ஞாயிறு
14 ஏப்ரல் 2024
64-0802
பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு

அன்பான பூமியின் உப்பானவர்களே,

ஓ அன்புள்ள மணவாட்டியே, வார்த்தையின் பிரசன்னத்தில், முதிர்ச்சி யடைந்து, நாம் யாராக இருக்கிறோம் என்றும், நாம் எங்கிருந்து வந்தோம் என்றும், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் அடையாளங் கண்டு கொண்டு, ஒன்று கூடி உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டு, என்னே ஒரு நேரத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம்.

நாம் இப்பொழுது தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம் என்பதை, நம்முடைய இருதயங்களின் ஆழத்திலிருந்து, அறிந்து கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு இருப்போம் என்பதல்ல, நாம் இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம். நாம் தேவனுடைய சிந்தனையின் தன்மைகளாக இருக்கிறோம்.

சாத்தான் நம்மைத் தாக்கி, நம்முடைய தவறுகளையும், நம்முடைய கடந்த காலத்தையும், நம்முடைய அனுதின தோல்விகளையும் நமக்குக் காண்பிக்க முயற்சிக்கும்போது; அவன் தன்னுடைய பொய்களால் நம்முடைய மனதிலும் உள்ளத்திலும் நம்மை உடைக்க முயற்சிக்கும்போது, நாம் அவனுக்கு நினைவூட்டி, அவனிடம், "தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, என்னை முன்னதாகவேக் கண்டார்; அது உண்மை சாத்தானே, என்னை, அவர் என்னை மீட்கவே இயேசுவை அனுப்பினார்" என்று சொல்லுகிறோம். ஒரு அடியாயிற்றே!

“இப்போது சாத்தானே, என்னை விட்டுப் போ, ஏனென்றால் அவருடைய குமாரனின் இரத்தம் எனக்காகப் பேசுகிறது. என்னால் பாவம் செய்ய முடியாது. என்னுடைய தவறை, ஆம், என்னுடைய பல தவறுகளை, தேவனால் கூட பார்க்க முடியாது. அவர் கேட்கும் ஒரே காரியம் என்னுடைய சத்தம் அவரை ஆராதிப்பதையும் ஸ்தோத்தரிப்பதையும் மாத்திரமேயாகும், மேலும் அவர் காண்கிறதோ என்னுடைய பிரதிநிதித்துவம் என்ற ஒரே காரியத்தையேயாகும்.”

நம்முடைய பிரதிநிதித்துவம் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கிலிருந்து நம்மை ஒன்று கூட்டி, அவருடைய மணவாட்டிக்காக அவர் அருளியிருக்கிற வார்த்தையின் கீழ் நம்மை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே அவர் கனப்படுத்தும் ஒரே காரியமாய் இருக்கிறது, ஏனென்றால் இதுவே அவருடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.

அவர் நமக்கு அடுத்து என்ன சொல்லி வெளிப்படுத்தப்போகிறார்? அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பலமுறை பேசுவதையும், நம்முடைய புதிய வீடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் நம்மிடம் கூறுவதையும் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால் இந்த முறையோ அது பற்றி நாம் இதுவரை கேள்விப்படாதது போல் இருக்கப் போகிறது.

திவ்விய சிற்பாசாரி இதை அவருடைய அருமையானவர்களுக்காக வடிவமைத்திருக்கிறார். பார்த்தீர்களா? ஓ, திவ்விய ஜீவனுக்கு அதிபதியானவரும் திவ்விய சுபாவமும், திவ்விய சிற்பாசிரியருமானவர் திவ்விய தேவனால் திவ்வியமாக முன்குறிக்கப்பட்டிருக்கிற ஒரு திவ்விய தன்மைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிற இந்த ஒரு இடம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்! அந்த நகரம் பார்ப்பதற்கு எப்படியிருக்கும்! அதைக் குறித்து நினைத்துப் பாருங்கள்.

நாம் நம்முடைய சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய உற்சாகமும் எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசி, நாம் அவருடன் நித்தியம் முழுவதும் ஜீவிக்கும்படியாக அவர் இப்போது நம்முடைய புதிய வீட்டை உருவாக்கி வடிவமைத்து வருகிறார் என்பதை நமக்கு சொல்வதைக் கேட்க நம்முடைய இதயங்கள் துடிக்கின்றன.

முன்குறித்தல், பிரதிநிதித்துவம், காலம், எட்டாம் நாள், பரிசுத்த பர்வதம், கூர்நுனி கோபுரங்கள் மற்றும் பரிசுத்த சபைக் கூடுதலைக் குறித்த எல்லாவற்றையும் அவர் நமக்குச் சொல்லும்போது, நாம் வேறு என்ன கேட்போம், ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப்படும்?

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து நம்முடைய சிந்தனைகளை நாம் மூடிட முடியுமா? நம்முடைய புதிய வீடு எப்படி இருக்கும் என்பதை குறித்து தேவன் நமக்கு சொல்லும்படியாக அவர் தம்முடைய மணவாட்டியை உலகம் முழுவதிலுமிருந்து கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவர் நமக்குச் சொல்லப் போகிறார். என்னே ஒரு மகிமையான நேரத்தை நாம் உடையவர்களாக இருப்போம்.

