காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 22 நவம்பர், 2025

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

நாம் என்னே மகிமையான நேரங்களை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். வார்த்தையும் மணவாட்டியும் ஒன்றாயும் மாறாததாயும் உள்ளது. ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் நாம் திரைக்குப் பின்னால் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் தோலுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். தேவன், மீண்டும் ஒருமுறை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் மனித தோலுக்குப் பின்னால் தம்மை மறைத்துக் கொள்கிறார். இனி எந்த கேள்வியும் இல்லை. நாம் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, வார்த்தை மாம்சமான, பரிபூரண வார்த்தை மணவாட்டி என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை.

உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றிணையும்போது, அவருடைய சத்தம் பேசி, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்ற முழுமையான வெளிப்பாட்டை நமக்கு முழுமையாக வெளிப்படுத்துகிறதற்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வார்த்தையின் வெளிப்பாடு, எலோஹிம், மாம்சத்தில் உள்ள தேவன் தம்முடைய மணவாட்டியிடம் பேசுகிறார். மாம்சத்தில் உள்ள தேவன் நம் ஒவ்வொருவரிலும் ஜீவித்து வாசம் செய்கிறார். தேவனுடைய முடிவான திட்டம் இப்பொழுது நம் ஒவ்வொருவரிலும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

விசித்திரமான தோற்றமுடைய திருகாணிகளை கொண்ட விநோதமானவர்கள் மற்றும் முட்டாள்கள் என்று அழைக்கப்படுவதற்கு நாம் கர்த்தருக்கு மிகவும் மகிழ்ச்சியாயும், நன்றியுள்ளவர்களாயும் இருக்கிறோம். ஆனால் நாம் யாருடன் இணைக்கப்பட்டுள்ளோம் என்றும், யார் என்பதும் நமக்குத் தெரியும்: தேவனுடைய ஒலிநாடாவுடன் இணைக்கப்பட்டுள்ள மணவாட்டி; அது நம்மை அவரிடம் இழுத்து, நாம் அவருடன் ஒன்றாக மாறும்போது மேலும் மேலும் இறுக்கமாகி வருகிறது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

நாம் திரையைக் கடந்து அக்கினி ஸ்ம்பத்துக்குள் சென்று தேவனுடைய ஆசீர்வாதங்களுடன் வெளியே வந்துள்ளோம்! ஜனங்களால் அதைக் காண முடியாது. அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நமக்கு, அது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் நாம் நமது இசையமைப்பாளர் மற்றும் இயக்குநரின் அதே ஆவியில் இருக்கிறோம். அது தம்முடைய மணவாட்டியை வழிநடத்துகிற ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயுள்ளது.

நாம் சமுகத்தப்பத்தினாலும், வேறு பிரிக்கப்பட்ட ஜனங்களுக்கு மாத்திரமே அளிக்கப்படுகிற மன்னாவினாலும் நாம் ஜீவித்து கொண்டிருக்கிறோம். அதுவே நாம் சாப்பிடக்கூடிய ஒரே காரியமாயுள்ளது. அது நாம் புசிக்கும்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே காரியமாயுள்ளது. மேலும் அது அனுமதிக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, அது என்ன என்பதை அறிந்த மக்களுக்கு மட்டுமேயாகும்.

நாம் யார் என்று அவர் நமக்குச் சொல்வதைக் கேட்க நான் விரும்புகிறேன்:

பெந்தெகொஸ்தே நாளன்று இறங்கிய அதே பரிசுத்த ஆவி இன்றைக்கு வெளிப்பட்டு, மகிமைக்கு, மகிமையின் மேல் மகிமையடைகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன், அதே அடையாளங்களுடனும், அதே அற்புதங்களுடன், அதே ஞானஸ்நானத்துடனும்; அதேவிதமான ஜனங்களுடன், அதே விதமாக நடந்து, அதே வல்லமையோடு, அதே உணர்வோடு அதனுடைய மூல வித்திற்குத் திரும்பி, அது மகிமையின் மேல் மகிமையடைகிறது.

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு நாம் மூல வித்திற்கு திரும்புகிறோம். அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஞானஸ்நானம், அதே வகையான மக்கள், அதே வழியில், அதே வல்லமையுடன், அதே உணர்வுடன் செயல்படுகிறோம்.

