காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 9 நவம்பர், 2024

அன்புள்ள பிரகாசிக்கப்பட்ட மணவாட்டியே,

எல்லா காலங்களிலும் அவருடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் ஒரு மிகச் சிறிய குழு எப்போதும் இருந்திருக்கிறது என்பதை கர்த்தர் நமக்கு எப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர்கள் சந்துருவின் வஞ்சக வலையில் விழவில்லை, ஆனால் தங்களுடைய நாளுக்கான வார்த்தைக்கு உண்மையாகவும் உத்தமமாகவும் இருந்தார்கள்.

ஆனால் கர்த்தர் நம்மைவிட பெருமை கொண்டிருந்த அல்லது அதிக நம்பிக்கை கொண்ட ஒரு காலமோ அல்லது ஒரு குழுவோ இருந்ததில்லை. நாம் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட சீமாட்டியான மணவாட்டியாய் வஞ்சிக்கப்படாத, முக்கியமாக, வஞ்சிக்கப்பட முடியாததாயும் கூட இருக்கிறோம்; ஏனென்றால் நாம் மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றுகிறோம்.

எல்லாக் காலங்களிலும் இரண்டு குழுக்கள் இருந்ததை அவர் நமக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார், இருவருமே தேவனிடமிருந்து தங்களுடைய வெளிப்பாட்டையும் தேவனுடனான தங்களுடைய உறவையும் பறைசாற்றுகிறார்கள். ஆனால் கர்த்தர் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார் என்றும். அவர் நம்முடைய எண்ணங்களைக் கண்காணிக்கிறார் என்றும். அவர் நம்மிடம் சொன்னார். நம்முடைய இருதயத்தில் உள்ளதை அவர் அறிவார். தீர்க்கதரிசியோடும் அவருடைய வார்த்தையோடும் தரித்திருப்பதன் மூலம் நம்முடைய கிரியைகளை அவர் காண்கிறார், அவை நமக்குள் என்ன இருக்கிறது என்பதன் ஒரு திட்டவட்டமான வெளிப்படுத்துதலாகும். நம்முடைய ஒவ்வொரு செயலையும் அவர் கவனிக்கும்போது நம்முடைய நோக்கங்களும், குறிக்கோள்களும் அவருக்கு தெரிந்திருக்கிறது.

ஒவ்வொரு காலத்திற்கும் அவர் அளித்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நம்முடையது என்று அவர் நமக்குச் சொல்கிறார். முடிவு பரியந்தம் அவருடைய கிரியைகளை உண்மையாகச் செய்துகொண்டே இருக்கும் நம்மை அவர் காண்கிறார். அவர் தேசங்களின் மீது நமக்கு அதிகாரம் அளித்துள்ளார். நாம் வலிமையானவர்கள் என்றும், திறமையானவர்கள் என்றும், வளைந்துகொடுக்காத ஆட்சியாளர்களாய் எந்தச் சூழலையும் மிகவும் வலிமையாகச் சமாளிக்கக்கூடியவர்கள் என்றும் அவர் நமக்கு சொல்கிறார். மிகவும் அவநம்பிக்கையான சத்துருவும் கூட தேவைப்பட்டால் நொறுக்கப்படுவான். அவருடைய வல்லமையினால் நாம் ஆட்சி செய்வதை நிரூபிப்பது, குமாரனுடையது போலவே இருக்கும். மகிமை! !

நாம் தேவனுடைய ஆழத்தை நம்முடைய ஜீவியத்தில் அனுபவித்திருக்கிறோம். இது தேவனுடைய ஆவி நமக்குள் வாசம் செய்கிற ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. அவருடைய வார்த்தையின் மூலம் தேவனைப் பற்றிய ஞானம் மற்றும் அறிவால் நம்முடைய சிந்தனைகள் பிரகாசிக்கப்படுகின்றன.

மணவாளன் எங்கிருந்தாலும் நாம் செல்கிறோம். நாம் அவரால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டோம். நாம் அவருடைய பட்சத்திலிருந்து ஒருபோதும் விலக மாட்டோம். நாம் அவருடன் சிங்காசனத்தைப் பகிர்ந்து கொள்வோம். நாம் அவருடைய மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்படுவோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்துரு எப்படி வஞ்சித்து வந்திருக்கிறான் என்பதையும், அவருடைய மூல வார்த்தையுடன் தரித்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வார்த்தையை கூட மாற்றப்பட முடியாது. ஒவ்வொரு காலத்தினரும் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை மூல வார்த்தையுடன் சேர்த்தும், அகற்றியுமுள்ளனர்; அவ்வாறு செய்வதன் மூலம் நிரந்தரமாக இழக்கப்படுகின்றனர்.

தியத்தீரா சபையின் காலத்தில், அந்த வஞ்சிப்பின் ஆவி ரோமாபுரியின் போப் மூலம் பேசி அவருடைய வார்த்தையை மாற்றியது. அவன் அதை "தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தர் (மனிதர்கள் அல்ல)" என்றே கூறியிருந்தான். எனவே இப்போது அவன் மத்தியஸ்தருக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்கிறான். இவ்வாறு, தேவனுடைய முழு திட்டமும் மாற்றப்பட்டது; ஒரு வார்த்தையை மாற்றுவதன் மூலம் அல்ல, ஆனால் ஒரு எழுத்தை மாற்றுவதன் மூலமே. சாத்தான் “மனிதர்கள்” என்பதை “மனிதன்” என்பதாக மாற்றியுள்ளானான்.

