அன்புள்ள நிபந்தனையற்ற மணவாட்டியே,
கர்த்தர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தினபடியால் கடந்த வாரம் முகாமில் அவர் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை நமக்குத் தந்தார். அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் நிரூபித்தார், அதுவே நம்முடைய முற்றிலுமானதாய் இருக்கிறது: அவருடைய வார்த்தை, இந்த செய்தி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம், அவை யாவும் மாறாததாயிருக்கின்றன, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
பிசாசு செய்தியை செய்தியாளனிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதை நாம் கேள்விப்பட்டோம், ஆனால் கர்த்தராகிய இயேசுவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக, தேவன் தாமே தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் பேசி நமக்குச் சொன்னார்:
உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியுடன், தேவனால் நியமிக்கப்பட்டு, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதன் வரும்போது, செய்தியும் அதைக் கொண்டு வந்த தூதனும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று நாம் கண்டறிகிறோம். ஏனென்றால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்திக்கு, வார்த்தைக்கு வார்த்தை, அடையாளமாக இருக்கத்தக்கதாக அனுப்பப்பட்டிருக்கிறான், ஆகவே அவனும் அவனுடைய செய்தியும் ஒன்றாக உள்ளது.
அதன் பின்னர் நாம் ஒலிநாடாக்களை கேட்டுக் கொண்டிருக்கும்போது எந்த பூச்சியையும் பிடிக்கும்படி ஒரு வடிகட்டும் கரந்தைத் துணி நமக்குத் தேவையில்லை என்று அவர் நமக்குக் சொன்னார், ஏனென்றால் இந்தச் செய்தியில் பூச்சிகளோ அல்லது பூச்சி சாறுகளோ இல்லை. அது எப்போதும் தூய்மையாகவும் சுத்தமாகவும் பாயும் அவருடைய ஆர்ட்டீசியன் ஊற்றாகும். எப்போதும் பொங்கி எழும்பிக் கொண்டு, ஒருபோதும் வற்றிப் போகாமல், தொடர்ந்து தள்ளிக் கொண்டே தள்ளிக்கொண்டேயிருந்து, நமக்கு அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டை அதிக அதிகமாகத் தருகிறது.
அவர் நம்முடனான அவருடைய உடன்படிக்கை மறுக்க முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படாதது, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நிபந்தனையற்றது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர் நமக்கு நினைவூட்டினார்.
அது அன்பு, ஆதரவு அல்லது சரணடைதல் என எதுவாக இருந்தாலும், ஏதாவது நிபந்தனையற்றதாக இருந்தால் அது முற்றிலுமானது மற்றும் எந்த சிறப்பு விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல: வேறு என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அது நடந்தேதீரும்.
அதன்பின்னர் அவர் மனதில் பதியச் செய்ய விரும்பினார், எனவே இந்த நாளில் அவருடைய வேதவாக்கியங்கள் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அவர் நம்மிடத்தில் சொன்னார்.
கிழக்கில் உதிக்கும் அதே—அதே சூ-ரி-ய-னே மேற்கில் அதே சூ-ரி-ய-னா-க அஸ்தமிக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்திலும் அதே தேவ கு-மா-ர-னாய் இருக்கிறார், இன்றிரவும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற தம்மை, சபையின் மத்தியில் அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். சாயங்கால குமாரனின் வெளிச்சம் வந்துவிட்டது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நமக்கு முன்பாக நிறைவேறியுள்ளது.
அவர் வாக்களித்தபடியே ஒரு மணவாட்டியை வெளியே அழைக்கும்படி, நம்முடைய நாளில் மாம்ச சரீரத்தில் மீண்டும் மனுஷகுமாரன் வந்துள்ளார். அது நம்மிடத்தில் நேரடியாக பேசிக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவாகும், அதற்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை. நமக்குத் தேவையானதெல்லாம், நாம் விரும்புவதெல்லாம், தேவனிடத்திலிருந்து தாமே வருகிற ஒலிநாடாக்களில் பேசுகிற தேவனுடைய சத்தமேயாகும்.
இது உண்மையாக்கப்பட்ட வார்த்தையின் வெளிப்படுத்துதலான வெளிப்பாடாகும். நாம் அந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவரைக் குறித்த ரகசியத்தின் வெளிப்பாடு.
