ஞாயிறு
21 ஏப்ரல் 2024
64-0816
அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

அன்புள்ள மணவாட்டி-சபையே,

மனுஷகுமாரன் வந்து, தம்முடைய மணவாட்டிக்கு மாம்ச சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அதைக் கூறியிருக்கிறார், நாம் அதை விசுவாசிக்கிறோம், அவர் அதை நிரூபித்துள்ளார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பதனால் நம்மை ஆயத்தப்படுத்தியிருக்கிற அவருடைய மணவாட்டி-சபை நாமே.

மரித்தோரின் உயிர்த்தெழுதல் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். ஒரு ஆயிர வருட அரசாட்சி இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். ஒரு புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார், ஏனென்றால் அவருடைய வார்த்தை அவ்வாறு கூறினது.

நாமே அங்கே இருப்பவர்களாக இருப்போம். அவர் அதை நிரூபிப்பார். நாமே இந்த வார்த்தையின் பாகமாக்கப்பட்டிருக்கிறவர்கள். அங்கே இருக்கும்படி அவர் நம்மை முன்குறித்திருக்கிறார். அவருடைய முன்னறிவினால் ஒரு எடுத்துக்கொள்ளப்படுதல் இருக்கப் போகிறது, அதைத் தடுக்கப்போகிறது எதுவுமே இல்லை, நாம் அங்கே இருக்கப் போகிறோம்!

உரைக்கப்பட்ட ஒரு வார்த்தையை மட்டுமே ஜனங்களை சந்தேகப்பட வைக்க சாத்தான் நீண்ட காலமாக முயற்சித்துள்ளான். நீங்கள் அதை செய்யாதீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள். அங்கிருக்க ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தை அல்ல, இது பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாக்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் உள்ளது.

பிரதான ஆசாரியனா, பேராயரா, போப் ஆண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள குருவானவரா, மேய்ப்பரா? “தேவனே! “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலுமே.” அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எவ்விதம் அறிந்துகொள்வது? அவர் அவ்வண்ணமாய் கூறுகிறார், அதன் பிறகு அவர் அதை நிரூபிக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை நிரூபிக்கிறார்.

தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இது ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய வார்த்தை என்று அவர் நிரூபித்திருக்கிறார். வில்லியம் மரியன் பிரான்ஹாம் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்பதையும்; நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தம் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். செய்தியையும் செய்தியாளனையும் விசுவாசிக்காத யாவரும் அழிந்து போவார்கள்.

இப்பொழுது, நான் இந்த கூட்டத்தாரிடத்தில் மாத்திரம் இதைப் பேசிக் கொண்டிருக்கவில்லை. இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, நீங்கள் பாருங்கள், மேலும் இது உலகம் முழுவதும் செல்கிறது. உலகிலுள்ள ஜனங்களே, ஏவாள் ஒரு வார்த்தையை, ஒரு வார்த்தையை ஒரு வாக்கியத்தை அல்ல, ஒரு பத்தியை அல்ல, ஒரு வார்த்தையை, அவ்வளவுதான் அவிசுவாசித்தாள் என்பது உங்களுக்கு புரிகிறதா.

அவர் வார்த்தையாயிருக்கிறார், நாம் அவருடைய வார்த்தையின் பாகமாக இருந்தோம். அந்த காரணத்தால் தான் ஜீவியத்தில் நம்முடைய ஸ்தானத்தை உறுதிப்படுத்த, நாம் இங்கே இருக்கிறோம். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதற்கே. வார்த்தையுடன் தரித்திருக்கவே. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மணவாட்டியை சுட்டிக்காட்டவே.

நம்முடைய நாளில், மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் சபையை தலையினிடத்தில் இணைத்துள்ளார்; மணவாட்டியின் கலியாணத்தை ஒன்றிணைத்தார். மணவாளனின் அழைப்பு வந்துவிட்டது. இருவரையும் ஒன்றாக இணைக்க மனுஷகுமாரன் மானிட மாம்சத்தில் வந்திருக்கிறார். அவர் வார்த்தையாயிருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையாக இருக்கிறோம், இருவரும் ஒன்றாக இணைகிறார்கள்.

