காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 10 பிப்ரவரி, 2024

அன்புள்ள முளைப்பிக்கப்பட்ட வித்தே,

தேவனுடைய ஏழாம் தூதன், எப்படி தேவனுடைய முழு ஆலோசனையையும் மறைத்துவைக்காமல் உங்களுக்கு அறிவிக்கும்படிக்கு உங்களுக்கு சொல்வதை உட்கார்ந்து கேட்பது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மூன்றாவது இழுப்பைப் பற்றி விரிவாகச் சென்று, இப்போது அது எவ்வாறு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டுமா?

எப்படி அணில்கள் உண்டாகும்படி உரைத்த தேவன்; ஆபிரகாமுக்காக ஒரு ஆட்டுக்கடாவை அவர் உரைத்த அதே விதமாகவே. அது சரியான காரியம் என்று உரைத்திருந்த ஹேட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு தாழ்மையான எளிய சகோதரியினிடத்தில் பேசும்படிக்கு அவரிடத்தில் உரைத்த அதே சத்தம் எப்படியாய், அவள் விரும்பினது எதுவாய் இருந்தாலும் அதை அவளுக்கு கொடுக்கும்படி அணில்கள் உண்டாகும்படி உரைத்த அதே சத்தம் அவளிடத்தில் சொல்லும்படிக்கும், அது அப்பொழுதே சம்பவிக்கிறதா என்று பார்க்கும்படிக்கும் சொன்னது.

எப்படி ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் வனாந்தரத்தில் வேட்டையாடும்போது, ஒரு சக்திவாய்ந்த புயல் அவரை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. ஆனால் எப்படி தேவன் அவரிடம் உதட்டிலிருந்து செவி கேட்கப் பேசி, “நான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தேன். நான் சமுத்திரங்களில் பலத்த காற்றை அடக்கினேன்” என்றது.

அந்த சத்தம் அவரிடத்தில், “புயலினிடத்தில் பேசு, அது நின்றுவிடும். நீ என்ன கூறினாலும், அது சம்பவிக்கும்என்று கூறினபோது அவர் எப்படி குதித்து தன்னுடைய தொப்பியைக் கழற்றினார்.

அவர் அந்த சத்தத்தை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை, ஆனால், “புயலே, நீ நில். மேலும், சூரியனே, நாங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை, நான்கு நாட்களுக்கு நீங்கள் சாதாரணமாக பிரகாசி” என்று உரைத்தார்.

அவர் அதை உரைத்த மாத்திரத்திலே, பனிக்கட்டி மழையும், உறைந்த பனியும் மற்ற ஒவ்வொரு காரியமும் நின்றுவிட்டது. எப்படி ஒரு நொடிப்பொழுதில் உஷ்ணமான சூரியன் அவருடைய முதுகின் மேல் பிரகாசித்தது. காற்றுகள் திசைமாறி வீச, மேகங்கள் ஒரு மர்மமான காரியம் போல, காற்றில் உயர்த்தப்பட்டு, சில நிமிடங்களில் சூரியன் பிரகாசித்தது.

சகோதரி பிரான்ஹாமின் இடது கருப்பையில் ஒரு நீர்க்கட்டி இருப்பதை அது வெளிப்படுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் அவருக்குக் காண்பித்ததையும், அது ஏன் வைக்கப்பட்டது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்வார். அவர்கள் எப்படி ஜெபித்தனர், அதை எடுத்துப்போடும்படி தேவனிடத்தில் எப்படி ஜெபித்தனர். அப்பொழுது, தேவன் அவர்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறதாய் அது இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.

அறுவைசிகிச்சை மூலம் அதை அகற்றுவதற்கு முன், அவள் தனக்கு எவ்வளவு அற்புதமான மனைவியாக இருந்து வருகிறாள் என்று அவர் தேவனிடம் பேசிக்கொண்டும், அவரிடத்தில் சொல்லிக் கொண்டும் இருந்தார். அவர் வீட்டில் ஒருபோதும் இல்லை என்று அவள் எப்படி குறை கூறவேயில்லை. அவர் வேட்டையாடச் செல்லவும், ஓய்வெடுக்கவும், கர்த்தரிடத்தில் பேசவும் விரும்பும்போது அவருக்காக எல்லாவற்றையும் அவள் எப்போதும் ஆயத்தமாக வைத்திருந்தாள்.

அப்போது அவர் அறையில் ஏதோ ஒன்றைக் கேட்டார். அவர் மேல்நோக்கிப் பார்த்தபோது, அந்த சத்தம், “எழுந்து நில்” என்று கூறியது, “இப்போது நீ என்ன கூறினாலும், அது அப்படியே இருக்கும்” என்று அவரிடம் சொன்னது.

அவர் ஒரு நிமிடம் காத்திருந்தார், பின்னர் அவர், "மருத்துவர் கை அவளைத் தொடும் முன், தேவனுடைய கரம் அந்தக் கட்டியை அகற்றிவிடட்டும், அது இருந்தது கூட கண்டுபிடிக்கப்படக் கூடாது" என்றார்.

மருத்துவரின் கரம் அவளைத் தொடுவதற்கு ஒரு நொடிக்கு முன்பே, அவள் குணமடைந்தாள். எப்படி மருத்துவர் அவளிடம், “திருமதி. பிரான்ஹாம், அந்தக் கட்டி அங்கு இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களுக்கு எந்த கட்டியும் இல்லை" என்றார்.

