அன்புள்ள விலையேறப்பெற்ற நண்பர்களே,
என்னுடைய அன்பார்ந்தவர்களே, சுவிசேஷத்தில் எனக்கு அருமையானவர்களே, தேவனுக்கென்று நான் பெற்றெடுத்த பிள்ளைகளே.
நம்முடைய கர்த்தருடன் நமக்கு உண்டாயிருந்த என்னே ஒரு அற்புதமான வார இறுதி. அவருடன் நேரத்தை செலவிடுவது, அவரிடம் பேசுவது, அவருடைய சத்தத்தைக் கேட்பது, அவரை ஆராதிப்பது, அவருக்கு நன்றி செலுத்துவது, நாம் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அவருக்குச் சொல்வது, அது வேறு எதையும் போல இல்லை.
இந்த நாளில் ஜீவிக்கும்படியாய் இருப்பதும், வேதாகமத்தின் ஒரு பகுதியாக இருந்து நிறைவேற்றப்படுவதுமான இது என்னே ஒரு கனத்திற்குரியதாய் இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் உள்ள அனைத்தையும் அழிவுள்ள மானிட வார்த்தைகளினால் எப்படி வெளிப்படுத்த முடியும்? தீர்க்கதரிசி கூறினது போல், அது நான் அல்ல, உள்ளே ஆழமாக ஏதோ ஒன்று இருந்து கொண்டு, அது என்னுள் தள்ளப்பட்டு கொப்பளிக்கிறது; பரிசுத்த ஆவியின் ஒரு ஆர்ட்டீசியன் ஊற்று. இது மணவாளனுக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதலாக உள்ளது.
ஒரு மணவாட்டி தன்னுடைய கல்யாணத்திற்கு முன்பே எவ்வளவு உற்சாகமாக இருக்கிறாள். கடைசி சில வினாடிகள் கடந்து செல்லும்போது அவளுடைய இதயம் மிக வேகமாக துடிக்கத் தொடங்குகிறது....நேரம் இறுதியாக வந்துவிட்டது என்பதை அவள் அறிவாள். "நான் என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். அவர் எனக்காக வருகிறார். இப்போது நாம் ஒன்றாக இருப்போம்."
நாம் உண்மையிலேயே காலத்தின் கடைசி இறுதி தருணங்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். மணவாட்டி சீக்கிரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, நம்முடைய தேனிலவு விருந்துக்கு அழைக்கப்படுவாள். அவர் நம்மை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். இனி எந்த கேள்வியும் இல்லை; இனி ஆச்சரியப்படுவதற்கில்லை; நாம் மணவாட்டியாய் இருக்கிறோம்.
அவர் இன்னும் முடிக்கவில்லை. அவர் இன்னும் தனது அன்பான தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை ஆசீர்வதித்து, ஊக்குவிக்க விரும்புகிறார். அவர் அவளை ஊக்குவிப்பதிலும், அவளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் அவளிடம் கூறுவதையும் அவர் எவ்வளவாய் நேசிக்கிறார். அவர் அவளைக் குறித்து எவ்வளவு பெருமைப்படுகிறார்.
அவளுக்குக் கொடுக்க அவருக்கு இன்னொரு மிக விசேஷித்த வெளிப்பாடு இன்னமும் உள்ளது. உலகில் உள்ள பல சத்தங்கள் ஒலிநாடாக்களை இயக்குவதை மறுக்கும் போது, மணவாட்டி அவருடைய பரிபூரண சித்தத்திலும், அவர் அருளின வழியிலும் இருக்கிறாள் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த விரும்புகிறார்.
அவரது திட்டம் எப்போதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவருடைய மணவாட்டி எப்போதும் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். மக்கள் எப்போதும் தங்களுடைய சொந்த வழியை, அவர்களுடைய கருத்தையே விரும்பி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வழிநடத்த ஒரு வித்தியாசமான தலைவரை விரும்புகிறார்கள். ஆனால் தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த ஒரு தலைவரை அனுப்பினார், அவர்தாமே, பரிசுத்த ஆவியானவர், இந்த நாளின் பரிசுத்த ஆவியானவர், மற்ற எல்லா நாட்களிலும் இருந்தது போலவே, தேவனுடைய தீர்க்கதரிசி.
