காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 14 டிசம்பர், 2024

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,

நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 60-1218 விளங்காத சத்தம் என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 7 டிசம்பர், 2024

அன்பான தெரிந்து கொள்ளப் பட்டவர்களே,

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

ஊழியக்காரர்களே, தாமதமாகும் முன் தேவனுடைய தூதனுக்கு உங்கள் வாசல்களைத் திறவுங்கள். ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் தேவனுடைய சத்தத்தை உங்களுடைய பிரசங்க பீடங்களில் மீண்டும் கொண்டு வாருங்கள். இது பிழையற்ற வார்த்தைகளுடன் நம்முடைய நாளுக்கான ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாயுள்ளது. இது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள சத்தமாயுள்ளது. இது மாத்திரமே மணவாட்டி யாவரும் ஆமென் என்று சொல்லக்கூடிய சத்தமாயுள்ளது.

இது எல்லா காலத்திலும் மிக மகத்தான காலம. தம்முடைய கிருபையின் நாட்கள் முடிவடையும் போது இயேசு தம்மைப் பற்றிய விளக்கத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார். நேரமானது முடிவுக்கு வந்துவிட்டது. இந்த கடைசி காலத்தில் அவர் தம்முடைய குணாதிசயங்களை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் தம்முடைய சொந்த மகிமையான உன்னத தெய்வீக தன்மையை பற்றிய ஒரு இறுதிப் பார்வையை நமக்கு அளித்துள்ளார். இந்தக் காலம் அவரைக் குறித்த தலைக்கல் வெளிப்பாடாயுள்ளது.

தேவன் இந்த லவோதிக்கேயா காலத்தில் வந்து மானிட மாம்சத்தின் மூலமாகப் பேசினார். அவருடைய வார்த்தை மணவாட்டியை வழிநடத்தவும் பரிபூரணப்படுத்தவும் அவருடைய சத்தம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொந்த சத்தத்தைத் தவிர, அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்தக் கூடிய வேறு சத்தம் எதுவும் இல்லை.

இந்த கடைசி காலத்தில், ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய சத்தம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது; சபைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் ஒலிநாடாக்களை இயக்கமாட்டார்கள். எனவே தேவன், “நான் உங்கள் அனைவருக்கும் எதிராகப் போகிறேன். நான் உங்களை என் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடுவேன். இதுவே முடிவு” என்று கூறுகிறார்.

“ஏனென்றால் இந்த ஏழு சபை காலங்களிலுமே, மனிதர்கள் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடைய வார்த்தைக்கே மதிப்பு கொடுக்கிறதைத் தவிர, வேறொன்றையுமே நான் காணாதிருக்கிறேன். ஆகையால் நான் இந்த முடிவு காலத்திலே உங்களை என்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இது முடிவு பெற்றாயிற்று. நான் உங்களிடத்தில் சரியாக பேசப் போகிறேன். ஆம், நான் இங்கே சபையின் மத்தியில் இருக்கிறேன். உண்மையும், சத்தியமும், ஆமெனின் தேவனானவர் தம்மை வெளிப்படுத்துவார். அது என்னுடைய தீர்க்கதரிசி மூலமாய் இருக்கும்" என்கிறார்.

முன்பு இருந்ததைப் போலவே, ஆகாபின் நாட்களில் தங்களுடைய மூதாதையர்கள் செய்ததைப் போன்ற முறைமைக்கே அவர்களும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நானூறு பேராயிருந்தனர், அவர்கள் அனைவரும் கருத்தொற்றுமையில் இருந்தனர்; அவர்கள் அனைவரும் ஒரே காரியத்தையே கூறி, மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் ஒரு தீர்க்கதரிசி, சரியாக ஒருவரே சரியானவராயிருந்தார், மற்ற அனைவரும் தவறாயிருந்தனர், ஏனென்றால் தேவன் ஒருவரிடம் மட்டுமே வெளிப்பாட்டை ஒப்படைத்திருந்தார்.

இது எல்லா ஊழியங்களும் பொய்யாயுள்ளன என்றும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறவில்லை. ஊழியத்திற்கான ஒரு அழைப்போடுள்ள ஒரு மனிதனால் பிரசங்கிக்கவோ அல்லது கற்பிக்கவோ முடியாது என்று நான் கூறவில்லை. நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக இருக்கிறபடியால், மணவாட்டிக்கு தேவனுடைய சத்தத்தை, ஒலிநாடாக்களை இயக்குவதே உண்மையான ஐந்து வகையான ஊழியம் என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே சத்தமாக உள்ளது.

