
என்னுடைய அன்பான பிள்ளைகளே,
நீங்கள் உங்களுடைய பரலோகப் பிதாவாகிய, எனக்கு ஒரு தன்மையாயிருக்கிறீர்கள். நீங்கள் ஆதியிலிருந்தே எனக்குள் இருந்தீர்கள். உங்களுக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நீங்கள் என்னுடன் அங்கே இருந்தீர்கள். உங்களைத் தொடர்புகொள்ளவும், உங்களுடன் பேசவும், உங்களை நேசிக்கவும், உங்களுடைய கரங்களை குலுக்கவும் நான் விரும்பியதால், உங்களை அறிய நான் மிகவும் ஏங்கினேன்.
பூமியின்மேல் ஒரு தேவனுடைய குடும்பமாக நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளும்படியாக நான் மாம்சமாக்கப்பட்டதுபோலவே என்னுடைய பிள்ளையாய் இருக்கிறபடியால் நீங்களும் மாம்சமாக்கப்பட்டு, என்னுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அதுவே என்னுடைய நோக்கமும், ஆதியிலிருந்தே நான் விரும்பினதுமாயிருந்தது.
நாம் ஐக்கியங்கொள்ளும்படியாக உங்களுக்காகவே ஒரு ஏதேன் தோட்டத்தை உருவாக்கினேன், ஆனால் என்னுடைய சத்துரு வஞ்சகத்துடன் உள்ளே நழுவி வந்து என்னுடைய திட்டத்தை உங்களுக்கு தவறாக வியாக்கியானிப்பதன் மூலம் இந்த உலகத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
இது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு துரோகமான நேரமாயுள்ளது, ஆனால் இது எல்லா காலங்களிலும் மிகவும் மகிமையான காலமாயுங்கூட உள்ளது, ஏனென்றால் நீங்கள் இப்போது மீண்டும் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் மீண்டும் ஏதேனை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய ஆவி உங்களுக்குள் கற்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இது என்னுடைய முன்னறிவினால் உங்களுக்குள் என்னுடைய வல்லமையான கரத்தினால் நான் முன் குறித்த ஒன்றாக உள்ளது. இப்பொழுது, "நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோங்கள்"; என்று என்னுடைய மணவாட்டியை பற்றிக்கொள்ளும்படியாக சென்று கொண்டிருக்கிற என்னுடைய கடைசி அழைப்பாயுள்ளது.
இன்றைக்கு அவர்கள் என்னுடைய வார்த்தையை ஜனங்களுடைய இருதயங்களில் நிலைநிறுத்த முயற்சிக்கவில்லை, அவர்கள் தங்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். சபைகள் ஒரு நபருடைய இருதயத்தில் சபையின் கோட்பாட்டையே நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும், “நான் இதைச் செய்தேன். எனக்கு, நான், என்னுடையது, என்னுடைய ஸ்தாபனம், எனக்கு, இது” என்றே கூறுகிறான். அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்கிறார்களேயன்றி, என்னுடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட என்னுடைய வார்த்தையை அல்ல.
நான் கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை, நான் கூறினவண்ணமாகவே நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், அதுவே இதற்கு என்றென்றைக்குமான தீர்வாகிறது.
என்னுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் செயலில் இருக்கிறார். இது உங்களுக்குள் ஒரு ஜீவனாயுள்ளது, ஒரு உணர்ச்சியாயல்ல; ஒருவித மாம்சப்பிரகாரமான அத்தாட்சியாய் அல்ல, ஆனால் இது ஒரு நபராயுள்ளது, நான், இயேசு கிறிஸ்து, தேவனுடைய வார்த்தை, உங்களுடைய இருதயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இது இந்தக் காலத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உயிர்ப்பிக்கிறது. வார்த்தையின்படி உங்களில் செயல்படுவது என்னுடைய பரிசுத்த ஆவியாகும்.
என்னுடைய முதல் மணவாட்டி சாத்தானுடைய தர்க்க அறிவிற்கு செவி கொடுத்ததினால் தவறிப்போனாள். ஆனால் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிற, நானே உங்களை மீட்டுக்கொண்டேன். நீங்கள் என்னை ஏமாற்றிவிடமாட்டீர்கள். நீங்கள் சாத்தானின் தர்க்க அறிவிற்க்கு செவிசாய்க்காத என்னுடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டியாக இருக்கிறீர்கள். நீங்கள் என் வார்த்தையுடன் தரித்திருப்பீர்கள்.