மனிதர்கள் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்பியுள்ளனர். சாமுவேலின் நாளில், சாமுவேல் அவர்களை வழிநடத்துவதை விரும்பாமல் தேவனை அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். சாமுவேலும் கூட ஒரு மனிதனாக இருந்ததால் இது விசித்திரமாகத் தோன்றியது, ஆனால் வித்தியாசம் என்னவென்றால், அவர்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்ட மனிதனாய் சாமுவேல் இருந்தான். அது சாமுவேலை அல்ல, தேவன் சாமுவேலைப் பயன்படுத்தினதாக இருந்தது. அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சத்தமாயும், அவர்களை வழிநடத்தும் மனிதனாயும் இருந்தார், ஆனால் அவர்கள் மற்ற சத்தங்களையே விரும்பினர்.
ஜனங்கள் சாமுவேலுக்குப் பயந்தனர் என்பதை சவுல் அறிந்திருந்தான், எனவே அவன் "சவுலும் சாமுவேலும்" என்று அறிவிக்க வேண்டியிருந்தது. மக்கள் தன்னைப் பின்பற்றும்படி அவர்களைப் பயமுறுத்த வேண்டியிருந்தது. உண்மையாகவே, அவன் அழைக்கப்பட்டான். உண்மையாகவே, அவன் சாமுவேலால் அவர்களுடைய ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தான், ஆனால் தேவன் இன்னமும் ஒரு அருளப்பட்ட வழியை உடைவராயிருந்தார், மேலும் அவர்களை வழிநடத்த, சவுலை வழிநடத்தவும் கூட அவர் தீர்க்கதரிசியாக தெரிந்து கொண்டார். தேவன் தம்முடைய தீர்க்கதரிசியிடம் பேசி, சவுல் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். சவுல் தானும் அபிஷேகம் செய்யப்பட்டதாக தீர்மானம் செய்து, தீர்க்கதரிசியின் வார்த்தையை மட்டும் கேட்க விரும்பவில்லை, தேவன் அவனுடைய ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டார்.
ஆதலால் அவர்கள் அதைச் செய்தபோது, யுத்தத்தில் எதிரிகளுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டபோது, அப்பொழுது சவுல் இரண்டு காளைகளைக் கொன்று எல்லா ஜனங்களுக்கும் அனுப்பினான். இதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், சவுல் காளையைத் துண்டாக வெட்டி இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் அனுப்பி, “சாமுவேலின் பின்னாலேயும் சவுலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ இந்த காளைக்கு செய்யப்பட்டதே அதே போல் அவனுடைய மாடுகளுக்கும் செய்யப்படும்'' என்றான். அவன் எவ்வளவு வஞ்சகமாக தன்னை தேவனுடைய மனிதனுடன் இணைத்துக் கொண்டான் என்று பார்த்தீர்களா? அது எவ்வளவு-எவ்வளவு கிறிஸ்தவத் தன்மையற்ற ஒரு செயல்! சாமுவேலின் நிமித்தமே ஜனங்களுக்கு பயமுண்டாயிருந்தது. ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு பயந்திருந்தார்கள் என்பதனால், அவர்கள் தன்னையும் பின்பற்றும்படி சவுல் செய்தான். ''அவர்கள் சாமுவேலையும் சவுலையும் பின்பற்றட்டும்” என்றான்.
ஒரு நாள் சவுல் மிகவும் தொல்லைக்குள்ளான. தேவனிடத்திலிருந்து அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவனுக்கு ஆறுதலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுக்குப் பதில்கள் தேவைப்பட்டன. தனக்குத் தேவையான பதிலைப் பெற எங்கு செல்ல வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்; ஒரே ஒரு இடம் மட்டுமே இருந்தது, தேவனுடைய தீர்க்கதரிசி, சாமுவேல். அவன் மரித்துவிட்டிருந்தான், ஆனால் அவன் இன்னமும் தேவனுடைய சத்தமாக பரதீசிலும் கூட இருந்தான்.
இந்தக் கடைசி நாளில் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த அவர் யாரைத் தேர்ந்தெடுத்தார் என்பதைத் தம்முடைய மணவாட்டி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிதா விரும்பினார், எனவே அவர் தம்முடைய பலமுள்ள தூதனை காலத்தின் திரைக்கு அப்பால் அழைத்துச் சென்று மீண்டும் ஒருமுறை நமக்குச் சொல்லவும், ஆறுதல்படுத்தவும், நாம் அவருடைய பரிபூரணமான மற்றும் அருளப்பட்ட சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நமக்கு ஊக்குவிக்கவும் செய்தார்.
தீர்க்கதரிசி கூறிக் கொண்டிருக்கிற எல்லாவற்றுக்கும் மிகவும் கவனமாகக் செவி கொடுங்கள்.
