
அன்பான தெரிந்து கொள்ளப் பட்டவர்களே,
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
ஊழியக்காரர்களே, தாமதமாகும் முன் தேவனுடைய தூதனுக்கு உங்கள் வாசல்களைத் திறவுங்கள். ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் தேவனுடைய சத்தத்தை உங்களுடைய பிரசங்க பீடங்களில் மீண்டும் கொண்டு வாருங்கள். இது பிழையற்ற வார்த்தைகளுடன் நம்முடைய நாளுக்கான ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாயுள்ளது. இது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள சத்தமாயுள்ளது. இது மாத்திரமே மணவாட்டி யாவரும் ஆமென் என்று சொல்லக்கூடிய சத்தமாயுள்ளது.
இது எல்லா காலத்திலும் மிக மகத்தான காலம. தம்முடைய கிருபையின் நாட்கள் முடிவடையும் போது இயேசு தம்மைப் பற்றிய விளக்கத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார். நேரமானது முடிவுக்கு வந்துவிட்டது. இந்த கடைசி காலத்தில் அவர் தம்முடைய குணாதிசயங்களை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் தம்முடைய சொந்த மகிமையான உன்னத தெய்வீக தன்மையை பற்றிய ஒரு இறுதிப் பார்வையை நமக்கு அளித்துள்ளார். இந்தக் காலம் அவரைக் குறித்த தலைக்கல் வெளிப்பாடாயுள்ளது.
தேவன் இந்த லவோதிக்கேயா காலத்தில் வந்து மானிட மாம்சத்தின் மூலமாகப் பேசினார். அவருடைய வார்த்தை மணவாட்டியை வழிநடத்தவும் பரிபூரணப்படுத்தவும் அவருடைய சத்தம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொந்த சத்தத்தைத் தவிர, அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்தக் கூடிய வேறு சத்தம் எதுவும் இல்லை.
இந்த கடைசி காலத்தில், ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய சத்தம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது; சபைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் ஒலிநாடாக்களை இயக்கமாட்டார்கள். எனவே தேவன், “நான் உங்கள் அனைவருக்கும் எதிராகப் போகிறேன். நான் உங்களை என் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடுவேன். இதுவே முடிவு” என்று கூறுகிறார்.
“ஏனென்றால் இந்த ஏழு சபை காலங்களிலுமே, மனிதர்கள் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடைய வார்த்தைக்கே மதிப்பு கொடுக்கிறதைத் தவிர, வேறொன்றையுமே நான் காணாதிருக்கிறேன். ஆகையால் நான் இந்த முடிவு காலத்திலே உங்களை என்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இது முடிவு பெற்றாயிற்று. நான் உங்களிடத்தில் சரியாக பேசப் போகிறேன். ஆம், நான் இங்கே சபையின் மத்தியில் இருக்கிறேன். உண்மையும், சத்தியமும், ஆமெனின் தேவனானவர் தம்மை வெளிப்படுத்துவார். அது என்னுடைய தீர்க்கதரிசி மூலமாய் இருக்கும்" என்கிறார்.
முன்பு இருந்ததைப் போலவே, ஆகாபின் நாட்களில் தங்களுடைய மூதாதையர்கள் செய்ததைப் போன்ற முறைமைக்கே அவர்களும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நானூறு பேராயிருந்தனர், அவர்கள் அனைவரும் கருத்தொற்றுமையில் இருந்தனர்; அவர்கள் அனைவரும் ஒரே காரியத்தையே கூறி, மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் ஒரு தீர்க்கதரிசி, சரியாக ஒருவரே சரியானவராயிருந்தார், மற்ற அனைவரும் தவறாயிருந்தனர், ஏனென்றால் தேவன் ஒருவரிடம் மட்டுமே வெளிப்பாட்டை ஒப்படைத்திருந்தார்.
இது எல்லா ஊழியங்களும் பொய்யாயுள்ளன என்றும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறவில்லை. ஊழியத்திற்கான ஒரு அழைப்போடுள்ள ஒரு மனிதனால் பிரசங்கிக்கவோ அல்லது கற்பிக்கவோ முடியாது என்று நான் கூறவில்லை. நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக இருக்கிறபடியால், மணவாட்டிக்கு தேவனுடைய சத்தத்தை, ஒலிநாடாக்களை இயக்குவதே உண்மையான ஐந்து வகையான ஊழியம் என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே சத்தமாக உள்ளது.
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனென்றால் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
நிச்சயமாகவே இன்றைக்கான சரியான வழியை நீங்கள் எப்படி அறிவீர்கள்? விசுவாசிகளிடையே இப்படி ஒரு பிரிவினை உள்ளது. ஐந்து வகையான ஊழியம் மணவாட்டியைப் பரிபூரணபடுத்தும் என்று ஒரு குழுவினர் கூறுகிறார்கள், மற்றொரு குழுவினர் இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் என்று கூறுகின்றனர். நாம் பிளவுபடக் கூடாது; நாம் ஒரே மணவாட்டியாக ஒன்றுபட வேண்டும். சரியான பதில் என்ன?
உங்கள் இருதயங்களை ஒன்றாகத் திறந்து, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் மணவாட்டிக்கு என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்போமாக. ஏனென்றால் சகோதரன் பிரான்ஹாம் அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்று நாம் யாவரும் ஒப்புக்கொள்கிறோம்.
