ஞாயிறு
22 டிசம்பர் 2024
60-1225
தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி

அன்புள்ள திருமதி. இயேசுவே,

ஓ தேவாட்டுக் குட்டியே, நீர் உலகத்திற்கு தேவனுடைய மகத்தான சுற்றப்பட்ட வெகுமதியாய் இருக்கிறீர். எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியாக உம்மையே நீர் எங்களுக்கு அளித்திருக்கிறீர். நீ முதல் நட்சத்திரத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் பூமியை, சந்திரனை, சூரிய குடும்பத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் எங்களை அறிந்து, உம்முடைய மணவாட்டியாக இருக்கும்படி எங்களை தெரிந்து கொண்டீர்.

நீர் எங்களை அப்பொழுது கண்டபோது, நீர் எங்களை நேசித்தீர். நாங்கள் உம்முடைய மாம்சத்தின் மாம்சமும், உம்முடைய எலும்பின் எலும்புமாயிருந்தோம்; நாங்கள் உம்முடைய ஒரு பாகமாக இருந்தோம். நீர் எப்படியாய் எங்களை நேசித்து, எங்களோடு ஐக்கியம் கொள்ள விரும்பினீர். நீர் உம்முடைய நித்திய ஜீவனை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினீர். நாங்கள் உம்முடைய திருமதி. இயேசுவாய் இருப்போம் என்பதை அப்பொழுதே நாங்கள் அறிந்து கொண்டோம்.

நாங்கள் தவறிப் போவோம் என்பதை நீர் கண்டீர், எனவே எங்களை திரும்பவும் மீட்டெடுக்க ஒரு வழியை நீர் அளிக்க வேண்டியதாயிருந்தது. நாங்கள் இழக்கப்பட்டு நம்பிக்கையற்றவர்களாக இருந்தோம். ஒரே ஒரு வழி இருந்தது, நீர் ஒரு “புது சிருஷ்டியாக” வேண்டியதாயிருந்தது. தேவனும் மனிதனும் ஒன்றாக மாறவேண்டியதாயிருந்தது. நாங்கள் உம்மைப் போலாகும்படிக்கு நீர் எங்களைப் போலாக வேண்டியதாய் இருந்தது. இவ்வாறு, நீர் ஏதேன் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உம்முடைய பெரிய திட்டத்தை செயல்படுத்தினீர். உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியான எங்களுடன் இருக்க நீர் மிகவும் வாஞ்சித்தீர், ஆனால் ஆதியிலே இழக்கப்பட்டிருந்த யாவற்றையும் நீர் எங்களுக்கு மீண்டும் திரும்பளிக்க வேண்டியதாய் இருந்தது என்பதை முதலில் நீர் அறிந்திருந்தீர். நீர் உம்முடைய திட்டத்தை முடிக்க இந்நாள் வரை காத்துக் கொண்டேயிருந்தீர்.

அந்த நாளானது வந்துவிட்டது. நீர் ஆதியில் கண்ட அந்த சிறிய குழு இங்கே உள்ளது. எல்லாவற்றைக் காட்டிலும் உம்மையும் உம்முடைய வார்த்தையையும் உம்முடைய இனிய இருதயம் நேசிக்கிறாள்.

நீர் ஆபிரகாமுடன் செய்தது போல, நீர் ஒரு புது சிருஷ்டியானபோது செய்தது போல, இது நீர் மானிட மாம்சத்தில் வந்து உம்மையே வெளிப்படுத்த வேண்டிய நேரமாயிருந்தது. உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த உம்முடைய மகத்தான எல்லா இரகசியங்களையும் நீர் எங்களுக்கு வெளிப்படுத்தும்படியாக இந்த நாளுக்காக நீர் எவ்வளவாய் வாஞ்சித்திருந்தீர்.

நீர் உம்முடைய மணவாட்டியைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறீர். நீர் எப்படி அவளைக் காண்பித்து சாத்தானிடம், “நீ அவர்களுக்கு என்ன செய்ய முயற்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் அசைய மாட்டார்கள்; அவர்கள் என் வார்த்தை, என்னுடைய சத்தத்தின் பேரில் சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் என்னுடைய பரிபூரண வார்த்தை மணவாட்டி” என்று சொல்ல விரும்புகிறீர். அவர்கள் எனக்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாகவும் என்னுடைய வார்த்தைக்கு உண்மையாய் தரித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு நித்திய வெகுமதியை கொடுப்பேன். எனக்கு இருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுக்கிறேன். நாங்கள் ஒன்றாக இருப்போம்.

நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம், “இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை எங்களுடைய வீட்டுக்குள் வரவேற்போமாக. நாங்கள் உமக்கு எண்ணெய் பூசி, உம்முடைய பாதங்களை எங்களுடைய கண்ணீரால் கழுவி, அவைகளை முத்தம் செய்வோம். நாங்கள் எப்படியாய் உம்மை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உமக்கு சொல்வோமாக.”

எங்களுக்கு இருக்கிற எல்லாவற்றையும், நாங்கள் இயேசுவே உமக்கு அளிக்கிறோம். அதுவே உமக்கு எங்களுடைய வெகுமதியாய் உள்ளது. நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை போற்றுகிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசுவை உங்களுடைய வீட்டில், உங்களுடைய சபையில், உங்களுடைய காரில், நீங்கள் எங்கே இருந்தாலும், மனிதனுக்கு எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியான: தேவன் தாமே பேசி உங்களோடு ஐக்கியங்கொள்ளுகிறதை பெற்றுக் கொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

60-1225 தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி