ஞாயிறு
14 ஜூலை 2024
65-0711
வெட்கப்படுதல்

அன்புள்ள வெட்கப்படாத மணவாட்டியே,

இன்று போல் ஒரு காலமோ அல்லது ஜனங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. நாம் அவருக்குள் இருக்கிறோம், அவர் நமக்காக சம்பாதித்திருக்கிற அனைத்திற்கும் சுதந்திரவாளிகளாயிருக்கிறோம். அவர் தம்முடைய பரிசுத்தத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அவருக்குள்ளாக இருக்கும் வரை, நாம் தேவநீதியாகியிருக்கிறோம்.

நாம் அவருடைய மணவாட்டியாக இருப்போம் என்று தெய்வீக தீர்மானத்தின் மூலமாக அவர் நம்மை முன்னறிந்தார். அவர் நம்மைத் தெரிந்து கொண்டாரேயன்றி, நாம் அவரை ஒருபோதும் தெரிந்துகொள்ளவில்லை. நாம் நமக்கு சொந்தமானதன் பேரில் வரவில்லை, அது அவருடைய தெரிந்துகொள்ளுதலாக இருந்தது. இப்பொழுது அவர் நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் அவருடைய வார்த்தையின் முழு வெளிப்பாட்டை வைத்திருக்கிறார்.

நாளுக்கு நாள், அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டும், அவருடைய ஆவியை நம்மீது ஊற்றிக் கொண்டும், அவருடைய சொந்த ஜீவியத்தை நம்மில் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மணவாட்டி அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் அவருடைய பரிபூரண சித்தத்திலும், அவருடைய திட்டத்திலும் இருக்கிறோம் என்பதை அறிந்து, தங்களுடைய இதயங்களில் இதுபோன்று இதற்கு முன்பு ஒருபோதும் அதிகமாக நங்கூரமிடப்பட்டதில்லை.

தேவனுடைய அன்பும், இந்த செய்தியும் பொங்கி வழியுமளவிற்கு நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. நாம் கேட்பதற்கும், பேசுவதற்கும், ஐக்கியம் கொள்வதற்கும், அல்லது நாம் கேட்டதை ஒரு மேற்கோளாக எளிமையாக பகிர்ந்து கொள்வதற்கும், கர்த்தரை துதிப்பதற்கும் இதைத் தவிர வேறொன்றுமே இல்லை.

நாம் வனாந்தரத்தின் பின்புறத்தில் இருந்த மோசேயைப் போல இருக்கிறோம். நாம் சர்வவல்லமையுள்ள தேவனுடன் முகமுகமாய் சஞ்சரித்துள்ளோம், சரியாக வார்த்தையினாலும் இந்த வேளைக்கான வாக்குத்தத்தினாலும் நம்முடன் பேசுகிற சத்தத்தை நாம் புரிந்து கொள்கிறோம். அது நமக்கு ஏதோக் காரியத்தைச் செய்துள்ளது. நாம் அதைக் குறித்து வெட்கப்படவில்லை. நாம் அதை உலகுக்கு அறிவிக்க விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசுவே இந்த நேரத்தின் செய்தி என்றும், நாம் அவருடைய மணவாட்டி என்றும் விசுவாசிக்கிறோம்.

அவர் தம்முடைய வார்த்தையால் நம்மைப் பலப்படுத்தியிருக்கிறார். இது தேவன் அருளியிருக்கிற வழி என்பதை குறித்து, எந்த சந்தேகத்தின் நிழலும் இல்லை. தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்து தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்கவும், அதன்பின்னர் அவளைத் தம்முடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்தவும் தம்முடைய ஏழாம் தூதனைத் தெரிந்து கொண்டார்.

அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர இந்த ஜீவியத்தில் எதுவும் இல்லை. நாம் அதை போதுமான அளவு பெற முடியவில்லை. இது நமக்கு ஜீவனை விட மேலானது. சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷமும் வல்லமையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. வார்த்தையானது இப்போது மணவாட்டியின் கரங்களிலும், செவிகளிலும் உள்ளது. தேவன் ஒரு மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்க, பிசாசும் ஒரு சபையை அழைத்துக் கொண்டிருக்கும்போது, வேறு பிரிக்கும் நேரம் இப்போது நடைபெறுகிறது.

கர்த்தாவே, நாங்கள் உம்மையும் உமது வார்த்தையையும் நேசிக்கிறோம், நாங்கள் போதுமான அளவு பெற முடியவில்லை. நாங்கள் அனுதினமும் உமது வார்த்தையின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, உமது அதிசீக்கிர வருகைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். பிதாவே, அது மிகவும் சமீபத்தில் இருக்க வேண்டும். கர்த்தாவே நாங்கள் அதை உணர முடிகிறது, நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.

பிதாவே, நாங்கள் இன்னும் அதிக உத்தமமாக இருந்து, எங்களுடைய உறுதிமொழிகளை புதுப்பித்துக் கொள்வோமாக. உம்முடைய வார்த்தையில் உள்ள எங்களுடைய விசுவாசம் எங்களுடைய இருதயங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். நீர் எல்லா சந்தேகங்களையும் எடுத்துப்போட்டுவிட்டீர். உம்முடைய வார்த்தையைத் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் உறுதியாக இருக்கிறோம், உலகிற்குச் சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை, நாங்கள் உம்முடைய ஒலிநாடா மணவாட்டியாய் இருக்கிறோம்.

வெட்கப்படுதல் 65-0711 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து கேட்கும்படி உலக மக்களை நான் அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மாற்கு 8:34-38