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனென்றால் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

நிச்சயமாகவே இன்றைக்கான சரியான வழியை நீங்கள் எப்படி அறிவீர்கள்? விசுவாசிகளிடையே இப்படி ஒரு பிரிவினை உள்ளது. ஐந்து வகையான ஊழியம் மணவாட்டியைப் பரிபூரணபடுத்தும் என்று ஒரு குழுவினர் கூறுகிறார்கள், மற்றொரு குழுவினர் இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் என்று கூறுகின்றனர். நாம் பிளவுபடக் கூடாது; நாம் ஒரே மணவாட்டியாக ஒன்றுபட வேண்டும். சரியான பதில் என்ன?

உங்கள் இருதயங்களை ஒன்றாகத் திறந்து, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் மணவாட்டிக்கு என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்போமாக. ஏனென்றால் சகோதரன் பிரான்ஹாம் அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்று நாம் யாவரும் ஒப்புக்கொள்கிறோம்.

மனித இயல்பின் அடிப் படையில், எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தில் ஒரு சிறிய குறிப்புகளில்கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர். அப்படியானால் இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப் போகின்றபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்? அதாவது பவுலின் நாட்களில் பரிபூரணமாக அளிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையை நாம் மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்வோம் என்பதே அதன் பொருளாகும். அதை யார் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நான் உங்களுக்கு கூறவுள்ளேன். அது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட அல்லது ஏனோக்கு முதல் இந்நாள் வரையிலும் எந்த தீர்க்கதரிசியும் ரூபகாரப்படுத்தப்படாத விதத்தில் இன்னும் அதிகமாக முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும். ஏனெனில், இந்த மனிதன் தலைக்கல் தீர்க்கதரிசன ஊழியத்தை அவசியம் பெற்றிருப்பார். தேவன் அதை அவருக்குத் தெரிவிப்பார். அவர் தனக்காக பேசவேண்டிய அவசியமே இருக்காது. தேவன் அடையாளத்தின் சத்தத்தினால் அவருக்காக பேசுவார். ஆமென்.

எனவே, அவருடைய தூதனால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்துகொள்ளப்படுகிறது.

தேவன் தம்முடைய ஏழாவது தூதனாகிய செய்தியாளரையும், அவருடைய செய்தியைப் பற்றியும் வேறு என்ன கூறினார்?

அவர் தேவன் கூறுவதை மாத்திரமே கேட்பார்.

அவர், "கர்த்தர் உரைக்கிறதாவதை” உடையவராயிருந்து, தேவனுக்காகவே பேசுவார்.

அவர் தேவனுக்காக பேசும் சத்தமாயிருப்பார்.

அவர் மல்கியா 4:6-ல் உரைக்கப்பட்டிருக்கிறபடியே, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.

அவர் கடைசி காலத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை திருப்பிக் கொண்டு வருவார். பவுல் கூறினதுபோன்ற சரியான சத்தியத்தைக் கூறுகிற ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கே அவர்கள் செவி கொடுப்பர்.

● அவர்கள் கொண்டிருந்த சத்தியத்தைப் போன்ற சத்தியத்தையே அவர் திரும்ப அளிப்பார்.

பின்னர் அவர் நம்மைப் பற்றி என்ன கூறினார்?

அந்த நாளில் அவரோடுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை உண்மையாய் வெளிப்படுத்துகிறவர்களுமாயும், அவருடைய சரீரமாயும், அவருடைய சத்தமாயுமிருந்து, அவருடைய கிரியை களைச் செய்கிறவர்களுமாயிருப்பர். அல்லேலூயா! உங்களுக்கு அது புரிகின்றதா?

நீங்கள் இன்னும் ஏதேனும் சந்தேகத்தில் இருந்தால், தேவனுடைய ஆவியினால் உங்களை நிரப்பவும், உங்களை வழிநடத்தவும் அவரிடம் கேளுங்கள், ஏனென்றால் "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஏமாற்றப்பட முடியாது" என்று வார்த்தை கூறுகிறது. நீங்கள் மணவாட்டியாயிருந்தால் எந்த மனிதனும் உங்களை ஏமாற்ற முடியாது.

மெத்தோடிஸ்டுகள் தவறிப்போனபோது, தேவன் மற்றவர்களை எழுப்பினார். எனவே இது காலா காலங்களினூடாக இவ்வாறு நிகழ்ந்து வந்து, இந்தக் கடைசி நாளில் தேசத்தில் மீண்டும் மற்றொரு ஜனங்கள் இந்த கடைசி காலத்திற்கென கடைசி சத்தமாய் இருக்கும் அவர்களுடைய செய்தியாளனின் கீழ் இருக்கின்றனர்.

