காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
செவ்வாய், 15 ஏப்ரல், 2025

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,

இந்த ஈஸ்டர் வார இறுதியில் மணவாட்டி எவ்வளவு மகிமையான நேரத்தை உடையவளாயிருப்பாள். இது நம்முடைய ஜீவியங்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்; நாம் ஒருபோதும் மறக்க முடியாத நேரம். எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான வார இறுதி.

நாம் நம்முடைய சாதனங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்கள் அனைத்தையும் மூடிவிட்டு, நம்முடைய ஜீவியங்களை அவருக்கு மீண்டும் அர்ப்பணிக்கிறபடியால், ஒவ்வொரு ஈஸ்டரும் மணவாட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நேரமாக இருந்து வருகிறது, ஒவ்வொரு நாளும் நாம் அவரிடம் பேசும்போதும், அவருடைய வார்த்தையை கேட்கும்போதும், இது ஆராதனையில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழு வார இறுதியாயுள்ளது.

உலகத்தை மூடிவிட்டு அவரிடம் பேசுவது மிகவும் கடினமாகிவிட்ட அளவிற்கு, சத்துரு நம்முடைய ஜீவியங்களை மிகவும் திசைதிருப்பவும், ஜீவியத்தின் பல காரியங்களில் பரபரப்பாக வைத்திருக்கிறான். வார்த்தையைக் கேட்க நாம் பயன்படுத்தும் சாதனங்களைக் கூட, சாத்தான் நம்முடைய நேரத்தை அவைகள் மூலம் ஆபத்தில் ஆழ்த்த பயன்படுத்துகிறான்.

ஆனால் இந்த வார இறுதி வித்தியாசமாக இருக்கும், மேலும் நாம் இதுவரை அனுபவித்த வேறு எந்த ஈஸ்டர் வார இறுதியையும் போல அல்ல.

முத்திரைகளைக் கேட்க கர்த்தர் என் இருதயத்தில் வைத்தபோது, தேதிகள் எப்படி அமையும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதும் போல, அவருடைய நேரம் பரிபூரண மானது. இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியின் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி, 4-வது முத்திரையான, கழுகின் காலத்தை கேட்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது; எவ்வளவு பொருத்தமானது.

ஆனால் இப்போது, கர்த்தர் நமக்காக இன்னும் அதிகமாக வைத்திருக்கிறார். நான் கூறினது போல், முத்திரைகளைக் கேட்க கர்த்தர் என் இருதயத்தில் வைத்ததாக உணர்ந்தபோது, தொடரில் 10 செய்திகள் இருப்பதால் அவற்றை கேட்டு முடிக்க பல வாரங்கள் ஆகும் என்று எனக்குத் தெரியும்.

நான் நாட்காட்டியைப் பார்த்தபோது, முழுத் தொடரையும் கேட்டு முடிப்பதற்குள் ஈஸ்டர் வந்துவிட்டது என்பதைக் கண்டேன். முத்திரைகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று யூகிக்கிறேன் என்றும், அவர் எனக்கு ஈஸ்டருக்கான செய்திகளைத் தருவார் என்று நான் எனக்குள் நினைத்தேன்.

ஒரு நொடியில் நான் பார்த்தேன்...அது பரிபூரணமாக இருக்கும். ஈஸ்டர் ஞாயிறு காலை ஏழாம் முத்திரை கேட்கப்படவுள்ளதால், நாம் ஏழு முத்திரைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்னால் அதை நம்ப முடியவில்லை, அது அட்டவணையில் பரிபூரணமாக சீரமைக்கப்பட்டுள்ளது. அப்போதே எனக்குத் தெரியும், இது நீர்தான், கர்த்தாவே.

நாம் ஒருவருக்கொருவர், மற்றும் அவருடன் சேர்ந்து ஈஸ்டர் நேரத்திற்காக மிகவும் உற்சாகமாகவும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் நான் இருந்து வருகிறேன். அவர் நமக்காக அட்டவணையை உருவாக்கினார் என்பது எனக்குத் தெரியும்.

ஆகையால், கர்த்தருக்குச் சித்தமானால், நமது மிகவும் சிறப்பு வாய்ந்த ஈஸ்டர் வார இறுதி முழுவதும் நாம் தொடர்ந்து முத்திரைகளைக் கேட்போம்.

 

வியாழக்கிழமை

இஸ்ரவேல் புத்திரரின் யாத்திரைக்கு முன்பு, பஸ்கா பண்டிகையை நினைவுகூரும் விதமாக, கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனத்தை மேற்கொண்டது வியாழக்கிழமை இரவாயிருந்தது. நம்முடைய புனித வார இறுதிக்கு முன்பு, நம்முடைய வீடுகளில் கர்த்தருடன் உரையாடி, நம்முடைய பாவங்களை மன்னிக்கவும், நம்முடைய பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவும் அவரிடம் கேட்க நமக்குக் கிடைத்த என்னே ஒரு வாய்ப்பு.

கர்த்தாவே, இதை அருளும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். விடாய்த்துப்போனவர்களைத் தேற்றும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தைத் தாரும். விடாய்த்துயப்போனவர்களுக்கு சமாதானத்தையும், பசியாயுள்ளவர்களுக்கு ஆகாரத்தையும், தாகமாய் உள்ளவர்களுக்கு தண்ணீரையும், வருத்தப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தையும், சபைக்கு வல்லமையையும் தாரும். கர்த்தாவே, அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராபோஜனத்தை நாங்கள் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், இயேசுவை எங்கள் மத்தியில் கொண்டு வாரும். கர்த்தாவே, அவர் எங்களை விசேஷித்த முறையில் சந்திக்க வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம்.