மணவாட்டி என்னே ஒரு மகிமையான நேரத்தை உடையவளாயிருந்து கொண்டு, குமாரனின் பிரசன்னத்தில் கிடந்து, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறாள். கோதுமை மீண்டும் கோதுமைக்குத் திரும்பிவிட்டது, நம்மிடையே புளித்த மா ஏதுமில்லை. சுத்தமான தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசிக்கொண்டு, வனைந்து கொண்டு, வார்த்தையான, கிறிஸ்துவின் சாயலுக்குள் நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம், அவருடைய தன்மையாக இந்த மகத்தான காலத்தில், உலக சரித்திரத்தின் இந்த மகத்தான காலத்தில் தோன்றும்படியாக அவர் முன்குறித்தார். நாம் தவறிப்போக மாட்டோம், நாம் ஒப்புரவாகமாட்டோம் என்றும், ஆனால் நாம் அவருடைய உண்மையான, உண்மையுள்ள வார்த்தை மனவாட்டியாக, வரப்போவதாக அவர் வாக்களித்த ஆபிரகாமின் ராஜிரீக மேம்பட்ட வித்தாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
எடுத்துக்கொள்ளப்படுதல் சமீபித்து விட்டது. நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. குமாரனுடைய பிரசன்னத்தில் அமர்ந்து, அவருடைய மணவாட்டி உடையான அவருடைய சத்தத்தை கேட்டு, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட அவருடைய மனவாட்டிக்காக அவர் வருகிறார். நம்மோடு இருக்கும்படி வாஞ்சித்துக் கொண்டு, காலத்தின் திரைக்கப்பால் காத்துக் கொண்டிருக்கிற நம்முடைய அன்பார்ந்தவர்களை நாம் சீக்கிரத்தில் காணத் துவங்குவோம்.
ஒலிநாடாக்கள் அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளன. இந்த ஒலிநாடாக்கள் மாத்திரமே அவருடைய மனவாட்டியை ஒன்றிணைக்கும். இந்த ஒலிநாடாக்கள் அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கின்றன.
ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் 65-1204 என்ற செய்தியில் சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை குறித்த யாவற்றையும் நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான எங்களோடு நீங்கள் வந்து ஒன்றிணையும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே, நாம் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-1128E பனி வெண்புறா சிறகுகள் மேல் என்ற செய்தியை கேட்பதற்கு ஒன்றுசேருவோமாக.
சகோ.ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான இயேசு கிறிஸ்துவின் குடும்பமே,
உலகம் முழுவதும் கிறிஸ்துவின் மணவாட்டியுடன் இதுவரை இல்லாத அளவுக்கு ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் கேள்விப்பட்ட மற்றும் பார்க்க விரும்பியுள்ள காரியங்கள் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசுத்த ஆவியானவர் செய்வதாக கூறினதுபோல தம்முடைய மணவாட்டியை, இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியான ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தின மூலமாக மாத்திரமே அவர் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.
முன்பு இல்லாத அளவுக்கு அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்திக்கொண்டும், உறுதிப்படுத்திக்கொண்டுமிருக்கிறார்.ஒரு ஆர்டீசியன் ஊற்றைப்போல, வெளிப்படுத்தல் நமக்குள்ளாகப் பொங்கிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது அவருடைய சபையில் நடந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது. அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே. அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து... அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தப்பட்டு நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசி கூறினது போலவே, காரியங்கள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன, நம்மால் அதைத் கணக்கு வைக்கக் கூட முடியவில்லை...மகிமை!!!
நமது நேரம் வந்துவிட்டது. வேதம் நிறைவற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாம்சம் வார்த்தையாக மாறிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசி நடக்கும் என்று. கூறியுள்ளது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஏன் நமக்குத்தானா?
புளித்த மா இல்லை, விளங்காத சத்தம் இல்லை, மனிதனுடைய வியாக்கியானம் நமக்கு மத்தியிலே தேவைப்படவில்லை. தேவன் உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறபோது அவருடைய வாயிலிருந்து வருகிற சுத்தமான பரிபூரண வார்த்தைக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது நாம் அதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையைக் காண்கிறோம், லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்கான இந்த மற்ற வாக்குத்தத்தங்களும் மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவைப்படுகிறதில்லை.