ஆம் ஐயா. இனி சபையானது "தேவனுக்காக பரிந்து பேசுகிற சத்தமாய்" இருக்காது. அது தனக்கு சொந்தமானதையே பேசுகிறதாயிருக்கிறது. ஆகையால் தேவன் அவளை விட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கிறார். எனவே அவர் அவளை தீர்க்கதரிசியினூடாகவும், மணவாட்டியினூடாகவும் கலங்கச் செய்வார். ஏனென்றால் தேவனுடைய சத்தம் அவளுக்குள்ளாக இருக்கும். ஆம் அது அவ்வாறே இருக்கிறது, ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரம் 17ம் வசனத்தில், “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்" என்றே அது கூறுகிறது. இன்னும் ஒருவிசை இந்த உலகமானது பெந்தேகொஸ்தே நாளில் தேவனிடத்திலிருந்து நேரடியாக தேவனுடைய சத்தத்தைக் கேட்டதுபோல கேட்கும்; ஆனால் உண்மையிலேயே அந்த வார்த்தையான மணவாட்டியானவள் முதலாம் காலத்தில் புறக்கணிக்கப்பட்டது போலவே புறக்கணிக்கப்படுவாள்.

மணவாட்டிக்கு ஒரு சத்தம் உள்ளது, ஆனால் அது ஒலிநாடாக்களில் உள்ளதை மட்டுமே கூறும். ஏனென்றால் அந்த சத்தம் நேரடியாக தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்கிறது, எனவே அது பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்து கொள்ளப்பட்டதால் அதற்கு வியாக்கியானம் தேவையில்லை.

லவோதிக்கேயா சபையின் காலம் 60-1211E என்ற செய்தியை அந்த சத்தம் எங்களுக்கு வெளிப்படுத்த நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 30 நவம்பர், 2024

காலை வணக்கம் நண்பர்களே,

உலகம் முழுவதிலுமிருந்து கிறிஸ்துவின் மணவாட்டி ஒருமனதாக ஒன்றுபட முடியும்போது, அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம், தேவனுடைய சத்தம், சடுதியாய் வர முடிந்த ஒரு நேரம் உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை.

வேதவாக்கியங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது இணையும் நேர வித்தின் அடையாளம். நாம் தேவனுடைய பிரசனத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, தேவனுடைய சத்தத்தை கேட்பதன் மூலம் மணவாட்டி தாமே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கையில் கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அவருடைய ஐந்து வகையான ஊழியத்தால் நாம் பரிபூரணப்படுத்தப்படுகிறோம்.

கிருபை வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளே என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? சபையில் ஐந்து வரங்கள் உள்ளன என்று வேதம் கூறியுள்ளது. தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், அல்லது மிஷினரிகளையும், அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும் வைத்துள்ளார்.

பிரசங்கியார்: நான் வீதியில் போகிறேன். அப்பொழுது யாரோ, "நீங்கள் ஒரு பிரசங்கியா?" என்று கேட்பார். அதற்கு நான், “ஆம் ஐயா. ஓ ஆம், நான் ஒரு பிரசங்கியார்" என்று கூறுவேன்.

போதகர்: இப்போது இன்று காலை நான் ஒருபோதும் பிரசங்கிக்காததற்குக் காரணம், நாம் ஒரு உரையை எடுத்து பிரசங்கிக்கையில் அதைத் தவிர்ப்பதை விட போதிக்கையில் அதை நன்றாகப் புரிந்துகொள்வோம் என்று நான் எண்ணினேன். நாங்கள் அதை அப்படியே போதிப்போம்.

அப்போஸ்தலர்: "மிஷனரி" என்ற வார்த்தைக்கு "அனுப்பப்பட்டவர்" என்று பொருள். "அப்போஸ்தலர்" என்றால் "அனுப்பப்பட்டவர்" என்று பொருள். ஒரு மிஷனரி ஒரு அப்போஸ்தலன். நீங்கள் அறிந்திருக்கிறபடி, நான் - நான், நான் ஒரு மிஷனரி, சுவிசேஷப் பணியில், மிஷனரி ஊழியத்தில், சுமார் ஏழு முறை உலகம் முழுவதுமுள்ள வெளிநாடுகளை சுற்றி வந்திருக்கிறேன்.

தீர்க்கதரிசி: நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் செய்யும்படிக்கு நான் என்ன சொல்கிறேனோ அதை போய் செய்யுங்கள்.

மேய்ப்பர்: நான் உங்களுக்கு என்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் என்னை உங்களுடைய மேய்ப்பர் என்று அழைக்கிறீர்கள், நீங்கள் நன்றாகச் சொல்கிறீர்கள், ஏனென்றால் நான் அப்படித்தான் இருக்கிறேன்.

