அன்புள்ள ஒளியின் பிள்ளைகளே,
அவருடைய ஒளியில் நடப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த ஒளியின் பாகமாக இருக்க, அவருடைய ஒளியுடன் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டோம். அவரால் அழைக்கப்படும்படி தெரிந்து கொள்ளப்படடோம். நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாக, அவருடன் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டோம். இருவரும் இப்பொழுது ஒன்றாய் இருக்கின்றனர்.
என்னால் அதை எத்தனை முறை எழுத முடிந்தாலும் கூட ஒருபோதும் போதாது. அதை நாம் ஒருபோதும் போதுமானதாக சொல்ல முடியாது. இந்த செய்தி நமக்கு எல்லாவற்றையும் குறிக்கிறது. அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாடு நம்மிடம் உள்ளது என்பதை அறிவது, நாம் வார்த்தைகளில் கூறக்கூடிய எதற்கும் அப்பாற்பட்டது.
இந்த நாளில் வாழ்வதும், சம்பவிப்பதில் ஒரு பாகமாக இருப்பதும், தேவன் நமக்குக் கொடுக்கக்கூடிய மகத்தான கனமாக உள்ளது. பிரான்ஹாம் கூடாரத்தில் உள்ள கூட்டங்களில் அமர்ந்து, தேவனுடைய தூதன் இந்தச் செய்திகளைக் கொண்டு வருவதைப் பார்த்தும் கேட்பதும் எவ்வளவு பெரியதோ, இந்த நாளிலும், இந்த நேரத்திலும், அந்த வார்த்தையின் நிறைவேறுதலாய் இருப்பதும் கூட அதற்கு மேல் பெரியதாயுள்ளது.
தேவன், அவருடைய மகத்தான திட்டத்தில், உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுசேர்வதற்கும், ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கும், அவருடைய வார்த்தையால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கும் ஒரு வழியை உருவாக்கியுள்ளார். நம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் கூறுவதை எந்த நொடியிலும் கேட்க காத்திருக்க வேண்டும்;
"இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!"
காலத்தின் தொடக்கத்திலிருந்து இது போன்ற எதுவும் ஒருபோதும் இருந்ததில்லை. தேவனுடைய மகத்தான திட்டத்தின் முடிவு இப்போது நடைபெறுகிறது, நாம் அதனுடைய பாகமாக இருக்கிறோம். கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது.
எல்லா ரகசியங்களும் தேவனுடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக மணவாட்டிக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முத்திரைகள், இடிமுழக்கங்கள், எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம், மூன்றாம் இழப்பு…மணவாட்டி அவைகளை திரும்ப திரும்ப கேட்டும்படியாக ஒவ்வொரு காரியமும் உரைக்கப்பட்டு ஒலிநாடாவில் உள்ளது அது நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது.
பரிசுத்த ஆவியானவர் மீண்டும் சபையில் இருக்கிறார்; கிறிஸ்து, அவர் வாக்களித்தபடி, சாயங்கால நேரத்தில் மானிட மாம்சத்தில், தம்மை வெளிப்படுத்தினார்.
இப்பொழுது மணவாட்டியே கூர்ந்து கவனித்து, இதைப் புரிந்துகொள்.
நாம் வார்த்தையால் அழைக்கப்படுகிறோம்; கிறிஸ்து தாமே நம்மை அழைத்தார். அவர் தம்மை நமக்குத் தெளிவாக்கியுள்ளார்; எபிரெயர் 13:8, லூக்கா 17:30, மல்கியா 4, எபிரேயர் 4:12, இந்த வேதவாக்கியங்கள் அனைத்தும் அவர் வாக்களித்தார்.
இது இந்த நாளுக்காக முன்குறிக்கப்பட்ட இந்த வேத வாக்கியங்கள் மூலம் தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற, இயேசு, தேவ குமாரன் மீண்டும் ஜீவிக்கிறார்.
அதை விசுவாசிப்பதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை அழைக்க தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். தீர்க்கதரிசி வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது, இது உலகம் பெறும் கடைசி அடையாளமாயும்; ஒரு மனித ரூபத்தில் யெகோவா பேசிக் கொண்டிருப்பதாயும் உள்ளது.
மனித சரீரத்திலுள்ள ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசியைப் போன்றவர். ஆயினும் அது அவருக்குப் பின்னால் இருந்த சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறின ஏலோகிம். இயேசு, "லோத்தினுடைய நாட்களில் நடந்து போல, உலகத்தின் முடிவின் போதும் நடக்கும் ,அப்பொழுது மனுஷ குமாரன்,” தேவனுடைய குமாரன் அல்ல, “மனுஷகுமாரன் வெளிப்படுவார்” என்றார்.
நீங்கள் தொடர்ந்து வார்த்தையில் இருந்தாலொழிய, அவர் யார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்பதை மணவாட்டி அறிந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் அந்த சத்தத்தை தங்களுக்கு முன் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அறிவார்கள்.