ஒவ்வொரு வார்த்தையும் ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்ட அவருடைய மூல வார்த்தையின் மூலமே நியாயந்தீர்க்கப்படும். எனவே அவருடைய மணவாட்டி ஒலிநாடாக்களோடு தரித்திருக்க வேண்டும். சத்துரு ஜனங்களுக்கு ஒரு வித்தியாசமான திட்டத்தை, ஒரு வித்தியாசமான யோசனையை, ஒரு வித்தியாசமான எழுத்தை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் மனத்தளர்வடையச் செய்ய முயற்சிக்கும்போது, மணவாட்டி மூல வார்த்தையுடன் தரித்திருப்பாள்.

ஒவ்வொரு காலத்திலும் இயேசு அந்த காலத்தின் செய்தியாளரோடு தம்மை அடையாளம் கண்டு கொள்கிறார். அவர்கள் தங்களுடைய காலத்தில் அவரிடமிருந்து வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெறுகிறார்கள். இந்த வார்த்தையின் வெளிப்பாடு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உலகத்திலிருந்து வெளியே கொண்டு வந்து இயேசு கிறிஸ்துவுடன் முழுமையாக இணைக்கிறது.

சபைக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் பல மனிதர்களை அழைத்து நியமித்துள்ளார், ஆனால் அவருடைய பரிசுத்த ஆவியானவரால் அவருடைய சபையை வழிநடத்த அவர் அழைத்த ஒரே ஒரு செய்தியாளர் மட்டுமே இருக்கிறார். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் ஒரு சத்தம் உண்டு. ஒரு சத்தம் உண்டு என்றும், அதன் மூலம் அவர் நம்மை நியாயந்தீர்ப்பார் என்றும் கூறினார். அவருடைய மணவாட்டி தங்களுடைய நித்திய இலக்கை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சத்தம் உள்ளது. அந்த சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயுள்ளது.

மணவாட்டி, நமக்கான தேவனுடைய சித்தம் பரிபூரணமானது, அவருடைய பார்வையில் நாம் பரிபூரணமாக இருக்கிறோம். அந்த பரிபூரணம் என்பது பொறுமை, தேவன் பேரில் காத்திருப்பதாயுள்ளது...தேவனுக்காக காத்திருப்பது. இது நம்முடைய குணாதிசய வளர்ச்சியின் செயல்முறை என்று அவர் நமக்கு சொல்கிறார். நமக்கு பல சோதனைகள், பரிசோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் இருக்கலாம், ஆனால் அவருடைய வார்த்தையின் மீதான உங்களின் உண்மைத்தன்மை, நாம் எதிலும் குறையில்லாமல் பரிபூரணமாகவும், முழுமையுடனும் இருக்கக்கூடிய பொறுமையை நமக்குள் ஏற்படுத்துகிறது.

விசுவாசம் கேட்பதன் மூலமும், வார்த்தையைக் கேட்பதன் மூலமும், வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருவதையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

60-1208 தியத்தீரா சபையின் காலம் என்ற வார்த்தையின் பேரிலான செய்தியை தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உன்னதங்களிலே எங்களோடு நீங்கள் ஒன்று சேர்ந்து உட்கார்ந்திருக்கையில் உங்களுடைய ஜீவியத்தின் மகத்தான சந்தோஷத்தின் அனுபவத்தை பெற வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 2 நவம்பர், 2024

அன்பான கற்புள்ள கன்னிகை மணவாட்டியே,

நீங்கள் ஏழு சபைக் காலங்களை கேட்டு மகிழ்ந்து வருகின்றீர்களா? தேவன் தம்முடைய மணவாட்டிக்கு முன் எப்போதும் இல்லாத ஒரு எழுப்புதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நாம் யாராக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும்படியான அதிக உறுதியையும், வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம், இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியின் மூலம் நமக்கு அதிக வெளிப்பாட்டையும், அதிக விசுவாசத்தையும் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது அவர் நம்மிடத்தில்: “ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலிருந்து, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் அதை உள்ளே பதியச் செய்து, நான் செய்யப்போகும் எல்லாவற்றிலும் ஆவிக்குரிய செயல்பாட்டைப் புரிந்து கொள்ள செய்வாராக. இது என்னுடைய தீர்க்கதரிசியாகிய மல்கியா 4-ன் மூலம் உரைக்கப்பட்டு என்னுடைய ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறது” என்று சொல்லுகிறார்.

அவருடைய வார்த்தைகளில் சிலவற்றைப் படித்துப் புரிந்து கொண்டு, நமது ஆவிக்குரிய சிந்தனையை அவற்றில் பொருத்துவோம்.

