காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 24 ஆகஸ்ட், 2024

அன்புள்ள கழுகுகளே,

பிணம் இருக்கும் இடத்தில், கழுகுகள் கூடுகின்றன. இது சாயங்கால நேரம், மற்றும் தீர்க்கதரிசனம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் அவரை நம்முடைய சபைகளில், நம்முடைய வீடுகளில், மற்றும் புதரில் உள்ள நம்முடைய மண் குடிசைகளுக்குள் அழைத்திருக்கும்போது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரிகின்றன. அவர் நம்மிடம் பேசி அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தப் போகிறார். நாம் தேவனுக்காக அதிக பசியாகவும் தாகமாகவும் இருக்கிறோம்.

அவர் முன்குறித்த, முன்னரே தீர்மானிக்கப்பட்ட, அவருடைய தீர்க்கதரிசி மூலமாக; அவருடைய வார்த்தை நமக்கு வரும் வழியை அவர் தெரிந்தெடுத்திருக்கிறார். அவருடைய மணவாட்டியாகிய, நம்மை, அந்த வேளையின் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை பற்றிப் பிடிக்கும்படி அந்த வேளைக்கான மனிதனாய் இருக்கும்படி அவர் வில்லியம் மரியன் பிரான்ஹாமைத் தெரிந்து கொண்டார்.

அவருடைய ஸ்தானத்தை வேறொரு மனிதனால் எடுத்துக் கொள்ள முடியாது. இலக்கணமற்ற வார்த்தைகளில் அவர் தம்மை வெளிப்படுத்தும் விதத்தை நாங்கள் விரும்புகிறோம். இது தேவன் நம்முடைய செவிகளில் பேசிக்கொண்டிருப்பதாகும். தேவன், மானிட உதடுகளின் மூலமாக பேசி, அவர் செய்வதாக கூறினதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். அதுவே இதற்கு தீர்வாகிறதே!

தேவன் தரிசனங்களில் அவருடைய கைகளையும் கண்களையும் பயன்படுத்தினார். அவர் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எதையும் அவரால் கூற முடியவில்லை. தேவன் அவருடைய நாவையும், விரலையும், அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் தேவனோடு முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் தேவனுக்கான வாயாக இருந்தார்.

இந்தக் காலத்தில் சபையானது குழப்பமுறும் என்பதை தேவன் முன்னறிந்திருந்தார். ஆகையால், அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்த, நம்முடைய காலத்திற்காக அவருடைய தீர்க்கதரிசியை அவர் ஆயத்தமாக வைத்திருந்தார்.

அவருடைய மகத்தான திட்டத்தில், அவருடைய வருகைக்கு முன்பாக அவருடைய தீர்க்கதரிசியை அவர் எடுத்துக் கொள்வார் என்பதையும் கூட அவர் அறிந்திருந்தார், எனவே அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி எப்பொழுதுமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை தங்களுடைய விரல் நுனியில் வைத்திருக்கும் படியாக, அவர் அவருடைய சத்தத்தை ஒலிப்பதிவு செய்து, சேமித்து வைத்திருந்தார், அப்போது அவர்களிடம் கேள்வியே எழாது. அவர்கள் எல்லா நேரத்திலுமே கேட்கக்கூடிய தூய கன்னிகையான வார்த்தைக்கு வியாக்கியானமே தேவைப்படாது.

கடைசி நாட்களில் பல சத்தங்களும், நிறைய குழப்பங்களும் இருக்கும் என்று அவர் அறிந்திருந்தார். கடந்த மூன்று வாரங்களாக அவர் நம்மிடம் பேசி, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தைக் குறிப்பிட்டார். கூடுமானால், கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்பதை குறித்து அவர் நம்மிடத்தில் சொன்னார்.

எவ்வாறு இப்பிரபஞ்சத்தின் தேவன் ஜனங்களின் இருதயங்களை குருடாக்கியிருக்கிறான். இந்த லவோதிக்கேயா காலத்தில் இந்த காரியங்கள் சம்பவிக்கும் என்று எவ்வாறு தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசனங்கள் மூலமாக கூறியிருக்கிறார். எதுவுமே செய்யப்படாமல் விடப்படவில்லை என்பதை அவர் நமக்கு சொன்னார்.

இந்த நாளில் செய்யும்படி அவரால் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட காரியங்களினால் நமக்கு முன்பாக அவர் தாமே தம்மை அடையாளம் காட்டியிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நமக்கு அவருடைய செயல்களே நிரூபித்திருக்கின்றன. இது அவருடைய மணவாட்டிக்குள், ஜீவித்துக் கொண்டிருக்கிற, பேசிக் கொண்டிருக்கிற, தேவனுடைய சத்தமாயிருக்கிறது.

இந்த செய்தி எபிரெயர் 13:8 என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது ஜீவனுள்ள வார்த்தையா? இது மாம்சத்தில் மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறதாய் இருக்கிறதா? நீங்கள் விசுவாசித்துக் கீழ்படிந்தால் இந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீர்க்கதரிசனம் நடக்கும்.

உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று உலகம் முழுவதும் நடக்கும். தேவன் மனித உதடுகளால் பேசுவார், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தம்முடைய மணவாட்டியுடன் பேசுவார். அவர் நம் அனைவருக்காகவும் ஜெபிக்கும்போது நாமும் ஒருவருக்காக ஒருவர் நம்முடைய கைகளை வைத்து அவர் ஜெபிக்கச் செய்வார்.