மறுபுறம், நம்முடைய யுத்தங்கள் ஒருபோதும் கடினமாக இருந்ததில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் சாத்தான் நம்மைத் தாக்குகிறான். அவனுடைய தாக்குதல்கள் ஒருபோதும் இலகுவாகவோ அல்லது விலகிப் போவதாகவோ தெரியவில்லை.

ஆனால் தேவனுக்கு மகிமை, அவருடைய வார்த்தையில் நம்முடைய விசுவாசம் இதற்குமேல் ஒருபோதும் உயர்ந்ததில்லை. நாம் அசைக்கப்பட முடியாதபடி, நாம் யார் என்பதை அறிவதில் உள்ள நம்முடைய விசுவாசம் நம்முடைய ஆத்துமாவில் ஆழமாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

நாம் பயப்பட ஒன்றுமில்லை; அதைக் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. பிதாவானவரே நம்மை குறித்த முழுப் பொறுப்பாயிருக்கிறார். அவர் நம்முடைய ஒவ்வொரு அடிச்சுவடுகளையும் வழிநடத்தி வழிகாட்டுகிறார். அவர் நம்மை அவருடைய உள்ளங்கையில் தாங்குகிறார். பொய்யுரைத்து ஏமாற்றும் சாத்தானுடைய முடிவு சமீபித்துவிட்டது, அவனும் அதை அறிந்திருக்கிறான். பயப்படுகிற ஒருவன் அவனே, அவன் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை மணவாட்டியிடம் தொடர்பு கொண்டிருப்பதையும், அவன் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுகிறதையும் அவன் அறிந்திருக்கிறான்.

நாம் வார்த்தையாயிருக்கிறோம். நாம் ஆதியிலிருந்து அவருக்குள் இருந்தோம். நாம் என்றோ ஒரு நாள் இருக்கப் போகிறோம் என்று அல்ல, நாம் இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம். நாம் வார்த்தையாக இருந்தால், நாம் விசுவாசித்தால் மாத்திரமே, அப்பொழுதே நாம் அந்த வார்த்தையை பேச முடியும்,...நாம் விசுவாசிக்கிறோமே.

நீங்கள் (வார்த்தைக்கு) ஒரு விசுவாசியாய் அல்லது நீங்கள் (வார்த்தை அல்ல) என்று சந்தேகப்படுபவராய் இருக்கிறீர்கள். ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கிற ஒரு தசைநாரும் நம்முடைய சரீரத்தில் இல்லை. அங்கு தான் காரியமே உள்ளது! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்பதை சாத்தானுக்கு நாம் நிரூபித்துவிட்டோம். நாம் பாதத்தின் அடிபாகத் தோலாயிருக்கலாம், ஆனால் நாம் இன்னமும் அந்த சரீரத்தின் பாகமாய் இருக்கிறோமே!!!

ஆகையால் அந்தப் பொய்யன் நம்மில் ஒருவருக்குப் பின் வரும்போது, மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றாகக் கூடி வந்து, நாம் அவனை வார்த்தையினால் அடிக்கிறோம், அவனை அடிக்கிறோம்.

நம்மில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டால், நாம் ஒன்றுபட்டு அவனை அடிக்கிறோமே! நம்மில் ஒருவர் திடனற்றுப்போகும் நிலையை அடைந்தால், நாம் அனைவரும் என்ன செய்கிறோம்? அவனை அடிக்கிறோமே!

மணவாட்டியே, நாம் பரம வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறோம். வேளையானது வந்துவிட்டது. மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். நாம் பேழைக்குள் இருக்கிறோம். அவர் வாசலை மூடிவிட்டபடியால், நாம் பாதுகாப்பாக உள்ளே இருக்கிறோம். மணவாளனுடன் இணைக்கப்பட மணவாட்டி நடைப் பிரகாரத்தில் நடந்து வருவதற்கான இசையை நம்மால் கேட்க முடிகிறது.

நாம் 1000 வருடங்களாக நம்முடைய தேனிலவில் இருப்போம், அதன்பிறகு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வருங்கால வீட்டிற்கு அவரோடு செல்வோம்.

நண்பர்களே, இதை தவறவிடாதீர்கள். ஒலிநாடாக்களே: தேவனால் அருளப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே வழியாக மாத்திரமே உள்ளது. இது அக்கினி ஸ்தம்பம் அவருடைய மணவாட்டியினிடத்தில் பேசிக்கொண்டும், வழிநடத்திக் கொண்டுமிருக்கிறதாயுமுள்ளது.

நீங்கள் என்ன செய்தாலும், இந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சத்தத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன்பாக வைக்கவும். விசுவாசம் கேட்பதன் மூலமும், வார்த்தையைக் கேட்பதன் மூலமும் வருகிறது, வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. ஒலிநாடாக்களின் மூலமாக தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற நம்முடைய நாளுக்கான தீர்க்கதரிசியே பரிசுத்த ஆவியாக இருக்கிறார்.

பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்பதைக் குறித்து எல்லாவற்றையும் தேவன் தம்முடைய வல்லமையான தூதன் மூலமாக பேசி நமக்கு சொல்லவிருக்கிற படியால், மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்றிணைக்கப்பட்டு, எல்லோரும் ஒரே நேரத்தில், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்