
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,
கல்வாரி நாள்தோறும் நினைவுகூரப்பட வேண்டும். அதைக் குறித்து நாம் அதிகம் கேட்டிருக்கிறோம், அதைக் குறித்து அதிகம் படித்திருக்கிறோம். காலத் தொடக்க முதற்கொண்டே, பிரசங்கிமார்கள் அதன் பேரில் பிரசங்கித்துள்ளனர். காலங்களினூடாக, பாடகர்கள் அதைக் குறித்து பாடியுள்ளனர். அது நடப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர். இந்த நாளின் தீர்க்கதரிசிகள் அது எப்பொழுது நடந்ததென்று பின் நோக்கி சுட்டிக் காண்பிக்கின்றனர். அது எப்பேர்ப்பட்ட ஒரு முக்கியமான நாள்! இப்பூமியில் தேவன் தோன்றப் பண்ணின நாட்கள் அனைத்திலும் இது மிகவும் முக்கியமான ஒரு நாள்.
இந்த ஈஸ்டர் வார இறுதியில் மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து என்ன ஒரு சிறப்புக் கூடுகையை உடையவளாயிருப்பாள். நாம் நம்முடைய கதவுகளை மூடிக்கொண்டு வெளி உலகத்தை அப்புறப்படுத்துவோம். நாம் திசைதிருப்பப்படாதபடிக்கு நம்முடைய எல்லா சாதனங்களையும் அணைத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுவோம். அவரைத் துதிப்பதற்கும், அவரை ஆராதிப்பதற்கும், நாம் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கும், ஏகமனதுடனும், ஒரே சிந்தனையில், நாம் ஒத்திசைவாக அவரிடம் நம்முடைய சத்தங்களை உயர்த்துவோம்.
நாம் நம்முடைய ஜீவியங்களை அவருக்கு மறு அர்பணம் செய்கையில் அவருடைய சத்தம் நம்முடைய இதயத்தில் பேசுவதை நாம் கேட்போம். அவருடைய அதி சீக்கிரமான வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்கையில் நமக்கு வேறெதுவுமே அதிக முக்கியமானதாக இருக்காது. மணவாட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.
பின்வரும் அட்டவணைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:
வியாழக்கிழமை
இஸ்ரவேல் புத்திரரின் யாத்திரைக்கு முன், பஸ்காவை நினைவுகூரும் வகையில், கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனத்தைக் கைக்கொண்டதே வியாழக்கிழமை இரவாயிருந்தது. நம்முடைய புனித வார இறுதிக்கு முன், நம்முடைய வீடுகளில் கர்த்தரோடு நாம் ஐக்கியங்கொள்ளவும், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிக்கும்படியும், நம்முடைய பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்படியும் அவரிடம் கேட்பதற்கு நமக்கு என்ன ஒரு வாய்ப்பு.
கர்த்தாவே, இதை அருளும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். விடாய்த்துப்போனவர்களைத் தேற்றும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தைத் தாரும். விடாய்த்துப்போனவர்களுக்கு சமாதானத்தையும், பசியாயுள்ளவர்களுக்கு ஆகாரத்தையும், தாகமாய் உள்ளவர்களுக்கு தண்ணீரையும், வருத்தப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தையும், சபைக்கு வல்லமையையும் தாரும். கர்த்தாவே, அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராபோஜனத்தை நாங்கள் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், இயேசுவை எங்கள் மத்தியில் கொண்டு வாரும். கர்த்தாவே, அவர் எங்களை விசேஷித்த முறையில் சந்திக்க வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம்…
கர்த்தாவே, மற்றவர்களையும், கர்த்தருடைய வருகைக்காக சந்தோஷத்தோடு காத்துக் கொண்டும், தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மற்றும் புகைப்போக்கிகள் அனைத்தையும் துடைத்து மெருகேற்றி, இருண்ட இடங்களில் சுவிசேஷ வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிற உலகத்தை சுற்றிலுமுள்ள யாவரையும் ஆசீர்வதியும்.
உங்களுடைய உள்ளூர் மண்டல நேரப்படி இராப்போஜனம் 62-0204 என்ற செய்தியைக் கேட்க, நாம் யாவரும் மாலை 6:00 மணிக்கு ஆரம்பிப்போம், பின்னர் லைஃப்லைன் பயன்பாட்டில் (ஆங்கிலத்தில்) இயங்கும் நம்முடைய விசேஷித்த இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல் ஆராதனைக்கு தீர்க்கதரிசி நம்மை அழைத்துச் செல்வார் அல்லது கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கலாம்.
செய்தியைத் தொடர்ந்து, நாம் நம்முடைய வீடுகளில் நம்முடைய குடும்பங்களுடன் கூடி, கர்த்தருடைய இராப்போஜனம் எடுப்போம்.
வெள்ளிக்கிழமை
நாம் காலை 9:00 மணிக்கு நம்முடைய குடும்பத்தினருடன் ஜெபத்திற்குச் செல்வோம், பின்னர் மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கு, கர்த்தர் நம்முடன் இருக்கும்படியும், நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கும்போது நம் வீடுகளை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படியும் அழைப்போம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வாரியில் அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, அதன்பின்னர் பிதாவுக்குப் பிரியமானதை எப்பொழுதும் செய்ய நம்மை அர்ப்பணிப்போமாக.
