அன்புள்ள பரிபூரண விசுவாச விசுவாசிகளே,
ஒவ்வொரு நாளும் நம்முடைய இருதயங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் துடிக்கிறது. அவர் விரைவில் வருவதற்கான நேரத்திற்காகவே நாம் காத்திருக்கிறோம். எல்லா அச்சங்களும் மறைந்துவிட்டன. "நாம் அவருடைய மணவாட்டியா?" என்று இனி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நம் இருதயங்களில் பதிந்துள்ளது, நாம் அவருடைய மணவாட்டி.
நாம் ஒரு பரலோக சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திற்கு செவிகொடுத்து, அவருடைய சபையில் மாம்சத்தில் தோன்றியிருக்கிறோம். இந்த செய்தி தேவனுடைய வார்த்தையால் மிகவும் முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அது ஒரு மனிதனாக இருக்க முடியாது, அது தேவன் தம்முடைய மணவாட்டியிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதாக இருக்க வேண்டும்.
இந்த ஒலிநாடாக்களில் நம்முடன் பேசிக்கொண்டிருப்பது ஒரு மனிதன் அல்ல, அது தேவன் என்றே நாம் விசுவாசிக்கிறோம்.
நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றால், “உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.” சாத்தான் என்னைக் குறித்து தீதாக உங்களிடத்தில் பேச அனுமதிக்காதீர்கள்; ஏனென்றால் அவைகள் அதிகம் உள்ளன. ஆனால் நீங்கள் அந்த நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; ஏனென்றால், நீங்கள் அவ்வாறு நிலைத்திருக்கவில்லையென்றால், அது சம்பவிக்காது. ஒரு மனிதனாக, என்னைப் பார்க்காதீர்கள்; நான் ஒரு மனிதன், நான் தவறுகள் நிறைந்தவன். ஆனால் நான் அவரைக் குறித்து என்ன கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதையே நோக்கிப் பாருங்கள். அது அவரே. அந்த ஒருவர் அவரே.
அவர் என்ன கூறுகிறார் என்பதில் நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்து விசுவாசிக்க வேண்டும், இல்லையென்றால் அது நடக்காது. பலர் நினைப்பது போல், தேவனுடைய தீர்க்கதரிசியை நாம் ஒரு மனிதனாக நோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் மானிட மாம்சத்தின் திரைக்குப் பின்னால் இருக்கிறோம், நாம் பார்ப்பது மற்றும் கேட்பது எல்லாம் தேவன் மனித உதடுகளினூடாக பேசுவதை மட்டுமே, மேலும் நம்பிக்கைக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்.
அதுவே இன்றைக்கான இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. ஒலிநாடாக்களில் பேசுவது தேவன், மனிதன் அல்ல என்று விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதைத் தவறவிட்டால், என் நண்பரே, நீங்கள் இந்த மணிநேரத்தின் செய்தியைத் தவறவிட்டுவிட்டீர்கள், நீங்கள் மணவாட்டியாக இருக்க முடியாது.
சாத்தான் அதற்கு தனது வியாக்கியானத்தை அளிக்கிறான், மேலும் 99% சமயங்களில் அவன் ஏவாளுக்கு செய்ததைப் போலவே செய்தியை மேற்கோள் காட்டுகிறான், ஆனால் அவள் வார்த்தையுடன் தரித்திருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டாள்; ஆதாம் அவளிடம் சொன்னது தேவன் கூறினதைத்தானேயன்றி, வேறு யாரோ சொன்ன இது என்ன பொருட்படுத்துகிறது என்பதை அல்ல. அவள் தேவனுடைய சத்தத்தோடு தரித்திருந்திருக்க வேண்டும்.
இதுவே உலகம் எப்போதும் அறிந்துள்ளதில் மகத்தான நாளாய் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஜீவியம் தாமே, அவருடைய தீர்க்கதரிசியின் ஜீவியத்தில் ஜீவித்து, வெளிப்படுத்தப்பட்டு, இப்போது அவருடைய மணவாட்டியான, நமக்குள் மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கிறது.
அவர் நமக்கு செய்யும்படி கட்டளையிட்டதை நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்; ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் வார்த்தையுடன் தரித்திருங்கள். இதுவே இன்றைக்கான தேவனுடைய ஒலிநாடா ஊழியமும், நிகழ்ச்சி நிரலாயுமுள்ளது.
வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்றும், வார்த்தையில் மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் பேசி வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட ஒருவர் என்றும், இந்த தலைமுறைக்கு தேவனுடைய சத்தம் என்றும், மற்ற எந்த மனிதனும் கொண்டிராத விசுவாசத்தைக் கொண்டிருந்த ஒரு மனிதன் என்றும், கர்த்தருடைய தூதன், “ஜனங்கள் உம்மை விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய ஜெபங்களுக்கு முன்பாக ஒன்றுமே நிற்காது” என்று சொன்ன ஒருவர் என்றும் நீங்கள் உண்மையாகவே விசுவாசித்தால், அப்பொழுது இந்த ஞாயிற்றுக்கிழமை மற்றெதைப் போன்றும் இல்லாத ஒரு முக்கியமான நாளாய் இருக்கும்.
இந்தச் செய்தியின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எப்போதுமே எடுத்துப்போடக் கூடியது எதுவும் இல்லை, எதுவுமே இல்லை. நாம் அதை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. அவர் அதைக் கூறியிருந்தால், நாம் அதை விசுவாசிக்கிறோம். நாம் அவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அப்படியிருக்கும் போதும் நாம் அதை விசுவாசிக்கிறோம்.
இயேசுதாமே நமக்குச் சொன்னார்: “உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்.” அது நம்முடைய இருதயங்களில் பதியட்டும். அவருடைய ஆவி நம்மில் ஜீவித்துகொண்டிருக்கிறது. அதை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? இப்போது, இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவரான, தேவன் தாமே, அக்கினித் ஸ்தம்பமாக, நம்மில் ஜீவித்துக் கொண்டும், வாசம் செய்துகொண்டும் இருக்கிறாரா? அது உண்மை என்று நாம் எப்படி அறிவோம்? தேவன் அவண்ணமாய்க் கூறினாரே!!
நாம் மிகுந்த ஒரு தோல்வியைத் தழுவியவர்கள் என்று சாத்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் சொல்வது சரிதான், நாம் அவ்வாறு தான் இருக்கிறோம். அவன் நமக்கு நினைவூட்டுகிறான், நாம் வார்த்தையில் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அதுவும் சரிதான், நாம் அவ்வாறு இல்லை. நாம் செய்யக் கூடாது என்று தெரிந்த காரியங்களையே நாம் செய்கிறோம். எங்களை மன்னியும், கர்த்தாவே, அவன் சொல்வது சரிதான்.
ஆனால், நம்முடைய எல்லா தவறுகளிலும், நம்முடைய எல்லா பலவீனங்களிலும், நம்முடைய எல்லா தோல்விகளிலும் கூட, நாம் மணவாட்டி என்ற உண்மையை, அது மாற்றுகிறதில்லை. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்!
நாம் நம்மையோ அல்லது நம்மால் செய்யக்கூடிய எந்த காரியத்தையோ நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, நாம் ஒரு அலங்கோலமாக இருக்கிறோம். அவர் நம்மைத் தெரிந்துகொண்டு, அவருடைய வார்த்தையின் ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் என்பதை நாம் அறிவோம், அந்த வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. அது நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் பதியப்பட்டுள்ளது.
நாங்கள் பரிபூரண விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் சொன்னார். உம்முடைய வார்த்தையில் நாங்கள் பரிபூரண விசுவாசம் கொண்டிருக்கிறோம். கர்த்தர் உரைக்கிறதாவது என்று உம்முடைய தீர்க்கதரிசி கூறினதில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம். இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையல்ல, ஆனால் எங்களுக்கான உம்முடைய வார்த்தை.
உம்முடைய தீர்க்கதரிசி எங்களுக்கு சொன்னது என்னவென்றால், என்னவெல்லாம் தேவையோ, நாங்கள் விசுவாசித்து, உமது வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தால், எங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் விசுவாசிக்கிறோம்.
கர்த்தாவே, எனக்கு ஒரு தேவை இருக்கிறது. உமது வார்த்தையில் நான் கொண்டுள்ள முழு விசுவாசத்தோடு நான் உமக்கு முன்பாக வந்து கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அது தவறிப் போக முடியாது. ஆனால் இன்றைக்கு, கர்த்தாவே, நான் என்னுடைய விசுவாசத்தோடு மாத்திரம் உமக்கு முன்பாக வந்துகொண்டிராமல், உம்முடைய வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கு நீர் அளித்த விசுவாசத்தோடு வருகிறேன்.
ஓ, தேவனாகிய கர்த்தாவே, எங்களிடத்தில் இரக்கமாயிருக்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிற ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும், எந்த விதமான ஒரு சுகவீனத்தை அல்லது துன்பத்தைக் கொண்டிருந்தாலும்; மோசே பிளவிலே தன்னையே ஜனங்களுக்காக வைத்ததுபோல, இன்றிரவு நான் என்னுடைய இருதயத்தை, கர்த்தாவே உமக்கு முன்பாக வைக்கிறேன். உம்மிடத்தில் எனக்குள்ள எல்லா விசுவாசத்தோடும், நீர் எனக்கு அளித்திருக்கிறதையும், நான் அவர்களுக்கு அளிக்கிறேன்.
