அன்புள்ள ஆவியினால்-நிரப்பப்பட்ட மணவாட்டியே,
ஒரே ஒரு மக்கள் குழு மாத்திரமே உண்டு; இந்த கடைசி காலத்தில் ஆவியானவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்கக்கூடிய ஒரு விசேஷித்த மக்கள் குழுவினர்; அது இந்த காலத்திற்கான வெளிப்பாட்டை பெற்றிருக்கிற ஒரு விசேஷித்த குழுவாகும். அந்தக் குழு தேவனுடையது. கேட்க முடியாத குழு தேவனுடையதல்ல.
ஆவியானவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்கக்கூடிய அந்த குழு கேட்டு உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறது. நாமே தேவனுடைய ஆவியையுடையவர்களாக இருக்கிறோம். நாம் தேவனால் பிறந்து பரிசுத்த ஆவியினால் அபிஷேக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய காலத்திற்கான வெளிப்பாட்டை பெற்றிருக்கிற ஆவினால்-நிரப்பப்பட்ட அவருடைய மணவாட்டியாய் நாம் இருக்கிறோம்.
இயங்கு பொத்தானை அழுத்துவது நமக்கு என்ன பொருட்படுத்துகிறது? வெளிப்பாடு! அதை கேட்டு, பெற்றுக்கொண்டு, இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்டிருக்கிற வழியோடு தரித்திருப்பதாகும். அதே தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசுகிறது. அது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களிலும் ஆத்துமாக்களிலும் பேசிக் கொண்டிருக்கிறதாயுள்ளது.
பேசுவதற்கு அவருடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களை தேவன் உபயோகிக்கிறார் என்பதை நாம் அறிவோம், ஆனால் வில்லியம் மரியன் பிரான்ஹாமாகிய, அவருடைய ஏழாம் தூதனின் சத்தத்தை இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது இல்லை. அது பரிசுத்த ஆவியானவரால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாக இருக்கிறது. அவர் நமக்கும், உலகத்திற்கும் தேவனுடைய சத்தமாயும், தேவனுடைய தீர்க்கதரிசியாயும், தேவனுடைய மேய்ப்பராயும் இருக்கிறார்.
அவர் பேசும்போது, நாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூறுகிறோம்; ஏனென்றால் அது தேவன் தாமே நம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறதாகும். அவருடைய வார்த்தை மாத்திரமே வியாக்கியானம் தேவைப்படாத ஒரே வார்த்தையாக இருக்கிறது. அது தேவன் தம்முடைய சத்தத்தை அவருடைய மணவாட்டியினிடத்தில் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டிருப்பதாகும்.
அது தேவன் தாமே நம்மிடத்தில், ”என் பிள்ளைகளே, நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, ஆனால் நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். சிறு சிறு துகள்களாக தெரியும் தொலைவில் உள்ள விண்மீன் கூட்டத்தின் ஒரு துளிக்கு முன்னே; உங்களுடைய தேவனாக உங்களுக்கு நான் அறியப்படுவதற்கு முன்பே கூட, நான் உங்களை அறிந்திருந்தேன். நீங்கள் என்னுடைய சிந்தையில், என்னுடைய நித்திய சிந்தைகளில் இருந்தீர்கள். நீங்கள் என்னுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வித்தான மணவாட்டியாய் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்னுடைய நித்திய சிந்தைகளில் இருந்தபோதிலும், என்னுடைய நியமிக்கப்பட்ட மற்றும் ஆணையிடப்பட்ட காலம் வரை நான் உங்களை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால், நீங்கள் என்னுடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் என்னுடைய விசேஷித்த குழுவாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். மற்ற யாவரும் தவறிப் போயுள்ளனர், ஆனால் நீங்கள் தவறமாட்டீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.
நீங்கள் என்னுடைய தீர்க்கதரிசியுடன் தரித்திருக்கிறபடியினால் நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கேலி செய்யப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் என்னுடைய வார்த்தையிலிருந்து விலகாமல், என்னுடைய வார்த்தைகளைப் பேசும் என்னுடைய தீர்க்கதரிசிக்கு உத்தமமாகவும், உண்மையாகவும் இருக்கும் என்னுடைய உண்மையான திராட்சை செடி.
இன்னும் பலர் உண்மையாகக் கற்பிக்கப்படுகிறார்கள், ஆனால் என்னுடைய செய்தியாளர் மூலம் நான் உரைத்திருக்கிறதை மட்டும் பேசுவது எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் எப்போதும் கற்றுக் கொள்வதில்லை.
ஒரே சத்தத்தைக் கேட்பதற்கு நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஆவியானவர் தேவனுடைய சத்தமாயிருக்கிற ஒரே சத்தத்தை உடையவராய் இருக்கிறார்.