தேவன் தம்முடைய ஆவியினால் நிரப்பட்ட தலைவனை, தம்முடைய ஆவியினால் நிரப்பப்பட்ட குழுவின் மேல் ஏற்படுத்தினார். அவருடைய தூதன், அவர் ஒரு நாமத்தை அவன் மேல் முத்திரையிட்டு வைக்கிறார். ஆனால அவன் அதை யாருக்கும் வெளிப்படுத்தக்கூடாது; அவன் அதை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும். பாருங்கள், “அதைப் பெற்றுக் கொள்ளுகிறவனைத் தவிர வேறொருவனும் அறியான்.”

ஆகவே தேவன் தம்முடைய மணவாட்டிக்குத் தம்முடைய ஆவியால் நிரப்பப்பட்ட குழுவிற்கு ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு தலைவரைக் கொடுத்தார். தலைவரை, அவரது ஆவியினால் நிரப்பப்பட்ட குழுவிற்கு தலைவர்களை அல்ல.

இவ்வுலகத்தில் விரைவில் அந்த மகத்தான ஒளியின் தூதன் நம்மிடத்தில் வரவிருக்கிறார். அந்த மகத்தான பரிசுத்த ஆவி, வரப்போகும் அந்த வல்லமை, அது நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வழி நடத்தும்.

ஒரு மகத்தான ஒளியின் தூதன். இந்த கடைசி காலத்திற்கு மகத்தான ஒளியின் தூதன் யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம். அவர் பரிசுத்த ஆவியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார் என்றும், வருவார் என்றும் அவர் கூறுகிறார்.

அது நம்மை வழி நடத்தும். அது நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவி என்பதை நாம் உண்மையாகவே அறிந்து விசுவாசிக்கிறோம். ஆனால் அவர் தம்முடைய தூதனையும் பரிசுத்த ஆவியையும் ஒன்றாக இணைத்து, அவர் (அவருடைய பரிசுத்த ஆவியானவர்) அவருடைய மகத்தான ஒளியின் (மூலம்) நம்மை வழிநடத்துவார் என்று கூறுகிறார்.

அவர் தொடர்ந்து கூறி அவர்களை இணைக்கிறார்:

அவன் அநேகமாக அதை அறியாமல் இருக்கக்கூடும்.

பரிசுத்த ஆவியானவருக்கு அது யாரென்று தெரியாது என்று அவர் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நம்மை வழிநடத்தத் தெரிந்து கொண்ட அவருடைய பூமிக்குரிய தூதனே.

ஆனால் அவர் இந்நாட்களில் ஒன்றில் இங்கு இருப்பார். அவர்…தேவன் அவரைத் தெரியப்படுத்துவார். அவர் தன்னைத் தானே யார் என்று தெரியப்படுத்த வேண்டியதில்லை, தேவனே அவரைத் தெரியப்படுத்துவார். தேவன் தனக்குச் சொந்தமானவனை நிரூபித்துக் காண்பிப்பார்.

மீண்டும், இந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் இங்கு இருப்பார் என்று அவர் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய மணவாட்டியை வழிநடத்த அவருடைய மகத்தான ஒளியின் தூதன். அவர் தன்னை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, தேவன் தம்முடைய மகத்தான தலைவரை வெளிப்பாட்டின் மூலம் தம்முடைய மணவாட்டிக்குத் தாமே தெரியப்படுத்துவார்.

நீங்கள் ஆவிக்குரிய பொருத்தத்தை புரிந்து கொள்கிறீர்களா? தம்முடைய மணவாட்டியை வழிநடத்தத் தேவன் தெரிந்துகொண்ட ஒளியின் தூதன் யார் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? இந்த சிறு கோல் மற்ற தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இது கூறுகிறதா?

நீங்கள் உங்களுடைய மேய்ப்பனைவிட மேலாக ஒருபோதும் இருந்து விடமுடியாது. அதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், பாருங்கள்.

மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாமல் கேலி செய்து கொண்டு இருக்கையில், வில்லியம் மரியன் பிரான்ஹாம் எங்கள் மேய்ப்பர் என்று கூறும்படியான வெளிப்பாட்டிற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் உண்மையாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்.

இப்போது இந்தச் செய்திகள் ஒவ்வொன்றும் "தூதனுக்கு" - (மானிடத் தூதுனுக்கு) அனுப்பப்பட்டதால், ஒரு அற்புதமான சிலாக்கியத்தை போன்ற ஒரு மிகப் பெரிய பொறுப்பு அவனுடைய பங்காயிருக்கிறது.

செய்தி அவருடைய தூதனுக்கு அனுப்பப்பட்டது, பின்னர் அவருடைய தூதன் அதை மணவாட்டிக்கு கொடுக்கிறார்; ஊழியம் மட்டுமல்ல, அவருடைய மணவாட்டி யாவருக்குமமே எல்லோரும் கேட்கும்படியாக அது ஒலிநாடாவில் உள்ளது. அது சேர்க்கப்படவும் அல்லது எடுக்கப்படவும் முடியாது, மேலும் இதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை.

அவர் சீக்கிரம் வருகிறார், அவர் வரும்போது அவர் முதலில் உம்மிடம் வருவார், நீர் பிரசிங்கத்துள்ள சுவிசேஷத்தின்படி நீர் நியாயந்தீர்க்கப்படுவீர், நாங்கள் உம்முடைய பிரஜைகளாக இருப்போம்.” நான், "இவர்கள் எல்லோருக்கும் நான் பொறுப்புடையவர் என்று நீர் பொருட்படுத்திக் கூறுகிறீரா” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஒவ்வொருவருக்குமே. நீர் ஒரு தலைவராக பிறந்தீர்” என்றார்.

