ஞாயிறு
03 நவம்பர் 2024
60-1207
பெர்கமு சபையின் காலம்

அன்பான கற்புள்ள கன்னிகை மணவாட்டியே,

நீங்கள் ஏழு சபைக் காலங்களை கேட்டு மகிழ்ந்து வருகின்றீர்களா? தேவன் தம்முடைய மணவாட்டிக்கு முன் எப்போதும் இல்லாத ஒரு எழுப்புதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நாம் யாராக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும்படியான அதிக உறுதியையும், வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம், இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியின் மூலம் நமக்கு அதிக வெளிப்பாட்டையும், அதிக விசுவாசத்தையும் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது அவர் நம்மிடத்தில்: “ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலிருந்து, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் அதை உள்ளே பதியச் செய்து, நான் செய்யப்போகும் எல்லாவற்றிலும் ஆவிக்குரிய செயல்பாட்டைப் புரிந்து கொள்ள செய்வாராக. இது என்னுடைய தீர்க்கதரிசியாகிய மல்கியா 4-ன் மூலம் உரைக்கப்பட்டு என்னுடைய ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறது” என்று சொல்லுகிறார்.

அவருடைய வார்த்தைகளில் சிலவற்றைப் படித்துப் புரிந்து கொண்டு, நமது ஆவிக்குரிய சிந்தனையை அவற்றில் பொருத்துவோம்.

தேவன் தம்முடைய ஆவியினால் நிரப்பட்ட தலைவனை, தம்முடைய ஆவியினால் நிரப்பப்பட்ட குழுவின் மேல் ஏற்படுத்தினார். அவருடைய தூதன், அவர் ஒரு நாமத்தை அவன் மேல் முத்திரையிட்டு வைக்கிறார். ஆனால அவன் அதை யாருக்கும் வெளிப்படுத்தக்கூடாது; அவன் அதை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும். பாருங்கள், “அதைப் பெற்றுக் கொள்ளுகிறவனைத் தவிர வேறொருவனும் அறியான்.”

ஆகவே தேவன் தம்முடைய மணவாட்டிக்குத் தம்முடைய ஆவியால் நிரப்பப்பட்ட குழுவிற்கு ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு தலைவரைக் கொடுத்தார். தலைவரை, அவரது ஆவியினால் நிரப்பப்பட்ட குழுவிற்கு தலைவர்களை அல்ல.

இவ்வுலகத்தில் விரைவில் அந்த மகத்தான ஒளியின் தூதன் நம்மிடத்தில் வரவிருக்கிறார். அந்த மகத்தான பரிசுத்த ஆவி, வரப்போகும் அந்த வல்லமை, அது நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வழி நடத்தும்.

ஒரு மகத்தான ஒளியின் தூதன். இந்த கடைசி காலத்திற்கு மகத்தான ஒளியின் தூதன் யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம். அவர் பரிசுத்த ஆவியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார் என்றும், வருவார் என்றும் அவர் கூறுகிறார்.

அது நம்மை வழி நடத்தும். அது நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவி என்பதை நாம் உண்மையாகவே அறிந்து விசுவாசிக்கிறோம். ஆனால் அவர் தம்முடைய தூதனையும் பரிசுத்த ஆவியையும் ஒன்றாக இணைத்து, அவர் (அவருடைய பரிசுத்த ஆவியானவர்) அவருடைய மகத்தான ஒளியின் (மூலம்) நம்மை வழிநடத்துவார் என்று கூறுகிறார்.

அவர் தொடர்ந்து கூறி அவர்களை இணைக்கிறார்:

அவன் அநேகமாக அதை அறியாமல் இருக்கக்கூடும்.

பரிசுத்த ஆவியானவருக்கு அது யாரென்று தெரியாது என்று அவர் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நம்மை வழிநடத்தத் தெரிந்து கொண்ட அவருடைய பூமிக்குரிய தூதனே.

ஆனால் அவர் இந்நாட்களில் ஒன்றில் இங்கு இருப்பார். அவர்…தேவன் அவரைத் தெரியப்படுத்துவார். அவர் தன்னைத் தானே யார் என்று தெரியப்படுத்த வேண்டியதில்லை, தேவனே அவரைத் தெரியப்படுத்துவார். தேவன் தனக்குச் சொந்தமானவனை நிரூபித்துக் காண்பிப்பார்.

மீண்டும், இந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் இங்கு இருப்பார் என்று அவர் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய மணவாட்டியை வழிநடத்த அவருடைய மகத்தான ஒளியின் தூதன். அவர் தன்னை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, தேவன் தம்முடைய மகத்தான தலைவரை வெளிப்பாட்டின் மூலம் தம்முடைய மணவாட்டிக்குத் தாமே தெரியப்படுத்துவார்.

நீங்கள் ஆவிக்குரிய பொருத்தத்தை புரிந்து கொள்கிறீர்களா? தம்முடைய மணவாட்டியை வழிநடத்தத் தேவன் தெரிந்துகொண்ட ஒளியின் தூதன் யார் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? இந்த சிறு கோல் மற்ற தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இது கூறுகிறதா?