நாம் அவருடைய பரிபூரணமான, முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட, வார்த்தை ஒலிநாடா மணவாட்டி!

நாம் ஜெயங்கொள்கிறோம். நிலைத்திருக்கிறோம். நிற்கிறோம். அவருடைய மணவாட்டிக்காகச் சேமிக்கப்பட்டிருக்கிற அவருடைய தூய வார்த்தையில் நிலைத்திருக்கிறோம். அது நாளுக்கு நாள் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது. நாம் யார் என்பதை அறிந்து நமது விசுவாசம் புதிய உயரங்களை எட்டியுள்ளது, அது இதுதான்:

மறுக்க முடியாதது, பேரம் பேச முடியாதது, எல்லாவற்றிற்கும் மேலாக, அது நிபந்தனையற்றது.

நீங்கள் எப்போதையும் விட மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா?
கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதில் 1000% திருப்தி அடைய விரும்புகிறீர்களா?
தேவனுடைய வார்த்தையால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட விரும்புகிறீர்களா?

அப்படியானால், வல்லமையுள்ள தேவன் நமக்கு முன்பாக திரைநீக்கப்பட்டார் 64-0629: என்ற செய்தியில் தேவனுடைய சத்தம் நித்திய ஜீவனின் வார்த்தைகளை எங்களிடத்தில் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, பிரான்ஹாம் கூடாரத்தில், எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 15 நவம்பர், 2025

அன்பான தேவனின் ஜீவனுள்ள வார்த்தையே,

இத்தனை வருடங்களாக அதை என் இருதயத்தில் மறைத்து வைத்துள்ள, திரையிடப்பட்டுள்ள கிறிஸ்துவை, அதே அக்கினி ஸ்தம்பம் வாக்களித்த படி வார்த்தையை வியாக்கியானித்து வருகிறது.

இது அநேக ஜனங்களுக்கு கண்மூடித்தனமாகத் தோன்றப்போகிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் தேவனுடைய செய்தியாளரை ஒரு சில நிமிடங்கள் பொறுத்துக்கொண்டு, தேவனிடம் மேலும் வெளிப்பாட்டைக் கேட்டால், அவர் தேவனுடைய உதவியாலும், அவருடைய வார்த்தையாலும், அவருடைய வார்த்தையின்படியும், அவரை இங்கே உங்கள் முன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். தேவன், திரைநீக்கி தம்மை வெளிப்படுத்தி, வியாக்கியானித்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார்.

இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்குள் இந்த கடந்த மாதத்தில் என்ன ஒரு எழுப்புதல் நிகழ்ந்து வருகிறது. தேவன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தம்மை வெளிப்படுத்தி, தன்னுடைய இனிய இருதயத்துடன் பேசுகிறார், அவளோடு அன்பு கொள்கிறார், அவளோடு உறுதியளிக்கிறார், நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம்.

எந்த தயக்கமும் இல்லை, எந்த நிச்சயமின்மையும் இல்லை, எந்த தனி ஒதுக்கீடும் இல்லை, எந்த ஒரு சந்தேகத்தின் நிழலும் கூட இல்லை; தேவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்: ஒலிநாடாக்களில் பேசும் தேவனுடைய சத்தம் இன்றைக்கு அவருடைய மணவாட்டிக்காக தேவன் அருளியுள்ள, பரிபூரண வழியாயுள்ளது.

நாம் அதை ஒருபோதும் வடிகட்டவோ, தெளிவுபடுத்தவோ, விளக்கவோ, அல்லது எந்த வகையிலும் மனிதனால் கையாளப்படக்கூடாதபடிக்கும்; நாம் ஒவ்வொரும் உதட்டிலிருந்து செவிக்குப் பேசும் சுத்தமான தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு அவர் இந்த வழியை அருளினார்.

இந்த நாள் வருவதை அவர் அறிந்திருந்தார். அவருடைய மணவாட்டி அந்த மறைவான மன்னாவை மாத்திரமே புசிக்க முடியும் என்பதையும், அவருடைய ஆட்டின் ஆகாரம் என்பதையும் அவர் அறிந்திருந்தார், தேவனிடத்திலிருந்து தாமே வருகிற தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு எந்த காரியத்தையும் நாம் கேட்க விரும்ப மாட்டோம்.