அங்கே வெளியே தொலைபேசி இணைப்புகளில் இணைக்கப்பட்டுள்ள நீங்கள், ஊழியக்காரர்கள் உங்கள் மேல் கைகளை வைத்திருக்கும் போதும், உங்களுடைய அன்பார்ந்தவர்கள் உங்கள் மீது கரங்களை வைத்திருக்கும் போதும், நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், அது முடிவு பெற்றுவிட்டது, அது முற்றுப் பெற்றுவிட்டது.

நம்முடைய தேவை என்னவாயிருந்தாலும், நாம் அதை விசுவாசித்தால்…தேவன் அதை நமக்குத் தருவார். நாம் விசுவாசிக்கிறோம். நாம் அவருடைய உண்மையான மணவாட்டியாய் இருக்கிறோம். அது சம்பவிக்கும். நாம் எங்கெல்லாம் கூடி இருக்கிறோமோ அங்கெல்லாம் அக்கினி ஸ்தம்பம் இருந்து, நமக்கு என்னவெல்லாம் தேவையாயிருக்கிறதோ, அதை நம் ஒவ்வொருவருக்கும் தரும். இது கர்த்தர் உரைக்கிறதாவது.

இப்பொழுது நாம் இங்கே சபையில் காணும் அதே பரிசுத்த ஒளியானது, ஒவ்வொருவர் மேலும் விழுந்து, இந்த நேரத்திலேயே அவர்கள் சுகமாக்கப்படுவார்களாக. கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாங்கள் சத்துருவை, பிசாசை கடிந்து கொள்ளுகிறோம். கர்த்தராகிய இயேசுவின் கடுமையான பாடுகளின் மூலமாகவும், மரணத்தின் மூலமாகவும், மூன்றாம் நாளிலே வெற்றிச் சிறந்த உயிர்த்தெழுதலின் மூலமாகவும், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றிரவு உயிரோடு, எங்கள் மத்தியில் இங்கே இருக்கிறார் என்ற அவருடைய நிரூபிக்கப்பட்ட அத்தாட்சியினால் சத்துரு தோற்கடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை நாங்கள் அவனுக்கு கூறுகிறோம். அவருடைய பிரசன்னத்தில், சபையில் சுழன்று கொண்டிருக்கிற இந்த மகத்தான ஒளியினால் அடையாளங் காட்டப்பட்டிருக்கிற, ஜீவனுள்ள தேவனின் ஆவி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் ஒவ்வொரு இருதயத்தையும் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும், சுகமளிக்கும் வல்லமையினாலும் நிரப்பட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக இதை அருளும்.

நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எதையும் எடுக்க முடியாது, எதையும் எடுக்க முடியாது. சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். உங்களிடம் ஒரு சிறு கரண்டியளவே அவர் இருப்பதாக நீங்கள் உணரலாம், அதுதான் உங்களுக்குத் தேவை, அது உண்மையானது. அது அவராயிருக்கிறது. நீங்கள் அவருடையவராய் இருக்கிறீர்கள் அவருடைய வார்த்தை தவறிப் போக முடியாது.

அதை விசுவாசியுங்கள், அதை ஏற்றுக் கொள்ளுங்கள், அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அது தவறி போக முடியாது. உங்களுக்கு வல்லமை இல்லை, ஆனால் நீங்கள் அவருடைய அதிகாரத்தை பெற்றுள்ளீர்கள். "நான் அதை எடுத்துக்கொள்கிறேன் கர்த்தாவே, இது என்னுடையது, நீர் அதை எனக்குத் தாரும், சாத்தான் அதை எடுத்துச் செல்ல நான் விடமாட்டேன்" என்று கூறுங்கள்.

நமக்கு என்னே ஒரு நேரம் இருக்கும். நான் மற்றெந்த இடத்திலும் இருக்க விரும்பவில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுற்றி இருப்பார். அதிகமான வெளிப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டது. நொறுங்குண்ட இருதயங்கள் சீர்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் சுகமடைந்தனர். "இப்போது நாம் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா, அது இப்பொழுதே எரியவில்லையா, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையும் கனமும் உண்டாவதாக" என்று எப்படி நம்மால் கூறாமல் இருக்க முடியும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

எங்களுடன் சேர்ந்து கொள்ள உலகை அழைக்கிறோம்:

நேரம்: பிற்பகல் 12:00, ஜெபர்சன்வில் நேரம்
செய்தி: 65-0801E தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம்: 22:17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41:9
சகரியா 11:12 / 13:7
ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12
மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 15:26
பரி. லூக்கா: 17:30 / 24:12-35
ரோமர்: 8:5-13
எபிரெயர்: 1:1 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம்: 1:1-3 / அதிகாரம் 10

 

 

சனி, 17 ஆகஸ்ட், 2024

அன்புள்ள பூரண சற்குணரே,

ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் சத்தம், ஏதேன் தோட்டத்திலும், சீனாய் மலையிலும், மறுரூப மலையிலும் அவருடைய வார்த்தையை ஒலித்த அதே சத்தமாயிருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் முழுமையான மற்றும் முடிவான வெளிப்பாட்டுடன் இன்று ஒலிக்கிறது. அது அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு அவளை ஆயத்தப்படுத்துகிறது. மணவாட்டி அதைக் கேட்டுக் கொண்டும், அதை ஏற்றுக் கொண்டும், அதில் ஜீவித்துக்கொண்டும் இருக்கிறாள், அதை விசுவாசிப்பதன் மூலம் அவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.