நான் கூறுகிறேன்; நான் கொண்டுள்ள அப்படிப்பட்ட விசுவாசத்தை, நான் இந்த கூட்டத்தாருக்கு, நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறேன்! உங்களுடைய சுகவீனங்களை அகற்றுங்கள், ஏனென்றால் உங்களுடைய ஜீவனை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிற பிசாசைக் காட்டிலும் உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவராய் இருக்கிறார். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். நீங்கள் மீட்கப்பட்டவர்கள்.
அது முடிந்ததுவிட்டது. அவருடைய வார்த்தை தவறிப் போக முடியாது. நமக்கு எது தேவையோ, அதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவனுடைய சத்தம் அவருடைய விசுவாசத்தை நம்முடைய விசுவாசத்தோடு அளிப்பதை கேட்கும்படிக்கு உலகத்தை சுற்றிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்று கூடி தேவனிடத்தில் இருந்து வருகிற இந்த மகத்தான ஆசீர்வாதத்தையும் அபிஷேகத்தையும் பெற்றுக்கொள்ள ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
63-1110E உங்களிலிருக்கிறவர்
தொடர்புடைய சேவைகள்
அன்பான பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்களே,
தேவன் நம்முடைய நாளில் வந்து, மனித மாம்சத்தில், வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற மனிதனில் தன்னை வெளிப்படுத்தினார், அதனால் அவரால் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற முடிந்தது. அதுவே நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயுள்ளது.
அந்த சத்தத்தைக் கேட்பதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதுமே இன்றைக்கு தேவன் அருளியிருக்கிற ஒரே வழியாயுள்ளது. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும் அவருடைய மணவாட்டியை வழிநடத்தவும் ஒரே ஒரு மனிதனை மட்டுமே அனுப்பி அவன் மூலமாகப் பேசினார்.
அவர் தம்முடைய திட்டத்தை அல்லது காரியங்களை செய்யும் முறையை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் முதல் முறை செய்த விதமாகவே, அவர் அதை ஒவ்வொரு முறையும் செய்கிறார். அவர் தாமே தம்முடைய ஜனங்களை அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக வழிநடத்துகிறார்.
நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள், பிசாசு எதையாவது செய்து அல்லது கூறி உங்களிடத்தில் இருந்து அதை பறித்துக் கொள்ளவே முடியாது, அவ்வாறு எதுவுமேயில்லை! உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் உங்களை முன்குறித்தார். அப்பொழுதே அவர் உங்களை அறிந்திருந்தார், நீங்கள் அவரோடு இருந்தீர்கள். அவர் உங்களுடைய பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைக் குறித்த அனைத்தையும் அறிந்திருந்தார். உங்களுடைய ஏற்ற தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவர் உங்களுடைய தோல்விகளை, உங்களுடைய தவறுகளை அறிந்திருந்தார், அவர் அப்பொழுதும் உங்களை நேசித்து, நீங்கள் அவருடைய ஒரு பாகமாக இருந்ததற்காக உங்களைத் தெரிந்துகொண்டார்.
உங்களுடைய ஆத்துமா அவருடைய வார்த்தையை மட்டுமே போஷிக்க முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து அவரை தியானிக்க விரும்பி, உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்கிறீர்கள். அவருடைய சத்தம் உங்களிடம் நேரடியாகப் பேசுவதை நீங்கள் கேட்கும்போது, அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. ஏனென்றால் அவர் உங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசி, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி, நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று உங்களை நினைப்பூட்டுகிறபொழுது, நீங்கள் அவரோடு உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.
பிசாசு உங்களைத் தொடர்ந்து தாக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் மட்டமான நிலையையடைந்து, நீங்கள் ஒரு முழுமையான தோல்வியை உணரலாம்; நீங்கள் எவருமே தவறிப்போகாது அளவிற்கு அவரிடத்தில் தவறிப்போயிருக்கிறதை போல் உணர்கிறீர்கள். நீங்கள் மிக மோசமாகியும், எங்கோ, உங்கள் ஆத்துமாவின் ஆழத்தில், அந்த அமர்ந்த மெல்லிய சத்தம்: “உங்களை என்னிடத்திலிருந்து எதுவுமே பிரிக்க முடியாது, நீங்கள் என்னுடைய வார்த்தையாக இருக்கிறீர்கள், நானே உங்களுடைய பெயரை என்னுடைய ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதினேன்” என்று உங்களிடத்தில் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள்.
இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்?
வார்த்தையில் தரித்திருங்கள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி கர்த்தர் உரைக்கிறதாவது என்ற தேவனுடைய சத்தம்; நான் உன்னை என்னுடைய வார்த்தையோடு ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறேன், உன்னால் எந்த காரியத்தையும் ஜெயங்கொள்ள முடியும், ஏனென்றால் என்னுடைய வார்த்தை உனக்குள்ளாக ஜீவித்து வாசம் செய்கிறது. நான் உனக்கு நிரூபித்திருக்கிறேன், உன்னிடம் பரிபூரண விசுவாசம் உள்ளது. நீ அடையாளத்தை உபயோகித்துள்ளாய், அது உன்னை பதறலில் ஆழ்த்தியுள்ளது. நான் என் வார்த்தைக்குப் பின்னால் நிற்பேன். நான் செய்வேன் என்று சொன்னதைச் செய்வேன்” என்று உங்களிடத்தில் சொல்லுகிறதைக் கேட்கிறீர்கள்.
ஒலிநாடாக்களில் அவர் நம்மிடம் பேசும் அவருடைய வார்த்தைகள் எவ்வளவு அற்புதமானவை. அது ஏதோ ஒரு மனிதனோ, நமக்கு மத்தியில் இருக்கிற ஒரு மாம்சப்பிரகாரமான மனிதனோ அல்ல என்பதை நாம் அறிவோம். இது நித்திய தேவன் நம்மிடம், அவருடைய மணவாட்டியிடம் பேசுகிறார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்மாக்கள்; என்ற செய்தியை அந்த அமர்ந்த மெல்லிய சத்தம் பேசுவதை நாங்கள் ஒன்று கூடி கேட்க போகிறபடியால், மணவாட்டியுடன் சேர்ந்துகொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஆதியாகமம் 15:16
பரி. மத்தேயு 23:27-34
பரி. யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1 பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள அடையாளத்தை வைத்துக்கொண்டிருக்கிற மணவாட்டியே,
புத்தாண்டுக்கு முந்தின மாலை, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 அன்று மிகவும் சிறப்பாக வீட்டில் இராபோஜன ஆராதனைக்கு நாம் அனைவரும் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள நான் விரும்புகிறேன். 63-0901E பதறல்கள் என்ற செய்தியை நாம் கேட்போம், அதில் சகோதரன் பிரான்ஹாம் ஒலிநாடாவில் செய்தியின் முடிவில் இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல் ஆராதனைகளுக்குச் செல்கிறார்.
இந்தச் செய்தி வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில் மட்டும்) ஒலிபரப்பப்படும், மேலும் கடந்தகால வீட்டில் நடந்த இராபோஜன ஆராதனைகளில் நாம் செய்ததைப் போலவே ஆராதனையின் ஒழுங்கைப் பின்பற்றவும், இராப்போஜன ஆராதனையின் பாகத்தில் பியானோ இசையும் மற்றும் கால்களைக் கழுவும் போது சுவிசேஷ பாடல்களும் சேர்த்து ஒலிபரப்பப்படும். நாங்கள் ஜெபர்சன்வில் நேரப்படி, மாலை 5:00 மணிக்கு ஆராதனையைத் தொடங்குவோம். உங்களில் வெளிநாட்டில் இருப்பவர்கள், 2023-ம் ஆண்டு நள்ளிரவுக்கு முன் இராப்போஜனத்தை நடத்துவதற்காக, ஒலிநாடாவை இயக்கி, உங்கள் உள்ளூர் நேரப்படி இராப்போஜனத்தை நடத்துங்கள்.
நாம் இந்த 2023-ம் ஆண்டை முடித்து, 2024-ல் கர்த்தருக்கு ஒரு புதிய வருட ஆராதனையைத் தொடங்கலாம், அவருக்கு முன்பாக அமைதியாக இருப்பது, அவருக்காக மிகவும் பதறல் கொள்வது, அவருடைய இராபோஜனத்தில் பங்குகொள்வது, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பது மற்றும் மன்னிப்பது, அவருடைய பரிசுத்தவான்களின் பாதங்களை கழுவுதல், அவருடைய வார்த்தையைக் கேட்பது போன்ற ஒரு சிறந்த வழியைக் காட்டிலும் மேலானதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது என்னே ஒரு விஷேஷித்த மாலை நேரமாய் இருக்கும்.
