ஞாயிறு
23 ஜூன் 2024
65-0221M
விவாகமும் விவாகரத்தும்

அன்புள்ள தூய கலப்படமற்ற வார்த்தையின் மணவாட்டியே,

நாம் கலப்படமற்ற, எந்த மனிதனுடைய அமைப்பினாலும், எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்ட கோட்பாட்டினாலும் தொடப்படாத அவருடைய அருமையான எளிய சீமாட்டியாய் இருக்கிறோம். நாம் முற்றிலும் கலப்படமற்ற, வார்த்தையின் மணவாட்டி! நாம் கருவுற்ற தேவனுடைய குமாரத்தி.

நாம் அவருடைய மூல வார்த்தையாக இருக்கிற, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் பிள்ளைகளாய் இருக்கிறோமே! தேவனில் பாவமே இல்லை, நாம் அவருடைய சொந்த சாயலில் இருக்கிறபடியால், இதனால் நமக்குள் எந்த பாவமும் இல்லை. நாம் எப்படி விழ முடியும்? இது சாத்தியமற்றது...சாத்தியமற்றதே! நாம் அவருடைய ஒரு பாகமாக, அவருடைய மூல வார்த்தையாயிருக்கிறோம்.

எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் இதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? வெளிப்பாடு. முழு வேதமும், இந்த செய்தியும், தேவனுடைய வார்த்தை, அனைத்துமே ஒரு வெளிப்பாடாகும். இந்த சத்தத்திற்கும் மற்ற எல்லா சத்தங்களுக்கும் இடையே உள்ள உண்மையை நாம் அறிவோம், ஏனெனில் இது ஒரு வெளிப்பாடு. நம்முடைய வெளிப்பாடு சரியாக வார்த்தையுடன் உள்ளதேயன்றி, வார்த்தைக்கு முரணானது அல்ல.

இந்தக் கல்லின் மேல்” (வார்த்தை என்றால் என்ன என்பது பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடு) “நான் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் அசைக்காது." அவருடைய மனைவி மற்ற மனிதரோடு சோதிக்கப்படமாட்டாள். "நான் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் அசைக்கவே முடியாது."

நாம் அவருடைய வார்த்தைக்கும் அவருடைய சத்தத்திற்கும் மாத்திரமே உண்மையாகவும், உத்தமமாகவும் இருப்போம். நாம் வேறொரு மனிதனால் ஒருபோதும் தீட்டுப்பட்டு விபச்சாரம் செய்யமாட்டோம். நாம் அவருடைய கன்னிகை வார்த்தையான மணவாட்டியாக இருப்போம். நாம் வேறு எந்த வார்த்தையையும் பார்க்கவோ, கேட்கவோ அல்லது சரசமாடவோ மாட்டோம்.

அது நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் உள்ளது. நமக்கு வேறொரு கணவர் இருக்க முடியாது, ஆனால் நமக்கு ஒரே கணவர்தான், இயேசு கிறிஸ்து, ஒரே மனுஷன், தேவன், இம்மானுவேல். அவருடைய மனைவி பல்லாயிரம், பல்லாயிரக்கணக்கானோராய் இருப்பர். மணவாட்டி வார்த்தையிலிருந்து வர வேண்டும் என்பதை அது காண்பிக்கிறது. "ஒரே கர்த்தராகிய இயேசு, ஆனால் அவருடைய மணவாட்டியோ பலர், ஒருமை."

இது அனைவருக்கும் அல்ல, தீர்க்கதரிசியின் குழுவிற்கு மட்டுமே என்பதை நாம் நினைவில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய செய்தியை பின்பற்றுபவர்களுக்கே. இந்த செய்தி அவர்களுக்கு மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் அவரை மேற்பார்வையிட கொடுத்த சிறிய மந்தைக்கே.

தீர்க்கதரிசி நமக்கு என்ன சொல்லுகிறார் என்பதற்காக தேவன் அவரைப் பொறுப்பாளியாக்குவார், மேலும் தேவன் நம்மை, தேசம் முழுவதிலுமிருந்து அவரால் மன மாற்றமடைந்தவர்களையும், அவர் கிறிஸ்துவிடம் வழிநடத்தியவர்களையும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதற்கு பொறுப்பாளியாக்குவாரேயன்றி, ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார்.

நாம் எப்படி அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அவர் சொல்வதை நாம் உட்கார்ந்து கேட்பது நமக்கு எவ்வளவு அற்புதமானது. எப்படி அவருடைய முதல் மணவாட்டியும், இரண்டாவது மணவாட்டியும் அவரிடத்தில் தவறிப்போயினர்; ஆனால் அவருடைய மகத்தான கடைசி கால மணவாட்டியான நாம் அவரிடம் ஒருபோதும் தவறிப்போகமாட்டோம். நாம் கடைசி வரை அவருடைய உண்மையான, உத்தமமான, கன்னிகை வார்த்தை மணவாட்டியாக இருப்போம்.

அவருடைய வார்த்தையில் உள்ள நம்முடைய விசுவாசம் ஒவ்வொரு நாளும் மகத்தானதாய் வளருகிறது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு, கீழ்ப்படிந்து, அவருடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, நம்முடைய வேதாகமங்களைப் படித்து, நாள் முழுவதும் ஜெபித்து அவரை ஆராதிப்பதன் மூலம் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அவர் சீக்கிரத்தில் வருவார் என்பது நமக்குத் தெரியும். இனி எந்த நிமிடமும். நோவாவைப் போலவே, அவர் நேற்று வருவார் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்; ஒருவேளை நாளை காலையோ, பிற்பகலோ, மாலையோ, ஆனால் அவர் வருவார் என்பது நமக்குத் தெரியும். தேவனுடைய தீர்க்கதரிசியும், அவருடைய வார்த்தையும் எந்த தவறும் செய்கிறதில்லை, அவர் வருகிறார். இது 7-வது நாள் என்று நாம் உணருகிறோம், மேகங்கள் உருவாகி, பெரிய மழைத் துளிகள் விழுவதை நாம் காணலாம்; வேளையானது சமீபித்து விட்டது.

நாம் பேழையில் நன்கு பாதுகாப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி: விவாகமும் விவாகரத்தும் 65-0221M என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், தேவனுடைய சத்தம் எங்களைத் தேற்றுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

பரி. மத்தேயு 5:31-32 / 16:18 / 19:1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22