ஞாயிறு
13 அக்டோபர் 2024
60-1204E
பத்மு தரிசனம்

அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,

உலகம் முழுவதும் மணவாட்டிக்குள் என்ன நடக்கிறது? நாம் ஆவிக்குள்ளாகி, எழும்பி, "மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிடுகிறோம். தேவன் நம்மை கொண்டு சென்று தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய ஜீவியங்களில் நாம் படித்துள்ள, கேட்டுள்ள காரியங்கள் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரு மகத்தான உயிர்ப்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் வார்த்தையால் பிரகாசிக்கப்படுகிறோம்.

அதை நாம் நம்முடைய ஆத்துமாவின் ஆழத்தில் உணர்கிறோம். ஏதோ காரியம் வித்தியாசமாக இருக்கிறது. ஏதோ காரியம் சம்வித்துக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிப்பதையும், நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் அவருடைய வார்த்தையால் நிரப்புவதையும் நாம் உணர்கிறோம்.

அவர் நம்மிடம் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது: சத்துரு உங்களுடன் முன் எப்போதும் இல்லாத வகையில் சண்டையிடுகிறான் என்பதை நான் அறிவேன், ஆனால் சிறுபான்மையோரே பயப்படாதீர்கள், நீங்கள் என்னுடையவர்கள். என் அன்பையும், தைரியத்தையும், திறனையும் உங்களுக்குத் தருகிறேன். வார்த்தையை மட்டும் பேசுங்கள், நான் அதை நிறைவேற்றுவேன். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் நம்முடைய மகத்தான படிப்பாய்வில், அவர் நமக்கு அடுத்து என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்று ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். அவருடைய வார்த்தையே நமக்கு ஒரே அடைக்கலம், சமாதானம் மற்றும் ஆறுதல். நாம் மிகுந்த ஆர்வங் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்கிறோம். நாம் படிக்கும் ஒவ்வொரு பத்தியிலும், வார்த்தை நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படும்போது கூச்சலிட்டு ஆர்ப்பரிக்க விரும்புகிறோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் மணவாட்டியின் மீது வந்து நம்முடைய ஆத்மாக்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கற்பனை செய்து பாருங்கள், உலகில் நீங்கள் செல்லக்கூடிய வேறு எந்த இடமும் இல்லை, ஆனால் தேவனுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதையும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்பது உங்களுடைய விரல் நுனியில் இருக்கிறது.

தேவன் எப்படி திரையை நீக்கி, அதை பின்னிட்டு இழுத்து, ஒவ்வொரு சபைக் காலமும் என்ன செய்யப் போகிறது என்பதைப் யோவான் பார்க்க அனுமதித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி நமக்கு அனுப்பினார். அதன்பின்னர், காலம் நிறைவேறின போது, அதை பேசவும், அதன் அர்த்தம் என்ன என்பதை வெளிப்படுத்தவும் தேவன் தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனை நமக்கு அனுப்பினார்.

யோவான் தான் கண்டதை எழுதினானேயன்றி, அதனுடைய அர்த்தத்தை அறிந்திருக்கவில்லை. இயேசுவானவர் பூமியில் இருந்தபோது, அவரும் கூட அதை அறிந்திருக்கவில்லை. எல்லா காலத்தினருக்குமே, இந்த நேரம், இந்த ஜனங்கள், அவருடைய மணவாட்டியான, நமக்கும் எவருக்குமே இந்த நாள் வரைத் தெரியாது.

அந்த ஏழு விளக்குகளும் அந்த பிரதான கிண்ணத்தின் வளங்களிலிருந்து ஜீவனையும் ஒளியையும் ஈர்த்துக் கொண்டிருந்தன என்பதை அவர் நமக்கு எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் திரிகளை அதில் எப்படி தோய்த்து வைத்திருந்தனர் என்பதை அவர் நமக்குச் சொன்னார். ஒவ்வொரு சபைக் கால தூதனும் தன்னுடைய திரியை கிறிஸ்துவுக்குள் மூழ்கி பரிசுத்த ஆவியைக் கொண்டு அக்கினியாய் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக் கொண்டு, அந்த ஒளியை சபைக்கு அளித்தனர். இப்போது, தேவனுக்குள் கிறிஸ்துவோடு ஒரு மறைக்கப்பட்டிருந்த ஜீவியத்தின் மூலம் நம்முடைய கடைசி கால செய்தியாளர், எல்லா தூதர்களிலும் மிகப் பெரியவர், அதே ஜீவனையும் அதே ஒளியையும் வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு தூதனும் அங்கு சித்தரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நம்மில் ஒவ்வொருவரும் கூட தேவனுடைய உண்மையான விசுவாசிகள் என்று நம்முடைய பலமுள்ள தூதன் கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் கூட அங்கு வியத்தகு முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் தூதர்களின் அதே மூல ஆதாரத்திலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரே கிண்ணத்தில் மூழ்கப்பட்டிருக்கிறோம். நாம் நமக்கே மரித்திருக்க, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நம்முடைய ஜீவன்கள் மறைந்திருக்கின்றன.

தேவனுடைய கரத்திலிருந்து எந்த மனிதனும் நம்மைப் பறிக்க முடியாது என்று கூறுவதனால் அவர் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறார். நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. நம்முடைய காணக்கூடிய ஜீவியம் எரிந்து பிரகாசித்து, ஒளியை அளித்து, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்தல்களாய் இருக்கின்றன. நம்முடைய உள்ளார்ந்த, காணக்கூடாத ஜீவன் தேவனுக்குள் மறைக்கப்பட்டு கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்படுகிறது.

யுத்தங்கள் கடுமையானவை. சத்துரு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கி எழுந்து, நம்மை திடனற்றுப் போகச் செய்யவும், நம்மை வீழ்த்தவும் அவனால் முடிந்தவரை முயற்சி செய்கிறான், ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது. தேவன் தாமே மனித உதடுகள் மூலம் நம்மிடம், நாம் அவருடைய மணவாட்டி என்றும், எவர்களை அவர் தெரிந்து கொண்டாரோ, அவர்கள் பிசாசை ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

நம்முடைய பரிபூரண கர்த்தர், தம்முடைய பரிபூரண வார்த்தையைப் பேசி, தம்முடைய பரிபூரண சமாதானத்தை, தம்முடைய பரிபூரண மணவாட்டிக்குத் தருகிறார்.

எப்பொழுதும் போல, மணவாட்டிக்காக சேமித்து பாதுகாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியின் பிரதான கிண்ணத்தில் தங்கள் திரியை நனைக்கும்படி உலகத்தை நாங்கள் அழைக்கிறோம். பத்மு தீவு 60-1204E என்ற செய்தியில் என்ன சம்பவித்தது என்பதை தேவனுடைய சத்தம் பேசி வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கும் போது, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, நாங்கள் சத்தமிட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருப்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்