
அன்புள்ள சகோதரன் பிரான்ஹாம்,
அவருடைய மணவாட்டியை அழைக்க தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளராக நீர் அனுப்பப்பட்டிருக்கிறீர் என்று என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். நீர் உலகத்துக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள தேவ சத்தமாய் இருக்கிறீர். வேதாகமத்தின் இரகசியங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்த அவர் தெரிந்துகொண்ட ஒருவராக நீர் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒலிநாடாக்களில் நீர் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன்.
நான் உம்மிடத்தில் கேட்க விரும்புகிற ஒரு கேள்வி என்னுடைய இருதயத்தில் உண்டு. கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலவிதமான காரியங்களைச் சொல்லுகிற பல மனிதர்களும், பல சத்தங்களும் உள்ளன. நான் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நான் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டிருக்க விரும்புகிறேன். நான் எவருக்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நீர் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன்.
எது மணவாட்டியை ஒன்று சேர்த்து நமக்குத் தேவையான எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை நமக்கு அளிக்கும்?
எடுத்துக் கொள்ளப்படுவதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக, வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், ஏழு இரகசியங்களுக்கு ஒப்பான ஏழு இடிமுழக்கங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டதா? அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டதா, ஆனால் இன்னும் இடிமுழக்கங்களாக நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லையா?
இல்லை, அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன; அதுதான் இடிமுழக்கங்களைக் குறித்தாயிருந்தது. அவை எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால்...ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முழங்கின, அவை என்னவென்று யாருமே அறிந்துகொள்ள முடியவில்லை…அவை என்னவென்று யோவான் அறிந்திருந்தான், ஆனால் அவன் அதை எழுத தடை செய்யப்பட்டான். அவர், “ஏழாம் தூதன், தன் நாட்களில் தன் சத்தத்தை முழங்கும்போது, ஏழு இடிமுழக்கங்களின் ஏழு இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்” என்றார். ஏழாம் தூதன் என்பவர் ஏழாம் சபை காலத்தின் ஒரு செய்தியாளர்.
தேவனுக்கு மகிமை. அதுதான் என்னுடைய பதில். ஏழு இடிமுழக்கங்களின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயும், இப்பொழுது மணவாட்டியை ஒன்றாக இணைத்துக்கொண்டு, நமக்கு தேவைப்படுகிற எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறது.
சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய கேள்விக்கு பதிலளித்தமைக்காக, உங்களுக்கு நன்றி. நான் என்னுடைய இருதயத்தில் கொண்டிருந்த கேள்விக்கான பதில் ஒலிநாடாக்களில் இருக்கும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
நான் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். நான் அனுதினமும் தொடர்ந்து இயங்கு பொத்தானை அழுத்தி, இன்னும் அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, முத்திரைகளின் பேரிலான கேள்விகளும் பதில்களும் 63-0324M என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை எங்களோடு பெற்றுக் கொள்ள வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்