அன்புள்ள குளத்து லீலிபுஷ்பமே,
இப்பொழுது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞாயிற்றுக்கிழமை நம்முடைய கர்த்தர் பேசி நம்மிடத்தில் சொல்லும்போது நம்முடைய இருதயங்கள் சந்தோஷத்தால் எப்படியாய் துள்ளின. நாம் வார்த்தையுடன் இணைந்துகொண்டு, அவருடன் ஒன்றாகிக்கொண்டிருக்கிறோம். வெகு சீக்கிரத்தில் நமக்கு முன் சென்றுள்ள பரிசுத்தவான்களோடு நாம் ஒன்றாக இருக்கும்படி நாம் இணைக்கப்படுவோம். பின்னர் ஆட்டுக்குட்டியின் கலியாண விருந்துக்காக நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் ஒன்றாக இணைக்கப்படுவோம்.
ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, என்ன நடக்கிறது என்று உலகமும் கூட அறியாது என்பதை அவர் நம்மைச் சிந்திக்கச் சொன்னபோது, நம் ஆத்துமாக்கள் என்னே சந்தோஷத்தால் நிறைந்திருந்தன; ஆனால் திடீரென்று, நம்முடைய கண்களுக்கு முன் முன்னதாகவே சென்றுள்ள நம் அன்புக்குரியவர்களைக் நாம் காண்போம், நாம் அவர்களுடன் மீண்டும் இணைக்கப்படுவோம்.
நம்முடைய தகப்பன்மார்கள், நம்முடைய தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், கணவர்கள், மனைவிகள், குழந்தைகள், நம் தீர்க்கதரிசியையும் கூட, ஒரு நொடியில், நம் முன் நிற்பதை நாம் காண்போம் என்பதை நினைக்கும்போது என்ன ஒரு எதிர்பார்ப்பு நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. நாம் அவர்களை, மாம்சத்தில் காண்போமே!!
இதுதான் அது என்பதையும்; அந்த நேரம் வந்துவிட்டது என்பதையும், நாம் அதை அடைந்துவிட்டோம் என்பதையும், அது முற்றுப்பெற்றுவிட்டது என்பதையும், நாம் அப்பொழுதே அறிந்துகொள்வோம். வெளிப்பாட்டினால் உண்டாகும் ஊக்கமளித்தலை குறித்து பேசுகிறோமே!!
அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பேசுகையில், நீங்கள் மகிமை, அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று, ஆரவாரமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.
நமக்காக விடப்பட்டிருக்கிற இந்த காதல் கடிதங்களின் பேரில் நாம் விருந்துண்டு, என்னே ஒரு நேரத்தை உடையவர்களாய் இருந்துகொண்டிருக்கிறோம். காதல் கடிதங்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுத்து மேலும் மேலும், மீண்டும் மீண்டும் படிக்கலாம். அதுமட்டுமல்ல, ஆனால் அதைப் பார்க்கிலும் கூட மகத்தானது, நம்முடைய கர்த்தர் தாமே மானிட உதடுகளினூடாக பேசி, “என் இனிய இருதயமே, நான் உனக்காக இந்தக் காதல் கடிதங்களை சேமித்து வைத்தேன். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும், நீ என்னுடையவள் என்பதையும் நான் உனக்கு சொல்வதை நீ கேட்க வேண்டிய நேரம் வரும் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது.
"சத்துரு உன்னைத் தாக்குகிறபோது, உன்னுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாக கடந்து செல்லும்போது, நீ என்னுடையவள் என்று ஒவ்வொரு நாளும் நான் உனக்குச் சொல்ல விரும்பினேன். நான் ஏற்கனவே கிரையத்தை செலுத்திவிட்டேன். என்னவாயிருந்தாலும் நான் ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டேன்...என்று நான் கூறினதை என் இனிய இருதயமே நீ கேட்டாயா? உனக்கு என்னவெல்லாம் தேவையோ, நான் ஏற்கனவே உனக்காக ஜெயங்கொண்டுள்ளேன், ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன்".
“உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் உன்னை அறிந்திருந்தேன். அப்பொழுதே நீ என்னில் ஒரு பாகமாக இருந்தாய். உனக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் எனக்கு நினைவிருக்கிறது. நான் உனக்குச் சொன்னதை மறந்துவிடாதே, நீ என் மாம்சத்தின் மாம்சமும், என் ஆவியின் ஆவியும், என் எலும்பின் எலும்புமாயிருக்கிறாய்”.
“நான் உன்னிடத்தில் சொல்லிக் கொண்டு வந்துள்ளதை குறித்ததான நேரம் இப்பொழுது வந்துவிட்டது. இனி துக்கங்களே இருக்காது, சோதனைகளும் பரிசோதனைகளும் இருக்காது; அவைகளின் நாட்கள் முடிவுற்றுவிட்டன. இப்போது நித்தியம் முழுவதும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்”.
“தைரியமாக இரு. தொடர்ந்து முன்னேறிக்கொண்டிரு. அந்த நாளின் விடியல் சமீபித்துவிட்டது. அனுதினமும் நீ கடந்து சென்று கொண்டிருக்கிற இறுக்கம் யாவும் உன்னை என்னுடன் நெருக்கமாக கொண்டு வருவதற்காகவே உள்ளது”.
"உன் மீது எந்த காரியமாவது வரும்போது, நீ மிகவும் நொருங்குண்டு, களைப்புற்று, சோர்ந்து போவதை நீ உணருகிறாய், மேலும் உன்னால் தொடர்ந்து செல்ல முடியாதுபோல் தோன்றினால், நான் அங்கே உன்னோடு இருக்கிறேன் என்பதை, நீ ஒருபோதும் மறந்து விட வேண்டாம். என் வார்த்தை உனக்குள் ஜீவிக்கிறது. நீ என்னுடைய வார்த்தையாக இருக்கிறாய்.”
“வார்த்தையைப் பேசு என்று, நான் உனக்குச் சொன்னேன். நீ வாஞ்சிக்கிறக் காரியங்கள் என்னவாயிருந்தாலும், நீ ஜெபிக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்வாய் என்று விசுவாசி, அப்பொழுது அது உனக்கு உண்டாயிருக்கும். அது உனக்கு கொடுக்கப்படும். உனக்காக நான் அதை ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டேன்”.