இந்த நாள், மிகவும் முக்கியமான, மகத்தான நாட்களில் ஒன்றாக இருக்கிறபடியால், அந்த நாள் நமக்கு பொருட்படுத்தின மூன்று வெவ்வேறு காரியங்களைப் பார்ப்போமாக. நூற்றுக்கணக்கானவைகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த காலையில், கல்வாரி நமக்கு எப்படி முக்கியம் வாய்ந்தது என்பதை, நாம் அடுத்த சில நிமிடங்களில், நாம் நோக்கிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களான, மூன்று வெவ்வேறு காரியங்களை நான் தெரிந்துகொண்டுள்ளேன். அது இங்குள்ள ஒவ்வொரு பாவியையும் கண்டித்துணர்த்தி; ஒவ்வொரு பரிசுத்த வானையும் முழங்கால்படியிடச் செய்து; சுகவீனமாய் இருக்கிற ஒவ்வொரு நபரும் தன்னுடைய விசுவாசத்தை தேவனிடமாக உயர்த்தி, சுகமடைந்தவர்களாக நடந்து செல்லவும்: ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படவும், பின் வாங்கிப்போன ஒவ்வொருவரும் திரும்பி வந்து, தன்னைக் குறித்து வெட்கமடையவும்; ஒவ்வொரு பரிசுத்தவானும் களிகூர்ந்து, புது நம்பிக்கையை புதிதாகப் பற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.
பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு கல்வாரியில் அந்த நாள் 60-0925 என்ற செய்தியை நம்முடைய வீடுகளில் கேட்கும்படிக்கு நாம் ஒன்று கூடுவோமாக.
பிறகு மாலை 3:00 மணிக்கு நம்முடைய கர்த்தருடைய சிலுவையேற்றத்தின் நினைவாக மீண்டும் ஜெபத்தில் ஒன்று சேர்வோமாக.
சனிக்கிழமை
நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை காலை 9:00 மணிக்கும் மற்றும் பிற்பகல் 12:00 மணிக்கும், ஜெபத்தில் ஒன்றுபட்டு, அவர் நம் மத்தியில் நமக்காகச் செய்யும் பெரிய காரியங்களுக்காக நம்முடைய இருதயங்களைத் ஆயத்தப்படுத்துவோமாக.
அவர், “சாத்தானே, இங்கே வா!” என்று கூறுவதையும், அவர் இப்பொழுது எஜமானாயிருக்கிறார். சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய அந்தத் திறவுகோலை அவர் தம்முடைய கரம் நீட்டி பற்றிப் பிடித்து, தன்னுடைய சொந்த பக்கவாட்டில் தொங்கவிட்டார். “நான் உனக்கு முன்னறிவிப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீ இவ்வளவு காலம் முழுமையாக பொய்யுரைத்து ஏமாற்றி வந்தாய், நான் ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரனாயிருக்கிறேன். என்னுடைய இரத்தம் இன்னமும் சிலுவையில் ஈரக்கசிவோடு உள்ளது. முழு கடனும் செலுத்தப்பட்டாயிற்றே! உனக்கு இனிமேல் எவ்வித உரிமையுமே கிடையாது. நீ துகிலுரியப்பட்டிருக்கிறாய். அந்தத் திறவுகோல்களை என்னிடம் கொடு!” என்பதை என்னால் கேட்க முடிகிறது.
பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு, நாம் அனைவரும் ஒன்றுகூடி கல்லறையிலிடுதல் 57-0420: என்ற செய்தியின் வார்த்தையைக்கேட்போமாக.
உலகம் முழுவதும் உள்ள அவரது மணவாட்டிக்கு இது என்ன ஒரு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது.
பிறகு, பிற்பகல் 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் சேர்வோமாக.
ஞாயிற்றுக்கிழமை
சகோதரன் பிரான்ஹாமை காலை 5:00 மணியளவில் அவரது சிறிய நண்பரான ராபின் எழுப்பியது போல, முதலில் அதிகாலையில் நாம் எழுந்திருப்போமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோமாக:
இன்று காலை ஐந்து மணியளவில், சிவந்த மார்பகத்துடன் என் சிறிய நண்பர் ஜன்னல் வழியாக பறந்து வந்து என்னை எழுப்பினது. அதனுடைய சிறிய இருதயம் வெடிப்பது போல, "அவர் உயிர்த்தெழுந்தார்" என்று கூறுவதுபோல தோன்றியது.
காலை 9 மணிக்கு மற்றும் பிற்பகல் 12 மணிக்குநாம் நம்முடைய சங்கிலி ஜெபத்தில் மீண்டும் இணைந்து, ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவோமாக.
பிற்பகல் 12:30 மணிக்கு, உண்மையான ஈஸ்டர் முத்திரை 61-0402 என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்றாக கூடி வருவோம்.
பிற்பகல் 3:00 மணிக்கு, அவருடனும், உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாட்டியுடனும் அவர் நமக்குக் கொடுத்துள்ள அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து, நாம் மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றுபடுவோமாக.
வெளிநாடுகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே, இந்த அட்டவணையில் உள்ள அனைத்து ஜெப நேரங்களிலும் ஜெபர்சன்வில் நேரத்தில் எங்களுடன் ஒன்றிணைய நான் உங்களை அழைக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிற்பகல் ஜெபர்சன்வில் நேரத்தில் ஒலிநாடாக்களை இயக்குவது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்த செய்திகளை இயக்கிக் கேட்க தயங்க வேண்டாம். எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:30 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உங்களையும் உங்கள் குழந்தைகளையும் படைப்புகள் (கிரியேஷன்ஸ்) திட்டப் பணிகள் (ப்ராஜெக்ட்கள்), எழுதும் தாள்கள் (ஜர்னலிங்) மற்றும் இளம் அஸ்திபார (YF) வினாடி வினாக்களில் ஒரு பகுதியாக இருக்கும்படி அழைக்க விரும்புகிறேன். இந்த வார இறுதியில் நாம் கேட்கப்போகும் வார்த்தையின் அடிப்படையில் இவை அனைத்தும் அமைந்திருப்பதால் நீங்கள் அவைகளை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
வார இறுதி அட்டவணையில், இராபோஜன ஆராதனைக்கு ஆயத்தமாகும் தகவல், படைப்புகளின் (கிரியேஷன்ஸ்) திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் பொருள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.