மகத்தான நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறபோது, அவர் முதலில் அவருடைய ஒளியின் தூதனிடம் வருகிறார், அவர் பிரசங்கித்த சுவிசேஷத்தின்படி அவரை முதலில் நியாயந்தீர்ப்பார். நாங்கள் அவருடைய பிரஜைகள். அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவராக இருந்ததால், அவர் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்புடையவராக இருக்கிறார்.

உங்களுடைய ஆவிக்குரிய பொருத்தத்தை அதில் வைக்கவும். தேவனுடைய தூதன் என்ன கூறினார் என்பதன் மூலம் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். எனவே நீங்கள் அதை அவரிடமிருந்து நேரடியாக கேட்க முடியும்போது, அவர் கூறினார் என்று யாரோ ஒருவர் கூறுவதன் மூலம் உங்களிடம் நித்திய ஜீவனுக்கான ஒரு வாய்ப்பினைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஒலிநாடாக்களில் உள்ளதை விட ஒரு மிக முக்கியமான ஊழியம் உள்ளது என்று யாராலும் எப்படி நம்ப முடியும். நீங்கள் அதை நம்பினால், அல்லது தர்க்க அறிவின் மூலம் வற்புறுத்தியிருந்தால், நீங்கள் மூல வார்த்தைக்குத் திரும்புவது நல்லது; ஏனென்றால் ஒலிநாடாக்களில் உள்ள வார்த்தைகளால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். அது உரைக்கப்பட்டுள்ள விதமாகவே வார்த்தையோடு தரித்திருங்கள்.

ஆனால் இந்த தீர்க்கதரிசி வந்து, “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி' என்று முதல் வருகைக்கு முன்னோடியானவன் அறை கூவியது போன்று, 'இதோ தேவனுடைய ஆட் டுக்குட்டி மகிமையில் வருகிறார்' என்று இவரும் கூட சந்தேகத்துக்கிடமின்றி பறைசாற்றுவார். அவர் இதை செய்து, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு யோவான் சத்தியத்தின் செய்தியாளனாக இருந்தது போல தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும், வார்த்தையினால்- பிறப்பிக்கப்பட்டவர்களுக்குமான மணவாட்டிக்கு இவர் இந்த கடைசி செய்தியாளராகிய ஒருவராக இருக்கிறார்.

கர்த்தராகிய இயேசுவை நமக்கு யார் அறிமுகப்படுத்துவார்? அவருடைய மகத்தான ஒளியின் தூதன், வில்லியம் மரியன் பிரான்ஹாம்.

60-1207 - "பெர்கமு சபையின் காலம்" என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, அவருடைய மகத்தான ஒளியின் தூதன் நமக்கு அதிகமாக வெளிப்பாட்டைக் கொண்டு வருவதை கேட்டு போகிறபடியால், எங்களுடன் ஒரு கற்புள்ள கன்னிகை மணவாட்டியாக இருக்க வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 26 அக்டோபர், 2024

அன்புள்ள ஆவியினால்-நிரப்பப்பட்ட மணவாட்டியே,

ஒரே ஒரு மக்கள் குழு மாத்திரமே உண்டு; இந்த கடைசி காலத்தில் ஆவியானவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்கக்கூடிய ஒரு விசேஷித்த மக்கள் குழுவினர்; அது இந்த காலத்திற்கான வெளிப்பாட்டை பெற்றிருக்கிற ஒரு விசேஷித்த குழுவாகும். அந்தக் குழு தேவனுடையது. கேட்க முடியாத குழு தேவனுடையதல்ல.

ஆவியானவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்கக்கூடிய அந்த குழு கேட்டு உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறது. நாமே தேவனுடைய ஆவியையுடையவர்களாக இருக்கிறோம். நாம் தேவனால் பிறந்து பரிசுத்த ஆவியினால் அபிஷேக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய காலத்திற்கான வெளிப்பாட்டை பெற்றிருக்கிற ஆவினால்-நிரப்பப்பட்ட அவருடைய மணவாட்டியாய் நாம் இருக்கிறோம்.

இயங்கு பொத்தானை அழுத்துவது நமக்கு என்ன பொருட்படுத்துகிறது? வெளிப்பாடு! அதை கேட்டு, பெற்றுக்கொண்டு, இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்டிருக்கிற வழியோடு தரித்திருப்பதாகும். அதே தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசுகிறது. அது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களிலும் ஆத்துமாக்களிலும் பேசிக் கொண்டிருக்கிறதாயுள்ளது.

பேசுவதற்கு அவருடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களை தேவன் உபயோகிக்கிறார் என்பதை நாம் அறிவோம், ஆனால் வில்லியம் மரியன் பிரான்ஹாமாகிய, அவருடைய ஏழாம் தூதனின் சத்தத்தை இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது இல்லை. அது பரிசுத்த ஆவியானவரால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாக இருக்கிறது. அவர் நமக்கும், உலகத்திற்கும் தேவனுடைய சத்தமாயும், தேவனுடைய தீர்க்கதரிசியாயும், தேவனுடைய மேய்ப்பராயும் இருக்கிறார்.

