அன்புள்ள ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து பருகுபவர்களே,
கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள மிக முக்கியமான ஈஸ்டர் வார இறுதிக்குப் பிறகு மணவாட்டி ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டாள். நாம் அவரோடு உள்ளே அடைத்துக்கொண்டு, ஐக்கியங்கொண்டு, வார இறுதி முழுவதும் அவரை ஆராதித்தோம். அவருடைய பிரசன்னம் நம்முடைய வீடுகளையும் நம்முடைய சபைகளையும் நிரப்பியது.
நாம் இவ்வளவு மகத்தான எதிர்பார்ப்புகளில் இருந்தோம். இது நமக்கான தேவனுடைய சித்தமாயிருந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம். தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். நாம் உலகத்தையும் அதனுடைய எல்லா கவனச்சிதறல்களையும் மூடிவிட்டோம். நாம் உலகம் முழுவதிலுமிருந்து ஒருமனதாக ஒன்றுபட்டோம். நாம் உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்து கொண்டு, அவர் வழியில் நம்மோடு பேசும்படியாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தோம்.
நம்முடைய இருதயங்கள், “கர்த்தாவே, என்னை இன்னும் அதிகமாக உம்மைப் போலாக்கும். உம்முடைய அதி சீக்கிர வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்தும். எனக்கு அதிகமான வெளிப்பாட்டைத் தாரும். உம்முடைய பரிசுத்த ஆவியானது என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநார்களையும் நிரப்புவதாக,” என்று கதறிக்கொண்டிருந்தன.
ஒவ்வொரு ஆராதனையும் துவங்கும்போது, நாம் நமக்குள்ளே, “அது எப்படி இருக்கும்? என் வாழ்நாள் முழுவதும் இந்த செய்திகளை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் நான் அவைகளை முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது போல, இப்போது அவை அனைத்தும் புதிதாகத் தோன்றுகின்றன” என்று கூறிக்கொண்டோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் தம்முடைய வார்த்தையை நம் இருதயங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆழ்ந்த வெளிப்பாடு நம்முடைய இருதயங்களுக்குள்ளாக மீண்டும் வருகிறது...அது அவரே...அவர்தான். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்.
நான் அல்ல! அவரே! அந்த ஒருவர் அவரே! நான் சற்றுமுன் உங்களுக்குக் கூறினேன், அவர் என்னுடைய சரீரத்தை எடுத்துக் கொண்டார். அவர் என்னுடைய நாவை எடுத்துக்கொள்கிறார், என்னுடைய கண்களை எடுத்துக்கொள்கிறார், ஏனென்றால் நான் அதை அவரிடத்தில் சமர்ப்பிப்பேன் என்று அவர் அறிந்திருந்தார், எனவே அவர் வந்து, நான் அதைச் செய்யும்படிச் செய்தார். எனவே அது நானல்லவே! அது அவராயுள்ளதே! அங்கே உங்களோடிருப்பது நானல்ல, அங்கே உங்களோடிருப்பது அவராகும். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். ஓ, தேவனே, தேவனே; அதை விசுவாசியுங்கள். ஓ, ஜனங்களே; அவரை விசுவாசியுங்கள். அவரை விசுவாசியுங்கள். அவர் இங்கே இருக்கிறார்.
இன்றைக்கு நிமிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற தேவனுடைய சத்தமாக ஒலிநடாக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும்படியான வெளிப்பாட்டை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். அவைகள் அவருடைய வார்த்தைகள், அவருடைய சத்தம்…நித்திய ஜீவனின் வார்த்தைகளை அவர் நம்மிடத்தில் பேசுவதற்கு நாம் செவி கொடுக்கும்படியாக அவருடைய சத்தம் பதிவு செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது. அவைகள் அவருடைய மணவாட்டிக்கான அவருடைய அருளப்பட்ட வழியாயிருக்கின்றன.
இது புதிய, சுத்தமான, பொங்கி பொங்கி வழிகிற ஆர்ட்டீசியன் ஊற்றாயுள்ளது. நாம் எவ்வளவு அதிகமாகப் பருகினோமோ, அவ்வளவு அதிகமாக,, “இன்னும் அதிகமாக கர்த்தாவே, இன்னும் அதிகமாக. கர்த்தாவே என் பாத்திரத்தை நிரப்பும், கர்த்தாவே அதை நிரப்பும்” என்று கதறினோம். அவர் நிரப்பினாரே! நாம் அதிகமாக பருக, அவர் நமக்கு அதிகமாகவே தருகிறார்.
ஆகையால் சாத்தான் சுவிசேஷத்தின் வல்லமையால் தோற்கடிக்கப்பட்டான் என்று அறிவிக்கப்பட்டான். நமக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பரலோகத்தின் தேவனால் நியமிக்கப்பட்ட தம்முடைய தூதனை அனுப்பினார். வார்த்தையை எழுதின தேவனால் அனுப்பப்பட்ட அவருடைய தூதன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த அப்பொழுது இருந்தார். "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஜனங்களே வெளியே வாருங்கள்".