கர்த்தாவே, மற்றவர்களையும், கர்த்தருடைய வருகைக்காக சந்தோஷத்தோடு காத்துக் கொண்டும், தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மற்றும் புகைப்போக்கிகள் அனைத்தையும் துடைத்து மெருகேற்றி, இருண்ட இடங்களில் சுவிசேஷ வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிற உலகத்தை சுற்றிலுமுள்ள யாவரையும் ஆசீர்வதியும்.

நாம் அனைவரும் மாலை 6:00 மணிக்குத் தொடங்குவோம். உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில் இராப்போஜனம் 62-0204 என்ற செய்தியைக் கேட்கவும், பின்னர் தீர்க்கதரிசி நம்மை நம்முடைய விசேஷித்த இராப்போஜனம் மற்றும் பாதங்களை கழுவும் ஆராதனைக்கு அழைத்துச் செல்வார், இது லைஃப்லைன் பயன்பாட்டில் (ஆங்கிலத்தில்) இயங்கும், அல்லது கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் ஆராதனையை பதிவிறக்கம் செய்யலாம்.

செய்தியைத் தொடர்ந்து, நாம் நம்முடைய குடும்பங்களுடன் நம்முடைய வீடுகளில் கூடி கர்த்தருடைய இராப்போஜனத்தை எடுத்துக்கொள்வோம்.

 

வெள்ளிக்கிழமை

நாம் காலை 9:00 மணிக்கு நம்முடைய குடும்பங்களுடன் ஜெபத்திற்குச் செல்வோம், பின்னர் மீண்டும் மதியம் 12:00 மணிக்கு, கர்த்தரை நம்முடன் இருக்கவும், அவருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது நம்முடைய வீடுகளை பரிசுத்த ஆவியால் நிரப்பவும் அழைப்போம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரியில் இருந்த அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்குவதைப் பார்த்து, பின்னர் பிதாவைப் பிரியப்படுத்துவதை எப்போதும் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்:

இந்த நாள், மிகவும் முக்கியமான, மகத்தான நாட்களில் ஒன்றாக அமைந்திருக்குமானால், அந்த நாள் நமக்கு பொருட்படுத்தின மூன்று வித்தியாசமான காரியங்களை நான் நோக்கி பார்ப்போமாக. நாம் நூற்றுக்கணக்கானவைகளை எடுத்து பேசலாம். ஆனால், இந்த காலையில், நான் மூன்று வெவ்வேறு மிக முக்கியமான காரியங்களை தெரிந்து கொண்டுள்ளேன், அந்த கல்வாரி நமக்கு பொருட்படுத்தினதாக நாம் நோக்கிப் பார்க்க வேண்டிய இன்றியமையாத காரியங்களை அடுத்த சில நிமிடங்களில் பார்ப்போம். அது இங்குள்ள ஒவ்வொரு பாவியையும் கண்டித்துணர்த்தி, ஒவ்வொரு பரிசுத்தவானையும் முழங்கால்படியிடச் செய்து, வியாதிப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நபரும் தன்னுடைய விசுவாசத்தை தேவனிடமாக உயர்த்தி சுகமடைந்தவர்களாக நடந்து செல்லவும், ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படவும்; பின் வாங்கிப்போன ஒவ்வொருவரும் திரும்பி வந்து, தன்னைக் குறித்து வெட்கமடையவும், ஒவ்வொரு பரிசுத்தவானும், களிகூர்ந்து மேலும் புதிதாகப் பற்றிக் கொண்டு புது நம்பிக்கையைப் பெற வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.

பின்னர் மதியம் 12:30 மணிக்கு, நம்முடைய வீடுகளில் ஒன்றாகக் கூடி: 63-0323 ஆறாம் முத்திரையைக் கேட்போமாக.

பின்னர், நம்முடைய கர்த்தருடைய சிலுவை மரணத்தை நினைவுகூரும் வகையில், ஆராதனைக்குப் பிறகு உடனடியாக ஜெபத்தில் மீண்டும் ஒன்றாக இணைவோமாக.

 

சனிக்கிழமை

காலை 9:00 மணியிலும், பிற்பகல் 12:00 மணியிலும் நாம் அனைவரும் மீண்டும் ஜெபத்தில் ஒன்றுபட்டு, நம் மத்தியில் அவர் நமக்காகச் செய்யப்போகும் மகத்தான காரியங்களுக்கு நம் இருதயங்களை ஆயத்தப்படுத்துவோம்.

“அவர், “சாத்தானே, இங்கே வா” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் இப்பொழுது எஜமானாயிருக்கிறார். சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய அந்தத் திறவுகோலை அவர் தம்முடைய கரம் நீட்டி பற்றிப் பிடிப்பதை என்னால் காணமுடிகிறது. மேலும் அவர், “நான் உனக்கு முன்னறிவிப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீ இவ்வளவு காலம் முழுமையாக பொய்யுரைத்து ஏமாற்றி வந்தாய், நான் ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரனாயிருக்கிறேன். என்னுடைய இரத்தம் இன்னமும் சிலுவையில் ஈரக்கசிவோடு உள்ளது. முழு கடனும் செலுத்தப்பட்டாயிற்றே! உனக்கு இனிமேல் எவ்வித உரிமையுமே கிடையாது. நீ துகிலுரியப்பட்டிருக்கிறாய். அந்தத் திறவுகோல்களை என்னிடம் கொடு” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது!”

பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு, நாம் அனைவரும்: முத்திரைகளின் பேரிலான கேள்விகளும் பதில்களும் என்ற வார்த்தையைக் கேட்க ஒன்று கூடுவோம்.

உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டிக்கு இது நினைவில் கொண்டிருக்க வேண்டிய எவ்வளவு மிக முக்கியமான நாளாக இருக்கப் போகிறது.

பின்னர் ஆராதனைக்குப் பிறகு உடனடியாக ஜெபத்தில் மீண்டும் இணைவோம்.

ஞாயிற்றுக்கிழமை

சகோதரன் பிரான்ஹாமினுடைய சிறிய நண்பன் ராபின் பறவை அதிகாலை 5:00 மணிக்கு அவரை எழுப்பினதுபோல, நாம் அதிகாலையில் முதலில் எழும்புவோமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக நாம் கர்த்தருக்கு நன்றி கூறுவோம்:

இன்று காலை ஐந்து மணியளவில், சிவப்பு மார்பகத்துடன் இருந்த என்னுடைய சிறிய நண்பன் ஜன்னலன்டை பறந்து வந்து என்னை எழுப்பினான். அதனுடைய சிறு இருதயம் வெடித்து, ”அவர் உயிர்த்தெழுந்து விட்டார்” என்று கூறுவது போன்று தென்பட்டது.

காலை 9:00 மணிக்கும் பிற்பகல் 12:00 மணிக்கும், ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்க நம்மைத் ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக நம்முடைய சங்கிலித் தொடர் ஜெபத்தில் மீண்டும் இணைவோம்,

பிற்பகல் 12:30 மணிக்கு, 63-0324e ஏழாம் முத்திரை: என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்:

பிற்பகல் 3:00 மணிக்கு, மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றுபடுவோம், அவர் தம்முடனும் தம்முடைய மணவாட்டியுடனும் உலகம் முழுவதும் நமக்குக் கொடுத்த அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி தெரிவிப்போம்

.

கடந்த ஆண்டைப் போலவே, வெளிநாடுகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு, இந்த அட்டவணையில் உள்ள அனைத்து ஜெப நேரங்களுக்கும், ஜெபர்சன்வில் நேரத்தில் எங்களுடன் ஒன்றுபட உங்களை அழைக்க நான் விரும்புகிறேன். இருப்பினும், ஜெபர்சன்வில் நேரத்தில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிற்பகல் ஒலிநாடாக்களை கேட்பது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே தயவுசெய்து உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்த செய்திகளை கேட்கத் தயங்காதீர்கள். இருப்பினும், ஜெபர்சன்வில் நேரத்தில் மதியம் 12:30 மணிக்கு, நம்முடைய ஞாயிற்றுக்கிழமை செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாகச் சேர நான் விரும்புகிறேன்.

உங்கள் முழு குடும்பமும் ஒன்றாக அனுபவிக்கக்கூடிய படைப்பின் திட்டங்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஓய்.எப்ஃ வினாடி வினாக்களில் பங்கேற்க உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் அழைக்க விரும்புகிறேன். இந்த வார இறுதியில் நாம் கேட்கும் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதால், நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.

வார இறுதி அட்டவணைக்கு, இராப்போஜன ஆராதனைக்கு ஆயத்தமாவது பற்றிய தகவல்களுக்கும், படைப்பின் திட்டங்களுக்குத் தேவையான பொருட்கள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

புகைப்படங்கள் எடுப்பது, அனுதின மேற்கோள் கேட்பது மற்றும் செய்தித் தொகுப்பு பயன்பாடு (டேபிள்) லைஃப் லைன் பயன்பாடு அல்லது பதிவிறக்கக்கூடிய இணைப்பிலிருந்து ஒலிநாடாக்களை கேட்பதை தவிர ஈஸ்டர் வார இறுதிக்கு நம் தொலைபேசிகளை அணைத்து வைப்போமாக.

ஆராதனை, துதித்தல் மற்றும் சுகம்ளித்தல் நிறைந்த ஒரு வார இறுதிக்காக உலகம் முழுவதும் மணவாட்டியுடன் ஒன்று சேர உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அழைப்பது எனக்கு மிகவும் மரியாதை அளிக்கிறது. இது உண்மையிலேயே உங்களுடைய ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் ஒரு வார இறுதி என்று நான் நம்புகிறேன்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 



Service Audio

ஈஸ்டர் வார இறுதிக்கான பிரசங்கங்கள் கீழே உள்ளன. வியாழக்கிழமை இராப்போஜனம்/பாதம் கழுவும் ஆராதனை பதிவிறக்கத்தின் ஒரு பகுதியாகும்.

