
அன்புள்ள விசுவாசியே,
நான் ஒரு விசுவாசி என்று கூறுவது எவ்வளவு அற்புதமானது. ஒரு கோட்பாட்டில் இல்லை; வார்த்தையிலே! ஒரு ஸ்தாபனத்தில் இல்லை; வார்த்தையிலே! வேறு யாரேனும் என்ன கூறுகிறார்கள் என்பது அல்ல; ஆனால் வார்த்தை என்ன கூறுகிறது என்பதே!
நாம் எதையும் கேள்வி கேட்கவில்லை, நாம் அதை எளிமையாக விசுவாசிக்கிறோம். இது எப்படித் தோன்றினாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், நாம் ஒரு உண்மையான விசுவாசியாயிருக்கிறோம். நாம் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாக இருக்கிறோம்.
நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற வேளையைக் காண்கிறோம். நாம் இந்த மணி நேரத்துக்கான செய்தியைக் காண்கிறோம். நாம் இந்த மணி நேரத்துக்கான செய்தியாளரைக் காண்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துகிறதை நாம் காண்கிறோம். நாம் இந்த செய்தியையும், இந்த செய்தியாளரையும், இந்த வார்த்தையையும் தவிர வேறெதையும் காண்கிறதில்லை.
ஒரு உண்மையான விசுவாசி வார்த்தையைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை. அவ்வளவுதான். அவன் வார்த்தையைக் கவனிக்கிறான். அவன் பிழைகளை கண்டறியும்படியான வாய்ப்புகளை எதிர்நோக்கமாட்டான். அவன் எந்த தந்திரமான வேலைகளையும் எதிர்நோக்கமாட்டான். அவன் தேவனை விசுவாசிக்கிறான், அதுவே இதற்கு தீர்வாகிறது, மேலும் அவன் தொடர்ந்து செல்கிறான். புரிகிறதா? அப்படித்தான் விசுவாசி இருக்கிறான்.
நாம் வார்த்தையைத் தவிர வேறு எதையும் கேட்க முடியாது; தீர்க்கதரிசிக்கு மாத்திரமே வார்த்தை வருகிறது. பிழைகளை கண்டறியும் வாய்ப்புகளே இல்லை, யாரோ ஒருவரின் வியாக்கியானம் அல்ல, மணவாட்டிக்காக ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டு வைக்கப்பட்ட சுத்தமான வார்த்தை.
ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்குள்ளாக உயிர்ப்பித்து ஜீவிக்கச் செய்துள்ளார். விசுவாசத்தினால், நாம் அதைப் புரிந்துகொண்டு, அதை விசுவாசிக்கிறோம். மணவாட்டிக்குள் அப்படிப்பட்ட ஒரு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொண்டு செல்லும்படியான ஒரு சத்தம் பரலோகத்தில் இருந்து உண்டாகி, அது ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான கிருபையில், பூமியிலிருந்து நம்மைக் கொண்டு செல்லும். தேவன் அதை வாக்குப்பண்ணினார்.
நாம் எல்லா நேரத்திலும், ஒவ்வொரு நாளும் சோதனைக்குட்படுத்தப்படுகிறோம். சாத்தான் நம்முடைய சோதனைகளையும் பரிசோதனைகளையும் தேவன் நம்மைத் தண்டிக்கிறார் என்று நமக்கு சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதுவல்ல, அது சாத்தான் அதைச் செய்வதாகும், தேவன் அதை அனுமதிக்கிறார்.
நாம் என்ன செய்வோம் என்பதைப் பார்க்கும்படிக்கு தேவன் நம்மைப் பக்குவப்படுத்தி, நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார். நாம் எந்நிலையில் இருப்போம் என்பதை காணும்படிக்கு, நம்மை உலுக்கி, நம்மை கீழே தள்ளவே சோதனை உண்டாகிறது. ஆனால் நாம் ஒவ்வொரு யுத்தத்திலும் ஜெயங்கொள்கிறோம், ஏனென்றால் நாம் ஜீவனுள்ள திருஷ்டாந்தங்களாக இருக்கிறோம்; தேவனுடைய வார்த்தையானது நமக்குள்ளாகவும், நம் மூலமாகவும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.
அவருடைய பார்வையில் நாம் எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்கிறோம்?