ஓ, அவருடைய செய்தியாளர்கள் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது எவ்வளவு முக்கியம், பின்னர் சபைகளுக்குச் கூற அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கூறுவது.
"என்னுடைய வார்த்தை எப்போதும் என் தீர்க்கதரிசிக்கு வந்துள்ளது, ஆனால் இந்த நாளில், நான் மணவாட்டியிடம் கூறினதில் எந்த தவறுகளுமே இல்லாதபடிக்கு பதிவு செய்யப்பட்ட என்னுடைய சத்தத்தைக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு தூக்கு நூல் மாத்திரமே உண்டு, ஒரே ஒரு கோல் மாத்திரமே உண்டு, அது என்னுடைய தூதன் மூலமாக நான் உரைத்த வார்த்தையாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் இருக்கிறது போலவே, என்னுடைய தீர்க்கதரிசி அந்த நாளுக்கான வார்த்தையாய் இருக்கிறார்.
ஒலிநாடாக்களும், அவருடைய சத்தமும், நமக்கு ஒரு காதல் கடிதமாயிருக்கிறது. நம்முடைய சோதனைகள், உபத்திரவங்கள் மற்றும் கஷ்டங்களின் மூலம் சத்துரு தொடர்ந்து நம்மைத் வீழ்த்த முயற்ச்சிக்கும்போது, அது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட அன்பேயல்லாமல் வேறொன்றுமில்லை என்று நமக்கு சொல்லும்படியாகவும், நாம் அசைக்கப்பட மாட்டோம் என்றே அவர் நம்மை தெரிந்து கொண்டார் என்றும் நமக்கு நிரூபிக்கும்படியாகவும் அவர் தம்முடைய பலமுள்ள தூதனை அனுப்பினார்.
நாம் சிறிது காலம் துன்பப்பட்ட பிறகு, அவர் நம்மை பரிபூரணமாக்கி, நிலைநிறுத்தி, பலப்படுத்துவார் என்பதே அவருடைய மகத்தான நோக்கமாயுள்ளது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவும் கூட அவருடைய பாடுகளால் பூரணப்படுத்தப்பட்டார் என்று அவர் நமக்குச் சொன்னார். என்னே ஒரு ஆசீர்வாதத்தை அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ஏனெனில், நம்முடைய துன்பத்தால், அவர் நம்மையும் பரிபூரணத்திற்குக் கொண்டுவருவார்.
நம்முடைய சோதனைகள் மற்றும் இன்னல்கள் மூலம் அவர் நமக்கு குணாதிசயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், நம்முடைய குணாதிசயம் துன்பம் இல்லாமல் உருவாக்கப்படவில்லை. எனவே, நம்முடைய துன்பம் நமக்கு ஒரு வெற்றியே தவிர, வெகுமதி அல்ல.
அவரிடம் நம்முடைய அன்பை நாம் எப்படி நிரூபிக்க முடியும்?
● அவர் கூறுகிறதை விசுவாசிப்பதன் மூலம்.
● அவருடைய வார்த்தையுடன் தரித்திருத்தல்.
● நம்முடைய சோதனைகள் மற்றும் உபத்திரவங்களின் மூலம் நம்மை சந்தோஷத்துடன் நடத்திக் கொள்ளுதல், அதாவது அவர், தம்முடைய மகத்தான ஞானத்தில், அதை நிறைவேற்ற அனுமதிக்கிறார்.
அவருடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் அவர் எவ்வாறு நம்முடைய ஆவியை உயர்த்துகிறார். அவருடைய சத்தம் நம்முடைய ஆத்துமாவை ஆறுதல்படுத்துகிறது. நாம் இயங்கு பொத்தானை அழுத்தி அவர் பேசுவதை கேட்கும்போது, நம்முடைய பாரங்கள் யாவும் அகன்றுவிடுகின்றன. நம்முடைய உபத்திரவங்கள் அனைத்திலும் நமக்காக என்னென்ன பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்கத் துவக்க முடியாது.
ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியே, உங்கள் ஒவ்வொருவருடனும் அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன். அவர் தம்முடைய வார்த்தையின் ஒரு வெளிப்பாட்டை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அறிவதில் என்னே சந்தோஷம் என்னுடைய இருதயத்தை நிரப்புகிறது. கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்குமளவுக்கு அது மிகவும் நெருக்கமாய் இருக்கும் என்று அவர் நமக்கு சொல்லும்போது, அவர் நமக்கு உண்மையான வெளிப்பாட்டை அளித்திருக்கிறார்.
