ஞாயிறு
04 பிப்ரவரி 2024
63-1229M
விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்

அன்புள்ள இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பே,

நம்முடைய வீடுகளிலும் சபைகளிலும் அமர்ந்து, ஒலிநாடாக்களை கேட்கிற, நாம் பைத்தியக்காரர்கள் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். நாம் மரணத்துக்கேதுவாய் பட்டினியாயிருந்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாம் ஆகஸ்ட் மாத சூரிய வெளிச்சத்தின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, கொழுத்த கன்றுகளைப் போல சேமித்து வைக்கப்பட்ட ஆகாரத்தால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணரவேயில்லை.

நாம் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கிற நன்கு வளர்ச்சியடைந்த கோதுமையாய் இருக்கிறோம். அவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தில் வாழ விரும்பினால், வாழட்டும். நாம் அல்ல, நாமோ நம்முடைய நாளுக்கான ஒளியில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நாளுக்கான ஒளி எது? தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தம்முடைய வல்லமையான ஏழாம் தூதனை உலகத்திற்கு அனுப்பினார். அவர் என்னவாக இருந்தார்? அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் கூறினது நிறைவேறுகிறது. அவர் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தின் ஒரு வெளிப்படுத்துதலாய் இருந்தார். அவர் இன்றைக்கான தேவனுடைய வெளிச்சமாய் இருந்தார்.

ஆனால் மோசேயோ எப்படியும், முன்னேறிச் சென்றான், ஏனெனில் அவன் ஜீவனாயிருந்தான். அவன் அக்காலத்து ஒளியாயிருந்தான். அவன் எதை உடையவனாயிருந்தான், அது என்னவாயிருந்தது? தேவன் மோசேயின் மூலம் அவர் வாக்களித்திருந்த வார்த்தையை வெளிப்படுத்துதல், மோசே அந்த ஒளியாயிருந்தான்.

எலியா ஒளியாயிருந்தான்…ஒளி! அல்லேலூயா! அவன் ஒளியாயிருந்தான். ஒளி! அவன் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் இருந்தான்.

யோவான், அவன் பூமியில் தோன்றின போது… இயேசு, “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்” என்று கூறினார். அல்லேலூயா! ஏன்? அவன் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான்.

அப்படியானால் வார்த்தையின் படி, நம் நாளுக்கான ஒளி தேவனுடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம். பாபிலோனின் வனாந்தரத்தில், “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் இருக்கும்படிக்கு, அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று கூப்பிடுகிறவராய் இருந்தார்.

அவர் மல்கியா 4:5, மற்றும் வெளிப்படுத்துதல் 10:7-ன் நிறைவேறுதலாய் இருந்தார். அவர், "அது அங்கே இருக்கும்" என்று உரைத்தபோது, அதில் எதுவும் இல்லாமல் இருந்தபோது, அது அங்கு இருந்தது. அவர் தொடக்கத்தில் ஒரு அணிலையும் கொண்டிருக்கவில்லை; அங்கு ஒன்றுமே இல்லை. அவர், “உண்டாகக்கடவது” என்று கூறினபோது, அங்கே உண்டானது.

தேவனுடைய வார்த்தையானது பிழையற்றது, அது நிறைவேற்றப்பட வேண்டும். நாம் ஒளியைக் கண்டுள்ளோம்; இந்த நாளுக்காக அவர் வாக்குறுதி அளித்த அவருடைய வார்த்தை. அதுவே சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே இந்த மணிநேரத்தின் ஒளியாயுள்ளது.

இன்றைக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்து கொள்வதில் ஈடு இணை ஏதுமில்லை. இதில் வால் புழுக்களே இல்லை…ஒன்று கூட இல்லை. மற்றவர்கள் வேறொன்றினால் திருப்தி அடைந்தால், திருப்தி அடையட்டும், ஆனால் நம்மால் முடியாது.

உங்களுடைய போதகர் சொல்வதை நீங்கள் கேட்க முடியாது, அல்லது பிரசங்கிக்க முடியாது என்று அர்த்தம் இல்லை; இல்லவேயில்லை, ஆனால் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் தேவனுடைய மகத்தான வடிகட்டியான, ஒலிநாடாவில் உள்ள இந்த செய்தியினூடாக வடிகட்ட வேண்டும்.

ஒரு மனிதன் செய்தியின் நாட்கள் முடிந்துவிட்டன என்று அவர்கள் கூறும்போது, அது வால் புழுக்கள். இந்தச் செய்தி அவர்களுடைய முற்றிலுமானது அல்ல என்று அவர்கள் கூறும்போது, அது வால் புழுக்கள். ஒலிநாடாக்களைக் கேட்பது போதாது என்று அவர்கள் கூறும்போது, அது வால் புழுக்கள்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று சொல்ல முடியும் என்பதை அறிந்து, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைவிட விட மகத்தானது எதுவுமேயில்லை. இந்த மணி நேரத்துக்கான செய்தியைக் கேட்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் நீங்கள் இதைச் செய்ய முடியாது.

இப்பொழுது நாம் இன்றைக்கான இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பாய் இருக்கிறோம். நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறோம். நாம் அவருடைய மகத்தான கடைசி-கால வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள அவர் தெரிந்து கொண்டவர்களாய் இருக்கிறோம். நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம்.

அவருடைய மணவாட்டி மட்டுமே இன்றைக்கான ஒளியின் உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வாள். இந்த ஒளி அவர்களை பரிபூரணப்படுத்தும் என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த ஒளி அவருடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பேசுகிறதாய் உள்ளது.

இந்த வேளைக்கான தேவனுடைய ஒளியின் பிரசன்னத்தில் நீங்கள் அமர விரும்புகிறீர்களா? அப்படியானால் விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கே இருக்கிறார் 63-1229M என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்.

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

ஆதியாகமம் 1:3, அதிகாரம் 2
சங்கீதம் 22
யோவேல் 2:28
ஏசாயா 7:14, 9:6, 28:10, 42:1-7
பரி. மத்தேயு 4:12-17, அதிகாரங்கள் 24 மற்றும் 28
பரி. மாற்கு அதிகாரம் 16
வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 3