பிசாசு ஒவ்வொரு சுகவீனமான நபரையும், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிருந்தது. இப்போது தேவனுடைய வல்லமை நம்மை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பெலத்திற்கும் உயர்த்தியுள்ளது.
ஆகையால், நாம் நம்முடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து கூறினோம்:
“நான் இப்பொழுதே அந்த இயேசு கிறிஸ்துவை, உயிர்த்தெழுந்த தேவ குமாரனாக ஏற்றுக் கொள்கிறேன். அவர் என்னுடைய இரட்சகராயிருக்கிறார், அவர் என்னுடைய இராஜாவாக இருக்கிறார், அவர் என்னுடைய சுகமளிப்பவராக இருக்கிறார். நான் இப்பொழுதே குணமாக்கப்பட்டிருக்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எனக்காக மரித்த அவருக்காக நான் ஜீவிப்பேன். எனக்காக உயிர்த்தெழுந்த அவருக்காக என்னால் மிகச் சிறந்த முறையில்…பணியாற்றும்படி புறப்பட்டுப்போக புதிதான ஜீவனோடு இங்கிருந்து நான் எழும்புவேன். அல்லேலூயா!”
இது நாம் அனுதினமும் பருகுகிற ஆர்ட்டீசியன் தண்ணீராயுள்ளது. இது மாத்திரமே எல்லா நேரத்திலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிற பரலோகத்திலிருந்து நேரடியாக வரும் ஊற்றாகும். இது தனக்குத் தானே நிரப்பிக் கொள்கிறது. எப்போதும் புதியதாகவும் சுத்தமாகவும் இருக்கும். அது ஒருபோதும் தேக்கமடையாது. இது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிற ஜீவனுள்ள தண்ணீராய், எல்லா நேரத்திலும் மணவாட்டிக்கு புதியதான ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகிறது.
அது எப்போதுமே ஒரு பொங்கி வழிதலாய் இருந்து வருகிறது. நாம் அதை அடித்து மேலிழுக்கவோ, அதை சுற்றவோ, அதை முறுக்கவோ அல்லது இணைக்கவோ தேவையில்லை. இது தேவனுடைய ஊற்றின் ஜீவ தண்ணீராய் இருக்கிறது, வேறு எதையும் பருகுவதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.
இன்றைக்கு நாம், “எங்களுடைய தண்ணீர் நீங்கள் குடிக்கக்கூடிய மிகச் சிறந்த தண்ணீராயுள்ளது. நாங்கள் அதை எங்களுடைய 7 படிநிலையில் வடிகட்டும் செயல்முறை மூலம் பயன்படுத்தியுள்ளோம். அதன்பின்னர் நீரேற்றத்தில் உங்களுக்கு தேவைப்படுகிறது என்று நாங்கள் நினைக்கிற தண்ணீரில் நாங்கள் வடிகட்டிய அனைத்து தாதுக்களையும் மீண்டும் சேர்த்துள்ளோம்” என்பதை கேட்கிறோம்.
தேவனுக்கு மகிமை, நாம் எதைப் பருகிக் கொண்டிருக்கிறோம் அல்லது எதைச் சேர்த்திருக்கிறோம் அல்லது வடிகட்டியிருக்கிறோம் என்ற ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோத் தேவையில்லை. நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியமும் நம்முடைய தண்ணீரில் உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்த, அது பீறிட்டு வருகிறபோது பருக வேண்டும் என்பதேயாகும்.
இந்தத் தண்ணீரைப் பருகுவது என்னே ஒரு ஆறுதல். அதிலிருந்து பருகுவதற்கு நாம் அநேக மைல்கள் வெளியே செல்வோம், ஆனால் நாம் இதற்கு அவ்வாறு செல்ல வேண்டியதில்லை. நாம் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்கிறோம். நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், பணியில், நம்முடைய கார்களை ஓட்டும்போதும், ஒரு நடைபயிற்சியை செய்யும்போதுமே…நாம் பருகுகிறோம், நாம் பருகுகிறோம், நாம் பருகுகிறோம்.
ஓ உலகமே, தேவன் அருளியிருக்கிற ஊற்றிலிருந்து பருகு வாருங்கள். இந்த ஒரு இடம் மாத்திரமே, “நான் பருகக்கூடாத எந்த காரியத்தையும் நான் பருகாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் என்னை பாதுகாத்துக் கொள்வார் என்று நான் ஜெபிக்கிறேன்” என்று நீங்கள் கவலைப்பட்டுக் கூற வேண்டியிராததாயுள்ளது. இது முழுவதுமே பரலோக ஊற்றுகளிலிருந்து பாய்கிற சுத்தமான ரூபரகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாய் உள்ளது.
