அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,
65-0718M - தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் என்ற செய்தியைக் கேட்க ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு நாம் ஒன்று கூடுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்புள்ள வெட்கப்படாத மணவாட்டியே,
இன்று போல் ஒரு காலமோ அல்லது ஜனங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. நாம் அவருக்குள் இருக்கிறோம், அவர் நமக்காக சம்பாதித்திருக்கிற அனைத்திற்கும் சுதந்திரவாளிகளாயிருக்கிறோம். அவர் தம்முடைய பரிசுத்தத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அவருக்குள்ளாக இருக்கும் வரை, நாம் தேவநீதியாகியிருக்கிறோம்.
நாம் அவருடைய மணவாட்டியாக இருப்போம் என்று தெய்வீக தீர்மானத்தின் மூலமாக அவர் நம்மை முன்னறிந்தார். அவர் நம்மைத் தெரிந்து கொண்டாரேயன்றி, நாம் அவரை ஒருபோதும் தெரிந்துகொள்ளவில்லை. நாம் நமக்கு சொந்தமானதன் பேரில் வரவில்லை, அது அவருடைய தெரிந்துகொள்ளுதலாக இருந்தது. இப்பொழுது அவர் நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் அவருடைய வார்த்தையின் முழு வெளிப்பாட்டை வைத்திருக்கிறார்.
நாளுக்கு நாள், அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டும், அவருடைய ஆவியை நம்மீது ஊற்றிக் கொண்டும், அவருடைய சொந்த ஜீவியத்தை நம்மில் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மணவாட்டி அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் அவருடைய பரிபூரண சித்தத்திலும், அவருடைய திட்டத்திலும் இருக்கிறோம் என்பதை அறிந்து, தங்களுடைய இதயங்களில் இதுபோன்று இதற்கு முன்பு ஒருபோதும் அதிகமாக நங்கூரமிடப்பட்டதில்லை.
தேவனுடைய அன்பும், இந்த செய்தியும் பொங்கி வழியுமளவிற்கு நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. நாம் கேட்பதற்கும், பேசுவதற்கும், ஐக்கியம் கொள்வதற்கும், அல்லது நாம் கேட்டதை ஒரு மேற்கோளாக எளிமையாக பகிர்ந்து கொள்வதற்கும், கர்த்தரை துதிப்பதற்கும் இதைத் தவிர வேறொன்றுமே இல்லை.
நாம் வனாந்தரத்தின் பின்புறத்தில் இருந்த மோசேயைப் போல இருக்கிறோம். நாம் சர்வவல்லமையுள்ள தேவனுடன் முகமுகமாய் சஞ்சரித்துள்ளோம், சரியாக வார்த்தையினாலும் இந்த வேளைக்கான வாக்குத்தத்தினாலும் நம்முடன் பேசுகிற சத்தத்தை நாம் புரிந்து கொள்கிறோம். அது நமக்கு ஏதோக் காரியத்தைச் செய்துள்ளது. நாம் அதைக் குறித்து வெட்கப்படவில்லை. நாம் அதை உலகுக்கு அறிவிக்க விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசுவே இந்த நேரத்தின் செய்தி என்றும், நாம் அவருடைய மணவாட்டி என்றும் விசுவாசிக்கிறோம்.
அவர் தம்முடைய வார்த்தையால் நம்மைப் பலப்படுத்தியிருக்கிறார். இது தேவன் அருளியிருக்கிற வழி என்பதை குறித்து, எந்த சந்தேகத்தின் நிழலும் இல்லை. தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்து தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்கவும், அதன்பின்னர் அவளைத் தம்முடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்தவும் தம்முடைய ஏழாம் தூதனைத் தெரிந்து கொண்டார்.
அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர இந்த ஜீவியத்தில் எதுவும் இல்லை. நாம் அதை போதுமான அளவு பெற முடியவில்லை. இது நமக்கு ஜீவனை விட மேலானது. சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷமும் வல்லமையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. வார்த்தையானது இப்போது மணவாட்டியின் கரங்களிலும், செவிகளிலும் உள்ளது. தேவன் ஒரு மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்க, பிசாசும் ஒரு சபையை அழைத்துக் கொண்டிருக்கும்போது, வேறு பிரிக்கும் நேரம் இப்போது நடைபெறுகிறது.
