ஞாயிறு
12 மே 2024
64-0830M
கேள்விகளும் பதில்களும் #3

அன்பான கற்புள்ள கன்னிகை மணவாட்டியே,

ஒவ்வொரு வாரமும் இயங்கு பொத்தானை அழுத்தி, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தை கேட்கும்படி உங்களை ஊக்குவிக்க நான் எப்படி விரும்புகிறேன். ஏனென்றால் இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய பரிபூரண திட்டம் என்பதை நான் அறிவேன்.

இது ஜோசப் பிரான்ஹாம் கூறுவதோ அல்லது விசுவாசிப்பதோ அல்ல. இது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் நமக்கு கூறியிருக்கிறதாயிருக்கிறது:

நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறேன்.

இந்தச் செய்தியைக் குறித்த வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருந்தால், அந்த ஒரு சிறிய மேற்கோளே நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்ல போதுமானதாயிருக்கும்; நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக அது உள்ளது என்பதை, ஒவ்வொரு விசுவாசியும், உங்களுடைய சபைகளுக்கு சொல்லுங்கள்.

இயங்கு பொத்தானை அழுத்தும்போது நாம் கேட்கும் வார்த்தைகள், நேரடியாக நம்மிடம் பேசும் தேவனுடைய சத்தம் என்று நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு வினாடியும் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும்படியாக பிதாவானவர் அதை ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்தார்; அதனால் அவர் நம்மை ஊக்குவிப்பதையும், ஆசீர்வதிப்பதையும், அபிஷேகிப்பதையும், நம்முடைய எல்லா பயங்களையும் சந்தேகங்களையும் போக்குவதையும், வெறுமனை இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலமே யாவற்றையும் நாம் கேட்கலாம்.

நமக்கு என்னவெல்லாம் தேவையோ அப்போதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும்படியாகவே, அது இருக்கிறது. நாம் தான் வார்த்தை என்பதை நினைவுபடுத்த அவர் அங்கே இருக்கிறார். அவர் நம்முடனும், நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளும் இருக்கிறார். சாத்தான் பொய்யுரைத்து ஏமாற்றும் ஒருவனாய் இருக்கிறான். அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். அந்த வார்த்தையை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிந்து, தேவன் தம்முடைய முன்னறிவினால் அதை நமக்குக் கொடுத்தார். ஆரம்பத்திலிருந்தே நாம் அவருடன் இருந்தோம்.

தேவனுடைய சத்தமாய் இருக்கும்படி அக்னி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே சத்தத்தை காட்டிலும் வேறு எந்த மகத்தான சத்தத்தை நம்மால் கேட்க முடியும்?

வேறு சத்தமே இல்லை.

கடந்த வாரம் அந்த சத்தம் நமக்கு என்ன சொன்னது?

உங்களை நான் எப்பொழுதும் என்னுடைய சகோதரனும் என்னுடைய சகோதரியுமாக உரிமை கோருகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். நான்-நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், ஒரு குருவானவராய் இருப்பது போன்ற பிதாவாக அல்ல. பவுல் அங்கே கூறினது போன்றே, நான்-நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது, நான்-நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன்; அதாவது உங்களை ஒரு கற்புள்ள கன்னியாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்! என்னை ஏமாற்றி விடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.

நாம் வார்த்தைக்கு, அந்த சத்தத்துக்கு ஒரு கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை, நாம் அதைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது: இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்.

நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன். ஒரு தீர்க்கதரிசி என்று கூறுவதை விசுவாசிப்பீர்களானால், நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறதற்கு செவிகொடுங்கள். புரிகிறதா? நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்வதைச் அப்படியே செய்யுங்கள்.

ஆம், தேவனுடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள், அந்த மனிதர்களில் நானும் ஒருவன் என்றே நான் ஜெபிக்கிறேன். அவருடைய வார்த்தையை உங்கள் முன் வைத்து, இந்தச் செய்தியை, தேவனுடைய வார்த்தையை, அந்த சத்தத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காக நான் அவரால் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்.

பேதுரு கூறினது போல, தேவன் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த அழைத்த ஒரே ஒரு சத்தம் மட்டுமே உள்ளது என்பதை எப்போதும் உங்களுக்கு நினைப்பூட்ட அசதியாயிரேன். தேவன் ரூபகாரப்படுத்தின ஒரே சத்தம். “அவருக்குச் செவிகொடுங்கள்” என்று தேவன் கூறின ஒரு சத்தம். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன்" என்று தேவன் கூறின ஒரு சத்தம்.

இதை உங்கள் முழு மனதுடன் நினைவில் கொள்ளுங்கள்: அந்த வார்த்தையுடன் தரித்திருங்கள்! அந்த வார்த்தையை விட்டுவிடாதீர்கள்! அதற்கு முரணான எந்த காரியத்தையும், அது எதுவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அதை விட்டுவிடுங்கள். அதன் பின்னர் அது சரி என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஒருவரும் பிரசங்கிக்க கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றும், எல்லா ஊழியக்காரர்களுக்கும் நான் விரோதமாக இருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றும், நான் ஏன் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதையும் நான் நிச்சயமாக புரிந்து கொள்கிறேன். ”சகோதரன் பிரான்ஹாமைத் தவிர நீங்கள் வேறொரு ஊழியக்காரருக்கு செவி கொடுத்தால், நீங்கள் மணவாட்டி அல்ல.” நான் பலமுறை கூறியது போல், நான் அப்படிச் ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நம்புகிறதுமில்லை.

நான் எப்படி உணர்கிறேன் மற்றும் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கடந்த வாரம் தீர்க்கதரிசி அதை சரியாக விளக்கினார்.

சகோதரன் பிரான்ஹாம் இங்கு இருந்த சமயத்தில் ஜெபர்சன்வில் பகுதியில் குறைந்தது மூன்று செய்தி சபைகள் இருந்தன. கடந்த ஞாயிறு ஆராதனையில், மாலை ஆராதனைக்கு உள்ளூர் போதகர்கள் இல்லை என்று கூறினார். அவர்கள் தங்களுடைய சொந்த மாலை ஆராதனைகளை வைத்திருந்தனர். இதனால், அவர்கள் மாலை ஆராதனைக்கு சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க வரவேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் தங்களுடைய சபைகளில் ஆராதனைகளை நடத்த வேண்டியதாய் இருந்தது. அதுதான் அவர்களுடைய முடிவு, அதைச் செய்ய அவர்கள் வழிநடத்தப்பட்டனர் என்று உணர்ந்தார்கள், சகோதரர் பிரான்ஹாமும் அதை ஒப்புக்கொண்டார்.

இன்றைக்கும் ஜெஃபர்சன்வில் பகுதியில் பல சபைகள் உள்ளன. அவர்களும் கூட கர்த்தரால் வழிநடத்தப்படுவதை உணரும் படி செய்ய வேண்டும். அவர்கள் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று நினைக்கவில்லையென்றால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர்கள் செய்யும்படி வழி நடத்தப்படுவதாக என்ன உணருகிறார்களோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இன்னமும் இந்த செய்தியை நேசிக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். ஆனால் நாம் செய்யும்படி வழிநடத்தப்படுவதாக என்ன உணருகிறோமோ அதை நாம் செய்ய வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது. நாம் தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க விரும்புகிறோம்.

ஆகஸ்ட் 30, 1964 அன்று சகோதரன் பிரான்ஹாம் பேசினது போலவே, 64-0830M கேள்விகளும் பதில்களும் #3 என்ற செய்தியை தீர்க்கதரிசி நமக்கு கொண்டு வருவதை மீண்டும் ஒருமுறை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்