இப்பொழுது மணவாட்டி வழியிலிருந்து வெளியேறி மேலே செல்ல வேண்டும், அதனால் ஏழாம் எக்காளம் தொனிக்க வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய இரண்டு தீர்க்கதரிசிகள் காட்சியில் தோன்றலாம். கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே.
தேவனுடைய தீர்க்கதரிசி 64-0719M எக்காளங்களின் பண்டிகை என்ற செய்தியைக் கொண்டு வந்து, பிதாவினிடம் பேசி,
இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும். கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது...அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்கள் இருதயங்களில் காணப்படும் உத்தமத்தை இன்று காலை நோக்கிப் பார்த்து, கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் அவர்களுக்கு என்ன தேவையோ அவைகளை அவர்களுக்கு அளிப்பாராக.
என்று கூறுகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி நிறைவேற்றப்படுகிற தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகமாக இருப்பதற்கு வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சிறந்த வேலைப்பாட்டுக் குடும்பமே,
கிறிஸ்துவின் மணவாட்டிக்கு இந்த கடைசி செய்திகள் எவ்வளவு முற்றிலும் பரிபூரணமாக இருந்தன. தேவன், தம்மை நமக்கு முன் திரைநீக்கி, தெளிவான காட்சியில் தம்மை வெளிப்படுத்துகிறார். உலகம் அதைப் பார்க்க முடியாது, ஆனால் நமக்கு, அவருடைய மணவாட்டிக்கே, நாம் பார்க்கக்கூடியதெல்லாம் இதுதான்.
நாம் திரையைக் கடந்து அவரை தெளிவான காட்சியில் பார்க்கிறோம். தேவன், மானிட தோல்களுக்கு பின்னால் இருக்கிறார். அவர் லூக்கா 17 மற்றும் மல்கியா 4-ல் வாக்களித்ததைப் போலவே சரியாக, வார்த்தை மாம்சமாகிவிட்டது. அவர் தம்மை ஒரு மானிடத் திரையில், அவருடைய தீர்க்கதரிசியில், அவருடைய சபையில் மறைத்துக்கொண்டுள்ளார்.
தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பேசி நமக்கு சொல்வதை நாம் கேட்கும்போது உலகத்திலேயே நாம் மகிழ்ச்சியுள்ள ஜனங்களாய் இருக்கிறோம்,
உங்களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களுடன் நான் தொடர்பு கொண்டுள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக இருப்பதைக் குறித்து நான் மகிழ்வுறுகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. அவர் நிச்சயம் இருப்பார். அவர் உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டார். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் உங்களை விட்டு விலகமாட்டார். நீங்கள் இப்பொழுது திரையினூடாகக் கடந்து வந்துவிட்டீர்கள்.
நாம் எல்லோருக்கும், நம்முடைய சொந்த அணிகளுக்குள்ளேயும் கூட வித்தியாசமானவர்களாக ஆகிவிட்டோம், ஆனால் இன்று அவருடைய வார்த்தையின் மூலம் அவர் நமக்குக் கொடுத்திருக்கிற வெளிப்பாட்டிற்காக, நாம் மிகவும் பெருமைப்படுகிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்காகவும் முட்டாள்களாக இருக்க வேண்டும்.
நாம் அவருடைய தீர்க்கதரிசியின் விசுவாசத்துடன் நம்முடைய விசுவாசத்தை வைத்து, ஒன்றுபட்டு, தேவனுடைய மகத்தான ஐக்கியத்தை உருவாக்குகிறோம். நாம் இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது; அந்த தீர்க்கதரிசி இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது; தேவனில்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது. எனவே ஒன்றாக, நாம் ஒரு ஐக்கியத்தை உருவாக்குகிறோம், இணைப்பு; தேவன், அவருடைய தீர்க்கதரிசி, அவருடைய மணவாட்டி. நாம் அவருடைய சிறந்த வேலைப்பாடாகிவிட்டோம்.
அவருடைய முதலாவது சிறந்த வேலைப்பாட்டை உருவாக்க அவருக்கு நான்காயிரம் ஆண்டுகள் ஆனது. இப்போது, அவரது மற்றொரு சிறந்த வேலைப்பாடான, நம்மை, அவருடைய மணவாட்டியை, அவருடைய மகத்தான சிறந்த வேலைபாட்டுக் குடும்பத்தை, இரண்டாவது ஆதாமையும், இரண்டாம் ஏவாளையும் உருவாக்க அவருக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பிடித்தன. நாம் இப்போது தோட்டத்திற்காக, ஆயிரம் வருட அரசாட்சிக்காக ஆயத்தமாக இருக்கிறோம். அவர் நம்மை மீண்டும் வடிவமைத்தார், நாம் இப்போது ஆயத்தமாக இருக்கிறோம்.
நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மனவாட்டியாய், அவருடைய மூல சிருஷ்டிப்பின் பாகமாய் இருக்கிறோம். தண்டு, பட்டுக்குஞ்சம், மற்றும் உமி ஆகியவை இப்போது விதையில் கூடி, உயிர்த்தெழுதலுக்கு ஆயத்தமாகி, அறுவடைக்கு ஆயத்தமாக உள்ளன. அல்பா ஒமேகாவாகிவிட்டது. உள்ளே சென்ற வித்து, ஒரு செயல்முறை மூலம் வந்து மீண்டும் வித்தாக மாறிவிட்டது.
ஏதேன் தோட்டத்தில் விழுந்து, அங்கேயே மரித்துப்போன வித்து, திரும்பி வந்தது. அங்கே மரித்துப்போன அந்த பரிபூரணமற்ற வித்திலிருந்து, இரண்டாவது ஆதாமுக்கு, பரிபூரண வித்திற்கு திரும்பி வருகிறது, இரண்டாம் ஆதாம்.
நாம் இப்போது இரண்டாவது ஆதாமாக, உண்மையான மணவாட்டியாக, வித்தாக, மீண்டும் மூல வார்த்தையுடன் திரும்பியுள்ளோம். நாம் வித்தாக இருப்பதற்கு முழு வார்த்தையாக இருக்க வேண்டும். நாம் ஒரு பாதி வித்தாக இருக்க முடியாது; நாம் வளர முடியாது, நாம் முழு வித்தாக இருக்க வேண்டும்.
இன்னும் ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டுள்ளது, அறுவடை இங்கே உள்ளது. நாம் முற்றிலும் முதிர்ச்சியடைந்துள்ளோம். நாம் வருகைக்காக ஆயத்தமாக இருக்கிறோம். இது அறுப்பின் நேரம். வித்து அதனுடைய மூல நிலைக்குத் திரும்பியது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியுமாக, சிறந்த வேலைப்பாட்டுக் குடும்பம் மீண்டும் வந்துள்ளது.
அவருடைய தீர்க்கதரிசியையும், அவருடைய மணவாட்டியையும் ஊக்குவிக்க, கர்த்தர் தம்முடைய தூதனுக்கு ஒரு மகத்தான தரிசனத்தை அருளினார். அவர் நம்மை, அவருடைய மணவாட்டியைக் குறித்த ஒரு முன்னோட்டத்தை அவருக்குக் கொடுத்தார். நாம் அவரைக் கடந்து செல்லும்போது, நாம் இனிமையான தோற்றமுள்ள எளிய பெண்மணிகளாய் இருந்தோம் என்று அவர் கூறினார். நாம் கடந்து சென்றபோது, நாம் யாவரும் அவரையே நோக்கி பார்த்துக் கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார்.
முடிவிலே, சிலர் வரிசையிலிருந்து வெளியேறி, மீண்டும் வரிசையில் வர தங்களால் இயன்றவரை முயன்றனர். அப்போது அவர் மிக முக்கியமான ஒன்றைக் கவனித்தார், அவர்கள் அவரைப் பார்க்காமல், வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழப்பத்திற்குள் சென்றுவிட்ட அந்த சபையைக் குறித்து அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நாம் அல்ல, முதலில் இருந்தவர்கள் அல்ல, நாம் வரிசைகளில் இருந்து ஒருபோதும் விலகாமலும் அல்லது அவரிடத்தில் இருந்து நம்முடைய பார்வையை திருப்பாமல் இருந்தோம் என்று நான் கூறுவதற்கு எவ்வளவு பெருமையும், நன்றியுள்ளவனுமாய் இருக்கிறேன்.
எனவே, சிறந்த வேலைப்பாடான தேவனுடைய குமாரனும், சிறந்த வேலைப்பாடான மணவாட்டியும், அது அவருடைய ஒரு துண்டாகும், அது வார்த்தையின் நிறைவேறுதலாய் இருக்க வேண்டும். வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது, கர்த்தருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
நாம் அவருடைய சிறந்த வேலைபாடுகளின் குடும்பமும், அவருடைய உண்மையான மணவாட்டி என்றும் அறிந்துகொள்வதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது, கர்த்தருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
சிறந்த வேலைப்பாடு 64-0705 என்ற செய்தியை தீர்க்கதரிசி நமக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சிறந்த வேலைப்பாட்டு குடும்பத்தின் பாகமாகும்படி, எங்களோடு அந்த வார்த்தையைக் கேட்கும்படிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஏசாயா 53:1-12மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19
தொடர்புடைய சேவைகள்
அன்பிற்குரிய நண்பர்களே,
ஜெபர்சன்வில்லில், பிற்பகல் 12:00 மணிக்கும், ஆப்பிரிக்காவில், காலை 7:00 மணிக்கும், அரிசோனாவில், காலை 10:00 மணிக்கும்; உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டி ஒன்று கூடியுள்ளனர். இந்த தருணத்திற்காக நாம் வாரம் முழுவதும் காத்திருந்தோம். தேவன் தம்முடைய வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளரைக் கொண்டு மானிட உதடுகளினூடாக தேவன் நம்மிடத்தில் பேசுவதற்காகவே நாம் காத்துக்கொண்டும், மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருக்கிறோம். நாம், “கர்த்தாவே என்னை ஆயத்தப்படுத்தும், என்னை அபிஷேகியும், உம்முடைய வார்த்தையைக் குறித்த அதிகமான வெளிப்பாட்டை எனக்குத் தாரும்” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.