எந்த மனிதனும் நம்மிடமிருந்து அதை எடுத்துப் போட முடியாது. நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. அவருடைய ஆவி நமக்குள் கொழுந்து விட்டு எரிந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய ஜீவனை, அவருடைய ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார், அவர் தம்முடைய ஜீவனை நம்மில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் தேவனுக்குள் மறைக்கப்பட்டு, அவருடைய வார்த்தையினால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சாத்தானால் நம்மை தொட முடியாது. நாம் அசைக்கப்பட முடியாது. எதுவுமே நம்மை மாற்ற முடியாது. வெளிப்பாட்டினால், நாம் அவருடைய வார்த்தை மணவாட்டியாகியிருக்கிறோம்.

சாத்தான் நம்மை வீழ்த்த முயற்சிக்கும்போது, தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறோம். அவர் நம்மை நோக்கிப் பார்க்கும்போது, அவர் பார்ப்பதெல்லாம் பசும் பொன்னையே. நம்முடைய நீதியே அவருடைய நீதி. நம்முடைய தன்மைகள் அவருடைய சொந்த மகிமையான தன்மைகளாகும். நம்முடைய அடையாளம் அவரில் காணப்படுகிறது. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நாம் இப்பொழுது பிரதிபலிக்கிறோம். அவர் என்னவாக இருந்து வருகிறார் என்பதை நாம் இப்பொழுது வெளிப்படுத்துகிறோம்.

அவர் சாத்தானிடம், “நான் அவளில் எந்த குற்றத்தையும் காண்கிறதில்லை. அவள் பரிபூரணமாக இருக்கிறாள். எனக்கு அவள், என்னுடைய மணவாட்டியாய், உள்ளும் புறமும் மகிமையாயிருக்கிறாள். ஆதி முதல் அந்தம் வரை, அவள் என்னுடைய கிரியையாய் இருக்கிறாள், என்னுடைய கிரியைகள் யாவும் பரிபூரணமாக இருக்கின்றன. உண்மையில், அவளில் எனது நித்திய ஞானமும் நோக்கமும் அமைந்து வெளிப்படுத்தப்படுகிறது" என்று சொல்வதற்கு எவ்வளவாய் விரும்புகிறார்.

“என்னுடைய அன்பான மணவாட்டியை நான் பாத்திரமானவளாகக் கண்டேன். பொன்னானது அதிக அடிகளை சுமப்பது போல, அவள் எனக்காக வேதனையை சுமக்கிறாள். அவள் சமரசமாகிவிடாமல், தலை வணங்காமல், அல்லது உடைந்து போகாமல், ஒரு அழகான காரியமாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். இந்த ஜீவியத்தின் அவளுடைய சோதனைகளும் பரிசோதனைகளும் அவளை என்னுடைய இனிய இருதயமான மணவாட்டியாக ஆக்கியிருக்கிறது.”

அது கர்த்தரைப் போன்றது அல்லவா? நம்மை எப்படி ஊக்கப்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும். அவர் நம்மிடத்தில், "ஒருபோதும் திடனற்றுப் போகாதீர்கள், ஆனால் திடப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார். அவரிடத்தில் கொண்டுள்ள நம்முடைய அன்பின் பிரயாசங்களை அவர் காண்கிறார். நாம் எதனூடாக செல்ல வேண்டும் என்பதை அவர் காண்கிறார். நாம் செய்கிற அனுதின யுத்தங்களை அவர் காண்கிறார். அவர் நம் ஒவ்வொருவர் மூலமாக ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்.

அவருடைய பார்வையில் நாம் பரிபூரணமாய் இருக்கிறோம். அவர் காலத்தின் துவக்கத்திலிருந்து நமக்காக காத்திருக்கிறார். நம்முடைய நன்மைக்காக மாத்திரமேயல்லாமல் வேற எதுவும் நமக்கு சம்பவிக்க அவர் அனுமதிக்கமாட்டார். சாத்தான் நமக்கு முன் வைக்கும் ஒவ்வொரு தடையையும் நாம் மேற்கொள்வோம் என்பதை அவர் அறிவார். நாம் அவருடைய மணவாட்டி என்பதை அவருக்கு நிரூபிக்க அவர் விரும்புகிறார். நாம் அசைக்கப்பட முடியாது. ஆதியிலிருந்தே அவர் காத்துக் கொண்டிருப்பது நமக்கே. அவரிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது.

அவர் உதட்டிலிருந்து நம்முடைய செவிக்கு பேசும்படியாக தம்முடைய வல்லமையுள்ள தூதனாகிய செய்தியாளரை நமக்கு அனுப்பினார். அவர் என்ன கூறினார் என்பதை குறித்த கேள்விகளே இல்லாத இருக்கும்படிக்கு அவர் அதை ஒலிப்பதிவு செய்திருந்தார். அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருமளவும் அவள் அதை புசிக்கும்படியாக அவர் அதை சேமித்து வைத்திருந்தார்.

நாம், “ஒலி நாடாவை கேட்கிற ஜனங்கள்” என்று கூறி மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு, நம்மை துன்பப்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் களிகூருகிறோம், ஏனென்றால் இதைத்தான் நாம் செய்யும்படி அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றவர்கள் செய்யும்படி வழிநடத்தப்படுவதை அவர்கள் உணருகிற விதமாக செய்ய வேண்டும் ஆனால் நம்மைப் பொறுத்தவரை, நாம் ஒரே சத்தமான, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

வேறு எதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நாம் வேறு எதையும் புரிந்து கொள்ள முடியாது. நாம் வேறு எதுவும் செய்ய முடியாது. நாம் வேறு எதையும் ஏற்க முடியாது. மற்ற விசுவாசிகள் செய்யும்படி உணருகிற கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு நாம் எதிராக இல்லை, ஆனால் இதைத்தான் நாம் செய்யும்படி தேவன் நம்மை வழிநடத்தியிருக்கிறார், நாம் இங்கே தரித்திருக்க வேண்டும்.

