காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 12 அக்டோபர், 2024

அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,

உலகம் முழுவதும் மணவாட்டிக்குள் என்ன நடக்கிறது? நாம் ஆவிக்குள்ளாகி, எழும்பி, "மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிடுகிறோம். தேவன் நம்மை கொண்டு சென்று தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய ஜீவியங்களில் நாம் படித்துள்ள, கேட்டுள்ள காரியங்கள் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரு மகத்தான உயிர்ப்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் வார்த்தையால் பிரகாசிக்கப்படுகிறோம்.

அதை நாம் நம்முடைய ஆத்துமாவின் ஆழத்தில் உணர்கிறோம். ஏதோ காரியம் வித்தியாசமாக இருக்கிறது. ஏதோ காரியம் சம்வித்துக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிப்பதையும், நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் அவருடைய வார்த்தையால் நிரப்புவதையும் நாம் உணர்கிறோம்.

அவர் நம்மிடம் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது: சத்துரு உங்களுடன் முன் எப்போதும் இல்லாத வகையில் சண்டையிடுகிறான் என்பதை நான் அறிவேன், ஆனால் சிறுபான்மையோரே பயப்படாதீர்கள், நீங்கள் என்னுடையவர்கள். என் அன்பையும், தைரியத்தையும், திறனையும் உங்களுக்குத் தருகிறேன். வார்த்தையை மட்டும் பேசுங்கள், நான் அதை நிறைவேற்றுவேன். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் நம்முடைய மகத்தான படிப்பாய்வில், அவர் நமக்கு அடுத்து என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்று ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். அவருடைய வார்த்தையே நமக்கு ஒரே அடைக்கலம், சமாதானம் மற்றும் ஆறுதல். நாம் மிகுந்த ஆர்வங் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்கிறோம். நாம் படிக்கும் ஒவ்வொரு பத்தியிலும், வார்த்தை நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படும்போது கூச்சலிட்டு ஆர்ப்பரிக்க விரும்புகிறோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் மணவாட்டியின் மீது வந்து நம்முடைய ஆத்மாக்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கற்பனை செய்து பாருங்கள், உலகில் நீங்கள் செல்லக்கூடிய வேறு எந்த இடமும் இல்லை, ஆனால் தேவனுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதையும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்பது உங்களுடைய விரல் நுனியில் இருக்கிறது.

தேவன் எப்படி திரையை நீக்கி, அதை பின்னிட்டு இழுத்து, ஒவ்வொரு சபைக் காலமும் என்ன செய்யப் போகிறது என்பதைப் யோவான் பார்க்க அனுமதித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி நமக்கு அனுப்பினார். அதன்பின்னர், காலம் நிறைவேறின போது, அதை பேசவும், அதன் அர்த்தம் என்ன என்பதை வெளிப்படுத்தவும் தேவன் தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனை நமக்கு அனுப்பினார்.

யோவான் தான் கண்டதை எழுதினானேயன்றி, அதனுடைய அர்த்தத்தை அறிந்திருக்கவில்லை. இயேசுவானவர் பூமியில் இருந்தபோது, அவரும் கூட அதை அறிந்திருக்கவில்லை. எல்லா காலத்தினருக்குமே, இந்த நேரம், இந்த ஜனங்கள், அவருடைய மணவாட்டியான, நமக்கும் எவருக்குமே இந்த நாள் வரைத் தெரியாது.

அந்த ஏழு விளக்குகளும் அந்த பிரதான கிண்ணத்தின் வளங்களிலிருந்து ஜீவனையும் ஒளியையும் ஈர்த்துக் கொண்டிருந்தன என்பதை அவர் நமக்கு எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் திரிகளை அதில் எப்படி தோய்த்து வைத்திருந்தனர் என்பதை அவர் நமக்குச் சொன்னார். ஒவ்வொரு சபைக் கால தூதனும் தன்னுடைய திரியை கிறிஸ்துவுக்குள் மூழ்கி பரிசுத்த ஆவியைக் கொண்டு அக்கினியாய் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக் கொண்டு, அந்த ஒளியை சபைக்கு அளித்தனர். இப்போது, தேவனுக்குள் கிறிஸ்துவோடு ஒரு மறைக்கப்பட்டிருந்த ஜீவியத்தின் மூலம் நம்முடைய கடைசி கால செய்தியாளர், எல்லா தூதர்களிலும் மிகப் பெரியவர், அதே ஜீவனையும் அதே ஒளியையும் வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு தூதனும் அங்கு சித்தரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நம்மில் ஒவ்வொருவரும் கூட தேவனுடைய உண்மையான விசுவாசிகள் என்று நம்முடைய பலமுள்ள தூதன் கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் கூட அங்கு வியத்தகு முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் தூதர்களின் அதே மூல ஆதாரத்திலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரே கிண்ணத்தில் மூழ்கப்பட்டிருக்கிறோம். நாம் நமக்கே மரித்திருக்க, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நம்முடைய ஜீவன்கள் மறைந்திருக்கின்றன.