தீர்க்கதரிசி, தீர்க்கதரிசி மட்டுமே, இந்த மணிநேரத்திற்கான ஜீவ வார்த்தைகளை உடையவராயிருக்கிறார் என்று நாம் உறுதியாக அறிந்திருப்பதற்காக நாம் திருப்தியடைகிறோம். எங்களால் எல்லாவற்றையும் விளக்க முடியாமல் போகலாம், ஆனால் நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
கர்த்தர் மோசேயுடன் செய்ததைப் போலவே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை நமக்கு முன்பாக மகிமைப்படுத்த ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அந்த நேரத்தில், அவர் மலைகளை அசைத்தார். இந்த நேரத்தில், அவர் வானத்தையும் பூமியையும் அசைத்துக்கொண்டிருக்கிறார்.
தருணம் வந்துவிட்டது. நம்முடைய இருதயங்கள் நமக்குள் துடித்துக்கொண்டிருக்கின்றன. நம்முடைய தேசிய கீதம் இசைக்கப்படுவதை நாம் கேட்கத் துவங்குகிறோம். ஒருமனப்பட்டு, உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டி தங்களுடைய காலூன்றி எழுந்து, நம்பிடுவாய், யாவும் கை கூடிடும், நம்பிடுவாய் என்று பாடத் துவங்குகின்றனர். அப்பொழுது தேவன் நம்மிடத்தில் பேச ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
நாமோ; "காலை வணக்கம் நண்பர்களே" என்பதைக் கேட்கிறோம்.
இந்த 3 எளிய வார்த்தைகளைக் கேட்கையில் நம்முடைய இருதயங்கள் களிகூருகின்றன. தீர்க்கதரிசி என்னைத் தன்னுடைய நண்பன் என்றுதான் அழைத்தார். அதன்பின்னர் அவர் நம்மிடம் சொல்லுகிறார்,
நான் உங்கள் எல்லோரையும் காணமுடியாமல் தவிக்கிறேன். நான்—நான் எங்கு சென்றபோதிலும், உங்களைப் போன்றவர்கள் எனக்கு—எனக்கு கிடைக்காது. எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர், ஆனால் உங்களைப் போன்றவர்கள் எனக்கு கிடைப்பது அரிது. இந்த சிறு கூட்ட ஜனங்களிடம் விசேஷமான ஒன்றுண்டு...என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்பொழுதுமே உங்களைக் குறித்து நினைக்கிறேன். ஆனால் நான் எங்கு சென்ற போதிலும்... என்னுடன் இணைந்திருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த குழுவும் இல்லை என்பதை நான் அறிவேன். தேவன் நம்மை இணைபிரியாதவர்களாக்கி, வரப்போகும் ராஜ்யத்திலும் நாம் இணைபிரியாதவர்களாகவேயிருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது.
இன்றைக்கு தேவன் நமக்கு என்ன மகத்தான வெளிப்படுத்துதலை வெளிப்படுத்துவார்? நாம் என்ன கேட்கப் போகிறோம்? ஒருவேளை நாம் இதற்கு முன்பு பலமுறை இதைக் கேட்டிருக்கலாம், ஆனால் இதற்கு முன்பிருந்த வேறு எந்த நாளையும் போன்றில்லாமல், இன்றைக்கு வித்தியாசமாக இருக்கக் கூடும்.
அது என்ன? விசுவாசிகளினுடைய ஆகாரம். பரலோகத்திலிருந்து வரும் சமுகத்தப்பத்தை நாம் விருந்துண்போம்.சமுகத்தப்பம் அவருடைய மணவாட்டியான, நமக்கானதாய் மாத்திரமே உள்ளது. அந்த சமுகத்தப்பத்தின் மீதுள்ள ஷெக்கினா மகிமைதான் நம்மை கெட்டுப்போகாமல் காத்துக்கொண்டிருக்கிறது.
வெளியில் இருப்பவர்கள் நம்மைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒலிநாடாக்களை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? ஜனங்களாகிய நீங்கள் உண்மையிலேயே வினோதமானவர்களாக இருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்கள்.
மகிமை!! நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், மேலும் வினோதமானவர்களாக இருப்பதற்கு கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; அவருக்கும் அவரது ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தைக்கும் முட்டாள்கள். உலகிற்குச் அதைச் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், "ஆம், நான் ஒலிநாடா ஊழியத்தில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். நான் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் இதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஒலிநாடாக்களை மீண்டும் பிரசங்கப் பீடத்தில் இயக்குவதில் நான் விசுவாசங் கொண்டிருக்கிறேன்.”