நாம் திருப்தியடைந்துள்ளோம். நாம் தேவனுடைய சத்தத்தால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் நம்மால் “ஆமென்” என்று கூற முடியும். இதுவே நமக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது. நாம் வேறு எதுவும் செய்ய முடியாது.

எங்களோடு இணைந்து கொள்ள வருமாறு ஒவ்வொருவரையும் அழைக்க நான் விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம் பூமியில் இருந்தபோது எப்படிச் செய்தாரோ, அந்தச் ஆராதனைகளையே நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு மாம்சத்தில் இல்லையென்றாலும், ஒலிநாடாக்களில் தம்முடைய மணவாட்டிக்கு தேவன் என்ன கூறியிருக்கிறாரோ அதுவே முக்கியமான காரியமாய் இருக்கிறது.

தொலைபேசி இணைப்பின் மூலமாக அவர் உலகத்தையே அழைத்தார், ஆனால் அவர்கள் விரும்பினால் மாத்திரமே. தேவனுடைய சத்தம் அவர்களுடன் ஒரே நேரத்தில் பேசுவதைக் கேட்க அவர் அவர்களை எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் சேர்த்தார். தேவனுடைய தீர்க்கதரிசி அதைத்தான் செய்தார், எனவே அவர் என்ன செய்தார் என்பதை நான் என் முன்மாதிரியாக செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, தேவனுடைய செய்தியாளர் இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M என்ற செய்தியை எங்களுக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தொலைபேசி இணைப்பில் எங்களுடன் இணைந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 24வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரேயர் 7வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14

 

 

சனி, 10 ஆகஸ்ட், 2024

அன்புள்ள ஒரே குழுவே,

நாம் மிகுந்த எதிர்பார்ப்பிலும் மற்றும் எதிர்பார்ப்புகளோடும் இருக்கிறோம். நம்மால் அதை உணர முடிகிறது, ஏதோ நடக்கப் போகிறது. உம்முடைய சத்தத்தைக் கேட்க; எதையும், நீர் கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும் பெற்றுக் கொள்ள, நாங்கள் ஒன்றிணைக்கப்பட விரும்புகிறோம்; எங்களுக்கு அது வேண்டும். நாங்கள் அதனுடைய பாகமாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிறோம்.

என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? தேவன் சரித்திரத்தை படைத்துக் கொண்டிருக்கிறார். தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அது எப்போதும் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எல்லா விமர்சகர்களையும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் கேள்விப்பட்ட செய்தியின் பருந்துகளையும் கொண்டுவருகிறது, ஆனால் அது அவருடைய கழுகுகளையும் கூட ஒன்றாகக் கொண்டுவருகிறது. ஏனென்றால், பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் வந்து கூடும்.

இது தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் பதில், இதோ நான் உங்களுக்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை ரூபகாரப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறதாயுள்ளது. தேவன் சரித்திரத்தை படைத்துக் கொண்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இது மூன்றாவது இழப்பு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகும்.

நான் செய்கிறதெல்லாமே எல்லா சபை தலைவர்களுடனும் உடன்படவில்லை என்பது போல் தென்படுகிறது என்பதும், மற்றும் அவர்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் கண்டனம் செய்வது போல் தென்படுகிறது என்பதும்,எனக்குத் தெரியும். ஆனால் இயங்கு பொத்தானை அழுத்தி, செய்தியை, அந்த சத்தத்தைக் கேட்டு, அதைப் பின்பற்றுகிற முன்குறிக்கப்பட்டிருக்கிற அந்த குறிப்பிட்ட ஜனக் குழுவாய் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

நாம் கூட்டத்தை புறக்கணிக்கிறோம். நாம் அவிசுவாசியின் விமர்சனத்தை புறக்கணிக்கிறோம். நமக்கு அவர்களுடன் எந்த வாக்குவாதமும் இல்லை. நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது, அது விசுவாசித்து, நம்மால் அதைக் குறித்து பெற்றுக் கொள்ள முடிந்த ஒவ்வொரு துணுக்கையும் பெற்றுக் கொள்ளும்படி, இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்த மரியாளைப் போல அதை பதித்துக் கொள்வதேயாகும்.

நமக்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. நாம் கேட்க வேண்டிய ஒவ்வொரு காரியமும் ஒலிநாடாக்களில் உள்ளது என்றே நாம் விசுவாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தைக்கு வியாக்கியானமே தேவையில்லை.

வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுகிறது. ஐயா, இது என்ன சமயம், இது என்ன கவர்ச்சி? தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறாரே! அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

கவர்ச்சி என்ன? தேவன், மீண்டும் ஒருமுறை, தம்முடைய வார்த்தையை நிறைவேற்றி, சபைகளிலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும், வீடுகளிலும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும் தேச முழுவதிலும் உலகத்தை சுற்றிலும் தம்முடைய மக்களை ஒன்று கூட்டுகிறார்.

பல மணி நேர இடைவெளியில் நாம் இருக்கிறோம், ஆனால் கர்த்தாவே, நாங்கள் ஒரே குழுவாகஒன்று கூடி, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்திருக்கிறோம். உம்முடைய தீர்க்கதரிசி இங்கே இருந்தபோது உம்முடைய மணவாட்டியை ஒன்றிணைக்க அவர் என்ன செய்தாரோ அதையே செய்யும்படி பின்பற்ற நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவர் செய்ததே என்னுடைய உதாரணமாக இருக்கிறது.