கர்த்தருடைய வார்த்தை எவ்வளவு பூரணமாயுள்ளது!

மூன்றாவது இழுப்பு என்னவென்று அவருக்குத் தெரியும், அது என்ன செய்கிறது என்பதும் அவருக்குத் தெரியும், அதைக் குறித்து அவர் மனதில் இனி எந்த சந்தேகமும் இல்லை என்பதை அவர் உங்களுக்கு சொல்வதைக் கேட்க வேண்டும். அவரது கருத்துப்படி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக, எடுத்துக் கொள்ளப்படுவதற்குரிய விசுவாசத்தை துவங்கும் ஒரு காரியமாக அது இருக்கும்.

தேவன் நமக்காக சில மகத்தான காரியங்களைச் செய்யப்போகும் நேரம் விரைவில் வரும் என்பதால், நாம் பயபக்தியுடன் இருக்கவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். அந்த நேரம் வரும்போது, இறுக்கம் வரும்போது, அப்பொழுது நாம் தற்காலிகமாகப் பார்த்துள்ளதை, அதனுடைய பரிபூரண வல்லமையில் வெளிப்படுவதை நாம் காண்போம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நமக்கு அந்த மகத்தான ஆசீர்வாதம் கிடைக்கும். பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் 63-1229E: என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது எங்களோடு ஒரு பாகமாக இருக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

ஒரு மனிதன் பேசுவதைப் கேட்க நாம் ஒன்று கூடி இருக்கமாட்டோம்; வீதியில் ஏராளமான பருஷர் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கூறுகின்றனர். நாம் ஒரு ஊழியரையோ அல்லது ஒரு போதகரையோ நோக்கிப் பார்த்து கேட்க மாட்டோம், நாம் இயேசுவை நோக்கிப் பார்த்துக் கேட்போம்.

அந்த மனிதன், அந்த தேவனுடைய மனிதன், அந்த மாம்சமான நசரேயனாகிய இயேசு, தேவனாயிருந்து, அவருடைய மணவாட்டியிடம் பேசுவதைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுபடுவோம்.

நீங்களே உங்களை கேட்டுக்கொள்ள வேண்டும், இன்றைக்கு நீங்கள் எதை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நோக்கிப் பார்க்கும்போது என்ன காண்கிறீர்கள்? வார்த்தையின் மூலம் நீங்கள் அவரை நோக்கிப் பார்க்கும்போது உங்களால் அவரை மாத்திரமே காண முடியும்.

அவர் கலிலேயாவில் நடந்தபோது என்னவாயிருந்தாரோ, அதேவிதமாக அவர் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார், அதேவிதமாக பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். நீங்கள் எதைக் காண நோக்குகின்றீர்கள். ஒரு ஸ்தாபகரையா? ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனையா? அதை நீங்கள் இயேசுவில் ஒருபோதும் காணவேமாட்டீர்கள். நீங்கள் ஒரு பெரிய குருவானவரின் நன்மைகளைக் காண நோக்குகின்றீர்களா? நீங்கள் அதை ஒருபோதும் இயேசுவில் காணவேமாட்டீர்கள். காணவேமாட்டீர்கள். நீங்கள் இயேசுவை எப்படி காண்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுவதன் மூலம், ஏனெனில் அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருந்தார். அவர் அன்று என்னவாயிருந்தாரோ, அவ்வாறே இன்றிரவும் உள்ளார், என்றென்றும் அவ்வாறே இருப்பார்.

இப்போது இயேசுவை நோக்கிப் பார்த்து பிழையுங்கள்; இது வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! அது நாம் "நோக்கிப் பார்த்து பிழைப்பது" என்பதாய் மாத்திரமே உள்ளது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வசனங்கள்:

எண்கள் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12

 

 


சனி, 3 பிப்ரவரி, 2024

அன்புள்ள இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பே,

நம்முடைய வீடுகளிலும் சபைகளிலும் அமர்ந்து, ஒலிநாடாக்களை கேட்கிற, நாம் பைத்தியக்காரர்கள் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். நாம் மரணத்துக்கேதுவாய் பட்டினியாயிருந்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாம் ஆகஸ்ட் மாத சூரிய வெளிச்சத்தின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, கொழுத்த கன்றுகளைப் போல சேமித்து வைக்கப்பட்ட ஆகாரத்தால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணரவேயில்லை.

நாம் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கிற நன்கு வளர்ச்சியடைந்த கோதுமையாய் இருக்கிறோம். அவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தில் வாழ விரும்பினால், வாழட்டும். நாம் அல்ல, நாமோ நம்முடைய நாளுக்கான ஒளியில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நாளுக்கான ஒளி எது? தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தம்முடைய வல்லமையான ஏழாம் தூதனை உலகத்திற்கு அனுப்பினார். அவர் என்னவாக இருந்தார்? அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் கூறினது நிறைவேறுகிறது. அவர் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தின் ஒரு வெளிப்படுத்துதலாய் இருந்தார். அவர் இன்றைக்கான தேவனுடைய வெளிச்சமாய் இருந்தார்.

ஆனால் மோசேயோ எப்படியும், முன்னேறிச் சென்றான், ஏனெனில் அவன் ஜீவனாயிருந்தான். அவன் அக்காலத்து ஒளியாயிருந்தான். அவன் எதை உடையவனாயிருந்தான், அது என்னவாயிருந்தது? தேவன் மோசேயின் மூலம் அவர் வாக்களித்திருந்த வார்த்தையை வெளிப்படுத்துதல், மோசே அந்த ஒளியாயிருந்தான்.

