
அன்புள்ள தேவனுடைய தகர்க்கப்பட முடியாத சேனையே,
பிதாவானவர் தெரிந்து கொண்டு, தம்மைப் பற்றிய உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்துள்ள நாமே; அவருடைய ஒரே ஒரு உண்மையான சபை. அவருடைய பெரிய கிரியைகளைச் செய்ய அவர் தெரிந்து கொண்டவர்கள். ஏனெனில், அவருடைய ஆவியின் மூலம், சாத்தானின் அந்திக்கிறிஸ்து ஆவியை நாம் பகுத்தறிந்து எதிர்த்து நிற்க முடியும். அவன் நமக்கு முன் வல்லமையற்றவனாக இருக்கிறான், ஏனென்றால் நாம் அவருடைய தகர்க்கப்பட முடியாத சேனை.
சாத்தான் எல்லா வெளிப்பாட்டையும் வெறுக்கிறான், ஆனால் நாம் அதை விரும்புகிறோம்; ஏனென்றால் நாம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை விரும்புகிறவர்கள். நம்முடைய ஜீவியங்களில் உள்ள அவருடைய உண்மையான வெளிப்பாடு மூலம், பாதாளத்தின் வாசல்கள் நமக்கு எதிராக மேற்கொள்ள முடியாது; நாம் சத்துருவை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பிசாசும் நம்முடைய காலடியில் இருக்கிறது. நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம், நாம் அவருடைய வார்த்தையாக இருப்பதால், வார்த்தையைப் பேச முடியும்.
ஏழு சபைக் காலங்களை நாம் படிக்கவும் கேட்கவும் வேண்டும் என்று கர்த்தர் என் இருதயத்தில் உணர்த்தினார். இது நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய விசேஷித்த வாரங்களாக இருக்கப் போகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அவருடைய ஜெயங்கொள்ளும் வல்லமையால் அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவார்.
இப்போதே அந்த நேரம். இப்போதே அந்தக் காலம். அவர் வெளிப்பாட்டின் மூலம் நமக்கு ஊக்கமளித்து, நம்மை உற்சாகப்படுத்தி, நம்மை உயிர்ப்பிப்பார், அது நம்முடைய ஆத்துமாக்களை அனல் மூட்டச் செய்யும்!!
இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பது ஒரு தீர்க்கதரிசன புத்தகம், இது ஒரு தீர்க்கதரிசன நுண்ணறிவு கொண்ட ஒரு குறிப்பிட்ட வகுப்பினரான, அவருடைய மணவாட்டியாகிய, நம்மால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர் தெரிந்து கொண்ட தூதனாகிய செய்தியாளனிடமிருந்து வரும் தேவனுடைய சத்தத்தை நீங்கள் படிக்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்பதை அறிய உண்மையான வெளிப்பாடு தேவைப்படுகிறது, இது நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிவுறுத்தலை வழங்குகிறது.
இது எல்லா காலங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களுக்காக யோவானுக்கு கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. முழு வேதாகமத்திலுமே ஒரு எழுத்தாளருக்கு தனிப்பட்ட முறையில் தோன்றியதன் மூலம் இயேசுவால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுதான்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-2, “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
தேவனால் தாமே எழுதப்பட்ட தேவனுடைய சிந்தனைகளைக் கொண்ட புத்தகமே வெளிப்படுத்தின விசேஷமாகும். ஆனால் அவர் தம்முடைய தூதன் மூலம் தம்முடைய ஊழியக்காரரான யோவானுக்கு அதை அனுப்பி வெளிப்படுத்தினார். யோவானுக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை; அவன் கண்டதையும், கேட்டதையும் எழுதினான்.
ஆனால் இன்றைக்கு, தேவன் தம்முடைய மணவாட்டிக்கு இந்த மாபெரும் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக தம்முடைய வல்லமையுள்ள தூதனை பூமிக்கு அனுப்பினார், எனவே எல்லா சபைக் காலங்களிலும் என்ன நடந்தது என்பதை நாம் படிக்கவும் கேட்கவும் முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் வார்த்தைக்கு உண்மையாகவும் உத்தமமாகவும் தரித்திருந்த அவருடைய சிறிய மந்தையை நாம் காணலாம்.
தேவன் தம்முடைய தூதன் மூலம் பேசி, இந்த கடைசி நாட்களில், அவருடைய ஏழாம் சபைக் கால தூதனின் சத்தம் முழங்கத் தொடங்கும் போது, பவுலுக்கு வெளிப்படுத்தினது போல தேவனுடைய இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார் என்று கூறினார். அந்த தீர்க்கதரிசியை அவருடைய நாமத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அந்த தீர்க்கதரிசியின் ஊழியத்தின் நன்மைகளைப் பெறுவார்கள்.
மகிமை, அந்த தீர்க்கதரிசியை அவருடைய சொந்த நாமத்தில் ஏற்றுக்கொண்ட தேவனுடைய இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும் மணவாட்டியாய் நாம் இருந்து கொண்டு. நன்மை பயக்கும் விளைவைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இது தேவனுடைய சத்தம் பேசி அவருடைய மணவாட்டியை வழிநடத்துவதாக நாம் விசுவாசிக்கிறோம்.
ஓ சபையே, வரும் வாரங்களில் நாம் என்ன படிக்கப் போகிறோம், கேட்கப் போகிறோம். அவருக்கு, நாம் அவருடைய பசும் பொன்னுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறோம். அவர் என்னவாக இருக்கிறாரோ, நாமும் அவ்வாறே இருக்கிறோம். நாம் அவருடைய உண்மையான திராட்சை செடி. நாம் ஜெயங்கொண்டுள்ளோம். நாம் பரிபூரணப்படுத்தப்பட்டு, ஸ்திரப்பட்டு, பலப்படுத்தப்பட்டுள்ளோம். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட அன்பால் தெரிந்து கொள்ளப்பட்டோம். பயப்பட ஒன்றுமில்லை. செய்தியாளரையும், அவருடைய செய்தியையும் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஜீவிக்கிற குழுவாய் நாம் இருக்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் நாம், “அவர் வழியில் தம்முடைய வார்த்தையைப் பேசி, வெளிப்படுத்துகிறபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிகிறதல்லவா,” என்று கூறிக்கொண்டே இருப்போம்.
நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உணரவும், தேவனுடைய வார்த்தையின் அதிக வெளிப்பாட்டைப் பெறவும் விரும்பினால், குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து முதிர்ச்சிடையவும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை பெறவும் விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் 60-1204M என்ற செய்தியின் பேரிலான எங்களுடைய மகத்தான ஆய்வினை நாங்கள் துவங்கும்போது எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் கேட்ட அத்தியாயத்தை, சபைக் காலப் புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் கேட்கும்படிக்கு அல்லது படிக்கும்படிக்கு உங்களை ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.