
அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,
கர்த்தருடைய வருகைக்காக நாம் காத்திருக்கிறோம். நம்முடைய தீவட்டிகளை சுத்தம் செய்து, முழுவதும் எண்ணெய்யால் நிரப்பி, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை இரவும் பகலும் கேட்கிறோம். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபிக்கிறோம்; ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, தரித்திருப்பதன் மூலம் நாம் நம்மை தொடர்ந்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் விழித்தெழப்ப்படுவதற்காக நாம் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நொடியில், நாம் அவர்களைப் பார்ப்போம்; தந்தைகள், தாய்மார்கள், கணவர்கள், மனைவிகள், சகோதர சகோதரிகள். அங்கே அவர்கள் நமக்கு முன்பாக நிற்கிறார்கள். நாம் வந்துவிட்டோம், நேரமும் வந்துவிட்டது என்பதை அந்த நொடியில் அறிந்துகொள்வோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் நம்முடைய ஆத்துமாக்களையும், சிந்தைகளையும், சரீரங்களையும் நிரப்பும். அப்பொழுது கர்த்தருடைய கிருபையின் எடுத்துக் கொள்ளப்படுதலில் அழிவுள்ள இந்த சரீரங்கள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும்.
பின்னர் நாம் ஒன்றுகூடத் துவங்குவோம். உயிரோடிருக்கும் நாம் மாற்றப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காணாது. திடீரென்று, ஏதோ ஒன்று நம்மீது செல்வது போல் இருக்கும்...நாம் மாற்றப்படுவோம். ஒரு வயோதிக மனிதனிலிருந்து ஒரு வாலிப மனிதனாக, ஒரு வயோதிக ஸ்தீரியிலிருந்து ஒரு வாலிப ஸ்தீரியாக.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஏற்கனவே உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுடன் நாம் ஒரு சிந்தனையைப் போல பயணித்துக்கொண்டிருப்போம். பிறகு...மகிமை...ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திப்பதற்கு நாம் அவர்களோடு எடுத்துக்கொள்ளப்படுவோம்.
என்னே ஒரு நேரம் நமக்காக வந்து கொண்டிருக்கிறது. தாக்கப்பட்டு, மனச்சோர்வடைந்து, திடனற்றுப்போகும்படிக்கே சத்துரு நம்மைத் தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கிறான், ஆனால் தேவனுக்கு மகிமை, அவனால் முடியவில்லை. அவர் யாராய் இருக்கிறார் என்பதைக் குறித்தும்; அவர் நம்மை வெளியே அழைக்க அனுப்பப்பட்டார் என்பதைக் குறித்தும்; நாம் யாராக இருக்கிறோம் என்பதைக் குறித்தும், நாம் யாராய் இருக்கப் போகிறோம் என்பதைக் குறித்து அல்ல, நாம் யாராய் இருக்கிறோம் என்பதை குறித்த வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். இப்பொழுதே அது நம்முடைய ஆத்மாவிலும், சிந்தையிலும் மற்றும் ஆவியிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதை நம்மிடத்திலிருந்து எதுவுமே எடுத்துப் போட முடியாது. நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்? தேவன் அவ்வண்ணமாய் கூறினாரே!
சாத்தானே, இது எங்களுடைய வீடு அல்ல, இது எல்லாம் உன்னுடையது, உன்னால் அதை எடுத்துக் கொள்ள முடியும். அதனுடைய பாகம் எதுவுமே எங்களுக்கு தேவையில்லை, அது எங்களுக்கு இனிமேல் தேவையில்லை. எங்களுக்காக கட்டப்பட்டிருக்கிற ஒரு எதிர்கால வீட்டை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், பிசாசே, எங்களுக்கு அறிவிப்பு கிடைத்துள்ளது, அது ஆயத்தமாக உள்ளது. கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. உனக்காக இன்னும் சில செய்திகளை நான் பெற்றுள்ளேன், வெகு சீக்கிரத்தில், நாங்கள் அவருடன் 1000 ஆண்டுகள் தடையின்றி தேனிலவைக் கொண்டாடும்படிக்கு அவர் எங்களைப் அழைத்துச் செல்ல வருகிறார், ஆனால் நீ அழைக்கப்படவில்லை, நீ அங்கு இருக்கமாட்டாய்.