நாம் அந்தத் திரையை நீங்கி ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசித்திருக்கிறோம். உலகம் அதைக் காண முடியாது. நம்முடைய தீர்க்கதரிசி தனது வார்த்தைகளை சரியாக உச்சரிக்காமல் இருக்கலாம். அவர் சரியாக உடை அணியாமல் இருக்கலாம். அவர் மதகுருமார்களின் உடைகளை அணியாமல் இருக்கலாம். ஆனால் அந்த மனித தோலுக்குப் பின்னால், ஷெக்கினா மகிமை இருக்கிறது. அங்கு வல்லமை இருக்கிறது. அங்கு வார்த்தை இருக்கிறது. அங்கு சமுகத்தப்பம் இருக்கிறது. அங்கு ஷெக்கினா மகிமை இருக்கிறது, அது மணவாட்டியை முதிர்வடையச் செய்ய வைக்கிற ஒளியாயுள்ளது.

நீங்கள் அந்த தகசுத் தோலுக்குப் பின்னால் வரும் வரை, உங்கள் பழைய தோலிலிருந்து, உங்கள் பழைய எண்ணங்களிலிருந்து, உங்கள் பழைய கோட்பாடுகளிலிருந்தும் வெளியேறி, தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரும் வரை; பின்னர் வார்த்தை உங்களுக்கு ஒரு ஜீவனுள்ள யதார்த்தமாக மாறுகிறது, பின்னர் நீங்கள் ஷெக்கினா மகிமைக்கு விழித்தெழுப்பப்படுகிறீர்கள், பின்னர் வேதாகமம் ஒரு புதிய புத்தகமாக மாறுகிறது, பின்னர் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் ஜீவித்துக் கொண்டு, விசுவாசிகளுக்கு, ஆசாரியர்களுக்கு மட்டுமே அருளப்பட்டுள்ள சமுகத்தப்பத்தை புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். "நாம் ஆசாரியர்களாயும், ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், சொந்தமான ஜனமாயும், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்களாயும் இருக்கிறோம்.” ஆனால் நீங்கள் திரைநீக்கப்பட்ட தேவனைக் காணும்படிக்கு, அந்தத் திரைக்குப் பின்னால் உள்ளே வர வேண்டும். தேவன் திரை நீக்கப்பட்டிருக்கிறார், அதாவது அவருடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நாம் உலகிற்கு வினோதமானவர்களாக இருக்கிறோம், ஆனால் நம்முடைய அச்சாணி யார் என்பதை அறிந்து நாம் திருப்தியடைகிறோம், அவருடைய வார்த்தை நம்மை அவரிடம் ஈர்க்கும்போது, அவருடைய ஒலிநாடா திருகு மறையாணியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.

நீங்கள் ஒலிநாடாக்களோடு இணைக்கப்படவில்லையென்றால், நீங்கள் ஒரு கூட்ட முட்டாள்களேயன்றி வேறொன்றுமில்லை!!!

இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், தேவனே! இயேச, “வார்த்தையானது யாரிடத்திற்கு வந்ததோ, அவர்கள் ‘தேவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்,” என்று கூறினார், அவர்கள் தீர்க்கதரிசிகளாய் இருந்தனர். இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் சரீரம் தேவனாயில்லாததுபோல, அந்த மனிதன் தாமே தேவனாய் இருக்கவில்லை. அவர் ஒரு மனிதனாய் இருந்தார், தேவன் அவருக்கு பின்னால் திரையிடப்பட்டிருந்தார்.

தேவன், ஒரு நாள் தேவன் தகசுத் தோல்களுக்குப் பின்னே திரையிடப்பட்டிருந்தார். தேவன், ஒரு நாள் மெல்கிசேதேக்கு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், இயேசு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், அவருடைய மணவாட்டி என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருக்கிறார்.

இதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்; ஆனால் பலர் தலறிப்போய், வேறு எதையோ எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆபிரகாம் கண்ட கடைசி காரியமான, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வருவதற்கு முன்பு, அக்கினி விழுந்து, புறஜாதி உலகம் நியாயந்தீர்க்கப்படுவதற்கு முன்பு சம்பவித்த கடைசி காரியமே, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனான, மெல்கிசேதேக்கான இயேசு கிறிஸ்து, பிரசன்னமாகும் வரையில் கிறிஸ்தவ சபை காணும் கடைசி காரியமாக தம்முடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுததுகிறார்.