60-1206-சிமிர்னா சபையின் காலம் என்ற செய்தியின் பரிபூரண வார்த்தையை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களோடு ஆவிக்குள்ளாகும்படி, வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள உண்மையான மணவாட்டியே
,அவருடைய ஜீவன் நமக்குள் பாய்ந்துகொண்டும், துடித்துக்கொண்டும், நமக்கு ஜீவனை அளித்துக் கொண்டிருக்கும்போது, நாம் என்ன ஒரு அற்புதமான நேரத்தைக் உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். அவர் இல்லாமல், ஜீவனே இல்லை. அவருடைய வார்த்தையே நம்முடைய சுவாசமாக இருக்கிறது.
இந்த காரிருள் நாளில், நாம் எழும்பியுள்ள அவருடைய கடைசி காலக் குழுவாக இருக்கிறோம்; கடைசி நாளின் அவருடைய உண்மையான மணவாட்டி ஆவியானவருக்கு மட்டுமே, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பாள்.
அவர் நம்மிடம், "என்னைப் பொறுத்தவரை, நீங்கள் சுத்தமான அடிக்கப்பட்ட பசும் பொன்னிற்கு ஒப்பிடப்படுகிறீர்கள். உங்களுடைய நீதி என் நீதியே. உங்களுடைய தன்மைகள் என்னுடைய மகிமையான தன்மைகளாய் இருக்கின்றன. நீங்கள் என்னுடைய அன்பான உண்மையான மனவாட்டியாய் இருக்கிறீர்கள்” என்று சொல்வதை கேட்பதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம்.
ஒவ்வொரு வாரமும் நம்முடைய யுத்தங்கள் கடினமாக, கடினமாகத் தோன்றுவதால், அவர் நம்மிடம் “கவலைப்படாதே, நீ என் சுவிசேஷத்திற்கு பாத்திரமானவள். நீ ஒரு அழகான மற்றும் மகிழ்ச்சியான காரியமாய் இருக்கிறாய். இந்த வாழ்க்கையின் சோதனைகளாலும், பரிசோதனைகளாலும் சத்துருவை நீங்கள் ஜெயகொள்ளும்போது நான் உன்னை கவனிக்க விரும்புகிறேன்” என்று மிகவும் இனிமையாகப் பேசுவதைக் கேட்க வெறுமனே இயங்கு பொத்தானை அழுத்துகிறோம்.
உங்கள் அன்பின் பிரயாசத்தை நான் காண்கிறேன்; இது எனக்கு சேவை செய்ய உங்களுடைய ஜீவியத்தின் உன்னத அழைப்பாக உள்ளது. உங்களுக்கு என்னுடைய சத்தமாக இருக்கும்படி நான் அனுப்பும் என்னுடைய பலமுள்ள தூதனை நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே அவரை அடையாளங் கண்டு கொள்வீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்:
கொடிதான ஓநாய்கள் சுற்றி வந்து சமமான வெளிப்பாட்டைக் கோர முயற்சிக்கும்போது நீங்கள் எப்படி வஞ்சிக்கப்படமாட்டீர்கள். ஒரு கணம் கூட அல்ல, ஒரு இம்மியளவினாலும் அல்ல, நீங்கள் என் வார்த்தையிலிருந்து விலகமாட்டீர்கள். நீங்கள் என்னுடைய வார்த்தையோடும், என்னுடைய சத்தத்தோடும் தரித்திருப்பீர்கள்.
ஏதேன் தோட்டத்தில் தொடங்கிய உண்மையான திராட்சை செடியும் கள்ள திராட்சை செடியும் எப்படி காலங்களினூடாக ஒன்றாக வளரும் என்று என் வார்த்தையை நான் உங்களுக்கு வெளிப்படுத்தும்போது நீங்கள் உணர்வீர்கள்.
ஆரம்பகால சபையில் ஆரம்பித்தது ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடரும். முதல் சபைக் காலத்தில், சாத்தானின் கள்ள திராட்சை செடி எப்படி ஊடுருவி, சபை மக்களை அவனுடைய நிக்கொலாய் ஆவியால் கைப்பற்றும். ஆனால் என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாகிய, நீங்கள் மாத்திரமே வஞ்சிக்கப்பட மாட்டீர்கள் என்பதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன்.
இந்த வாரம், சர்பத்தின் வித்தைக் குறித்த பெரிய இரகசியத்தை வெளிப்படுத்துவதன் மூலம் என்னுடைய வார்த்தையை உன்னில் படிகமாக்குவேன். ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு எல்லா விவரங்களிலும் வெளிப்படுத்துவேன்; மனித இனத்தில் சாத்தான் எப்படி கலந்தான்.
ஆதாமின் வீழ்ச்சியால் இதுவரை அணுக முடியாத ஏதேன் தோட்டத்தில் உள்ள ஜீவ விருட்சமாகிய நான், என்னுடைய ஜெயங்கொள்பவர்களாகிய, உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அடையாளம் காணும்போது, அது அப்படிப்பட்ட ஒரு சிலிர்ப்பான சிந்தனையாக இருக்கும்.