இலட்சக்கணக்கான மக்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை நான் கண்டு, “அவர்கள் யாவரும் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?” என்று கேட்டேன். அப்பொழுது, “இல்லை, அவர்கள் உன் ஊழியத்தில் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள்” என்று பதில் வந்தது. அதன்பின்னர் நான் கூறினேன், நான்—நான், “நான் இயேசுவைக் காண வேண்டும்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “அதற்கு இன்னும் சமயம் வரவில்லை. அவர் வருவதற்கு முன்னர் ஒரு சமயம் உண்டாயிருக்கும். ஆனால் அவர் முதலில் உன்னிடம் வருவார், அப்பொழுது நீ பிரசங்கித்த வார்த்தையின்படியே நியாயந்தீர்க்கப்படுவாய்” என்றார்.

அப்பொழுது நாங்கள் அனைவரும் எங்களுடைய கரங்களை உயர்த்தி, "நாங்கள் அதன் பேரில்தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!” என்றோம்.

ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் என்னைச் சுற்றி எழத் தொடங்குகிறார்கள். என்னுடைய சரீரத்தில் ஒரு மாற்றம் வருவதை நான் உணர்கிறேன். என் நரை முடி, அது போய்விட்டது. என் முகத்தைப் பாருங்கள்...என் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. என் வலிகள் மற்றும் வேதனைகள் ... அவை போய்விட்டன. என் மனச்சோர்வு உணர்வு உடனடியாக மறைந்துவிட்டது. நான் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாக்கப்பட்டிருக்கிறேன்.

பின்னர் நாம் நம்மைச் சுற்றிப் பார்க்கத் துவங்கி, நம்முடைய அன்புக்குரியவர்களைக் காண்போம். ஓ என்னே, அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள்...மகிமை, என்னுடைய மகன்... என்னுடைய மகள். தாத்தா, பாட்டி, நான் உங்கள் இருவரையும் மிகவும் இழந்துவிட்டேன். ஏய்... என்னுடைய பழைய நண்பன் இருக்கிறான். ஓ பாருங்கள், இது சகோதரன் பிரான்ஹாம், நம்முடைய தீர்க்கதரிசி, அல்லேலூயா!! அது இங்கே உள்ளது. அது சம்பவித்துக் கொண்டிருக்கிறது!

பின்னர் ஒன்றாக, ஒரே நேரத்தில், பூமிக்கு அப்பாலுள்ள விண்வெளியில் எங்கோ நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். நாம் கர்த்தரை அவருடைய பாதையிலே சந்திப்போம். நாம் அங்கே இந்தப் பூமியின் வளையங்களில் அவருடன் நின்று மீட்பின் கீதங்களைப் பாடுவோம். அவர் நமக்கு அளித்துள்ள மீட்பின் கிருபைக்காக அவரைப் பாடித், துதிப்போம்.

அவருடைய மணவாட்டிக்காக எவ்வளவோ காத்திருக்கிறது. நித்தியம் முழுவதும் நாம் ஒருவருக்கொருவர் மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுடன் என்ன ஒரு நேரத்தைக் கொண்டிருக்கப் போகிறோம். கர்த்தாவே, எங்களுடைய இருதயத்தில் நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை அழிவுக்குரிய மானிட வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

அவர் உங்களை மணவாட்டி என்று அழைப்பதையும், அவருடன் அது எப்படி இருக்கப் போகிறது என்பதை உங்களிடத்தில் சொல்வதையும் நீங்கள் கேட்க விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் அளவுக்கதிகமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

60-1211M பத்து கன்னிகைகளும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களும்

 

 

சனி, 23 நவம்பர், 2024

அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே,

இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக இந்த ஞாயிறு என்ன காத்திருக்கும்? பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்னவெல்லாம் வெளிப்படுத்துவார்? பரிபூரண உணருதலையே. நாம் இப்போது வெளிப்படுத்தல் மூலமும், மாதிரியோடு வேறுபடுத்தப்பட்ட எதிர் மாதிரி மூலமும், மூலப் பொருளின் நிழலின் மூலமாகவும் முழுமையாக புரிந்துகொள்வோம். இயேசுவே உண்மையான ஜீவ அப்பமாயிருக்கிறார். அவர் அதனுடைய முழுமையாய் இருக்கிறார். அவர் ஒரே தேவன். அவர் எபிரெயர் 13:8. நான் இருக்கிறவராயிருக்கிறேன் என்பவராக அவர் இருக்கிறார்.