இந்த வார்த்தைகள் நமக்கு என்ன பொருட்படுத்துகின்றன. அவை அனுதினமும் நம்மைத் தாங்குகின்றன. அது நம்முடைய ஆவிகளை உயர்த்தி, உன்னதங்களில் அவரோடு நம்மை உட்கார வைக்கிறது. நாம் தேவனுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவுமே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு ஒரு குறிக்கோள் உள்ளது, அது இயேசு கிறிஸ்துவே. அதைத் தவிர, வேறு எதுவும் கணக்கிடப்படுகிறதில்லை.
நாம் தரிசனத்தை புரிந்துகொண்டோம். திரை நீக்கப்பட்டு நாம் அவரை காண்கிறோம், அவருடைய வார்த்தை மாம்சமாக்கப்பட்டு, மானிட உதடுகளினூடாக நம்மிடத்தில் பேசுகிறார். இந்த வார்த்தையையும், இந்த செய்தியையும், அந்த சத்தத்தையும் நாம் நேசிக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து சேர்ந்துகொண்டு, உங்களுடைய ஜீவியத்தின் மகத்தான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். சாத்தான் உங்களுடைய வழியில் தொடுக்கிற ஒவ்வொரு யுத்தத்தையும் எப்படி ஜெயங்கொள்வது என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி என்பதை அறிந்துகொள்வதனால் உங்களுடைய இருதயம் சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
வெளிப்படுத்தின விசேஷம் 3:21-22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள அவருடைய மாம்சத்தின் மாம்சமும், அவருடைய வார்த்தையின் வார்த்தையும், அவருடைய ஜீவனின் ஜீவனும், அவருடைய ஆவியின் ஆவியுமானவர்களே,
என்னுடைய விலையேறப்பெற்ற சகோதர சகோதரிகளே, அந்த ஒரு அறிக்கையை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். தேவன் தாமே உங்களை என்னவென்று அழைத்தார் என்பதை வாசியுங்கள். அப்படியிருக்க அது என்ன பொருள்படுகிறது என்பதை நமக்கு வெறும் மனித வார்த்தைகளால் எப்படி எவரேனும் எழுத முடியும். அது வெளிப்படுத்த இயலாததாயுள்ளது. நாம் நம்முடைய முழு இருதயங்களோடும், சிந்தனைகளோடும் மற்றும் ஆத்துமாக்களோடும் முழுமையாகப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தினால், அப்பொழுது ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் உண்மையாகவே நிகழ வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? இதைக் குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது? சாத்தான் நம்மை எதிர்த்துப் போராடுகிறான், நம்மைத் துன்புறுத்துகிறான், சுகவீனங்களை நம்மீது போடுகிறான், ஒவ்வொரு விதமான தீய எண்ணங்களால் நம்முடைய மனங்களைத் தாக்குகிறான், ஆனால் நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எதுவும் இல்லையே. இயேசுவுக்கு ஏதாவது தீங்கு செய்ய முடியுமா? இல்லையே, அப்படியானால் எதுவும் நமக்கும் தீங்கு செய்ய முடியாது. அவர்: நாம் அவருடைய மாம்சமும், அவருடைய வார்த்தையும், அவருடைய ஜீவனும், அவருடைய ஆவியுமாயிருக்கிறோம் என்று கூறினார்.
அவர் நமக்குச் சொல்லிக் கொண்டு வருகிறதை நாம் தியானிக்கும்போது நம்முடைய இருதயத்தில் எவ்வளவு மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது. முழு நிறைவான ஒலிநாடாவில், தொடர்ந்து அடுத்தடுத்த முழு நிறைவான ஒலிநாடாவில், அதன்பின்னர் ஒவ்வொரு முழு நிறைவான ஒலிநாடாவிலும், வெளிப்படுத்தல்களை தேவன் நமக்கு வெளிப்படுத்தி வருகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய ஆர்ட்டீசியன் ஊற்றைப் போல நமக்குள் பொங்கிக் கொண்டிருக்கிறார்.
அதைப் புரிந்துகொள்ளவும் கேட்கவும் நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் விழமாட்டோம், விழுந்துபோகவும் முடியாது அல்லது தவறாகவும் வழிநடத்தப்படமாட்டோம். நம்முடைய தலைமைத்துவத்தை, நம்முடைய மீட்பரை, நம்முடைய கணவரை, நம்முடைய ராஜாவை, நம்முடைய கர்த்தரை, நம்முடைய நேசரை, நம்முடைய இரட்சகரை, அருளப்பட்டுள்ள சந்திக்கும் ஸ்தலத்தில் சந்திக்கும்படியாக நாம் நம்முடைய வழியில் இருக்கிறோம்.
இதை மீண்டும் கேளுங்கள்: இப்பொழுது தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக நமக்குள்ளே, அவருடைய சபையில் வாசம் செய்து, முதன்மையான ஸ்தானம் வகிக்கிறது. தேவனாயிருந்த எல்லாவற்றையும், அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார்; கிறிஸ்துவாயிருந்த எல்லாவற்றையும், சபைக்குள்; நமக்குள், அவருடைய மணவாட்டிக்குள் ஊற்றிவிட்டார். இது எப்போதாவது என்றோ ஒரு நாளில் நடக்கப்போகிறது என்பதல்ல, அது இப்பொழுதே நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
ஆதிகாலம் முதற்கொண்டு, தேவன் தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான மர்மமான ரகசியத்தை இந்நாள் வரை, ஒருவருக்கும் அளிக்கவேயில்லை என்பதை, உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா. அவர் ஏன் அப்படி செய்தார்? அவர் வாக்களித்தபடி இந்த கடைசி நாட்களில் அதை நமக்கு தெரியப்படுத்த அவர் காத்துக்கொண்டிருந்த காரணத்தினாலேயே. அவர் நமக்காக காத்துக்கொண்டிருந்தார். நாம் மாத்திரமே அதை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியும் என்றும், புரிந்து கொள்வோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்…மகிமை!!!