பாரம்பரியங்களின் திரை நீக்கப்பட்டவுடனே, தேவன் இன்னமும் தமது வார்த்தையின் தேவனாயிருக்கிறார் என்பதை உங்களால் காண முடியும். அவர் இன்னமும் தமது வார்த்தையை காத்துக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அவர்- அவர் தேவனாக, தமது வார்த்தையின் ஆகியோனாக இருக்கிறார்.
வேறு யாரேனும் என்ன செய்தாலும், அல்லது கூறினாலும், நாம் அதை விசுவாசிக்கிறோம், அதன்பின்னர் நாம் அதன் பேரில் செயல்படுகிறோம். நீங்கள் அதை செய்யவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் அந்த திரைக்கு பின்னால் இல்லை. அந்த திரை ஒருவருக்கு சொந்தமானது. அந்தச் செய்தி ஒன்றுதான்.
சபைக்கு தேவன் எதைக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறித்து ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதல், அதை வெளிப்படையாகக் கூறாமலே உங்களுக்கு கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? சில சமயங்களில், ஒன்றைக் கூறுவது, நாம் சில காரியங்களை அப்படிப்பட்ட ஒரு வழியில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். அது ஆட்களை சபையில் குறைத்துவிடுகிறது. சிலர் சபையை விட்டு வெளியேறும்படி செய்துவிடுகிறது. மற்றும் சிலரை அது யோசிக்கச் செய்கிறது. அது வேண்டுமென்று செய்யப்படுகிறது. அது அப்படித்தான் செய்யப்பட வேண்டும்.
வார்த்தையானது தேவனுடைய தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஒரு குழு, பரிசேயர்கள், அல்லது சதுசேயர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது ஒரு குலம் என்று அல்ல. இது தீர்க்கதரிசி! தேவன் ஒரு மனிதனைத் உடையவராய் இருக்கிறார். அவர் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு சிந்தனைகளை பெற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனை எடுத்துக்கொண்டார். அவரிடம் வார்த்தை இருக்கிறது, அவரிடம் மாத்திரமே.
அப்படியானால் சிலர், “தேவன் வேண்டுமென்று அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வார் என்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்கலாம். அவர் நிச்சயமாக அப்படி செய்தார். அவர் இன்னமும் செய்கிறார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கூறியது போல், இன்றைக்கும் நாம் அதையே கேட்கிறோம்: "ஆனால் தேவன் அழைத்திருக்கிற மற்ற மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள்." அது உண்மை. அவர்கள் பின்தொடர்ந்து செல்லும் வரை, ஆமென், ஆனால் தேவன் முன்குறித்து, அந்தப் பணிக்கென நியமித்து, நம்முடைய தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுத்த தேவனுடைய ஸ்தானத்தை எடுக்க ஒருவர் முயலும்போது, நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையான, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.
கவனியுங்கள், இப்பொழுது அதற்குள் பிரவேசிக்காமல் தங்கி விடுவது மரணத்தை விளைவிக்கும். நீங்கள் திரையின் வழியாக அதற்குள் பிரவேசிக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் செல்லமாட்டீர்கள். இப்படிப்பட்டவர்கள் மேல் தேவன் எப்படி இரக்கம் காண்பிக்க முடியும், அது என்னவாயிருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், திரைக்குப் பின்னால் என்ன இருந்ததென்று தேவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகும். வார்த்தை, திரைக்குப் பின்னால் என்ன இருந்தது என்பதை கவனியுங்கள், வார்த்தையே! அது எதை மறைத்திருந்தது? வார்த்தையையே!. அது என்னவாயிருந்தது? அது உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தது. அது திரை மறைத்திருந்த வார்த்தையே. புரிகிறதா? இயேசுவே அந்த வார்த்தையாய் இருந்தார்! அவரே அந்த வார்த்தையாய் இருக்கிறார், அவருடைய மாம்சம் என்னும் திரை அதை மறைத்திருந்தது.
எங்களுக்கு, இது ஒரு வெளிப்படுத்துதல்! இது ஒரு வார்த்தை இல்லை, இது ஒரு உண்மை! ஆமென்!
மற்றவர்களுக்கு நாம் வினோதமானவர்கள் என்பதை நாம் அறிவோம், மற்றும் உலகிற்கு ஒரு பைத்தியம் போல் தோன்றலாம், ஆனால் அது எல்லா மனிதர்களையும் அவரிடம் இழுக்கிறது.
நாம் எப்படி வினோதமானவர்கள் 64-0614E என்பதை தீர்க்கதரிசி உலகத்திற்கு சொல்லுவதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வார்த்தையோடு மறையேற்றப்பட வாருங்கள். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் என்று கூறுவதற்கு நாங்கள் மிகவும் பெருமையுள்ளவர்களாகவும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
I கொரிந்தியர் 1:18-25
II கொரிந்தியர் 12:11
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திரைக்குப் பின்னால் உள்ள மணவாட்டியே,
"இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம்" என்று நான் ஏன் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்? "சகோதரன் பிரான்ஹாமை மீண்டும் உங்களுடைய பிரசங்க பீடங்களில் நிறுத்துங்கள்" என்று போதகர்களிடம் நான் ஏன் தொடர்ந்து கூறுகிறேன்?