இப்போது, நீங்கள் இதை மீண்டும் சொல்ல நான் விரும்பவில்லை. இது என் சபைக்கு முன்பாக, அல்லது நான் மேய்ப்பராய் இருந்து கொண்டிருக்கிற என் ஆடுகளுக்கு முன்பாகவோ உள்ளது.
அவர் நமக்கு எதையும் சொல்வதற்கு முன், இது நமக்கும், அவருடைய சபைக்கும், அவருடைய ஆடுகளுக்கும், அவர் மேய்ப்பனாய் இருந்து வருபவர்களுக்கும் மட்டுமே என்று நமக்குத் தெரியப்படுத்த விரும்புகிறார். எனவே, "சகோதரன் பிரன்ஹாம் என்னுடைய மேய்ப்பர்" என்று நீங்கள் சொல்ல முடியாவிட்டால், நான் அதை முன்பே சொல்லியிருக்கிறேன், அப்படியானால் மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியமில்லை, இது உங்களுக்கானது அல்ல, மேலும் இதை நாம் திரும்பத் திரும்ப எவருக்கும் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பவில்லை, ஆனால் "சகோதரன் பிரான்ஹாம் என்னுடைய மேய்ப்பர்" என்று விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமேயாகும்.
"சகோதரன் பிரான்ஹாம் நம்முடைய மேய்ப்பர்" என்று சொல்வதற்காக நாம் அதிகம் விமர்சிக்கப்படும் கேள்விக்கு நம்முடைய பதில் உள்ளது. (அவர்கள்தான் ஒலிநாடாவைக் கேட்கும் மக்கள்.) அவர்கள் சொல்வது சரி, அவர் இருக்கிறார், நாங்கள் அப்படித்தான்.
தயவுசெய்து என் மீது கோபப்பட வேண்டாம், நான் யாரையும் வருத்தப்படுத்த இந்த காரியங்களைச் சொல்லவில்லை, அது தவறாக இருக்கும், ஆனால் அவர் மணவாட்டிக்கு கூறிக் கொண்டிருப்பது இதுதான். நான் என் வியாக்கியானத்தை அதற்குக் கொடுக்கவில்லை, அவர் அதை வெளிப்படையாகச் சொல்கிறார்... தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை.
நான் இந்த சரீரத்திலிருந்தேனோ அல்லது சரீரத்துக்கு புறம்பேயிருந்தேனோ, அது ஒரு மறுரூபமாகுதலோ…அது நான் வழக்கமாக காணும் எந்த தரிசனத்தைப் போலும் இல்லை.
இப்பொழுது இது அவர் எப்போதும் கண்டிருந்த எந்த தரிசனத்தைப் போலும் இருக்கவில்லை என்று அவர் நமக்கு சொல்லுகிறார். அவர் ஒருபோதும் சென்றிராத இடத்திற்குச் சென்றார். அவர் எப்போதும் கண்டிருந்த எந்த தரிசனத்தையும் விட அது மகத்தானதாய் இருந்தது. அவர் கனவு கண்டு கொண்டிருக்கவில்லை, அவர் படுக்கையில் தன்னுடைய சரீரத்தைப் பார்த்தார்; அவர் அங்கே இருந்தார்.
இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியே, அது உண்மையிலேயே நன்கு பதியட்டும். அது மறுபுறம் இருந்த இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாயிருந்தது, நிகழ்காலத்தில், அவரிடம் ஓடி வந்து, ஆரவாரமிட்டுக்கொண்டும், அவரைப் பிடித்து, கைகளை அவர் மீது போட்டுக்கொண்டு, "ஓ, எங்களுடைய விலையேற்ப்பெற்ற சகோதரனே!" என்று கூறினர்.
அவர் அங்கே இருந்தார்; அவரால் அதை உணர முடிந்தது; அவரால் அவர்கள் கூறினதைக் கேட்க முடிந்தது. அவர்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அவர் நின்று, அவர் வாலிபமாக இருப்பதைப் பார்த்தார். அவர் தன்னுடைய கைகளை தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு கிடந்த தன்னுடைய பழைய சரீரத்தைத் திரும்பிப் பார்த்தார்.
இப்போது அவர் அங்கே இருந்தார் என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் அவர் பார்த்துக்கொண்டிருந்தது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாயிருந்தது. இப்போது மேலிருந்து ஒரு சத்தம் அவரிடத்தில் என்ன கூறிக் கொண்டிருந்தது என்பதை நாம் கேட்போமாக.
