
அன்புள்ள பரிபூரண சித்த மணவாட்டியே,
நாளானது தாமதமாகவும், கர்த்தருடைய வருகையோ சமீபமாயுமிருக்கிறது. காலமானது ஏற்கனவே முடிவுறாமலிருக்குமானால், காலமோ சமீபித்துக்கொண்டிருக்க, வாசல் அடைபட்டுக் கொண்டிருக்கிறது. காற்றினால் அசைந்த நாணல் போல் இருக்கவும்; செவித்தினவுள்ளவர்களாயிருக்கவும்; யோசிப்பது மிகவும் தாமதமானது. இது தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரமாயுள்ளது. அவருடைய மணவாட்டியாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை மாற்றுகிறாரா? ஒருபோதும் இல்லையே. அப்படியானால், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நம் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நாம் தினமும் பாடுபட வேண்டும். நாம் அவருடைய சித்தத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அதை ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
தேவனோடு தரித்திருக்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்படிக்கு தன்னுடைய முழு நோக்கத்தையுமே இந்த செய்தியில் தீர்க்கதரிசி நமக்கு சொல்லுகிறார், ஆனால் பலர் அதைச் சுற்றிச் சென்று வேறு வழியைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தொடர்ந்து செல்கிறதையும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறதையும் காண்கிறார்கள், ஆனால் அவர்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல.
தீர்க்கதரிசி நம்மை மீண்டும் வார்த்தைக்கு கொண்டு சென்று, பார்ப்பதற்கும், படிப்பதற்கும், நமக்கு நினைவூட்டுவதற்கும் உதாரணங்களைத் தருகிறார், தேவன் தமது சிந்தையையோ அல்லது அவருடைய வழியையோ மாற்றுவதில்லை, அவர் தேவன், மாறுவதில்லை.
இப்பொழுது, இந்த இருவருமே ஆவிக்குரிய மனிதர்கள், இருவருமே தீர்க்கதரிசிகளாயிருந்தனர், இருவருமே அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை நாம் கவனிக்கிறோம். மோசே, கடமையின் பாதையில், ஒவ்வொரு நாளும் அவனுக்கு முன்பாக ஒரு புதிதாக அக்கினி ஸ்தம்பத்தோடு, கடமையின் பாதையிலிருக்க, தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் தங்கியிருந்தார். இதோ தேவனால் நியமிக்கப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட, மற்றொரு தேவனுடைய ஊழியக்காரன் வருகிறான், ஒரு தீர்க்கதரிசியாகிய அவனிடத்திற்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. இங்கே அபாயக் கோடு உள்ளது. அந்த மனிதன் தேவனுடையவனாய்—தேவனுடையவனாய் இருக்கவில்லையென்று எவரும் மறுக்க முடியாது, ஏனென்றால் தேவனுடைய ஆவி அவனிடத்தில் பேசியதாக வேதம் கூறியுள்ளது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.
கர்த்தாவே, அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது? இருவரும் தீர்க்கதரிசிகளாய் இருந்தபோது என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இருவரும் தேவனால் அழைக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்கள், தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்; தேவனுடைய தீர்க்கதரிசிகளிடத்திற்கே தேவனுடைய வார்த்தை வருகிறது. பரிசுத்த ஆவியானவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று இருவரும் கூறுகிறார்கள்.
தேவனுடைய ஏழாம் தூதன் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி சில மேற்கோள்களை மிகவும் கவனமாகப் படித்துப் படிப்போமாக. அவர் என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குத் தேவையேயன்றி சபை என்ன சொல்கிறது, வேத பண்டிதர் ஜோன்ஸ் என்ன சொல்லுகிறார், அல்லது வேறு யாரோ என்ன கூறுகிறார்கள் என்பதல்ல. தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதே நமக்கு வேண்டும்.
மோசே, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டிருந்தான், இந்த நேரத்துக்கான அவர்களுடைய தலைவனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்றும், ஆபிரகாம் இந்த எல்லாக் காரியங்களையும் வாக்குத்தத்தம் செய்திருந்தான் என்றும்,...