அவர் பேசும்போது, நாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூறுகிறோம்; ஏனென்றால் அது தேவன் தாமே நம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறதாகும். அவருடைய வார்த்தை மாத்திரமே வியாக்கியானம் தேவைப்படாத ஒரே வார்த்தையாக இருக்கிறது. அது தேவன் தம்முடைய சத்தத்தை அவருடைய மணவாட்டியினிடத்தில் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டிருப்பதாகும்.

அது தேவன் தாமே நம்மிடத்தில், ”என் பிள்ளைகளே, நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, ஆனால் நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். சிறு சிறு துகள்களாக தெரியும் தொலைவில் உள்ள விண்மீன் கூட்டத்தின் ஒரு துளிக்கு முன்னே; உங்களுடைய தேவனாக உங்களுக்கு நான் அறியப்படுவதற்கு முன்பே கூட, நான் உங்களை அறிந்திருந்தேன். நீங்கள் என்னுடைய சிந்தையில், என்னுடைய நித்திய சிந்தைகளில் இருந்தீர்கள். நீங்கள் என்னுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வித்தான மணவாட்டியாய் இருக்கிறீர்கள்.

நீங்கள் என்னுடைய நித்திய சிந்தைகளில் இருந்தபோதிலும், என்னுடைய நியமிக்கப்பட்ட மற்றும் ஆணையிடப்பட்ட காலம் வரை நான் உங்களை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால், நீங்கள் என்னுடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் என்னுடைய விசேஷித்த குழுவாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். மற்ற யாவரும் தவறிப் போயுள்ளனர், ஆனால் நீங்கள் தவறமாட்டீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.

நீங்கள் என்னுடைய தீர்க்கதரிசியுடன் தரித்திருக்கிறபடியினால் நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கேலி செய்யப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் என்னுடைய வார்த்தையிலிருந்து விலகாமல், என்னுடைய வார்த்தைகளைப் பேசும் என்னுடைய தீர்க்கதரிசிக்கு உத்தமமாகவும், உண்மையாகவும் இருக்கும் என்னுடைய உண்மையான திராட்சை செடி.

இன்னும் பலர் உண்மையாகக் கற்பிக்கப்படுகிறார்கள், ஆனால் என்னுடைய செய்தியாளர் மூலம் நான் உரைத்திருக்கிறதை மட்டும் பேசுவது எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் எப்போதும் கற்றுக் கொள்வதில்லை.

ஒரே சத்தத்தைக் கேட்பதற்கு நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஆவியானவர் தேவனுடைய சத்தமாயிருக்கிற ஒரே சத்தத்தை உடையவராய் இருக்கிறார்.

ஓ, அவருடைய செய்தியாளர்கள் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது எவ்வளவு முக்கியம், பின்னர் சபைகளுக்குச் கூற அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கூறுவது.

"என்னுடைய வார்த்தை எப்போதும் என் தீர்க்கதரிசிக்கு வந்துள்ளது, ஆனால் இந்த நாளில், நான் மணவாட்டியிடம் கூறினதில் எந்த தவறுகளுமே இல்லாதபடிக்கு பதிவு செய்யப்பட்ட என்னுடைய சத்தத்தைக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு தூக்கு நூல் மாத்திரமே உண்டு, ஒரே ஒரு கோல் மாத்திரமே உண்டு, அது என்னுடைய தூதன் மூலமாக நான் உரைத்த வார்த்தையாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் இருக்கிறது போலவே, என்னுடைய தீர்க்கதரிசி அந்த நாளுக்கான வார்த்தையாய் இருக்கிறார்.

ஒலிநாடாக்களும், அவருடைய சத்தமும், நமக்கு ஒரு காதல் கடிதமாயிருக்கிறது. நம்முடைய சோதனைகள், உபத்திரவங்கள் மற்றும் கஷ்டங்களின் மூலம் சத்துரு தொடர்ந்து நம்மைத் வீழ்த்த முயற்ச்சிக்கும்போது, அது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட அன்பேயல்லாமல் வேறொன்றுமில்லை என்று நமக்கு சொல்லும்படியாகவும், நாம் அசைக்கப்பட மாட்டோம் என்றே அவர் நம்மை தெரிந்து கொண்டார் என்றும் நமக்கு நிரூபிக்கும்படியாகவும் அவர் தம்முடைய பலமுள்ள தூதனை அனுப்பினார்.

நாம் சிறிது காலம் துன்பப்பட்ட பிறகு, அவர் நம்மை பரிபூரணமாக்கி, நிலைநிறுத்தி, பலப்படுத்துவார் என்பதே அவருடைய மகத்தான நோக்கமாயுள்ளது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவும் கூட அவருடைய பாடுகளால் பூரணப்படுத்தப்பட்டார் என்று அவர் நமக்குச் சொன்னார். என்னே ஒரு ஆசீர்வாதத்தை அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ஏனெனில், நம்முடைய துன்பத்தால், அவர் நம்மையும் பரிபூரணத்திற்குக் கொண்டுவருவார்.

