ஞாயிறு
18 மே 2025
60-0522m
புத்திரசுவிகாரம் – மூன்றாம் பகுதி

அன்பான கற்புள்ள கன்னிகையே,

நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்போது, அது கன்மலையில் உள்ள தேனாயுள்ளது, அது சொல்ல முடியாத சந்தோஷமாயுள்ளது, அது ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியாயுள்ளது, அது நம்முடைய ஆத்துமாவிற்கு ஒரு நங்கூரமாயுள்ளது, அது நம்முடைய நம்பிக்கையாயும் ஆதரவாயுமுள்ளது,, அது காலங்களின் கன்மலையாயுள்ளது, அது நன்மையாய் இருக்கிற ஒவ்வொரு காரியமாயுள்ளது. அது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது.

நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கின்ற காரணத்தால், தேவனுடைய சத்தம் நம்மை நியமித்துள்ளது; அவருடைய வார்த்தைக்கு ஒரு கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்துவுக்கென்று நம்மை நிச்சயத்துள்ளது. நம்மை பரிசுத்த ஆவியினால் வழிநடத்திக் கொண்டிருக்கிற ஒரு உபாத்தியாயர், ஒரு சத்தம், ஒரு தீர்க்கதரிசி நமக்கு உண்டு.

ஆனால் இது என் சபை, நான் உங்களுக்குப் போதித்து கொண்டிருக்கிறேன். இது ஒலிநாடாவில் பதிவாகிறது. ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்கள் இது என்னுடைய சபைக்கு என்பதை நினைவு கூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதற்கு இது நமக்கு என்ன ஒரு உறுதிப்படுத்தல். ஒலிநாடாக்கள் அவருடைய சபைக்கானது. அவர் நமக்கு போதித்துக் கொண்டிருக்கிறார். ஒலிநாடாக்களைக் கேளுங்கள் என்று அவர் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு என்ன நடந்திருந்தது என்று நமக்குச் சொல்வதனால் அவர் இந்தப் புத்திர சுவிகாரத் தொடரைத் தொடங்கினார். பின்னர், ஒவ்வொரு செய்தியிலும், அவர் மறுரூபமாக்கப்பட்டதைக் குறித்து பேசுகிறார். என்ன சம்பவித்தது என்றும், மணவாட்டி அவரிடத்தில் என்ன கூறினாள் என்றும் கேட்கும்படியாக மணவாட்டிக்கு அது எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

நம்முடைய தீர்க்கதரிசி அவர் பிரசங்கித்து ஒலிநாடாக்களில் விட்டுச் சென்ற வார்த்தையால் நியாயந்தீர்க்கப்படுவார். மறுபுறம் இருந்த மணவாட்டி, அவர் நம்முடைய கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று அவரிடம் சொன்னாள். பின்னர் அவர் நம்மை அவருடைய ஊழியத்தின் வெற்றிச் சின்னங்களாக அவருக்கு அளிப்பார், பின்னர் நாம் என்றென்றும் ஜீவிக்க மீண்டும் பூமிக்குத் திரும்புவோம்.

நாம் கேட்கிற ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பொற்கட்டி. நாம் வாக்கியங்களுக்கிடையே உள்ள மறைபொருளை வாசிக்கையில் அவர் அதிகமாக வெளிப்படுத்தும்போது நாம் தொடர்ந்து அதை மெருகேற்றிக்கொண்டே, அதை மெருகேற்றிக்கொண்டேயிருக்கிறோம்.

“நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று நம்முடைய சகோதர சகோதரிகளிடத்தில் அதை பகிர்ந்து கொள்வதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம்.

“அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டரா”? அதுதான் நம்முடைய சுதந்தரம். தேவன் நம்மை தெரிந்துகொள்ள இயேசு வந்து அதற்கான கிரயத்தை செலுத்தும்படி செய்தார். அது என்ன? அவருடைய சிந்தப்பட்ட இரத்தம், அதன் விளைவாக பாவம் எதுவும் நமது கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அதற்காக நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை.

அதன் பிறகு, உடனடியாக, நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா?

“கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.” உங்களுடைய கண்களை நீங்கள் கல்வாரியை நோக்கியவாறு வைத்துவிட்டீர்கள். ஒன்றும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாதே! உங்களுடைய வாழ்க்கைப் பாதையில் நீங்கள் விலையேறப்பெற்ற அபிஷேகத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, ராஜாவின் பெரும் பாதையில் நடந்து சென்று, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். வ்யூ! ஆமென்.

நாம் ஆரோனின் கோலைப் போல இருந்தோம், வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகளாக அவர் வைத்திருந்த ஒரு பழைய காய்ந்த கோலைப் போல. ஆனால் இப்போது, தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசுவதைக் கேட்டு அந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நாம் வைத்ததால், நாம் துளிர்விட்டு மலர்ந்து, அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறோம், மேலும் அவரது மணவாட்டியாக நாம் உரக்க சத்தமிட்டு ஆர்ப்பரிக்கிறோம்:

● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், ஒலிநாடாக்கள் முதலில் எங்களுடைய இருதயங்களில் உள்ளன.

● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மைத் தெரிந்து கொண்டார்.

● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி.

● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், யாரும் என்ன சொன்னாலும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை, நாம் ஒலிநாடாக்களை கேட்பதில் பின்வாங்குவதில்லை, நாம் அதிகமாக இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், நாம் நம்முடைய கண்களை கல்வாரியை நோக்கியவாறு வைத்திருக்கிறோம், எதுவும் நம்மைத் தடுக்கப் போவதில்லை.

இது தேவனுடைய பிழையற்ற வார்த்தை என்று அறிந்திருப்பவர்களின் இருதயங்களுடன் என்னுடைய இருதயமும் இணைந்திருப்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியுறுகிறேன். ஆகையால் இது, இதின் ஒவ்வொரு வார்த்தையும், இதின் ஒவ்வொரு கட்டமும் சத்தியமாகும். தேவனுடைய கிருபையினால், அந்த தேசத்தைக் காணும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்றாவது ஒரு நாளில் நாமும் பயணப்பட்டு அங்கு செல்வோம்.

தீர்க்கதரிசி ஒவ்வொரு வார்த்தையும் எடுத்து அதை தொடர்ந்து மெருகேற்றப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். அவர் அதை ஆதியாகமத்திற்கு எடுத்துச் சென்று மெருகூட்டுவார், அதை யாத்திராகமத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் மெருகூட்டுவார், வெளிப்படுத்தின விசேஷத்திலும் கூட; அதன் ஒவ்வொரு துணுக்கும் இயேசுவே!

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்தி:

புத்திர சுவிகாரம் #3 60-0522M

 

வேதவாக்கியங்கள்:

மத்தேயு 28:19
யோவான் 17:7-19
அப்போஸ்தலர் 9:1-6, அதிகாரங்கள் 18 மற்றும் 19
ரோமர் 8:14-19
1 கொரிந்தியர் 12:12-13
கலாத்தியர் 1:8-18
எபேசியர் அதிகாரம் 1
எபிரெயர் 6:4-6, 9:11-12