
அன்புள்ள ஒலிநாடாவைக் கேட்கிற ஜனங்களே,
“ஒலிநாடாவைக் கேட்கிற ஜனங்கள்" என்று அழைக்கப்படுவதில் நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம். தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்பதன் மூலம் உலகம் முழுவதும் ஒன்றுபடுவோம் என்பதை அறிந்து ஒவ்வொரு வாரமும் நம்முடைய இதயங்கள் உற்சாகத்துடன் ஓடுகின்றன.
எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி, அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும்; அவருடைய பலமுள்ள ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறோம் என்றும் நாம் அறிவோம்.
நம்முடைய நாளுக்காக அவர் தெரிந்து கொண்ட செய்தியாளர் வில்லியம் மரியன் பிரான்ஹாம். அவர் உலகத்திற்கு தேவனுடைய தீபமாயிருந்து, தேவனுடைய ஒளியை பிரதிபலிக்கிறார். அவர் தன்னுடைய தூதனின் மூலமாக அவர் தெரிந்து கொண்ட சுத்தமான வார்த்தை மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய வார்த்தையைக் கவனமாகப் படிப்பதன் மூலம், வில்லியம் மரியன் பிரான்ஹாம், நம்முடைய நாளுக்காக அவருடைய வெளிப்பாட்டையும் ஊழியத்தையும் கொடுக்க அவர் தெரிந்து கொண்ட தூதன் என்பதை அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படுத்தினார். அவருடைய தூதனை, நம்முடைய நட்சத்திரத்தை, நாம் அவருடைய வலது கரத்தில் பார்க்கிறோம், அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தவும் அவருடைய மணவாட்டியை அழைக்கவும் அவர் அவருக்கு அதிகாரத்தை வழங்குகிறார்.
அவர் தன்னைப் பற்றிய முழு வெளிப்பாட்டையும் நமக்குத் தந்துள்ளார். பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஏழாவது தூதனின் ஜீவியத்தின் மூலம் தம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார்; நம்முடைய நாளுக்கான அவருடைய கண்களாய் இருக்கும்படி அவர் தெரிந்து கொண்ட தூதன்.
நாம் அவருடைய வார்த்தை மணவாட்டி என்றும், ஒவ்வொரு செய்தியிலும் நம்மைத் தம்மிடம் கொண்டு வருவதே அவருடைய நோக்கம் என்றும் அவர் நமக்கு சொல்லும்போது; நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே எப்படி கொழுந்துவிட்டு எரிகின்றன.
உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் எப்படியாய் நம்மை அவருக்குள் தெரிந்து கொண்டார் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு சொல்ல அவர் விரும்புகிறார். நாம் எப்படியாய் முன்னறிவிக்கப்பட்டு, அவரால் நேசிக்கப்பட்டோம்.
அவருடைய இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்றும், ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்புக்குள் வர முடியாது என்றும் அவர் நமக்கு சொல்வதை கேட்பதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம். நாம் ஒருபோதும் நியாயத்தீர்ப்பில் இருக்க முடியாது, ஏனென்றால் பாவத்தை நம்மீது சுமத்த முடியாது.
அவர் தம்முடைய பூமிக்குரிய தாவீதின் சிங்காசனத்தை எடுத்துக் கொள்ளும்போது, பூமி முழுவதையும் வல்லமையோடும் அதிகாரத்தோடும் அவர் பரலோகத்தில் செய்தது போலவே, நாம் எப்படியும் அவருடன் அமர்ந்து ஆளுகை செய்வோம். இந்த ஜீவியத்தின் சோதனை மற்றும் பரிசோதனைகள் அப்பொழுது ஒன்றுமற்றதாய் தென்படும்.
ஆனால் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் கூட அவர் எச்சரித்துள்ளார். காலங்காலமாக இரண்டு திராட்சைச் செடிகளுமே அருகருகே வளர்ந்தன. சத்துரு எப்போதுமே எப்படி மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளான்; மிகவும் வஞ்சிப்பதற்காகவே. யூதாஸ் கூட தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, சத்தியத்தில் அறிவுறுத்தப்பட்டான். அவன் இரகசியங்களைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொண்டான். அவன் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு வல்லமையான ஊழியத்தை உடையவனாயிருந்து இயேசுவின் நாமத்தில் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, பிசாசுகளை துரத்தினான். ஆனால் அவனால் முடிவு பரியந்தம் செல்ல முடியவில்லை.
உங்களால் வார்த்தையின் ஒரு பகுதியை மட்டும் சேர்த்துக் கொள்ள முடியாது, எல்லா வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏறக்குறைய நூறு சதவிகிதம் தேவனுடைய காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்களாகத் தோன்றுகிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அப்படி இல்லை.
அவர் தன்னை முழு சபையுடனும் அல்லது எபேசியர் நான்கின் ஐந்து வகையான ஊழியத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டது போதாது என்று அவர் கூறினார். ஒவ்வொரு காலத்திலும் சபையானது வழிதவறிச் செல்கிறது என்றும், அது சபை மக்கள் மட்டுமல்ல, ஆனால் மதகுருமார் குழுவும் - மேய்ப்பர்களும் ஆடுகளைப் போலவே தவறாய் இருக்கிறார்கள் என்று நம்மை எச்சரித்தார்.
எனவே அவருடைய சொந்த சித்தத்தின் உறுதியான ஆலோசனையின் மூலம், அவருடைய ஜனங்களை திரும்பவும் சத்தியத்திற்கும் நிறைவான சத்தியத்தின் வல்லமைக்கும் வழிநடத்த அவர் தம்முடைய ஏழாம் தூதனின் ஊழியத்தில் பிரதான மேய்ப்பராக நம்முடைய காலத்தில் தன்னைக் காட்சியில் கொண்டுவந்தார்.