மணவாட்டி, அதைவிட எளிமையாக வேறு எதையும் தெளிவாகத் பெற்றுக்கொள்ள முடியாது. எல்லாம் நம்முடைய சொந்த கண்களினால் காணும்படிக்கு, தம்முடைய சொந்த வார்த்தையை பேசி வியாக்கியானித்து, அதை ஒலிநாடாக்களில் வைத்து, மானிட சரீரத்தில் தம்முடைய மணவாட்டிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிற அது தேவனாயுள்ளது. தேவனால் தாமே பரிபூரண வார்த்தையானது உரைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது, எனவே அதற்கு மனிதனின் எந்த வியாக்கியானமும் தேவையில்லை.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் நேரடியாக ஒலிநாடாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார்.
● தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை ஒலிநாடாக்களில் வியாக்கியானிக்கிறார்.
● தேவன் தம்மை ஒலிநாடாக்களில் வெளிப்படுத்துகிறார்.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உங்களுக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை என்று சொல்கிறார். என்னுடைய மணவாட்டிக்குத் தேவைப்படுகிறதெல்லாம் ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தையே.
நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் இங்கிருந்து சென்றபிறகு, பதரை விட்டுக் கடந்துபோக இப்போது ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் கோதுமை மணிக்குள் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் குமாரனுடைய சமூகத்தில் இருங்கள். நான் சொல்லியிருப்பவைகளோடு கூட்ட வேண்டாம். நான் சொல்லியிருப்பவைகளை எடுத்துப் போடவேண்டாம். ஏனென்றால் பிதா எனக்குக் கொடுத்திருக்கிறபடியே எனக்குத் தெரிந்திருக்கிற வரை நான் சத்தியத்தைப் பேசுகிறேன். புரிகிறதா?
தேவன் செய்யும்படி நமக்குக் கட்டளையிட்டபடி மணவாட்டி செய்வதற்கான ஒரே பரிபூரண வழியை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளார். இன்று வரை இது ஒருபோதும் சாத்தியமில்லை. யூகிக்கவோ, ஆச்சரியப்படவோ, ஏதாவது சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ அல்லது வியாக்கியானிக்கப்படவோ உள்ளதா என்ற கேள்வியே இல்லை. மணவாட்டிக்கு உண்மையான வெளிப்பாடு வழங்கப்பட்டுள்ளது: ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண வழியாய் உள்ளது.
ஒரு வேளை, நான் அதை மீண்டும் கூறட்டும். என்னுடைய வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கேயன்றி, மற்றவர்களுக்கு அல்ல. மணவாட்டிக்கு ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் தேவையில்லை.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருமுறை உண்மையாகவே... அசலான வார்த்தை (வார்த்தை, இயேசு) உங்களுக்குள் வருகிறது, அப்போது, சகோதரனே... செய்தியானது அப்போது உங்களுக்கு இரகசியமாய் இருப்பதில்லை, நீங்கள் அதை அறிவீர்கள், சகோதரனே, அதெல்லாம் உங்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி எனக்கு இரகசியமல்ல. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். எல்லா வானங்களும் பூமியும் இயேசு என்று அழைக்கப்படுகின்றன. இயேசுவே வார்த்தை.
நாமமானது வார்த்தையில் இருக்கிறது. ஏனெனில் அவரே வார்த்தையாக இருக்கிறார். ஆமென்! அப்படியானால் அவர் என்னவாக இருக்கிறார்? வியாக்கியானிக்கப்பட்ட வார்த்தையே தேவனுடைய நாமத்தின் வெளிப்படுத்தலாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து ஒரே குழுவாக கொண்டு வரும்படியாக இன்றைக்கான தம்முடைய சத்தத்தை அவர் ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்துள்ளதன் மூலம் அவருடைய மனவாட்டியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து கொண்டு வரக்கூடிய ஒரே வழியாக இருப்பதை மணவாட்டி பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறாள்.
அவர் இன்று அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்பதைக் காண்பிக்க 60 ஆண்டுகளுக்கு முன்பு அதைச் செய்தார். நாம் "ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அவருடைய சபைகளில் ஒன்றில் இருக்கிறோம்."
நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களிலும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.