நாம் விழமாட்டோம் என்பதை அவர் அறிந்திருந்ததால், அவருடைய மணவாட்டியாக இருக்கும்படிக்கு அவர் நம்மைத் தெரிந்துகொண்டார். முழு உலகமும் அதைக் குறித்து என்னக் கூறினாலும் நாம் அந்த வார்த்தையை பற்றிக்கொண்டிருப்போம். நாம் அந்த வார்த்தையை, அந்த வார்த்தையை மாத்திரமே பற்றிக்கொள்வோம்! நாம் அங்கே நிலைத்திருக்க முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவினால் புத்திரசுவிகாரராக்கப்பட்ட பிள்ளைகளாக இருக்கிறோம்.
இன்னமும் கூட இருக்கிறது. உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள்...உங்களை விழிப்புள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். தலைமைத்துவமும் (தேவன்) சரீரமும் (நாமும்) ஒன்றாக இணைந்துவிட்டன. இது தேவன் நமக்குள் வெளிப்படுத்தினதாயுள்ளது.
● தேவனும் அவருடைய சபையும் ஒன்று, "கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார்."
● நாம் தேவனுடைய மகத்தான வெளிப்பாடாக இருக்கிறோம்.
● நாம் அவருடைய நாமத்தைக் கூட தரித்துக்கொண்டிருக்கிறோம்; அவருடைய நாமம் இயேசு, அபிஷேகம்பண்ணப்பட்டவர்.
● நாம் கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்ப்பட்ட சரீரமாய் இருக்கிறோம்.
● அந்த சரீரம் செய்தது போலவே நாமும் தேவனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம் அவருடைய மணவாட்டியாய், அவருடைய ஆவியால் கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறோம். சபையானது, அவருடைய நாமத்தைக் கொண்டு அவருடைய ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்பட்டு, பிள்ளைகளைப் பிறப்பிக்கிறது; அவருடைய ஜீவனைப் பிறப்பிக்கிறது. நாம் சாத்தானுக்குரிய பதிலைப் பெற்றிருக்கிறோம். தலைமைத்துவம் இங்கே உள்ளது. கிறிஸ்து, உயிர்த்தெழுந்த கர்த்தர், அவர் எப்போதும் இருந்த தம்முடைய உயிர்த்தெழுதலின் அதே வல்லமையில் இங்கே இருந்துகொண்டு, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தை மணவாட்டியான, நமக்குள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தேவன் இப்பொழுது தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உலகெங்கிலும் உள்ள அவர்களை தம்முடைய வார்த்தையின் மூலம் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார், அந்த ஒரே காரியமே நம்முடைய மணவாட்டியை ஒன்றாக இணைக்கும். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தி ஒன்றுகூட்டிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காலத்திலும், தீர்க்கதரிசி அவர்களுடைய நாளுக்கான பரிசுத்த ஆவியாக இருந்தார்.
இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாம் ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஜனங்கள் கூறும்போது, நினைவில் கொள்ளுங்கள், உலகத் தோற்றதிற்கு முன்பே கூட தேவன் தம்முடைய சிந்தையில் வைத்திருந்த தம்முடைய எல்லா ரகசியங்களையும் தம்முடைய ஏழாம் தூதனிடம் தேவன் தாமே ஒப்படைத்தார். தேவன் தாமே இந்த மனிதன் மீது 100% நம்பிக்கைக் கொண்டிருந்தார், அவர் தம்முடைய மகத்தான முடிவு-கால திட்டத்தை அவருடைய கரங்களில் வைத்தார். அவர் அவருக்குக் கொடுக்கிறார்…கவனியுங்கள், அவர் அந்த மனிதனுக்கு தம்முடைய எல்லா ரகசியங்களின் வெளிப்பாட்டையும் இவருக்கே அளிக்கிறார். எழுதப்பட்டிராத காரியங்களின் வெளிப்பாட்டையும் கூட அந்த மனிதனுக்குக் கொடுக்கிறார். பூமியில் அவர் என்ன சொன்னாலும் அது மிகவும் முக்கியமானது, அது பரலோகத்தில் எதிரொலிக்கும் என்று அவர் கூறினார்.
தேவன் இந்த உலகத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்களை அனுப்பினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாலும், தவறாக இருக்கலாம். கர்த்தர் உரைக்கிறதாவது என்று அவர்கள் கூறுகிறதையும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி உங்களுக்கு சொன்னதையும் தேவன் ஒருபோதும் ரூபகாரப்படுத்தவேயில்லை. அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளர் என்ற, ஒரு மனிதன் மாத்திரமே தேவனிடத்திலிருந்து அந்த அதிகாரத்தை பெற்றிருந்தவராய் இருந்தார்.
நீங்கள் ஒரு போதகரை உடையவராக இருக்கலாம், இருக்க வேண்டும். ஆனால் இதைத்தான் தீர்க்கதரிசி கூறினார் என்பதை மாத்திரமே அந்த போதகர் உங்களுக்கு சொல்லாமல், ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று அவர் உங்களுக்குச் சொல்லவில்லையென்றால், ஒலிநாடாக்களை உங்களோடு சேர்ந்து அவர் கேட்டு அதை உங்களுக்கு முன்பாக முதன்மைபடுத்தவில்லையென்றால், நீங்கள் தவறான போதகரைப் பெற்றுள்ளீர்கள்.
உங்களை வழிநடத்துபவர் யாராக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்களும் கூட உரிமை கோரினாலும், “நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறேன்” என்று கூற முடிந்த ஒரே சத்தமாய் அது இருக்கிறபடியால், அந்த சத்தமே, இந்த செய்திக்கு உங்களை இணைப்பது சிறந்ததாகும்.
நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன் குறிக்கப்படவில்லையென்றால், நீங்கள் அதை ஒருபோதும் புரிந்துகொள்ளவே மாட்டீர்கள்; ஏனென்றால் அதைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் முன்குறிக்கப்பட்டிருக்கவில்லை.