அப்பொழுது எனக்கு மேலே இருந்து பேசிக்கொண்டிருந்த அந்தக் சத்தம், "உங்களுக்குத் தெரியும், தீர்க்கதரிசிகள் தங்களுடைய மக்களுடன் சேர்க்கப்பட்டனர் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது" என்று கூறியது.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு மாத்திரமே காண்பித்துக் கொண்டும், உற்சாகப்படுத்திக் கொண்டுமிருந்தார் என்பது மாத்திரமல்ல, ஆனால் அதற்கு இன்னும் நிறைய இருந்தது. அவர் திரும்பி வந்து, நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், அது என்னவாக இருக்கும் என்பதை மட்டுமல்ல, "இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம்" நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும், மணவாட்டி இருக்கும் இடத்திற்கு நாம் எப்படிச் செல்கிறோம் என்றும் நமக்குச் சொல்கிறார்.
சகோதரன் பிரான்ஹாம் இயேசுவை மிகவும் ஆவலாக பார்க்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவர்கள் அவரிடம்:
"இப்போது, அவர் சற்று உயரத்தில், அந்த வழியில் மேலே இருக்கிறார்" என்றனர், "என்றோ ஒருநாள் அவர் உங்களிடம் வருவார்" என்றும் கூறினர்.
அவர் யாராயிருந்தார் என்று அவர்கள் அவரிடம் சொல்லத் தொடங்கினார்கள்.
“நீர் ஒரு தலைவராக அனுப்பப்பட்டீர். தேவன் வருவார். அவர் வரும்போது, நீர் அவர்களுக்குக் கற்பித்தபடி, அவர்கள் உள்ளே செல்கிறார்களா இல்லையா என்பதை, அவர் முதலில் உம்மை நியாயந்தீர்ப்பார். உம்முடைய போதனையின்படி நாங்கள் உள்ளே செல்வோம்.”
ஒரு தலைவராக யார் அனுப்பப்பட்டார்? யார் நமக்குக் கற்பித்தபடி நாம் நியாயந்தீர்க்கப்படப் போகிறோம்? யாருடைய போதனையின்படி நாம் பரலோகத்திற்குள் பிரவேசிப்போம்?
சகோதரன் பிரான்ஹாம் சொன்னதைத்தான் நான் என் மக்களுக்குக் கற்பிக்கிறேன் என்று ஒருவர் சொல்லலாம்... ஆமென், நீங்கள் அதைத் தான் செய்ய வேண்டும், சிலர் செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் அதை "சகோதரரன் பிரான்ஹாமும் நானும்" என்று ஆக்க வேண்டாம்.
நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதை அவர் உறுதிசெய்ய விரும்புவதால், தொடர்ந்து படிப்போம்.
ஜனங்கள் கூச்சலிட்டு, “அது எங்களுக்குத் தெரியும். நாங்கள் உம்முடன் என்றோ ஒரு நாள் பூமிக்குத் திரும்புவோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறினர். “இயேசு வருவார், நீர் எங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையின்படி நீர் நியாயந்தீர்க்கப்படுவீர்.
அவர் எங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையால் நாங்கள் நியாயந்தீர்க்கப்படுவோம். இவ்வாறு, தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் சொன்னதிலிருந்து நியாயத்தீர்ப்பு வருகிறது. நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் அல்ல என்று எப்படி எவரேனும் சொல்ல முடியும்?
“பின்னர் நீர் ஏற்றுக்கொள்ளப்படுகிற அந்த நேரத்தில், நீங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்,”
நீங்கள் ஆயத்தமா. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கான கர்த்தருடைய பரிபூரண சித்தம் என்ன என்பதை இது உறுதிப்படுத்தும். மணவாட்டி தீர்க்கதரிசியிடம் அவர் என்ன செய்வார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறாள். வேறு யாரும் இல்லை. ஒரு குழு அல்ல. மற்றொரு மேய்ப்பர் அல்ல, தேவனுடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
“அப்பொழுது, உம்முடைய ஊழியத்தின் வெற்றிச் சின்னங்களாக, நீர் எங்களை அவருக்குக் அளிப்பீர்.”
யார் நம்மை கர்த்தராகிய இயேசுவிடம் சமர்ப்பிக்கப்போவது?
தீர்க்கதரிசி சொல்வதை மட்டும் கேட்பது முடிந்துவிட்டதா?
சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் ஒலிநாடக்களை இயக்கும்படி சொல்லவில்லையா?
நீங்கள் மணவாட்டியாக இருக்க விரும்பினால், நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பது மேலானதாகும் என்று மணவாட்டி சத்தமிட்டு கூறிக் கொண்டிருக்கிறாள்.
இன்னும் நம்பிக்கை வைக்கப்படவில்லையா? சரி, இன்னும் கூட நிறைய இருக்கிறது.
