
அன்புள்ள குட்டையில் உள்ள லீலிபுஷ்பங்களே,
பிப்ரவரி 28, 1963 அன்று, இடி முழங்கியது. வ்வுயூ-வ்வுயூ, ஏழு தூதர்கள் நித்தியத்திலிருந்து வந்து தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கு தோன்றினர். அவர் கூர்நுனிகோபுர வடிவிலான தூதர்களின் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார். அதன்பின்னர், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட மேகம் அரிசோனா முழுவதும் ஆகாயத்தில் தோன்றியது. ஏழு முத்திரைகளை திறப்பதற்கு தேவன் தம்முடைய ஏழாம் தூதனை திரும்பவும் ஜெபர்சன்வில்லுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதற்கு அது ஒரு அடையாளமாயிருந்தது.
பிப்ரவரி 28, 2025 அன்று, ஏழு கிரகங்கள் ஆகாயத்தில் ஒரே வரிசையில் இருந்தன. மணவாட்டி ஏழு முத்திரைகளைக் கேட்கக் கூடி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துகிற ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டை கேட்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியுடன் கூடிவர நீங்கள் கர்த்தரால் தாமே அழைக்கப்படுகிறீர்கள்.
தீர்க்கதரிசிகளும், ஞானிகளும் காலத்தின் துவக்கத்திலிருந்து ஆவலோடு காத்துக்கொண்டிருந்தது இந்நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய கல்யாண விருந்துக்கு தம்முடைய உண்மையான மணவாட்டியாகிய நமக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு திரும்ப வரும்படியாக, இந்த கடைசி நாட்களில் தேவனுடைய மறைக்கப்பட்ட இரகசியங்களை திறக்கவும் வெளிப்படுத்தவும் தேவன் பலமுள்ள தூதனை பூமிக்கு அனுப்புவதாக கூறினார்.
நான் இப்புதிய சபையில் நுழைந்ததும் என் முதல் வேலையாக, அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபனுக்கும் வாலிபப் பெண்ணுக்கும் விவாகம் செய்து வைத்தேன். அந்நாளின் வைபவத்திற்கென ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரணாக நான் இருப்பேன் என்பதற்கு இது ஓர் அடையாளமாயிருப்பதாக.
இந்த நாளில், இந்த வார்த்தை நிறைவேற்றப்படுகிறது. தேவன் தம்முடைய தூதனின் மூலமாக பேசி, தம்முடைய மணவாட்டியை அந்த நாளின் வைபவத்திற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் அவருடைய அறிவுரைகளை கடிதம் மூலம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறாள்.
சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களின் மூலமாக நாம் என்ன கேள்விப்பட்டிருக்கிறோம்? ஆகாரம், இதோ அது உள்ளது, இதுதான் இடம். ஒரு சத்தம் அவரிடத்தில், “ஆகாரத்தை கொண்டு வந்து, அதை சேமித்து வை. அவைகளை இங்கே வைத்திருப்பதற்கான ஒரே வழி அவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்காகவேயாகும்” என்று கூறினது.
அவர் "வார்த்தையுடன் தரித்திருங்கள்" என்பது தான் அர்த்தம் என்று பலர் நம்புகிறார்கள், அது உண்மைதான், அவர் அதைக் கூறிக் கொண்டிருக்கிறார்; ஆனால் மணவாட்டியோ மணவாளன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற வாக்கியங்களுக்கு இடையேயான மறைபொருளைக் கூட கூர்ந்து கவனித்து வாசிப்பாள்.
இந்த ஸ்தலத்தில் இங்கே தேவன் எனக்கு அருளின தரிசனங்களும்கூட தவறாக அர்த்தங் கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாகத்தான், “ஒலி நாடாக்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் சொல்லுங்கள், தரிசனங்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் கூறுங்கள்” என்று ஒலிநாடாக்களில் நான் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் நன்றாக விழித்திருந்தால் ஒன்றை உங்களால் காணமுடியும். பாருங்கள்? நான் அதை என் கையில் பிடித்து உங்களுக்குக் காண்பிக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.
அவர் தரிசனங்களுக்கு வியாக்கியானங்களை கொடுத்த பிறகும் கூட, தரிசனங்களும் கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தன. அதைத்தான் அவர் நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், நீங்கள் குழப்பமடையவோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லையென்றால், இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தம் என்ன கூறுகிறது என்பதை சரியாக கேளுங்கள்.
வார்த்தை கூட்டு அர்த்தங்களை கொண்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இது என்னுடைய வியாக்கியானம்: சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் அனைத்தும் ஒரே காரியத்தைக் கூறின; ஒலிநாடாக்களுடன் தரித்திருங்கள். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், ஒலிநாடாக்களுக்கு செல்லுங்கள். ஒலிநாடாக்கள் தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமாய் இருக்கின்றன. ஒலிநாடாக்களில் உள்ளதை அப்படியே கூறுங்கள்; அதில் எதையும் சேர்க்காதீர்கள். ஒலிநாடாக்கள் மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளன. வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு தனியாக வருகிறது. தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாயிருக்கிறார். தீர்க்கதரிசி மணவாட்டியை அழைத்து வழிநடத்த வேண்டியதாயிருந்தது. ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளதைக் கொண்டே நான் நியாயந்தீர்க்கப்படுவேன்.
ஒவ்வொரு காரியமும் எனக்கு ஒலிநாடக்களையே சுட்டிக் காட்டுகின்றன.
என்னுடைய அருமையான குட்டையில் உள்ள லீலி புஷ்பங்களே, எனக்கு, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இன்றைக்கான எளிமையில் தேவன் உள்ளதாகும்.
ஒவ்வொரு வாரமும் நான் அதிக உற்சாகமடைகிறேன்; அவருடைய மணவாட்டி செய்தியைக் கேட்க கூடிவருகையில் இன்று என்ன வெளிப்படுத்தப்பட போகிறது? பரிசுத்த ஆவியானவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தும்போது, அவர் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்வார் என்பதை நான் அறிவேன். நான் உணர்கிறேன், எந்த நேரத்திலும், அவர் நம்முடைய கலியாண விருந்துக்கு வந்து நம்மை அழைத்துச் செல்வார்.
நாம் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். நாம், தேவனிடத்திலிருந்து வந்த சந்ததிகளாய் இருக்கிறோம். நாம் பூமியின் சுதந்திர வாளியாயிருக்கிறோம். நாம் இயற்கையை கட்டுப்படுத்துவோம். நாம் சிருஷ்டிக்கும்படி உரைப்போம். நாம் மணவாட்டியாய் இருக்கிறோம்!
நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நாம் நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்கு நம்மை பிரதிஷ்டை செய்வோமாக!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தேதி: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2025
செய்தி: தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல் 63-0317M
நேரம்: பிற்பகல் 12:00, ஜெபர்சன்வில் நேரம்.