நாடுகள் இணைவதை நாம் காண்கிறோம், உலகம் இணைவதை நாம் காண்கிறோம், சபைகள் இணைவதை நாம் காண்கிறோம். மணவாட்டி இணைவதை, வார்த்தையோடு இணைவதை நாம் காண்கிறோம். ஏன்? வார்த்தை தேவனாயுள்ளது. வார்த்தையானது…மணவாளன் (வார்த்தையாயிருக்கிறார்), மணவாட்டி (வார்த்தையைக் கேட்பவளாயிருக்கிறாள்), அவர்கள் ஒரு இணைப்பில் ஒன்று சேருகின்றனர். அவர்கள் ஒரு விவாகத்தைப் போல இணைகின்றனர். பாருங்கள், அவர்கள் ஒரு விவாகத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள்—அவர்கள் ஒருவராகின்றனர். வார்த்தை நீங்களாகிவிடுகிறது, நீங்கள் வார்த்தையாகிவிடுகிறீர்கள். இயேசு, “அந்த நாளிலே நீங்கள் அதை அறிவீர்கள். பிதா என்னவாகவெல்லாமாக இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாமாக இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள்; நீங்கள் என்னவாவெல்லாமாக இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார்.
இணையும் நேரமும் அடையாளமும் 63-0818 என்ற செய்தியை, நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தத்தின் பேரில் எங்களோடு இணைந்துகொள்ள வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தீர்க்கதரிசியினுடைய இருதயத்தின் இனியவர்களே,
அவர்கள்—சத்திய வசனத்தினால், உம்முடைய ஆவியினால் உமக்கென்று பிறப்பிக்கப்பட்டவர்கள். கர்த்தாவே, நீர் இவர்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பு என்னும் கட்டுகளினால் இவர்களை ஒன்றாக பிணைக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.
ஆயத்தமாகுங்கள், நாம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆசீர்வாதங்களையும், அபிஷேகங்களையும் மற்றும் வெளிப்பாட்டையும் பெறப்போகிறோம். நாம் அதை நம்முடைய ஆத்துமாக்களில் உணர முடிகிறது, ஏதோ காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நேரம் ஆயத்தமாக உள்ளது. நாம் மிகவும் உற்சாகமடைந்து, பெரிய எதிர்பார்ப்புகளுடனும் இருக்கிறோம். நம்மை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்று, நிரப்ப, நிரப்ப, பின்னர் அவருடைய பரிசுத்த ஆவியால் நம்மை மீண்டும் நிரப்ப தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஒரு செய்தியை கேட்க உலகெங்கிலும் உள்ள மணவாட்டி ஒன்றுகூடிக்கொண்டிருக்கிறாள்.
வேதவாக்கியம் நிறைவேற்றப்படப் போகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியாயத்தீர்ப்பு சமீபித்துவிட்டது. கர்த்தர் தம்முடைய மணவாட்டியை நம்முடைய கலியாண விருந்திற்கு அழைக்க வருகிறார். கடைசி அழைப்பு வந்ததுள்ளது. தேவனுடைய வருகை வந்துவிட்டது. அவர் நமக்காக வருகிறார்.
நாம் அதை காண்கிற, அதை ஏற்றுக் கொண்டுள்ள அவருடைய முன்குறிக்கப்பட்ட வித்தாய் இருக்கிறோம். நம்முடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, போய்விட்டன. இது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மையில் போடப்பட்டது, அது ஒருபோதும் நினைவுகூரப்படுவதில்லை. தேவன் அவை அனைத்தையும் மறந்துவிட்டார். தேவனின் முன்னிலையில், நாம் தேவனுடைய ஒரு குமாரனாக குமாரத்தியாக நிற்கிறோம். நாம் இப்போதே அவ்வாறு இருக்கிறோம்... நாம் அவ்வாறு இருப்போம் என்று அல்ல; நாம் இப்பொழுதே தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.
நாம் ஒரு காரியத்தை அடையாளங் கண்டுகொள்கிறோம், வார்த்தை. ஒலிநாடாக்கள். இந்த செய்தி, அவைகள் ஒன்றாயிருக்கின்றன.
ஒருமுறை, சில நாட்களுக்கு முன்பு, இங்கே இச்சிறிய கூடாரத்தில், ஆகாரத்தைச் சேகரித்து வைக்க வேண்டும் என்றும், இவை அனைத்தும் தேவைப்படும் ஒரு நேரம் வருமென்ற தரிசனத்தையும் நீர் காண்பித்தீர்… “அந்த நேரத்திற்காக இந்த ஆகாரத்தை இங்கே சேமித்து வை.”
இப்போழுதே அந்த நேரம். இதுதான் அந்த ஆகாரம். நாம் தான் அந்த ஜனங்கள். நாம் வெளிப்பாடட்டைப் பெற்றுள்ளோம்.
ஒலிநாடா ஊழியத்தின் முக்கியத்துவத்தை மற்றவர்கள் தவறவிடக்கூடும். நாம் தவறவிடுவதில்லை. இது நம்முடைய ஜீவியங்களாயும், இதுவே நமக்கு எல்லாமுமாயிருக்கிறது. இது நமக்கு ஜீவனை விட மேலானது. நமக்கு எதைக் குறித்தாவது ஒரு கேள்வி எழும்பும்போது, நாம் யாரிடமாவது சென்று அதை நமக்கு விளக்கிக் கூறும்படி அல்லது நமக்காக அதை கண்டறியும்படி கேட்கிறதில்லை. நாம் புரிந்துகொள்ளத் தவறினால் அல்லது ஒரு கேள்வியை உடையவராய் இருந்தால் தேவனுடைய தூதன் நமக்குச் செய்யும்படி கட்டளையிட்டபடியே நாம் சரியாக செய்கிறோம்.
இதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? உங்களால் விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், இந்த ஒலிநாடாவை மறுபடியும் கேளுங்கள். இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடனே இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் சத்தியம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இதுதான் சத்தியம். இது வேதவசனமாயுள்ளது.
உங்களால் விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், ஒலிநாடாவை மறுபடியும் கேளுங்கள்.
