ஞாயிறு
23 பிப்ரவரி 2025
62-1230e
ஐயா,இதுதான் முடிவின் அடையாளமா?

அன்புள்ள ஐயன்மீர்,

இது, அடையாளம். இது, நேரம். இது, செய்தியாய் உள்ளது. இது, வார்த்தை. இது, தேவனுடைய சத்தம். இது, மனுஷகுமாரன். இது, தேவன் அருளியிருக்கிற வழி. இதுவே, கடைசி காலம்.

எந்த தீர்க்கதரிசியும், எந்த அப்போஸ்தலனும், ஒருபோதும், எந்தக் காலத்திலுமே, நாம் இப்போது வாழும் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் எப்போதும் வாழ்ந்ததில்லை. இது ஆகாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இது பூமியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செய்தித்தாளிலும் எழுதப்பட்டிருக்கிறது. உங்களால் அந்த கையெழுத்தை வாசிக்க முடிந்தால், இதுவே முடிவாகும்.

காதுள்ளவன், தேவன் என்ன உரைத்தார் என்பதையும், பதிவு செய்ததையும் கேட்கட்டும், அதனால் அது என் வார்த்தையாகவோ, என் எண்ணங்களாகவோ, என் கருத்தாகவோ இருக்காது, ஆனால் தேவனுடைய சத்தம் அவருடைய மணவாட்டிக்கு இன்றைக்கான அவருடைய ஒரே சரியான வழி என்ன என்பதை அறிவுறுத்துகிறது.

செய்தியுடன் தரித்திருக்க, ஒலிநாடாக்களுடன் தரித்திருக்க, வேத வாக்கியங்கள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும், சொப்பனங்களின் வியாக்கியானம் மூலமாகவும், அவர் சொல்லி, நமக்கு வெளிப்படுத்துகிறபடியால் வந்து கேளுங்கள். ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அதை மாத்திரமே கூறுங்கள்.

தேவனிடத்திலிருந்து தாமே தேவனுடைய சத்தத்தைக் கேட்பதைக் காட்டிலும், சிறந்த வழி அல்லது உறுதியான வழி எதுவும் இல்லை. தேவன் தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, இயங்கு பொத்தாளை அழுத்தி கேளுங்கள் என்று நமக்கு சொல்வதன் மூலம் கட்டளையிட்டார், அவ்வளவுதான்.

அதைப் பேசி, அதை பிரசங்கித்து, அது குறித்த சாட்சி பகிர்ந்து, உலகத்திற்கு அதை குறித்து சொல்லுங்கள், ஆனால் மணவாட்டியை பரிபூரணப்படுத்த ஒரே ஒரு பரிபூரண அருளப்பட்ட வழி உண்டு என்று அவர் நமக்கு சொல்லுகிறார்: ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள். உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தால், ஒலிநாடாவை இயக்குங்கள். இது முதன்மையான, மற்றும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாயிருக்க வேண்டும். இது ஒலிநாடாவில் அவர் வைத்துள்ள தம்முடைய பரிபூரண வார்த்தையாக உள்ளது.

இப்போது அதை மற்றவர்களுடைய, சொப்பனங்களுடன் ஒப்பிடுங்கள். இது ஒரு தரிசனமாக இருந்தது. ஆகாரம். இதோ உள்ளது. இதுதான் இடம்.

கேளுங்கள், சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் மணவாட்டிக்கான ஆகாரம் எங்கே? அந்த இடம் எங்கே? மணவாட்டிக்கான செய்தி ஒலிநாடாவில் உள்ளது.

இது எனக்கு வீடு போல் உணரச் செய்கிறது. இதுதான் இடம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், சொப்பனங்களும் அதே காரியத்தை உரைத்தன, ஆகாரம் எங்கே என்று பாருங்கள்.

நாம் அதைப் பெற்றுக்கொண்டோம் என்பதை உறுதிப்படுத்த, மணவாட்டிக்கான ஆகாரம் ஒலிநாடாக்களே என்று மீண்டும் ஒரு முறை அவர் நமக்கு சொல்லுகிறார்.