பல ஊழியர்கள் தங்களுடைய சபைகளில் "இணைப்பில் இருப்பது" அல்லது "நேரடி ஒலிப்பரப்பில் கேட்பது," , "ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்பது," சபைக்குச் செல்வதுபோல் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர் அப்படித்தான் இருப்பதாகக் கூறினார்! அவர்களுக்கு எளிமையான வார்த்தையும் தெரியாது அல்லது மணவாட்டி வாசிக்கக்கூடிய அன்பின் மடலையும் வாசிக்க முடியாது.
சபை என்றால் என்ன? சகோதரன் பிரான்ஹாம் ஒரு சபை என்று கூறினதைப் பார்ப்போமாக.
அநேக, அநேக சபைகள் இந்த கூடாரத்திலிருந்து இங்கே இந்த வசதியைப் பெற்றுள்ளீர்கள். அது பீனிக்ஸிலும் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது எல்லா இடங்களிலும் ஆராதனைகள் உள்ளன, அது சரியாக வருகிறது…அவர்கள் சபைகளிலும், வீடுகளிலும், அதைப் போன்ற காரியங்களிலும் ஒரு மிக தெளிவான அலை வரிசையின் மூலமாக ஒன்று கூடுகின்றனர்.
சகோதரன் பிரான்ஹாம் தங்களுடைய "வீடுகளில்" மற்றும் "அது போன்ற காரியங்களில்" உள்ள மக்கள் அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றாக இருந்ததாக தெளிவாகக் கூறுகிறார். இவ்வாறு வீடுகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டிடங்கள், அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றுகூடிய குடும்பங்கள் அவர்களை ஒரு சபையாக்கின.
நாம் இன்னும் கொஞ்சம் அன்பின் மடலைக் வாசிப்போமாக.
நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே தொலைபேசி இணைப்பில் இருந்து கொண்டு, சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை அனைவரும் ஒரே நேரத்தில் கேட்கிறோம்; அவர்களோ நாங்கள் ஒரு குழுவாக ஒன்று கூடி, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர்.
ஆனால் நீங்கள் இன்று அப்படிச் செய்தால், அது சபைக்குப் போவதாக இருக்காது, அது தவறு, நாளானது நெருங்கி வருவதைப் பார்க்கும்போது அது இன்னும் அதிகமாக ஒன்றுகூடுவதில்லை என்று சொல்கிறீர்கள், அது சபைக்கு போவதில்லையா?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டும், நீங்கள் உங்கள் சபைக்கு பதிலளிக்கிறீர்கள். சகோதரர் பிரான்ஹாம் இன்று இங்கே சரீரப்பிரகாரமாக இருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அவர் பேசுவதைக் கேட்க நீங்கள் நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ இணைய முடிந்தால், உலகம் முழுவதும் உள்ள மனவாட்டியுடன், போதகர்களே, நீங்கள் தொலைபேசி இணைப்பின் மூலம் சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்பீர்களா அல்லது நீங்கள் பிரசங்கிப்பீர்களா?
உங்களுடைய கடமை உங்களுடைய சபையில் இருக்கிறது என்று சகோதரன் பிரான்ஹாம் தெளிவாகக் கூறுகிறார். நீங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்திருந்தால், சகோதரர் பிரான்ஹாம் ஒரு ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தாலும், உங்கள் சபை கலந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆராதனையை (அப்போது பல ஊழியர்கள் செய்தது போல) நடத்தப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் "உங்கள் சபைக்கு" செல்வீர்களா, அல்லது சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க "பிரான்ஹாம் கூடாரத்திற்கு" செல்வீர்களா?
நான் உங்களுக்கு எனது பதிலைத் அளிப்பேன். நான் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க கூடாரத்திற்குள் செல்ல மழை, பனி அல்லது பனிப்புயலிலும் வாசலில் நின்று கொண்டிருப்பேன். நான் அந்த வேறொரு சபைக்குச் சென்று கொண்டிருந்தால், அன்றிரவு நான் சபைகளை மாற்றுவேன்.
ஆனால் அந்த ஸ்திரீக்கு, தடியில் வல்லமை வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் தேவன் எலியாவில் இருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். தேவன் அங்குதான் இருந்தார்: அவருடைய தீர்க்கதரிசியில். அவள், “நான் உம்மை விடமாட்டேன் என்று கர்த்தருடைய ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றாள்.
தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தானம் 65-1128Mஎன்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போவதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒலிபரப்பு இணைப்பில் உள்ள பிரான்ஹாமுடைய சபைகளில் ஒன்றில் இருக்கும்படி நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான இணைக்கப்பட்டுள்ள மணவாட்டியே,
இன்றைக்கு, தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம் பேசின் இந்த வார்த்தைகள் இன்னமும் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய, நம் மூலமாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களுக்கும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.
அவர்கள் சபைகளில், வீடுகளில், சிறிய கட்டிடங்களில் மற்றும் ஒரு பெட்ரோல் நிலையங்களில் கூட இருந்தனர்; அமெரிக்கா முழுவதும் சிதறிக்கிடந்தனர், வார்த்தை புறப்பட்டுச் சென்ற அதே நேரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இன்றைக்கு, நாம் இன்னமும் அவருடைய சபைகளில் ஒன்றாக இருக்கிறோம். அவர் இன்னமும் நம்முடைய போதகர். அவருடைய வார்த்தைக்கு இன்னமும் வியாக்கியானம் தேவையில்லை, மேலும் நாம் இன்னமும் உலகம் முழுவதும் கூட்டப்பட்டு, இணைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை பரிபூரணபடுத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாளிலே, இந்த வார்த்தை இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பொழுது அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? அப்போதே போதகர்கள் ஏன் தங்களுடைய சபைகளை மூடிவிட்டு வந்து செய்தியைக் கேட்டனர்? அவர்கள் ஒலிநாடாக்களைப் பெறுவதற்காகக் காத்திருந்திருக்கலாம், பின்னர் தங்களுடைய மக்களுக்குச் செய்தியைப் பிரசங்கித்திருக்கலாம்; ஒரு வெளிப்பாடில்லாமல் பலர் செய்தார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
அல்லது சிலர் தங்கள் சபைகளிடம், “இப்போது கேளுங்கள், சகோதரர் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் எங்களுடைய சபைகளில் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. நான் இந்த ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரசங்கிக்கிறேன்; ஒலிநாடாக்களைப் பெற்றுக்கொண்டு உங்களுடைய வீடுகளில் அவற்றைக் கேளுங்கள்” என்று சொல்லியிருக்கலாம்.
அப்பொழுது இருந்த மணவாட்டியும், இப்பொழுது இருக்கிற மணவாட்டியைப் போல, ஒரு வெளிப்பாட்டை உடையவளாயிருந்து, அவர்களுக்கான தேவனுடைய சத்தத்தை நேரடியாக கேட்க விரும்பினர. தேவனுடைய சத்தம் புறப்பட்டு சென்றபோது அதைக் கேட்க அவர்கள் நாடு முழுவதும் மணவாட்டியுடன் ஐக்கியப்பட வேண்டும் என்று விரும்பினர். அவர்கள் அவருடைய சபைகளில் ஒன்றாக, வீடுகளில் அல்லது அவர்கள் எங்கிருந்தாலும், செய்தியோடு, சத்தத்தோடு, இப்பொழுதோ ஒலிநாடாக்களோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுவதுபோல விரும்பினர்.
இன்றைக்கு, இந்த வார்த்தை இன்னமும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவர்கள்/நாம் அதைப் பார்த்ததை மற்றவர்கள் ஏன் பார்க்கிறதில்லை?
முன்னறிவிப்பின் மூலம், இதைப் பார்க்க நாம் நியமிக்கப்பட்டோம். ஆனால் நியமிக்கப்படாத நீங்கள், அதை ஒருபோதும் பார்க்கவே மாட்டீர்கள். கோதுமை அதைப் பார்த்து விலகிச் செல்லத் தொடங்கிவிட்டது.
இது நீங்கள் உங்களுடைய சபைக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. இது உங்களுடைய போதகர் ஊழியம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அர்த்தமல்ல. பல ஊழியங்களும் போதகர்களும் முக்கியமான காரியத்தை மறந்துவிட்டார்கள் என்பதையே இது எளிமையாக பொருட்படுத்துகிறது., மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்று தங்களுடைய மக்களுக்குச் சொல்லுவதில்லை.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும் சபைக்குச் செல்வது உங்களை மணவாட்டியாக மாற்றுகிறதில்லை; அது தேவனுடைய தேவை அல்ல. பரிசேயர்களும் சதுசேயர்களும் அந்த போதனையை நன்கு கடைபிடித்தனர். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் அறிந்திருந்தனர், ஆனால் ஜீவனுள்ள வார்த்தை மானிட சரீரத்தில் அங்கேயே நின்று கொண்டிருந்தது, ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? இன்றைக்கு பலர் அதே காரியத்தையே செய்கிறார்கள்.