ஈஸ்டர் வார இறுதியில், புகைப்படங்கள் எடுப்பது, அனுதின மேற்கோள்களைக் கேட்பது மற்றும் செய்தித் தொகுப்பு பயன்பாடு, லைஃப்லைன் பயன்பாடு அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பு ஆகியவற்றிலிருந்து ஒலிநாடாக்களை இயக்குவதைத் தவிர, நம்முடைய தொலைபேசிகளை அணைத்து வைப்போமாக.
ஆராதனை, துதித்தல் மற்றும் சுகமளித்தல் நிறைந்த ஒரு வார இறுதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மணவாட்டியுடன் உலகெங்கிலும் ஒன்றாக வர அழைப்பது எனக்கு அப்பேர்ப்பட்ட ஒரு கனத்துக்குரியதாய் உள்ளது. இது உங்களுடைய ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் வார இறுதி என்று நான் நம்புகிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்குரிய ஒலிநாடா
ஈஸ்டர் வார இறுதிக்கான செய்திகள் கீழே உள்ளன. வியாழக்கிழமை இராப்போஜனம்/கால்களைக் கழுவும் ஆராதனை பதிவிறக்கத்தின் பகுதியாகும்
வியாழக்கிழமை- மாலை 6:00 (உள்ளூர் நேரம்)
62-0204இராப்போஜனம்(விசேஷித்த இராப்போஜனம் & கால்களைக் கழுவும் ஆராதனை)
வெள்ளிக்கிழமை - பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)
60-0925கல்வாரியில் அந்த நாள்
சனிக்கிழமை- பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)
57-0420கல்லறையிலிடுதல்
ஞாயிற்றுக்கிழமை- பிற்பகல் 12:30 (ஜெபர்சன்வில் நேரம்)
61-0402உண்மையான ஈஸ்டர் முத்திரை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கிறிஸ்தவ போர்வீரர்களே,
இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! இது முடிவின் நேரம், அல்லேலூயா! நாம் இங்கே இருக்கிறோம். அவருடைய மணவாட்டிக்கான கர்த்தருடைய வருகையின் மகத்தான நாள் சமீபமாயிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து நம்மை ஒன்றாக சேர்ந்து, தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுப்பதன் மூலம் பரிபூரணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்புக்குரியவர்கள் தோன்றுவதற்காக நாம் விழித்துக்கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறோம்…இப்பொழுது அது எந்த நாளாகவும் இருக்கலாம்.
"வார்த்தையுடன் தரித்திருங்கள்" என்பதே நாம் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ள ஒரே காரியமாய் உள்ளது. நாம் பார்ப்பது எல்லாம் இயேசுவே, அவர் மாம்சமான வார்த்தை. அதுவே நம்முடைய நாளுக்கான வெளிப்பாடு. அது அவருடைய மணவாட்டிக்கான தேவனுடைய பாளயமாய் இருக்கிறது.
இந்த செய்தியும், இந்த சத்தமும், இந்த ஒலிநாடாக்களுமே, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக நமக்கு தேவைப்படுகிற எல்லா காரியங்களுமாயிருக்கின்றன. நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. நாம் அழைக்கப்பட்டு, அந்தக் சத்தத்தைத் தவிர எல்லாவற்றிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளோம். அந்த சத்தமே இந்நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது என்று நாம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறோம்.
இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அவர் நமக்கு எல்லா காலத்திலும் இருந்ததிலேயே மிகச் சிறந்த தீர்க்கதரிசியை அருளியுள்ளார். அவர் உலகத்திற்கு, “இது என்னுடைய வல்லமையுள்ள தூதுன். அவர் உங்களுக்கு என்னுடைய சத்தமாய் இருக்கிறார். அவர் பூமியில் என்ன பேசுகிறாரோ அதை நான் பரலோகத்தில் எதிரொலிப்பேன். அவரைப் போன்று எவருமே இல்லை” என்று சொல்லும்படியாக அக்னி ஸ்தம்பமான ஒருவர் தாமே தம்முடைய புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.
"நான் அவரிடம், அவரிடம் மட்டுமே, உலகத் தோற்ற முதல் நான் மறைத்திருந்த என்னுடைய எல்லா ரகசியங்களையும் ஒப்படைத்துள்ளேன். உங்களை இந்த உலகத்திலிருந்து என்னிடத்திற்கு அழைக்க நான் முன்குறித்த ஒருவர் அவரே. உங்களை வழிநடத்த, வழிகாட்ட, வழிநடத்திச் செல்ல நான் தெரிந்து கொண்ட ஒருவர் அவரே. நீங்கள் அவருக்குச் செவி கொடுங்கள், ஏனென்றால் அவர் பேசவில்லை, அது நானே, மகத்தானவரான நானே என்று உங்களுக்கு நான் வெளிப்படையாக அறிவிக்கிறேன்!”
நான், “‘இந்த நாளையும், மல்கியா 4, வெளிப்படுத்துதல் 10:7 மற்றும் லூக்கா 17:30 ஆகிய வேதவாக்கியங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்படுகின்றன. வேத வாக்கியங்கள் அறிவித்தபடி, அவருடைய வல்லமையுள்ள தூதன் வந்திருக்கிறார். தேவன் இங்கே நம்மிடையே இருக்கிறார், அவர் செய்வதாக சொன்னபடியே மனித மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்’ என்று உலகிற்கு அறிவிக்கவும், சொல்லவும் வல்லமையான மனிதர்களை நியமித்து அழைத்துள்ளேன்.”