இது உங்களுடைய பலனாக இருக்கும். நான் தேவனுடைய பரதீசின் சிலாக்கியத்தையும்; என்னுடன் ஒரு நிலையான ஐக்கியத்தையும் உங்களுக்கு அளிப்பேன். நீங்கள் என்னை விட்டு ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டீர்கள். நான் எங்கு சென்றாலும், என் மணவாட்டியாகிய, நீங்கள் செல்வீர்கள். என்னுடையததை, நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன், என் அன்பே.
நாம் இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது நம்முடைய இதயம் நமக்குள் எப்படி ஓடுகிறது. அவருடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றம் விரைவில் நெருங்கி வருவதையும் மேலும் காத்திருக்க முடியாது என்பதையும் நாம் அறிவோம். நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய துரிதப்பட்டு, அவருடைய மகிமையைப் பகிர்ந்துகொள்வதற்கான நம்முடைய தகுதியை நிரூபிப்போம்.
ஏழு சபை காலங்களைப் பற்றிய எங்கள் மகத்தான படிப்பாய்வைத் தொடரும்போது, எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை அழைக்க விரும்புகிறேன், அங்கு தேவன் தம்முடைய வார்த்தையை அவருடைய அருளப்பட்ட வழியின் மூலமாக, தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம், நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணி ஜெஃபர்சன்வில் நேரம்.
60-1205 எபேசு சபையின் காலம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,
உலகம் முழுவதும் மணவாட்டிக்குள் என்ன நடக்கிறது? நாம் ஆவிக்குள்ளாகி, எழும்பி, "மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிடுகிறோம். தேவன் நம்மை கொண்டு சென்று தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நம்முடைய ஜீவியங்களில் நாம் படித்துள்ள, கேட்டுள்ள காரியங்கள் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரு மகத்தான உயிர்ப்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் வார்த்தையால் பிரகாசிக்கப்படுகிறோம்.
அதை நாம் நம்முடைய ஆத்துமாவின் ஆழத்தில் உணர்கிறோம். ஏதோ காரியம் வித்தியாசமாக இருக்கிறது. ஏதோ காரியம் சம்வித்துக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிப்பதையும், நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் அவருடைய வார்த்தையால் நிரப்புவதையும் நாம் உணர்கிறோம்.
அவர் நம்மிடம் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது: சத்துரு உங்களுடன் முன் எப்போதும் இல்லாத வகையில் சண்டையிடுகிறான் என்பதை நான் அறிவேன், ஆனால் சிறுபான்மையோரே பயப்படாதீர்கள், நீங்கள் என்னுடையவர்கள். என் அன்பையும், தைரியத்தையும், திறனையும் உங்களுக்குத் தருகிறேன். வார்த்தையை மட்டும் பேசுங்கள், நான் அதை நிறைவேற்றுவேன். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் நம்முடைய மகத்தான படிப்பாய்வில், அவர் நமக்கு அடுத்து என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்று ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். அவருடைய வார்த்தையே நமக்கு ஒரே அடைக்கலம், சமாதானம் மற்றும் ஆறுதல். நாம் மிகுந்த ஆர்வங் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்கிறோம். நாம் படிக்கும் ஒவ்வொரு பத்தியிலும், வார்த்தை நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படும்போது கூச்சலிட்டு ஆர்ப்பரிக்க விரும்புகிறோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் மணவாட்டியின் மீது வந்து நம்முடைய ஆத்மாக்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
கற்பனை செய்து பாருங்கள், உலகில் நீங்கள் செல்லக்கூடிய வேறு எந்த இடமும் இல்லை, ஆனால் தேவனுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதையும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்பது உங்களுடைய விரல் நுனியில் இருக்கிறது.
தேவன் எப்படி திரையை நீக்கி, அதை பின்னிட்டு இழுத்து, ஒவ்வொரு சபைக் காலமும் என்ன செய்யப் போகிறது என்பதைப் யோவான் பார்க்க அனுமதித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி நமக்கு அனுப்பினார். அதன்பின்னர், காலம் நிறைவேறின போது, அதை பேசவும், அதன் அர்த்தம் என்ன என்பதை வெளிப்படுத்தவும் தேவன் தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனை நமக்கு அனுப்பினார்.
யோவான் தான் கண்டதை எழுதினானேயன்றி, அதனுடைய அர்த்தத்தை அறிந்திருக்கவில்லை. இயேசுவானவர் பூமியில் இருந்தபோது, அவரும் கூட அதை அறிந்திருக்கவில்லை. எல்லா காலத்தினருக்குமே, இந்த நேரம், இந்த ஜனங்கள், அவருடைய மணவாட்டியான, நமக்கும் எவருக்குமே இந்த நாள் வரைத் தெரியாது.