வியாழக்கிழமை- 6:00 PM (local time)

62-0204
இராப்போஜனம்(விசேஷித்த இராப்போஜனம் & பாதம் கழுவும் ஆராதனை)
1 மணி 51 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு


வெள்ளிக்கிழமை - மதியம் 12:30 (உள்ளூர் நேரம்)

63-0323
ஆறாம் முத்திரை
2 மணி 40 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு


சனிக்கிழமை- மதியம் 12:30 (உள்ளூர் நேரம்)

63-0324M
முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும்
3 மணி 5 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு


ஞாயிற்றுக்கிழமை- பிற்பகல் 12:30 (ஜெஃபர்சன்வில் நேரம்)

63-0324E
ஏழாம் முத்திரை
2 மணி 33 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு
தொடர்புடைய சேவைகள்
சனி, 12 ஏப்ரல், 2025

அன்பான இளைப்பாறுகிறவர்களே,

நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் வந்தடைந்துவிட்டோம். இந்தச் செய்தியின் வெளிப்பாடு தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை வார்த்தையின் ரூபகாரப்படுத்துதல் நிரூபித்துள்ளது. ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம்.

இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது எவ்வளவு முக்கியம்? ஒலிநாடாக்களில் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், மிகவும் புனிதமானவைகளாகவும் உள்ளபடியால், தேவன் அதற்கு ஒரு தேவதூதனைக் கூட நம்ப முடியவில்லை... அவருடைய பரலோக தூதர்களில் ஒருவனைக் கூட அல்ல. அது அவருடைய தீர்க்கதரிசியால் வெளிப்படுத்தப்பட்டு அவருடைய மணவாட்டிக்கு கொண்டு வரப்பட வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் தேவனுடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது.

தேவன் முத்திரைகளை உடைத்து, அதைத் தம்முடைய பூமிக்குரிய ஏழாம் தூதனாகிய செய்தியாளரிடம் ஒப்படைத்து, முழு வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையும் அவருக்கு வெளிப்படுத்தினார். பின்னர், தேவன் தம்முடைய பூமிக்குரிய தூதன் மூலம் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு சிறிய விவரமும் நமக்குப் பேசப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் நம் மீது மிகுந்த அக்கறை கொண்டதால், காலத்தின் தொடக்கத்திலிருந்து இங்கே பூமியில் என்ன நடந்துள்ளது என்பதை அவர் நமக்குச் சொன்னது மட்டுமல்லாமல், அவர் தம்முடைய தூதன் மூலம் பேசி, தற்போது பரதீசைப் போன்ற ஒரு இடத்தில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நமக்குச் சொன்னார்.

நாம் இந்த பூமிக்குரிய கூடாரத்தை விட்டுச் செல்லும்போது நமக்காக எதிர்காலம் என்ன வைத்துள்ளது என்பதைப் பற்றி நாம் கவலைப்படவோ அல்லது நிச்சயமற்றவர்களாகவோ இருக்க அவர் விரும்பவில்லை. எனவே, தேவன் தாமே தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனை காலத்தின் திரைக்கு அப்பால் அழைத்துச் சென்றார், அதனால் அவர் அதைப் பார்க்கவும், அதை உணரவும், அங்கிருந்த அவர்களிடம் பேசவும் கூட முடிந்தது. அது ஒரு தரிசனம் அல்ல, அவர் அங்கே இருந்தார்.

அவர் திரும்பி வந்து நம்மிடம் சொல்லும்படி தேவன் அவரை அங்கு அழைத்துச் சென்றார்: “நான் அங்கே இருந்தேன், நான் அதைப் பார்த்தேன். அது இப்போதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது...நம்முடைய தாய்மார்கள், நம்முடைய தந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள், குமாரர்கள், குமாரத்திகள், மனைவிகள், கணவன்மார்கள், தாத்தா பாட்டிகள், மோசே, எலியா, அங்கே சென்றுள்ள எல்லா பரிசுத்தவான்களும் வெள்ளை அங்கிகளில், நமக்காக இளைப்பாறிக் கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

நாம் இனி அழ மாட்டோம், ஏனென்றால் அது முழுவதுமே மகிழ்ச்சியாக இருக்கும். நாம் இனி சோகமாக இருக்க மாட்டோம், ஏனென்றால் அது முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும். நாம் ஒருபோதும் மரிக்க மாட்டோம், ஏனென்றால் அது முழுவதுமே ஜீவனாயுள்ளது. நாம் வயோதிகராக முடியாது, ஏனென்றால் நாம் அனைவரும் என்றென்றும் இளமையாகவே இருப்போம்.

இது பரிபூரணம்...கூடுதலாக பரிபூரணம்...கூடுதலாக பரிபூரணம், நாம் அங்கு சென்று கொண்டிருக்கிறோம்!! மோசேயைப் போலவே, நாம் ஒரு குளம்பைக் கூட விட்டுச் செல்ல மாட்டோம், நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்...நம்முடைய குடும்பத்தினர் அனைவருமே.

அந்த பலமுள்ள ஏழாம் தூதனை நேசிப்பது எவ்வளவு முக்கியம்?

அது, “நீ நேசித்த அனைவரையும்…” என்று சத்தமிட்டது, என்னுடைய ஊழியத்திற்கான பலன். எனக்கு எவ்வித பலனும் வேண்டாம். அவர், “நீ நேசித்த அனைவரையும், உன்னை மனப்பூர்வமாக சிநேகித்த அனைவரையும், தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்” என்றார்.

தயவுசெய்து அதை மீண்டும் படிப்போமாக: அவர் என்ன சொன்னார்?...தேவன் உனக்கு கொடுத்திருக்கிறார்!!

நாம் அவர்களுடன் சேர்ந்து, "நாங்கள் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்" என்று சத்தமிடுவோம்.