இது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதாகும். நாம் அவரை, தேவனுடைய தூதரை உங்களுக்கு சுட்டிக்காட்டவே அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்தும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொண்ட ஒருவர் அவரே. பிரதான ஆசாரியராகப் போவது யார் என்று விவாதம், சலசலப்பு, சண்டை மற்றும் கடுஞ்சினக் குமுறல் வேண்டாம்; இது, அது அல்லது வேறு யாராக இருக்கும். அந்த சத்தத்துடன் தரித்திருங்கள். ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தம் மாத்திரமே உண்டு, அவருடைய பெயர் வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
உங்களைத் தவறாக வழிநடத்தி செல்ல விரும்புகிற அநேகர் இருக்கிறபடியால், நாம் அந்த சத்தத்தோடு தரித்திருக்க மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய பாரம்பரியங்கள் ஜனங்களுக்கு மத்தியிலிருந்து அந்த உண்மையான சத்தத்தை விலக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கு அவர் அந்நியராக மாறிவிட்டார். அவர்களுடைய சத்தம் அந்த சத்தத்தின் ஸ்தானத்தை எடுத்துள்ளது, தேவன், ஒலிநாடாக்களின் மூலம் அவர்களைச் சந்திக்கும் வரை, அவர் ஒரு அந்நியராயிருக்கிறார்.
மகத்தான கம்பீரமான பிரசன்னம் நம்முடன் உள்ளது. ஆவியின் உணர்வுள்ள எந்த மனிதனும் அந்த சத்தம் தேவனுடைய சத்தம் என்று சொல்ல முடியும். அதுவே இன்றைக்கான தேவனுடைய பாளயம்.
கிறிஸ்துவின் மணவாட்டி என்று உரிமை கோருகிற ஒவ்வொரு நபரும் தாங்கள் எந்த பாளயத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்த எளிய கேள்வியை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்: மணவாட்டி அனைவரும் எந்த சத்தத்திற்கு “ஆமென்” என்று சொல்ல முடியும்?
இன்றைக்கான வார்த்தையின் ஒரு உண்மையான வெளிப்பாட்டோடு நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருப்பீர்களேயானால், ஒலிநாடாக்களில் உள்ளது தேவனுடைய சத்தமே: என்ற ஒரே ஒரு பதில் மாத்திரமே உண்டு. உண்மையாகவே சாத்தான் அதை பல வேறுபட்ட வழிகளில் அதைக் கையாள முயற்சிக்கிறான், ஆனால் மணவாட்டிக்கோ வேறெந்த பதிலுமே இல்லை. அது எளிமையானது.
சாத்தான் நம்மை பிரிக்கும்படிக்கு அந்த பதிலை உபயோகித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனால், மணவாட்டி ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது...நம்மை ஒன்றிணைக்கும் சத்தத்தினாலே மாத்திரமே நாம் இருக்கிறோம்.
காலம் மிகவும் தாமதமாகிவிட்டதால், எங்களுடன் ஒன்றிணைக்கப்பட வாருங்கள்.
“நான் பாளயத்திற்குப் புறம்பே செல்ல விரும்புகிறேன். அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், நான் என்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் சுமப்பேன். நான் பாளயத்திற்கு புறம்பே செல்வேன். ஜனங்கள் என்னைக் குறித்து என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல், நான் பாளயத்திற்கு புறம்பே அவரை பின்தொடர விரும்புகிறேன். நான் செல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறேன்.”
இன்றைக்கான தேவனுடைய பாளயத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல் 64-0719E, என்ற செய்தியை அவர் நமக்கு கொண்டு வரும்போது, அவருடைய மணவாட்டியை வழிநடத்தத் தெரிந்து கொண்ட தேவனுடைய சத்தத்தை நாங்கள் கேட்கவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, மணவாட்டியின் ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
அது "ஏதோ ஒரு பாளயம்" அல்ல; அது "அந்தப் பாளயமே."
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
எபிரெயர் 13:10-14 மத்தேயு 17:4-8
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஒளியின் பிள்ளைகளே,
அவருடைய ஒளியில் நடப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த ஒளியின் பாகமாக இருக்க, அவருடைய ஒளியுடன் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டோம். அவரால் அழைக்கப்படும்படி தெரிந்து கொள்ளப்படடோம். நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாக, அவருடன் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டோம். இருவரும் இப்பொழுது ஒன்றாய் இருக்கின்றனர்.
என்னால் அதை எத்தனை முறை எழுத முடிந்தாலும் கூட ஒருபோதும் போதாது. அதை நாம் ஒருபோதும் போதுமானதாக சொல்ல முடியாது. இந்த செய்தி நமக்கு எல்லாவற்றையும் குறிக்கிறது. அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாடு நம்மிடம் உள்ளது என்பதை அறிவது, நாம் வார்த்தைகளில் கூறக்கூடிய எதற்கும் அப்பாற்பட்டது.
இந்த நாளில் வாழ்வதும், சம்பவிப்பதில் ஒரு பாகமாக இருப்பதும், தேவன் நமக்குக் கொடுக்கக்கூடிய மகத்தான கனமாக உள்ளது. பிரான்ஹாம் கூடாரத்தில் உள்ள கூட்டங்களில் அமர்ந்து, தேவனுடைய தூதன் இந்தச் செய்திகளைக் கொண்டு வருவதைப் பார்த்தும் கேட்பதும் எவ்வளவு பெரியதோ, இந்த நாளிலும், இந்த நேரத்திலும், அந்த வார்த்தையின் நிறைவேறுதலாய் இருப்பதும் கூட அதற்கு மேல் பெரியதாயுள்ளது.