நம்முடைய சோதனைகள் மற்றும் இன்னல்கள் மூலம் அவர் நமக்கு குணாதிசயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், நம்முடைய குணாதிசயம் துன்பம் இல்லாமல் உருவாக்கப்படவில்லை. எனவே, நம்முடைய துன்பம் நமக்கு ஒரு வெற்றியே தவிர, வெகுமதி அல்ல.

அவரிடம் நம்முடைய அன்பை நாம் எப்படி நிரூபிக்க முடியும்?

● அவர் கூறுகிறதை விசுவாசிப்பதன் மூலம்.
● அவருடைய வார்த்தையுடன் தரித்திருத்தல்.
● நம்முடைய சோதனைகள் மற்றும் உபத்திரவங்களின் மூலம் நம்மை சந்தோஷத்துடன் நடத்திக் கொள்ளுதல், அதாவது அவர், தம்முடைய மகத்தான ஞானத்தில், அதை நிறைவேற்ற அனுமதிக்கிறார்.

அவருடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் அவர் எவ்வாறு நம்முடைய ஆவியை உயர்த்துகிறார். அவருடைய சத்தம் நம்முடைய ஆத்துமாவை ஆறுதல்படுத்துகிறது. நாம் இயங்கு பொத்தானை அழுத்தி அவர் பேசுவதை கேட்கும்போது, நம்முடைய பாரங்கள் யாவும் அகன்றுவிடுகின்றன. நம்முடைய உபத்திரவங்கள் அனைத்திலும் நமக்காக என்னென்ன பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்கத் துவக்க முடியாது.

ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியே, உங்கள் ஒவ்வொருவருடனும் அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன். அவர் தம்முடைய வார்த்தையின் ஒரு வெளிப்பாட்டை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அறிவதில் என்னே சந்தோஷம் என்னுடைய இருதயத்தை நிரப்புகிறது. கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்குமளவுக்கு அது மிகவும் நெருக்கமாய் இருக்கும் என்று அவர் நமக்கு சொல்லும்போது, அவர் நமக்கு உண்மையான வெளிப்பாட்டை அளித்திருக்கிறார்.

60-1206-சிமிர்னா சபையின் காலம் என்ற செய்தியின் பரிபூரண வார்த்தையை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களோடு ஆவிக்குள்ளாகும்படி, வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 19 அக்டோபர், 2024

அன்புள்ள உண்மையான மணவாட்டியே

,

அவருடைய ஜீவன் நமக்குள் பாய்ந்துகொண்டும், துடித்துக்கொண்டும், நமக்கு ஜீவனை அளித்துக் கொண்டிருக்கும்போது, நாம் என்ன ஒரு அற்புதமான நேரத்தைக் உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். அவர் இல்லாமல், ஜீவனே இல்லை. அவருடைய வார்த்தையே நம்முடைய சுவாசமாக இருக்கிறது.

இந்த காரிருள் நாளில், நாம் எழும்பியுள்ள அவருடைய கடைசி காலக் குழுவாக இருக்கிறோம்; கடைசி நாளின் அவருடைய உண்மையான மணவாட்டி ஆவியானவருக்கு மட்டுமே, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பாள்.

அவர் நம்மிடம், "என்னைப் பொறுத்தவரை, நீங்கள் சுத்தமான அடிக்கப்பட்ட பசும் பொன்னிற்கு ஒப்பிடப்படுகிறீர்கள். உங்களுடைய நீதி என் நீதியே. உங்களுடைய தன்மைகள் என்னுடைய மகிமையான தன்மைகளாய் இருக்கின்றன. நீங்கள் என்னுடைய அன்பான உண்மையான மனவாட்டியாய் இருக்கிறீர்கள்” என்று சொல்வதை கேட்பதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம்.

ஒவ்வொரு வாரமும் நம்முடைய யுத்தங்கள் கடினமாக, கடினமாகத் தோன்றுவதால், அவர் நம்மிடம் “கவலைப்படாதே, நீ என் சுவிசேஷத்திற்கு பாத்திரமானவள். நீ ஒரு அழகான மற்றும் மகிழ்ச்சியான காரியமாய் இருக்கிறாய். இந்த வாழ்க்கையின் சோதனைகளாலும், பரிசோதனைகளாலும் சத்துருவை நீங்கள் ஜெயகொள்ளும்போது நான் உன்னை கவனிக்க விரும்புகிறேன்” என்று மிகவும் இனிமையாகப் பேசுவதைக் கேட்க வெறுமனே இயங்கு பொத்தானை அழுத்துகிறோம்.

உங்கள் அன்பின் பிரயாசத்தை நான் காண்கிறேன்; இது எனக்கு சேவை செய்ய உங்களுடைய ஜீவியத்தின் உன்னத அழைப்பாக உள்ளது. உங்களுக்கு என்னுடைய சத்தமாக இருக்கும்படி நான் அனுப்பும் என்னுடைய பலமுள்ள தூதனை நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே அவரை அடையாளங் கண்டு கொள்வீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்:

கொடிதான ஓநாய்கள் சுற்றி வந்து சமமான வெளிப்பாட்டைக் கோர முயற்சிக்கும்போது நீங்கள் எப்படி வஞ்சிக்கப்படமாட்டீர்கள். ஒரு கணம் கூட அல்ல, ஒரு இம்மியளவினாலும் அல்ல, நீங்கள் என் வார்த்தையிலிருந்து விலகமாட்டீர்கள். நீங்கள் என்னுடைய வார்த்தையோடும், என்னுடைய சத்தத்தோடும் தரித்திருப்பீர்கள்.