தேவனுடைய கரத்திலிருந்து எந்த மனிதனும் நம்மைப் பறிக்க முடியாது என்று கூறுவதனால் அவர் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறார். நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. நம்முடைய காணக்கூடிய ஜீவியம் எரிந்து பிரகாசித்து, ஒளியை அளித்து, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தல்களாய் இருக்கின்றன. நம்முடைய உள்ளார்ந்த, காணக்கூடாத ஜீவன் தேவனுக்குள் மறைக்கப்பட்டு கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்படுகிறது.

யுத்தங்கள் கடுமையானவை. சத்துரு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கி எழுந்து, நம்மை திடனற்றுப் போகச் செய்யவும், நம்மை வீழ்த்தவும் அவனால் முடிந்தவரை முயற்சி செய்கிறான், ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது. தேவன் தாமே மனித உதடுகள் மூலம் நம்மிடம், நாம் அவருடைய மணவாட்டி என்றும், எவர்களை அவர் தெரிந்து கொண்டாரோ, அவர்கள் பிசாசை ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

நம்முடைய பரிபூரண கர்த்தர், தம்முடைய பரிபூரண வார்த்தையைப் பேசி, தம்முடைய பரிபூரண சமாதானத்தை, தம்முடைய பரிபூரண மணவாட்டிக்குத் தருகிறார்.

எப்பொழுதும் போல, மணவாட்டிக்காக சேமித்து பாதுகாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியின் பிரதான கிண்ணத்தில் தங்கள் திரியை நனைக்கும்படி உலகத்தை நாங்கள் அழைக்கிறோம். பத்மு தீவு 60-1204E என்ற செய்தியில் என்ன சம்பவித்தது என்பதை தேவனுடைய சத்தம் பேசி வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கும் போது, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, நாங்கள் சத்தமிட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருப்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 5 அக்டோபர், 2024

அன்புள்ள தேவனுடைய தகர்க்கப்பட முடியாத சேனையே,

பிதாவானவர் தெரிந்து கொண்டு, தம்மைப் பற்றிய உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்துள்ள நாமே; அவருடைய ஒரே ஒரு உண்மையான சபை. அவருடைய பெரிய கிரியைகளைச் செய்ய அவர் தெரிந்து கொண்டவர்கள். ஏனெனில், அவருடைய ஆவியின் மூலம், சாத்தானின் அந்திக்கிறிஸ்து ஆவியை நாம் பகுத்தறிந்து எதிர்த்து நிற்க முடியும். அவன் நமக்கு முன் வல்லமையற்றவனாக இருக்கிறான், ஏனென்றால் நாம் அவருடைய தகர்க்கப்பட முடியாத சேனை.

சாத்தான் எல்லா வெளிப்பாட்டையும் வெறுக்கிறான், ஆனால் நாம் அதை விரும்புகிறோம்; ஏனென்றால் நாம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை விரும்புகிறவர்கள். நம்முடைய ஜீவியங்களில் உள்ள அவருடைய உண்மையான வெளிப்பாடு மூலம், பாதாளத்தின் வாசல்கள் நமக்கு எதிராக மேற்கொள்ள முடியாது; நாம் சத்துருவை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பிசாசும் நம்முடைய காலடியில் இருக்கிறது. நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம், நாம் அவருடைய வார்த்தையாக இருப்பதால், வார்த்தையைப் பேச முடியும்.

ஏழு சபைக் காலங்களை நாம் படிக்கவும் கேட்கவும் வேண்டும் என்று கர்த்தர் என் இருதயத்தில் உணர்த்தினார். இது நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய விசேஷித்த வாரங்களாக இருக்கப் போகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அவருடைய ஜெயங்கொள்ளும் வல்லமையால் அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவார்.