இங்குள்ள பிரான்ஹாம் கூடாரத்தில் அனைவரையும் அமர வைக்க எங்களிடம் இடம் இல்லை, எனவே அவர் அப்போது செய்தது போல், நாம் தொலைபேசி மூலம் பரப்பும்படி அவர்களுக்கு வார்த்தையை அனுப்ப வேண்டும். நாங்கள் இங்கே, ஜெபர்சன்வில்லில், நம்முடைய சொந்த சபைகளில், நாம் இங்கே கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

இந்த கடைசி நாட்களில் அநேகர் உம்முடைய பரிபூரண சித்தத்திற்கு புறம்பாக உமக்கொரு சேவையை செய்ய முயற்சிப்பார்கள் என்று நீர் எங்களிடத்தில் சொல்லியிருக்கிறீர். உண்மையான பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்ட கள்ளப் போதகர்கள் பலர் இருப்பார்கள். கர்த்தாவே, உறுதியாக இருப்பதற்கு எங்களுக்குத் தெரிந்த ஒரே வழி, வார்த்தையுடன், ஒலிநாடா போதனையுடன் தரித்திருத்தலே, உம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தோடு தரித்திருப்பதாகும்.

இதை பின்பற்றுவதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாத உம்முடைய முன்குறிக்கப்பட்ட வித்தாய் நாங்கள் இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம்; இது எங்களுக்கு ஜீவனை பார்க்கிலும் மேலானதாக இருக்கிறது. எங்களுடைய ஜீவியங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் அதை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கப் போகிறது? தேவன் அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவார். தேசம் முழுவதும், ஒரு தொலைபேசி பரப்புதலின் வாயிலாக, நூற்றுக்கணக்கான மக்கள் தேசம் முழுவதும், ஒரு கடற்கரையிலிருந்து மற்றொன்றிற்கு, வடக்கிலிருந்து தெற்கே, கிழக்கிலிருந்து மேற்கு வரை ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைப்பார்கள்.

உலகெங்கிலும் உள்ள வெளிநாடுகளில் இருந்தும், நாம் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைப்போம். நீரோ, "எங்களுக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை, நாங்கள் ஒரு ஜெப வரிசையினூடாக வர வேண்டியதில்லை, எங்களுக்கு விசுவாசம் மாத்திரமே தேவை" என்று எங்களிடத்தில் சொன்னீர்.

நாங்கள் எங்களுடைய கரங்களை உயர்த்தி, "நான் ஒரு விசுவாசி" என்று கூறுவோம். என்ன நடக்கப் போகிறது?

சாத்தானே நீ தோற்கடிக்கப்பட்டாய். நீ ஒரு பொய்யன். மேலும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், ஊழியக்காரர் என்ற முறையில், நீ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜனங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கட்டளையிடுகிறோம், ஏனெனில், “என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்” என்று எழுதியிருக்கிறதே.

அன்புள்ள தேவனே, அந்த நாளில் கல்வாரி மலையின் மேல் ஒரு கவர்ச்சியினால், எல்லா சுகவீனங்களையும், வியாதிகளையும், பிசாசினுடைய எல்லாக் கிரியைகளையும், நீர் தோற்கடித்துவிட்ட பரலோகத்தின் தேவனாயிருக்கிறீர். நீர் தேவனாயிருக்கிறீர். ஜனங்கள் உம்முடைய தழும்புகளால் குணமாகிறார்கள். அவர்கள் விடுதலையாயிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார்!

நாங்கள் 65-0725E மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன? என்ற செய்தியை கேட்க போகிறபடியால், அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான, எங்களுடன் நீங்கள் வந்து செவிகொடுக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில் ஒன்று கூடுவோம்.

ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்க, ஒன்று கூடி வருவதன் மூலம் நாம் ஒரு ஸ்தாபனம் என்று சிலர் உணரலாம், ஆனால் சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருந்திருந்தால், உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியை ஒன்று திரட்டி நாம் என்ன செய்கிறோமோ அதைச் சரியாகச் செய்வார் என்றே நான் நம்புகிறேன். அதே நேரத்தில் நீங்கள் அவருக்குச் செவிகொடுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 21:1-4
சகரியா 9:9 / 14:4-9
ஏசாயா 29:6
வெளிப்படுத்தின விசேஷம் 16:9
மல்கியா 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 14:12 / 15:1-8
பரி. லூக்கா 17:22-30

 

 

சனி, 3 ஆகஸ்ட், 2024

அன்புள்ள மறைவான மன்னாவை புசிப்பவர்களே,

தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தம்முடைய ஏழாம் தூதனான செய்தியாளரை அனுப்பினாரேயன்றி; மற்றொரு மனிதனை அல்ல, ஒரு மனிதக் குழுவை அல்ல, ஆனால் ஒரு மனிதனையே, ஏனெனில் செய்தியும் அவருடைய செய்தியாளரும் ஒன்றே. தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் அதை மனித உதடுகளின் மூலம் தம்முடைய மணவாட்டியிடம் பேசினார், அவர் அதை எப்படி சொன்னாரோ அதை அப்படியே நாம் விசுவாசிக்கிறோம்.

இன்றைக்கு எந்த சத்தம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்றும், அது நம்மிடத்தில் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் நாம் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நித்திய இலக்கு அந்த தீர்மானத்தைப் பொறுத்தது; எனவே நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் எது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். எந்த சத்தம் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறது? எந்த சத்தம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையதாயிருக்கிறது? இது என்னுடைய சத்தமாய், என்னுடைய வார்த்தைகளாய், என்னுடைய உபதேசமாக இருக்க முடியாது, ஆனால் அது வார்த்தையாக இருக்க வேண்டும், எனவே அது நமக்கு என்ன சொல்லுகிறது என்பதை புரிந்து கொள்ளும்படிக்கு நாம் வார்த்தைக்கு செல்ல வேண்டும்.