ஏதேன் தோட்டத்தில் தொடங்கிய உண்மையான திராட்சை செடியும் கள்ள திராட்சை செடியும் எப்படி காலங்களினூடாக ஒன்றாக வளரும் என்று என் வார்த்தையை நான் உங்களுக்கு வெளிப்படுத்தும்போது நீங்கள் உணர்வீர்கள்.

ஆரம்பகால சபையில் ஆரம்பித்தது ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடரும். முதல் சபைக் காலத்தில், சாத்தானின் கள்ள திராட்சை செடி எப்படி ஊடுருவி, சபை மக்களை அவனுடைய நிக்கொலாய் ஆவியால் கைப்பற்றும். ஆனால் என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாகிய, நீங்கள் மாத்திரமே வஞ்சிக்கப்பட மாட்டீர்கள் என்பதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன்.

இந்த வாரம், சர்பத்தின் வித்தைக் குறித்த பெரிய இரகசியத்தை வெளிப்படுத்துவதன் மூலம் என்னுடைய வார்த்தையை உன்னில் படிகமாக்குவேன். ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு எல்லா விவரங்களிலும் வெளிப்படுத்துவேன்; மனித இனத்தில் சாத்தான் எப்படி கலந்தான்.

ஆதாமின் வீழ்ச்சியால் இதுவரை அணுக முடியாத ஏதேன் தோட்டத்தில் உள்ள ஜீவ விருட்சமாகிய நான், என்னுடைய ஜெயங்கொள்பவர்களாகிய, உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அடையாளம் காணும்போது, அது அப்படிப்பட்ட ஒரு சிலிர்ப்பான சிந்தனையாக இருக்கும்.

இது உங்களுடைய பலனாக இருக்கும். நான் தேவனுடைய பரதீசின் சிலாக்கியத்தையும்; என்னுடன் ஒரு நிலையான ஐக்கியத்தையும் உங்களுக்கு அளிப்பேன். நீங்கள் என்னை விட்டு ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டீர்கள். நான் எங்கு சென்றாலும், என் மணவாட்டியாகிய, நீங்கள் செல்வீர்கள். என்னுடையததை, நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன், என் அன்பே.

நாம் இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது நம்முடைய இதயம் நமக்குள் எப்படி ஓடுகிறது. அவருடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றம் விரைவில் நெருங்கி வருவதையும் மேலும் காத்திருக்க முடியாது என்பதையும் நாம் அறிவோம். நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய துரிதப்பட்டு, அவருடைய மகிமையைப் பகிர்ந்துகொள்வதற்கான நம்முடைய தகுதியை நிரூபிப்போம்.

ஏழு சபை காலங்களைப் பற்றிய எங்கள் மகத்தான படிப்பாய்வைத் தொடரும்போது, எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை அழைக்க விரும்புகிறேன், அங்கு தேவன் தம்முடைய வார்த்தையை அவருடைய அருளப்பட்ட வழியின் மூலமாக, தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம், நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணி ஜெஃபர்சன்வில் நேரம்.

60-1205 எபேசு சபையின் காலம்

 

 

சனி, 12 அக்டோபர், 2024

அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,

உலகம் முழுவதும் மணவாட்டிக்குள் என்ன நடக்கிறது? நாம் ஆவிக்குள்ளாகி, எழும்பி, "மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிடுகிறோம். தேவன் நம்மை கொண்டு சென்று தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய ஜீவியங்களில் நாம் படித்துள்ள, கேட்டுள்ள காரியங்கள் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரு மகத்தான உயிர்ப்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் வார்த்தையால் பிரகாசிக்கப்படுகிறோம்.

அதை நாம் நம்முடைய ஆத்துமாவின் ஆழத்தில் உணர்கிறோம். ஏதோ காரியம் வித்தியாசமாக இருக்கிறது. ஏதோ காரியம் சம்வித்துக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிப்பதையும், நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் அவருடைய வார்த்தையால் நிரப்புவதையும் நாம் உணர்கிறோம்.

அவர் நம்மிடம் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது: சத்துரு உங்களுடன் முன் எப்போதும் இல்லாத வகையில் சண்டையிடுகிறான் என்பதை நான் அறிவேன், ஆனால் சிறுபான்மையோரே பயப்படாதீர்கள், நீங்கள் என்னுடையவர்கள். என் அன்பையும், தைரியத்தையும், திறனையும் உங்களுக்குத் தருகிறேன். வார்த்தையை மட்டும் பேசுங்கள், நான் அதை நிறைவேற்றுவேன். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் நம்முடைய மகத்தான படிப்பாய்வில், அவர் நமக்கு அடுத்து என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்று ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். அவருடைய வார்த்தையே நமக்கு ஒரே அடைக்கலம், சமாதானம் மற்றும் ஆறுதல். நாம் மிகுந்த ஆர்வங் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்கிறோம். நாம் படிக்கும் ஒவ்வொரு பத்தியிலும், வார்த்தை நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படும்போது கூச்சலிட்டு ஆர்ப்பரிக்க விரும்புகிறோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் மணவாட்டியின் மீது வந்து நம்முடைய ஆத்மாக்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கற்பனை செய்து பாருங்கள், உலகில் நீங்கள் செல்லக்கூடிய வேறு எந்த இடமும் இல்லை, ஆனால் தேவனுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதையும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்பது உங்களுடைய விரல் நுனியில் இருக்கிறது.