கிறிஸ்து, மாம்சத்தில் தோன்றி, தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தியதன் மூலம், தம்மையே பலியாகக் கொண்டு நம்முடைய பாவங்களை ஒருமுறை நீக்கிவிட்டார்; ஆகையால் அவர் இப்போது நம்மை பரிபூரணமாக்கியுள்ளார். அவருடைய ஜீவன் நமக்குள் இருக்கிறது. அவருடைய இரத்தம் நம்மைச் சுத்திகரித்தது. அவருடைய ஆவி நம்மை நிரப்புகிறது. அவருடைய தழும்புகள் ஏற்கனவே நம்மைக் குணப்படுத்தியுள்ளன.

அவருடைய வார்த்தை நம்முடைய இருதயத்திலும் வாயிலும் இருக்கிறது. இது நம்முடைய ஜீவியங்களில் உள்ள கிறிஸ்து, வேறொன்றுமில்லை, ஏனெனில் அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர நம்முடைய ஜீவியங்களில் உள்ள அனைத்தும் முக்கியமற்றதாக மறைந்துவிடும்.

அவருடைய தெய்வீக ஆணையின் மூலம், அவருடைய மணவாட்டி யார் என்பதை அவர் சரியாக அறிந்திருந்தார் என்று அவர் நமக்குச் சொல்லும்போது நம் இருதயம் மகிழ்ச்சியால் நிரப்பப்படும். அவர் நம்மை எப்படி தெரிந்து கொண்டார். அவர் நம்மை அழைத்தார். அவர் நமக்காக மரித்தார். அவர் நமக்கான கிரையத்தை செலுத்தினார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள், அவருக்கு மாத்திரமே. அவர் பேசுகிறார், நாம் கீழ்ப்படிகிறோம், ஏனென்றால் அது நம்முடைய மகிழ்ச்சி. நாம் அவருடைய ஒரே சொத்து, அவருக்கு நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் நம்முடைய ராஜாதி ராஜா, நாம் அவருடைய ராஜ்யம். நாம் அவருடைய நித்திய உடைமை.

அவர் நம்மைப் பலப்படுத்தி, தம்முடைய வார்த்தையின் சத்தத்தினால் நம்மை ஒளிரச் செய்வார். அவர் ஆடுகளின் வாசல் என்பதை அவர் தெளிவாக விளக்கி வெளிப்படுத்துவார். அவர் ஆல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறார். அவர் பிதாவாகவும், அவர் குமாரனாகவும், அவர் பரிசுத்த ஆவியாகவும் இருக்கிறார். அவர் ஒருவரே, நாம் அவரோடும் அவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறோம்.

அவர் ஆபிரகாமுக்கு செய்தது போலவே, நாம் எந்த வாக்குத்தத்தத்தையும் பெற விரும்பினால், நாம் எவ்வாறு பொறுமையுடன் காத்திருந்து சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதன் மூலம். அவர் நமக்கும் பொறுமையைக் கற்பிப்பார்.

நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நாளை அவர் நமக்குத் தெளிவாகக் காண்பிப்பார். உலக ஆலோசனை சபை சங்க அசைவு எவ்வாறு அரசியல் ரீதியாக மிகவும் வலுவாக மாற, சட்டத்தில் இயற்றப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் அனைவரும் தன்னுடன் சேருமாறு அரசாங்கத்தால் அழுத்தம் உண்டாகி, அதனால் அவர்களுடைய ஆலோசனை சங்கத்தின் நேரடி அல்லது மறைமுக ஆதிக்கம் இருந்தாலொழிய எந்த ஜனங்களுமே சபைகளாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்.

ஸ்தாபனத்தின் அமைப்பில் தேவனை சேவித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணி, எத்தனை பேர் உடன் செல்வார்கள் என்பதை அவர் வெளிப்படுத்துவார். ஆனால் அவர் நமக்கு, “பயப்படாதே, மணவாட்டி வஞ்சிக்கப்படமாட்டாள், நாம் அவருடைய வார்த்தையோடும் அவருடைய சத்தத்தோடும் தரித்திருப்போம்” என்று சொல்லுகிறார்.

அவர் நம்மிடத்தில்: “பற்றிக் கொண்டிருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள், ஒருபோதும் விட்டு விடாதீர்கள், தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு ஆயுதமும், நான் உங்களுக்கு அளித்துள்ள ஒவ்வொரு வரமும் நம்முடைய உபயோகத்திற்காக உள்ளது. இனிய இருதயமே ஒரு போதும் திடனற்றுப் போக வேண்டாம், தொடர்ந்து மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருங்கள், ஏனென்றால் உங்களுடைய கணவனாகிய உங்களுடைய ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாகிய என்னால் நீங்கள் முடி சூட்டப்பட போகிறீர்கள்” என்று அவர் சொல்வதை கேட்பது எவ்வளவு உற்சாகமாயிருக்கும்.