தேவன், அவருடைய மகத்தான திட்டத்தில், உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுசேர்வதற்கும், ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கும், அவருடைய வார்த்தையால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கும் ஒரு வழியை உருவாக்கியுள்ளார். நம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் கூறுவதை எந்த நொடியிலும் கேட்க காத்திருக்க வேண்டும்;
"இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!"
காலத்தின் தொடக்கத்திலிருந்து இது போன்ற எதுவும் ஒருபோதும் இருந்ததில்லை. தேவனுடைய மகத்தான திட்டத்தின் முடிவு இப்போது நடைபெறுகிறது, நாம் அதனுடைய பாகமாக இருக்கிறோம். கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது.
எல்லா ரகசியங்களும் தேவனுடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக மணவாட்டிக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முத்திரைகள், இடிமுழக்கங்கள், எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம், மூன்றாம் இழப்பு…மணவாட்டி அவைகளை திரும்ப திரும்ப கேட்டும்படியாக ஒவ்வொரு காரியமும் உரைக்கப்பட்டு ஒலிநாடாவில் உள்ளது அது நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது.
பரிசுத்த ஆவியானவர் மீண்டும் சபையில் இருக்கிறார்; கிறிஸ்து, அவர் வாக்களித்தபடி, சாயங்கால நேரத்தில் மானிட மாம்சத்தில், தம்மை வெளிப்படுத்தினார்.
இப்பொழுது மணவாட்டியே கூர்ந்து கவனித்து, இதைப் புரிந்துகொள்.
நாம் வார்த்தையால் அழைக்கப்படுகிறோம்; கிறிஸ்து தாமே நம்மை அழைத்தார். அவர் தம்மை நமக்குத் தெளிவாக்கியுள்ளார்; எபிரெயர் 13:8, லூக்கா 17:30, மல்கியா 4, எபிரேயர் 4:12, இந்த வேதவாக்கியங்கள் அனைத்தும் அவர் வாக்களித்தார்.
இது இந்த நாளுக்காக முன்குறிக்கப்பட்ட இந்த வேத வாக்கியங்கள் மூலம் தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற, இயேசு, தேவ குமாரன் மீண்டும் ஜீவிக்கிறார்.
அதை விசுவாசிப்பதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை அழைக்க தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். தீர்க்கதரிசி வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது, இது உலகம் பெறும் கடைசி அடையாளமாயும்; ஒரு மனித ரூபத்தில் யெகோவா பேசிக் கொண்டிருப்பதாயும் உள்ளது.
மனித சரீரத்திலுள்ள ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசியைப் போன்றவர். ஆயினும் அது அவருக்குப் பின்னால் இருந்த சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறின ஏலோகிம். இயேசு, "லோத்தினுடைய நாட்களில் நடந்து போல, உலகத்தின் முடிவின் போதும் நடக்கும் ,அப்பொழுது மனுஷ குமாரன்,” தேவனுடைய குமாரன் அல்ல, “மனுஷகுமாரன் வெளிப்படுவார்” என்றார்.
நீங்கள் தொடர்ந்து வார்த்தையில் இருந்தாலொழிய, அவர் யார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்பதை மணவாட்டி அறிந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் அந்த சத்தத்தை தங்களுக்கு முன் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அறிவார்கள்.
இப்பொழுது மணவாட்டி வழியிலிருந்து வெளியேறி மேலே செல்ல வேண்டும், அதனால் ஏழாம் எக்காளம் தொனிக்க வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய இரண்டு தீர்க்கதரிசிகள் காட்சியில் தோன்றலாம். கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே.
தேவனுடைய தீர்க்கதரிசி 64-0719M எக்காளங்களின் பண்டிகை என்ற செய்தியைக் கொண்டு வந்து, பிதாவினிடம் பேசி,
இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும். கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது...அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்கள் இருதயங்களில் காணப்படும் உத்தமத்தை இன்று காலை நோக்கிப் பார்த்து, கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் அவர்களுக்கு என்ன தேவையோ அவைகளை அவர்களுக்கு அளிப்பாராக.
என்று கூறுகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி நிறைவேற்றப்படுகிற தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகமாக இருப்பதற்கு வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சிறந்த வேலைப்பாட்டுக் குடும்பமே,
கிறிஸ்துவின் மணவாட்டிக்கு இந்த கடைசி செய்திகள் எவ்வளவு முற்றிலும் பரிபூரணமாக இருந்தன. தேவன், தம்மை நமக்கு முன் திரைநீக்கி, தெளிவான காட்சியில் தம்மை வெளிப்படுத்துகிறார். உலகம் அதைப் பார்க்க முடியாது, ஆனால் நமக்கு, அவருடைய மணவாட்டிக்கே, நாம் பார்க்கக்கூடியதெல்லாம் இதுதான்.
நாம் திரையைக் கடந்து அவரை தெளிவான காட்சியில் பார்க்கிறோம். தேவன், மானிட தோல்களுக்கு பின்னால் இருக்கிறார். அவர் லூக்கா 17 மற்றும் மல்கியா 4-ல் வாக்களித்ததைப் போலவே சரியாக, வார்த்தை மாம்சமாகிவிட்டது. அவர் தம்மை ஒரு மானிடத் திரையில், அவருடைய தீர்க்கதரிசியில், அவருடைய சபையில் மறைத்துக்கொண்டுள்ளார்.
தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பேசி நமக்கு சொல்வதை நாம் கேட்கும்போது உலகத்திலேயே நாம் மகிழ்ச்சியுள்ள ஜனங்களாய் இருக்கிறோம்,
உங்களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களுடன் நான் தொடர்பு கொண்டுள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக இருப்பதைக் குறித்து நான் மகிழ்வுறுகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. அவர் நிச்சயம் இருப்பார். அவர் உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டார். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் உங்களை விட்டு விலகமாட்டார். நீங்கள் இப்பொழுது திரையினூடாகக் கடந்து வந்துவிட்டீர்கள்.