தேவன் எப்படி திரையை நீக்கி, அதை பின்னிட்டு இழுத்து, ஒவ்வொரு சபைக் காலமும் என்ன செய்யப் போகிறது என்பதைப் யோவான் பார்க்க அனுமதித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி நமக்கு அனுப்பினார். அதன்பின்னர், காலம் நிறைவேறின போது, அதை பேசவும், அதன் அர்த்தம் என்ன என்பதை வெளிப்படுத்தவும் தேவன் தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனை நமக்கு அனுப்பினார்.

யோவான் தான் கண்டதை எழுதினானேயன்றி, அதனுடைய அர்த்தத்தை அறிந்திருக்கவில்லை. இயேசுவானவர் பூமியில் இருந்தபோது, அவரும் கூட அதை அறிந்திருக்கவில்லை. எல்லா காலத்தினருக்குமே, இந்த நேரம், இந்த ஜனங்கள், அவருடைய மணவாட்டியான, நமக்கும் எவருக்குமே இந்த நாள் வரைத் தெரியாது.

அந்த ஏழு விளக்குகளும் அந்த பிரதான கிண்ணத்தின் வளங்களிலிருந்து ஜீவனையும் ஒளியையும் ஈர்த்துக் கொண்டிருந்தன என்பதை அவர் நமக்கு எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் திரிகளை அதில் எப்படி தோய்த்து வைத்திருந்தனர் என்பதை அவர் நமக்குச் சொன்னார். ஒவ்வொரு சபைக் கால தூதனும் தன்னுடைய திரியை கிறிஸ்துவுக்குள் மூழ்கி பரிசுத்த ஆவியைக் கொண்டு அக்கினியாய் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக் கொண்டு, அந்த ஒளியை சபைக்கு அளித்தனர். இப்போது, தேவனுக்குள் கிறிஸ்துவோடு ஒரு மறைக்கப்பட்டிருந்த ஜீவியத்தின் மூலம் நம்முடைய கடைசி கால செய்தியாளர், எல்லா தூதர்களிலும் மிகப் பெரியவர், அதே ஜீவனையும் அதே ஒளியையும் வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு தூதனும் அங்கு சித்தரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நம்மில் ஒவ்வொருவரும் கூட தேவனுடைய உண்மையான விசுவாசிகள் என்று நம்முடைய பலமுள்ள தூதன் கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் கூட அங்கு வியத்தகு முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் தூதர்களின் அதே மூல ஆதாரத்திலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரே கிண்ணத்தில் மூழ்கப்பட்டிருக்கிறோம். நாம் நமக்கே மரித்திருக்க, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நம்முடைய ஜீவன்கள் மறைந்திருக்கின்றன.

தேவனுடைய கரத்திலிருந்து எந்த மனிதனும் நம்மைப் பறிக்க முடியாது என்று கூறுவதனால் அவர் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறார். நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. நம்முடைய காணக்கூடிய ஜீவியம் எரிந்து பிரகாசித்து, ஒளியை அளித்து, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தல்களாய் இருக்கின்றன. நம்முடைய உள்ளார்ந்த, காணக்கூடாத ஜீவன் தேவனுக்குள் மறைக்கப்பட்டு கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்படுகிறது.

யுத்தங்கள் கடுமையானவை. சத்துரு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கி எழுந்து, நம்மை திடனற்றுப் போகச் செய்யவும், நம்மை வீழ்த்தவும் அவனால் முடிந்தவரை முயற்சி செய்கிறான், ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது. தேவன் தாமே மனித உதடுகள் மூலம் நம்மிடம், நாம் அவருடைய மணவாட்டி என்றும், எவர்களை அவர் தெரிந்து கொண்டாரோ, அவர்கள் பிசாசை ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

நம்முடைய பரிபூரண கர்த்தர், தம்முடைய பரிபூரண வார்த்தையைப் பேசி, தம்முடைய பரிபூரண சமாதானத்தை, தம்முடைய பரிபூரண மணவாட்டிக்குத் தருகிறார்.

எப்பொழுதும் போல, மணவாட்டிக்காக சேமித்து பாதுகாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியின் பிரதான கிண்ணத்தில் தங்கள் திரியை நனைக்கும்படி உலகத்தை நாங்கள் அழைக்கிறோம். பத்மு தீவு 60-1204E என்ற செய்தியில் என்ன சம்பவித்தது என்பதை தேவனுடைய சத்தம் பேசி வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கும் போது, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, நாங்கள் சத்தமிட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருப்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்