இராப்போஜன திராட்சை ரசம் பெறுவதற்கான/ அப்பம் தயாரிப்பதற்கான வழிகளுக்கான இணைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இத்தகைய ஒரு புனிதமான சந்தர்ப்பத்தில் ஒன்றுபடுவதற்கு நமக்காக கர்த்தர் ஒரு வழியை அருளியிருக்கிறார் என்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் அவருடைய பந்தியில் சந்திக்க நான் நிச்சயமாகவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஏன் சிறிய பெத்லகேம்? 58-1228: என்ற கிறிஸ்துமஸ் செய்தியை நாம் கேட்போம்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 24, 2023
58-1228 ஏன் சிறிய பெத்லகேம்?பிற்பகல் 12.00 மணி. ஜெபர்சன்வில் நேரம்
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31, 2023
63-0901E பதறல்கள் / வீட்டில் இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல்மாலை 5:00. ஜெபர்சன்வில் நேரம்
அப்பம் சுடுவதற்கான / திராட்சை ரசம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்
இராப்போஜன திராட்சை ரசம் / கால் கழுவும் தொட்டிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்
தொடர்புடைய சேவைகள்
என்னுடைய அன்பான இனிய இருதயமே,
நான் என்னுடைய தூதன் மூலமாக உங்களிடம் பேசும்போது, நீங்கள் அனைவரும் என் சத்தத்தின் பேரில் ஒன்று கூடி, என் வார்த்தையைக் கேட்ப்பதை நான் காணும்போது, என் இருதயம் பொங்கி வழிகிறது.
உனக்கு நான் சத்தமாய் இருக்கும்படி தெரிந்துகொண்ட ஒருவரை குறித்த வெளிப்பாட்டை நீ பெற்றிருப்பதை அறிந்துகொள்வது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. தீர்க்கதரிசி உரைத்த ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பது, அவருடைய வார்த்தையாயில்லாமல், உனக்கு என்னுடைய வார்த்தையாகவே இருக்கிறது.
இது எனக்கு மிகவும் முக்கியமானதாயிருந்தது, நான் அதை உனக்காக பதிவுசெய்து சேமித்து வைத்திருந்தேன், எனவே நீ அதை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். என் இருதயத்திலிருந்து நான் கூறினதை நீ மறக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை. நாம் ஒன்று சேர்ந்திருக்கும்படியாக, உனக்குத் தேவையான பரிபூரண விசுவாசத்தை நான் உனக்கு வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்று எனக்குத் தெரியும்.
என் மணவாட்டியிடம் என் வார்த்தையைப் பேசவும் வெளிப்படுத்தவும் நான் எப்போதும் ஒரு மனிதனைப் பயன்படுத்தியுள்ளேன். நான் மோசேயுடன் செய்ததைப் போலவே. அவன் எதைக் கேட்டுக்கொண்டானோ, அதையே அவன் பெற்றுக்கொண்டான், ஏனென்றால் அவன் என் வார்த்தைகளை மட்டுமே பேசினான். நான் உன்னை ஒரு தேவனாக்குவேன் என்று, நான் அவனிடத்தில் கூட சொன்னேன். நீ ஒரு தேவனாய் இருப்பாய், ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். நான் உன்னுடைய சத்தத்தை உபயோகித்து, நான் உன்னோடு சிருஷ்டிப்பேன். நான் பேசுவேன், ஜனங்கள் அதை மறுதலிக்க முடியாது. நீ என்ன கூறினாலும், நடக்கும்.
இப்பொழுது நீ என்னுடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தைப் பெற்றுள்ளபடியால், நான் யாரை என் சத்தமாயிருக்க உனக்கு அனுப்பினேன் என்பதை நீ அடையாளங் கண்டுகொள்வது மட்டுமல்லாமல், என் வார்த்தை ஜீவிக்கிறது என்றும், உனக்குள் வாசம் செய்கிறது என்றும் உனக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது என்பதையும் நீ இப்பொழுது அடையாளங் கண்டு கொள்கிறாய்.
நீ யார் என்று உனக்குத் தெரியும். நீ என்னிலும், என் வார்த்தை உன்னிலும் நிலைத்திருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் என்று கேள்; அது உனக்கு கொடுக்கப்படும். என் நாமத்தினாலே நீ பிசாசுகளைத் துரத்துவாய்; நான் துரத்துவேன் என்றல்ல, நீ துரத்துவாய். நீ இந்த மலையிடம் சொன்னால்; நான் சொன்னால் என்று அல்ல, நீ இந்த மலையிடம் சொன்னால்.