"நீர் எங்களை அவரிடம் வழிநடத்துவீர், மேலும், நாம் அனைவரும் சேர்ந்து, என்றென்றும் வாழ பூமிக்குத் திரும்புவோம்" என்று கூறினர்.
யார் நம்மை அவரிடம் வழிநடத்துவார்? மணவாட்டியை யார் வழிநடத்துகிறார்? மணவாட்டி அவரிடம், மணவாட்டியை அவர் அவரிடம் வழிநடத்துவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள், பிறகு நாம் என்றென்றும் வாழ பூமிக்குத் திரும்புவோம்.
உங்களிடம் ஏதேனும் வெளிப்பாடு இருந்தால். இந்தச் செய்தியை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறினால், முதலில் அவருடைய சத்தத்தை, ஒலிநாடாக்களை, முன்வைக்க வேண்டும் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். போதகர்களே, தீர்க்கதரிசியை உங்கள் பிரசங்க பீடங்களில் மீண்டும் வைக்கவும். அந்தக் சத்தத்தால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகின்றபடியால், ஒலிநாடாக்களே நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக இருக்கிறது.
வார்த்தையின்படி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் நாம் நம்முடைய நாளுக்கான அவருடைய பரிபூரண மற்றும் அருளப்பட்ட சித்தத்தில் இருக்கிறோம்.
புறக்கணிக்கப்பட்ட ராஜா 60-0515M: என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவன் அவருடைய வார்த்தைக்கான உண்மையான வெளிப்பாட்டிற்கு உங்களுடைய கண்களை திறந்திருப்பாரேயானால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி 63-0324e ஏழாம் முத்திரை என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி 63-0324m முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும் என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்க தயங்காதீர்கள்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி 63-0323 ஆறாம் முத்திரை என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்க தயங்காதீர்கள்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,
இந்த ஈஸ்டர் வார இறுதியில் மணவாட்டி எவ்வளவு மகிமையான நேரத்தை உடையவளாயிருப்பாள். இது நம்முடைய ஜீவியங்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்; நாம் ஒருபோதும் மறக்க முடியாத நேரம். எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான வார இறுதி.
நாம் நம்முடைய சாதனங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்கள் அனைத்தையும் மூடிவிட்டு, நம்முடைய ஜீவியங்களை அவருக்கு மீண்டும் அர்ப்பணிக்கிறபடியால், ஒவ்வொரு ஈஸ்டரும் மணவாட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நேரமாக இருந்து வருகிறது, ஒவ்வொரு நாளும் நாம் அவரிடம் பேசும்போதும், அவருடைய வார்த்தையை கேட்கும்போதும், இது ஆராதனையில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழு வார இறுதியாயுள்ளது.
உலகத்தை மூடிவிட்டு அவரிடம் பேசுவது மிகவும் கடினமாகிவிட்ட அளவிற்கு, சத்துரு நம்முடைய ஜீவியங்களை மிகவும் திசைதிருப்பவும், ஜீவியத்தின் பல காரியங்களில் பரபரப்பாக வைத்திருக்கிறான். வார்த்தையைக் கேட்க நாம் பயன்படுத்தும் சாதனங்களைக் கூட, சாத்தான் நம்முடைய நேரத்தை அவைகள் மூலம் ஆபத்தில் ஆழ்த்த பயன்படுத்துகிறான்.
ஆனால் இந்த வார இறுதி வித்தியாசமாக இருக்கும், மேலும் நாம் இதுவரை அனுபவித்த வேறு எந்த ஈஸ்டர் வார இறுதியையும் போல அல்ல.
முத்திரைகளைக் கேட்க கர்த்தர் என் இருதயத்தில் வைத்தபோது, தேதிகள் எப்படி அமையும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதும் போல, அவருடைய நேரம் பரிபூரண மானது. இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியின் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி, 4-வது முத்திரையான, கழுகின் காலத்தை கேட்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது; எவ்வளவு பொருத்தமானது.
ஆனால் இப்போது, கர்த்தர் நமக்காக இன்னும் அதிகமாக வைத்திருக்கிறார். நான் கூறினது போல், முத்திரைகளைக் கேட்க கர்த்தர் என் இருதயத்தில் வைத்ததாக உணர்ந்தபோது, தொடரில் 10 செய்திகள் இருப்பதால் அவற்றை கேட்டு முடிக்க பல வாரங்கள் ஆகும் என்று எனக்குத் தெரியும்.