நாம் எல்லோருக்கும், நம்முடைய சொந்த அணிகளுக்குள்ளேயும் கூட வித்தியாசமானவர்களாக ஆகிவிட்டோம், ஆனால் இன்று அவருடைய வார்த்தையின் மூலம் அவர் நமக்குக் கொடுத்திருக்கிற வெளிப்பாட்டிற்காக, நாம் மிகவும் பெருமைப்படுகிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்காகவும் முட்டாள்களாக இருக்க வேண்டும்.
நாம் அவருடைய தீர்க்கதரிசியின் விசுவாசத்துடன் நம்முடைய விசுவாசத்தை வைத்து, ஒன்றுபட்டு, தேவனுடைய மகத்தான ஐக்கியத்தை உருவாக்குகிறோம். நாம் இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது; அந்த தீர்க்கதரிசி இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது; தேவனில்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது. எனவே ஒன்றாக, நாம் ஒரு ஐக்கியத்தை உருவாக்குகிறோம், இணைப்பு; தேவன், அவருடைய தீர்க்கதரிசி, அவருடைய மணவாட்டி. நாம் அவருடைய சிறந்த வேலைப்பாடாகிவிட்டோம்.
அவருடைய முதலாவது சிறந்த வேலைப்பாட்டை உருவாக்க அவருக்கு நான்காயிரம் ஆண்டுகள் ஆனது. இப்போது, அவரது மற்றொரு சிறந்த வேலைப்பாடான, நம்மை, அவருடைய மணவாட்டியை, அவருடைய மகத்தான சிறந்த வேலைபாட்டுக் குடும்பத்தை, இரண்டாவது ஆதாமையும், இரண்டாம் ஏவாளையும் உருவாக்க அவருக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பிடித்தன. நாம் இப்போது தோட்டத்திற்காக, ஆயிரம் வருட அரசாட்சிக்காக ஆயத்தமாக இருக்கிறோம். அவர் நம்மை மீண்டும் வடிவமைத்தார், நாம் இப்போது ஆயத்தமாக இருக்கிறோம்.
நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மனவாட்டியாய், அவருடைய மூல சிருஷ்டிப்பின் பாகமாய் இருக்கிறோம். தண்டு, பட்டுக்குஞ்சம், மற்றும் உமி ஆகியவை இப்போது விதையில் கூடி, உயிர்த்தெழுதலுக்கு ஆயத்தமாகி, அறுவடைக்கு ஆயத்தமாக உள்ளன. அல்பா ஒமேகாவாகிவிட்டது. உள்ளே சென்ற வித்து, ஒரு செயல்முறை மூலம் வந்து மீண்டும் வித்தாக மாறிவிட்டது.
ஏதேன் தோட்டத்தில் விழுந்து, அங்கேயே மரித்துப்போன வித்து, திரும்பி வந்தது. அங்கே மரித்துப்போன அந்த பரிபூரணமற்ற வித்திலிருந்து, இரண்டாவது ஆதாமுக்கு, பரிபூரண வித்திற்கு திரும்பி வருகிறது, இரண்டாம் ஆதாம்.
நாம் இப்போது இரண்டாவது ஆதாமாக, உண்மையான மணவாட்டியாக, வித்தாக, மீண்டும் மூல வார்த்தையுடன் திரும்பியுள்ளோம். நாம் வித்தாக இருப்பதற்கு முழு வார்த்தையாக இருக்க வேண்டும். நாம் ஒரு பாதி வித்தாக இருக்க முடியாது; நாம் வளர முடியாது, நாம் முழு வித்தாக இருக்க வேண்டும்.
இன்னும் ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டுள்ளது, அறுவடை இங்கே உள்ளது. நாம் முற்றிலும் முதிர்ச்சியடைந்துள்ளோம். நாம் வருகைக்காக ஆயத்தமாக இருக்கிறோம். இது அறுப்பின் நேரம். வித்து அதனுடைய மூல நிலைக்குத் திரும்பியது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியுமாக, சிறந்த வேலைப்பாட்டுக் குடும்பம் மீண்டும் வந்துள்ளது.
அவருடைய தீர்க்கதரிசியையும், அவருடைய மணவாட்டியையும் ஊக்குவிக்க, கர்த்தர் தம்முடைய தூதனுக்கு ஒரு மகத்தான தரிசனத்தை அருளினார். அவர் நம்மை, அவருடைய மணவாட்டியைக் குறித்த ஒரு முன்னோட்டத்தை அவருக்குக் கொடுத்தார். நாம் அவரைக் கடந்து செல்லும்போது, நாம் இனிமையான தோற்றமுள்ள எளிய பெண்மணிகளாய் இருந்தோம் என்று அவர் கூறினார். நாம் கடந்து சென்றபோது, நாம் யாவரும் அவரையே நோக்கி பார்த்துக் கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார்.
முடிவிலே, சிலர் வரிசையிலிருந்து வெளியேறி, மீண்டும் வரிசையில் வர தங்களால் இயன்றவரை முயன்றனர். அப்போது அவர் மிக முக்கியமான ஒன்றைக் கவனித்தார், அவர்கள் அவரைப் பார்க்காமல், வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழப்பத்திற்குள் சென்றுவிட்ட அந்த சபையைக் குறித்து அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நாம் அல்ல, முதலில் இருந்தவர்கள் அல்ல, நாம் வரிசைகளில் இருந்து ஒருபோதும் விலகாமலும் அல்லது அவரிடத்தில் இருந்து நம்முடைய பார்வையை திருப்பாமல் இருந்தோம் என்று நான் கூறுவதற்கு எவ்வளவு பெருமையும், நன்றியுள்ளவனுமாய் இருக்கிறேன்.