நாம் நம்முடைய எந்த நித்திய இலக்கின் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்? ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையின் பேரிலுமே. மணவாட்டி செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது என்ற உண்மையான வெளிப்பாட்டை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு நான் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.

நீங்கள் எங்களோடு இளைப்பாற விரும்புகிறீர்களா? எதிர்காலம் என்ன வைத்துள்ளது என்பதை குறித்த எல்லாவற்றையும், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும், எப்படி அங்கே சென்றடைய வேண்டும் என்பதையும் நாங்கள் கேட்க போகிறபடியால், தேவனுடைய சத்தம் பேசி: ஐந்தாம் முத்திரையை 63-0322 திறப்பதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

தானியேல் 9:20-27
அப்போஸ்தலர் 15:13-14
ரோமர் 11:25-26
வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11 / 11:7-8 / 22:8-9

தொடர்புடைய சேவைகள்
சனி, 5 ஏப்ரல், 2025

அன்புள்ள பரலோகத்திற்குரிய பரிசுத்தவான்களே,

பிதா தம்முடைய வார்த்தையால் நம்மை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார், அந்த வெளிப்பாட்டின் ரூபகாரப்படுத்துதல் நமக்குத் ஊக்கத்தை அளிக்கிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மைத் தெரிந்து கொண்டார், ஏனென்றால் நம்முடைய சொந்தத் தெரிந்து கொள்ளுதலின் மூலம் நாம் அவருடைய வார்த்தைக்கு உண்மையாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அது உண்மையாகவே ஆழமாக பதியும்படி, நாம் மீண்டும் கூறட்டும். அவர் காலம் முழுவதும், எல்லா காலத்தின் முடிவு வரையிலும் பார்த்தார், நம்மைப் பார்த்தார்...நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? அவர் உங்களைப் பார்த்தார், அவர் என்னைப் பார்த்தார், நம்மை நேசித்தார், ஏனென்றால் நம்முடைய சொந்தத் தெரிந்து கொள்ளுதல் மூலம், நாம் அவருடைய வார்த்தையுடன் நிலைத்திருப்போம்.

அப்போதே, அவர் தம்முடைய எல்லா தேவதூதர்களையும் கேருபீன்களையும் ஒன்றாக அழைத்து, நம்மைச் சுட்டிக்காட்டி, “அதுதான் அவள், அவள் என் மணவாட்டி, அவர்கள் பேரில் தான் நான் காத்துக் கொண்டிருந்தேன்!” என்றார்.

யோவானைப் போலவே, அந்த காரணத்தினால் தான் நாம் இந்த எல்லா ஆரவாரமிடுதலையும், கூச்சலிடுதலையும், கர்த்தரை துதித்தலையும் செய்து கொண்டிருக்கிறோம், நாம் புது திராட்சை ரசத்தினால் ஊக்கப்படுத்தப்பட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி, நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிவோம்.

இந்த வாரம் ஜெபர்சன்வில்லில் நாம் அனுபவித்து வரும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையைப் போலவே இதுவும் இருக்கிறது...நாமும் கூட உலகிற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புகிறோம்.

மணவாட்டி வெளிப்பாட்டின் இடியுடன் கூடிய மழையைக் கொண்டிருக்கிறாள், மேலும் அது வெளிப்பாட்டின் ஒரு திடீர் வெள்ளத்தை உருவாக்குகிறது. மணவாட்டி தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொண்டு, அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டாள். உடனடியாகப் பாதுகாப்பாகச் செல்லுங்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் இல்லையென்றால் அழிக்கப்படுவீர்கள்.

நாம் சிங்கத்தின் காலத்திலோ, அல்லது காளையின் காலத்திலோ, அல்லது மனித காலத்திலோ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை; நாம் கழுகின் காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், தேவன் தம்முடைய மணவாட்டியை அழைத்து வழிநடத்த மல்கியா 4 என்ற வல்லமைமிக்க கழுகை நமக்கு அனுப்பியுள்ளார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, நான்காவது முத்திரையைக் கேட்டு நாம் ஒன்றாக ஒன்றிணைக்கப்படுவதால், அது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கும். இது தேவனுடைய வல்லமைமிக்க கழுகு தீர்க்கதரிசியின் பிறந்தநாளாக இருக்கும்.

நாம் இந்த அற்புதமான நாளைக் கொண்டாடி, நம்மை அழைத்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த அனுப்பிய அவருடைய கழுகு செய்தியாளரை நமக்கு அனுப்பியதற்காக கர்த்தருக்கு நன்றி கூறுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: நான்காம் முத்திரை 63-0321

நேரம்: பிற்பகல் 12:00 மணி, ஜெபர்சன்வில் நேரம்

 

 

ஆயத்தப்படும்படி வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்.

பரி. மத்தேயு 4
பரி. லூக்கா 24:49
பரி. யோவான் 6:63
அப்போஸ்தலர் 2:38
வெளிப்படுத்தின விசேஷம் 2:18-23, 6:7-8, 10:1-7, 12:13, 13:1-14, 16:12-16, 19:15-17
ஆதியாகமம் 1:1
சங்கீதம் 16:8-11
II சாமுவேல் 6:14
எரேமியா 32
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 4

சனி, 29 மார்ச், 2025

அன்புள்ள ஆவிக்குரிய ஏவாளே,

இன்றைக்கு என்னுடைய கடிதத்தை தேவனுடைய அணுகுண்டோடு துவங்குவேனாக; .22 என்ற ஒரு துப்பாக்கியோடு அல்ல, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கான அணுகுண்டு.