வேறு எதுவும் வரப்போவதில்லை. அவருடைய வார்த்தையில் வேறு எதுவும் வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. மணவாட்டியை பரிபூரணப்படுத்த எந்த மனிதனும் இல்லை; எந்த மனிதர்களின் குழுவும் வரவில்லை.

இல்லை! அவர்கள் பரிபூரணப்படுத்துவதற்காக இங்கே சபைக்கு வர விரும்புகிறார்கள். புரிகிறதா? அதாவது நாம்-நாம் இங்கே சபையில் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தைப் பெறுகிறோம், ஆனால் பரிபூரணப்படுத்துதல் நமக்கும் தேவனுக்கும் இடையில் வருகிறது. கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்த ஆவியில் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது.

இந்தச் செய்தி, இந்தச் சத்தம், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தை, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியைப் பரிபூரணப்படுத்துகிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 64-0617 “எல்லா காலங்களிலும் அடையாளங் கண்டுகொள்ளப்பட்ட கிறிஸ்து” என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறதை எங்களுடன் கேட்க வரும்படிக்கு நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

உபாகமம் 18:15
சகரியா 14:6
மல்கியா 3: 1-6
பரி. லூக்கா 17: 28-30
பரி. யோவான் 1:1 / 4:1-30 / 8: 57-58 / 10:32-39
எபிரெயர் 1:1 / 4:12 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 22:19

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 25 அக்டோபர், 2025

அன்புள்ள ஒலிநாடாவைக் கேட்பவர்களே,

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: “நான் ஒலிநாடாக்களைக் கேட்கும்போது, நான் எந்த சத்தத்தைக் கேட்கிறேன்? அது வில்லியம் மாரியன் பிரான்ஹாமின் சத்தமா, அல்லது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறேனா? அது ஒரு மனிதனின் வார்த்தையா, அல்லது கர்த்தர் உரைக்கிறதாவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனா? நான் கேட்டுக் கொண்டிருக்கிறதை வியாக்கியானிப்பதற்கு யாருமே எனக்குத் தேவையா அல்லது தேவறனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லையா?

நம்முடைய பதில்: மாம்சமான உரைக்கப்பட்ட வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆல்பா மற்றும் ஒமேகாவை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாளில் அவர் இருப்பதாக கூறியது போல மானிட உதடுகளினூடாக பேசுகிற, அக்கினி ஸ்தம்பமான, அவருக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒரு மனிதனுக்கு செவி கொடுக்கவில்லை, நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாத தேவனுக்கு நாம் செவி கொடுக்கிறோம். தேவனுடைய சத்தமானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், எலும்பையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

அவர் கலிலேயாவில் நடந்தபோது எப்படி இருந்தாரோ, அதே விதமாக இன்றிரவு ஜெபர்சன்வில்லில் இருக்கிறார் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதே விதமாக அவர் பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். அது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அவர் அப்பொழுது எந்தவிதமாக இருந்தாரோ, அவர் இன்றிரவும் இருக்கிறார், என்றென்றும் இருப்பார். அவர் என்ன செய்வார் என்று கூறினாரோ, அதை அவர் செய்திருக்கிறார்.

அந்த மனிதன் தேவன் அல்ல, ஆனால் தேவன் என்னும் ஜீவித்துக் கொண்டு, தம்முடைய மணவாட்டியினிடத்தில் அந்த மனிதனின் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார். நாம் மனிதனை ஆராதிக்கத் துணியவில்லை, ஆனால் அந்த மனிதனில் உள்ள தேவனை ஆராதிக்கிறோம்; ஏனென்றால் அவருடைய சத்தமாயிருக்கும்படி, இந்த கடைசி நாட்களில் தம்முடைய மனவாட்டிய வழிநடத்த தேவன் தெரிந்து கொண்ட மனிதனாய் அவர் இருக்கிறார்.

காரணம் நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நம்முடைய நாளில் மாம்சமான வார்த்தையையும் நாம் அடையாளமங் கண்டு கொள்ளும்படியாக இந்த மகத்தான கடைசி கால வெளிப்பாட்டை அவர் நமக்கு அளித்திருக்கிறார், சாத்தான் இனி நம்மை ஏமாற்ற முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய முழுமையாக திருப்பலளிக்கப்பட்ட கன்னிகையான வார்த்தை மணவாட்டி என்பதை நாம் அறிவோம்.