எலியா ஒளியாயிருந்தான்…ஒளி! அல்லேலூயா! அவன் ஒளியாயிருந்தான். ஒளி! அவன் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் இருந்தான்.

யோவான், அவன் பூமியில் தோன்றின போது… இயேசு, “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்” என்று கூறினார். அல்லேலூயா! ஏன்? அவன் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான்.

அப்படியானால் வார்த்தையின் படி, நம் நாளுக்கான ஒளி தேவனுடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம். பாபிலோனின் வனாந்தரத்தில், “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் இருக்கும்படிக்கு, அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று கூப்பிடுகிறவராய் இருந்தார்.

அவர் மல்கியா 4:5, மற்றும் வெளிப்படுத்துதல் 10:7-ன் நிறைவேறுதலாய் இருந்தார். அவர், "அது அங்கே இருக்கும்" என்று உரைத்தபோது, அதில் எதுவும் இல்லாமல் இருந்தபோது, அது அங்கு இருந்தது. அவர் தொடக்கத்தில் ஒரு அணிலையும் கொண்டிருக்கவில்லை; அங்கு ஒன்றுமே இல்லை. அவர், “உண்டாகக்கடவது” என்று கூறினபோது, அங்கே உண்டானது.

தேவனுடைய வார்த்தையானது பிழையற்றது, அது நிறைவேற்றப்பட வேண்டும். நாம் ஒளியைக் கண்டுள்ளோம்; இந்த நாளுக்காக அவர் வாக்குறுதி அளித்த அவருடைய வார்த்தை. அதுவே சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே இந்த மணிநேரத்தின் ஒளியாயுள்ளது.

இன்றைக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வதில் ஈடு இணை ஏதுமில்லை. இதில் வால் புழுக்களே இல்லை…ஒன்று கூட இல்லை. மற்றவர்கள் வேறொன்றினால் திருப்தி அடைந்தால், திருப்தி அடையட்டும், ஆனால் நம்மால் முடியாது.

உங்களுடைய போதகர் சொல்வதை நீங்கள் கேட்க முடியாது, அல்லது பிரசங்கிக்க முடியாது என்று அர்த்தம் இல்லை; இல்லவேயில்லை, ஆனால் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் தேவனுடைய மகத்தான வடிகட்டியான, ஒலிநாடாவில் உள்ள இந்த செய்தியினூடாக வடிகட்ட வேண்டும்.

ஒரு மனிதன் செய்தியின் நாட்கள் முடிந்துவிட்டன என்று அவர்கள் கூறும்போது, அது வால் புழுக்கள். இந்தச் செய்தி அவர்களுடைய முற்றிலுமானது அல்ல என்று அவர்கள் கூறும்போது, அது வால் புழுக்கள். ஒலிநாடாக்களைக் கேட்பது போதாது என்று அவர்கள் கூறும்போது, அது வால் புழுக்கள்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று சொல்ல முடியும் என்பதை அறிந்து, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைவிட விட மகத்தானது எதுவுமேயில்லை. இந்த மணி நேரத்துக்கான செய்தியைக் கேட்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் நீங்கள் இதைச் செய்ய முடியாது.

இப்பொழுது நாம் இன்றைக்கான இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பாய் இருக்கிறோம். நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறோம். நாம் அவருடைய மகத்தான கடைசி-கால வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள அவர் தெரிந்து கொண்டவர்களாய் இருக்கிறோம். நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம்.

அவருடைய மணவாட்டி மட்டுமே இன்றைக்கான ஒளியின் உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வாள். இந்த ஒளி அவர்களை பரிபூரணப்படுத்தும் என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த ஒளி அவருடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பேசுகிறதாய் உள்ளது.

இந்த வேளைக்கான தேவனுடைய ஒளியின் பிரசன்னத்தில் நீங்கள் அமர விரும்புகிறீர்களா? அப்படியானால் விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கே இருக்கிறார் 63-1229M என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்.

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

ஆதியாகமம் 1:3, அதிகாரம் 2
சங்கீதம் 22
யோவேல் 2:28
ஏசாயா 7:14, 9:6, 28:10, 42:1-7
பரி. மத்தேயு 4:12-17, அதிகாரங்கள் 24 மற்றும் 28
பரி. மாற்கு அதிகாரம் 16
வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 3

 

 


சனி, 27 ஜனவரி, 2024

அன்புள்ள விசுவாசியே,

நான் ஒரு விசுவாசி என்று கூறுவது எவ்வளவு அற்புதமானது. ஒரு கோட்பாட்டில் இல்லை; வார்த்தையிலே! ஒரு ஸ்தாபனத்தில் இல்லை; வார்த்தையிலே! வேறு யாரேனும் என்ன கூறுகிறார்கள் என்பது அல்ல; ஆனால் வார்த்தை என்ன கூறுகிறது என்பதே!

நாம் எதையும் கேள்வி கேட்கவில்லை, நாம் அதை எளிமையாக விசுவாசிக்கிறோம். இது எப்படித் தோன்றினாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், நாம் ஒரு உண்மையான விசுவாசியாயிருக்கிறோம். நாம் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாக இருக்கிறோம்.

நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற வேளையைக் காண்கிறோம். நாம் இந்த மணி நேரத்துக்கான செய்தியைக் காண்கிறோம். நாம் இந்த மணி நேரத்துக்கான செய்தியாளரைக் காண்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துகிறதை நாம் காண்கிறோம். நாம் இந்த செய்தியையும், இந்த செய்தியாளரையும், இந்த வார்த்தையையும் தவிர வேறெதையும் காண்கிறதில்லை.

ஒரு உண்மையான விசுவாசி வார்த்தையைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை. அவ்வளவுதான். அவன் வார்த்தையைக் கவனிக்கிறான். அவன் பிழைகளை கண்டறியும்படியான வாய்ப்புகளை எதிர்நோக்கமாட்டான். அவன் எந்த தந்திரமான வேலைகளையும் எதிர்நோக்கமாட்டான். அவன் தேவனை விசுவாசிக்கிறான், அதுவே இதற்கு தீர்வாகிறது, மேலும் அவன் தொடர்ந்து செல்கிறான். புரிகிறதா? அப்படித்தான் விசுவாசி இருக்கிறான்.

நாம் வார்த்தையைத் தவிர வேறு எதையும் கேட்க முடியாது; தீர்க்கதரிசிக்கு மாத்திரமே வார்த்தை வருகிறது. பிழைகளை கண்டறியும் வாய்ப்புகளே இல்லை, யாரோ ஒருவரின் வியாக்கியானம் அல்ல, மணவாட்டிக்காக ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டு வைக்கப்பட்ட சுத்தமான வார்த்தை.

ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்குள்ளாக உயிர்ப்பித்து ஜீவிக்கச் செய்துள்ளார். விசுவாசத்தினால், நாம் அதைப் புரிந்துகொண்டு, அதை விசுவாசிக்கிறோம். மணவாட்டிக்குள் அப்படிப்பட்ட ஒரு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொண்டு செல்லும்படியான ஒரு சத்தம் பரலோகத்தில் இருந்து உண்டாகி, அது ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான கிருபையில், பூமியிலிருந்து நம்மைக் கொண்டு செல்லும். தேவன் அதை வாக்குப்பண்ணினார்.

நாம் எல்லா நேரத்திலும், ஒவ்வொரு நாளும் சோதனைக்குட்படுத்தப்படுகிறோம். சாத்தான் நம்முடைய சோதனைகளையும் பரிசோதனைகளையும் தேவன் நம்மைத் தண்டிக்கிறார் என்று நமக்கு சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதுவல்ல, அது சாத்தான் அதைச் செய்வதாகும், தேவன் அதை அனுமதிக்கிறார்.

நாம் என்ன செய்வோம் என்பதைப் பார்க்கும்படிக்கு தேவன் நம்மைப் பக்குவப்படுத்தி, நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார். நாம் எந்நிலையில் இருப்போம் என்பதை காணும்படிக்கு, நம்மை உலுக்கி, நம்மை கீழே தள்ளவே சோதனை உண்டாகிறது. ஆனால் நாம் ஒவ்வொரு யுத்தத்திலும் ஜெயங்கொள்கிறோம், ஏனென்றால் நாம் ஜீவனுள்ள திருஷ்டாந்தங்களாக இருக்கிறோம்; தேவனுடைய வார்த்தையானது நமக்குள்ளாகவும், நம் மூலமாகவும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

அவருடைய பார்வையில் நாம் எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்கிறோம்?

நீங்கள் எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும், உங்களுடைய ஸ்தானத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்களோ, “நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்” என்று கூறலாம். உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாதபடிக்கு, தேவன் தம்முடைய மகத்தான திட்டத்தில், கிறிஸ்துவின் சரீர ஒழுங்கில் அவ்வண்ணமாக அமைத்திருக்கிறார்.

அது எவ்வளவு அற்புதமானது? நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்தானம் உண்டு. தேவன் உலகத்தை உண்டாக்க உரைத்தபோது நாம் ஒவ்வொருவரும் இங்கே இருந்தோம். அப்பொழுதே அவர் நம்முடைய சரீரத்தை இங்கே வைத்திருந்தார். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றி, நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியாக இந்த நேரத்தில் நம்மை பூமியின் மீது வைத்தார்.

ஒவ்வொருவரும் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த வார்த்தை, இந்த செய்தி, இந்த செய்தியாளரின் பேரில் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள்? ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள வார்த்தையைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?

உலகின் பல்வேறு பகுதிகளிலும், இந்த ஒலிநாடாக்கள் ஒலிநாடாக்களின் ஊழியங்கள் மூலம் எங்கும் செல்கின்றன.

இது உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டிக்கு தேவனிடத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு ஒலிநாடா ஊழியமாகும். இது நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் யார் என்றும், நீங்கள் வார்த்தையில் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா என்பதையும் உங்களுக்குச் சரியாகச் சொல்கிறது.

நீங்கள் மூன்று பிரிவுகளில் ஒன்றில் இருக்கிறீர்கள். உங்களுடைய தற்போதைய நிலையில், தற்போதைய மனநிலையில், அதாவது, இங்கே இந்த புலப்படும் பார்வையாளர்களாகிய உங்களுக்கும், இந்த ஒலிநாடாவை கேட்கும் காணக்கூடாத கூட்டத்தாராய் இருக்கும் உங்களுக்கும், இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு உங்களுடைய தற்போதைய மனநிலையையும், நீங்கள் எந்தப் பிரிவில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு நிரூபிக்கிறது.

இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு, நீங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள சுத்தமான வார்த்தைகளை விட உங்களுக்கு அதிகம் தேவை என்று சிலர் நம்புகிறீர்கள். ஒரே மனிதனின் செய்தியின் நாட்கள் முடிந்துவிட்ட என்றும்; நீங்கள் உங்களுடைய மேய்ப்பருக்கு செவிகொடுக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள் என்றும் சிலர் நம்புகின்றனர்.

இன்றைய செய்தியில் உள்ள மிகப் பெரிய பிரிவு, ஒலிநாடாக்களைக் கேட்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே. சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறு என்றும்; மேய்ப்பர் மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும் என்றும் சிலர் கற்பிக்கிறார்கள். சிலர் ஒரு சமநிலை உண்டு என்று கூறுகிறார்கள், ஆனால் சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதேயில்லை, அல்லது அவர்கள் அதை இயங்கினாலும் மிக அரிதாகவே செய்கிறார்கள்.

வார்த்தையின் பல யோசனைகள், பல எண்ணங்கள், பல வியாக்கியானங்களில், யார் சொல்வது சரி? யாரை நம்ப வேண்டும்? அது நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாயுள்ளது.

யாரேனும் கூறுவதை அல்ல, வார்த்தையோடு அதை சரிபார்க்க வேண்டும் என்று தீர்க்கதரிசி நம்மிடம் சொன்னார். அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? அதைச் செய்வதற்கு ஒரு வழி மாத்திரமே உண்டு, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்.

ஒரு சரியான பதில், ஒரு சரியான வழியில் இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்குத்தானே தீர்மானிக்க வேண்டும். இந்தச் செய்தியைக் கேட்கும் அனைவருக்கும் இந்த ஞாயிறு எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று: கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள ஒரே நபர் யார்? அக்கினி ஸ்தம்பம் யாரை ரூபகாரப்படுத்தினது? இயேசுவை நமக்கு அறிமுகப்படுத்துவது யார்? பிழையற்ற வார்த்தையை உரைத்தது யார்? பூமியில் யாருடைய வார்த்தைகள் மிகவும் முக்கியமானவையாயிருந்து, அவை பரலோகத்தில் எதிரொலிக்கப்பட்டன?

நீங்கள் சரியான பதில்களைப் பெற விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 63-1124E—மூன்று வகைகளான விசுவாசிகள் என்ற செய்தியைக் கேட்க வருமாறு நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. யோவான் 6:60-71

 

 


சனி, 20 ஜனவரி, 2024

அன்புள்ள ஒலிநாடாப் பிரியர்களே,

இந்த செய்தியை நம்முடைய முழு மனதோடு நாம் நேசிக்கிறோம். இது தேவனுடைய கரும்பின் இனிமையாயுள்ளது. இது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டு, மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. இந்த செய்தி தேவனுடைய வார்த்தைக்கு விடையாக உள்ளது. இது நம்முடைய நாளுக்கான அதே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாய், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக உள்ளது.

நாம் இங்கே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையைப் பெற்றுள்ளோம், அவர் நம்மை ஏற்றுக்கொண்டு, நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொடுத்திருக்கிறார் என்பதை ஆவியினால் நிரூபித்து, ரூபகாரப்படுத்துகிறார். நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அதே சுவிசேஷம், அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஊழியம், அதே அக்கினிஸ்தம்பமும் கூட நமக்கு முன்பாக காணப்பட்டு, அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பிக்கிறது. எனவே எங்கும் சாக்குபோக்குக்கு இடமில்லை.

இது தேவனும் அவருடைய மணவாட்டியும் ஒன்றிணைந்து கொண்டிருக்கிற ஒரு நேரமாயுள்ளது. கிறிஸ்துவின் மணவாட்டி அழைக்கப்பட்டிருக்கிறாள். நாம் தேவனுடைய ராஜ்யத்தில் முத்திரையிடப்பட்டிருக்கிறோம். ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதலில் இந்த பூமியிலிருந்து நம்மை மகிமைக்கு அழைத்துச் செல்லும் இயக்கவியலுக்காக இங்கே இயந்திரவியல் காத்திருக்கிறது.

அந்த இயக்கவியல் பரிசுத்த ஆவியின் மறுநிரப்பீடாயுள்ளது. தலைக்கல்லானது கீழே வந்து சரீரத்தோடு இணையும். அப்பொழுது, தலையும் சரீரமும் ஒன்று சேரும்போது, பரிசுத்த ஆவியின் முழு வல்லமை நம்மை எழுப்ப, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் அவருடைய பரிசுத்தத்தின் அழகில் எழுப்பி, ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதலில் கொண்டு செல்லும்.

அந்த நேரமோ துரிதமாக அணுகிக் கொண்டிருக்கிறது. நேரமோ முடிவுக்கு வந்துவிட்டது. இறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நம்முடைய நாளுக்கான அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த மணி நேர செய்தியில் உங்கள் நிலைப்பாடு என்ன?

“நான் செய்தியை விசுவாசிக்கிறேன். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்: என்று நீங்கள் எளிமையாகச் சொல்வீர்களா.

அதுவரை நின்று விட்டு, “நான் செய்தியை விசுவாசிக்கிறேன்” என்று கூறிவிடாதீர்கள். நீங்கள் செய்தியாளனுக்குக் கீழ்ப்படியுங்கள்!

