
அன்புள்ள ஆவியினால்-நிரப்பப்பட்ட மணவாட்டியே,
ஒரே ஒரு மக்கள் குழு மாத்திரமே உண்டு; இந்த கடைசி காலத்தில் ஆவியானவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்கக்கூடிய ஒரு விசேஷித்த மக்கள் குழுவினர்; அது இந்த காலத்திற்கான வெளிப்பாட்டை பெற்றிருக்கிற ஒரு விசேஷித்த குழுவாகும். அந்தக் குழு தேவனுடையது. கேட்க முடியாத குழு தேவனுடையதல்ல.
ஆவியானவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்கக்கூடிய அந்த குழு கேட்டு உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறது. நாமே தேவனுடைய ஆவியையுடையவர்களாக இருக்கிறோம். நாம் தேவனால் பிறந்து பரிசுத்த ஆவியினால் அபிஷேக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய காலத்திற்கான வெளிப்பாட்டை பெற்றிருக்கிற ஆவினால்-நிரப்பப்பட்ட அவருடைய மணவாட்டியாய் நாம் இருக்கிறோம்.
இயங்கு பொத்தானை அழுத்துவது நமக்கு என்ன பொருட்படுத்துகிறது? வெளிப்பாடு! அதை கேட்டு, பெற்றுக்கொண்டு, இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்டிருக்கிற வழியோடு தரித்திருப்பதாகும். அதே தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசுகிறது. அது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களிலும் ஆத்துமாக்களிலும் பேசிக் கொண்டிருக்கிறதாயுள்ளது.
பேசுவதற்கு அவருடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களை தேவன் உபயோகிக்கிறார் என்பதை நாம் அறிவோம், ஆனால் வில்லியம் மரியன் பிரான்ஹாமாகிய, அவருடைய ஏழாம் தூதனின் சத்தத்தை இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது இல்லை. அது பரிசுத்த ஆவியானவரால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாக இருக்கிறது. அவர் நமக்கும், உலகத்திற்கும் தேவனுடைய சத்தமாயும், தேவனுடைய தீர்க்கதரிசியாயும், தேவனுடைய மேய்ப்பராயும் இருக்கிறார்.
அவர் பேசும்போது, நாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூறுகிறோம்; ஏனென்றால் அது தேவன் தாமே நம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறதாகும். அவருடைய வார்த்தை மாத்திரமே வியாக்கியானம் தேவைப்படாத ஒரே வார்த்தையாக இருக்கிறது. அது தேவன் தம்முடைய சத்தத்தை அவருடைய மணவாட்டியினிடத்தில் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டிருப்பதாகும்.
அது தேவன் தாமே நம்மிடத்தில், ”என் பிள்ளைகளே, நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, ஆனால் நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். சிறு சிறு துகள்களாக தெரியும் தொலைவில் உள்ள விண்மீன் கூட்டத்தின் ஒரு துளிக்கு முன்னே; உங்களுடைய தேவனாக உங்களுக்கு நான் அறியப்படுவதற்கு முன்பே கூட, நான் உங்களை அறிந்திருந்தேன். நீங்கள் என்னுடைய சிந்தையில், என்னுடைய நித்திய சிந்தைகளில் இருந்தீர்கள். நீங்கள் என்னுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வித்தான மணவாட்டியாய் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்னுடைய நித்திய சிந்தைகளில் இருந்தபோதிலும், என்னுடைய நியமிக்கப்பட்ட மற்றும் ஆணையிடப்பட்ட காலம் வரை நான் உங்களை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால், நீங்கள் என்னுடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் என்னுடைய விசேஷித்த குழுவாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். மற்ற யாவரும் தவறிப் போயுள்ளனர், ஆனால் நீங்கள் தவறமாட்டீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.
நீங்கள் என்னுடைய தீர்க்கதரிசியுடன் தரித்திருக்கிறபடியினால் நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கேலி செய்யப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் என்னுடைய வார்த்தையிலிருந்து விலகாமல், என்னுடைய வார்த்தைகளைப் பேசும் என்னுடைய தீர்க்கதரிசிக்கு உத்தமமாகவும், உண்மையாகவும் இருக்கும் என்னுடைய உண்மையான திராட்சை செடி.
இன்னும் பலர் உண்மையாகக் கற்பிக்கப்படுகிறார்கள், ஆனால் என்னுடைய செய்தியாளர் மூலம் நான் உரைத்திருக்கிறதை மட்டும் பேசுவது எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் எப்போதும் கற்றுக் கொள்வதில்லை.
ஒரே சத்தத்தைக் கேட்பதற்கு நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஆவியானவர் தேவனுடைய சத்தமாயிருக்கிற ஒரே சத்தத்தை உடையவராய் இருக்கிறார்.