அந்தக் சத்தம் நமக்குச் சொன்னது: நமக்குத் தேவையானது ஏற்கனவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது உரைக்கப்பட்டாயிற்று, அது நம்முடையது, அது நமக்குச் சொந்தமானது. சாத்தானுக்கு நம் மீது எந்த அதிகாரமும் இல்லை; அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்.

நிச்சயமாக, சாத்தான் நம் மீது சுகவீனத்தை, மனச்சோர்வை மற்றும் மனவேதனைகளைப் போட முடியும், ஆனால் பிதா ஏற்கனவே அவனைத் துரத்திவிட நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார்...நாம் வார்த்தையைப் பேச, அவன் வெளியேறத்தான் வேண்டும்...நாம் அப்படிச் சொல்வதால் அல்ல, ஆனால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினதாலே.

அணில்கள் இல்லாதபோது அணில்களைப் சிருஷ்டித்த அதே தேவன். அது சகோதரி ஹாட்டியின் இதயத்தின் விருப்பத்தை அளிக்கிறது: அவளுடைய இரண்டு மகன்கள். மருத்துவரின் கை அவளைத் தொடுவதற்கு முன்பே சகோதரி பிரான்ஹாமின் ஒரு கட்டியைக் குணப்படுத்தியவர். அவர் நம்மோடு இருக்கிற அதே தேவனாய் மாத்திரம் இல்லாமல், அவர் ஜீவிக்கிறார் மற்றும் நமக்குள்ளாக வாசம் செய்கிறார். நாம் மாம்சமான வார்த்தையாக இருக்கிறோம்.

நான் நோக்கிப் பார்த்து ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தை கேட்கும் பொழுது, மாம்ச சரீரத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துவதை நாம் கேட்கிறோம், காண்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த தேவன் அனுப்பியவரை நாம் காண்கிறோம், கேட்கிறோம். மணவாட்டிக்கு மட்டுமே அந்த வெளிப்பாடு இருக்கும் என்பதை நாம் அறிவோம், எனவே நாம் அச்சமற்றவர்களாகிவிட்டோம். பதட்டமாகவோ, துயரமாகவோ, விரக்தியாகவோ, ஆச்சரியமாகவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை...நாமே மணவாட்டி.

என் சகோதரனே, "செவி கொடுத்து, பிழைத்துக்கொள்” பிழைத்துக்கொள்!
இப்பொழுதே இயேசுவுக்கு செவி கொடுத்து, பிழைத்துக் கொள்;
ஏனென்றால் அது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா!
அது நீங்கள், "செவி கொடுத்து பிழையுங்கள்” என்பதாய் மாத்திரமே உள்ளது.

ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக, நாம் என்னே ஒரு மகத்தான நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நிமிடத்திற்கு நிமிடம் நாம் எதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த நாளிலும் நாம் நம்முடைய அன்புக்குரியவர்களைக் காணப் போகிறோம் என்பதையே, அப்பொழுது, ஒரு இமைப்பொழுதில், நாம் இங்கிருந்து வெளியேறி, அவர்களுடன் மறுபுறம் இருப்போம். அது மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று நம்மால் அதை உணர முடியும் என்று தோன்றுகிறது...மகிமை!

மணவாட்டியே வாருங்கள், நித்திய ஜீவனின் வார்த்தையை எங்களிடத்தில் அவர் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தின் பேரில் மீண்டும் நாம் ஒரு முறை ஒன்றிணைவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்

வேதவாக்கியங்கள்: எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12

 

 

சனி, 18 அக்டோபர், 2025

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,

நாம் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 63-1229M விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதனின் இங்கே இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்க ஒன்று கூடுவோமாக.

சகோ.ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 11 அக்டோபர், 2025

அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,

இப்பொழுது ஒலிநாடாக்களில் கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்.

