ஞாயிறு
28 ஏப்ரல் 2024
64-0823M
கேள்விகளும் பதில்களும் #1

அன்பான ஒலிநாடாவைக் கேட்பவர்களே,

என்னால் இதைப் போதுமானதாகக் கூற முடியாது, நம்முடைய நாளுக்கான அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தூதனாகிய செய்தியாளர் மூலமாக நம்மிடத்தில் பேசுகிற தேவனுடைய சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் பெரியது எதுவுமில்லை. வெளிப்படுத்துதலுக்குப் பின் வெளிப்படுத்துதலை கர்த்தர் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு செய்தியும் நாம் இதற்கு முன் கேட்காதது போல் உள்ளது. இது ஜீவனுள்ள வார்த்தையாய், புதிய மன்னாவாய், தேவன் தம்முடைய மணவாட்டிக்காக சேமித்து வைத்துள்ள ஆகாரமாய் உள்ளது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதேயாகும்.

சீக்கிரத்தில் வரவிருக்கும் நம்முடைய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த யாவற்றையும் நாம் கேள்விப்படுகிறோம். நாம் போய்க் கொண்டிருக்கிறோம்...மகிமை, நாம் கலியாண விருந்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம். அவருடைய முன்னறிவினால் அங்கே இருக்க அவர் நம்மை முன்குறித்தார், அதை எதுவும் தடுக்கப்போவதில்லை. இங்கே வார்த்தை அந்த நபருடன் ஒன்றிணைகிறது, அவர்கள் இருவரும் ஒன்றாகிறார்கள். அது மனுஷகுமாரனை வெளிப்படுத்துகிறது. வார்த்தையும் சபையும் ஒன்றாகிறது. மனுஷகுமாரன் எதைச் செய்தாரோ, அவர் வார்த்தையாக இருந்தார், சபையும் அதே காரியத்தைச் செய்கிறது.

நான் தொடர்வதற்கு முன், நீங்கள் அதை மீண்டும் படிக்க விரும்பலாம்!! பிசாசு நம்மை எப்படி வீழ்த்த முடியும்? நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைக் கேளுங்கள். நாம் யார் என்று கேளுங்கள். இப்போது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள்.

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? அவருடைய முன்னறிவினால் நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிற நம்முடைய கலியாண விருந்திற்கு, அங்கு நாம், அவருடைய வார்த்தையும் சபையும், அவருடன் ஒன்றாகிறது, மனுஷகுமாரன் எதை செய்தாரோ, நாமும் அதையே செய்கிறோம்!!

பின்னர் நாம் நம்முடைய வருங்கால வீட்டைக் குறித்த எல்லாவற்றையும் கேள்விப்படுகிறோம். திவ்விய சிற்பாசாரி நம்முடைய புதிய நகரத்தை வடிவமைத்திருக்கிறார், அங்கே அவர் தன்னுடைய மணவாட்டியாகிய, நம்மோடு வசிப்பார். அவர் கட்டியெழுப்பி, நாம் விரும்பும் வண்ணமாகவே; ஒவ்வொரு சிறு காரியத்தையும் சரியாக நம்முடைய தொடுதலுக்காகவே வைத்திருக்கிறார். அங்கே ஒரு வெளிச்சமும் தேவைப்படாது, ஏனென்றால் ஆட்டுக்குட்டியானவரே நம்முடைய விளக்காயிருப்பார். அங்கே தீர்க்கதரிசி நம்முடைய பக்கத்து வீட்டில் வசிப்பார்; அவர் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரராக இருப்பார். நாம் அந்த மரங்களில் இருந்து புசித்து, நாம் அந்த பொன்னான வீதிகளில் அந்த ஊற்றண்டை நடந்து சென்று பருகுவோம். பூமியின் மீது தூதர்கள் வட்டமிடுவதோடு, நாம் தேவனுடைய பரதீசில் நடந்து கொண்டு, கீதங்களை பாடிக் கொண்டிருப்போம். மகிமை! அல்லேலூயா!

அவருடைய வார்த்தையை நமக்கு நிரூபித்தல்; அவர், அக்கினிஸ்தம்பமாய், “இவருக்குச் செவிகொடுங்கள்,” என்று உலகிற்கு கூறி, நிரூபிக்கும்படியாக தன்னுடைய தூதனாகிய செய்தியாளரோடு தம்முடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். நாம் ஒரு வார்த்தையையும் சந்தேகிக்கக்கூடாது, ஏனென்றால் இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தை அல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. பின்னர் அவர் நம்மிடம் சொன்னார், முன்குறித்தலிலிருந்து நமக்கு பிரதிநிதித்துவம் உள்ளது என்று நமக்கு உறுதியளிக்கிறது. அவர் நம்மைக் காண்கிறதில்லை, இயேசுவின் இரத்தத்தின் மூலம் நம்முடைய சத்தத்தை மட்டுமே கேட்கிறார். நாம் அவருடைய பார்வையில் பரிபூரணமாயிருக்கிறோம்.

ஆழமானது முன்னெப்போதும் இல்லாதபடி ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது, பிதாவானவர் தம்முடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையால் நம்மை நிரப்பிக் கொண்டிருக்கிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு நமக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஜீவனுள்ள வார்த்தையின் செய்திக்கு முடிவே இல்லை. நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிவதை விட பெரியது எதுவுமில்லை. அந்த சத்தத்தைக் கேட்பது, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது, கர்த்தருடைய பரிபூரண சித்தம் என்பதை அறிவதில் உள்ள உறுதியாகும்; அவருடைய திட்டத்தை அவர் அருளியுள்ளார்.

இன்னும் நிறைய இருக்கிறது! இது அவருடைய மணவாட்டிக்கான வற்றாத வார்த்தையான ஜீவத்தண்ணீராய் இருக்கிறது. நாம் நம்முடைய ஜீவியம் முழுவதும் ஒருபோதும் இதைப் போன்ற தாகமடைந்ததில்லை, ஆனால் நமக்கு வேண்டியளவு முழுமையாக பருக பருக நாம் ஒருபோதும் இந்தளவுக்கு புத்துணர்ச்சியடைந்ததில்லை.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பாகத்தினருடன் கூடி, அவர் அடுத்து என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க மிகவும் மணவாட்டி மிகவும் உற்சாகமடைகிறாள். நம்மால் இங்கே கூடாரத்திற்கு வர முடியாவிட்டால், எங்காவது ஏதாவது சபைக்குச் செல்லுங்கள்; அங்கு செல்லுங்கள் என்று எங்களிடம் சொன்னார்.

தீர்க்கதரிசி தம்முடைய தலைமையகமாக அமைத்திருக்கிற, அவருடைய சொந்த சபையில் நாம் அனைவரும் ஒன்று கூடி இருக்க முடியாது. ஆனால் நாம் நமது சபைகளை அல்லது நமது இல்லங்களை சபைகளாக மாற்றலாம், அங்கு அவரைப் பிரசங்க பீடத்தில் நிறுத்தலாம். அங்கே வெளிப்படுத்தப்பட்டிருந்த பரிபூரண வார்த்தையால் நாம் போஷிக்கப்பட முடியும்.

உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை விட பெரிய கூட்டமும் இல்லை, பெரிய அபிஷேகமும் இல்லை, பெரிய இடமும் எதுவுமில்லை.

அவர் மீண்டும் ஒருமுறை நம்மிடத்தில் அவருடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பேசி, நம்முடைய இருதயங்களில் நாம் கொண்டுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து, நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம் என்று நமக்கு உறுதி அளிக்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்க எங்களுடன் வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஞாயிறு செய்தி: கேள்விகளும் பதில்களும் #1 64-0823M