எங்களுடன் கோபித்துக் கொள்ளாதீர்கள், அதைத்தான் அவர் சொன்னார்...மேலும், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் சத்தியம். அதில் ஒரு பகுதியையோ, அதில் சிலவற்றையோ, அல்லது எது அபிஷேகம்பண்ணப்பட்ட வார்த்தை மற்றும் எது அபிஷேகம்பண்ணப்படாத வார்த்தை என்று யாராவது வியாக்கியானிக்கிறதையோ அவர் கூறவில்லை. ஒலிநாடாக்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பவைகளாகும்.
நீங்கள் அதைப் பெறாமலிருக்கலாம், அல்லது புரிந்துகொள்ளாமல் இருக்கலாம், அல்லது இது இன்னும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படாமலிருக்கலாம். ஆனால் நமக்கு, இதைத்தான் அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நீங்கள் விவாகம் செய்யப்போகிற இளம் பெண்ணிடம், உங்களுக்குத் தெரியும், நீங்கள் காரியங்களை எப்படி உங்கள் மனைவியிடத்தில் சொல்லுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள், நீங்கள் ரகசியங்களை அவளிடத்தில் அப்படியே சொல்லுகிறீர்கள், அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, மற்ற ஒவ்வொரு காரியத்தையும் கூறி, உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள். அது எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதைத்தான் தேவன், கிறிஸ்து, சபைக்குச் செய்துகொண்டிருக்கிறார். புரிகிறதா? அவள் இரகசியங்களை, இரகசியங்களை மாத்திரம் அறியும்படி அவர் அனுமதித்துக் கொண்டிருக்கிறார். எல்லாரிடமும் சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல; அவருடைய மனைவியிடம் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன்.
நாம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறோம். ஒரு மணவாட்டி கலியாணத்திற்கு முன்பு எவ்வளவு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறாள். நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் நிமிடங்களை...நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நம்மிடம் அவர் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சாத்தான் நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கிறான், ஆனால் நாம் யார் என்று இப்போது நமக்குத் தெரியும் என்பதற்கு அவன் ஆயத்தமாக்கப்பட்டிருக்கவில்லை. இனி எந்த சந்தேகமும் இல்லை, நாம் உரைக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிறோம். நாம் வார்த்தையை உரைத்து, கிரியை செய்ய முடியும், கிரியையும் செய்கிறோம். சாத்தானுக்குரிய பதில் நம்மிடம் உள்ளது. தேவன் தம்மை ரூபகாரப்படுத்தியிருக்கிறார். தேவன் தம்மை நிரூபித்திருக்கிறார். நாம் அவருடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருந்து, அவர் நமக்குக் கொடுத்திருக்கிற சகல அதிகாரத்தோடும் பேசுகிறோம்.
இன்றைக்கு அவர் இங்கே, தம்முடைய வார்த்தையில், அவர் தாமே அங்கே செய்த அதே காரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவள் மற்ற தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடியாது. இல்லை, ஐயா. எந்தப் பேராயரும் இல்லை, வேறெந்த காரியமும் இல்லை. அவள் ஒரு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறாள், அதுதான் கிறிஸ்து, கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். ஓ, என்னே! வ்யூ! எனக்கு அது பிரியம். ஹூம்! ஆம், ஐயா.
நாம் ஒரு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் ராஜ்யம் என்பது நம்முடைய சொந்த ஜீவியத்தில் ஆவியையும் ஜீவனையும் உண்டுபண்ணின தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. ஆகையால், நாம் அவருடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறோம்.
நீங்கள் அதைப் பெறுவதற்கும் விசுவாசிப்பதற்கும் உண்மையான வெளிப்பாட்டை பெற்றிருந்தால், என் நண்பர்களே இதுதானே அவை யாவற்றையும் உண்மையாக கூறுகிறது.
இப்பொழுது கவனியுங்கள், பண்டைய இஸ்ரவேலின் மாதிரியான, ஒரே விதமாக, ஒரே தலைமையின் கீழ் ஒன்றுசேர்ந்து இணைக்கப்படுதல். இப்பொழுது நீங்கள் அதை புரிந்துகொள்ளுகிறீர்களா? பண்டைய இஸ்ரவேலரைப் போன்று; ஒரே தேவன், ஒரு அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டு, தம்மை வார்த்தையாக ஒரு தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தினார். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம், அதே முறை; அவரால் தம்முடைய வழியை மாற்றிக்கொள்ள முடியாது. அது…அது அவ்வளவு பிழையின்றி அமைந்துள்ளது.
தீர்க்கதரிசி...அது உள்ளே பதியட்டும். ஒரே தேவன் அந்த நாளுக்கான வார்த்தையாயிருக்கும்படியாக, ஒரு தீர்க்கதரிசி மூலமாக, ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக ரூபக்காரப்படுத்தப்பட்டார், அவரால் மாற்றிக்கொள்ள முடியாது.
என்னால் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க முடியும், மேலும் மேற்கோளுக்குப் பிறகு மேற்கோள் காட்டுவதில் நாம் களிகூர்ந்து ஐக்கியங்கொள்ளும்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவ ரகசியமாய் இருக்கிறார் 63-0728: என்ற செய்தியை நாம் கேட்கப்போகின்றபடியால் உலகம் முழுவதிலுமிருந்து, நாம் கேட்போம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 16:15-17
பரி. லூக்கா 24வது அதிகாரம்
பரி. யோவான் 5:24 / 14:12
1 கொரிந்தியர் 2-ம் அதிகாரம்
எபேசியர் அதிகாரம் 1
கொலோசெயர் அதிகாரம் 1
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சிறிய கம்பிச்சுருளே, முக்கிய கம்பிச்சுருளே, விவசாயியே & இல்லத்தரசியே,
தேவன் உங்களை எதைச் செய்ய வைத்தாலும், அதற்கு நீங்கள் ஒரு உக்கிராண ஊழியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் தேவனிடம் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு அற்பமானவர் என்று சத்துருவானவன் உங்களிடம் சொன்னாலும், நீங்கள் தேவனுக்கு மிகவும் முக்கியமானவர், அவருடைய மகத்தான கடிகாரம் நீங்கள் இல்லாமல் இயங்க முடியாது.
