செவ்வாய்
31 டிசம்பர் 2024
62-1231
போட்டி

அன்புள்ள மணவாட்டியே,

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு அற்புதமான கிறிஸ்மஸைக் கொண்டாடினீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுவை இன்றைக்கு உலகம் காண்கிற தொழுவத்தில் விட்டுவிடவில்லை, ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், தம்முடைய மணவாட்டியின் நடுவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய சத்தத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு நான் இன்று எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நான் ஏற்கனவே அறிவித்தபடி, புத்தாண்டு தினத்தன்று, டிசம்பர் 31 அன்று நம்முடைய வீடுகளில்/சபைகளில் மீண்டும் ஒருமுறை இராப்போஜனத்தை நடத்த விரும்புகிறேன். பங்கேற்க விரும்புவோர், நாம், 62-1231 போட்டி என்ற செய்தியை கேட்டுவிட்டு, செய்தியின் நிறைவில் சகோதரன் பிரான்ஹாம் அறிமுகப்படுத்தும் இராபோஜன ஆராதனைக்குச் செல்வோம்.

உள்ளூர் விசுவாசிகளுக்கு, நாங்கள் இரவு 7:00 மணிக்கு ஒலிநாடாவை இயக்கத் தொடங்குவோம். இருப்பினும், மற்ற நேர மண்டலங்களில் இருப்பவர்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் செய்தியைத் இயக்கத் தொடங்கவும். சகோதரன் பிரான்ஹாம் தனது புத்தாண்டுக்கு முந்தின மாலை செய்தியைக் கொண்டு வந்த பிறகு, பத்தி 59-ன் இறுதியில் ஒலிநாடாவை இடைநிறுத்துவோம், மேலும் நாங்கள் கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்கேற்கும்போது தோராயமாக 10 நிமிட பியானோ இசையைக் கேட்போம். சகோதரன் பிரான்ஹாம் ஆராதனையை முடித்தவுடன் ஒலிநாடாவை மீண்டும் இயக்கத் தொடங்குவோம். இந்த ஒலிநாடாவில், கால்களைக் கழுவும் ஆராதனை பகுதியை அவர் தவிர்க்கிறார், அதை நாமும் கூட தவிர்ப்போம்.

திராட்சை ரசத்தை எப்படிப் பெறுவது என்பதும், இராப்போஜன அப்பத்தை சுடுவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். இணையதளத்தில் இருந்து ஒலிப்பதிவை இயக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம் அல்லது லைஃப்லைன் பயன்பாட்டில் உள்ள வாய்ஸ் ரேடியோவில் இருந்து ஆராதனையை இயக்கலாம் (இது ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 7:00 மணிக்கு ஆங்கிலத்தில் இயக்கப்படும்.)

நம்முடைய கர்த்தருக்கு சேவை செய்யும் மற்றொரு வருடத்தை நாம் நெருங்கும்போது, முதலில் அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் அவருக்கு நம்முடைய அன்பை வெளிப்படுத்துவோமாக, பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்கெடுப்போம். அவருடைய சேவைக்காக நம்முடைய ஜீவியங்களை மீண்டும் அர்ப்பணிக்கும்போது அது எவ்வளவு ஒரு மகிமையான, புனிதமான நேரமாயிருக்கும்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

சகோதரன் ஜோசப்