நீங்கள் செய்தியாளனுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால்: கவனியுங்கள், செய்தியாளனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் கூறினார். அப்படியானால், செய்தியாளர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?

நீங்களோ “சரி, சகோதரன் பிரான்ஹாம் கூறின ஒவ்வொரு வார்தையும் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். அது நல்லதுதான். ஆனால் அதை வெறுமன-அதை வெறுமென படிக்க முடிந்தால் மாத்திரம் போதாது.

ஏன் ஜனங்கள் ஒலிநாடாக்களால் திருப்தியடைய முடியவில்லை? எல்லோரும் தீர்க்கதரிசியாயிருக்க முடியாது. ஒரே ஒரு தீர்க்கதரிசிதான் உண்டு, வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கே வருகிறது.

அவர்கள் அதை சந்தேகிக்கத் துவங்கும் வரை சபை அருமையாக செயல்பட்டது; அதாவது அந்த தீர்க்கதரிசி கூறினதை அவர்களுக்குச் சொல்லவும், அவர்களுக்கு வியாக்கியானிக்கவும் பல்வேறுபட்ட சத்தங்கள் தேவைப்பட்டன. அவர்கள் ஒரு நவீன கோராவையும், தாத்தானையும் விரும்பினர்.

பாருங்கள், வார்த்தையை சிறிது தவறாக அர்த்தம் கொண்டதன் நிமித்தம் அது தொடங்கினது, அதே காரியம், அதே விதமாகவே அது முடிவடைகிறது.

இது வார்த்தையின் ஒரு சிறிய தவறான புரிதலுடன் ஆரம்பித்து, முடிவடையும் என்றால், நீங்கள் ஒலிநாடாக்களோடு எப்படி தரித்திருக்க வேண்டும் என்பதை நிச்சயமாக அடையாளங் கண்டு கொள்கிறீர்கள். தேவன் ஏன் இந்தச் செய்தியை மணவாட்டிக்காக ஒலிப்பதிவுசெய்து சேமித்து வைத்தார் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

நான் இந்த காரியங்களை உங்களுடைய போதகர்களை தாழ்த்துவதற்காகவோ, அல்லது உங்களுடைய போதகருக்கு செவி கொடுக்காதீர்கள் என்று கூறவோ கூறிக்கொண்டிருக்கவில்லை, இல்லை, இல்லை, ஆனால் இந்த செய்தியை ஒலிநாடாவில் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதன் முக்கியத்துவத்தை உங்களுக்குக் காட்டுவதற்காகவேயாகும்.

சபையானது எவ்வளவாக அதை மறுபடியும் மறுபடியும், மறுபடியும் மறுபடியும் சோதித்துப் பார்க்க வேண்டியதாயுள்ளது! அவருடைய வருகைக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். நாம் பறந்து செல்ல காத்திருக்கிறோம். அதை நாம் வார்த்தையுடன் சோதித்துப் பார்ப்பது நலம், யாரோ ஒருவர் கூறினதுடன் அல்ல. உங்களையே, நீங்கள் அறிந்தவர்களாய், கிறிஸ்துவுடன் ஒரு தனிப்பட்ட விதத்தில் அனுபவம் கொண்டிருக்க நிச்சயமுடையவர்களாயிருங்கள். அதை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் சோதித்துப் பாருங்கள்.

அவர் என்னக் கூறினார்? நாம் அதை மீண்டும், மீண்டும், மீண்டும் வார்த்தையினால் சரிபார்க்க வேண்டும். நீங்கள் அதை வார்த்தையினால் எப்படி சரி பார்க்கிறீர்கள்? இன்றைக்கான வார்த்தை என்ன? வேதம், அது ஆதியிலிருந்ததைப் போலவே அதே விதமாகவே இருந்து வருகிறது.

தம்முடைய வார்த்தையின் வியாக்கியானி யார் என்று தேவன் கூறுகிறார்? என்னையா? உங்களுடைய போதகரையா? இல்லை, அந்த நேரத்தில் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி மட்டுமே வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். எனவே, எவரேனும் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் ஒலிநாடாக்கள் மூலம் சரிபார்க்க வேண்டும்!

அந்தக் கூற்று உண்மையாக இருந்தால், எந்த ஒரு நபரும் அல்லது எந்தப் போதகரும் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒரே காரியம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அப்படியானால் அந்தச் செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கோருகிற எவருக்கும் அதைச் சொல்வது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? ஏனென்றால் அவர்கள் அதை விசுவாசிக்கிறதில்லை.

உங்களுடைய முடிவான தீர்மானம் என்ன? நானும் என் வீட்டாருமோவென்றால், இந்த செய்தியோடும், தேவனுடைய செய்தியாளரோடும், ஒலிநாடாக்களுடனும் தரித்திருப்போம். ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.

● கர்த்தர் உரைக்கிறதாவது என்ற சத்தம் ஒன்று மாத்திரமே.
● அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் ஒன்று மாத்திரமே.
● ஏழாம் தூதனாகிய செய்தியாளர் ஒருவர் மாத்திரமே.
● மணவாட்டி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய சத்தம் ஒன்று மாத்திரமே.
● இந்த தலைமுறைக்கான தேவனுடைய சத்தம் ஒன்று மாத்திரமே.