நீங்கள் என்னுடைய உண்மையான சபையாயும்; உங்களுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிற என்னுடைய பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள். நீங்கள் புதிய ஆலயத்தில் தூண்களாயும்; மேற்கட்டுமானத்தை நிலைநிறுத்தும் அஸ்திபாரமாயுமிருப்பீர்கள். நான் உங்களை அப்போஸ்தலர்களுடனும் தீர்க்கதரிசிகளுடனும் ஜெயங்கொள்பவர்களாய் வைப்பேன், ஏனென்றால் நான் உங்களுக்கு என்னைக் குறித்த, என்னுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறேன்.

உலகத் தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்கள் அவருடைய ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன என்பதை அவர் நமக்கு தெளிவாக வெளிப்படுத்துவார். ஆகவே அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்க இரவும் பகலும் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருப்போம். நாம் கர்த்தரின் விசேஷித்த பராமரிப்பில் இருக்கிறோம்; நாம் அவருடைய மணவாட்டி.

அவருடைய நாமத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் ஒரு புதிய நாமத்தைப் பெறுவோம். அவர் நம்மைத் தம்மிடம் ஏற்றுக் கொள்ளும் போது அந்த நாமம் நமக்கு கொடுக்கப்படும். நாம் அவருடைய திருமதி இயேசு கிறிஸ்துவாக இருப்போம்.

புதிய எருசலேம் தன்னுடைய கணவருக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு மணவாட்டியாக பரலோகத்திலுள்ள தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது, இனி மரணமோ, துக்கமோ, அழுகையோ இருக்காது. முந்தினவைகள் ஒழிந்து போனதால் இனி வேதனை இருக்காது. தேவனுடைய அற்புதமான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாற்றம் முடிவுற்றுவிடும். ஆட்டுக்குட்டியும் அவருடைய மணவாட்டியும் தேவனுடைய அனைத்து பரிபூரணங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே, அதைப் பற்றிக் கனவு காணுங்கள். நீங்கள் எப்போதும் நினைத்ததை விட இது மிகவும் அற்புதமாக இருக்கும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நம்முடைய கணவர் இயேசு கிறிஸ்து, தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக இந்த எல்லா காரியங்களையும் நமக்கு சொல்லவிருப்பதால் எங்களுடன் சேர்ந்துகொள்ள வருமாறு ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தி: பிலதெல்பியா சபையின் காலம் 60-1210

 

 

சனி, 16 நவம்பர், 2024

அன்புள்ள ஒலிநாடாவைக் கேட்கிற ஜனங்களே,

“ஒலிநாடாவைக் கேட்கிற ஜனங்கள்" என்று அழைக்கப்படுவதில் நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம். தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்பதன் மூலம் உலகம் முழுவதும் ஒன்றுபடுவோம் என்பதை அறிந்து ஒவ்வொரு வாரமும் நம்முடைய இதயங்கள் உற்சாகத்துடன் ஓடுகின்றன.

எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி, அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும்; அவருடைய பலமுள்ள ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறோம் என்றும் நாம் அறிவோம்.

நம்முடைய நாளுக்காக அவர் தெரிந்து கொண்ட செய்தியாளர் வில்லியம் மரியன் பிரான்ஹாம். அவர் உலகத்திற்கு தேவனுடைய தீபமாயிருந்து, தேவனுடைய ஒளியை பிரதிபலிக்கிறார். அவர் தன்னுடைய தூதனின் மூலமாக அவர் தெரிந்து கொண்ட சுத்தமான வார்த்தை மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய வார்த்தையைக் கவனமாகப் படிப்பதன் மூலம், வில்லியம் மரியன் பிரான்ஹாம், நம்முடைய நாளுக்காக அவருடைய வெளிப்பாட்டையும் ஊழியத்தையும் கொடுக்க அவர் தெரிந்து கொண்ட தூதன் என்பதை அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படுத்தினார். அவருடைய தூதனை, நம்முடைய நட்சத்திரத்தை, நாம் அவருடைய வலது கரத்தில் பார்க்கிறோம், அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தவும் அவருடைய மணவாட்டியை அழைக்கவும் அவர் அவருக்கு அதிகாரத்தை வழங்குகிறார்.

அவர் தன்னைப் பற்றிய முழு வெளிப்பாட்டையும் நமக்குத் தந்துள்ளார். பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஏழாவது தூதனின் ஜீவியத்தின் மூலம் தம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார்; நம்முடைய நாளுக்கான அவருடைய கண்களாய் இருக்கும்படி அவர் தெரிந்து கொண்ட தூதன்.

