
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே,
இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக இந்த ஞாயிறு என்ன காத்திருக்கும்? பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்னவெல்லாம் வெளிப்படுத்துவார்? பரிபூரண உணருதலையே. நாம் இப்போது வெளிப்படுத்தல் மூலமும், மாதிரியோடு வேறுபடுத்தப்பட்ட எதிர் மாதிரி மூலமும், மூலப் பொருளின் நிழலின் மூலமாகவும் முழுமையாக புரிந்துகொள்வோம். இயேசுவே உண்மையான ஜீவ அப்பமாயிருக்கிறார். அவர் அதனுடைய முழுமையாய் இருக்கிறார். அவர் ஒரே தேவன். அவர் எபிரெயர் 13:8. நான் இருக்கிறவராயிருக்கிறேன் என்பவராக அவர் இருக்கிறார்.
கிறிஸ்து, மாம்சத்தில் தோன்றி, தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தியதன் மூலம், தம்மையே பலியாகக் கொண்டு நம்முடைய பாவங்களை ஒருமுறை நீக்கிவிட்டார்; ஆகையால் அவர் இப்போது நம்மை பரிபூரணமாக்கியுள்ளார். அவருடைய ஜீவன் நமக்குள் இருக்கிறது. அவருடைய இரத்தம் நம்மைச் சுத்திகரித்தது. அவருடைய ஆவி நம்மை நிரப்புகிறது. அவருடைய தழும்புகள் ஏற்கனவே நம்மைக் குணப்படுத்தியுள்ளன.
அவருடைய வார்த்தை நம்முடைய இருதயத்திலும் வாயிலும் இருக்கிறது. இது நம்முடைய ஜீவியங்களில் உள்ள கிறிஸ்து, வேறொன்றுமில்லை, ஏனெனில் அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர நம்முடைய ஜீவியங்களில் உள்ள அனைத்தும் முக்கியமற்றதாக மறைந்துவிடும்.
அவருடைய தெய்வீக ஆணையின் மூலம், அவருடைய மணவாட்டி யார் என்பதை அவர் சரியாக அறிந்திருந்தார் என்று அவர் நமக்குச் சொல்லும்போது நம் இருதயம் மகிழ்ச்சியால் நிரப்பப்படும். அவர் நம்மை எப்படி தெரிந்து கொண்டார். அவர் நம்மை அழைத்தார். அவர் நமக்காக மரித்தார். அவர் நமக்கான கிரையத்தை செலுத்தினார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள், அவருக்கு மாத்திரமே. அவர் பேசுகிறார், நாம் கீழ்ப்படிகிறோம், ஏனென்றால் அது நம்முடைய மகிழ்ச்சி. நாம் அவருடைய ஒரே சொத்து, அவருக்கு நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் நம்முடைய ராஜாதி ராஜா, நாம் அவருடைய ராஜ்யம். நாம் அவருடைய நித்திய உடைமை.
அவர் நம்மைப் பலப்படுத்தி, தம்முடைய வார்த்தையின் சத்தத்தினால் நம்மை ஒளிரச் செய்வார். அவர் ஆடுகளின் வாசல் என்பதை அவர் தெளிவாக விளக்கி வெளிப்படுத்துவார். அவர் ஆல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறார். அவர் பிதாவாகவும், அவர் குமாரனாகவும், அவர் பரிசுத்த ஆவியாகவும் இருக்கிறார். அவர் ஒருவரே, நாம் அவரோடும் அவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறோம்.
அவர் ஆபிரகாமுக்கு செய்தது போலவே, நாம் எந்த வாக்குத்தத்தத்தையும் பெற விரும்பினால், நாம் எவ்வாறு பொறுமையுடன் காத்திருந்து சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதன் மூலம். அவர் நமக்கும் பொறுமையைக் கற்பிப்பார்.
நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நாளை அவர் நமக்குத் தெளிவாகக் காண்பிப்பார். உலக ஆலோசனை சபை சங்க அசைவு எவ்வாறு அரசியல் ரீதியாக மிகவும் வலுவாக மாற, சட்டத்தில் இயற்றப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் அனைவரும் தன்னுடன் சேருமாறு அரசாங்கத்தால் அழுத்தம் உண்டாகி, அதனால் அவர்களுடைய ஆலோசனை சங்கத்தின் நேரடி அல்லது மறைமுக ஆதிக்கம் இருந்தாலொழிய எந்த ஜனங்களுமே சபைகளாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்.
ஸ்தாபனத்தின் அமைப்பில் தேவனை சேவித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணி, எத்தனை பேர் உடன் செல்வார்கள் என்பதை அவர் வெளிப்படுத்துவார். ஆனால் அவர் நமக்கு, “பயப்படாதே, மணவாட்டி வஞ்சிக்கப்படமாட்டாள், நாம் அவருடைய வார்த்தையோடும் அவருடைய சத்தத்தோடும் தரித்திருப்போம்” என்று சொல்லுகிறார்.
அவர் நம்மிடத்தில்: “பற்றிக் கொண்டிருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள், ஒருபோதும் விட்டு விடாதீர்கள், தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு ஆயுதமும், நான் உங்களுக்கு அளித்துள்ள ஒவ்வொரு வரமும் நம்முடைய உபயோகத்திற்காக உள்ளது. இனிய இருதயமே ஒரு போதும் திடனற்றுப் போக வேண்டாம், தொடர்ந்து மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருங்கள், ஏனென்றால் உங்களுடைய கணவனாகிய உங்களுடைய ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாகிய என்னால் நீங்கள் முடி சூட்டப்பட போகிறீர்கள்” என்று அவர் சொல்வதை கேட்பது எவ்வளவு உற்சாகமாயிருக்கும்.
நீங்கள் என்னுடைய உண்மையான சபையாயும்; உங்களுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிற என்னுடைய பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள். நீங்கள் புதிய ஆலயத்தில் தூண்களாயும்; மேற்கட்டுமானத்தை நிலைநிறுத்தும் அஸ்திபாரமாயுமிருப்பீர்கள். நான் உங்களை அப்போஸ்தலர்களுடனும் தீர்க்கதரிசிகளுடனும் ஜெயங்கொள்பவர்களாய் வைப்பேன், ஏனென்றால் நான் உங்களுக்கு என்னைக் குறித்த, என்னுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறேன்.
உலகத் தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்கள் அவருடைய ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன என்பதை அவர் நமக்கு தெளிவாக வெளிப்படுத்துவார். ஆகவே அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்க இரவும் பகலும் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருப்போம். நாம் கர்த்தரின் விசேஷித்த பராமரிப்பில் இருக்கிறோம்; நாம் அவருடைய மணவாட்டி.
அவருடைய நாமத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் ஒரு புதிய நாமத்தைப் பெறுவோம். அவர் நம்மைத் தம்மிடம் ஏற்றுக் கொள்ளும் போது அந்த நாமம் நமக்கு கொடுக்கப்படும். நாம் அவருடைய திருமதி இயேசு கிறிஸ்துவாக இருப்போம்.
புதிய எருசலேம் தன்னுடைய கணவருக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு மணவாட்டியாக பரலோகத்திலுள்ள தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது, இனி மரணமோ, துக்கமோ, அழுகையோ இருக்காது. முந்தினவைகள் ஒழிந்து போனதால் இனி வேதனை இருக்காது. தேவனுடைய அற்புதமான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாற்றம் முடிவுற்றுவிடும். ஆட்டுக்குட்டியும் அவருடைய மணவாட்டியும் தேவனுடைய அனைத்து பரிபூரணங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே, அதைப் பற்றிக் கனவு காணுங்கள். நீங்கள் எப்போதும் நினைத்ததை விட இது மிகவும் அற்புதமாக இருக்கும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நம்முடைய கணவர் இயேசு கிறிஸ்து, தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக இந்த எல்லா காரியங்களையும் நமக்கு சொல்லவிருப்பதால் எங்களுடன் சேர்ந்துகொள்ள வருமாறு ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: பிலதெல்பியா சபையின் காலம் 60-1210