கர்த்தாவே, இந்த ஆறு சிறிய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியான எங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை நாங்கள் எவ்வாறு வெளிப்படுத்தத் துவங்க முடியும்? இது எங்களுக்கு இந்த நேரத்தின் செய்தியின் வெளிப்பாடாயுள்ளது. இது தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாகப் பேசி, “நீங்கள் என்னுடைய சத்தத்தோடு தரித்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தை உங்களுக்கு என்ன பொருட்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஒலிநாடாக்களில் நான் பேசியுள்ள இந்த செய்திகள் இன்றைக்கான என்னுடைய அடையாளம் என்ற வெளிப்பாட்டை நீங்கள் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று தம்முடைய மணவாட்டியினிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த காந்த ஒலிநாடாக்களில் நான் என் சத்தத்தை வைத்துள்ளேன்; ஏனென்றால் இந்தச் செய்திகள் முழு வார்த்தையையும் கொண்டிருக்க வேண்டும். ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய சத்தத்தை கேட்கும் கோடிக்கணக்கானவர்கள் இது என்னுடைய ஊழியம் என்ற வெளிப்பாட்டை உடையவர்களாக இருப்பார்கள். இது இன்றைக்கான பரிசுத்த ஆவியாக உள்ளது. இது என்னுடைய அடையாள செய்தியாய் இருக்கிறது.

“உலகம் முழுவதும் என் ஊழியத்தை அறிவிக்க நான் பல உண்மையுள்ள ஊழியர்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் என்னிடத்தில், ‘உம்முடைய ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் நாங்கள் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளோம். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து ஜனங்களை நாங்கள் கண்டோம். அவர்கள் உம்முடைய செய்தியைப் ஏற்றுக்கொள்ள தங்களுடைய சொந்த வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். இந்த நேரத்தின் செய்தியான, உங்களுடைய அடையாளத்தின் கீழ் வரும் யாவரும் காப்பாற்றப்படுவர் என்று நாங்கள் அவர்களிடத்தில் சொன்னோம்’” என்று சொன்னார்கள்.

இது இன்றைக்கான தேவனுடைய பரிபூரண வழி என்றால் என்ன? என்று ஒவ்வொரு மனிதனும் தன்னை ஆராய்ந்து தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமாயுள்ளது. தீர்க்கதரிசியின் வார்த்தை ஒரு முறை கூட தவறிப் போனதில்லை. அது மாத்திரமே சத்தியம் என்றும், அந்த காரியம் மாத்திரமே நம்முடைய மணவாட்டியை ஒன்றிணைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.

அவர் என்னவெல்லாம் கூறியிருந்தாரோ அவர் அதைக் கூறின விதத்திலேயே சரியாக நடந்தது. அக்கினி ஸ்தம்பம் இன்னும் நம்முடன் இங்கே உள்ளது. தேவனுடைய சத்தம் இன்னும் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தேவன் அந்த அடையாளத்தைக் கண்டபோது அவர் கடந்து செல்வார் என்று தீர்க்கதரிசி நம்மிடம் சொன்னார். இது அந்த அடையாள செய்தியின் கீழ் நாம் யாவரும் ஒன்று சேர்வதற்கான பதறலின் ஒரு நேரமாய் இருக்கிறது.

நாம் இந்தக் கடைசி காலத்தில் தேவனுடைய மகத்தான கரத்தைக் கண்டிருக்கிறோம். அவர் நமக்கு அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறார், அது அடையாள அறிவிப்புக்குறியின் கீழே வந்துள்ளது. இப்பொழுது, நாம அந்த அடையாள அறிவிப்புக்குறியின் கீழே இருக்கையில், நாம் ஒன்று கூடி வந்து பதறலில் இராப்போஜனத்தை எடுத்துக் கொள்வோமாக; ஏனென்றால் தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

நாங்கள் பதறல்கள் 63-0901E என்ற செய்தியை கேட்கப் போகிறபடியால், நீங்களும் அதைக் கேட்டுக்கும்படிக்கும், இராப்போஜனம் மற்றும் கால்களை கழுவும் ஆராதனையை இந்த ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கும்படி நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்க விரும்புகிறேன்.

செய்தியும் இராப்போஜன ஆராதனையும் ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களுடைய உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு உங்களுடைய ஆராதனை துவங்குவதற்கு தயவு செய்து தயங்க வேண்டாம், நம்முடைய வெளிநாட்டு விசுவாசிகள் பலர் அந்த நேரத்தில் உங்களுடைய ஆராதனையைத் தொடங்குவது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆராதனையின் கோப்பு பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு இணைப்பாக இருக்கும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

சேவைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16

 

 

தொடர்புடைய சேவைகள்