“இனி காலம் செல்லாது.” அப்படியானால், நண்பர்களே, நம்முடைய தேவனை சந்திக்க நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.

ஆம், கர்த்தாவே, உம்முடைய மணவாட்டியாய் இருந்து, உம்மை சந்திக்க ஆயத்தப்படுவது, அதுவே எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாய் உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் கர்த்தாவே? உம்முடைய அருளப்பட்ட வழி என்றால் என்ன? உம்முடைய திட்டம் என்ன? உம்முடைய பரிபூரண வழி எது? உம்மால் எங்களிடத்தில் பேசி சொல்ல முடிந்த ஒரு தீர்க்கதரிசியை நீர் எங்களுக்கு அனுப்பினீர். தயவு செய்து எங்களுக்கு அறிவுறுத்தும்.

இப்போது நிறைய ஆகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வோமாக. நாங்கள் அதை இப்பொழுதே பயன்படுத்திக் கொள்வோமாக.

ஒருவர் எவ்வளவு குருடராக இருக்க முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்குச் சொல்கிறார்: ஒலிநாடாக்களில் சேமித்து வைக்கப்பட்ட நிறைய ஆகாரங்கள் உண்டு; இப்பொழுதே அவைகளை உபயோகிப்போமாக. இதுவே அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய அறிவுரை.

இந்தச் செய்தியை நீங்கள் விசுவாசிப்பதாக உரிமை கூறினால், மணவாட்டியை அழைக்க தேவனுடைய தீர்க்கதரிசி செய்தியாளராக வில்லியம் மரியம் பிரான்ஹாம் அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும்; அவரைக் குறித்துக் கூறப்பட்ட எல்லா வேத வாக்கியங்களும் அவருடைய ஜீவியத்தை நிறைவேற்றுகிறது என்றும் விசுவாசித்தால்; இது இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்று விசுவாசித்தால், அப்படியானால் அவர்; தேவன், தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவான ஆங்கிலத்தில் மணவாட்டிக்கு சொல்லுகிறார்.

ஒலிநாடாக்களை மாத்திரமே நாம் கேட்கின்ற காரணத்தால் நாம் பரிகசிக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டு, இழிவாக பார்க்கப்பட்டாலும், அவர் நமக்கு செய்யும்படி சொன்னதையே நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம். வெளிப்பாட்டிற்காக கர்த்தாவே உமக்கு நன்றி.

“ஐயா, இதுதான் முடிவு அடையாளமா?”என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ள நான் உலகத்தை அழைக்க விரும்புகிறேன். நாங்கள் எல்லாவற்றையும் பற்றிக் கேட்போம்:

இடி முழக்கங்கள், ஏழு முத்திரைகள், கூர்நுனி கோபுர பாறை, ஆவிக்குரிய ஆகாரம், நித்தியம், தூதர்களின் கூட்டம், என்னுடைய தலைமையகம், தரிசனம், சொப்பனம், தீர்க்கதரிசனம், மறைக்கப்பட்ட இரகசியங்கள், வேத வாக்கியத்திற்கு அடுத்த வேதவாக்கியம்.

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவதை விட இந்த ஜீவியத்தில் மகத்தானது வேறொன்றுமில்லை.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

வேத வாக்கியங்கள்:

மல்கியா 4வது அதிகாரம்
பரி. மத்தேயு 13:3-50
ரோமர் 9:33 / 11:25 / 16:25
1 கொரிந்தியர் 14:8 / 15வது அதிகாரம்
கலாத்தியர் 2:20
எபேசியர் 3:1-11 / 6:19/ 5:28-32
கொலோசெயர் 4:3
1 தெசலோனிக்கேயர் 4:14-17
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 13:8
2 பேதுரு 2:6
வெளிப்படுத்தின விசேஷம் 1:20 / 3:14 / 5:1 / 6:1 / 10:1-7 / 17வது அதிகாரம்