இப்போதே அந்த நேரம். இப்போதே அந்தக் காலம். அவர் வெளிப்பாட்டின் மூலம் நமக்கு ஊக்கமளித்து, நம்மை உற்சாகப்படுத்தி, நம்மை உயிர்ப்பிப்பார், அது நம்முடைய ஆத்துமாக்களை அனல் மூட்டச் செய்யும்!!

இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பது ஒரு தீர்க்கதரிசன புத்தகம், இது ஒரு தீர்க்கதரிசன நுண்ணறிவு கொண்ட ஒரு குறிப்பிட்ட வகுப்பினரான, அவருடைய மணவாட்டியாகிய, நம்மால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர் தெரிந்து கொண்ட தூதனாகிய செய்தியாளனிடமிருந்து வரும் தேவனுடைய சத்தத்தை நீங்கள் படிக்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்பதை அறிய உண்மையான வெளிப்பாடு தேவைப்படுகிறது, இது நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிவுறுத்தலை வழங்குகிறது.

இது எல்லா காலங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களுக்காக யோவானுக்கு கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. முழு வேதாகமத்திலுமே ஒரு எழுத்தாளருக்கு தனிப்பட்ட முறையில் தோன்றியதன் மூலம் இயேசுவால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுதான்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:1-2, “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.

தேவனால் தாமே எழுதப்பட்ட தேவனுடைய சிந்தனைகளைக் கொண்ட புத்தகமே வெளிப்படுத்தின விசேஷமாகும். ஆனால் அவர் தம்முடைய தூதன் மூலம் தம்முடைய ஊழியக்காரரான யோவானுக்கு அதை அனுப்பி வெளிப்படுத்தினார். யோவானுக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை; அவன் கண்டதையும், கேட்டதையும் எழுதினான்.

ஆனால் இன்றைக்கு, தேவன் தம்முடைய மணவாட்டிக்கு இந்த மாபெரும் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக தம்முடைய வல்லமையுள்ள தூதனை பூமிக்கு அனுப்பினார், எனவே எல்லா சபைக் காலங்களிலும் என்ன நடந்தது என்பதை நாம் படிக்கவும் கேட்கவும் முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் வார்த்தைக்கு உண்மையாகவும் உத்தமமாகவும் தரித்திருந்த அவருடைய சிறிய மந்தையை நாம் காணலாம்.

தேவன் தம்முடைய தூதன் மூலம் பேசி, இந்த கடைசி நாட்களில், அவருடைய ஏழாம் சபைக் கால தூதனின் சத்தம் முழங்கத் தொடங்கும் போது, பவுலுக்கு வெளிப்படுத்தினது போல தேவனுடைய இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார் என்று கூறினார். அந்த தீர்க்கதரிசியை அவருடைய நாமத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அந்த தீர்க்கதரிசியின் ஊழியத்தின் நன்மைகளைப் பெறுவார்கள்.

மகிமை, அந்த தீர்க்கதரிசியை அவருடைய சொந்த நாமத்தில் ஏற்றுக்கொண்ட தேவனுடைய இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும் மணவாட்டியாய் நாம் இருந்து கொண்டு. நன்மை பயக்கும் விளைவைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இது தேவனுடைய சத்தம் பேசி அவருடைய மணவாட்டியை வழிநடத்துவதாக நாம் விசுவாசிக்கிறோம்.

ஓ சபையே, வரும் வாரங்களில் நாம் என்ன படிக்கப் போகிறோம், கேட்கப் போகிறோம். அவருக்கு, நாம் அவருடைய பசும் பொன்னுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறோம். அவர் என்னவாக இருக்கிறாரோ, நாமும் அவ்வாறே இருக்கிறோம். நாம் அவருடைய உண்மையான திராட்சை செடி. நாம் ஜெயங்கொண்டுள்ளோம். நாம் பரிபூரணப்படுத்தப்பட்டு, ஸ்திரப்பட்டு, பலப்படுத்தப்பட்டுள்ளோம். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட அன்பால் தெரிந்து கொள்ளப்பட்டோம். பயப்பட ஒன்றுமில்லை. செய்தியாளரையும், அவருடைய செய்தியையும் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஜீவிக்கிற குழுவாய் நாம் இருக்கிறோம்.