எனவே, சிறந்த வேலைப்பாடான தேவனுடைய குமாரனும், சிறந்த வேலைப்பாடான மணவாட்டியும், அது அவருடைய ஒரு துண்டாகும், அது வார்த்தையின் நிறைவேறுதலாய் இருக்க வேண்டும். வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது, கர்த்தருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
நாம் அவருடைய சிறந்த வேலைபாடுகளின் குடும்பமும், அவருடைய உண்மையான மணவாட்டி என்றும் அறிந்துகொள்வதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது, கர்த்தருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
சிறந்த வேலைப்பாடு 64-0705 என்ற செய்தியை தீர்க்கதரிசி நமக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சிறந்த வேலைப்பாட்டு குடும்பத்தின் பாகமாகும்படி, எங்களோடு அந்த வார்த்தையைக் கேட்கும்படிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஏசாயா 53:1-12மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19
தொடர்புடைய சேவைகள்
அன்பிற்குரிய நண்பர்களே,
ஜெபர்சன்வில்லில், பிற்பகல் 12:00 மணிக்கும், ஆப்பிரிக்காவில், காலை 7:00 மணிக்கும், அரிசோனாவில், காலை 10:00 மணிக்கும்; உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டி ஒன்று கூடியுள்ளனர். இந்த தருணத்திற்காக நாம் வாரம் முழுவதும் காத்திருந்தோம். தேவன் தம்முடைய வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளரைக் கொண்டு மானிட உதடுகளினூடாக தேவன் நம்மிடத்தில் பேசுவதற்காகவே நாம் காத்துக்கொண்டும், மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருக்கிறோம். நாம், “கர்த்தாவே என்னை ஆயத்தப்படுத்தும், என்னை அபிஷேகியும், உம்முடைய வார்த்தையைக் குறித்த அதிகமான வெளிப்பாட்டை எனக்குத் தாரும்” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.
தீர்க்கதரிசி, தீர்க்கதரிசி மட்டுமே, இந்த மணிநேரத்திற்கான ஜீவ வார்த்தைகளை உடையவராயிருக்கிறார் என்று நாம் உறுதியாக அறிந்திருப்பதற்காக நாம் திருப்தியடைகிறோம். எங்களால் எல்லாவற்றையும் விளக்க முடியாமல் போகலாம், ஆனால் நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
கர்த்தர் மோசேயுடன் செய்ததைப் போலவே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை நமக்கு முன்பாக மகிமைப்படுத்த ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அந்த நேரத்தில், அவர் மலைகளை அசைத்தார். இந்த நேரத்தில், அவர் வானத்தையும் பூமியையும் அசைத்துக்கொண்டிருக்கிறார்.
தருணம் வந்துவிட்டது. நம்முடைய இருதயங்கள் நமக்குள் துடித்துக்கொண்டிருக்கின்றன. நம்முடைய தேசிய கீதம் இசைக்கப்படுவதை நாம் கேட்கத் துவங்குகிறோம். ஒருமனப்பட்டு, உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டி தங்களுடைய காலூன்றி எழுந்து, நம்பிடுவாய், யாவும் கை கூடிடும், நம்பிடுவாய் என்று பாடத் துவங்குகின்றனர். அப்பொழுது தேவன் நம்மிடத்தில் பேச ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
நாமோ; "காலை வணக்கம் நண்பர்களே" என்பதைக் கேட்கிறோம்.
இந்த 3 எளிய வார்த்தைகளைக் கேட்கையில் நம்முடைய இருதயங்கள் களிகூருகின்றன. தீர்க்கதரிசி என்னைத் தன்னுடைய நண்பன் என்றுதான் அழைத்தார். அதன்பின்னர் அவர் நம்மிடம் சொல்லுகிறார்,
நான் உங்கள் எல்லோரையும் காணமுடியாமல் தவிக்கிறேன். நான்—நான் எங்கு சென்றபோதிலும், உங்களைப் போன்றவர்கள் எனக்கு—எனக்கு கிடைக்காது. எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர், ஆனால் உங்களைப் போன்றவர்கள் எனக்கு கிடைப்பது அரிது. இந்த சிறு கூட்ட ஜனங்களிடம் விசேஷமான ஒன்றுண்டு...என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்பொழுதுமே உங்களைக் குறித்து நினைக்கிறேன். ஆனால் நான் எங்கு சென்ற போதிலும்... என்னுடன் இணைந்திருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த குழுவும் இல்லை என்பதை நான் அறிவேன். தேவன் நம்மை இணைபிரியாதவர்களாக்கி, வரப்போகும் ராஜ்யத்திலும் நாம் இணைபிரியாதவர்களாகவேயிருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது.
இன்றைக்கு தேவன் நமக்கு என்ன மகத்தான வெளிப்படுத்துதலை வெளிப்படுத்துவார்? நாம் என்ன கேட்கப் போகிறோம்? ஒருவேளை நாம் இதற்கு முன்பு பலமுறை இதைக் கேட்டிருக்கலாம், ஆனால் இதற்கு முன்பிருந்த வேறு எந்த நாளையும் போன்றில்லாமல், இன்றைக்கு வித்தியாசமாக இருக்கக் கூடும்.
அது என்ன? விசுவாசிகளினுடைய ஆகாரம். பரலோகத்திலிருந்து வரும் சமுகத்தப்பத்தை நாம் விருந்துண்போம்.சமுகத்தப்பம் அவருடைய மணவாட்டியான, நமக்கானதாய் மாத்திரமே உள்ளது. அந்த சமுகத்தப்பத்தின் மீதுள்ள ஷெக்கினா மகிமைதான் நம்மை கெட்டுப்போகாமல் காத்துக்கொண்டிருக்கிறது.