அவர் அவருடைய செய்தியாளரில் இருக்கிறார், செய்தியாளர் அவருடைய வார்த்தையினால் கர்த்தரை பின்பற்றுகிற ஒருவராய் இருக்கிறபடியால், தேவனுடைய பரிபூரணத்தை கொண்டிருப்பவன் செய்தியாளரை பின்பற்றுவான்.
நான் தேவனுடைய பரிபூரணத்தை உடையவனாய் இருந்து அவருடைய செய்தியாளரை பின்பற்ற விரும்புகிறேன். எனவே, நம்மைப் பொறுத்தவரை, பிரான்ஹாம் கூடாரம், செய்தியாளர் கர்த்தரை அவருடைய வார்த்தையின் மூலம் பின்பற்றுவது போல, அவரைப் பின்பற்றுவதற்கான ஒரே வழி, இயங்கு பொத்தானை அழுத்தி பிழையற்ற வார்த்தைகளை நம்மிடத்தில் பேசுகிற சுத்தமான தேவனுடைய சத்தத்தை கேட்பதாகும்.
நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை யூகிக்கவோ அல்லது சரிபார்க்கவோ தேவையில்லை, நாம் இயங்கு பொத்தானை அழுத்தி நாம் கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்.
ஒரு நாள் அதிகாலையில் வானொலி சத்தத்தில் (வாய்ஸ் ரேடியோவில்) சகோதரன் பிரான்ஹாம் பின்வரும் மேற்கோளைச் சொல்வதைக் கேட்டேன். நான் அதைக் கேட்டதும், இதைத்தான் நான்/நாம் இப்படித்தான் சொல்கிறேன் என்று என் மனதில் தோன்றியது:
நாம் இயங்கு பொத்தானை அழுத்தி ஒலிநாடாக்களைக் கேட்கிறோம்.
அது எனக்கு எங்களுடைய விசுவாசத்தின் ஒரு அறிக்கை போன்று தென்பட்டது.
அந்த காரணத்தினால் தான் நான் இந்த செய்தியில் விசுவாசம் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் இது தேவனுடைய வார்த்தையில் இருந்து வருகிறது. தேவனுடைய வார்த்தைக்கு புறம்பான எந்த காரியத்தையும் நான் நம்புகிறதில்லை. அது அவ்வாறு இருக்கலாம், ஆனால் இன்னமும் நான் தேவன் கூறினதோடு தரித்திருப்பேன், அப்பொழுது நான் சரியாக இருக்கிறேன் என்பது நிச்சயமாக இருக்கும். இப்போது, தேவன் விரும்புகிறதை அவரால் செய்ய முடியும். அவர் தேவனாய் இருக்கிறார். ஆனால் நான் அவருடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் வரை, அது சரியாயிருக்கும் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்.
மகிமை, அவர் அதை மிகப் பரிபூரணமாக கூறினார். மற்ற எல்லா ஊழியங்களும் இருக்கலாம், ஏனென்றால் தேவன் யாரை விரும்புகிறோரோ, அவர் விரும்புகிறதை அவரால் செய்ய முடியும், அவர் தேவனாய் இருக்கிறார். நான் அவருடைய வார்த்தையோடு, அவருடைய சத்தத்தோடு, ஒலிநாடாக்களோடு தரித்திருக்கும் வரை சரியாய் இருக்கிறது என்று அப்பொழுதே நான் அறிந்து கொள்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்.
என்னுடைய கடிதங்களை பலர் படித்து, நான் கூறுவதையும், நம்முடைய சபைக்கான கர்த்தருடைய சித்தம் என்று நான் விசுவாசிப்பதையும் தவறாகப் புரிந்துகொள்வதை நான் அறிவேன். தீர்க்கதரிசி கூறியது போல் நான் மீண்டும் ஒருமுறை தாழ்மையுடன் கூறுகிறேன்: “இந்த கடிதங்கள் என் சபைக்கு மட்டுமே. பிரான்ஹாம் கூடாரத்தை தங்கள் சபை என்று அழைக்க வாஞ்சிக்கிறவர்களுக்கே. ஒலிநாடாவை கேட்கிற ஜனங்கள் என்று அழைக்கப்பட்டு அடையாளம் கண்டு கொள்ளப்பட விரும்புகிறவர்களுக்கே.
நான் என்ன கூறுகிறேன் என்பதையும், விசுவாசிக்கிறேன் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றால், என்னுடைய சகோதர சகோதரிகளே அது 100% நல்லது. என்னுடைய கடிதங்கள் உங்களுக்கோ அல்லது உங்களுக்கும் அல்லது உங்களுடைய சபைகளுக்கும் விரோதமானதாக பொருட்படுத்தப்பட்டதல்ல. உங்களுடைய சபை ராஜாதிபத்தியமுடையது, செய்யும்படி வழிநடத்தப்படுவதை நீங்கள் உணரும் பொழுது நீங்கள் அதை செய்ய வேண்டும், எனவே எங்களுடையதும் அவ்வாறு தான், நமக்காக தேவன் அருளியிருக்கிற வழி என்றும் இதைத்தான் நாங்கள் விசுவாசிக்கிறோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் ஒன்றிணைவதற்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வாரம், நம்முடைய காலத்திற்கான தேவனுடைய நட்சத்திரம், வில்லியம் மரியன் பிரான்ஹாம், 60-1209 சர்தை சபையின் காலம் என்ற செய்தியைக் கொண்டு வருவார்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்