ஒவ்வொரு வாரமும் நாம், “அவர் வழியில் தம்முடைய வார்த்தையைப் பேசி, வெளிப்படுத்துகிறபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிகிறதல்லவா,” என்று கூறிக்கொண்டே இருப்போம்.

நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உணரவும், தேவனுடைய வார்த்தையின் அதிக வெளிப்பாட்டைப் பெறவும் விரும்பினால், குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து முதிர்ச்சிடையவும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை பெறவும் விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் 60-1204M என்ற செய்தியின் பேரிலான எங்களுடைய மகத்தான ஆய்வினை நாங்கள் துவங்கும்போது எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் கேட்ட அத்தியாயத்தை, சபைக் காலப் புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் கேட்கும்படிக்கு அல்லது படிக்கும்படிக்கு உங்களை ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.

 

 

சனி, 28 செப்டம்பர், 2024

அன்புள்ள விசுவாசத் திறவுகோலை வைத்திருப்பவர்களே,

“நான் ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல். நானே வழி, ஒரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவின் இடத்தில் வரான். நான் எல்லா காரியங்களுக்கும் வாசலாய் இருக்கிறேன், விசுவாசமே நீங்கள் நுழையும் வாசலைத் திறக்கிற திறவுகோலாயுள்ளது.

இந்த திறவுகோலை வைத்திருக்கும் கரம் ஒன்று மாத்திரமே உள்ளது, அது விசுவாசத்தின் கரமாகும். தேவனுடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் திறக்கும் ஒரே திறவுகோல் விசுவாசம் மாத்திரமேயாகும். அவருடைய முடிக்கப்பட்ட கிரியைகளில் உள்ள விசுவாசமே தேவனுடைய ராஜ்யத்தின் உட்புறத்தில் உள்ள ஒவ்வொரு பொக்கிஷத்திற்கும் ஒவ்வொரு வாசலையும் திறக்கிறது. விசுவாசம் என்பது அவருடைய மணவாட்டிக்காக ஒவ்வொரு வாசலையும் திறந்து கொண்டிருக்கின்ற தேவனுடைய மகத்தான நிகர் ஒத்த திறவுகோலாகும். அந்த திறவுகோலை நாம் நம்முடைய விசுவாசத்தின் கரத்தில் வைத்திருக்கிறோம்.

அந்த விசுவாச திறவுகோல் நம்முடைய இருதயங்களில் உள்ளது, எனவே நாம், “இது தேவனுடைய வார்த்தை; இது நமக்கான தேவனுடைய வாக்குத்தத்தங்கள், நாம் அந்த திறவுகோலை வைத்திருக்கிறோம்” என்று கூறுகிறோம். அது மட்டுமல்லாமல் நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு துளி விசுவாசத்துடனும், ஒரு துளியும் சந்தேகிக்காமல், நமக்கிடையே நிற்கிற ஒவ்வொரு வாசலையும், நமக்காக தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் நாம் திறக்கிறோம். இது அக்கினியின் உக்கிரத்தை அவிக்கிறது. இது சுகவீனத்திற்கான சுகமளித்தலைத் திறக்கிறது. இது நம்முடைய இரட்சிப்பைத் திறக்கிறது. நாம் வாசலண்டை வந்திருக்கிறோம், நாம் வார்த்தையினாலாவது அல்லது கிரியையினாலாவது எதைச் செய்தாலும், நாம் அதை அவருடைய நாமத்தில் செய்து, நாம் விசுவாச திறவுகோலை உடையவராய் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், இது வேதத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திறவுகோலாயிருக்கிறது.

யார் என்ன நினைத்தாலும் நாம் கவலைப்படுவதில்லை, நிச்சயமாகவே ஒரு காரியம் உண்டு: தேவன் நம்மை அழைத்தார், நம்மை முன்குறித்தார், நமக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தினார், நாம் யாராக இருக்கிறோம் என்பதை நமக்கு சொன்னார், அவருடைய வார்த்தையைப் பின்பற்ற நாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் அவர் நம்மை அவருடைய மணவாட்டியாயிருக்க அழைத்திருக்கிறார்.