அவனுடைய மணவாட்டி பருகுவதற்கு வேறு இடமில்லையே!
வெடிப்புள்ள தொட்டிகள் 64-0726E என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடைய ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து எங்களுடன் பருக வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
சங்கீதம் 36:9
எரேமியா 2:12-13
பரி. யோவான் 3:16
வெளிப்படுத்தின விசேஷம் 13 வது அதிகாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, உண்மையான ஈஸ்டர் முத்திரை 61-0402 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில்) ஒலிக்கும்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்வாரியில் அந்த நாள் 60-0925 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள விலையேறப்பெற்ற, அன்பானவர்களே,
நாம் அவருடைய விலையேறப்பெற்ற, பிரியமான மணவாட்டி என்பதை அறிவது எவ்வளவு அற்புதமானது. நாம் உலகம் முழுவதிலுமிருந்து கூட்டி சேர்க்கப்பட்டு, அவருடைய வார்த்தையின் பேரில் நம்மை ஒன்றிணைத்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு நம்முடைய ஆத்துமாக்களை போஷிக்கிறோம்.
அதன் முழுமையிலும், அதன் ரூபகாரப்படுத்துதலின் மற்றும் வெளிப்பாட்டின் வல்லமையிலும் நாம் அதை ஏற்றுக்கொண்டோம். நாம் அதன் ஒரு பாமாகிவிட்டோம். இது நமக்குள் இருக்கிற ஒன்றாகும். இது நமக்கு ஜீவனைவிட மேலானது.
அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரை: நாம் அடையாளங் கண்டு கொண்டோம்.
சாயங்கால வெளிச்ச செய்தியை: நாம் அடையாளங் கண்டுகொண்டோம்.
நாம் யார் என்பதை: நாம் அடையாளங் கண்டுகொண்டோம்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியினுடைய வார்த்தையை எடுத்து நம்மை வெட்டியெடுத்தார். அவர் செய்வதாக வாக்களித்தபடியே, மல்கியா 4-ன் மூலம் அவர் நம்மை வெட்டியிருக்கிறார். நாம் ஒவ்வொரு வார்த்தையையும் நம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம்.
ஜனங்களுக்கு மத்தியிலே ஒரு மகத்தான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்பதன் முக்கியத்துவத்தை அவர்களும் கூட உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்து தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க விரும்புகிறார்கள்.
இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட வழி இது என்று பரிசுத்த ஆவியானவரால் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கேட்க வேண்டிய சத்தம் இதுதான் என்பதை அவர்கள் அடையாளங் கண்டு கொள்கிறார்கள். இது அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துவதற்காக தேவனால் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆகாரமாய் இருக்கிறது.
வார்த்தை அதை வாக்களித்தது. ஒலிநாடாக்கள் அதை அறிவிக்கின்றன. அவர்கள் அதை விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது என்ன செய்தது? ஜனங்கள் சபைகளைவிட்டு வெளியேறிச் செல்வதைப் பார்ப்பது, ஆசாரியர்களை தொல்லைப்படுத்தினது. அவர், “உங்களில் யாராவது அவருடைய கூட்டத்தில் கலந்து கொண்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். நாங்கள் உங்களை ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றுவோம்” என்றார்.
இது நம்பமுடியாதது, ஆனால் இது இன்றைக்கும் அதே காரியமாகிவிட்டது. நீங்கள், "தயவுசெய்து, ஒலிநாடாக்களை இயக்குங்கள்" என்று கூறினால், அவர்கள் உங்களை அவர்களுடைய சபைகளிலிருந்து வெளியேற்றுவார்கள். இது மக்களைப் பிரிக்கும் என்று நாம் எப்போதாவது கற்பனை செய்திருக்க முடியுமா? நம்முடைய சபைகளில் தேவனுடைய சத்தத்தை இயக்கிக் கேட்கிறோமா?
சபை தங்களுடைய தீர்க்கதரிசிகளை மறந்துவிட்டது. அவர்களுக்கு "இனி அவர்கள் தேவையில்லை," என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தேவன் அவர்களை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்; அவர் தம்முடைய வார்த்தையினால் தம்முடைய ஜனங்களை வெட்டுகிறார். ஆனால் இது இந்த நாளில் அவர்களுக்கு மிகவும் பழமையானதாக உள்ளது.
நாம் நம்முடைய தீர்க்கதரிசியுடன் தரித்திருப்போம். இது அவருடைய மணவாட்டியை அழைக்கும் சத்தமாய் இருக்க வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை, எளிமையாக இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைவிட முக்கியமானது எதுவுமில்லை.
ஓ, தேவனுடைய ஆடுகளே, தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள்! "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது."
உன்னுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் அடையாளங் கண்டு கொள்ளுதல் 64-0726M, என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அந்த சத்தத்தை அடையாளங் கண்டுகொள்ள வந்து செவிகொடுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்