இப்பொழுது, நீங்கள் அவைகளை குறித்துக்கொள்ள வேண்டுமானால்; உண்மையாகவே, நீங்கள் யாவரும் அவைகளை அறிவீர்கள். இயேசு, யோவான் 14:12; யோவேல், யோவேல்: 2:38; பவுல், 2தீமோத்தேயு 3; மல்கியா 4-வது அதிகாரம்; திவ்வியவாசகனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷம் 10:17, 1-17, சரியாக இப்பொழுது என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள்.

அறிவிப்பும், எச்சரிக்கையும்: நீங்கள் நம்பினால் பின்வரும் மேற்கோள் உங்களுக்காக அல்.

“நாம் தேவனுடைய தீர்க்கதரிசியின் பேரில் மிஞ்சிப் போகிறோம்.” “நீங்கள் தீர்க்கதரிசி பேசுவதற்கு செவி கொடுத்தால், நீங்கள் மணவாட்டியாய் இருக்க முடியாது.” “சபையில் ஒலிநாடக்களை இயக்குவது தவறாய் உள்ளது.” “தீவட்டி அனுப்பப்பட்டுள்ளது; இன்றைக்கு மிக முக்கியமான காரியம் ஊழியத்திற்கு செவி கொடுத்துக் கொண்டிருப்பதாகும்.” “ஒரே நேரத்தில் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது ஒரு ஸ்தாபனமாக உள்ளது.”

சபைக்கு, அது என்னவாயுள்ளது? வார்த்தையானது மறுபடியும் அவருடைய மக்களிடையே மாம்சமானது. புரிகிறதா?

பயங்கரமான வெடி சத்தம்…எனவே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறபோது, மாம்சமாக்கப்பட்ட வார்த்தை நம்மிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது.

நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் இதுவல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? மேற்கோளின் இந்தப் பகுதி உங்களுக்கானது.

அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை.

நாம் யார் என்று கர்த்தர் தம்முடைய வார்த்தையிலிருந்து நமக்கு எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அந்த வெளிப்படுத்தலுக்கு வெளியே உள்ள அனைவரும் அவ்வளவு தூரம் விலகிச் செல்கிறார்கள்.

உண்மையாகவே, உங்களுக்கு… பதியவேண்டுமென்று அதை நான் கூறட்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றைக்கு உங்களிடமும் அதே காரியம்தான் காணப்படுகின்றது, பாருங்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமல் இருக்கிறீர்கள்! பார்த்தீர்களா?

இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவன் மனிதர்களை அபிஷேகம் செய்துள்ளார், ஆனால் ஒரே ஒரு முற்றிலுமான வார்த்தை மட்டுமே உள்ளது: வார்த்தை. ஒரு ஊழியக்காரர் அல்லது யாராவது பேசுவதை நீங்கள் கேட்கும்போது, அவர் கூறிக் கொண்டிருப்பது சரியாக தேவனுடைய தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியதுதான் என்று விசுவாசிப்பதற்கு உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தை, அவர்களின் வெளிப்பாடு, அவர்களின் வியாக்கியானம் தவறிப் போகக்கூடும்; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் ஒருபோதும் தவறி போக முடியாது.

இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தேவன் எளிமையில் இருப்பதை குறித்து பேசுகிறோம்...அவர் அதை மீண்டும்கூறுகிறார்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையினால், மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகிய, அவரை அவர்கள் காணத்தவறுகின்றனர். இவைகளைச் செய்யும்படியாக வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்துள்ளது. கடைசி நாட்களில் இது இவ்வாறு இருக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது.

அவருடைய இடிமுழக்கத்தைக் கேளுங்கள். ஒரு இடிமுழக்கம் என்பது தேவனுடைய சத்தம். வில்லியம் மாரியன் பிரான்ஹாம் இந்தத் தலைமுறைக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறார்.

மணவாட்டிக்கு உண்மையாக எழுப்புதல் இன்னும் நிகழவில்லை. புரிகிறதா? இன்னும் அங்கே எழுப்புதல் இல்லை, மணவாட்டியை அசைத்தெழுப்பும்படியாக தேவனுடைய வெளிப்படுத்துதல் இன்னும் வரவில்லை. பார்த்தீர்களா? நாம் இப்பொழுது அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை இரகசியமாயுள்ள அந்த ஏழு இடிகள் தான், அவளை மறுபடியுமாக எழுப்பும். பாருங்கள், ஆம். அவர் அதை அனுப்புவார். அவர் அதை வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள்.

நீங்கள் விரும்பினால் அதைத் திரிக்கலாம், ஆனால் ஏழு இடி முழக்கங்கள் மணவாட்டிக்கு வெளிப்பாட்டினாலும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தினாலும் ஊக்குவித்தலை அளிக்கும், இது தேவனுடைய தீர்க்கதரிசி மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதன் மூலம் மட்டுமே வருகிறது. இது இப்போது உலகம் முழுவதும் நடைபெறுகிறது. தேவன் தம்முடைய மணவாட்டியை தனது வார்த்தையால் ஊக்குவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே நம்முடைய சத்துருவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

உன்னுடைய கரங்களை அவர்களிடத்திலிருந்து விலக்கி வை. அவர்கள் போகுமிடத்தை அறிந்திருக்கின்னர், ஏனெனில் அவர்கள் என் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். என் எண்ணெயினால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் என் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறார்கள். ‘நான் அவர்களை மறுபடியும் உயிரோடெழுப்புவேன்.’ அதை சேதப்படுத்த வேண்டாம்! அவர்களை குழப்பமுறச் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

அவர் நம்முடைய சத்துருவிடம் அவனுடைய மோசமான கைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் சுகவீனம் இன்னும் நம்மைத் தாக்க முடியுமா? ஆம். நமக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளதா? ஆம். ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்றும் நமக்கும் கூட சொன்னார்.