வெளியில் இருப்பவர்கள் நம்மைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒலிநாடாக்களை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? ஜனங்களாகிய நீங்கள் உண்மையிலேயே வினோதமானவர்களாக இருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்கள்.
மகிமை!! நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், மேலும் வினோதமானவர்களாக இருப்பதற்கு கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; அவருக்கும் அவரது ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தைக்கும் முட்டாள்கள். உலகிற்குச் அதைச் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், "ஆம், நான் ஒலிநாடா ஊழியத்தில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். நான் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் இதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஒலிநாடாக்களை மீண்டும் பிரசங்கப் பீடத்தில் இயக்குவதில் நான் விசுவாசங் கொண்டிருக்கிறேன்.”
பாரம்பரியங்களின் திரை நீக்கப்பட்டவுடனே, தேவன் இன்னமும் தமது வார்த்தையின் தேவனாயிருக்கிறார் என்பதை உங்களால் காண முடியும். அவர் இன்னமும் தமது வார்த்தையை காத்துக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அவர்- அவர் தேவனாக, தமது வார்த்தையின் ஆகியோனாக இருக்கிறார்.
வேறு யாரேனும் என்ன செய்தாலும், அல்லது கூறினாலும், நாம் அதை விசுவாசிக்கிறோம், அதன்பின்னர் நாம் அதன் பேரில் செயல்படுகிறோம். நீங்கள் அதை செய்யவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் அந்த திரைக்கு பின்னால் இல்லை. அந்த திரை ஒருவருக்கு சொந்தமானது. அந்தச் செய்தி ஒன்றுதான்.
சபைக்கு தேவன் எதைக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறித்து ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதல், அதை வெளிப்படையாகக் கூறாமலே உங்களுக்கு கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? சில சமயங்களில், ஒன்றைக் கூறுவது, நாம் சில காரியங்களை அப்படிப்பட்ட ஒரு வழியில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். அது ஆட்களை சபையில் குறைத்துவிடுகிறது. சிலர் சபையை விட்டு வெளியேறும்படி செய்துவிடுகிறது. மற்றும் சிலரை அது யோசிக்கச் செய்கிறது. அது வேண்டுமென்று செய்யப்படுகிறது. அது அப்படித்தான் செய்யப்பட வேண்டும்.
வார்த்தையானது தேவனுடைய தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஒரு குழு, பரிசேயர்கள், அல்லது சதுசேயர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது ஒரு குலம் என்று அல்ல. இது தீர்க்கதரிசி! தேவன் ஒரு மனிதனைத் உடையவராய் இருக்கிறார். அவர் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு சிந்தனைகளை பெற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனை எடுத்துக்கொண்டார். அவரிடம் வார்த்தை இருக்கிறது, அவரிடம் மாத்திரமே.
அப்படியானால் சிலர், “தேவன் வேண்டுமென்று அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வார் என்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்கலாம். அவர் நிச்சயமாக அப்படி செய்தார். அவர் இன்னமும் செய்கிறார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கூறியது போல், இன்றைக்கும் நாம் அதையே கேட்கிறோம்: "ஆனால் தேவன் அழைத்திருக்கிற மற்ற மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள்." அது உண்மை. அவர்கள் பின்தொடர்ந்து செல்லும் வரை, ஆமென், ஆனால் தேவன் முன்குறித்து, அந்தப் பணிக்கென நியமித்து, நம்முடைய தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுத்த தேவனுடைய ஸ்தானத்தை எடுக்க ஒருவர் முயலும்போது, நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையான, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.
கவனியுங்கள், இப்பொழுது அதற்குள் பிரவேசிக்காமல் தங்கி விடுவது மரணத்தை விளைவிக்கும். நீங்கள் திரையின் வழியாக அதற்குள் பிரவேசிக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் செல்லமாட்டீர்கள். இப்படிப்பட்டவர்கள் மேல் தேவன் எப்படி இரக்கம் காண்பிக்க முடியும், அது என்னவாயிருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், திரைக்குப் பின்னால் என்ன இருந்ததென்று தேவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகும். வார்த்தை, திரைக்குப் பின்னால் என்ன இருந்தது என்பதை கவனியுங்கள், வார்த்தையே! அது எதை மறைத்திருந்தது? வார்த்தையையே!. அது என்னவாயிருந்தது? அது உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தது. அது திரை மறைத்திருந்த வார்த்தையே. புரிகிறதா? இயேசுவே அந்த வார்த்தையாய் இருந்தார்! அவரே அந்த வார்த்தையாய் இருக்கிறார், அவருடைய மாம்சம் என்னும் திரை அதை மறைத்திருந்தது.
எங்களுக்கு, இது ஒரு வெளிப்படுத்துதல்! இது ஒரு வார்த்தை இல்லை, இது ஒரு உண்மை! ஆமென்!
மற்றவர்களுக்கு நாம் வினோதமானவர்கள் என்பதை நாம் அறிவோம், மற்றும் உலகிற்கு ஒரு பைத்தியம் போல் தோன்றலாம், ஆனால் அது எல்லா மனிதர்களையும் அவரிடம் இழுக்கிறது.
நாம் எப்படி வினோதமானவர்கள் 64-0614E என்பதை தீர்க்கதரிசி உலகத்திற்கு சொல்லுவதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வார்த்தையோடு மறையேற்றப்பட வாருங்கள். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் என்று கூறுவதற்கு நாங்கள் மிகவும் பெருமையுள்ளவர்களாகவும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
I கொரிந்தியர் 1:18-25
II கொரிந்தியர் 12:11