நாம் அவருடைய வார்த்தை மணவாட்டி என்றும், ஒவ்வொரு செய்தியிலும் நம்மைத் தம்மிடம் கொண்டு வருவதே அவருடைய நோக்கம் என்றும் அவர் நமக்கு சொல்லும்போது; நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே எப்படி கொழுந்துவிட்டு எரிகின்றன.

உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் எப்படியாய் நம்மை அவருக்குள் தெரிந்து கொண்டார் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு சொல்ல அவர் விரும்புகிறார். நாம் எப்படியாய் முன்னறிவிக்கப்பட்டு, அவரால் நேசிக்கப்பட்டோம்.

அவருடைய இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்றும், ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்புக்குள் வர முடியாது என்றும் அவர் நமக்கு சொல்வதை கேட்பதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம். நாம் ஒருபோதும் நியாயத்தீர்ப்பில் இருக்க முடியாது, ஏனென்றால் பாவத்தை நம்மீது சுமத்த முடியாது.

அவர் தம்முடைய பூமிக்குரிய தாவீதின் சிங்காசனத்தை எடுத்துக் கொள்ளும்போது, பூமி முழுவதையும் வல்லமையோடும் அதிகாரத்தோடும் அவர் பரலோகத்தில் செய்தது போலவே, நாம் எப்படியும் அவருடன் அமர்ந்து ஆளுகை செய்வோம். இந்த ஜீவியத்தின் சோதனை மற்றும் பரிசோதனைகள் அப்பொழுது ஒன்றுமற்றதாய் தென்படும்.

ஆனால் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் கூட அவர் எச்சரித்துள்ளார். காலங்காலமாக இரண்டு திராட்சைச் செடிகளுமே அருகருகே வளர்ந்தன. சத்துரு எப்போதுமே எப்படி மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளான்; மிகவும் வஞ்சிப்பதற்காகவே. யூதாஸ் கூட தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, சத்தியத்தில் அறிவுறுத்தப்பட்டான். அவன் இரகசியங்களைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொண்டான். அவன் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு வல்லமையான ஊழியத்தை உடையவனாயிருந்து இயேசுவின் நாமத்தில் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, பிசாசுகளை துரத்தினான். ஆனால் அவனால் முடிவு பரியந்தம் செல்ல முடியவில்லை.

உங்களால் வார்த்தையின் ஒரு பகுதியை மட்டும் சேர்த்துக் கொள்ள முடியாது, எல்லா வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏறக்குறைய நூறு சதவிகிதம் தேவனுடைய காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்களாகத் தோன்றுகிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அப்படி இல்லை.

அவர் தன்னை முழு சபையுடனும் அல்லது எபேசியர் நான்கின் ஐந்து வகையான ஊழியத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டது போதாது என்று அவர் கூறினார். ஒவ்வொரு காலத்திலும் சபையானது வழிதவறிச் செல்கிறது என்றும், அது சபை மக்கள் மட்டுமல்ல, ஆனால் மதகுருமார் குழுவும் - மேய்ப்பர்களும் ஆடுகளைப் போலவே தவறாய் இருக்கிறார்கள் என்று நம்மை எச்சரித்தார்.

எனவே அவருடைய சொந்த சித்தத்தின் உறுதியான ஆலோசனையின் மூலம், அவருடைய ஜனங்களை திரும்பவும் சத்தியத்திற்கும் நிறைவான சத்தியத்தின் வல்லமைக்கும் வழிநடத்த அவர் தம்முடைய ஏழாம் தூதனின் ஊழியத்தில் பிரதான மேய்ப்பராக நம்முடைய காலத்தில் தன்னைக் காட்சியில் கொண்டுவந்தார்.

அவர் அவருடைய செய்தியாளரில் இருக்கிறார், செய்தியாளர் அவருடைய வார்த்தையினால் கர்த்தரை பின்பற்றுகிற ஒருவராய் இருக்கிறபடியால், தேவனுடைய பரிபூரணத்தை கொண்டிருப்பவன் செய்தியாளரை பின்பற்றுவான்.

நான் தேவனுடைய பரிபூரணத்தை உடையவனாய் இருந்து அவருடைய செய்தியாளரை பின்பற்ற விரும்புகிறேன். எனவே, நம்மைப் பொறுத்தவரை, பிரான்ஹாம் கூடாரம், செய்தியாளர் கர்த்தரை அவருடைய வார்த்தையின் மூலம் பின்பற்றுவது போல, அவரைப் பின்பற்றுவதற்கான ஒரே வழி, இயங்கு பொத்தானை அழுத்தி பிழையற்ற வார்த்தைகளை நம்மிடத்தில் பேசுகிற சுத்தமான தேவனுடைய சத்தத்தை கேட்பதாகும்.

நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை யூகிக்கவோ அல்லது சரிபார்க்கவோ தேவையில்லை, நாம் இயங்கு பொத்தானை அழுத்தி நாம் கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்.

ஒரு நாள் அதிகாலையில் வானொலி சத்தத்தில் (வாய்ஸ் ரேடியோவில்) சகோதரன் பிரான்ஹாம் பின்வரும் மேற்கோளைச் சொல்வதைக் கேட்டேன். நான் அதைக் கேட்டதும், இதைத்தான் நான்/நாம் இப்படித்தான் சொல்கிறேன் என்று என் மனதில் தோன்றியது:

நாம் இயங்கு பொத்தானை அழுத்தி ஒலிநாடாக்களைக் கேட்கிறோம்.

அது எனக்கு எங்களுடைய விசுவாசத்தின் ஒரு அறிக்கை போன்று தென்பட்டது.

அந்த காரணத்தினால் தான் நான் இந்த செய்தியில் விசுவாசம் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் இது தேவனுடைய வார்த்தையில் இருந்து வருகிறது. தேவனுடைய வார்த்தைக்கு புறம்பான எந்த காரியத்தையும் நான் நம்புகிறதில்லை. அது அவ்வாறு இருக்கலாம், ஆனால் இன்னமும் நான் தேவன் கூறினதோடு தரித்திருப்பேன், அப்பொழுது நான் சரியாக இருக்கிறேன் என்பது நிச்சயமாக இருக்கும். இப்போது, தேவன் விரும்புகிறதை அவரால் செய்ய முடியும். அவர் தேவனாய் இருக்கிறார். ஆனால் நான் அவருடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் வரை, அது சரியாயிருக்கும் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்.

மகிமை, அவர் அதை மிகப் பரிபூரணமாக கூறினார். மற்ற எல்லா ஊழியங்களும் இருக்கலாம், ஏனென்றால் தேவன் யாரை விரும்புகிறோரோ, அவர் விரும்புகிறதை அவரால் செய்ய முடியும், அவர் தேவனாய் இருக்கிறார். நான் அவருடைய வார்த்தையோடு, அவருடைய சத்தத்தோடு, ஒலிநாடாக்களோடு தரித்திருக்கும் வரை சரியாய் இருக்கிறது என்று அப்பொழுதே நான் அறிந்து கொள்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்.

என்னுடைய கடிதங்களை பலர் படித்து, நான் கூறுவதையும், நம்முடைய சபைக்கான கர்த்தருடைய சித்தம் என்று நான் விசுவாசிப்பதையும் தவறாகப் புரிந்துகொள்வதை நான் அறிவேன். தீர்க்கதரிசி கூறியது போல் நான் மீண்டும் ஒருமுறை தாழ்மையுடன் கூறுகிறேன்: “இந்த கடிதங்கள் என் சபைக்கு மட்டுமே. பிரான்ஹாம் கூடாரத்தை தங்கள் சபை என்று அழைக்க வாஞ்சிக்கிறவர்களுக்கே. ஒலிநாடாவை கேட்கிற ஜனங்கள் என்று அழைக்கப்பட்டு அடையாளம் கண்டு கொள்ளப்பட விரும்புகிறவர்களுக்கே.

நான் என்ன கூறுகிறேன் என்பதையும், விசுவாசிக்கிறேன் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றால், என்னுடைய சகோதர சகோதரிகளே அது 100% நல்லது. என்னுடைய கடிதங்கள் உங்களுக்கோ அல்லது உங்களுக்கும் அல்லது உங்களுடைய சபைகளுக்கும் விரோதமானதாக பொருட்படுத்தப்பட்டதல்ல. உங்களுடைய சபை ராஜாதிபத்தியமுடையது, செய்யும்படி வழிநடத்தப்படுவதை நீங்கள் உணரும் பொழுது நீங்கள் அதை செய்ய வேண்டும், எனவே எங்களுடையதும் அவ்வாறு தான், நமக்காக தேவன் அருளியிருக்கிற வழி என்றும் இதைத்தான் நாங்கள் விசுவாசிக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் ஒன்றிணைவதற்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வாரம், நம்முடைய காலத்திற்கான தேவனுடைய நட்சத்திரம், வில்லியம் மரியன் பிரான்ஹாம், 60-1209 சர்தை சபையின் காலம் என்ற செய்தியைக் கொண்டு வருவார்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்