நீங்கள் உங்களுடைய மேய்ப்பனைவிட மேலாக ஒருபோதும் இருந்து விடமுடியாது. அதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், பாருங்கள்.

மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாமல் கேலி செய்து கொண்டு இருக்கையில், வில்லியம் மரியன் பிரான்ஹாம் எங்கள் மேய்ப்பர் என்று கூறும்படியான வெளிப்பாட்டிற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் உண்மையாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்.

இப்போது இந்தச் செய்திகள் ஒவ்வொன்றும் "தூதனுக்கு" - (மானிடத் தூதுனுக்கு) அனுப்பப்பட்டதால், ஒரு அற்புதமான சிலாக்கியத்தை போன்ற ஒரு மிகப் பெரிய பொறுப்பு அவனுடைய பங்காயிருக்கிறது.

செய்தி அவருடைய தூதனுக்கு அனுப்பப்பட்டது, பின்னர் அவருடைய தூதன் அதை மணவாட்டிக்கு கொடுக்கிறார்; ஊழியம் மட்டுமல்ல, அவருடைய மணவாட்டி யாவருக்குமமே எல்லோரும் கேட்கும்படியாக அது ஒலிநாடாவில் உள்ளது. அது சேர்க்கப்படவும் அல்லது எடுக்கப்படவும் முடியாது, மேலும் இதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை.

அவர் சீக்கிரம் வருகிறார், அவர் வரும்போது அவர் முதலில் உம்மிடம் வருவார், நீர் பிரசிங்கத்துள்ள சுவிசேஷத்தின்படி நீர் நியாயந்தீர்க்கப்படுவீர், நாங்கள் உம்முடைய பிரஜைகளாக இருப்போம்.” நான், "இவர்கள் எல்லோருக்கும் நான் பொறுப்புடையவர் என்று நீர் பொருட்படுத்திக் கூறுகிறீரா” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஒவ்வொருவருக்குமே. நீர் ஒரு தலைவராக பிறந்தீர்” என்றார்.

மகத்தான நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறபோது, அவர் முதலில் அவருடைய ஒளியின் தூதனிடம் வருகிறார், அவர் பிரசங்கித்த சுவிசேஷத்தின்படி அவரை முதலில் நியாயந்தீர்ப்பார். நாங்கள் அவருடைய பிரஜைகள். அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவராக இருந்ததால், அவர் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்புடையவராக இருக்கிறார்.

உங்களுடைய ஆவிக்குரிய பொருத்தத்தை அதில் வைக்கவும். தேவனுடைய தூதன் என்ன கூறினார் என்பதன் மூலம் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். எனவே நீங்கள் அதை அவரிடமிருந்து நேரடியாக கேட்க முடியும்போது, அவர் கூறினார் என்று யாரோ ஒருவர் கூறுவதன் மூலம் உங்களிடம் நித்திய ஜீவனுக்கான ஒரு வாய்ப்பினைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஒலிநாடாக்களில் உள்ளதை விட ஒரு மிக முக்கியமான ஊழியம் உள்ளது என்று யாராலும் எப்படி நம்ப முடியும். நீங்கள் அதை நம்பினால், அல்லது தர்க்க அறிவின் மூலம் வற்புறுத்தியிருந்தால், நீங்கள் மூல வார்த்தைக்குத் திரும்புவது நல்லது; ஏனென்றால் ஒலிநாடாக்களில் உள்ள வார்த்தைகளால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். அது உரைக்கப்பட்டுள்ள விதமாகவே வார்த்தையோடு தரித்திருங்கள்.

ஆனால் இந்த தீர்க்கதரிசி வந்து, “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி' என்று முதல் வருகைக்கு முன்னோடியானவன் அறை கூவியது போன்று, 'இதோ தேவனுடைய ஆட் டுக்குட்டி மகிமையில் வருகிறார்' என்று இவரும் கூட சந்தேகத்துக்கிடமின்றி பறைசாற்றுவார். அவர் இதை செய்து, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு யோவான் சத்தியத்தின் செய்தியாளனாக இருந்தது போல தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும், வார்த்தையினால்- பிறப்பிக்கப்பட்டவர்களுக்குமான மணவாட்டிக்கு இவர் இந்த கடைசி செய்தியாளராகிய ஒருவராக இருக்கிறார்.

கர்த்தராகிய இயேசுவை நமக்கு யார் அறிமுகப்படுத்துவார்? அவருடைய மகத்தான ஒளியின் தூதன், வில்லியம் மரியன் பிரான்ஹாம்.

60-1207 - "பெர்கமு சபையின் காலம்" என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, அவருடைய மகத்தான ஒளியின் தூதன் நமக்கு அதிகமாக வெளிப்பாட்டைக் கொண்டு வருவதை கேட்டு போகிறபடியால், எங்களுடன் ஒரு கற்புள்ள கன்னிகை மணவாட்டியாக இருக்க வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்