நாங்கள் ஒவ்வொரு முறையும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்பொழுது என்ன மகிமையான காரியங்களை இந்த செய்தி எங்களுக்கு வெளிப்படுத்துகிறது. தேவனே இந்த எல்லா காரியங்களையும் எங்களிடத்தில் கூறும்படியாக அவர்தாமே இறங்கி வந்து, மானிட உதடுகளினூடாக பேசினார். அவர் நம்மைத் தெரிந்து கொண்டு உண்மையான மற்றும் தம்மைக் குறித்த முழு வெளிப்பாட்டையும் நமக்கு அளித்தார்.
அவர் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார், மோசேயின் நாளுக்கான வார்த்தையாய் அல்ல. மோசே அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; நோவாவின் நாட்களுக்கான வார்த்தையாய் அல்ல, நோவா அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; எலியாவின் நாளுக்கான வார்த்தையாய்…அல்ல, எலியா அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; ஆனால் அவர் நிகழ்கால வார்த்தையாயிருந்தார், அவர்களோ முன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
நீங்கள் ஆயத்தமா?....இதோ அது வருகிறது. இது இரட்டை குழலைக் கொண்ட அதிக சக்தி வாய்ந்த ஒரு துப்பாக்கியாய் உள்ளது, நாம் அதை மிகவும் விரும்புகிறோம்!!
அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறதே! தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிறபோது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ அல்ல, அல்லது அதைப்பற்றி ஒன்றுமில்லை. அது தேவன் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாகவே உள்ளது. அதுதான் அத்தாட்சி.
அல்லேலூயா, அவர் உள்ளே பதிய வைத்தார். இப்பொழுது அதை இறுகப் பற்றிக்கொள்ள நாம் அவருக்கு செவிகொடுப்போமாக.
யோவான் 14-ல், அவர் பரிசுத்த ஆவியின் அத்தாட்சியைத் தருகிறார். அவர், “நான் அநேகங் காரியங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கான நேரத்தை நான் பெற்றிருக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது அவர் உங்களுக்குச் சொல்லுவார், நான் உங்களிடம் சொன்ன காரியங்களை குறித்து உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களையும் கூட உங்களுக்கு அறிவிப்பார்” என்றார். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அதுதான் அத்தாட்சி. அதை முன்னறிவித்துக்கொண்டு…எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக வியாக்கியானத்தை உரைப்பது. இப்பொழுது, அது ஒரு தீர்க்கதரிசியின் அடையாளமல்லவா?
பரிசுத்த ஆவியானவரே ஒவ்வொரு காலத்திலும் தீர்க்கதரிசியாய் இருக்கிறார். அவர் நம்முடைய காலத்தின் தீர்க்கதரிசி. வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது. அது தேவன் பேசி, தம்மை தம்முடைய தீர்க்கதரிசியினூடாக வெளிப்படுத்துகிறதாயுள்ளது. அவரே அந்த நாளுக்கான வார்த்தையாய் இருக்கிறார். தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு, வார்த்தையின் பரிபூரண வியாக்கியானம் ஒலிநாடாவில் உள்ளது.
“நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.” எனவே ஒரு சிறு பிள்ளையைப் போல் மேலும் கீழும் குதித்தல், அந்நிய பாஷையில் பேசுதல் போன்ற இந்த சிறு காரியங்கள் அனைத்தும், நிறைவானது வரும்போது...நாம் இன்றைக்கு, தேவனுடைய உதவியினால், தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு கூடிய வார்த்தையின் நிறைவான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளோமே!. அப்பொழுது குறைவானது ஒழிந்துபோம். “நான் குழந்தையாயிருந்தபோது, குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ, குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” ஆமென்!
நிறைவானது வந்துவிட்டதே; வார்த்தையின் பரிபூரண வியாக்கியானம். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள். அவருடைய மணவாட்டிக்கு தேவைப்படுகிறதெல்லாம், அவள் விரும்புகிறதெல்லாம் அவ்வளவுதான்.
தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு, ஒரு பரிபூரண வியாக்கியானத்தோடு, பரிபூரண வார்த்தையை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வந்து இயங்கு பொத்தானை அழுத்தி எங்களோடு கேளுங்கள்.
கேள்விகளும் பதில்களும் #2 64-0823E
சகோ. ஜோசப் பிரான்ஹாம்