அந்த ஏழு விளக்குகளும் அந்த பிரதான கிண்ணத்தின் வளங்களிலிருந்து ஜீவனையும் ஒளியையும் ஈர்த்துக் கொண்டிருந்தன என்பதை அவர் நமக்கு எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் திரிகளை அதில் எப்படி தோய்த்து வைத்திருந்தனர் என்பதை அவர் நமக்குச் சொன்னார். ஒவ்வொரு சபைக் கால தூதனும் தன்னுடைய திரியை கிறிஸ்துவுக்குள் மூழ்கி பரிசுத்த ஆவியைக் கொண்டு அக்கினியாய் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக் கொண்டு, அந்த ஒளியை சபைக்கு அளித்தனர். இப்போது, தேவனுக்குள் கிறிஸ்துவோடு ஒரு மறைக்கப்பட்டிருந்த ஜீவியத்தின் மூலம் நம்முடைய கடைசி கால செய்தியாளர், எல்லா தூதர்களிலும் மிகப் பெரியவர், அதே ஜீவனையும் அதே ஒளியையும் வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு தூதனும் அங்கு சித்தரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நம்மில் ஒவ்வொருவரும் கூட தேவனுடைய உண்மையான விசுவாசிகள் என்று நம்முடைய பலமுள்ள தூதன் கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் கூட அங்கு வியத்தகு முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் தூதர்களின் அதே மூல ஆதாரத்திலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரே கிண்ணத்தில் மூழ்கப்பட்டிருக்கிறோம். நாம் நமக்கே மரித்திருக்க, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நம்முடைய ஜீவன்கள் மறைந்திருக்கின்றன.
தேவனுடைய கரத்திலிருந்து எந்த மனிதனும் நம்மைப் பறிக்க முடியாது என்று கூறுவதனால் அவர் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறார். நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. நம்முடைய காணக்கூடிய ஜீவியம் எரிந்து பிரகாசித்து, ஒளியை அளித்து, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தல்களாய் இருக்கின்றன. நம்முடைய உள்ளார்ந்த, காணக்கூடாத ஜீவன் தேவனுக்குள் மறைக்கப்பட்டு கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்படுகிறது.
யுத்தங்கள் கடுமையானவை. சத்துரு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கி எழுந்து, நம்மை திடனற்றுப் போகச் செய்யவும், நம்மை வீழ்த்தவும் அவனால் முடிந்தவரை முயற்சி செய்கிறான், ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது. தேவன் தாமே மனித உதடுகள் மூலம் நம்மிடம், நாம் அவருடைய மணவாட்டி என்றும், எவர்களை அவர் தெரிந்து கொண்டாரோ, அவர்கள் பிசாசை ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.
நம்முடைய பரிபூரண கர்த்தர், தம்முடைய பரிபூரண வார்த்தையைப் பேசி, தம்முடைய பரிபூரண சமாதானத்தை, தம்முடைய பரிபூரண மணவாட்டிக்குத் தருகிறார்.
எப்பொழுதும் போல, மணவாட்டிக்காக சேமித்து பாதுகாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியின் பிரதான கிண்ணத்தில் தங்கள் திரியை நனைக்கும்படி உலகத்தை நாங்கள் அழைக்கிறோம். பத்மு தீவு 60-1204E என்ற செய்தியில் என்ன சம்பவித்தது என்பதை தேவனுடைய சத்தம் பேசி வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கும் போது, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, நாங்கள் சத்தமிட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருப்போம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தேவனுடைய தகர்க்கப்பட முடியாத சேனையே,
பிதாவானவர் தெரிந்து கொண்டு, தம்மைப் பற்றிய உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்துள்ள நாமே; அவருடைய ஒரே ஒரு உண்மையான சபை. அவருடைய பெரிய கிரியைகளைச் செய்ய அவர் தெரிந்து கொண்டவர்கள். ஏனெனில், அவருடைய ஆவியின் மூலம், சாத்தானின் அந்திக்கிறிஸ்து ஆவியை நாம் பகுத்தறிந்து எதிர்த்து நிற்க முடியும். அவன் நமக்கு முன் வல்லமையற்றவனாக இருக்கிறான், ஏனென்றால் நாம் அவருடைய தகர்க்கப்பட முடியாத சேனை.
சாத்தான் எல்லா வெளிப்பாட்டையும் வெறுக்கிறான், ஆனால் நாம் அதை விரும்புகிறோம்; ஏனென்றால் நாம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை விரும்புகிறவர்கள். நம்முடைய ஜீவியங்களில் உள்ள அவருடைய உண்மையான வெளிப்பாடு மூலம், பாதாளத்தின் வாசல்கள் நமக்கு எதிராக மேற்கொள்ள முடியாது; நாம் சத்துருவை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பிசாசும் நம்முடைய காலடியில் இருக்கிறது. நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம், நாம் அவருடைய வார்த்தையாக இருப்பதால், வார்த்தையைப் பேச முடியும்.