இது ஆழமானது. மெதுவாகவும் மீண்டும் மீண்டும் படியுங்கள்.

அது வார்த்தையாகுமுன்பு சிந்தையாயிருக்கும். ஒரு சிந்தை என்பது உருவாக்கப்படவேண்டும். சரி. ஆகவே, தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப்பாகிறது. அதாவது, அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தையை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அதன்பின்னர், நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், இது இன்னும் ஒரு சிந்தையாகவே இருக்கின்றது.

அது பேசப்படும்போது அவருடைய சிந்தனைகள் ஒரு சிருஷ்டிப்பாக மாறியது. பின்னர், அவருடைய சிந்தனைகள் வார்த்தையாக வழங்கப்பட்டு, நமக்கு வெளிப்படுத்தப்பட்டன. இப்போது நாம் அதைப் பேசும் வரை அது இன்னும் நம்முடன் ஒரு சிந்தனையாகவே இருக்கும். எனவே நாம் அதைப் பேசுகிறோம்... அதை விசுவாசிக்கிறோம்.

நான் ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. நான் கிறிஸ்துவின் மணவாட்டி. உலகம் தோன்றுவதற்கு முன்பே நான் அவருடைய மணவாட்டியாகத் தெரிந்து கொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டேன், அதை எதுவும் மாற்ற முடியாது. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது. அது எனக்கு அவருடைய வார்த்தை. நான் அந்த வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவாளி. அவர் என் நோய்களை எல்லாம் குணமாக்குகிற தேவனாகிய கர்த்தர். எனக்கு என்ன தேவையோ அது என்னுடன் உள்ளது, தேவன் அவ்வண்ணமாய் கூறினார்.

எளிமையில் தேவன்: வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது.

ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும், தங்களுடைய செய்தியையும் நிரூபிக்க “மேற்கோள்களை” பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான், நானும் அவ்வாறு செய்கிறேன், அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்ல மேற்கோள்களை மட்டுமே தருகிறேன்: ஒலிநாடக்களோடு தரித்திருங்கள்; அந்தக் சத்தத்தைக் கேளுங்கள். அந்த சத்தம் தேவனுடைய சத்தமாய் உள்ளது. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும், வேறு யாரோ கூறுவதை அல்ல. அந்த சத்தமே நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாகும்.

மற்றவர்கள் உங்களை தங்களுடைய ஊழியத்திற்கு, தங்களுடைய சபைக்கு, அவர்களுடைய வியாக்கியானத்திற்கு, அவர்களுடைய வெளிப்பாட்டிற்குக் கொண்டுவர மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். “உங்கள் போதகருடன் தரித்திருங்கள்.” (சரி, எனக்கும் கூட அது பிடிக்கும், ஏனென்றால் நாங்கள் அதை விரும்புகிறோம், ஒரு வித்தியாசமான போதகர்.) “அவர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் அல்ல.” “அவர் ஒருபோதும் சபையில் ஒலிநாடாக்களை இயக்கும்படி கூறவேயில்லை.”

தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்கவேண்டாம். சுத்தமான, கலப்படமில்லாத ஒருவள் அவருக்குத் தேவை, வேறொருவனுடன் சரசம் செய்யும் ஒருவள் அல்ல. என் மனைவி வேறொருவனுடன் சரசம் செய்வதை நான் விரும்பமாட்டேன். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட விவேகத்திற்கு நீங்கள் செவி சாய்த்தால், நீங்கள் சாத்தானுடன் சரசம் செய்கின்றீர்கள் என்று அர்த்தமாகின்றது. ஆமென்! அது உங்களை பக்திபரவசமடையச் செய்கிறதல்லவா? நீங்கள் கலப்படமற்றவராய் இருக்க தேவன் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையில் நிலைநில்லுங்கள். அதனுடன் நிலை நில்லுங்கள். சரி.

நானும் என் வீட்டாருமோவென்றால், நாங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி, அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக மாம்சமாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை பேசுவதை கேட்டு பின்பற்றுவோம். நாங்கள் அதில் எங்களுடைய தனிப்பட்ட வியாக்கியானத்தை சேர்க்க மாட்டோம்; நாங்கள் சரசமாடவோ அல்லது எந்த தக்க அறிவிற்க்கும் செவி கொடுக்க மாட்டோம். ஒலிநாடாக்களில் அது உரைக்கப்பட்டப்படியே அந்த வார்த்தையோடு நாங்கள் தரித்திருப்போம். இது தேவன் எளிமையில் உள்ளதாகும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, மூன்றாம் முத்திரை 63-0320 என்ற செய்தியை நாங்கள் கேட்கும் போது எங்களுக்கு அது என்ன ஒரு மகிமையான நேரமாய் இருக்கப் போகிறது. இன்றைக்கான வார்த்தையின் பேரில் நாங்கள் ஒன்றிணையும்போது நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 25:3-4
பரி. யோவான் 1:1, 1:14, 14:12, 17:17
அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம்
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 4:12, 13:8
1 யோவான் 5:7
லேவியராகமம் 8:12
எரேமியா 32-ம் அதிகாரம்
யோவேல் 2:28
சகரியா 4:12