மனித இயல்பின் அடிப் படையில், எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தில் ஒரு சிறிய குறிப்புகளில்கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர். அப்படியானால் இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப் போகின்றபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்? அதாவது பவுலின் நாட்களில் பரிபூரணமாக அளிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையை நாம் மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்வோம் என்பதே அதன் பொருளாகும். அதை யார் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நான் உங்களுக்கு கூறவுள்ளேன். அது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட அல்லது ஏனோக்கு முதல் இந்நாள் வரையிலும் எந்த தீர்க்கதரிசியும் ரூபகாரப்படுத்தப்படாத விதத்தில் இன்னும் அதிகமாக முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும். ஏனெனில், இந்த மனிதன் தலைக்கல் தீர்க்கதரிசன ஊழியத்தை அவசியம் பெற்றிருப்பார். தேவன் அதை அவருக்குத் தெரிவிப்பார். அவர் தனக்காக பேசவேண்டிய அவசியமே இருக்காது. தேவன் அடையாளத்தின் சத்தத்தினால் அவருக்காக பேசுவார். ஆமென்.
எனவே, அவருடைய தூதனால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்துகொள்ளப்படுகிறது.
தேவன் தம்முடைய ஏழாவது தூதனாகிய செய்தியாளரையும், அவருடைய செய்தியைப் பற்றியும் வேறு என்ன கூறினார்?
● அவர் தேவன் கூறுவதை மாத்திரமே கேட்பார்.
● அவர், "கர்த்தர் உரைக்கிறதாவதை” உடையவராயிருந்து, தேவனுக்காகவே பேசுவார்.
● அவர் தேவனுக்காக பேசும் சத்தமாயிருப்பார்.
● அவர் மல்கியா 4:6-ல் உரைக்கப்பட்டிருக்கிறபடியே, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.
● அவர் கடைசி காலத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை திருப்பிக் கொண்டு வருவார். பவுல் கூறினதுபோன்ற சரியான சத்தியத்தைக் கூறுகிற ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கே அவர்கள் செவி கொடுப்பர்.
● அவர்கள் கொண்டிருந்த சத்தியத்தைப் போன்ற சத்தியத்தையே அவர் திரும்ப அளிப்பார்.
பின்னர் அவர் நம்மைப் பற்றி என்ன கூறினார்?
அந்த நாளில் அவரோடுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை உண்மையாய் வெளிப்படுத்துகிறவர்களுமாயும், அவருடைய சரீரமாயும், அவருடைய சத்தமாயுமிருந்து, அவருடைய கிரியை களைச் செய்கிறவர்களுமாயிருப்பர். அல்லேலூயா! உங்களுக்கு அது புரிகின்றதா?
நீங்கள் இன்னும் ஏதேனும் சந்தேகத்தில் இருந்தால், தேவனுடைய ஆவியினால் உங்களை நிரப்பவும், உங்களை வழிநடத்தவும் அவரிடம் கேளுங்கள், ஏனென்றால் "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஏமாற்றப்பட முடியாது" என்று வார்த்தை கூறுகிறது. நீங்கள் மணவாட்டியாயிருந்தால் எந்த மனிதனும் உங்களை ஏமாற்ற முடியாது.
மெத்தோடிஸ்டுகள் தவறிப்போனபோது, தேவன் மற்றவர்களை எழுப்பினார். எனவே இது காலா காலங்களினூடாக இவ்வாறு நிகழ்ந்து வந்து, இந்தக் கடைசி நாளில் தேசத்தில் மீண்டும் மற்றொரு ஜனங்கள் இந்த கடைசி காலத்திற்கென கடைசி சத்தமாய் இருக்கும் அவர்களுடைய செய்தியாளனின் கீழ் இருக்கின்றனர்.
ஆம் ஐயா. இனி சபையானது "தேவனுக்காக பரிந்து பேசுகிற சத்தமாய்" இருக்காது. அது தனக்கு சொந்தமானதையே பேசுகிறதாயிருக்கிறது. ஆகையால் தேவன் அவளை விட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கிறார். எனவே அவர் அவளை தீர்க்கதரிசியினூடாகவும், மணவாட்டியினூடாகவும் கலங்கச் செய்வார். ஏனென்றால் தேவனுடைய சத்தம் அவளுக்குள்ளாக இருக்கும். ஆம் அது அவ்வாறே இருக்கிறது, ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரம் 17ம் வசனத்தில், “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்" என்றே அது கூறுகிறது. இன்னும் ஒருவிசை இந்த உலகமானது பெந்தேகொஸ்தே நாளில் தேவனிடத்திலிருந்து நேரடியாக தேவனுடைய சத்தத்தைக் கேட்டதுபோல கேட்கும்; ஆனால் உண்மையிலேயே அந்த வார்த்தையான மணவாட்டியானவள் முதலாம் காலத்தில் புறக்கணிக்கப்பட்டது போலவே புறக்கணிக்கப்படுவாள்.
மணவாட்டிக்கு ஒரு சத்தம் உள்ளது, ஆனால் அது ஒலிநாடாக்களில் உள்ளதை மட்டுமே கூறும். ஏனென்றால் அந்த சத்தம் நேரடியாக தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்கிறது, எனவே அது பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்து கொள்ளப்பட்டதால் அதற்கு வியாக்கியானம் தேவையில்லை.
லவோதிக்கேயா சபையின் காலம் 60-1211E என்ற செய்தியை அந்த சத்தம் எங்களுக்கு வெளிப்படுத்த நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்