ஏழு சபைக் காலங்களை நாம் படிக்கவும் கேட்கவும் வேண்டும் என்று கர்த்தர் என் இருதயத்தில் உணர்த்தினார். இது நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய விசேஷித்த வாரங்களாக இருக்கப் போகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அவருடைய ஜெயங்கொள்ளும் வல்லமையால் அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவார்.
இப்போதே அந்த நேரம். இப்போதே அந்தக் காலம். அவர் வெளிப்பாட்டின் மூலம் நமக்கு ஊக்கமளித்து, நம்மை உற்சாகப்படுத்தி, நம்மை உயிர்ப்பிப்பார், அது நம்முடைய ஆத்துமாக்களை அனல் மூட்டச் செய்யும்!!
இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பது ஒரு தீர்க்கதரிசன புத்தகம், இது ஒரு தீர்க்கதரிசன நுண்ணறிவு கொண்ட ஒரு குறிப்பிட்ட வகுப்பினரான, அவருடைய மணவாட்டியாகிய, நம்மால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர் தெரிந்து கொண்ட தூதனாகிய செய்தியாளனிடமிருந்து வரும் தேவனுடைய சத்தத்தை நீங்கள் படிக்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்பதை அறிய உண்மையான வெளிப்பாடு தேவைப்படுகிறது, இது நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிவுறுத்தலை வழங்குகிறது.
இது எல்லா காலங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களுக்காக யோவானுக்கு கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. முழு வேதாகமத்திலுமே ஒரு எழுத்தாளருக்கு தனிப்பட்ட முறையில் தோன்றியதன் மூலம் இயேசுவால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுதான்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-2, “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
தேவனால் தாமே எழுதப்பட்ட தேவனுடைய சிந்தனைகளைக் கொண்ட புத்தகமே வெளிப்படுத்தின விசேஷமாகும். ஆனால் அவர் தம்முடைய தூதன் மூலம் தம்முடைய ஊழியக்காரரான யோவானுக்கு அதை அனுப்பி வெளிப்படுத்தினார். யோவானுக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை; அவன் கண்டதையும், கேட்டதையும் எழுதினான்.
ஆனால் இன்றைக்கு, தேவன் தம்முடைய மணவாட்டிக்கு இந்த மாபெரும் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக தம்முடைய வல்லமையுள்ள தூதனை பூமிக்கு அனுப்பினார், எனவே எல்லா சபைக் காலங்களிலும் என்ன நடந்தது என்பதை நாம் படிக்கவும் கேட்கவும் முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் வார்த்தைக்கு உண்மையாகவும் உத்தமமாகவும் தரித்திருந்த அவருடைய சிறிய மந்தையை நாம் காணலாம்.
தேவன் தம்முடைய தூதன் மூலம் பேசி, இந்த கடைசி நாட்களில், அவருடைய ஏழாம் சபைக் கால தூதனின் சத்தம் முழங்கத் தொடங்கும் போது, பவுலுக்கு வெளிப்படுத்தினது போல தேவனுடைய இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார் என்று கூறினார். அந்த தீர்க்கதரிசியை அவருடைய நாமத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அந்த தீர்க்கதரிசியின் ஊழியத்தின் நன்மைகளைப் பெறுவார்கள்.
மகிமை, அந்த தீர்க்கதரிசியை அவருடைய சொந்த நாமத்தில் ஏற்றுக்கொண்ட தேவனுடைய இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும் மணவாட்டியாய் நாம் இருந்து கொண்டு. நன்மை பயக்கும் விளைவைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இது தேவனுடைய சத்தம் பேசி அவருடைய மணவாட்டியை வழிநடத்துவதாக நாம் விசுவாசிக்கிறோம்.
ஓ சபையே, வரும் வாரங்களில் நாம் என்ன படிக்கப் போகிறோம், கேட்கப் போகிறோம். அவருக்கு, நாம் அவருடைய பசும் பொன்னுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறோம். அவர் என்னவாக இருக்கிறாரோ, நாமும் அவ்வாறே இருக்கிறோம். நாம் அவருடைய உண்மையான திராட்சை செடி. நாம் ஜெயங்கொண்டுள்ளோம். நாம் பரிபூரணப்படுத்தப்பட்டு, ஸ்திரப்பட்டு, பலப்படுத்தப்பட்டுள்ளோம். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட அன்பால் தெரிந்து கொள்ளப்பட்டோம். பயப்பட ஒன்றுமில்லை. செய்தியாளரையும், அவருடைய செய்தியையும் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஜீவிக்கிற குழுவாய் நாம் இருக்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் நாம், “அவர் வழியில் தம்முடைய வார்த்தையைப் பேசி, வெளிப்படுத்துகிறபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிகிறதல்லவா,” என்று கூறிக்கொண்டே இருப்போம்.
நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உணரவும், தேவனுடைய வார்த்தையின் அதிக வெளிப்பாட்டைப் பெறவும் விரும்பினால், குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து முதிர்ச்சிடையவும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை பெறவும் விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் 60-1204M என்ற செய்தியின் பேரிலான எங்களுடைய மகத்தான ஆய்வினை நாங்கள் துவங்கும்போது எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் கேட்ட அத்தியாயத்தை, சபைக் காலப் புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் கேட்கும்படிக்கு அல்லது படிக்கும்படிக்கு உங்களை ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள விசுவாசத் திறவுகோலை வைத்திருப்பவர்களே,
“நான் ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல். நானே வழி, ஒரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவின் இடத்தில் வரான். நான் எல்லா காரியங்களுக்கும் வாசலாய் இருக்கிறேன், விசுவாசமே நீங்கள் நுழையும் வாசலைத் திறக்கிற திறவுகோலாயுள்ளது.
இந்த திறவுகோலை வைத்திருக்கும் கரம் ஒன்று மாத்திரமே உள்ளது, அது விசுவாசத்தின் கரமாகும். தேவனுடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் திறக்கும் ஒரே திறவுகோல் விசுவாசம் மாத்திரமேயாகும். அவருடைய முடிக்கப்பட்ட கிரியைகளில் உள்ள விசுவாசமே தேவனுடைய ராஜ்யத்தின் உட்புறத்தில் உள்ள ஒவ்வொரு பொக்கிஷத்திற்கும் ஒவ்வொரு வாசலையும் திறக்கிறது. விசுவாசம் என்பது அவருடைய மணவாட்டிக்காக ஒவ்வொரு வாசலையும் திறந்து கொண்டிருக்கின்ற தேவனுடைய மகத்தான நிகர் ஒத்த திறவுகோலாகும். அந்த திறவுகோலை நாம் நம்முடைய விசுவாசத்தின் கரத்தில் வைத்திருக்கிறோம்.
அந்த விசுவாச திறவுகோல் நம்முடைய இருதயங்களில் உள்ளது, எனவே நாம், “இது தேவனுடைய வார்த்தை; இது நமக்கான தேவனுடைய வாக்குத்தத்தங்கள், நாம் அந்த திறவுகோலை வைத்திருக்கிறோம்” என்று கூறுகிறோம். அது மட்டுமல்லாமல் நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு துளி விசுவாசத்துடனும், ஒரு துளியும் சந்தேகிக்காமல், நமக்கிடையே நிற்கிற ஒவ்வொரு வாசலையும், நமக்காக தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் நாம் திறக்கிறோம். இது அக்கினியின் உக்கிரத்தை அவிக்கிறது. இது சுகவீனத்திற்கான சுகமளித்தலைத் திறக்கிறது. இது நம்முடைய இரட்சிப்பைத் திறக்கிறது. நாம் வாசலண்டை வந்திருக்கிறோம், நாம் வார்த்தையினாலாவது அல்லது கிரியையினாலாவது எதைச் செய்தாலும், நாம் அதை அவருடைய நாமத்தில் செய்து, நாம் விசுவாச திறவுகோலை உடையவராய் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், இது வேதத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திறவுகோலாயிருக்கிறது.
யார் என்ன நினைத்தாலும் நாம் கவலைப்படுவதில்லை, நிச்சயமாகவே ஒரு காரியம் உண்டு: தேவன் நம்மை அழைத்தார், நம்மை முன்குறித்தார், நமக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தினார், நாம் யாராக இருக்கிறோம் என்பதை நமக்கு சொன்னார், அவருடைய வார்த்தையைப் பின்பற்ற நாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் அவர் நம்மை அவருடைய மணவாட்டியாயிருக்க அழைத்திருக்கிறார்.
பிதாவானவர் தனது ஏழு நட்சத்திரங்களையும், ஏழு தூதர்களையும், ஏழு காலங்களையும் தனது கையில் வைத்திருந்தார். அவர் அவைகளை தம்முடைய கரத்தில் பிடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் அவை அவருடைய வல்லமையுடன் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைத்தான் கரமானது குறிக்கிறது. அது தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது! தேவனுடைய அதிகாரம்.
நாம் அவருடைய வார்த்தையை நம்முடைய விசுவாசத்தின் கரத்தில் வைத்துக் கொண்டிருப்பது, தேவனுடைய வல்லமையும், அதிகாரமும் நம்முடைய கரத்தில் இருப்பதைக் குறிக்கிறது, நமக்குத் தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்குமான ஒவ்வொரு வாசலையும் திறக்க அவர் நமக்கு திறவுகோலைக் கொடுத்துள்ளார். இது ஒவ்வொரு வாசலையும் திறக்கும் முதன்மையான திறவுகோலாகும்.