நான் நாட்காட்டியைப் பார்த்தபோது, முழுத் தொடரையும் கேட்டு முடிப்பதற்குள் ஈஸ்டர் வந்துவிட்டது என்பதைக் கண்டேன். முத்திரைகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று யூகிக்கிறேன் என்றும், அவர் எனக்கு ஈஸ்டருக்கான செய்திகளைத் தருவார் என்று நான் எனக்குள் நினைத்தேன்.
ஒரு நொடியில் நான் பார்த்தேன்...அது பரிபூரணமாக இருக்கும். ஈஸ்டர் ஞாயிறு காலை ஏழாம் முத்திரை கேட்கப்படவுள்ளதால், நாம் ஏழு முத்திரைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்னால் அதை நம்ப முடியவில்லை, அது அட்டவணையில் பரிபூரணமாக சீரமைக்கப்பட்டுள்ளது. அப்போதே எனக்குத் தெரியும், இது நீர்தான், கர்த்தாவே.
நாம் ஒருவருக்கொருவர், மற்றும் அவருடன் சேர்ந்து ஈஸ்டர் நேரத்திற்காக மிகவும் உற்சாகமாகவும் மிகுந்த எதிர்பார்ப்பிலும் நான் இருந்து வருகிறேன். அவர் நமக்காக அட்டவணையை உருவாக்கினார் என்பது எனக்குத் தெரியும்.
ஆகையால், கர்த்தருக்குச் சித்தமானால், நமது மிகவும் சிறப்பு வாய்ந்த ஈஸ்டர் வார இறுதி முழுவதும் நாம் தொடர்ந்து முத்திரைகளைக் கேட்போம்.
வியாழக்கிழமை
இஸ்ரவேல் புத்திரரின் யாத்திரைக்கு முன்பு, பஸ்கா பண்டிகையை நினைவுகூரும் விதமாக, கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனத்தை மேற்கொண்டது வியாழக்கிழமை இரவாயிருந்தது. நம்முடைய புனித வார இறுதிக்கு முன்பு, நம்முடைய வீடுகளில் கர்த்தருடன் உரையாடி, நம்முடைய பாவங்களை மன்னிக்கவும், நம்முடைய பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவும் அவரிடம் கேட்க நமக்குக் கிடைத்த என்னே ஒரு வாய்ப்பு.
கர்த்தாவே, இதை அருளும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். விடாய்த்துப்போனவர்களைத் தேற்றும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தைத் தாரும். விடாய்த்துயப்போனவர்களுக்கு சமாதானத்தையும், பசியாயுள்ளவர்களுக்கு ஆகாரத்தையும், தாகமாய் உள்ளவர்களுக்கு தண்ணீரையும், வருத்தப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தையும், சபைக்கு வல்லமையையும் தாரும். கர்த்தாவே, அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராபோஜனத்தை நாங்கள் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், இயேசுவை எங்கள் மத்தியில் கொண்டு வாரும். கர்த்தாவே, அவர் எங்களை விசேஷித்த முறையில் சந்திக்க வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம்.
கர்த்தாவே, மற்றவர்களையும், கர்த்தருடைய வருகைக்காக சந்தோஷத்தோடு காத்துக் கொண்டும், தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மற்றும் புகைப்போக்கிகள் அனைத்தையும் துடைத்து மெருகேற்றி, இருண்ட இடங்களில் சுவிசேஷ வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிற உலகத்தை சுற்றிலுமுள்ள யாவரையும் ஆசீர்வதியும்.
நாம் அனைவரும் மாலை 6:00 மணிக்குத் தொடங்குவோம். உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில் இராப்போஜனம் 62-0204 என்ற செய்தியைக் கேட்கவும், பின்னர் தீர்க்கதரிசி நம்மை நம்முடைய விசேஷித்த இராப்போஜனம் மற்றும் பாதங்களை கழுவும் ஆராதனைக்கு அழைத்துச் செல்வார், இது லைஃப்லைன் பயன்பாட்டில் (ஆங்கிலத்தில்) இயங்கும், அல்லது கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் ஆராதனையை பதிவிறக்கம் செய்யலாம்.
செய்தியைத் தொடர்ந்து, நாம் நம்முடைய குடும்பங்களுடன் நம்முடைய வீடுகளில் கூடி கர்த்தருடைய இராப்போஜனத்தை எடுத்துக்கொள்வோம்.