அவர் உங்களை அழைத்தார், உங்களைத் தெரிந்துகொண்டார், உங்களை முன்குறித்தார், மேலும் அவருடைய மகத்தான கடைசி கால செய்தியின் ஒரு வெளிப்பாட்டை உங்களுக்கு கொடுத்தார். அவர் உங்கள் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளார். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மெய்யான மணவாட்டியாய், அவருடைய இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்.
"மனந்திரும்புங்கள், அல்லது அழிந்து போங்கள்", "வார்த்தைக்குத் திரும்புங்கள்", "ஆயத்தமாயிருங்கள், ஏதோ நடக்கப் போகிறது" என்று தேசங்கள் முழுவதும் உள்ள மக்களை அவர் தொடர்ந்து எச்சரித்துள்ளார். அந்த நேரம் இறுதியாக வந்துவிட்டது. தேவன் வருவதாக நமக்கு வாக்களித்ததுபோலவே, அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருகிறார். அவர் தம்முடைய சக்கரத்திலிருந்து சக்கரத்தை அழைத்திருக்கிறார்.
அநேகர் இன்றைக்கான தேவனுடைய மகத்தான கடைசி கால செய்தியிலிருந்து விழுந்துபோய், "அவர் சம்பவிக்கப் போகிறது என்று கூறினது நடக்கவில்லையே. எல்லா காரியங்களும் இருக்கிறவிதமாகவே இருக்கிறதே" என்று கூறுகின்றனர். தேவனுடைய தீர்க்கதரிசிகளின் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கு முன்பே தலைமுறைகள் கடந்து வந்தன. ஆனால் இருப்பினும் அவர்கள் கூறினதுபோலவே, அது வார்த்தைக்கு வார்த்தை நடந்தது.
அவருடைய வேதம்: “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனின் வருகையிலும் நடக்கும்” என்று நமக்குச் சொல்கிறது. அந்த மாபெரும் ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த உலகை அழிக்க தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்பும் முன், தேவன் ஒரு தீர்க்கதரிசியை உலகிற்கு அனுப்பினார். அந்த தீர்க்கதரிசி என்ன செய்தார்?
ஜனங்களை அந்த நேரத்திற்காக ஆயத்தப்படுத்தினார். நோவா ஜனங்களை ஆயத்தப்படுத்தினான், அது நியாயத்தீர்ப்புக்கு முன்பான ஒரு இரக்கத்தின் அழைப்பாயிருந்தது.
நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பே நோவா ஜனங்களை எச்சரித்து அவர்களை ஆயத்தப்படுத்தினான். அது அந்த நாளுக்காக தேவன் அருளியிருந்த வழியாயிருந்தது.
தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை என்று தேவனுடைய தீர்க்கதரிசி கூறினார். அப்பொழுது அவர் என்ன செய்தாரோ, அதையே அவர் இன்றைக்கும் செய்கிறார். நாம் இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழியோடு தரித்திருந்து இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்போம்.
அதுபோல, தேவனுடைய தீர்க்கதரிசியின் மீதே நாம் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறோம் என்று ஜனங்கள் கூறுகிறார்கள்; இது பரிசுத்த ஆவியேயன்றி, வில்லியம் பிரான்ஹாம் அல்ல. நாம், ஆமென், என்று கூறுகிறோம், நாம் அந்த மனிதனுக்கு செவி கொடுக்கிறதில்லை, அவர் என்ன கூறினார் என்பதற்கே நாம் செவி கொடுக்கிறோம்.
பரிசுத்த ஆவியானவரே இந்த வேளையின் தீர்க்கதரிசியாயிருக்கிறார்; அவர் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி, அதை நிரூபிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மோசேயினுடைய வேளையின் தீர்க்கதரிசியாயிருந்தார். பரிசுத்த ஆவியானவர் மிகாயாவினுடைய வேளையின் தீர்க்கதரிசியாயிருந்தார். வார்த்தையை எழுதிய, பரிசுத்த ஆவியானவர், வந்து வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்.
ஆனால் சகோதரன் பிரான்ஹாம் கடந்த வாரம் தான் உங்களிடம் கூறினார்;
இப்பொழுது, பாருங்கள், நீங்கள் எதற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் உங்களை கேட்டுள்ளேன். புரிகிறதா? அதைக் குறித்த அதிகமானது மானிடப் பட்சத்தில் உள்ளது.
கர்த்தர் அதை என்னிடம் சொன்னார் என்று நான் சொல்லவில்லை. "நான்" விசுவாசிக்கிறேன், பாருங்கள். அதை செய்யக்கூடாது என்று நான் விசுவாசிக்கிறேன்.
எனக்கும் என் வீட்டாருக்குமோவென்றால், தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் விசுவாசிக்கிறதையே, மற்ற எந்த ஊழியக்காரரையும், பேராயரையும் அல்லது மனிதனையுங் குறித்து சிந்திக்கிறதை அல்லது உணருகிறதையுங் கூட நான் எடுத்துக் கொள்வேன்.
தேவன் எப்போதாவது அவருடைய தீர்க்கதரிசி எதை விசுவாசிக்கிறார், உணருகிறார் அல்லது நினைக்கிறார் அல்லது ஆவியில் ஏவப்பட்டிருக்கவில்லையா என்பதை நிதானிக்க யாரை அனுப்பினார்?...அவர் யாரென்று நான் நினைக்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்லட்டும்.
கோராகை கவனியுங்கள், தேவன் மோசேயை செய்தியுடன் அனுப்பின நாட்களில் கோராகும் தாத்தானும் யோசனை செய்து, மோசேயிடம் வந்து, “இப்பொழுது, ஒரு நிமிடம், நீர் மிஞ்சிப்போகிறீர். நீர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல்தான் என்றும்; நீர் மாத்திரமே, சேற்றில் உள்ள ஒரு வாத்து என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர். பரிசுத்தமுள்ள மற்ற ஜனங்களும் கூட இருக்கிறார்கள் என்று நான் உனக்குத் தெரியப்படுத்துவேன்!” என்றனர்.