கர்த்தாவே, நாங்கள் உம்மையும் உமது வார்த்தையையும் நேசிக்கிறோம், நாங்கள் போதுமான அளவு பெற முடியவில்லை. நாங்கள் அனுதினமும் உமது வார்த்தையின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, உமது அதிசீக்கிர வருகைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். பிதாவே, அது மிகவும் சமீபத்தில் இருக்க வேண்டும். கர்த்தாவே நாங்கள் அதை உணர முடிகிறது, நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.
பிதாவே, நாங்கள் இன்னும் அதிக உத்தமமாக இருந்து, எங்களுடைய உறுதிமொழிகளை புதுப்பித்துக் கொள்வோமாக. உம்முடைய வார்த்தையில் உள்ள எங்களுடைய விசுவாசம் எங்களுடைய இருதயங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். நீர் எல்லா சந்தேகங்களையும் எடுத்துப்போட்டுவிட்டீர். உம்முடைய வார்த்தையைத் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் உறுதியாக இருக்கிறோம், உலகிற்குச் சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை, நாங்கள் உம்முடைய ஒலிநாடா மணவாட்டியாய் இருக்கிறோம்.
வெட்கப்படுதல் 65-0711 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து கேட்கும்படி உலக மக்களை நான் அழைக்க விரும்புகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மாற்கு 8:34-38
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பரிபூரண சித்த மணவாட்டியே,
நாளானது தாமதமாகவும், கர்த்தருடைய வருகையோ சமீபமாயுமிருக்கிறது. காலமானது ஏற்கனவே முடிவுறாமலிருக்குமானால், காலமோ சமீபித்துக்கொண்டிருக்க, வாசல் அடைபட்டுக் கொண்டிருக்கிறது. காற்றினால் அசைந்த நாணல் போல் இருக்கவும்; செவித்தினவுள்ளவர்களாயிருக்கவும்; யோசிப்பது மிகவும் தாமதமானது. இது தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரமாயுள்ளது. அவருடைய மணவாட்டியாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை மாற்றுகிறாரா? ஒருபோதும் இல்லையே. அப்படியானால், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நம் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நாம் தினமும் பாடுபட வேண்டும். நாம் அவருடைய சித்தத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அதை ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
தேவனோடு தரித்திருக்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்படிக்கு தன்னுடைய முழு நோக்கத்தையுமே இந்த செய்தியில் தீர்க்கதரிசி நமக்கு சொல்லுகிறார், ஆனால் பலர் அதைச் சுற்றிச் சென்று வேறு வழியைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தொடர்ந்து செல்கிறதையும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறதையும் காண்கிறார்கள், ஆனால் அவர்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல.
தீர்க்கதரிசி நம்மை மீண்டும் வார்த்தைக்கு கொண்டு சென்று, பார்ப்பதற்கும், படிப்பதற்கும், நமக்கு நினைவூட்டுவதற்கும் உதாரணங்களைத் தருகிறார், தேவன் தமது சிந்தையையோ அல்லது அவருடைய வழியையோ மாற்றுவதில்லை, அவர் தேவன், மாறுவதில்லை.
இப்பொழுது, இந்த இருவருமே ஆவிக்குரிய மனிதர்கள், இருவருமே தீர்க்கதரிசிகளாயிருந்தனர், இருவருமே அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை நாம் கவனிக்கிறோம். மோசே, கடமையின் பாதையில், ஒவ்வொரு நாளும் அவனுக்கு முன்பாக ஒரு புதிதாக அக்கினி ஸ்தம்பத்தோடு, கடமையின் பாதையிலிருக்க, தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் தங்கியிருந்தார். இதோ தேவனால் நியமிக்கப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட, மற்றொரு தேவனுடைய ஊழியக்காரன் வருகிறான், ஒரு தீர்க்கதரிசியாகிய அவனிடத்திற்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. இங்கே அபாயக் கோடு உள்ளது. அந்த மனிதன் தேவனுடையவனாய்—தேவனுடையவனாய் இருக்கவில்லையென்று எவரும் மறுக்க முடியாது, ஏனென்றால் தேவனுடைய ஆவி அவனிடத்தில் பேசியதாக வேதம் கூறியுள்ளது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.