உன்னுடைய சத்துருவுக்கு உன் மீது எந்த அதிகாரமும் இல்லை. நீயும் என் வார்த்தையும் ஒன்றாயுள்ளது. உன்னுடைய பிள்ளைகளோ அல்லது அன்புக்குரியவர்களோ இருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லாதிருந்தால், அவர்களை உரிமை கோரவும். இது உன் பேரில் கிரியை செய்திருந்ததானால், அப்பொழுது உன்னில் நிலைத்திருக்கும் என்னுடைய பரிபூரண வார்த்தையில் உள்ள உன்னுடைய பரிபூரண விசுவாசத்தைப் பயன்படுத்து, நீ கேட்பதை நீ பெற்றுக்கொள்ள முடியும்.
ஓ, நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்காக நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். என் வார்த்தையைக் கேட்பதனால் உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதைக் காண்பதற்கே. அந்த நேரம் இறுதியாக வந்துவிட்டது என்றே நான் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன்.
உனக்காக நான் பேசி, சேமித்து வைத்த அந்த பரிபூரண வார்த்தை இன்றைக்கு ஒவ்வொரு விசுவாசிக்கும் என்னுடைய அடையாளமாகும். அது பரிசுத்த ஆவி; இரத்தமோ, இராசயணமோ அல்ல, ஆனால் அது என்னுடைய பரிசுத்த ஆவி, என் வார்த்தை, உன்னில் ஜீவித்து, வாசம் செய்கிறது.
காட்டப்பட வேண்டிய அந்த அடையாளத்தின் வேளையோ சமீபத்துவிட்டது. இரவும் பகலும் நீ அடையாளத்தை உன்னோடு கொண்டு செல்ல வேண்டும்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் அல்ல, நீ எல்லா நேரத்திலுமே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க வேண்டும்.
அவர் அடையாளத்தை மாத்திரமே அங்கீகரிக்கின்றார். இதுவே இந்த மணி நேரத்தின் செய்தியாயுள்ளது! இதுவே இந்த நாளின் செய்தியாயுள்ளது, இதுவே இக்காலத்தின் செய்தியாயுள்ளது! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்!
அங்கு ஏராளமான செய்திகள் உள்ளன, ஆனால் என்னுடைய சத்தமே இந்த மணிநேரத்தின் செய்தியாயுள்ளது. நீ ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொண்டு, விசுவாசிக்க வேண்டும். இது சாயங்கால நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
நீங்கள் உலகம் முழுவதும், ஒலிநாடாக்களில் கேட்கிறீர்கள், இந்த மணிநேரத்துக்கான அடையாளம் இங்கே உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய ஒரு அடையாளம் உள்ளது, வேறு எந்த நேரத்திலும் அது வந்திருக்க முடியாது.... நீங்கள் இதைப் புரிந்துகொள்கிறீர்களா?
மணவாட்டிக்கான என்னுடைய செய்தியான அடையாளம் 63-0901M என்ற செய்தியை: நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, என்னுடைய மணவாட்டியோடு உங்களுடைய ஜீவியத்திற்கு என்னுடைய அடையாளத்தை பயன்படுத்த வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஆதியாகமம் 4:10
யாத்திராகமம் 12-வது அதிகாரம்
யோசுவா 12-வது அதிகாரம்
அப்போஸ்தலர் 16:31 / 19:1-7
ரோமர் 8:1
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 2:12 / 4:30
எபிரெயர் 6:4 / 9:11-14 / 10:26-29 / 11:37 / 12:24 / 13:8, 10-20
பரி. யோவான் 14:12
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பரிபூரண விசுவாச மணவாட்டியே,
நம்முடைய விசுவாசம் கேட்பதன் மூலம், வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது.
தீர்க்கதரிசி என்பது:
வார்த்தை மாம்சமானது! அல்லேலூயா! ஒரு பரிபூரண எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக உங்களை ஒரு பரிபூரண விசுவாசத்திற்கு கொண்டுவரும்படிக்கு, வார்த்தையானது மானிட மாம்சத்தில் சரீரப்பிரகாரமான அடையாளங்களினாலும், பொருள் ரீதியான அடையாளங்களினாலும், வேத பிரகாரமான அடையாளங்களினாலும் பரிபூரணமாக செயல்படுகிறது.
பரிபூரண விசுவாசத்தை நமக்கு கொடுக்கும்படிக்கு மானிட மாம்சத்தினூடாக அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி, ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் பேசுகிறதை மாத்திரமே கேட்பதனால் நாம் செய்யும்படி வார்த்தை என்ன கூறுகிறதோ அதையே நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்.
நீங்கள்…ஆவியானவர் கூறுகிறதைத் தவிர வேறு எதற்கும் உங்களுடைய செவிகள் செவிடாக உள்ளன. புரிகிறதா? "காதுள்ளவன் (கேட்கிறவன்), ஆவியானவர் சபைகளுக்கு கூறுகிறதை புரிந்துகொள்கிறான்”, கேட்கக்கூடிய நிலையமாக இருக்கிற ஒருவன், ஆவியானவர் சபைகளுக்கு சொல்கிறதை புரிந்துகொள்கிறான். புரிகிறதா?
நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து புரிந்துகொள்ளுகிற அவருடைய கேட்டக்கூடிய நிலையமாக இருக்கிறோம். அவர் நமக்கு கட்டளைகளை கொடுக்கிறபோது: “ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அதையேக் கூறுங்கள். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன், நீங்கள் என்னை உங்களுடைய மேய்ப்பன் என்று அழைக்கிறீர்கள், நீங்கள் நன்றாக கூறுகிறீர்கள், ஏனென்றால் நான் அவ்வண்ணமாகவே இருக்கிறேன்.” நாம் அவைகளை நிறைவேற்றுகிறோம். அவர் என்னவெல்லாம் கூறுகிறாரோ, அதில் எங்குமே ஒரு சந்தேகத்தின் நிழலும் கிடையாது. நாம் அதிலே தொடர்ந்து நடக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அதிலிருந்து நம்மை மாற்றக்கூடிய ஒருவரும் உலகில் இல்லை, நாம் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்கிறோம்.
இப்பொழுது நீங்கள் பரிபூரண விசுவாசத்திற்குள் வந்து கொண்டிருக்கிறீர்கள், பரிபூரண பரிபூரணம் தவறிப்போக முடியாது. அந்த விசுவாசம் ஒருபோதும் தவறிப்போகிறதில்லை.
நாம் இப்போது அவருடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டுள்ளோம். நாம் நம்மையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நாம் யோபுவைப் போல, எதற்கும் பயப்படவில்லை. நாம் பேதுருவைப் போல மிகப் பெரிய அலைகளைக் கண்டு பயமடைந்து தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கவில்லை. அந்த நாட்கள் முடிவுற்றுவிட்டன.
இப்பொழுது நமக்குள் ஜீவிக்கிற வாசம் செய்கிற அந்த பரிபூரண வார்த்தையையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் மணவாட்டியின் மூலக்கூறுகளுக்குள்ளாக வந்துகொண்டிருக்கிறோம். நாம் எடுத்துக் கொள்ளப்படும் நிலைக்குள்ளாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஜெபிக்கையில், நாம் கேட்டுக் கொள்கிறதை பெற்றுக்கொள்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறபோது, நாம் அதை பெற்றுக்கொள்வோம்; அது நமக்கு கொடுக்கப்படும். காலமோ, இடமோ, எதுவுமே அதை எப்போதுமே மாற்றாது. அது முடிந்துவிட்டது என்று நமக்குத் தெரியும். அது ஏற்கனவே முடிந்துவிட்டது. நமக்கு எப்படி தெரியும்? ஏனென்றால், அது நம்முடைய வார்த்தையல்ல, ஆனால் அவருடைய வார்த்தையே, அதாவது அவரே நமக்கு உரைத்து, கொடுத்திருக்கிறார். அதைப் பேசுவதற்கான அதிகாரமும், பரிபூரண விசுவாசமும் நமக்கு உண்டு.
இயேசு தமக்காக செய்ததைப் போலவே, நாம் யார் என்னும், நம்முடைய ஸ்தானத்தை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். அப்போது நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் விசுவாசம் வைப்பதேயாகும். நாம் என்னவாக இருக்கிறோம் என்று வார்த்தை கூறுகிறதில் விசுவாசம் வையுங்கள்! அப்பொழுது தேவனுடைய வார்த்தை நமக்குள் வந்து தம்மை வெளிப்படுத்துகிறது; ஏனென்றால் நாம் விசுவாசிகள். ஒரு விசுவாசி என்பது "நமக்குள் அசைவாடுகிற தேவனுடைய விசுவாசமே."
இப்பொழுது, நாம் அதே ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக, அவர் தமுடைய ஜனங்களில், பரிசுத்த ஆவியின் ரூபத்தில், அவர் மரித்து விடவில்லை என்பதை காண்பிக்கும்படிக்கு, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பிரகாசிக்க; அவளிடத்தில் காதல் கொண்ட படியால் தம்மை அவளுக்குள்ளாக ஊற்றி, தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அசைவாடுகிறபடியால், கடைசி நாளின் மேசியாக்களாகிறோம். அவர்கள் கல்யாண விருந்துக்காக ஒன்றாகிக் கொண்டு இருக்கிறார்கள்; அதே அடையாளங்கள் அதே தேவனால் வாக்களிக்கப்பட்டு அதே வார்த்தையில், தம்முடையதே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
அதை விசுவாசிப்பதை தவிர நமக்கு வேறெதுவும் விடப்பட்டிருக்கவில்லை; விசுவாசிப்பதன் மூலம் இது ஒரு பரிபூரண விசுவாசத்தை உருவாக்கும் உறுதியாயுள்ளது. அதை மீண்டும் கேளுங்கள், அதை விசுவாசிப்பதன் மூலம் பரிபூரண விசுவாசத்தை உண்டாக்குகிற உறுதியாய் அது இருக்கிறது.