வெள்ளிக்கிழமை
நாம் காலை 9:00 மணிக்கு நம்முடைய குடும்பங்களுடன் ஜெபத்திற்குச் செல்வோம், பின்னர் மீண்டும் மதியம் 12:00 மணிக்கு, கர்த்தரை நம்முடன் இருக்கவும், அவருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது நம்முடைய வீடுகளை பரிசுத்த ஆவியால் நிரப்பவும் அழைப்போம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரியில் இருந்த அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்குவதைப் பார்த்து, பின்னர் பிதாவைப் பிரியப்படுத்துவதை எப்போதும் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்:
இந்த நாள், மிகவும் முக்கியமான, மகத்தான நாட்களில் ஒன்றாக அமைந்திருக்குமானால், அந்த நாள் நமக்கு பொருட்படுத்தின மூன்று வித்தியாசமான காரியங்களை நான் நோக்கி பார்ப்போமாக. நாம் நூற்றுக்கணக்கானவைகளை எடுத்து பேசலாம். ஆனால், இந்த காலையில், நான் மூன்று வெவ்வேறு மிக முக்கியமான காரியங்களை தெரிந்து கொண்டுள்ளேன், அந்த கல்வாரி நமக்கு பொருட்படுத்தினதாக நாம் நோக்கிப் பார்க்க வேண்டிய இன்றியமையாத காரியங்களை அடுத்த சில நிமிடங்களில் பார்ப்போம். அது இங்குள்ள ஒவ்வொரு பாவியையும் கண்டித்துணர்த்தி, ஒவ்வொரு பரிசுத்தவானையும் முழங்கால்படியிடச் செய்து, வியாதிப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நபரும் தன்னுடைய விசுவாசத்தை தேவனிடமாக உயர்த்தி சுகமடைந்தவர்களாக நடந்து செல்லவும், ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படவும்; பின் வாங்கிப்போன ஒவ்வொருவரும் திரும்பி வந்து, தன்னைக் குறித்து வெட்கமடையவும், ஒவ்வொரு பரிசுத்தவானும், களிகூர்ந்து மேலும் புதிதாகப் பற்றிக் கொண்டு புது நம்பிக்கையைப் பெற வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.
பின்னர் மதியம் 12:30 மணிக்கு, நம்முடைய வீடுகளில் ஒன்றாகக் கூடி: 63-0323 ஆறாம் முத்திரையைக் கேட்போமாக.
பின்னர், நம்முடைய கர்த்தருடைய சிலுவை மரணத்தை நினைவுகூரும் வகையில், ஆராதனைக்குப் பிறகு உடனடியாக ஜெபத்தில் மீண்டும் ஒன்றாக இணைவோமாக.
சனிக்கிழமை
காலை 9:00 மணியிலும், பிற்பகல் 12:00 மணியிலும் நாம் அனைவரும் மீண்டும் ஜெபத்தில் ஒன்றுபட்டு, நம் மத்தியில் அவர் நமக்காகச் செய்யப்போகும் மகத்தான காரியங்களுக்கு நம் இருதயங்களை ஆயத்தப்படுத்துவோம்.
“அவர், “சாத்தானே, இங்கே வா” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் இப்பொழுது எஜமானாயிருக்கிறார். சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய அந்தத் திறவுகோலை அவர் தம்முடைய கரம் நீட்டி பற்றிப் பிடிப்பதை என்னால் காணமுடிகிறது. மேலும் அவர், “நான் உனக்கு முன்னறிவிப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீ இவ்வளவு காலம் முழுமையாக பொய்யுரைத்து ஏமாற்றி வந்தாய், நான் ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரனாயிருக்கிறேன். என்னுடைய இரத்தம் இன்னமும் சிலுவையில் ஈரக்கசிவோடு உள்ளது. முழு கடனும் செலுத்தப்பட்டாயிற்றே! உனக்கு இனிமேல் எவ்வித உரிமையுமே கிடையாது. நீ துகிலுரியப்பட்டிருக்கிறாய். அந்தத் திறவுகோல்களை என்னிடம் கொடு” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது!”
பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு, நாம் அனைவரும்: முத்திரைகளின் பேரிலான கேள்விகளும் பதில்களும் என்ற வார்த்தையைக் கேட்க ஒன்று கூடுவோம்.
உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டிக்கு இது நினைவில் கொண்டிருக்க வேண்டிய எவ்வளவு மிக முக்கியமான நாளாக இருக்கப் போகிறது.
பின்னர் ஆராதனைக்குப் பிறகு உடனடியாக ஜெபத்தில் மீண்டும் இணைவோம்.