கர்த்தாவே, அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது? இருவரும் தீர்க்கதரிசிகளாய் இருந்தபோது என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இருவரும் தேவனால் அழைக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்கள், தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்; தேவனுடைய தீர்க்கதரிசிகளிடத்திற்கே தேவனுடைய வார்த்தை வருகிறது. பரிசுத்த ஆவியானவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று இருவரும் கூறுகிறார்கள்.
தேவனுடைய ஏழாம் தூதன் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி சில மேற்கோள்களை மிகவும் கவனமாகப் படித்துப் படிப்போமாக. அவர் என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குத் தேவையேயன்றி சபை என்ன சொல்கிறது, வேத பண்டிதர் ஜோன்ஸ் என்ன சொல்லுகிறார், அல்லது வேறு யாரோ என்ன கூறுகிறார்கள் என்பதல்ல. தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதே நமக்கு வேண்டும்.
மோசே, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டிருந்தான், இந்த நேரத்துக்கான அவர்களுடைய தலைவனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்றும், ஆபிரகாம் இந்த எல்லாக் காரியங்களையும் வாக்குத்தத்தம் செய்திருந்தான் என்றும்,...
மோசேயின் ஸ்தானத்தை எவருமே எடுக்க முடியவில்லை. எத்தனை கோராகுகள் எழும்பினாலும், எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல; அதை பொருட்படுத்தாமல், தேவன் மோசேயை, அழைத்திருந்தார்.
ஜனங்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருந்த ஒருவன் மோசேயாயிருந்தான். மற்ற மனிதர்கள் எழும்பி, தாங்கள் அபிஷேகிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களாயும் கூட இருப்பதாகக் கூறினர். அவர்களையும் கூட வழிநடத்த தேவன் அழைத்திருந்தார். ஆனால் மோசே அவர்களை தேவனுடைய மூல பரிபூரண சித்தத்தில் வழிநடத்தும்படியான தலைவனாக இருந்தான்.
ஆனால், ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் அனுமதிக்கிற சித்தத்தை உடையவராயிருக்கிறார். கவனியுங்கள், அவர் அதை அனுமதிக்கிறார், சரி, ஆனால் அவர் அதை அவருடைய மகிமைக்காக கிரியை செய்வார், அவருடைய பரிபூரண சித்தத்தில். இப்பொழுது நீங்கள் நடக்க விரும்பினால்…
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க யாரும் விரும்புவதில்லை. உண்மையான மணவாட்டி எல்லா நேரத்திலும், கிரயம் என்னவானாலும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கவே விரும்புகிறாள்.
ஒலிநாடாக்களை இயக்குவதன் முக்கியத்துவம் குறித்து பல கருத்து வேறுபாடுகள், எண்ணங்கள், குழப்பங்கள், அபிப்பிராயங்கள் உள்ளன.
இன்றைக்கு செய்தியை விசுவாசிக்கிறவர்களை பிரித்துள்ள பிரச்சினை இதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மணவாட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும், இருப்பாள் என்பதும் எங்களுக்குத் தெரியும்; அதுவே வார்த்தை.
இன்றைக்கு சபையில் ஆவியால் நிரப்பப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்கள் உள்ளனர். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அவர்களில் ஒருவர் கூட இல்லையே.
அவர்கள் எப்படி மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்? அவர்களுடைய ஊழியத்தின் பேரில் நாம் ஒன்றுபட முடியுமா? உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய மந்தையை வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் தேவனுடைய மூல திட்டத்திற்கு அவர்களை மீண்டும் வழிநடத்த, அவருடைய தலைவர், அவருடைய தீர்க்கதரிசியே அழைக்கப்பட்டிருக்கிறார். அவர்களுடைய ஊழியம் அல்ல.
ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று என்றும், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று விசுவாசிக்க வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கவில்லையென்றால்,, அவர்கள் வெறுமனே அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் உள்ளனர்.
இது மிக முக்கியமான சத்தம் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னால், அவர்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களால் எப்படி இயங்கு பொத்தானை அழுத்தி இயக்காமல் இருக்க முடியும்?
நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக, உறுதியாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு உறுதியான வழி மட்டுமே உள்ளது. அது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பதாகும்.
முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் செல்கிறது. அப்படியானால், அது அதைப் பெற்றுக் கொள்கிறது. அவன் ஒரு செம்மறியாடாக இருந்தால், அவன் அதனோடு வருகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் ஒலிநாடாவை உதைத்து வெளியே தள்ளுகிறான்.
நான் உறுதியாக இருக்க வேண்டும். எனது நித்திய இலக்குடன் என்னால் மேலோட்டமான தீர்மானத்தை எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது தவறு செய்கிறதில்லை என்பதை நான் அறிவேன். அது அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபுகாரப்படுத்தப்பட்டிருந்தது என்பதை நான் அறிவேன். அதுவே தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்த தெரிந்து கொண்ட ஒன்று என்பதை நான் அறிவேன். அந்த சத்தமே மணவாட்டியை இணைக்கக் கூடியதும், இணைக்கும் ஒரே சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்று கூற நான் கேட்கும் அந்த சத்தமாக அது இருக்கும் என்று நான் அறிவேன்.
நான் இயங்கு பொத்தானை அழுத்தி அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 65-0418E தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நாம் செய்தியை 61-ம் பத்தியிலிருந்து துவங்குவோம்.
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,
“யார் இந்த மெல்கிசேதேக்கு?” - 65-0221E என்ற செய்தியைக் கேட்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி நாம் ஒன்று கூடுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தூய கலப்படமற்ற வார்த்தையின் மணவாட்டியே,
நாம் கலப்படமற்ற, எந்த மனிதனுடைய அமைப்பினாலும், எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்ட கோட்பாட்டினாலும் தொடப்படாத அவருடைய அருமையான எளிய சீமாட்டியாய் இருக்கிறோம். நாம் முற்றிலும் கலப்படமற்ற, வார்த்தையின் மணவாட்டி! நாம் கருவுற்ற தேவனுடைய குமாரத்தி.
நாம் அவருடைய மூல வார்த்தையாக இருக்கிற, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் பிள்ளைகளாய் இருக்கிறோமே! தேவனில் பாவமே இல்லை, நாம் அவருடைய சொந்த சாயலில் இருக்கிறபடியால், இதனால் நமக்குள் எந்த பாவமும் இல்லை. நாம் எப்படி விழ முடியும்? இது சாத்தியமற்றது...சாத்தியமற்றதே! நாம் அவருடைய ஒரு பாகமாக, அவருடைய மூல வார்த்தையாயிருக்கிறோம்.
எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் இதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? வெளிப்பாடு. முழு வேதமும், இந்த செய்தியும், தேவனுடைய வார்த்தை, அனைத்துமே ஒரு வெளிப்பாடாகும். இந்த சத்தத்திற்கும் மற்ற எல்லா சத்தங்களுக்கும் இடையே உள்ள உண்மையை நாம் அறிவோம், ஏனெனில் இது ஒரு வெளிப்பாடு. நம்முடைய வெளிப்பாடு சரியாக வார்த்தையுடன் உள்ளதேயன்றி, வார்த்தைக்கு முரணானது அல்ல.
இந்தக் கல்லின் மேல்” (வார்த்தை என்றால் என்ன என்பது பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடு) “நான் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் அசைக்காது." அவருடைய மனைவி மற்ற மனிதரோடு சோதிக்கப்படமாட்டாள். "நான் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் அசைக்கவே முடியாது."