மோசேயின் ஸ்தானத்தை எவருமே எடுக்க முடியவில்லை. எத்தனை கோராகுகள் எழும்பினாலும், எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல; அதை பொருட்படுத்தாமல், தேவன் மோசேயை, அழைத்திருந்தார்.
ஜனங்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருந்த ஒருவன் மோசேயாயிருந்தான். மற்ற மனிதர்கள் எழும்பி, தாங்கள் அபிஷேகிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களாயும் கூட இருப்பதாகக் கூறினர். அவர்களையும் கூட வழிநடத்த தேவன் அழைத்திருந்தார். ஆனால் மோசே அவர்களை தேவனுடைய மூல பரிபூரண சித்தத்தில் வழிநடத்தும்படியான தலைவனாக இருந்தான்.
ஆனால், ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் அனுமதிக்கிற சித்தத்தை உடையவராயிருக்கிறார். கவனியுங்கள், அவர் அதை அனுமதிக்கிறார், சரி, ஆனால் அவர் அதை அவருடைய மகிமைக்காக கிரியை செய்வார், அவருடைய பரிபூரண சித்தத்தில். இப்பொழுது நீங்கள் நடக்க விரும்பினால்…
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க யாரும் விரும்புவதில்லை. உண்மையான மணவாட்டி எல்லா நேரத்திலும், கிரயம் என்னவானாலும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கவே விரும்புகிறாள்.
ஒலிநாடாக்களை இயக்குவதன் முக்கியத்துவம் குறித்து பல கருத்து வேறுபாடுகள், எண்ணங்கள், குழப்பங்கள், அபிப்பிராயங்கள் உள்ளன.
இன்றைக்கு செய்தியை விசுவாசிக்கிறவர்களை பிரித்துள்ள பிரச்சினை இதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மணவாட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும், இருப்பாள் என்பதும் எங்களுக்குத் தெரியும்; அதுவே வார்த்தை.
இன்றைக்கு சபையில் ஆவியால் நிரப்பப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்கள் உள்ளனர். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அவர்களில் ஒருவர் கூட இல்லையே.
அவர்கள் எப்படி மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்? அவர்களுடைய ஊழியத்தின் பேரில் நாம் ஒன்றுபட முடியுமா? உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய மந்தையை வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் தேவனுடைய மூல திட்டத்திற்கு அவர்களை மீண்டும் வழிநடத்த, அவருடைய தலைவர், அவருடைய தீர்க்கதரிசியே அழைக்கப்பட்டிருக்கிறார். அவர்களுடைய ஊழியம் அல்ல.
ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று என்றும், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று விசுவாசிக்க வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கவில்லையென்றால்,, அவர்கள் வெறுமனே அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் உள்ளனர்.
இது மிக முக்கியமான சத்தம் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னால், அவர்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களால் எப்படி இயங்கு பொத்தானை அழுத்தி இயக்காமல் இருக்க முடியும்?
நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக, உறுதியாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு உறுதியான வழி மட்டுமே உள்ளது. அது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பதாகும்.
முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் செல்கிறது. அப்படியானால், அது அதைப் பெற்றுக் கொள்கிறது. அவன் ஒரு செம்மறியாடாக இருந்தால், அவன் அதனோடு வருகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் ஒலிநாடாவை உதைத்து வெளியே தள்ளுகிறான்.
நான் உறுதியாக இருக்க வேண்டும். எனது நித்திய இலக்குடன் என்னால் மேலோட்டமான தீர்மானத்தை எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது தவறு செய்கிறதில்லை என்பதை நான் அறிவேன். அது அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபுகாரப்படுத்தப்பட்டிருந்தது என்பதை நான் அறிவேன். அதுவே தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்த தெரிந்து கொண்ட ஒன்று என்பதை நான் அறிவேன். அந்த சத்தமே மணவாட்டியை இணைக்கக் கூடியதும், இணைக்கும் ஒரே சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்று கூற நான் கேட்கும் அந்த சத்தமாக அது இருக்கும் என்று நான் அறிவேன்.
நான் இயங்கு பொத்தானை அழுத்தி அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 65-0418E தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நாம் செய்தியை 61-ம் பத்தியிலிருந்து துவங்குவோம்.
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்