பிதாவானவர் தனது ஏழு நட்சத்திரங்களையும், ஏழு தூதர்களையும், ஏழு காலங்களையும் தனது கையில் வைத்திருந்தார். அவர் அவைகளை தம்முடைய கரத்தில் பிடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் அவை அவருடைய வல்லமையுடன் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைத்தான் கரமானது குறிக்கிறது. அது தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது! தேவனுடைய அதிகாரம்.

நாம் அவருடைய வார்த்தையை நம்முடைய விசுவாசத்தின் கரத்தில் வைத்துக் கொண்டிருப்பது, தேவனுடைய வல்லமையும், அதிகாரமும் நம்முடைய கரத்தில் இருப்பதைக் குறிக்கிறது, நமக்குத் தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்குமான ஒவ்வொரு வாசலையும் திறக்க அவர் நமக்கு திறவுகோலைக் கொடுத்துள்ளார். இது ஒவ்வொரு வாசலையும் திறக்கும் முதன்மையான திறவுகோலாகும்.

தேவன் ஏன் நமக்கு ஒவ்வொரு கையிலும் 5 விரல்களைக் கொடுக்கிறார் என்பது இப்போது எனக்குத் தெரியும். 4 அல்ல, 6 அல்ல, 5, எனவே ஒவ்வொரு முறையும் நம் கைகளைப் பார்க்கும் போது, ஒவ்வொரு வாசலையும் திறக்கும் விசுவாசத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

இது மனித இனத்திற்கு ஒரு நித்திய அடையாளமாயிருக்கிறது, எனவே நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்; எப்பொழுதும் நினைவில் வைத்து தைரியமாக இருப்போம், அந்த விசுவாசத்தை நம்முடைய கரங்களில் வைத்திருக்கிறோம். அவர் நம்முடைய கடுகளவு விசுவாசத்தை உயர்த்தி, அவருடைய மகத்தான விசுவாசத்தை அவருடைய ஒருபோதும் தவறிப்போகாத, ஒருபோதும் தவறிப் போக முடியாத நித்திய வார்த்தையில் நமக்கு அளிக்கிறார்!!!

நாம் பரலோகத்திற்கு நம்முடைய கைகளை உயர்த்தி, ஒவ்வொரு கரத்திலும் 5 விரல்களை விரித்து, அவரிடம், "பிதாவே, நீர் பேசின ஒவ்வொரு வார்த்தையிலும் விசுவாசமுடையவர்களாய் இருந்து நாங்கள் விசுவாசிக்கிறோம். இது உம்முடைய வாக்குத்தத்தம், உம்முடைய வார்த்தை, நாங்கள் அப்படியே விசுவாசிப்போமானால் எங்களுக்கு தேவைப்படுகிற விசுவாசத்தை நீர் எங்களுக்கு அளிப்பீர்…நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று கூறுகிறோம்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நம்மிடம் இராப்போஜன ஆராதனை இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை காலை உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களுடைய சபையோடு, குடும்பத்தினரோடு அல்லது தனித்தனியாகக் கேட்க ஒரு செய்தியைத் தேர்வுசெய்ய உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். நம்முடைய விசுவாசத்தை மதிப்பிடுவதற்கு, வார்த்தையைக் கேட்பதை விட சிறந்த வழி உண்மையாகவே எதுவுமில்லை; ஏனென்றால், விசுவாசம் கேட்பதால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதால் வருகிறது, அந்த வார்த்தை தீர்க்கதரிசியிடம் வந்தது.

நாம் அனைவரும் 62-1007 வாசலுக்குத் திறவுகோல் என்ற செய்தியைக் கேட்க, (உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில்) மாலை 5:00 மணிக்கு ஒன்று சேருவோமாக. அறிவித்தபடி, இதை ஒரு விசேஷித்த இராப்போஜன ஆராதனையாக்க நான் விரும்புகிறேன், இது மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பப்படும், (ஜெபர்சன்வில் நேரம்). இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கம் செய்து இயக்கலாம்: இங்கே இணைப்பு.

