
அன்புள்ள மனமாற்றமடைந்தவர்களே,
இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், நாம் தேவனுடைய பிழையற்ற வார்த்தைக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன் ஒவ்வொரு வார்த்தையும், அதன் ஒவ்வொரு சொற்றொடரும் சத்தியமாய் இருக்கிறது. நாம் அழைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, நிரப்பப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம்; பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஏற்கனவே இப்போது கானான் தேசத்தில் இருக்கிறோம். நாம் எதற்கும் பயப்படவில்லை... எதற்கும், நாம் யார் என்று நமக்குத் தெரியும்.
அவர் செய்யும்படி நமக்கு கட்டளையிட்ட படியால், நாம் அவருடைய வார்த்தையோடு தரித்திருக்கிறபடியால், அவர் நமக்கு ஒரு சுதந்தரத்தை விட்டுச் சென்றதாக அவர் நமக்குச் சொல்லப் போகிறார். எப்போது பிதாவே, நீர் அதைச் செய்தீர்? நான் உங்களைத் தெரிந்துகொண்டு, உலகத் தோற்றத்திற்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் உங்கள் பெயர்களைப் எழுதினபோதே.
காலம் நிறைவேறினபோது, என்னுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கும்படியாக, குட்டி தேவர்களாய் இருக்கும்படியாக, உங்களுடைய சுதந்திரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளும்படியாக, உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவை நான் அனுப்பினேன்.
நான் உங்களை அந்த ஸ்தானத்தில் வைக்கும் முன், நான் உங்களுடைய நிலையற்ற மற்றும் தளர்வான இடங்களை சரிபார்க்க வேண்டியிருந்தது.
● ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய சத்தத்தை சபையில் இயக்குவது தவறு என்று நீங்கள் நம்புகிறீர்களா?
● “ஆமாம், நீங்கள் சபையில் ஒலிநாடாக்களை இயக்கக் கூடாது.”
● “அதைக் கண்டனம் செய்கிறீர்கள். நீங்கள் நிலையற்றவராயிருக்கிறீர்கள்.”
● “ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?”
● “ஆம், அதை விளக்குவதற்கு யாராவது தேவை.”
● “நீங்கள் நிலையற்றவராயிருக்கிறீர்கள். அதை உதைத்துத் தள்ளுங்கள். நீங்கள் இன்னும் ஆயத்தமாய் இருக்கவில்லை.”
நீங்கள் ஆயத்தமாக இருக்கும்போது, ஒவ்வொரு வார்த்தைக்கும் “ஆமென்” என்று கூறுவீர்கள்.
● “நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?”
● “ஆமென்.”
● ஒலிநாடாவில் உள்ள என்னுடைய சத்தம் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
● “ஆமென்.”
● “ஒலிநாடாவில் உள்ள என்னுடைய சத்தம் மணவாட்டியை ஒன்றிணைக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?”
● “ஆமென்.”
● “என்னுடைய பலமுள்ள தூதன் உங்களை என்னிடத்தில் அறிமுகம் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?”
● “ஆமென்.”
நீங்கள் இப்போது தளர்வற்றவராயிருக்கிறீர்கள். நிலையற்ற மற்றும் தளர்வான இடங்களுக்காக நான் உங்களை சோதித்தேன். வாசலை மூட நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் உங்கள் மீது என்னுடைய முத்திரையை வைப்பேன். நீங்கள் என்னுடைய பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்.
இப்போது நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டும், ஒலிநாடா தேசங்களில் உள்ள என்னுடைய அன்பான விலையேறப்பெற்ற ஜனங்களே; வெளிநாடுகளிலும் நீங்கள் எங்கிருந்தாலும், பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாக இருக்கிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் உங்களை அறிந்திருந்தேன். சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்தையும் நான் அறிந்திருந்தேன்.
நான் சீக்கிரத்தில் உங்களுக்காக வந்து, மரணமேயில்லாத, துக்கமேயில்லாத, பொறாமையேயில்லாத, எதுவுமேயில்லாத ஒரு இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல வருகிறேன்.; பரிபூரணம் மாத்திரமே, பரிபூரண அன்பு.
அதுவரை, மறந்துவிடாதீர்கள், நான் உங்களுக்கு என் வார்த்தையைத் தருகிறேன், நீங்கள் மாம்சமாக்கப்பட்ட என்னுடைய வார்த்தையாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், அதைப் பேசுங்கள், பின்னர் அதை விசுவாசியுங்கள்; அது உங்கள் சுதந்தரம்.
உங்களுக்கு அதைக் குறித்த எல்லாவற்றையும் விளக்கிக் கூற இந்த ஞாயிற்றுக்கிழமை நான் மீண்டும் உங்களிடத்தில் என்னுடைய சத்தத்தை அனுப்பப் போகிறேன். மீண்டும் ஒருமுறை நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும், இப்பொழுது அங்கே அது எப்படி உள்ளது என்பதையும் நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, என்னுடைய வார்த்தையினால் உங்களை அந்த ஸ்தானத்தில் பொருத்துவதை குறித்து நான் பேசுவதை நீங்கள் கேட்கப் போகிறபடியால், நான் என்னுடைய மணவாட்டியை உன்னதங்களிலே உட்கார வைத்துள்ளபடியால் அவர்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். 60-0522E புத்திர சுவிகாரம் #4.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்