேவன்) சரீரமும் (நாமும்) ஒன்றாக இணைந்துவிட்டன. இது தேவன் நமக்குள் வெளிப்படுத்தினதாயுள்ளது.

● தேவனும் அவருடைய சபையும் ஒன்று, "கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார்."
● நாம் தேவனுடைய மகத்தான வெளிப்பாடாக இருக்கிறோம்.
● நாம் அவருடைய நாமத்தைக் கூட தரித்துக்கொண்டிருக்கிறோம்; அவருடைய நாமம் இயேசு, அபிஷேகம்பண்ணப்பட்டவர்.
● நாம் கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்ப்பட்ட சரீரமாய் இருக்கிறோம்.
● அந்த சரீரம் செய்தது போலவே நாமும் தேவனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய மணவாட்டியாய், அவருடைய ஆவியால் கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறோம். சபையானது, அவருடைய நாமத்தைக் கொண்டு அவருடைய ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்பட்டு, பிள்ளைகளைப் பிறப்பிக்கிறது; அவருடைய ஜீவனைப் பிறப்பிக்கிறது. நாம் சாத்தானுக்குரிய பதிலைப் பெற்றிருக்கிறோம். தலைமைத்துவம் இங்கே உள்ளது. கிறிஸ்து, உயிர்த்தெழுந்த கர்த்தர், அவர் எப்போதும் இருந்த தம்முடைய உயிர்த்தெழுதலின் அதே வல்லமையில் இங்கே இருந்துகொண்டு, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தை மணவாட்டியான, நமக்குள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தேவன் இப்பொழுது தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உலகெங்கிலும் உள்ள அவர்களை தம்முடைய வார்த்தையின் மூலம் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார், அந்த ஒரே காரியமே நம்முடைய மணவாட்டியை ஒன்றாக இணைக்கும். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தி ஒன்றுகூட்டிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காலத்திலும், தீர்க்கதரிசி அவர்களுடைய நாளுக்கான பரிசுத்த ஆவியாக இருந்தார்.

இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாம் ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஜனங்கள் கூறும்போது, நினைவில் கொள்ளுங்கள், உலகத் தோற்றதிற்கு முன்பே கூட தேவன் தம்முடைய சிந்தையில் வைத்திருந்த தம்முடைய எல்லா ரகசியங்களையும் தம்முடைய ஏழாம் தூதனிடம் தேவன் தாமே ஒப்படைத்தார். தேவன் தாமே இந்த மனிதன் மீது 100% நம்பிக்கைக் கொண்டிருந்தார், அவர் தம்முடைய மகத்தான முடிவு-கால திட்டத்தை அவருடைய கரங்களில் வைத்தார். அவர் அவருக்குக் கொடுக்கிறார்…கவனியுங்கள், அவர் அந்த மனிதனுக்கு தம்முடைய எல்லா ரகசியங்களின் வெளிப்பாட்டையும் இவருக்கே அளிக்கிறார். எழுதப்பட்டிராத காரியங்களின் வெளிப்பாட்டையும் கூட அந்த மனிதனுக்குக் கொடுக்கிறார். பூமியில் அவர் என்ன சொன்னாலும் அது மிகவும் முக்கியமானது, அது பரலோகத்தில் எதிரொலிக்கும் என்று அவர் கூறினார்.

தேவன் இந்த உலகத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்களை அனுப்பினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாலும், தவறாக இருக்கலாம். கர்த்தர் உரைக்கிறதாவது என்று அவர்கள் கூறுகிறதையும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி உங்களுக்கு சொன்னதையும் தேவன் ஒருபோதும் ரூபகாரப்படுத்தவேயில்லை. அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளர் என்ற, ஒரு மனிதன் மாத்திரமே தேவனிடத்திலிருந்து அந்த அதிகாரத்தை பெற்றிருந்தவராய் இருந்தார்.

நீங்கள் ஒரு போதகரை உடையவராக இருக்கலாம், இருக்க வேண்டும். ஆனால் இதைத்தான் தீர்க்கதரிசி கூறினார் என்பதை மாத்திரமே அந்த போதகர் உங்களுக்கு சொல்லாமல், ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று அவர் உங்களுக்குச் சொல்லவில்லையென்றால், ஒலிநாடாக்களை உங்களோடு சேர்ந்து அவர் கேட்டு அதை உங்களுக்கு முன்பாக முதன்மைபடுத்தவில்லையென்றால், நீங்கள் தவறான போதகரைப் பெற்றுள்ளீர்கள்.

உங்களை வழிநடத்துபவர் யாராக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்களும் கூட உரிமை கோரினாலும், “நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறேன்” என்று கூற முடிந்த ஒரே சத்தமாய் அது இருக்கிறபடியால், அந்த சத்தமே, இந்த செய்திக்கு உங்களை இணைப்பது சிறந்ததாகும்.

நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன் குறிக்கப்படவில்லையென்றால், நீங்கள் அதை ஒருபோதும் புரிந்துகொள்ளவே மாட்டீர்கள்; ஏனென்றால் அதைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் முன்குறிக்கப்பட்டிருக்கவில்லை.

நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம், உலகம் இணைவதை நாம் காண்கிறோம், சபைகள் இணைவதை நாம் காண்கிறோம். மணவாட்டி இணைவதை, வார்த்தையோடு இணைவதை நாம் காண்கிறோம். ஏன்? வார்த்தை தேவனாயுள்ளது. வார்த்தையானது…மணவாளன் (வார்த்தையாயிருக்கிறார்), மணவாட்டி (வார்த்தையைக் கேட்பவளாயிருக்கிறாள்), அவர்கள் ஒரு இணைப்பில் ஒன்று சேருகின்றனர். அவர்கள் ஒரு விவாகத்தைப் போல இணைகின்றனர். பாருங்கள், அவர்கள் ஒரு விவாகத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள்—அவர்கள் ஒருவராகின்றனர். வார்த்தை நீங்களாகிவிடுகிறது, நீங்கள் வார்த்தையாகிவிடுகிறீர்கள். இயேசு, “அந்த நாளிலே நீங்கள் அதை அறிவீர்கள். பிதா என்னவாகவெல்லாமாக இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாமாக இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள்; நீங்கள் என்னவாவெல்லாமாக இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார்.

இணையும் நேரமும் அடையாளமும் 63-0818 என்ற செய்தியை, நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தத்தின் பேரில் எங்களோடு இணைந்துகொள்ள வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3