 

நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவேனாக. நான் ஐந்து- வகையான ஊழியத்திற்கு எதிரானவன் அல்ல. ஐந்து-வகையான ஊழியத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு ஊழியருக்குச் செவிசாய்ப்பது தவறென்று நான் நினைக்கவில்லை. தேவன் உங்களை எங்கே வைத்திருக்கிறாரோ அங்கு உங்கள் போதகருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால், நம்முடைய காலத்தில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று நான் நம்புகிறேன். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். நான் தவறாக இருக்கலாம், உங்கள் போதகர் தவறாக இருக்கலாம், ஆனால் நாம் (இந்தச் செய்தி உண்மையானது என்றும், சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் நாம் விசுவாசிப்பதாக கூறுவோமேயானால்) ஒப்புக் கொள்ள வேண்டும். ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் செய்தியை விசுவாசிக்கவில்லை. எனவே, நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் இதுவே என்று நான் நம்புகிறேன். நீங்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டியதில்லை, வேறு யாருக்கும் செவி கொடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும்.

சனி, 22 மார்ச், 2025

அன்புள்ள ஒலிநாடாவை கேட்பவர்களே,

கே:  ஒலிநாடாக்களை இயக்கி கேட்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோமா?
ப:  ஆம்.

கே:  ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை விட மணவாட்டிக்கு அதிகம் தேவைப்படுகிறதா?
ப:  இல்லை.

கே:  ஒலிநாடாக்களை மாத்திரமே கேட்பதால் நாம் எதையாவது இழுந்து கொண்டிருக்கிறோமா?
ப:  இல்லை.

கே:  ஒலிநாடாக்களை மாத்திரமே கேட்பதினால் நாம் மணவாட்டியாய் இருக்க முடியுமா?
ப:  மிகவும் உறுதியாக, ஆம்!

“கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யார்.” என்பதை இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள்.

இவ்வாறு, நமக்குத் தேவையான அனைத்தும் உரைக்கப்பட்டு, ஒலிநாடாக்களில் உள்ளன; அப்படியில்லையென்றால், அவருடைய ஏழாவது தூதன் பூமிக்குத் திரும்பும்போது, அவர் அப்பொழுது நமக்குச் சொல்வார்.

ஓ மணவாட்டியே, உலகெங்கிலும் கிறிஸ்துவின் மணவாட்டியோடு என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்வோமாக. பிதாவானவர் தம்முடைய மணவாட்டியை தம்முடைய சத்தத்தால் ஒன்றாகக் கூட்டி, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்.

இடி முழக்கங்கள் என்னவாயிருந்தன என்று அவர் நம்மிடம் சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: "ஒரு பலத்தை இடி முழக்கம் தேவனுடைய சத்தமாக இருக்கிறது”. மணவாட்டிக்கு தேவனுடைய சத்தம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய ஏழாவது தூதனாகிய செய்தியாளர், வில்லியம் மரியன் பிரான்ஹாம்.

எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் உண்டாகும் என்று அவர் கூறினார். அந்த ஏழு இடி முழக்கங்களினூடாக, அதுவே எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்க்கும்.

கர்த்தருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது. அவருக்கு ஒரு சிறந்த முறைமை இருந்தால், அவர் அதைப் பயன்படுத்தியிருப்பார். அவர் ஆரம்பத்தில் சிறந்த முறைமையைத் தேர்ந்தெடுத்தார், அவரால் மாற்ற முடியாது, மாற்றவும் மாட்டார்.

இவ்வாறு, தேவனுடைய சத்தம், அவருடைய ஏழாம் தூதனின் மூலமாக பேசி, அவருடைய மனவாட்டியை ஒன்று சேர்த்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு அளித்துக்கொண்டிருக்கிறது.

1933-ம் வருடம், நதியண்டை அந்த நாள் முதற்கொண்டு, வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனுடைய சத்தமாயிருந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று முழங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், மணவாட்டியை அழைத்து, ஒன்று சேர்த்து, வழிநடத்த அனுப்பப்பட்டார் என்பதையும் சபையானது சந்தேகித்திருக்கவில்லை.

நம்முடைய கர்த்தராகிய இயேசு புத்தகத்தை திறந்து, முத்திரைகளை உடைத்து, அதை நமக்கு வெளிப்படுத்தும்படி, அவருடைய ஏழாம் தூதனிடத்திற்கு பூமிக்கு அனுப்புகின்றபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் கேட்க வருமாறு நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்!

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

நாள்: மார்ச் 23, 2025 ஞாயிற்றுக்கிழமை
செய்தி: இரண்டாம் முத்திரை 63-0319
நேரம்: 12:00 பிற்பகல்., ஜெபர்சன்வில் நேரம்

 

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

பரி. மத்தேயு 4:8 / 11:25-26 / 24:6
பரி. மாற்கு 16:16
பரி. யோவான் 14:12
2 தெசலோனிக்கேயர் 2:3
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 2:6 / 6:3-4 / 17வது அதிகாரம் / 19:11-16
யோவேல் 2:25
ஆமோஸ் 3:6-7