நீங்கள் எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும், உங்களுடைய ஸ்தானத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்களோ, “நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்” என்று கூறலாம். உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாதபடிக்கு, தேவன் தம்முடைய மகத்தான திட்டத்தில், கிறிஸ்துவின் சரீர ஒழுங்கில் அவ்வண்ணமாக அமைத்திருக்கிறார்.
அது எவ்வளவு அற்புதமானது? நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்தானம் உண்டு. தேவன் உலகத்தை உண்டாக்க உரைத்தபோது நாம் ஒவ்வொருவரும் இங்கே இருந்தோம். அப்பொழுதே அவர் நம்முடைய சரீரத்தை இங்கே வைத்திருந்தார். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றி, நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியாக இந்த நேரத்தில் நம்மை பூமியின் மீது வைத்தார்.
ஒவ்வொருவரும் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த வார்த்தை, இந்த செய்தி, இந்த செய்தியாளரின் பேரில் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள்? ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள வார்த்தையைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?
உலகின் பல்வேறு பகுதிகளிலும், இந்த ஒலிநாடாக்கள் ஒலிநாடாக்களின் ஊழியங்கள் மூலம் எங்கும் செல்கின்றன.
இது உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டிக்கு தேவனிடத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு ஒலிநாடா ஊழியமாகும். இது நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் யார் என்றும், நீங்கள் வார்த்தையில் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா என்பதையும் உங்களுக்குச் சரியாகச் சொல்கிறது.
நீங்கள் மூன்று பிரிவுகளில் ஒன்றில் இருக்கிறீர்கள். உங்களுடைய தற்போதைய நிலையில், தற்போதைய மனநிலையில், அதாவது, இங்கே இந்த புலப்படும் பார்வையாளர்களாகிய உங்களுக்கும், இந்த ஒலிநாடாவை கேட்கும் காணக்கூடாத கூட்டத்தாராய் இருக்கும் உங்களுக்கும், இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு உங்களுடைய தற்போதைய மனநிலையையும், நீங்கள் எந்தப் பிரிவில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு நிரூபிக்கிறது.
இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு, நீங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள சுத்தமான வார்த்தைகளை விட உங்களுக்கு அதிகம் தேவை என்று சிலர் நம்புகிறீர்கள். ஒரே மனிதனின் செய்தியின் நாட்கள் முடிந்துவிட்ட என்றும்; நீங்கள் உங்களுடைய மேய்ப்பருக்கு செவிகொடுக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள் என்றும் சிலர் நம்புகின்றனர்.
இன்றைய செய்தியில் உள்ள மிகப் பெரிய பிரிவு, ஒலிநாடாக்களைக் கேட்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமே. சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறு என்றும்; மேய்ப்பர் மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும் என்றும் சிலர் கற்பிக்கிறார்கள். சிலர் ஒரு சமநிலை உண்டு என்று கூறுகிறார்கள், ஆனால் சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதேயில்லை, அல்லது அவர்கள் அதை இயங்கினாலும் மிக அரிதாகவே செய்கிறார்கள்.
வார்த்தையின் பல யோசனைகள், பல எண்ணங்கள், பல வியாக்கியானங்களில், யார் சொல்வது சரி? யாரை நம்ப வேண்டும்? அது நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாயுள்ளது.
யாரேனும் கூறுவதை அல்ல, வார்த்தையோடு அதை சரிபார்க்க வேண்டும் என்று தீர்க்கதரிசி நம்மிடம் சொன்னார். அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? அதைச் செய்வதற்கு ஒரு வழி மாத்திரமே உண்டு, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்.
ஒரு சரியான பதில், ஒரு சரியான வழியில் இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்குத்தானே தீர்மானிக்க வேண்டும். இந்தச் செய்தியைக் கேட்கும் அனைவருக்கும் இந்த ஞாயிறு எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று: கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள ஒரே நபர் யார்? அக்கினி ஸ்தம்பம் யாரை ரூபகாரப்படுத்தினது? இயேசுவை நமக்கு அறிமுகப்படுத்துவது யார்? பிழையற்ற வார்த்தையை உரைத்தது யார்? பூமியில் யாருடைய வார்த்தைகள் மிகவும் முக்கியமானவையாயிருந்து, அவை பரலோகத்தில் எதிரொலிக்கப்பட்டன?
நீங்கள் சரியான பதில்களைப் பெற விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 63-1124E—மூன்று வகைகளான விசுவாசிகள் என்ற செய்தியைக் கேட்க வருமாறு நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. யோவான் 6:60-71