இது மிகவும் எளிமையானது. ஒலிநாடாவில் ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தைக் கேட்பதன் மூலமே, ஜீவனுள்ள வார்த்தைக்கு செவிகொடுக்கிறோம்.
ஜனங்களுக்கு முன்பாக, தேவன் மீண்டும் திரையிட்டுக்கொண்டு, அதே அக்கினியினால் தம்மை திரையிட்டுக்கொண்டு, அதே திரையின் மூலம், அதே அக்கினி ஸ்தம்பமாய் இறங்கி வந்து, மோசேயை ரூபகாரப்படுத்தினார். அப்பொழுதிலிருந்து…அவர்கள், எனவே அவர்களால் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே கேட்க முடிந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? வார்த்தையை மாத்திரம், அவருடைய சத்தத்தை அவர்கள் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு, ஜீவிக்கிற வார்த்தையாயிருந்தான்.
நேரடியாக பிரசங்கிக்கிற ஒரு ஊழியக்காரரைக் குறித்து பேசுகிறோமே! ஒலிநாடாவில் நாம் செவிகொடுத்துக் கொண்டிருக்கிற சத்தம் நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையின் சத்தமாய் இருக்கிறது. இதற்கு மேல் மகத்தான வேறெதையும் நாம் பெற்றுக்கொள்ள முடியாது.
மோசேயின் நாளில், பாளையத்தில் இருந்த இஸ்ரவேல் புத்திரர் மட்டுமே அவருடைய சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு, உலகமே அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று தேவன் விரும்பினார், அதனால் அவர் அதை ஒலிநாடாவில் பதிவு செய்தார், அதனால் அவருடைய மணவாட்டியால் ஜீவனுள்ள வார்த்தையின் சத்தத்தைக் கேட்க முடிந்தது.
தேவன் தம்முடைய வார்த்தைகளை அவர்களிடம் பேசுவதற்கு, தம்முடைய தீர்க்கதரிசியில் தம்மைத் திரையிட்டிருந்தார். அதைத்தான் அவர் செய்திருந்தார். அக்கினி ஸ்தம்பத்தால் திரையிடப்பட்ட, மோசே ஜனங்களுக்கு அந்த ஜீவனுள்ள வார்த்தையாக இருந்தான்.
நம்முடைய நாளுக்கான அந்த ஒரு வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க முடியாது. நீங்கள் அதைப் பெற்றிருந்தால், அப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருந்து, "இது உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறபடியால், ஒலிநாடாக்களை கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமானது வேறொன்றும் இல்லை” என்று கூற வேண்டும்.
நாம் அவரை ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்; என்று அநேகர் ஜனங்களை பயமுறுத்தி, நாம் தீர்க்கதரிசியை மிக அதிகமாக முக்கியத்துவப்படுத்துகிறோம் என்று கூற முயற்சிக்கிறார்கள். என் நண்பர்களே, இந்த காரியங்களைச் சொன்ன ஒருவர் அவராயிருக்கிறார், நான் அல்ல. நான் வார்த்தையை மாத்திரமே மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு காலத்திலும் அது செய்யப்பட்டது போல, தெய்வத்துவம் மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. கவனியுங்கள், அவர் திரையிட்டார். தீர்க்கதரிசிகள் தெய்வத்துமாய், திரையிடப்பட்டிருந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையாய் (அது சரியா?) மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தனர். எனவே, அவர்கள் நம்முடைய மோசேயையும் கவனிக்கவில்லை, இயேசுவையும் காணவில்லை.
நாம் ஒரு மனிதனையல்ல, தீர்க்கதரிசி மூலமாய் தம்மை வெளிப்படுத்தித் திரையிட்டுக் கொண்டிருக்கிற தேவனையே ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். அதைப் புரிந்துகொள்வதற்கும், விசுவாசிப்பதற்கும் நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.
சிறு பிள்ளைகளே, நீங்கள் இனிமேல் அந்த திரைக்கு பின்னால் இல்லை, தேவன் உங்களுடைய முழு காட்சிக்கு வந்துவிட்டார்.
நாம் அந்த திரைக்குப் பின்னால் இனிமேல் இல்லை, தேவன் தம்மை முழு காட்சியில் வெளிப்படுத்துவதை நம்மால் காண முடிகிறது. ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்திற்கு செவி கொடுப்பது தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக்கொண்டிருப்பதாகும் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோம்.
அந்த சத்தத்திற்கு ஆமென் என்பதைத் தவிர, வேறு எதையும் நம்மால் கூற முடியாது. அந்த சத்தம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நமக்குப் பிரசங்கித்து, கற்பித்து, வெளிப்படுத்தும். அந்த சத்தம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தும். அந்த சத்தமே நாம் விரும்புகிற எல்லாமுமாயும், நமக்குத் தேவைப்படுகிற எல்லாமுமாயும் உள்ளது.