அவர்கள், “அவர் பேசிக்கொண்டிருந்த ஸ்தாபனங்கள் அதுதான். அவர்கள் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய சபைகளில் பிரசங்கிக்க அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் நாங்கள் வார்த்தையைப் பிரசங்கித்து, அவர் கூறினதை அப்படியே சொல்கிறோம்” என்று கூறுவார்கள்.
அது அற்புதமானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். ஆனால் அதன்ன்னர கூறுவதோ, இன்று அது வேறு, உங்கள் சபைகளில் சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்குவது தவறு. நீங்கள் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் அல்லது ஸ்தாபனங்களை விட வேறுபட்டவர் அல்ல.
நீங்கள் ஒரு மாய்மாலக்காரர்.
அன்று இருந்தது போல, இயேசு கதவைத் தட்டிக்கொண்டு, உள்ளே நுழைந்து, அவருடைய சபையினிடத்தில் நேரடியாகப் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறார், அவர்கள் தங்களுடைய கதவுகளைத் திறக்க மாட்டார்கள், மேலும் அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க மாட்டார்கள். "அவர் எங்களுடைய சபையில் வந்து பிரசங்கிக்க் கூடாது" என்று கூறுகிறார்கள்.
சத்துரு வெளிப்படுத்தப்படுவதை வெறுக்கிறபடியால், அவன் அதைத் திரித்து, பல திசைகளில் சுழற்றப் போகிறான், ஆனாலும், அது நம் கண்களுக்கு முன்பாகவே வெளிப்படுத்தப்படுகிறது, பலர் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
“ஆதியிலே [சபையோர், “வார்த்தை இருந்தது'' என்கின்றனர்-ஆசி.] ''அந்த வார்த்தை'' [சபையோர், ''தேவனிடத்திலிருந்தது'' என்கின்றனர்-ஆசி. ] “அந்த வார்த்தை” [''தேவனாயிருந்தது.''] ''அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' அது சரியா? லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள அதே வார்த்தை மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனின் வியாக்கியானமும் தேவையில்லை. ஓ, இங்கேயும் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளதுமான ஜீவனுள்ள தேவனுடைய சபையே! காலதாமதமாவதற்கு முன்பு சீக்கிரம் உறக்கத்தினின்று எழுந்திரு!
உங்களுடைய இருதயங்களைத் திறந்து, தேவன் உங்களுக்கும், அவருடைய எல்லா சபைகளுக்கும் கூறினதைக் கேளுங்கள். இப்போது நாம் அவரை, நம்முடைய கண்களால், அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதைக் காண்கிறோம். நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை!! மிகவும் தாமதமாகும் முன் எழுந்திருங்கள்!!
இந்தக் காரியங்களைப் பற்றி எங்களுடைய வாழ்நாள் முழுவதும் முடிவு காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுது அது நடப்பதை எங்களுடைய கண்களால் காண்கிறோம்.
அவர் எங்களிடம் கூறினார், ஒரே ஒரு வழி இருக்கிறது, அது தேவனால் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற வழி. நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.
இந்த நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியை கேட்கும்படி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உலக மக்கள் அனைவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன், அப்போது நீங்களும், “நான் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போது நான் உம்மைக் காண்கிறேன்” என்று சொல்லலாம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-1127E நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன்.
வேதவாக்கியங்கள்
ஆதியாகமம் 17
யாத்திராகமம் 14:13-16
யோபு 14வது அதிகாரம் மற்றும் 42:1-5
ஆமோஸ் 3:7
மாற்கு 11:22-26 மற்றும் 14:3-9
லூக்கா 17:28-30
அன்பான கிறிஸ்துவின் மணவாட்டியே,
ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-1127B-தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்ச்சித்தல் என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்றுகூடுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்