கடந்த காலத்தில் மற்ற வீட்டு இராப்போஜன ஆராதனைகளைப் போலவே, ஒலிநாடாவின் முடிவில் சகோதரன் பிரான்ஹாம் அப்பம் மற்றும் திராட்சை ரசத்திற்காக ஜெபம் செய்வார். இராப்போஜன ஆராதனைப் பகுதியை நீங்கள் முடிப்பதற்கான பல நிமிடங்களுக்கு இசைப்பேழையின் இசை இருக்கும். பிறகு, சகோதரன் பிரான்ஹாம் பாதங்களைக் கழுவுதல் தொடர்பான வேதவசனத்தை வாசிப்பார், அவருடைய வாசிப்பைத் தொடர்ந்து பாதங்களைக் கழுவும் ஆராதனைப் பகுதியை நீங்கள் முடிப்பதற்கு நற்செய்தி பாடல்கள் பல நிமிடங்கள் தொடரும்.

நம்முடைய வீடுகளிலோ, சபைகளிலோ, அல்லது நீங்கள் எங்கிருந்தாலும், நம் ஒவ்வொருவரோடும் போஜனம் பண்ணும்படி, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை அழைப்பதில் நாம் என்ன ஒரு சிலாக்கியத்தை உடையவர்களாக இருக்கிறோம். நீங்கள் அவரண்டை பேசும்போது எனக்காக ஜெபியுங்கள், நான் உங்களுக்காக நிச்சயமாக ஜெபித்துக் கொண்டிருப்பேன்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

திங்கள், 23 செப்டம்பர், 2024

சகோதர சகோதரிகளே,

கர்த்தருக்குச் சித்தமானால், இந்த ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 29 ஆம் தேதி, மற்றொரு இராப்போஜனத்தையும், பாதங்களைக் கழுவுதல் ஆராதனையையும் நாங்கள் நடத்த விரும்புகிறோம். நாம் கடந்த காலத்தில் செய்தது போல், மாலை 5:00 மணிக்கு, உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில். தொடங்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். அப்போஸ்தலர்கள் ஒன்று கூடும் ஒவ்வொரு முறையும் இராப்போஜனம் உண்டு என்று சகோதரன் பிரான்ஹாம் சொன்னாலும், அவர் அதை மாலையில் புசிக்க விரும்பினார், மேலும் அதை கர்த்தருடைய இராப் போஜனம் என்று குறிப்பிட்டார்.

செய்தி மற்றும் இராப்போஜன ஆராதனை வாய்ஸ் ரேடியோவில் இருக்கும், மேலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வாய்ஸ் ரேடியோவைஅணுக முடியாதவர்களுக்கு பதிவிறக்கம் செய்யக்கூடிய கோப்பிற்கான இணைப்பும் இருக்கும்.

ஜெஃபர்சன்வில் பகுதியில் உள்ள விசுவாசிகளுக்கு, மீண்டும் இராப்போஜன திராட்சை ரசம் கிடைக்கும். இடம், நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கர்த்தர் நமக்கு விட்டுச்சென்ற இந்த விலையேறப்பெற்ற நியமத்தை நாம் கடைப்பிடிக்க நான் நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராஜாதி ராஜா உள்ளே வருவதற்காக நம்முடைய வீடுகளை ஆயத்தம் செய்வதும், நம்முடைய இருதயங்களைத் திறப்பதும், அவருடைய பந்தியில் நம்மோடு போஜனம்பண்ணுவது நமக்கு என்ன ஒரு சிலாக்கியம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப்



அப்பம் சுடுதல் / திராட்சை ரசம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்

இராப்போஜன திராட்சை ரசம் / பாதங்களைக் கழுவுவதற்கான தொட்டிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்



 

 

சனி, 21 செப்டம்பர், 2024

அன்புள்ள தேவனின் தன்மையே,

நாம் நம்முடைய பரலோகப் பிதாவின் அதே தன்மையாயிருக்கிறோம்; ஏனென்றால், நாம் ஆதியில் அவருக்குள் இருந்தோம். நமக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நாம் அங்கே அவருடன் இருந்தோம், அவர் நம்மை அறிந்திருந்தார். அவர் நம்மை மிகவும் நேசித்தார், அவர் நம்மை மாம்சமாக்கினார், அதனால் அவர் நம்மோடு தொடர்பு கொள்ளவும், நம்முடன் பேசவும், நம்மை நேசிக்கவும், நம்முடைய கரங்களை குலுக்கும் கூட முடிந்தது.