ஆயிர வருட அரசாட்சி முடிவுற்ற பிறகு, அதன்பின்னர் மீண்டும் ஏதேன் மீண்டும் நிலைநாட்டப்படும்; என்னுடைய மகத்தான இராஜ்யம் திரும்பக் கைப்பற்றப்படும். நான் கெத்செமனே தோட்டத்தில் சாத்தானுடன் அதற்கு போராடினேன், என்னுடைய ஏதேனை மீண்டும் வென்றேன். இப்போது நான் பரலோகத்தில் உங்கள் புதிய ஏதேனை ஆயத்தம் செய்யப்போயிருக்கிறேன். நான் விரைவில் உங்களுக்காக மீண்டும் வருவேன், எனவே உங்கள் இருதயங்கள் கலங்காதிருப்பதாக.
இனி சமுத்திரமே இருக்காது, ஏனென்றால் முதலாம் வானமும் முதலாம் பூமியும் ஒழிந்துபோகும். பூமியின் மேலிருந்த ஒவ்வொரு கிருமியையும், ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு சுகவீனத்தையும், மற்றும் ஒவ்வொரு அசுத்தமான காரியத்தையும் கொன்றுபோடும் ஒரு அக்கினி அபிஷேகத்தின் மூலம் அதை நான் புதுப்பிப்பேன்.
பூமியானது வெடிக்கும், ஒரு புதிய பூமி உண்டாகும். இந்த முதலாம் வானமும் முதலாம் பூமியும் ஒழிந்துபோகும். பரலோகத்தில் என்னிடத்திலிருந்து இறங்கி வருகிற ஒரு புதிய எருசலேம் இருக்கும். நான் உங்களோடு, என் உண்மையான தன்மைகளான, என்னுடைய குமாரர் மற்றும் குமாரத்திகளோடு இருப்பேன். எந்தப் பாவத்திற்கும் குருடாக்கப்பட்ட உங்களுடைய கண்களோடு, நாம் பரிசுத்தத்தில் ஐக்கியங்கொள்ளுவோம்.
நான் வருவேன் என்று உங்களுக்கு வாக்களித்தபடியே நான் உங்களிடத்திற்கு மீண்டும் வந்துள்ளேன். நான் உங்களுக்காக என் வார்த்தையைக் காத்துக்கொண்டேன். தவறான புரிந்து கொள்ளுதலோ, எந்தக் கேள்வியோ இல்லாதபடிக்கு, உங்களுக்கான என்னுடைய சுத்தமான வார்த்தையை, நான் என்னுடைய வார்த்தையை காந்த ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளேன்; ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது.
உங்களுடைய மனசாட்சியை தூய்மையாக வைத்திருங்கள். உங்களுடைய இருதயங்கள் திரையிடப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு பெரிய நபராகாதபடிக்கு உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களுடைய கண்களை திரையிடப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த நாட்களில் ஒன்றில், நான் மீண்டும் மேற்கில் சவாரி செய்வேன் என்பதை, ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதுவரை, என் நாமத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்; அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும், நீங்கள் எங்கு சென்றாலும், இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், அதைக் கொண்டு செல்லுங்கள்.
ஒரு வார்த்தையின் பேரிலும் சமரசமாகாதீர்கள். ஒலிநாடாவில் உள்ள என்னுடைய வார்த்தைக்கு வியாக்கியானமே தேவையில்லை. நீங்கள் என்னுடைய பாகமாய், என்னுடைய தன்மையாய் இருக்கிறீர்கள். இந்த உலகம் சாத்தானின் ஏதேனாய் இருக்கிறது, ஆனால் நாம் ஒருமித்து நித்தியத்தை கழிக்கும்படி நான் உங்களுக்கு ஒரு புதிய ஏதேனை உருவாக்கியிருக்கிறேன். அதுவரையில், என்னுடைய வார்த்தையின் பேரில் இணைந்திருங்கள். ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, சாத்தானின் ஏதேன் 65-0829 என்ற செய்தியில் என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசியின் மூலமாக நான் பேசுவதைக் கேட்கவும், என்னுடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்கப்போகிறபடியால், பிரான்ஹாம் கூடாரத்தில் அவர்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்.
அவருடைய சார்பில்,
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
2 தீமோத்தேயு 3:1-9வெளிப்படுத்தின விசேஷம் 3:14
2 தெசலோனிக்கேயர் 2:1-4
ஏசாயா 14:12-14
மத்தேயு 24:24