
அன்புள்ள நித்தியமானவர்களே,
நம்முடைய ஆடம்பரங்களான அறிவு சார்ந்த சிந்தையை அகற்றிவிட்டு, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனெனில் தேவன் தம்முடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தத் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
கடந்த காலத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்துவார். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் நமக்குச் சொல்வார். வேதாகமத்தில் உள்ள மற்ற அனைவரும் இப்போது பார்த்த அல்லது கேட்டதை, அவர் தம்முடைய வார்த்தையின் ஒவ்வொரு சிறிய விவரத்தையும், அதன் அர்த்தத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார்.
ஜீவனுள்ள சிருஷ்டிகள், கண்ணாடிக் கடல், சிங்கம், காளை, மனிதன், கழுகு, கிருபாசனம், காவலர்கள், மூப்பர்கள், சத்தங்கள், தேரியன், சூன் போன்ற வேதாகமத்தின் சின்னங்களின் அர்த்தத்தை நாம் கேட்டு புரிந்து கொள்ளப் போகிறோம்.
பழைய ஏற்பாட்டின் காவலர்களைப் பற்றிய அனைத்தையும் நாம் கேட்டு புரிந்துகொள்வோம். யூதா: கிழக்கு காவலர்; எப்பிராயீம்: மேற்கு காவலர்; ரூபன்: தெற்கு காவலர்; மற்றும் தாண்: வடக்கு காவலர்.
அக்கோத்திரங்களைத் தாண்டி வேறு எதுவும் அங்கே எந்த இடத்திலும் ஊடுருவி வந்து விட முடியாது. சிங்கம், மனுஷனுடைய விவேகம்; காளை: கடுமையாக உழைக்கும் மிருகம்; கழுகு: அதனுடைய வேகமாக செயல்படுகிற தன்மை.
எப்படி வானத்திலும், பூமியிலும், இடையிலும், சுற்றிலும், அவைகள் காவலர்களாக இருந்தனர். அதற்கு மேலே அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அந்த கோத்திரங்களைக் கடக்காமல் எதுவுமே அந்த கிருபாசனத்தை தொட்டதில்லை.
இப்போது புதிய ஏற்பாட்டின் காவலர்கள் உள்ளனர்: மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான், நேராக முன்னோக்கி செல்கிறார்கள். கிழக்கு வாசல் சிங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது, வடக்கு வாசல் பறக்கும் கழுகினால், யோவானால், சுவிசேஷகனால் பாதுகாக்கப்படுகிறது. பிறகு இந்தப் பக்கத்தில் உள்ள வைத்தியன், லூக்கா, மனிதன்.
இந்நான்கு சுவிசேஷப் புத்தகங்களும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை அவர்கள் என்ன கூறினார்களோ, அவற்றை அப்படியே ஆதரித்து நிற்கத்தக்கதாக, அதை காத்து நின்றன. எனவே இப்பொழுது, இன்றைக்கு, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமானது நான்கு சுவிசேஷப் புத்தகங்களோடு சேர்ந்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை ரூபகாரப்படுத்துகிறது.
தேவனுடைய உண்மையான அபிஷேகம் பெற்றவர் பேசும் போது, அதுவே தேவனுடைய சத்தமாயிருக்கிறது! நாம், “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!” என்று சத்தமிட விரும்புகிறோம்.
அதை விட்டு அகன்று போக வழியேயில்லை. உண்மையில், அதை விட்டு நாம் அகன்று போகவே முடியாது. ஏனெனில், அது நம்மை விட்டு அகன்றிடாது. புரிகிறதா? நாம் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையிடப்படுகின்றோம். வருங்காலமோ, நிகழ்காலமோ, நாசமோசமோ, பசியோ, தாகமோ, மரணமோ, அல்லது வேறு எந்த ஒன்றுமோ, கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமாட்டாது.
இந்த ஒளியைக் காணவும், இந்தச் சத்தத்தைப் பெற்றுக் கொள்ளவும், இந்தச் செய்தியை விசுவாசிக்கவும், நம்முடைய நாளுக்கான பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவும், அதில் நடக்கவும், உலகத் தோற்றத்திற்கு முன்னமே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டன. ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, ஆட்டுக்குட்டியானவரின் பெயர் புத்தகத்தில் எழுதப்பட்ட அதே நேரத்தில் நம்முடைய பெயர்களும் எழுதப்பட்டன. மகிமை!!
எனவே, இந்தச் செய்தியிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது. அந்த சத்தத்திலிருந்து இருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது. இந்த வார்த்தையின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவுமே எடுத்துப் போட முடியாது. அது நம்முடையது. தேவன் நம்மை அழைத்து, நம்மைத் தெரிந்துகொண்டு, நம்மை முன்குறித்தார். ஒவ்வொரு காரியமும் நமக்குச் சொந்தமானதும், நம்முடையதுமாயிருக்கிறது.
இதையெல்லாம் பெற்றுக் கொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் வார்த்தையின் தண்ணீரால் கழுவப்பட வேண்டும். நீங்கள் அங்கு நுழைவதற்கு முன் வார்த்தையைக் கேட்க வேண்டும். நீங்கள் தேவனை அணுகுவதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கிறது, அது விசுவாசத்தின் மூலமேயாகும். விசுவாசம் கேட்பதனால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது, அது மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து காலத்தின் செய்தியாளருக்குள்ளாக பிரதிபலிக்கப்படுகிறது.
எனவே, இங்கே, அந்த தண்ணீரில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிற சபைக் காலத்திற்குரிய தூதனானவனே இங்கேயிருந்து கொண்டு, அவருடைய இரக்கத்தையும், அவருடைய வார்த்தைகளையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும், அவரது நாமத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறவனாயிருக்கிறான். இங்கே யாவும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன, அதை நீங்கள் விசுவாசிப்பதன் மூலம், அங்கே வேறுபிரிக்கப்படுகின்றீர்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
ஒலிநாடாக்களைக் கேட்பதை நிறுத்தி விடாதீர்கள், அதனோடு தரித்திருங்கள். வார்த்தையினால் அதை ஆராய்ந்து பார்த்து, அது சரியா என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது இந்நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகெங்கிலும் இருந்து நாம் ஒன்றுபடும் இந்த குளிர்காலத்தில் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்தி, அவருடைய சத்தத்தைக் கேட்பதை விட மகத்தான அபிஷேகம் வேறுஎதுவுமே இல்லை.
என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து என்னால் கூற முடியும்: உங்கள் ஒவ்வொருவரோடும் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 61-0108 - "வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் III”
நேரம்: பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்.