முடிவிலே நம்மை வழிநடத்த ஐந்து விதமான ஊழியத்தை அவர் எழுப்புவார் என்று அது நமக்குச் சொல்கிறதா? அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை பெற்றிருப்பதை நாம் வார்த்தையில் தெளிவாகக் காணலாம்; மிக முக்கியமான ஸ்தானங்கள், ஆனால் மணவாட்டியாய் இருக்க நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று எங்காவது வார்த்தை கூறுகிறதா?

தேவ சித்தத்திற்கு புறம்பாக அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சிக்கும் அநேக மனிதர்கள் இந்த கடைசி நாட்களில் எழும்புவார்கள் என்று தீர்க்கதரிசி நமக்கு சொன்னார். அவர் அவர்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பார், ஆனால் அவருடைய மணவாட்டியை வழிநடத்த அது அவருடைய பரிபூரண வழி அல்ல. அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினுடைய சத்தத்தை விசுவாசித்து கேட்பதே அவருடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது என்றும், அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வருவதாகவும் அவர் கூறினார். ஏனென்றால் அது, அது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறாவது என்பதை உடையதாய் இருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய தூதனை அனுப்பினார்; அதனால்தான் அவர் இவரைத் தெரிந்து கொண்டார்; அதனால்தான் அவர் அதை ஒலிப்பதிவு செய்திருந்தார். இதுவே அவருடைய மணவாட்டிக்கு ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரமாயும், மறைவான மன்னாவுமாயிருக்கிறது.

ஏனென்றால் இந்த ஏழு சபை காலங்களிலுமே, மனிதர்கள் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடைய சொந்த வார்த்தைக்கே மதிப்பு கொடுக்கிறார்களேத் தவிர, வேறொன்றையுமே நான் காணாதிருக்கிறேன். ஆகையால் நான் இந்த முடிவு காலத்திலே உங்களை என்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இது முடிவு பெற்றாயிற்று. நான் உங்களிடத்தில் சரியாக பேசப் போகிறேன். ஆம், நான் இங்கே சபையின் மத்தியில் இருக்கிறேன். உண்மையும், சத்தியமும், ஆமெனின் தேவனானவர் தம்மை வெளிப்படுத்துவார். அது என்னுடைய தீர்க்கதரிசி மூலமாய் இருக்கும்" என்கிறார்./u>. ஒ, ஆம், அது அவ்வண்ணமாகவே இருக்கிறது.

ஏழு சபை காலங்களிலுமே மனிதர் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடையதற்கே மதிப்பு கொடுக்கிறார்கள். இது இப்போது நம்மிடையே நடந்து கொண்டிருக்கவில்லையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டுமல்லவா? "சபையில் ஒலிநாடாக்களை இயக்காதீர்கள், ஆனால் உங்கள் போதகர் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், உங்கள் வீட்டில் ஒலிநாடாக்களை போட்டுக் கேளுங்கள்." அவர்கள் அவருடைய சத்தத்தை மிக முக்கியமான சத்தமாக ஒலிநாடாவில் இயக்குவதில்லை, ஆனால் அவர்களுடைய சத்தத்திற்கே முக்கியத்துவமளிக்கின்றனர்.

அவர்கள் தங்களையும், தங்களுடைய ஊழியத்தின் முக்கியத்துவத்தையும், மணவாட்டியை வழி நடத்துவதற்கும், வார்த்தையை கொண்டு வருவதற்குமான தங்களுடைய அழைப்பையும் ஜனங்களுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மணவாட்டி அதன் பேரில் நிற்க முடியாது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். அவர்கள் அதன் பேரில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; அது தேவனுடைய சத்தமேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அதைத்தான் வார்த்தை கூறுகிறது.

இன்றைக்கு ஜனங்களுடைய மனதில் உள்ள கேள்வி என்னவென்றால்: தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த யாரைத் தெரிந்து கொண்டார், ஒலிநாடாக்களையா அல்லது ஐந்து விதமான ஊழியத்தையா? அந்த ஊழியம் மணவாட்டியை பரிபூரணப்படுத்துமா? அந்த ஊழியம் மணவாட்டிக்கு வழிகாட்டுமா? தேவனுடைய வார்த்தையின்படி, அது ஒருபோதும் அவருடைய வழியாயிருந்ததேயில்லை.

இந்தச் செய்தியை பல ஆண்டுகளாகப் பின்பற்றி விசுவாசிப்பதாக கூறுகிற பல மனிதர்கள் இன்று இருக்கிறார்கள், ஆனால் இப்போது நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக தங்களுடைய ஊழியத்தையே முன்வைக்கிறார்கள்.

பிறகு எந்த ஊழியத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள்? உங்கள் நித்திய இலக்கை எந்த ஊழியத்தில் வைப்பீர்கள்? அவர்கள் அனைவரும் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். நான் அதை மறுக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை, ஆனால் ஐந்து விதமான ஊழியத்தின் பதவிகளில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க ஊழியர்களில் சிலர், "இது தேவனுடைய சத்தம் அல்ல, இது வெறுமனே வில்லியம் பிரான்ஹாமின் சத்தம்" என்று கூறுகிறார்கள். மற்றவர்கள், "ஒரே- மனிதனுடைய செய்தியின் நாட்கள் முடிந்துவிட்டன" அல்லது "இந்தச் செய்தி முற்றிலுமானதல்ல" என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறாரா?