உங்களுடைய சரீரத்தில் ஒரு வார்த்தையை சந்தேகிக்கும் தசைநார் உள்ளதா: இல்லை
நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்களா: ஆம்
அவர் இந்த செய்தியை குறித்த ஒரு வெளிப்பாட்டை உங்களுக்கு அளித்திருக்கிறாரா: ஆம்
மணவாட்டி மாத்திரமே அந்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றிருப்பாளா: ஆம்
நீங்கள் அவருடைய மணவாட்டி என்று உங்களுக்குத் தெரியுமா: ஆம்
ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதன் மூலம் அது உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தை அளிக்கும் என்று அவர் கூறினாரா: ஆம்
அப்படியானால் நீங்கள் பரிபூரண விசுவாச வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறீர்களே!!
ஓ கர்த்தாவே உமது வார்த்தையைக் கேட்க ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடும் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்களை ஆயத்தப்படுத்தும். எப்போதும் போல மீண்டும் எங்களையே நாங்கள் நோக்கிப் பாராமல், நீர் எங்களுக்காக உரைத்த உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும். மூன்றாம் இழுப்பு செயல்முறையில் உள்ளதை நாங்கள் கண்டுகொண்டு, அது எங்களுக்குள் வாசம் செய்கிறதையும் நாங்கள் அறிந்துகொள்ளுகிறோம். நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பேசி விசுவாசிக்க வேண்டும்.
நீர் உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டிக்காக சீக்கிரமாக வருகிறீர் என்பதை நாங்கள் அறிவோம். பிதாவே, எங்களுடைய தேவை என்னவாயிருந்தாலும், எங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும், நாங்கள் அதை பெற்றுக்கொள்வோம் என்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால் நீர் எங்களுக்காக ஏற்கனவே உரைத்திருக்கிற உம்முடைய வார்த்தையாக இது இருக்கிறது. அதை விசுவாசிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. பிதாவே நாங்கள் விசுவாசிக்கிறோம், நாங்கள் விசுவாசிக்கிறோம். இப்பொழுது நாங்கள் உம்முடைய வார்த்தையின் பேரில் செயல்படுவோமாக.
நாங்கள் எங்களுடைய எல்லா தோல்விகளையும், பாவங்களையும் மீறுதல்களையும் அறிக்கை செய்கிறோம். உம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற உம்முடைய குமாரனின் இரத்தத்தினூடாகவே நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் உம்முடைய மணவாட்டிக்குள் ஒரு மாற்றம் உண்டாகட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியை எங்கள் மீது ஊற்றி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.
வியாதியஸ்தர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் குணமடைவார்கள். பின்வாங்கிப்போனவர்கள் வார்த்தைக்கு திரும்பி வருவார்கள். உலகெங்கிலுமுள்ள உம்முடைய மணவாட்டி இன்றைக்காக உம்முடைய அருளப்பட்ட வழியைக் கண்டு விசுவாசிப்பாள்.
உங்கள் மீது கரங்களை வைக்கும்படிக்கு எந்த ஒருவரையும் நீங்கள் உடையவராயில்லையென்றால்… நீங்களே உங்கள் மீது கரத்தை வைத்துக்கொள்ளுங்கள்…நீங்கள் ஒரு விசுவாசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையாகிவிட்டீர்கள்; நீங்கள் வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் வார்த்தையாக மாறுகிறீர்கள்.
கர்த்தராகிய இயேசுவே வாரும், உம்முடைய வார்த்தையின் பிரசன்னத்தில் இருப்பதன் மூலம் உம்முடைய மணவாட்டி முதிர்ச்சியடைந்து, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். நாங்கள் உம்முடைய வார்த்தையால் அலங்கரிக்கப்பட்டு, உடுத்தப்பட விரும்புகிறோம்.
ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி,பரிபூரண விசுவாசம் 63-0825E: என்ற செய்தியில் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீர் பேசி எங்களுக்கு வெளிப்படுத்துவதை உம்முடைய மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்று கூடி கேட்கப்போகிறபடியால், முன் எப்போதும் இல்லாத வகையில் எங்களை அபிஷேகிக்க வாரும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மாற்கு 11:22-26 / 16:15-18
பரி. யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21