அந்த சத்தத்திற்கு ஜனங்களை சுட்டிக்காட்ட தேவன் பயன்படுத்திக்கொண்டிருக்கிற 5-விதமான ஊழியத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; தரிசனத்தை புரிந்துகொண்டு, தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்கும் வெளிப்பாட்டைப் பெற்றுள்ள போதகர்கள் தங்களுடைய மக்களுக்காக அவர்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய காரியமாயுள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M என்ற செய்தியில் அது வெளிப்படுவதை நாங்கள் கேட்கையில், வல்லமையான ஜீவனுள்ள வார்த்தையின் சத்தத்திற்கு எங்களோடு செவிகொடுக்க வரும்படிக்கு நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள முளைப்பிக்கப்பட்ட வித்தே,
தேவனுடைய ஏழாம் தூதன், எப்படி தேவனுடைய முழு ஆலோசனையையும் மறைத்துவைக்காமல் உங்களுக்கு அறிவிக்கும்படிக்கு உங்களுக்கு சொல்வதை உட்கார்ந்து கேட்பது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மூன்றாவது இழுப்பைப் பற்றி விரிவாகச் சென்று, இப்போது அது எவ்வாறு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டுமா?
எப்படி அணில்கள் உண்டாகும்படி உரைத்த தேவன்; ஆபிரகாமுக்காக ஒரு ஆட்டுக்கடாவை அவர் உரைத்த அதே விதமாகவே. அது சரியான காரியம் என்று உரைத்திருந்த ஹேட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு தாழ்மையான எளிய சகோதரியினிடத்தில் பேசும்படிக்கு அவரிடத்தில் உரைத்த அதே சத்தம் எப்படியாய், அவள் விரும்பினது எதுவாய் இருந்தாலும் அதை அவளுக்கு கொடுக்கும்படி அணில்கள் உண்டாகும்படி உரைத்த அதே சத்தம் அவளிடத்தில் சொல்லும்படிக்கும், அது அப்பொழுதே சம்பவிக்கிறதா என்று பார்க்கும்படிக்கும் சொன்னது.
எப்படி ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் வனாந்தரத்தில் வேட்டையாடும்போது, ஒரு சக்திவாய்ந்த புயல் அவரை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. ஆனால் எப்படி தேவன் அவரிடம் உதட்டிலிருந்து செவி கேட்கப் பேசி, “நான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தேன். நான் சமுத்திரங்களில் பலத்த காற்றை அடக்கினேன்” என்றது.
அந்த சத்தம் அவரிடத்தில், “புயலினிடத்தில் பேசு, அது நின்றுவிடும். நீ என்ன கூறினாலும், அது சம்பவிக்கும்என்று கூறினபோது அவர் எப்படி குதித்து தன்னுடைய தொப்பியைக் கழற்றினார்.
அவர் அந்த சத்தத்தை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை, ஆனால், “புயலே, நீ நில். மேலும், சூரியனே, நாங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை, நான்கு நாட்களுக்கு நீங்கள் சாதாரணமாக பிரகாசி” என்று உரைத்தார்.
அவர் அதை உரைத்த மாத்திரத்திலே, பனிக்கட்டி மழையும், உறைந்த பனியும் மற்ற ஒவ்வொரு காரியமும் நின்றுவிட்டது. எப்படி ஒரு நொடிப்பொழுதில் உஷ்ணமான சூரியன் அவருடைய முதுகின் மேல் பிரகாசித்தது. காற்றுகள் திசைமாறி வீச, மேகங்கள் ஒரு மர்மமான காரியம் போல, காற்றில் உயர்த்தப்பட்டு, சில நிமிடங்களில் சூரியன் பிரகாசித்தது.
சகோதரி பிரான்ஹாமின் இடது கருப்பையில் ஒரு நீர்க்கட்டி இருப்பதை அது வெளிப்படுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் அவருக்குக் காண்பித்ததையும், அது ஏன் வைக்கப்பட்டது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்வார். அவர்கள் எப்படி ஜெபித்தனர், அதை எடுத்துப்போடும்படி தேவனிடத்தில் எப்படி ஜெபித்தனர். அப்பொழுது, தேவன் அவர்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறதாய் அது இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.
அறுவைசிகிச்சை மூலம் அதை அகற்றுவதற்கு முன், அவள் தனக்கு எவ்வளவு அற்புதமான மனைவியாக இருந்து வருகிறாள் என்று அவர் தேவனிடம் பேசிக்கொண்டும், அவரிடத்தில் சொல்லிக் கொண்டும் இருந்தார். அவர் வீட்டில் ஒருபோதும் இல்லை என்று அவள் எப்படி குறை கூறவேயில்லை. அவர் வேட்டையாடச் செல்லவும், ஓய்வெடுக்கவும், கர்த்தரிடத்தில் பேசவும் விரும்பும்போது அவருக்காக எல்லாவற்றையும் அவள் எப்போதும் ஆயத்தமாக வைத்திருந்தாள்.