நூற்றுக்கணக்கான தங்களுடைய தொடர் கூட்டங்களில் பிரசங்கித்த புருஷர்கள்; ஐந்து விதமான ஊழியத்தின் மகத்தான தலைவர்கள், இப்போது செய்தியை மறுதலித்து, "இந்த செய்தி தவறானது" என்று கூறுகிறார்கள்.

இன்றைக்கு பெரும்பாலான எல்லா ஊழியமும், “நீங்கள் சபையில் தேவனுடைய தூதனின் சத்தத்தைக் கேட்க வேண்டாம், உங்களுடைய வீடுகளில் மாத்திரமே கேட்க வேண்டும்” என்றும், சகோதரன் பிரான்ஹாம் சபையில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று ஒருபோதும் கூறவேயில்லை” என்றும் கூறுகிறது.

அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்றும், மனுஷகுமாரன் பேசுகிறார் என்றும் விசுவாசிப்பதாக கூறிவிட்டு, இப்படிப்பட்ட ஒரு வஞ்சகமான அறிக்கைக்கையை நம்புகிற ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ என்னால் நம்ப முடியவில்லை, இது உங்களுடைய வயிற்றில் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் மணவாட்டியாய் இருந்தால், அது அவ்வாறு செய்யும்.

தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்த சிந்தையை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் தம்முடைய ஜனங்களை வழிநடத்த எப்போதும் ஒரு மனிதனையே தெரிந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் அவர்களுடைய ஸ்தானத்தை பெற்றிருக்கிறார்கள், ஆனால் அவர் ஜனங்களை வழிநடத்தும்படி தெரிந்து கொண்டவரிடத்திற்கே ஜனங்களை அவர்கள் வழிநடத்த வேண்டும். ஜனங்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த ஊழியக்காரர்கள் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறதைக் கேளுங்கள். தீர்க்கதரிசியினுடைய ஊழியத்திற்கு முன்பாக தங்களுடைய ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் மேற்கோள்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி ரூபகாரப்படுத்தப்பட்டு, அவர் நிரூபித்திருக்கிற தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் எந்த மனிதனுடைய ஊழியம் மிக முக்கியமானதாக இருக்க முடியும்?

உண்மையாகவே அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்கள், அவர்கள் மேல் உண்மையான பரிசுத்த ஆவியிருக்க முடிந்தும், தவறாய் இருக்கிறார்கள் என்று அவர் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். உறுதியாக இருப்பதற்கு ஒரு வழி மாத்திரமே உள்ளது, மூல வார்த்தையுடன் தரித்திருங்கள், ஏனெனில் இந்த செய்தியும் செய்தியாளரும் ஒன்றே. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படிக்கு தேவன் ஒரு சத்தத்தை மாத்திரமே தெரிந்துகொண்டார்…ஒன்றே.

ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தத்திலிருந்து தேவனுடைய வார்த்தையை கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவும் இல்லை என்று உண்மையான ஊழியம் உங்களுக்கு சொல்லும். அவர்கள் பிரசங்கிக்கலாம், போதிக்கலாம் அல்லது அவர்கள் என்ன செய்ய அழைக்கப்பட்டாலும், அவர்கள் தேவனுடைய சத்தத்தை முதலில் வைக்க வேண்டும்; ஆனால் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்களுடைய ஊழியத்தையே முதலில் வைக்கிறார்கள். அவர்கள் விசுவாசிப்பதை அவர்களின் செயல்களே நிரூபிக்கின்றன.

சகோதரன் ஜோசப் ஊழியர்களை நம்புகிறதில்லை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய பிரசங்க பீடங்களில் தேவனுடைய சத்தத்தை முன்வைப்பதை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் தவிர்க்கிறார்கள். அவர் சபைக்கு செல்வதை நம்புகிறதில்லை. அவர்கள் ஒரு மனிதனை ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஜோசப்பின் கோட்பாட்டை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் அதே ஒலிநாடாக்களை இயக்கி கேட்பதன் மூலம் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். முக்கிய கேள்வியிலிருந்து மக்களை திசை திருப்புதல். அவர்களுடைய ஊழியம்தான் முதன்மையானது என்று தங்களுடைய ஜனங்களுக்கு போதிப்பதன் மூலம் அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய செயல் நிரூபிக்கிறது.

ஜனங்கள் ஒரே ஒலிநாடாவை ஒரே நேரத்தில் கேட்பது ஒரு ஸ்தாபனம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருந்தபோது, ஒரே நேரத்தில் ஜனங்கள் எல்லோரும் செய்திகளை தொலைபேசி இணைப்பின் மூலம் சரியாக கேட்கும்படி செய்யவில்லையா?

நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், சகோதரன் பிரான்ஹாம் இன்றைக்கு மாம்சத்தில் இங்கே இருந்திருந்தால், ஒரே நேரத்தில் அவர் பேசுவதை கேட்க எல்லா மணவாட்டியையும் தொலைபேசி இணைப்பில் இணைத்திருக்க மாட்டாரா? தேவன் அவரை பரமவீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ததைப் போல மணவாட்டியை தன்னுடைய ஊழியத்தின் பேரில் ஒன்றாகக் கொண்டுவர முயற்சிக்கமாட்டாரா?

நான் இங்கே ஒன்றை இடையில் கூறட்டும். விமர்சகர்கள் சொல்வார்கள், பாருங்கள், அவர் மனிதனின் பேரில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்; அவர்கள் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற ஒரு மனிதனை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்!! அதைக் குறித்தும் கூட வார்த்தை என்ன கூறுகிறது என்பதையும் நாம் பார்ப்போமாக:

ஏழாம் தூதனின் நாட்களில், லவோதிக்கேயா காலத்தில், அதனுடைய செய்தியாளன் பவுலுக்கு வெளிப்பட்டது போன்ற தேவ ரகசியங்களை. வெளிப்படுத்துவார். அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுவார். அந்தத் தீர்க்கதரிசியை அவருடைய சொந்த நாமத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அந்தத் தீர்க்கதரிசியினுடைய ஊழியத்தின் நற்பலனைப் பெறுவார்கள்.