இதற்கு வெளிப்படுகிற மனுஷகுமாரனின் வெளிப்படுத்துதலே தேவைப்படும்…ஒரு குருவானவர் அல்ல…இயேசு கிறிஸ்து, நமக்கு மத்தியில் மாம்ச சரீரத்தில் இறங்கி வந்து, மணவாட்டியை, சபையையும் அவரையும் ஒன்றாக இணைக்கும்படியாக தம்முடைய வார்த்தையை மிகவும் தத்ரூபமாக்குவார், அதன் பின்னரே கல்யாண விருந்துக்கு பரலோக வீட்டிற்குச் செல்வாள். ஆமென்.

வார்த்தையின் வெளிப்படுத்துதலே மணவாட்டியை ஒன்றிணைக்கும். அது மீண்டும் மனுஷ குமாரனை வெளிப்படுத்துகிறது, சபை இறையியலாளர்களை அல்ல. மனுஷ குமாரனையே! வார்த்தையும் சபையும் ஒன்றாகிறது. மனுஷகுமாரன் செய்திருந்ததெல்லாம் வார்த்தையாய் இருந்தது. அவருடைய மணவாட்டியாகிய நாமும், அதேக் காரியத்தை செய்வோம்.

நாம் பரிசுத்த ஆவினால், அவருடைய வார்த்தையினால், அவருடைய சத்தத்தினால் ஒன்றிணைக்கப்பட்டு, கலியாண விருந்துக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். வார்த்தை நம்மை ஒன்றிணைத்திருக்கிறது, இரண்டும் ஒன்றாகிறது.

நாம் ஒலிநாடாக்கள், ஒலிநாடாக்கள், ஒலிநாடாக்கள் என்றே சொல்கிறோம். நீங்கள் உங்களுடைய வீடுகளில், உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும். ஒலிநாடாக்களை இயக்குவதின் பேரில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக நாம் விமர்சிக்கப்படுகிறோம். நாம் ஏன் அப்படிக் கூறுகிறோம்? ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது யார்?

இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், அவருக்கு பின்னால் இருந்த சாராளின் மனதிலிருந்த சிந்தனைகளைப் பகுத்தறிந்து, அங்கே ஆபிரகாமிடம் பேசிக் கொண்டிருந்தவர் இயேசுவல்ல. அது இயேசுவல்ல, அவர் அப்பொழுது பிறந்திருக்கவில்லை. அது மாம்ச சரீரத்தில் இருந்த ஒரு மனிதனாயிருந்தது. ஆபிரகாம் அவரை “ஏலோகிம், சர்வ வல்லமையுள்ளவர்” என்றழைத்தான்.

மனுஷகுமாரன் நம்முடைய நாளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும்; தேவன் மானிட உதடுகளினூடாக பேசுகிறார் என்றும் நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக அந்த சத்தத்தை வைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி எவரும் காணாதிருக்க முடியும்?

நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை காணாத மற்றும் விசுவாசிக்காத மற்றவர்களை நான் விமர்சித்துக் கொண்டிருக்கவில்லை; அவர்கள் நம்முடைய சகோதரரும் சகோதரிகளுமாய் இருக்கிறார்கள், ஆனால் நான் மிகவும் திருப்தியடைந்தவனாயும், மிகவும் நிறைந்தவனாயும், இது அவருடைய மணவாட்டிக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் இருக்கிறது என்று மிகவும் உறுதிப்படுத்தப்பட்டவனாகவும் இருக்கிறேன். என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. எனக்கும் என் வீட்டாருக்குமோவென்றால், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே ஒரே வழியாய் இருக்கிறது.

அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 64-0816 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் வந்து ஒன்றிணையுமாறு உலகத்தை மீண்டும் ஒருமுறை நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 5:21-43 / 16:15
பரி. லூக்கா 17:30 / 24:49
பரி. யோவான் 1:1 / 5:19 / 14:12
ரோமர் 4:20-22
I தெசலோனிக்கேயர் 5:21
எபிரெயர் 4:12-16 / 6:4-6 /13:8
I இராஜாக்கள் 10:1-3
யோவேல் 2:28
ஏசாயா 9:6
மல்கியா 4