அப்போது அவர் அறையில் ஏதோ ஒன்றைக் கேட்டார். அவர் மேல்நோக்கிப் பார்த்தபோது, அந்த சத்தம், “எழுந்து நில்” என்று கூறியது, “இப்போது நீ என்ன கூறினாலும், அது அப்படியே இருக்கும்” என்று அவரிடம் சொன்னது.
அவர் ஒரு நிமிடம் காத்திருந்தார், பின்னர் அவர், "மருத்துவர் கை அவளைத் தொடும் முன், தேவனுடைய கரம் அந்தக் கட்டியை அகற்றிவிடட்டும், அது இருந்தது கூட கண்டுபிடிக்கப்படக் கூடாது" என்றார்.
மருத்துவரின் கரம் அவளைத் தொடுவதற்கு ஒரு நொடிக்கு முன்பே, அவள் குணமடைந்தாள். எப்படி மருத்துவர் அவளிடம், “திருமதி. பிரான்ஹாம், அந்தக் கட்டி அங்கு இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களுக்கு எந்த கட்டியும் இல்லை" என்றார்.
கர்த்தருடைய வார்த்தை எவ்வளவு பூரணமாயுள்ளது!
மூன்றாவது இழுப்பு என்னவென்று அவருக்குத் தெரியும், அது என்ன செய்கிறது என்பதும் அவருக்குத் தெரியும், அதைக் குறித்து அவர் மனதில் இனி எந்த சந்தேகமும் இல்லை என்பதை அவர் உங்களுக்கு சொல்வதைக் கேட்க வேண்டும். அவரது கருத்துப்படி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக, எடுத்துக் கொள்ளப்படுவதற்குரிய விசுவாசத்தை துவங்கும் ஒரு காரியமாக அது இருக்கும்.
தேவன் நமக்காக சில மகத்தான காரியங்களைச் செய்யப்போகும் நேரம் விரைவில் வரும் என்பதால், நாம் பயபக்தியுடன் இருக்கவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். அந்த நேரம் வரும்போது, இறுக்கம் வரும்போது, அப்பொழுது நாம் தற்காலிகமாகப் பார்த்துள்ளதை, அதனுடைய பரிபூரண வல்லமையில் வெளிப்படுவதை நாம் காண்போம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நமக்கு அந்த மகத்தான ஆசீர்வாதம் கிடைக்கும். பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் 63-1229E: என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது எங்களோடு ஒரு பாகமாக இருக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
ஒரு மனிதன் பேசுவதைப் கேட்க நாம் ஒன்று கூடி இருக்கமாட்டோம்; வீதியில் ஏராளமான பருஷர் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கூறுகின்றனர். நாம் ஒரு ஊழியரையோ அல்லது ஒரு போதகரையோ நோக்கிப் பார்த்து கேட்க மாட்டோம், நாம் இயேசுவை நோக்கிப் பார்த்துக் கேட்போம்.
அந்த மனிதன், அந்த தேவனுடைய மனிதன், அந்த மாம்சமான நசரேயனாகிய இயேசு, தேவனாயிருந்து, அவருடைய மணவாட்டியிடம் பேசுவதைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுபடுவோம்.
நீங்களே உங்களை கேட்டுக்கொள்ள வேண்டும், இன்றைக்கு நீங்கள் எதை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நோக்கிப் பார்க்கும்போது என்ன காண்கிறீர்கள்? வார்த்தையின் மூலம் நீங்கள் அவரை நோக்கிப் பார்க்கும்போது உங்களால் அவரை மாத்திரமே காண முடியும்.
அவர் கலிலேயாவில் நடந்தபோது என்னவாயிருந்தாரோ, அதேவிதமாக அவர் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார், அதேவிதமாக பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். நீங்கள் எதைக் காண நோக்குகின்றீர்கள். ஒரு ஸ்தாபகரையா? ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனையா? அதை நீங்கள் இயேசுவில் ஒருபோதும் காணவேமாட்டீர்கள். நீங்கள் ஒரு பெரிய குருவானவரின் நன்மைகளைக் காண நோக்குகின்றீர்களா? நீங்கள் அதை ஒருபோதும் இயேசுவில் காணவேமாட்டீர்கள். காணவேமாட்டீர்கள். நீங்கள் இயேசுவை எப்படி காண்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுவதன் மூலம், ஏனெனில் அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருந்தார். அவர் அன்று என்னவாயிருந்தாரோ, அவ்வாறே இன்றிரவும் உள்ளார், என்றென்றும் அவ்வாறே இருப்பார்.
இப்போது இயேசுவை நோக்கிப் பார்த்து பிழையுங்கள்; இது வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! அது நாம் "நோக்கிப் பார்த்து பிழைப்பது" என்பதாய் மாத்திரமே உள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வசனங்கள்:
எண்கள் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12