மற்ற எல்லாவற்றையும் விட இது பிசாசுக்கு கோபத்தை உண்டாக்கப் போகிறது, மேலும் அவன் என்னை நோக்கி இன்னும் அதிகமாக தாக்குவான், ஆனால் ஜனங்களே, நீங்கள் இதை வார்த்தையுடன் சரிபார்ப்பது நல்லது. நான் இதைக் கூறினேன் என்பதனால் அல்ல, இல்லை, அப்படியானால் நான் மற்ற மனிதனைப் போல இருப்பேன், ஆனால் உங்கள் இருதயங்களையும் சிந்தனைகளையும் திறந்து வார்த்தையால் சரிபார்க்கவும். வேறு எந்த மனிதனாவது உங்களுக்கு கூறுவதையோ அல்லது வியாக்கியானிப்பதையோ அல்ல, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசி என்ன சொன்னார் என்பதையேயாகும்.

இந்தக் கடிதத்திற்குப் பிறகு அவர்கள் உங்களுக்கு மேற்கோளுக்குப் பின் மேற்கோளை மேற்கோளாக கொடுப்பார்கள், மேலும் ஒவ்வொரு மேற்கோளுக்கும் நான் ஆமென் என்று கூறுகிறேன், ஆனால் முக்கியமான காரியத்தைக் குறித்து என்ன? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்க வேண்டும் என்றா அல்லது அவர்களுடைய ஊழியத்திற்கு செவி கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல அவர்கள் மேற்கோள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் செய்தி, தீர்க்கதரிசி என்று கூறினால், அப்பொழுது அந்த சத்தத்தை உங்களுடைய சபையில் முதலில் வைக்கும்படி அவர்களுக்கு சொல்லுங்கள்.

மனித இயல்பின் அடிப்படையில், எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தில் ஒரு சிறிய குறிப்புகளில்கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர்.

அங்குதான் காரியமே உள்ளது. இந்த ஒரு மேற்கோள் அது முடியாது என்று உங்களுக்கு சொல்கிறது, மேலும் அது மனிதக் குழுவாக இருக்காது. இது மனித இயல்பின் அடிப்படையில் மட்டுமேயுள்ளபடியால், இது ஜனங்களை ஒன்றிணைக்கும் ஊழியம் அல்ல, அவர்கள் முக்கிய கோட்பாடுகளின் குறைவான விஷயங்களிலேயே பிரிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை, எனவே நீங்கள் மூல வார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.

அப்படியானால் இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப் போகின்றபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்?

யார் நம்மை வழிநடத்துவார்? பிழையற்ற வல்லமை கொண்ட ஒரு சத்தம் மணவாட்டியை வழிநடத்த வேண்டும்.

அதாவது பவுலின் நாட்களில் பரிபூரணமாக அளிக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தையை நாம் மீண்டும் ஒருமுறை பெற்றுக் கொள்வோம் என்பதை அதன் பொருளாகும்.

மகிமை…இது பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு எந்த குறுக்கீடும் தேவையில்லை, அது பரிபூரணமாக கொடுக்கப்பட்டபடியால், மணவாட்டியாகிய, நாம், ஒவ்வொரு வார்த்தையையும் பரிபூரணமாக புரிந்துகொண்டு விசுவாசிக்கிறோம்.

அங்குதான் காரியம் உள்ளது. அவர் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

அவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

அவர் யோவான் ஸ்நானனைப் போன்றும், பண்டைய எலியாவைப் போன்றும், உலகமார்க்கத்திற்கும், கல்விக்கும், ஸ்தாபனத்திற்கும் தொடர் பற்றவராயுள்ள ஒருவரையே அனுப்புகிறார்.

அவர் தேவன்கூறுவதை மாத்திரமே கேட்பார்.

அவர், "கர்த்தர் உரைக்கிறதாவதை" உடையவராயிருந்து, தேவனுக்காகவே பேசுவார்.

அவர் தேவனுக்காக பேசும் சத்தமாயிருந்து.

அவர் மல்கியா 4:6-ல் உரைக்கப்பட்டிருக்கிறபடியே, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.

அவர் கடைசி காலத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை திருப்பிக் கொண்டு வருவார், பவுல் கூறினதுபோன்ற சரியான சத்தியத்தைக் கூறுகிற ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கே அவர்கள் செவி கொடுப்பர்.

அவர்கள் கொண்டிருந்த சத்தியத்தைப் போன்ற சத்தியத்தையே அவர் திரும்ப அளிப்பார்.

அந்த நாளில் அவரோடுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை உண்மையாய் வெளிப்படுத்துகிறவர்களுமாயும், அவருடைய சரீரமாயும், அவருடைய சத்தமாயுமிருந்து, அவருடைய கிரியைகளைச் செய்கிறவர்களுமாயிருப்பர். அல்லேலூயா! உங்களுக்கு அது புரிகின்றதா?

நாம் அதை பார்க்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். நான் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, சரியான சத்தியத்தை அவர் நமக்கு அளிக்கவுள்ளபடியால், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை இணைக்கும் சத்தமான, தேவனுடைய வாய் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால் எங்களுடன் சேர்ந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

65-0725M — கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

 

 

சனி, 27 ஜூலை, 2024

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்