கிறிஸ்து எனப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? 63-1124M என்ற செய்தியை ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் கேட்டு, எங்களுடைய முடிவான தீர்மானத்தை எடுக்கப்போகிறபடியால், நீங்களும் அதே வெளிப்பாட்டை உடையவராய் இருந்தால், என்னோடும், அதே விதமாக விசுவாசிக்கிற உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளின் ஒரு சிறிய குழுவுடனும் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 13 ஜனவரி, 2024

அன்புள்ள பரிபூரண விசுவாச விசுவாசிகளே,

ஒவ்வொரு நாளும் நம்முடைய இருதயங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் துடிக்கிறது. அவர் விரைவில் வருவதற்கான நேரத்திற்காகவே நாம் காத்திருக்கிறோம். எல்லா அச்சங்களும் மறைந்துவிட்டன. "நாம் அவருடைய மணவாட்டியா?" என்று இனி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நம் இருதயங்களில் பதிந்துள்ளது, நாம் அவருடைய மணவாட்டி.

நாம் ஒரு பரலோக சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திற்கு செவிகொடுத்து, அவருடைய சபையில் மாம்சத்தில் தோன்றியிருக்கிறோம். இந்த செய்தி தேவனுடைய வார்த்தையால் மிகவும் முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அது ஒரு மனிதனாக இருக்க முடியாது, அது தேவன் தம்முடைய மணவாட்டியிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதாக இருக்க வேண்டும்.

இந்த ஒலிநாடாக்களில் நம்முடன் பேசிக்கொண்டிருப்பது ஒரு மனிதன் அல்ல, அது தேவன் என்றே நாம் விசுவாசிக்கிறோம்.

நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றால், “உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.” சாத்தான் என்னைக் குறித்து தீதாக உங்களிடத்தில் பேச அனுமதிக்காதீர்கள்; ஏனென்றால் அவைகள் அதிகம் உள்ளன. ஆனால் நீங்கள் அந்த நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; ஏனென்றால், நீங்கள் அவ்வாறு நிலைத்திருக்கவில்லையென்றால், அது சம்பவிக்காது. ஒரு மனிதனாக, என்னைப் பார்க்காதீர்கள்; நான் ஒரு மனிதன், நான் தவறுகள் நிறைந்தவன். ஆனால் நான் அவரைக் குறித்து என்ன கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதையே நோக்கிப் பாருங்கள். அது அவரே. அந்த ஒருவர் அவரே.

அவர் என்ன கூறுகிறார் என்பதில் நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்து விசுவாசிக்க வேண்டும், இல்லையென்றால் அது நடக்காது. பலர் நினைப்பது போல், தேவனுடைய தீர்க்கதரிசியை நாம் ஒரு மனிதனாக நோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் மானிட மாம்சத்தின் திரைக்குப் பின்னால் இருக்கிறோம், நாம் பார்ப்பது மற்றும் கேட்பது எல்லாம் தேவன் மனித உதடுகளினூடாக பேசுவதை மட்டுமே, மேலும் நம்பிக்கைக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்.

அதுவே இன்றைக்கான இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. ஒலிநாடாக்களில் பேசுவது தேவன், மனிதன் அல்ல என்று விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதைத் தவறவிட்டால், என் நண்பரே, நீங்கள் இந்த மணிநேரத்தின் செய்தியைத் தவறவிட்டுவிட்டீர்கள், நீங்கள் மணவாட்டியாக இருக்க முடியாது.

சாத்தான் அதற்கு தனது வியாக்கியானத்தை அளிக்கிறான், மேலும் 99% சமயங்களில் அவன் ஏவாளுக்கு செய்ததைப் போலவே செய்தியை மேற்கோள் காட்டுகிறான், ஆனால் அவள் வார்த்தையுடன் தரித்திருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டாள்; ஆதாம் அவளிடம் சொன்னது தேவன் கூறினதைத்தானேயன்றி, வேறு யாரோ சொன்ன இது என்ன பொருட்படுத்துகிறது என்பதை அல்ல. அவள் தேவனுடைய சத்தத்தோடு தரித்திருந்திருக்க வேண்டும்.

இதுவே உலகம் எப்போதும் அறிந்துள்ளதில் மகத்தான நாளாய் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஜீவியம் தாமே, அவருடைய தீர்க்கதரிசியின் ஜீவியத்தில் ஜீவித்து, வெளிப்படுத்தப்பட்டு, இப்போது அவருடைய மணவாட்டியான, நமக்குள் மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கிறது.

அவர் நமக்கு செய்யும்படி கட்டளையிட்டதை நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்; ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் வார்த்தையுடன் தரித்திருங்கள். இதுவே இன்றைக்கான தேவனுடைய ஒலிநாடா ஊழியமும், நிகழ்ச்சி நிரலாயுமுள்ளது.

வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்றும், வார்த்தையில் மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் பேசி வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட ஒருவர் என்றும், இந்த தலைமுறைக்கு தேவனுடைய சத்தம் என்றும், மற்ற எந்த மனிதனும் கொண்டிராத விசுவாசத்தைக் கொண்டிருந்த ஒரு மனிதன் என்றும், கர்த்தருடைய தூதன், “ஜனங்கள் உம்மை விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய ஜெபங்களுக்கு முன்பாக ஒன்றுமே நிற்காது” என்று சொன்ன ஒருவர் என்றும் நீங்கள் உண்மையாகவே விசுவாசித்தால், அப்பொழுது இந்த ஞாயிற்றுக்கிழமை மற்றெதைப் போன்றும் இல்லாத ஒரு முக்கியமான நாளாய் இருக்கும்.