ஆனால் சாத்தான் வந்து, தேவனுடைய மூல வார்த்தையையும், அவருடைய ராஜ்யத்தையும், நமக்கான அவருடைய திட்டத்தையும் தாறுமாறாக்கினான். அவன் ஆண்களையும் பெண்களையும் திரித்து, நாம் வாழும் இந்த உலகத்தை தாறுமாறாக்கி, கைப்பற்றும் நோக்கத்தில் ஈடேறினான். அவன் பூமியைத் தன்னுடைய ராஜ்யமாகவும், அவனுடைய ஏதேன் தோட்டமாகவும் ஆக்கிக்கொண்டான்.

இது எப்போதும் இருந்து வந்ததிலேயே மிகவும் வஞ்சகமானதும், நம்பிக்கை துரோகமுமான வேளையாயுள்ளது. பிசாசு தன்னால் இயன்ற ஒவ்வொரு தந்திரமான பொறியையும் அமைத்துள்ளான்; ஏனென்றால் அவன் பெரிய வஞ்சகனாயிருக்கிறான். கிறிஸ்தவன் எந்தக் காலத்திலும் இருந்ததை விட இன்றைக்கு அவன் அதிக விழிப்புடன் ஆயத்தமான நிலையில் இருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில், இது எல்லா காலங்களிலும் மிகவும் மகிமை வாய்ந்தது, ஏனென்றால் நாம் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய ஏதேன் தோட்டம் விரைவில் வரப்போகிறது, அங்கு நாம் பரிபூரண அன்பையும், தேவனுடைய அன்பைப் பற்றிய பரிபூரண புரிந்து கொள்ளுதலையும் பெறுவோம். நித்தியம் முழுவதும் நம்முடைய ஏதேனில் நாம் அவருடன் ஜீவனோடும், பாதுகாப்பாகவும் இருப்போம்.

இந்த நாளில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்தேயு 24-ல் இயேசு நமக்குச் சொன்னார். இது எப்போதும் ஜீவித்ததிலேயே மிகவும் வஞ்சனையான நாள் என்றும், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அது மிக நெருக்கமாய் இருக்கும்”; என்றும் அவர் நம்மை எச்சரித்தார். ஏனென்றால், பிசாசின் தந்திரம் அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாதபோது, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று மக்களை நம்ப வைக்கும்.

ஆனால் இந்தக் காலம் வஞ்சிக்காத, வஞ்சிக்கப்பட முடியாத அவருடைய தூய வார்த்தை மணவாட்டியையும் கூட அளிக்கும்; ஏனென்றால் அவர்கள் அவருடைய மூல வார்த்தையுடன் தரித்திருப்பார்கள்.

யோசுவாவும் காலேபும் போலவே, நம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவர்களுடையது போலவே கண்முன்னே வருகிறது. யோசுவா என்றால், "யெகோவா-இரட்சகர்" என்று நம்முடைய தீர்க்கதரிசி கூறினார். பவுல் மூல முதலான தலைவராக வந்ததைப் போலவே, சபைக்கு வரும் கடைசி-கால தலைவரை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

யோசுவாவுடன் உண்மையாக இருந்தவர்களை காலேப் பிரதிநிதித்துவப்படுத்தினான். இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவன் தம்முடைய வார்த்தையான ஒரு கன்னியாக அவர்களிடத்தில் தொடங்கினார்; ஆனால் அவர்கள் வேறு ஒன்றை விரும்பினர். நம்முடைய தீர்க்கதரிசி, "இந்த கடைசி கால சபையும் அவ்வண்ணமே செய்கிறது" என்று கூறினார். எனவே, தேவன் இஸ்ரவேலை அவருடைய சொந்த நியமிக்கப்பட்ட நேரம் வரும்வரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஜனங்கள் தங்களுக்கு தேவன் அளித்த தலைவரான யோசுவா மீது அழுத்தம் கொடுத்து, “தேசம் நம்முடையது, நாம் போய் அதை கைப்பற்றிக் கொள்வோம். யோசுவா, நீ எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டாய், நீ உன்னுடைய கட்டளையை இழந்துவிட்டிருக்க வேண்டும். உன்னிடத்தில் முன்பிருந்த வல்லமை உன்னிடத்தில்லை. நீ முன்பு தேவனிடத்தில் கேட்டு, தேவனுடைய சித்தத்தை அறிந்து, துரிதமாக செயல்படுவாய். உன்னோடு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது” என்று கூறினர்.