நாம் அவருடைய வார்த்தைக்கும் அவருடைய சத்தத்திற்கும் மாத்திரமே உண்மையாகவும், உத்தமமாகவும் இருப்போம். நாம் வேறொரு மனிதனால் ஒருபோதும் தீட்டுப்பட்டு விபச்சாரம் செய்யமாட்டோம். நாம் அவருடைய கன்னிகை வார்த்தையான மணவாட்டியாக இருப்போம். நாம் வேறு எந்த வார்த்தையையும் பார்க்கவோ, கேட்கவோ அல்லது சரசமாடவோ மாட்டோம்.
அது நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் உள்ளது. நமக்கு வேறொரு கணவர் இருக்க முடியாது, ஆனால் நமக்கு ஒரே கணவர்தான், இயேசு கிறிஸ்து, ஒரே மனுஷன், தேவன், இம்மானுவேல். அவருடைய மனைவி பல்லாயிரம், பல்லாயிரக்கணக்கானோராய் இருப்பர். மணவாட்டி வார்த்தையிலிருந்து வர வேண்டும் என்பதை அது காண்பிக்கிறது. "ஒரே கர்த்தராகிய இயேசு, ஆனால் அவருடைய மணவாட்டியோ பலர், ஒருமை."
இது அனைவருக்கும் அல்ல, தீர்க்கதரிசியின் குழுவிற்கு மட்டுமே என்பதை நாம் நினைவில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய செய்தியை பின்பற்றுபவர்களுக்கே. இந்த செய்தி அவர்களுக்கு மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் அவரை மேற்பார்வையிட கொடுத்த சிறிய மந்தைக்கே.
தீர்க்கதரிசி நமக்கு என்ன சொல்லுகிறார் என்பதற்காக தேவன் அவரைப் பொறுப்பாளியாக்குவார், மேலும் தேவன் நம்மை, தேசம் முழுவதிலுமிருந்து அவரால் மன மாற்றமடைந்தவர்களையும், அவர் கிறிஸ்துவிடம் வழிநடத்தியவர்களையும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதற்கு பொறுப்பாளியாக்குவாரேயன்றி, ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார்.
நாம் எப்படி அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அவர் சொல்வதை நாம் உட்கார்ந்து கேட்பது நமக்கு எவ்வளவு அற்புதமானது. எப்படி அவருடைய முதல் மணவாட்டியும், இரண்டாவது மணவாட்டியும் அவரிடத்தில் தவறிப்போயினர்; ஆனால் அவருடைய மகத்தான கடைசி கால மணவாட்டியான நாம் அவரிடம் ஒருபோதும் தவறிப்போகமாட்டோம். நாம் கடைசி வரை அவருடைய உண்மையான, உத்தமமான, கன்னிகை வார்த்தை மணவாட்டியாக இருப்போம்.
அவருடைய வார்த்தையில் உள்ள நம்முடைய விசுவாசம் ஒவ்வொரு நாளும் மகத்தானதாய் வளருகிறது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு, கீழ்ப்படிந்து, அவருடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, நம்முடைய வேதாகமங்களைப் படித்து, நாள் முழுவதும் ஜெபித்து அவரை ஆராதிப்பதன் மூலம் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவர் சீக்கிரத்தில் வருவார் என்பது நமக்குத் தெரியும். இனி எந்த நிமிடமும். நோவாவைப் போலவே, அவர் நேற்று வருவார் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்; ஒருவேளை நாளை காலையோ, பிற்பகலோ, மாலையோ, ஆனால் அவர் வருவார் என்பது நமக்குத் தெரியும். தேவனுடைய தீர்க்கதரிசியும், அவருடைய வார்த்தையும் எந்த தவறும் செய்கிறதில்லை, அவர் வருகிறார். இது 7-வது நாள் என்று நாம் உணருகிறோம், மேகங்கள் உருவாகி, பெரிய மழைத் துளிகள் விழுவதை நாம் காணலாம்; வேளையானது சமீபித்து விட்டது.
நாம் பேழையில் நன்கு பாதுகாப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி: விவாகமும் விவாகரத்தும் 65-0221M என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், தேவனுடைய சத்தம் எங்களைத் தேற்றுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
பரி. மத்தேயு 5:31-32 / 16:18 / 19:1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22