எச்சரிக்கை, நியாயத்தீர்ப்பு சமீபித்துவிட்டது. மூல வார்த்தைக்குத் திரும்புங்கள். நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்துக்குத் திரும்புங்கள். தேவனுடைய தீர்க்கதரிசியண்டைக்குத் திரும்புங்கள். இந்த செய்தி, அவருடைய சத்தம். இது உங்களுக்கு முதன்மையானதும், மிக முக்கியமான காரியமுமாயும் இருக்க வேண்டும்.
இந்தச் செய்தியைப் பிரசங்கிக்கவும் போதிக்கவும் மற்றவர்களுக்கு ஒரு சத்தமும், அழைப்பும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் தேவனுடைய மணவாட்டியாக இருக்க விரும்பினால், ஒலிநாடாக்களும், அந்த சத்தமும், உங்களுடைய வீடுகளில் உங்களுடைய கார்களில், உங்களுடைய சபையில், நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமாய் இருக்க வேண்டும்.
கர்த்தருடைய வருகை சமீபித்துவிட்டது என்று உலகத்திற்கு தேவனுடைய தீர்க்கதரிசி எச்சரிக்கையில்,ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் அந்த சத்தத்தைக் கேட்க வாருங்கள். இந்த செய்தியை கேட்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை 63-0724.
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஏசாயா 38:1-5
ஆமோஸ் அதிகாரம் 1
அன்புள்ள சுவிசேஷ பிள்ளைகளே,
பூமியிலே இதுவரை சஞ்சரித்த ஜனங்களிலேயே நாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறோம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்வதை நாம் கற்பனை செய்யது கூட பார்க்க முடியாதே:
நான் உங்களை நேசிக்கிறேன். ஓ, நான் உங்களை என்னுடைய சொந்த பிள்ளைகளைப்போல நேசிக்கிறேன். நான் கிறிஸ்துவுக்கு சுவிசேஷத்தின் மூலமாக, உங்களைப் பெற்றெடுத்தேன்.
இந்த மனிதன் நம்மோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இது அவருக்கு மேலே உள்ள தேவனாய் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளும்படிக்கு ஓரு அக்கினிஸ்தம்ப அடையாளத்தோடு அவர் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியை நமக்கு அனுப்பினதற்காக தேவன் நமக்காக மிகுந்த அக்கறை காண்பிக்கிறாரே. அவர் ஒருவரே வழிநடத்திக் கொண்டிருக்கிறவராய் இருக்கிறார்.
அவர் நம்மீது அக்கறை கொண்டுள்ளதால், பெரிதான நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பு, வந்து கொண்டிருக்கிற எல்லா நியாயத்தீர்ப்புகளிலிருந்தும் நாம் விடுபடுவதற்கு அவர் ஒரு வழியைத் ஆயத்தம் செய்திருக்கிறார். அந்தத் தப்பிக்கும் வழி தெரிந்துகொள்ளப்பட்ட, நமக்கானதாய் மாத்திரமே உள்ளது. நாமே இந்த மூல ஜீவணுவை ஏற்றுக்கொண்டவர்களாயிருக்கிறோம். அதைப் புரிந்துகொள்வதற்கு நாமே முன்குறிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். நாமே இந்த மகத்தான ஒலிநாடா ஊழியத்தின் ஒரு வெளிப்பாட்டை பெற்றவர்களாய் இருக்கிறோம்.
இந்த ஊழியத்திற்காக அவர் மரித்தார். இந்தக் காரியங்களைக் காண்பிக்க பரிசுத்த ஆவியானவர் இந்நாளில் இங்கே இருப்பதற்காக அவர் மரித்தார். அவர் உங்களுக்காக அக்கறைகொண்டார். அவர் அதை இங்கே கொண்டு வர அக்கறைகொண்டார். அவர் இந்த கூற்றை கூறும்படி அக்கறை கொண்டார். அவர் உங்களை நேசித்தபடியால் அவர் அக்கறை கொண்டார். அவர் அதைச் செய்ய, பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதற்கு, இன்றைக்கு இந்த ஊழியத்தைச் செய்ய போதுமான அக்கறைகொண்டார்.
நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இதற்கு செவிகொடுப்பீர்கள், நீங்கள் இதில் களிகூருவீர்கள். இதுவே உங்களுடைய ஆறுதல். இதுவே உங்களுடைய ஜீவிய காலமெல்லாம் நீங்கள் வாஞ்சித்திருந்த காரியமாய் உள்ளது. இதுவே விலையுயர்ந்த முத்து. இந்த செய்திக்காக, இந்த சத்தத்துக்காக ஒவ்வொரு காரியத்தையும் நாம் விட்டுவிடுகிறோம். இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறதாய் உள்ளது.
யாரும் நம்மை குழந்தையைப்போல ஊக்குவிக்க வேண்டியதில்லை, நாம் விசுவாசிகள், அதை நம்மிடமிருந்து பறிக்க எதுவும் இல்லை. மற்றவர்கள் கூறுகிறதை நாம் பொருட்படுத்துவதில்லை, நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்.
அவர் நம்மீது மிகவும் அக்கறை கொண்டிருக்கிறார்; நமக்கு சுகம் தேவைப்பட்டால், நாம் அவருடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசிக்கிறோம். அப்படியானால் எந்த ஆலோசகர், எந்த தேற்றரவாளர், எந்த மருத்துவர், எந்த மருத்துவமனை, எந்த நோயறிதல் என்ன சொல்வது என்பது முக்கியமல்ல, நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறோம். நாம் அதை அறிந்திருக்கிறோம்! இதைப் பற்றி வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை; நாம் அதை அறிவோம்.
அவர் நமக்காக மிகுந்த அக்கறை கொண்டு தம்முடைய மணவாட்டிக்கான ஆகாரத்தை சேமித்து வைத்த தம்முடைய தீர்க்கதரிசியை அவர் உடையவராய் இருந்தார். அவர் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மேய்ப்பருக்கும், ஊழியக்காரருக்கும், மற்றும் ஜன குழுவிற்கும் தங்களுடைய சபையில் அல்லது குழுக்களில் இந்த ஒலிநாடாக்களை இயக்கி தன்னுடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றும்படிக்கு கூட அறிவுறுத்தினார்.
