
அன்புள்ள உண்மையான மணவாட்டியே
,அவருடைய ஜீவன் நமக்குள் பாய்ந்துகொண்டும், துடித்துக்கொண்டும், நமக்கு ஜீவனை அளித்துக் கொண்டிருக்கும்போது, நாம் என்ன ஒரு அற்புதமான நேரத்தைக் உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். அவர் இல்லாமல், ஜீவனே இல்லை. அவருடைய வார்த்தையே நம்முடைய சுவாசமாக இருக்கிறது.
இந்த காரிருள் நாளில், நாம் எழும்பியுள்ள அவருடைய கடைசி காலக் குழுவாக இருக்கிறோம்; கடைசி நாளின் அவருடைய உண்மையான மணவாட்டி ஆவியானவருக்கு மட்டுமே, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பாள்.
அவர் நம்மிடம், "என்னைப் பொறுத்தவரை, நீங்கள் சுத்தமான அடிக்கப்பட்ட பசும் பொன்னிற்கு ஒப்பிடப்படுகிறீர்கள். உங்களுடைய நீதி என் நீதியே. உங்களுடைய தன்மைகள் என்னுடைய மகிமையான தன்மைகளாய் இருக்கின்றன. நீங்கள் என்னுடைய அன்பான உண்மையான மனவாட்டியாய் இருக்கிறீர்கள்” என்று சொல்வதை கேட்பதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம்.
ஒவ்வொரு வாரமும் நம்முடைய யுத்தங்கள் கடினமாக, கடினமாகத் தோன்றுவதால், அவர் நம்மிடம் “கவலைப்படாதே, நீ என் சுவிசேஷத்திற்கு பாத்திரமானவள். நீ ஒரு அழகான மற்றும் மகிழ்ச்சியான காரியமாய் இருக்கிறாய். இந்த வாழ்க்கையின் சோதனைகளாலும், பரிசோதனைகளாலும் சத்துருவை நீங்கள் ஜெயகொள்ளும்போது நான் உன்னை கவனிக்க விரும்புகிறேன்” என்று மிகவும் இனிமையாகப் பேசுவதைக் கேட்க வெறுமனே இயங்கு பொத்தானை அழுத்துகிறோம்.
உங்கள் அன்பின் பிரயாசத்தை நான் காண்கிறேன்; இது எனக்கு சேவை செய்ய உங்களுடைய ஜீவியத்தின் உன்னத அழைப்பாக உள்ளது. உங்களுக்கு என்னுடைய சத்தமாக இருக்கும்படி நான் அனுப்பும் என்னுடைய பலமுள்ள தூதனை நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே அவரை அடையாளங் கண்டு கொள்வீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்:
கொடிதான ஓநாய்கள் சுற்றி வந்து சமமான வெளிப்பாட்டைக் கோர முயற்சிக்கும்போது நீங்கள் எப்படி வஞ்சிக்கப்படமாட்டீர்கள். ஒரு கணம் கூட அல்ல, ஒரு இம்மியளவினாலும் அல்ல, நீங்கள் என் வார்த்தையிலிருந்து விலகமாட்டீர்கள். நீங்கள் என்னுடைய வார்த்தையோடும், என்னுடைய சத்தத்தோடும் தரித்திருப்பீர்கள்.
ஏதேன் தோட்டத்தில் தொடங்கிய உண்மையான திராட்சை செடியும் கள்ள திராட்சை செடியும் எப்படி காலங்களினூடாக ஒன்றாக வளரும் என்று என் வார்த்தையை நான் உங்களுக்கு வெளிப்படுத்தும்போது நீங்கள் உணர்வீர்கள்.
ஆரம்பகால சபையில் ஆரம்பித்தது ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடரும். முதல் சபைக் காலத்தில், சாத்தானின் கள்ள திராட்சை செடி எப்படி ஊடுருவி, சபை மக்களை அவனுடைய நிக்கொலாய் ஆவியால் கைப்பற்றும். ஆனால் என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாகிய, நீங்கள் மாத்திரமே வஞ்சிக்கப்பட மாட்டீர்கள் என்பதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன்.
இந்த வாரம், சர்பத்தின் வித்தைக் குறித்த பெரிய இரகசியத்தை வெளிப்படுத்துவதன் மூலம் என்னுடைய வார்த்தையை உன்னில் படிகமாக்குவேன். ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு எல்லா விவரங்களிலும் வெளிப்படுத்துவேன்; மனித இனத்தில் சாத்தான் எப்படி கலந்தான்.
ஆதாமின் வீழ்ச்சியால் இதுவரை அணுக முடியாத ஏதேன் தோட்டத்தில் உள்ள ஜீவ விருட்சமாகிய நான், என்னுடைய ஜெயங்கொள்பவர்களாகிய, உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அடையாளம் காணும்போது, அது அப்படிப்பட்ட ஒரு சிலிர்ப்பான சிந்தனையாக இருக்கும்.
இது உங்களுடைய பலனாக இருக்கும். நான் தேவனுடைய பரதீசின் சிலாக்கியத்தையும்; என்னுடன் ஒரு நிலையான ஐக்கியத்தையும் உங்களுக்கு அளிப்பேன். நீங்கள் என்னை விட்டு ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டீர்கள். நான் எங்கு சென்றாலும், என் மணவாட்டியாகிய, நீங்கள் செல்வீர்கள். என்னுடையததை, நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன், என் அன்பே.
நாம் இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது நம்முடைய இதயம் நமக்குள் எப்படி ஓடுகிறது. அவருடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றம் விரைவில் நெருங்கி வருவதையும் மேலும் காத்திருக்க முடியாது என்பதையும் நாம் அறிவோம். நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய துரிதப்பட்டு, அவருடைய மகிமையைப் பகிர்ந்துகொள்வதற்கான நம்முடைய தகுதியை நிரூபிப்போம்.
ஏழு சபை காலங்களைப் பற்றிய எங்கள் மகத்தான படிப்பாய்வைத் தொடரும்போது, எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை அழைக்க விரும்புகிறேன், அங்கு தேவன் தம்முடைய வார்த்தையை அவருடைய அருளப்பட்ட வழியின் மூலமாக, தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம், நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணி ஜெஃபர்சன்வில் நேரம்.
60-1205 எபேசு சபையின் காலம்