ஓ, அவருடைய செய்தியாளர்கள் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது எவ்வளவு முக்கியம், பின்னர் சபைகளுக்குச் கூற அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கூறுவது.
"என்னுடைய வார்த்தை எப்போதும் என் தீர்க்கதரிசிக்கு வந்துள்ளது, ஆனால் இந்த நாளில், நான் மணவாட்டியிடம் கூறினதில் எந்த தவறுகளுமே இல்லாதபடிக்கு பதிவு செய்யப்பட்ட என்னுடைய சத்தத்தைக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு தூக்கு நூல் மாத்திரமே உண்டு, ஒரே ஒரு கோல் மாத்திரமே உண்டு, அது என்னுடைய தூதன் மூலமாக நான் உரைத்த வார்த்தையாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் இருக்கிறது போலவே, என்னுடைய தீர்க்கதரிசி அந்த நாளுக்கான வார்த்தையாய் இருக்கிறார்.
ஒலிநாடாக்களும், அவருடைய சத்தமும், நமக்கு ஒரு காதல் கடிதமாயிருக்கிறது. நம்முடைய சோதனைகள், உபத்திரவங்கள் மற்றும் கஷ்டங்களின் மூலம் சத்துரு தொடர்ந்து நம்மைத் வீழ்த்த முயற்ச்சிக்கும்போது, அது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட அன்பேயல்லாமல் வேறொன்றுமில்லை என்று நமக்கு சொல்லும்படியாகவும், நாம் அசைக்கப்பட மாட்டோம் என்றே அவர் நம்மை தெரிந்து கொண்டார் என்றும் நமக்கு நிரூபிக்கும்படியாகவும் அவர் தம்முடைய பலமுள்ள தூதனை அனுப்பினார்.
நாம் சிறிது காலம் துன்பப்பட்ட பிறகு, அவர் நம்மை பரிபூரணமாக்கி, நிலைநிறுத்தி, பலப்படுத்துவார் என்பதே அவருடைய மகத்தான நோக்கமாயுள்ளது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவும் கூட அவருடைய பாடுகளால் பூரணப்படுத்தப்பட்டார் என்று அவர் நமக்குச் சொன்னார். என்னே ஒரு ஆசீர்வாதத்தை அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ஏனெனில், நம்முடைய துன்பத்தால், அவர் நம்மையும் பரிபூரணத்திற்குக் கொண்டுவருவார்.
நம்முடைய சோதனைகள் மற்றும் இன்னல்கள் மூலம் அவர் நமக்கு குணாதிசயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், நம்முடைய குணாதிசயம் துன்பம் இல்லாமல் உருவாக்கப்படவில்லை. எனவே, நம்முடைய துன்பம் நமக்கு ஒரு வெற்றியே தவிர, வெகுமதி அல்ல.
அவரிடம் நம்முடைய அன்பை நாம் எப்படி நிரூபிக்க முடியும்?
● அவர் கூறுகிறதை விசுவாசிப்பதன் மூலம்.
● அவருடைய வார்த்தையுடன் தரித்திருத்தல்.
● நம்முடைய சோதனைகள் மற்றும் உபத்திரவங்களின் மூலம் நம்மை சந்தோஷத்துடன் நடத்திக் கொள்ளுதல், அதாவது அவர், தம்முடைய மகத்தான ஞானத்தில், அதை நிறைவேற்ற அனுமதிக்கிறார்.
அவருடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் அவர் எவ்வாறு நம்முடைய ஆவியை உயர்த்துகிறார். அவருடைய சத்தம் நம்முடைய ஆத்துமாவை ஆறுதல்படுத்துகிறது. நாம் இயங்கு பொத்தானை அழுத்தி அவர் பேசுவதை கேட்கும்போது, நம்முடைய பாரங்கள் யாவும் அகன்றுவிடுகின்றன. நம்முடைய உபத்திரவங்கள் அனைத்திலும் நமக்காக என்னென்ன பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்கத் துவக்க முடியாது.
ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியே, உங்கள் ஒவ்வொருவருடனும் அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன். அவர் தம்முடைய வார்த்தையின் ஒரு வெளிப்பாட்டை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அறிவதில் என்னே சந்தோஷம் என்னுடைய இருதயத்தை நிரப்புகிறது. கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்குமளவுக்கு அது மிகவும் நெருக்கமாய் இருக்கும் என்று அவர் நமக்கு சொல்லும்போது, அவர் நமக்கு உண்மையான வெளிப்பாட்டை அளித்திருக்கிறார்.
60-1206-சிமிர்னா சபையின் காலம் என்ற செய்தியின் பரிபூரண வார்த்தையை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களோடு ஆவிக்குள்ளாகும்படி, வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்