ஞாயிற்றுக்கிழமை
சகோதரன் பிரான்ஹாமினுடைய சிறிய நண்பன் ராபின் பறவை அதிகாலை 5:00 மணிக்கு அவரை எழுப்பினதுபோல, நாம் அதிகாலையில் முதலில் எழும்புவோமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக நாம் கர்த்தருக்கு நன்றி கூறுவோம்:
இன்று காலை ஐந்து மணியளவில், சிவப்பு மார்பகத்துடன் இருந்த என்னுடைய சிறிய நண்பன் ஜன்னலன்டை பறந்து வந்து என்னை எழுப்பினான். அதனுடைய சிறு இருதயம் வெடித்து, ”அவர் உயிர்த்தெழுந்து விட்டார்” என்று கூறுவது போன்று தென்பட்டது.
காலை 9:00 மணிக்கும் பிற்பகல் 12:00 மணிக்கும், ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்க நம்மைத் ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக நம்முடைய சங்கிலித் தொடர் ஜெபத்தில் மீண்டும் இணைவோம்,
பிற்பகல் 12:30 மணிக்கு, 63-0324e ஏழாம் முத்திரை: என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்:
பிற்பகல் 3:00 மணிக்கு, மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றுபடுவோம், அவர் தம்முடனும் தம்முடைய மணவாட்டியுடனும் உலகம் முழுவதும் நமக்குக் கொடுத்த அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி தெரிவிப்போம்
.கடந்த ஆண்டைப் போலவே, வெளிநாடுகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு, இந்த அட்டவணையில் உள்ள அனைத்து ஜெப நேரங்களுக்கும், ஜெபர்சன்வில் நேரத்தில் எங்களுடன் ஒன்றுபட உங்களை அழைக்க நான் விரும்புகிறேன். இருப்பினும், ஜெபர்சன்வில் நேரத்தில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிற்பகல் ஒலிநாடாக்களை கேட்பது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே தயவுசெய்து உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்த செய்திகளை கேட்கத் தயங்காதீர்கள். இருப்பினும், ஜெபர்சன்வில் நேரத்தில் மதியம் 12:30 மணிக்கு, நம்முடைய ஞாயிற்றுக்கிழமை செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாகச் சேர நான் விரும்புகிறேன்.
உங்கள் முழு குடும்பமும் ஒன்றாக அனுபவிக்கக்கூடிய படைப்பின் திட்டங்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஓய்.எப்ஃ வினாடி வினாக்களில் பங்கேற்க உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் அழைக்க விரும்புகிறேன். இந்த வார இறுதியில் நாம் கேட்கும் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதால், நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
வார இறுதி அட்டவணைக்கு, இராப்போஜன ஆராதனைக்கு ஆயத்தமாவது பற்றிய தகவல்களுக்கும், படைப்பின் திட்டங்களுக்குத் தேவையான பொருட்கள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.
புகைப்படங்கள் எடுப்பது, அனுதின மேற்கோள் கேட்பது மற்றும் செய்தித் தொகுப்பு பயன்பாடு (டேபிள்) லைஃப் லைன் பயன்பாடு அல்லது பதிவிறக்கக்கூடிய இணைப்பிலிருந்து ஒலிநாடாக்களை கேட்பதை தவிர ஈஸ்டர் வார இறுதிக்கு நம் தொலைபேசிகளை அணைத்து வைப்போமாக.
ஆராதனை, துதித்தல் மற்றும் சுகம்ளித்தல் நிறைந்த ஒரு வார இறுதிக்காக உலகம் முழுவதும் மணவாட்டியுடன் ஒன்று சேர உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அழைப்பது எனக்கு மிகவும் மரியாதை அளிக்கிறது. இது உண்மையிலேயே உங்களுடைய ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் ஒரு வார இறுதி என்று நான் நம்புகிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
Service Audio
ஈஸ்டர் வார இறுதிக்கான பிரசங்கங்கள் கீழே உள்ளன. வியாழக்கிழமை இராப்போஜனம்/பாதம் கழுவும் ஆராதனை பதிவிறக்கத்தின் ஒரு பகுதியாகும்.
வியாழக்கிழமை- 6:00 PM (local time)
62-0204இராப்போஜனம்(விசேஷித்த இராப்போஜனம் & பாதம் கழுவும் ஆராதனை)
வெள்ளிக்கிழமை - மதியம் 12:30 (உள்ளூர் நேரம்)
63-0323ஆறாம் முத்திரை
சனிக்கிழமை- மதியம் 12:30 (உள்ளூர் நேரம்)
63-0324Mமுத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும்
ஞாயிற்றுக்கிழமை- பிற்பகல் 12:30 (ஜெஃபர்சன்வில் நேரம்)
63-0324Eஏழாம் முத்திரை