தேவன் ஏன் நமக்கு ஒவ்வொரு கையிலும் 5 விரல்களைக் கொடுக்கிறார் என்பது இப்போது எனக்குத் தெரியும். 4 அல்ல, 6 அல்ல, 5, எனவே ஒவ்வொரு முறையும் நம் கைகளைப் பார்க்கும் போது, ஒவ்வொரு வாசலையும் திறக்கும் விசுவாசத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
இது மனித இனத்திற்கு ஒரு நித்திய அடையாளமாயிருக்கிறது, எனவே நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்; எப்பொழுதும் நினைவில் வைத்து தைரியமாக இருப்போம், அந்த விசுவாசத்தை நம்முடைய கரங்களில் வைத்திருக்கிறோம். அவர் நம்முடைய கடுகளவு விசுவாசத்தை உயர்த்தி, அவருடைய மகத்தான விசுவாசத்தை அவருடைய ஒருபோதும் தவறிப்போகாத, ஒருபோதும் தவறிப் போக முடியாத நித்திய வார்த்தையில் நமக்கு அளிக்கிறார்!!!
நாம் பரலோகத்திற்கு நம்முடைய கைகளை உயர்த்தி, ஒவ்வொரு கரத்திலும் 5 விரல்களை விரித்து, அவரிடம், "பிதாவே, நீர் பேசின ஒவ்வொரு வார்த்தையிலும் விசுவாசமுடையவர்களாய் இருந்து நாங்கள் விசுவாசிக்கிறோம். இது உம்முடைய வாக்குத்தத்தம், உம்முடைய வார்த்தை, நாங்கள் அப்படியே விசுவாசிப்போமானால் எங்களுக்கு தேவைப்படுகிற விசுவாசத்தை நீர் எங்களுக்கு அளிப்பீர்…நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று கூறுகிறோம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நம்மிடம் இராப்போஜன ஆராதனை இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை காலை உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களுடைய சபையோடு, குடும்பத்தினரோடு அல்லது தனித்தனியாகக் கேட்க ஒரு செய்தியைத் தேர்வுசெய்ய உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். நம்முடைய விசுவாசத்தை மதிப்பிடுவதற்கு, வார்த்தையைக் கேட்பதை விட சிறந்த வழி உண்மையாகவே எதுவுமில்லை; ஏனென்றால், விசுவாசம் கேட்பதால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதால் வருகிறது, அந்த வார்த்தை தீர்க்கதரிசியிடம் வந்தது.
நாம் அனைவரும் 62-1007 வாசலுக்குத் திறவுகோல் என்ற செய்தியைக் கேட்க, (உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில்) மாலை 5:00 மணிக்கு ஒன்று சேருவோமாக. அறிவித்தபடி, இதை ஒரு விசேஷித்த இராப்போஜன ஆராதனையாக்க நான் விரும்புகிறேன், இது மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பப்படும், (ஜெபர்சன்வில் நேரம்). இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கம் செய்து இயக்கலாம்: இங்கே இணைப்பு.
கடந்த காலத்தில் மற்ற வீட்டு இராப்போஜன ஆராதனைகளைப் போலவே, ஒலிநாடாவின் முடிவில் சகோதரன் பிரான்ஹாம் அப்பம் மற்றும் திராட்சை ரசத்திற்காக ஜெபம் செய்வார். இராப்போஜன ஆராதனைப் பகுதியை நீங்கள் முடிப்பதற்கான பல நிமிடங்களுக்கு இசைப்பேழையின் இசை இருக்கும். பிறகு, சகோதரன் பிரான்ஹாம் பாதங்களைக் கழுவுதல் தொடர்பான வேதவசனத்தை வாசிப்பார், அவருடைய வாசிப்பைத் தொடர்ந்து பாதங்களைக் கழுவும் ஆராதனைப் பகுதியை நீங்கள் முடிப்பதற்கு நற்செய்தி பாடல்கள் பல நிமிடங்கள் தொடரும்.
நம்முடைய வீடுகளிலோ, சபைகளிலோ, அல்லது நீங்கள் எங்கிருந்தாலும், நம் ஒவ்வொருவரோடும் போஜனம் பண்ணும்படி, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை அழைப்பதில் நாம் என்ன ஒரு சிலாக்கியத்தை உடையவர்களாக இருக்கிறோம். நீங்கள் அவரண்டை பேசும்போது எனக்காக ஜெபியுங்கள், நான் உங்களுக்காக நிச்சயமாக ஜெபித்துக் கொண்டிருப்பேன்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்