இந்தக் காலையில் ஜெபிக்கப்படப்போகிற ஜனங்களாகிய நீங்கள், இந்தக் காரியத்தை மாத்திரம் செய்வீர்களானால் நலமாயிருக்கும், உலகெங்கிலும், இந்த ஒலிநாடாவைக் கேட்கிற ஜனங்களாகிய நீங்கள், ஒரு சபையில் இதைப் போட்டு காண்பிக்கிற ஊழியக்காரனோ அல்லது அந்த நபரோ, வெளியே காடுகளில் உள்ள குழுக்களிலோ அல்லது இதைப் போட்டு காண்பிக்கிற, நீங்கள் எங்கிருந்தாலும், இந்த ஒலிநாடா போட்டுக் காண்பிக்கப்பட்ட பிறகு, முதலில் தெளிவாக உங்களுடைய அறிக்கையை செய்துவிட்டு, அதன் பின்னர் விசுவாசத்தை தவிர வேறு ஒன்றும் உங்கள் இருதயத்தில் இல்லாமல், ஜெபித்துக்கொள்ளப்படுவதற்காக வரும்பொழுது, அங்குதான் மருந்து பலனளிக்கும்.
தீர்க்கதரிசி சபையில் ஒலிநாடாக்களை ஒருபோதும் போட்டுக் கேட்கும்படி கூறவேயில்லை என்று நம்முடைய விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்று நான் நினைத்தேனா? அவர் அவர்களுடைய சபைகளில் மட்டுமல்லாமல், காடுகளிலும் அல்லது நீங்கள் எங்கிருந்தாலும்...ஒலிநாடாக்களை போட்டுக் கேளுங்கள் என்று கூறினார்.
தேவன் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளரினால் உரைத்ததற்கு நீங்கள் கீழ்ப்படிந்து அதை சரியாக செய்வீர்களானால், அப்பொழுது நீங்களும் கூட எப்போதும் கொண்டிருக்கக் கூடியதைக் காட்டிலும் மகத்தான விசுவாசத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
நான், நான்...முதலில், இதை அணுக, கூட்டத்தார் விசுவாசித்தால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். நீங்கள்-நீங்கள், உங்களுக்கு விசுவாசம் இல்லையென்றால், அப்பொழுது- ஜெபித்துக்கொள்ளப்பட இங்கு வரவேண்டிய அவசியமேயில்லை, ஏனென்றால் அவரை விசுவாசிக்கும்படியான என் விசுவாசமும் அவரை விசுவாசிக்கும்படியான உங்களுடைய விசுவாசமும்; உங்களுடைய விசுவாசமும் என்னுடைய விசுவாசமும் ஒன்றாகத் தேவைப்படுகிறது.
நாம் அவ்வாறு யூகிக்கவோ, கற்பனை செய்யவோ, நம்பவோ இல்லை. ஒலிநாடாக்களே இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட வழியாய் இருக்கின்றன. இது வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று பெயரிடப்பட்ட ஒரு மனிதனின் வார்த்தைகள் அல்ல, இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். இது முற்றிலுமாக, "ஆமென்" என்பதாயுள்ளதே! இது நம்முடைய முடிவானது. இதுவே சத்தியம், சத்தியமேயல்லாமல் வேறொன்றுமில்லை.
நீங்கள் தேவனுடைய முடிவான, அவருடைய வார்த்தையை, ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதான வாக்குறுதியை கண்டறியும்போது, அது தேவனுடைய வார்த்தை என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும், செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த காரியம் தேவனாயுள்ளது. "அப்படி இருக்கலாம், அது இருக்கக் கூடும், இது அதைப் போன்று காணப்படலாம்" என்று இல்லை- இல்லை. "அது தேவனே!" ஆகையால் அந்த ஸ்தானத்தை நீங்கள் அடையும்பொழுது, அப்பொழுது அது விலையுயர்ந்த முத்தாய் இருக்கிறது, அதற்கு மாறாக வேறு யாராவது உங்களிடம் சொன்னால் நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். மனிதன் என்ன சாதித்துள்ளான் என்று நீங்கள் பார்க்கக்கூடாது.
இந்த ஞாயிற்றுக்கிழமை நமக்கு ஒரு மகத்தான அன்பின் விருந்து இருக்கப் போகிறது. தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் நமக்கு என்ன செய்யும்படி சொல்லுகிறாரோ அதை நாம் சரியாக செய்யப்போகிறோம்: இயங்கு பொத்தானை அழுத்தி கேட்டு கீழ்படியுங்கள்.
நமக்கு எது தேவையோ, அதை நாம் பெறுவோம். நாம் அவரை விசுவாசிக்கும்படிக்கு நம்முடைய விசுவாசத்தை அவருடைய விசுவாசத்தோடு சேர்க்கப் போகிறபடியால் நாம் அதைப் பெறப் போகிறோம். பின்னர் நாம் அனைவரும் இவ்வாறு கூறப்போகிறோம்:
இந்த மணி நேரம் முதற்கொண்டு, என்னுடைய தொல்லைகள் முற்றுபெற்றுவிட்டன என்று எனக்கு சொல்லுகிற ஏதோ ஒன்று என் இருதயத்தில் உள்ளது. நான் - நான் நன்றாக இருக்கிறேன், நான் நன்றாக இருக்கப்போகிறேனே"? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்ளை உயர்த்தி, "நான் அதை விசுவாசிக்கிறேன்!" என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
தேவன் அக்கறை கொள்வதினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அவர் விசாரிக்கிறவராய் இருக்கிறார். நீ கவலை கொள்கிறாயா? 63-0721 என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகின்றபடியால், எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படிக்கு; அல்லது உங்களுடைய போதகரை உங்களை வழிநடத்துபவரை தீர்க்கதரிசியினுடைய அறிவுறுத்தல்களை பின்பற்றும்படிக்கு, தேவனுடைய ஏழாம் தூதன் தேவனுடைய வார்த்தையை பேசுவதை கேட்டு, உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும் அதைப் பெற்றுக் கொள்ளும்படி உற்சாகப்படுத்த நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. யோவான் 5:24 / 15:26
1 பேதுரு 5:1-7
எபிரெயர் 4:1-4