யோசுவா தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் தேவனுடைய வாக்குத்தங்களை அறிந்திருந்தான். நம்முடைய தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்:

“யோசுவா வார்த்தையோடு நிலைத்திருந்ததால், தேவன் முழுத் தலைமையையும் அவனுடைய கரங்களில் ஒப்படைத்தார். தேவனால் யோசுவாவை நம்ப முடிந்ததேயன்றி மற்றவர்களை அல்ல. எனவே இந்த கடைசி நாளில் அது மீண்டும் நிகழும். அதே பிரச்சனை, அதே அழுத்தங்கள்.”

தேவன் யோசுவாவுடன் செய்ததைப் போலவே, அவர் தம்முடைய தூதனான தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரான்ஹாமின் கரங்களில் முழு தலைமைத்துவத்தையும் கொடுத்தார்; ஏனென்றால், அவரால் இவரை நம்ப முடியும் என்றும், ஆனால் மற்றவர்களை நம்ப முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஒரே சத்தம், ஒரே தலைவர், ஒரே முடிவான வார்த்தை, அப்பொழுதும் இப்போதும் இருக்க வேண்டியதாயிருந்தது.

கோடிக்கணக்கானோர் ஒலிநாடாக்களை கேட்பார்கள் என்று தீர்க்கதரிசி கூறினதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன். ஒலிநாடாக்களுக்கு ஒரு ஊழியம் உண்டு என்று அவர் கூறினார். தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்தைப் பிடிக்க ஒரு ஒலிநாடா (அவருடைய ஊழியம்) மூலம் வீடுகளுக்கும் சபைகளுக்கும் நம்மில் சிலர் நழுவிச் செல்வார்கள்.

நாம் திரும்பி வந்து, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தோம் என்றும், நாங்கள் ஒலிநாடாக்களை இயக்கியபோது அதை விசுவாசித்தவர்களை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும் கூறினோம். இப்போது நாங்கள் உலகம் முழுவதும் அதை பிரசங்கித்திருக்கிறோம், நீர் அதை கனப்படுத்துவீரா?

அவரோ: "அதை செய்யும்படிக்கே நான் உங்களை அனுப்பினேன்" என்று கூறுவார்.

தேவன் அதைக் கனப்படுத்துவார். உங்களுடைய வீடு ஒருபோதும் அசைக்கப்படாது. எல்லாவற்றையும் அழிக்க தேவன் சைகைக் கொடுக்கும்போது, உங்களுடைய குடும்பம் அனைத்தும், உங்களுடைய உடைமை அனைத்தும் உங்களுடைய வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் அங்கே நிற்கலாம். நீங்கள் ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டியதில்லை, யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள்.

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, சாத்தானின் ஏதேன் 65-0829 என்பதைப் பற்றிய எல்லாவற்றையும் நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவனுடைய மகத்தான, ஜீவனுள்ள, கடைசி-கால ஊழியத்தில் நாங்கள் புசிக்கும்போது, எங்களோடு சேர்ந்துகொள்ள வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

கூடுமானால், கர்த்தரின் வருகை வரை நாங்கள் ஜீவிப்போமாக. எங்களுடைய ஆதிக்கத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் நாங்கள் அன்புடனும், புரிந்து கொள்ளுதலுடனும், இன்றைக்கு, காணாமற்போன ஆடுகள் ஒவ்வொன்றையும் தேவன் இவ்வுலகில் தேடிக் கண்டுபிடித்து வருகிறார் என்னும் புரிந்து கொள்ளுதலோடு செயல்படுவோமாக. நாங்கள் அந்த கடைசி நபரைக் கண்டுபிடிக்கும்படியாகவும், அதனால் கர்த்தாவே, நாங்கள் இங்கே இந்த பழைய சாத்தானின் ஏதேனை விட்டு வெளியேறி, பரம வீட்டிற்கு நாங்கள் செல்லும்படியாக, அவர்களிடம் நாங்கள் அனுபவம் கொண்ட அன்பின் ஜெபத்தாலும், தேவ வசனத்தாலும் பேசுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

2 தீமோத்தேயு 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம் 3:14
2 தெசலோனிக்கேயர் 2:1-4
ஏசாயா 14:12-14
மத்தேயு 24:24