
அன்புள்ள பரிபூரண விசுவாச மணவாட்டியே,
நம்முடைய விசுவாசம் கேட்பதன் மூலம், வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது.
தீர்க்கதரிசி என்பது:
வார்த்தை மாம்சமானது! அல்லேலூயா! ஒரு பரிபூரண எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக உங்களை ஒரு பரிபூரண விசுவாசத்திற்கு கொண்டுவரும்படிக்கு, வார்த்தையானது மானிட மாம்சத்தில் சரீரப்பிரகாரமான அடையாளங்களினாலும், பொருள் ரீதியான அடையாளங்களினாலும், வேத பிரகாரமான அடையாளங்களினாலும் பரிபூரணமாக செயல்படுகிறது.
பரிபூரண விசுவாசத்தை நமக்கு கொடுக்கும்படிக்கு மானிட மாம்சத்தினூடாக அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி, ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் பேசுகிறதை மாத்திரமே கேட்பதனால் நாம் செய்யும்படி வார்த்தை என்ன கூறுகிறதோ அதையே நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்.
நீங்கள்…ஆவியானவர் கூறுகிறதைத் தவிர வேறு எதற்கும் உங்களுடைய செவிகள் செவிடாக உள்ளன. புரிகிறதா? "காதுள்ளவன் (கேட்கிறவன்), ஆவியானவர் சபைகளுக்கு கூறுகிறதை புரிந்துகொள்கிறான்”, கேட்கக்கூடிய நிலையமாக இருக்கிற ஒருவன், ஆவியானவர் சபைகளுக்கு சொல்கிறதை புரிந்துகொள்கிறான். புரிகிறதா?
நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து புரிந்துகொள்ளுகிற அவருடைய கேட்டக்கூடிய நிலையமாக இருக்கிறோம். அவர் நமக்கு கட்டளைகளை கொடுக்கிறபோது: “ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அதையேக் கூறுங்கள். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன், நீங்கள் என்னை உங்களுடைய மேய்ப்பன் என்று அழைக்கிறீர்கள், நீங்கள் நன்றாக கூறுகிறீர்கள், ஏனென்றால் நான் அவ்வண்ணமாகவே இருக்கிறேன்.” நாம் அவைகளை நிறைவேற்றுகிறோம். அவர் என்னவெல்லாம் கூறுகிறாரோ, அதில் எங்குமே ஒரு சந்தேகத்தின் நிழலும் கிடையாது. நாம் அதிலே தொடர்ந்து நடக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அதிலிருந்து நம்மை மாற்றக்கூடிய ஒருவரும் உலகில் இல்லை, நாம் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்கிறோம்.
இப்பொழுது நீங்கள் பரிபூரண விசுவாசத்திற்குள் வந்து கொண்டிருக்கிறீர்கள், பரிபூரண பரிபூரணம் தவறிப்போக முடியாது. அந்த விசுவாசம் ஒருபோதும் தவறிப்போகிறதில்லை.
நாம் இப்போது அவருடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டுள்ளோம். நாம் நம்மையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நாம் யோபுவைப் போல, எதற்கும் பயப்படவில்லை. நாம் பேதுருவைப் போல மிகப் பெரிய அலைகளைக் கண்டு பயமடைந்து தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கவில்லை. அந்த நாட்கள் முடிவுற்றுவிட்டன.
இப்பொழுது நமக்குள் ஜீவிக்கிற வாசம் செய்கிற அந்த பரிபூரண வார்த்தையையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் மணவாட்டியின் மூலக்கூறுகளுக்குள்ளாக வந்துகொண்டிருக்கிறோம். நாம் எடுத்துக் கொள்ளப்படும் நிலைக்குள்ளாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஜெபிக்கையில், நாம் கேட்டுக் கொள்கிறதை பெற்றுக்கொள்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறபோது, நாம் அதை பெற்றுக்கொள்வோம்; அது நமக்கு கொடுக்கப்படும். காலமோ, இடமோ, எதுவுமே அதை எப்போதுமே மாற்றாது. அது முடிந்துவிட்டது என்று நமக்குத் தெரியும். அது ஏற்கனவே முடிந்துவிட்டது. நமக்கு எப்படி தெரியும்? ஏனென்றால், அது நம்முடைய வார்த்தையல்ல, ஆனால் அவருடைய வார்த்தையே, அதாவது அவரே நமக்கு உரைத்து, கொடுத்திருக்கிறார். அதைப் பேசுவதற்கான அதிகாரமும், பரிபூரண விசுவாசமும் நமக்கு உண்டு.
இயேசு தமக்காக செய்ததைப் போலவே, நாம் யார் என்னும், நம்முடைய ஸ்தானத்தை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். அப்போது நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் விசுவாசம் வைப்பதேயாகும். நாம் என்னவாக இருக்கிறோம் என்று வார்த்தை கூறுகிறதில் விசுவாசம் வையுங்கள்! அப்பொழுது தேவனுடைய வார்த்தை நமக்குள் வந்து தம்மை வெளிப்படுத்துகிறது; ஏனென்றால் நாம் விசுவாசிகள். ஒரு விசுவாசி என்பது "நமக்குள் அசைவாடுகிற தேவனுடைய விசுவாசமே."