இந்தச் செய்தியின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எப்போதுமே எடுத்துப்போடக் கூடியது எதுவும் இல்லை, எதுவுமே இல்லை. நாம் அதை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. அவர் அதைக் கூறியிருந்தால், நாம் அதை விசுவாசிக்கிறோம். நாம் அவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அப்படியிருக்கும் போதும் நாம் அதை விசுவாசிக்கிறோம்.

இயேசுதாமே நமக்குச் சொன்னார்: “உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்.” அது நம்முடைய இருதயங்களில் பதியட்டும். அவருடைய ஆவி நம்மில் ஜீவித்துகொண்டிருக்கிறது. அதை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? இப்போது, இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவரான, தேவன் தாமே, அக்கினித் ஸ்தம்பமாக, நம்மில் ஜீவித்துக் கொண்டும், வாசம் செய்துகொண்டும் இருக்கிறாரா? அது உண்மை என்று நாம் எப்படி அறிவோம்? தேவன் அவண்ணமாய்க் கூறினாரே!!

நாம் மிகுந்த ஒரு தோல்வியைத் தழுவியவர்கள் என்று சாத்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் சொல்வது சரிதான், நாம் அவ்வாறு தான் இருக்கிறோம். அவன் நமக்கு நினைவூட்டுகிறான், நாம் வார்த்தையில் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அதுவும் சரிதான், நாம் அவ்வாறு இல்லை. நாம் செய்யக் கூடாது என்று தெரிந்த காரியங்களையே நாம் செய்கிறோம். எங்களை மன்னியும், கர்த்தாவே, அவன் சொல்வது சரிதான்.

ஆனால், நம்முடைய எல்லா தவறுகளிலும், நம்முடைய எல்லா பலவீனங்களிலும், நம்முடைய எல்லா தோல்விகளிலும் கூட, நாம் மணவாட்டி என்ற உண்மையை, அது மாற்றுகிறதில்லை. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்!

நாம் நம்மையோ அல்லது நம்மால் செய்யக்கூடிய எந்த காரியத்தையோ நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, நாம் ஒரு அலங்கோலமாக இருக்கிறோம். அவர் நம்மைத் தெரிந்துகொண்டு, அவருடைய வார்த்தையின் ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் என்பதை நாம் அறிவோம், அந்த வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. அது நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் பதியப்பட்டுள்ளது.

நாங்கள் பரிபூரண விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் சொன்னார். உம்முடைய வார்த்தையில் நாங்கள் பரிபூரண விசுவாசம் கொண்டிருக்கிறோம். கர்த்தர் உரைக்கிறதாவது என்று உம்முடைய தீர்க்கதரிசி கூறினதில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம். இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையல்ல, ஆனால் எங்களுக்கான உம்முடைய வார்த்தை.

உம்முடைய தீர்க்கதரிசி எங்களுக்கு சொன்னது என்னவென்றால், என்னவெல்லாம் தேவையோ, நாங்கள் விசுவாசித்து, உமது வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தால், எங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் விசுவாசிக்கிறோம்.

கர்த்தாவே, எனக்கு ஒரு தேவை இருக்கிறது. உமது வார்த்தையில் நான் கொண்டுள்ள முழு விசுவாசத்தோடு நான் உமக்கு முன்பாக வந்து கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அது தவறிப் போக முடியாது. ஆனால் இன்றைக்கு, கர்த்தாவே, நான் என்னுடைய விசுவாசத்தோடு மாத்திரம் உமக்கு முன்பாக வந்துகொண்டிராமல், உம்முடைய வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கு நீர் அளித்த விசுவாசத்தோடு வருகிறேன்.

ஓ, தேவனாகிய கர்த்தாவே, எங்களிடத்தில் இரக்கமாயிருக்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிற ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும், எந்த விதமான ஒரு சுகவீனத்தை அல்லது துன்பத்தைக் கொண்டிருந்தாலும்; மோசே பிளவிலே தன்னையே ஜனங்களுக்காக வைத்ததுபோல, இன்றிரவு நான் என்னுடைய இருதயத்தை, கர்த்தாவே உமக்கு முன்பாக வைக்கிறேன். உம்மிடத்தில் எனக்குள்ள எல்லா விசுவாசத்தோடும், நீர் எனக்கு அளித்திருக்கிறதையும், நான் அவர்களுக்கு அளிக்கிறேன்.

நான் கூறுகிறேன்; நான் கொண்டுள்ள அப்படிப்பட்ட விசுவாசத்தை, நான் இந்த கூட்டத்தாருக்கு, நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறேன்! உங்களுடைய சுகவீனங்களை அகற்றுங்கள், ஏனென்றால் உங்களுடைய ஜீவனை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிற பிசாசைக் காட்டிலும் உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவராய் இருக்கிறார். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். நீங்கள் மீட்கப்பட்டவர்கள்.

அது முடிந்ததுவிட்டது. அவருடைய வார்த்தை தவறிப் போக முடியாது. நமக்கு எது தேவையோ, அதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

தேவனுடைய சத்தம் அவருடைய விசுவாசத்தை நம்முடைய விசுவாசத்தோடு அளிப்பதை கேட்கும்படிக்கு உலகத்தை சுற்றிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்று கூடி தேவனிடத்தில் இருந்து வருகிற இந்த மகத்தான ஆசீர்வாதத்தையும் அபிஷேகத்தையும் பெற்றுக்கொள்ள ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

63-1110E உங்களிலிருக்கிறவர்