இப்பொழுது, நாம் அதே ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக, அவர் தமுடைய ஜனங்களில், பரிசுத்த ஆவியின் ரூபத்தில், அவர் மரித்து விடவில்லை என்பதை காண்பிக்கும்படிக்கு, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பிரகாசிக்க; அவளிடத்தில் காதல் கொண்ட படியால் தம்மை அவளுக்குள்ளாக ஊற்றி, தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அசைவாடுகிறபடியால், கடைசி நாளின் மேசியாக்களாகிறோம். அவர்கள் கல்யாண விருந்துக்காக ஒன்றாகிக் கொண்டு இருக்கிறார்கள்; அதே அடையாளங்கள் அதே தேவனால் வாக்களிக்கப்பட்டு அதே வார்த்தையில், தம்முடையதே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
அதை விசுவாசிப்பதை தவிர நமக்கு வேறெதுவும் விடப்பட்டிருக்கவில்லை; விசுவாசிப்பதன் மூலம் இது ஒரு பரிபூரண விசுவாசத்தை உருவாக்கும் உறுதியாயுள்ளது. அதை மீண்டும் கேளுங்கள், அதை விசுவாசிப்பதன் மூலம் பரிபூரண விசுவாசத்தை உண்டாக்குகிற உறுதியாய் அது இருக்கிறது.
உங்களுடைய சரீரத்தில் ஒரு வார்த்தையை சந்தேகிக்கும் தசைநார் உள்ளதா: இல்லை
நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்களா: ஆம்
அவர் இந்த செய்தியை குறித்த ஒரு வெளிப்பாட்டை உங்களுக்கு அளித்திருக்கிறாரா: ஆம்
மணவாட்டி மாத்திரமே அந்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றிருப்பாளா: ஆம்
நீங்கள் அவருடைய மணவாட்டி என்று உங்களுக்குத் தெரியுமா: ஆம்
ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதன் மூலம் அது உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தை அளிக்கும் என்று அவர் கூறினாரா: ஆம்
அப்படியானால் நீங்கள் பரிபூரண விசுவாச வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறீர்களே!!
ஓ கர்த்தாவே உமது வார்த்தையைக் கேட்க ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடும் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்களை ஆயத்தப்படுத்தும். எப்போதும் போல மீண்டும் எங்களையே நாங்கள் நோக்கிப் பாராமல், நீர் எங்களுக்காக உரைத்த உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும். மூன்றாம் இழுப்பு செயல்முறையில் உள்ளதை நாங்கள் கண்டுகொண்டு, அது எங்களுக்குள் வாசம் செய்கிறதையும் நாங்கள் அறிந்துகொள்ளுகிறோம். நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பேசி விசுவாசிக்க வேண்டும்.
நீர் உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டிக்காக சீக்கிரமாக வருகிறீர் என்பதை நாங்கள் அறிவோம். பிதாவே, எங்களுடைய தேவை என்னவாயிருந்தாலும், எங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும், நாங்கள் அதை பெற்றுக்கொள்வோம் என்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால் நீர் எங்களுக்காக ஏற்கனவே உரைத்திருக்கிற உம்முடைய வார்த்தையாக இது இருக்கிறது. அதை விசுவாசிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. பிதாவே நாங்கள் விசுவாசிக்கிறோம், நாங்கள் விசுவாசிக்கிறோம். இப்பொழுது நாங்கள் உம்முடைய வார்த்தையின் பேரில் செயல்படுவோமாக.
நாங்கள் எங்களுடைய எல்லா தோல்விகளையும், பாவங்களையும் மீறுதல்களையும் அறிக்கை செய்கிறோம். உம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற உம்முடைய குமாரனின் இரத்தத்தினூடாகவே நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் உம்முடைய மணவாட்டிக்குள் ஒரு மாற்றம் உண்டாகட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியை எங்கள் மீது ஊற்றி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.
வியாதியஸ்தர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் குணமடைவார்கள். பின்வாங்கிப்போனவர்கள் வார்த்தைக்கு திரும்பி வருவார்கள். உலகெங்கிலுமுள்ள உம்முடைய மணவாட்டி இன்றைக்காக உம்முடைய அருளப்பட்ட வழியைக் கண்டு விசுவாசிப்பாள்.
உங்கள் மீது கரங்களை வைக்கும்படிக்கு எந்த ஒருவரையும் நீங்கள் உடையவராயில்லையென்றால்… நீங்களே உங்கள் மீது கரத்தை வைத்துக்கொள்ளுங்கள்…நீங்கள் ஒரு விசுவாசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையாகிவிட்டீர்கள்; நீங்கள் வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் வார்த்தையாக மாறுகிறீர்கள்.
கர்த்தராகிய இயேசுவே வாரும், உம்முடைய வார்த்தையின் பிரசன்னத்தில் இருப்பதன் மூலம் உம்முடைய மணவாட்டி முதிர்ச்சியடைந்து, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். நாங்கள் உம்முடைய வார்த்தையால் அலங்கரிக்கப்பட்டு, உடுத்தப்பட விரும்புகிறோம்.
ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி,பரிபூரண விசுவாசம் 63-0825E: என்ற செய்தியில் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீர் பேசி எங்களுக்கு வெளிப்படுத்துவதை உம்முடைய மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்று கூடி கேட்கப்போகிறபடியால், முன் எப்போதும் இல்லாத வகையில் எங்களை அபிஷேகிக்க வாரும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மாற்கு 11:22-26 / 16:15-18
பரி. யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21