ஞாயிறு
14 ஆகஸ்ட் 2022
64-0705
சிறந்த வேலைப்பாடு

அன்புள்ள சிறந்த வேலைப்பாடே,

கடந்த ஞாயிற்றுக்கிழமை நம் ஒவ்வொருவரைப் பற்றியும் நம்முடைய மேய்ப்பர் கூறினதை நினைவுபடுத்தாமல் இன்று எப்படி என்னால் எழுத முடியும்?

ஆனால் நான் எங்கு சென்றபோதிலும்...என்னுடன் இணைந்திருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த ஒரு-ஒரு குழுவும் இப்புவியில் இல்லை என்பதை நான் அறிவேன். தேவன் நம்மை இணைபிரியாதவர்களாக்கி, வரவிருக்கும் அந்த இராஜ்யத்திலும், நாம் இணைபிரியாதவர்களாகவே இருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது.

தேவன் ஒலிநாடாவில் பேசிய செய்தியோடும், தேவனுடைய தீர்க்கதரிசியோடும், நம்மைப் போல் இணைந்திருக்கும் ஒரு குழு பூமியில் இல்லை. நாம் இணைந்திருக்கிறபடியால், தீர்க்கதரிசி யோடும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் அந்தப் புதிய இராஜ்யத்தில் நாம் பிரிக்க முடியாதவர்களாக இருப்போம். அதைப் பார்க்கிலும் சிறப்பானது வேறெதுவுமேயில்லையே!

இவைகள் நம்முடைய ஜீவியத்தின் மிக மகத்தான நாட்களாயிருக்கின்றன. நாம் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய கடைசி கால செய்திக்காகவும் ஒரு முட்டாளாக இருப்பதில் நாம் முழுமையாக திருப்தியடைந்திருக்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள் என்று கூறுகிறபடியால் நாம் ஒரு பைத்தியம் என்றே அழைக்கப்பட வேண்டும்.

நாம் ஒரே சபையைச் சேர்ந்தவர்கள். நாம் அதில் சேரவில்லை, நாம் அதில் பிறந்தோம். ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூடி கிறிஸ்துவை நேசித்து, “ஓ, 'இயேசுவே,' நான் உம்மை எப்படியாய் நேசிக்கிறேன்!” என்று கூறுகிறோம்.

நாம் உலகத்திற்கு ஒரு பைத்தியமாக இருக்கலாம், ஆனால் பிதாவானவர் நம்முடைய நாளில் தம்மைப் பற்றிய வெளிப்பாட்டை நமக்குக் கொடுத்துள்ளார், தேவன் அதன்மேல் தோலை உடுத்தியிருக்க, அது அவருடைய மணவாட்டியாகிய நம்மை அவரிடம் இழுத்துள்ளது.

இது எவ்வளவு எளிமையானது என்பதை நாம் நேசிக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், இது எவ்வளவு ஆழமானது. ஆனால் அதைப் பார்க்க நீங்கள் ஒரு வெளிப்பாட்டை பெற்றிருக்க வேண்டும், நாம் பெற்றிருக்கிறோம்.

அவர் தம்மை தம்முடைய சபையில், மனித திரையில் மறைத்துக்கொண்டு, உங்கள் விசுவாசமும் என் விசுவாசமும் ஒன்றுசேர்ந்து தேவனுடைய ஒரே பிரிவாகும்போது, அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். என்னால் உங்களையல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; நாம் தேவனில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. எனவே, அது ஒன்றுசேர்ந்த பிரிவாகிறபோது, அது இணைப்பாகிறது. தேவன் அந்த நோக்கத்துக்காகவே என்னை அனுப்பினார்; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்; அது நடக்கிறது. பாருங்கள், அது அப்படித்தான் என்று முற்றிலுமாக உறுதிபடுத்தப்படுகிறது.

அந்த நாளில் எம்மாவுக்கு சாலையில் நடந்து சென்ற மனிதர்களைப் போன்று நாம் இருக்கிறோம். இந்நாளில் அவர் நம்மிடம் பேசுவதை நாம் கேட்கிறோம். பின்னர் நாம் அவருடன் மட்டுமே ஒருங்கிணைந்திருக்கும்படியாக அவரை நம்முடைய வீடுகளுக்கு அழைக்கிறோம். அப்பொழுது அவர் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்கிறார், நித்திய ஜீவ அப்பத்தை பிட்கிறார். நாம் அவரை உடனடியாக அடையாளங் கண்டுகொள்கிறோம். அப்போது வழியில் அவர் நம்முடன் பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று நாம் கூறுகிறோம்.

ஒவ்வொரு வாரமும் நாம் "இந்த வாரம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்றும், நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்றும்" மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிவந்து, ஆச்சரியப்படுகிறோம். நாம் ஒருவரோடொருவர் மேற்கோள்களைப் பகிர்ந்துகொண்டு, "அவர் கூறினபோது நீங்கள் கேட்டீர்களா": என்று அதைக் குறித்து வாரம் முழுவதும் பேசுவோம்.

“என்னுடைய சிறந்த வேலைப்பாட்டை உருவாக்க எனக்கு நான்காயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன; ஆனால் இப்போது நான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக மற்றொரு சிறந்த வேலைப்பாட்டை உருவாக்கி வருகிறேன், நீங்கள், என்னுடைய மணவாட்டி. என்னுடைய முதல் சிறந்த வேலைப்பாட்டை, என்னுடைய வார்த்தையை, உருவாக்கியதைப் போலவே, அவருடைய ஒருபோதும் மாறாத முறையால் அதைச் செய்துள்ளேன். அந்தவிதமாகத்தான் நான் என்னுடைய சிறந்த வேலைப்பாடுகளை உருவாக்குகிறேன், ஏனென்றால் அது பரிபூரணமான வார்த்தையாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் ஒரு பரிபூரணமான சிறந்த வேலைப்பாடாய் இருக்க முடியும்.”

என் சகோதரனே இதைக் குறித்து மோசமாக எண்ண வேண்டாம். ஒரு நிமிடம் சிந்தனை செய்து பார். மணவாட்டியை அவருக்கென்று பெற்றுக்கொள்ள அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒன்றை எடுத்திருப்பாரானால், அவர் வேறொரு சிருஷ்டிப்பை ஒருபோதும் சிருஷ்டிக்கவில்லை. அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டார். அப்படியானால், அவர் வார்த்தையாயிருந்தால், அவருடைய மணவாட்டி என்னவாயிருக்க வேண்டும்? அவளும் மூல வார்த்தையாக அமைந்திருந்து, வார்த்தையில் உள்ள ஜீவிக்கும் தேவனைக் கொண்டிருக்க வேண்டும்.

ருசித்து புசிக்கிற ஒரு குதூகலத்தைப் பற்றிப் இங்கே பேசுகிறோம். நாம் மூல சிருஷ்டிப்பின் பாகமாக இருக்கிறோம். நாம் மூல வார்த்தையின் பாகமாக இருக்கிறோம். தேவன் நம்மில் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். நாம் அவருடைய சிறந்த வேலைப்பாடாய் இருக்கிறோம். நாம் அவருடைய தீர்க்கதரிசியுடன் இணைந்திருக்கும் குழுவாக இருக்கிறோம். நாம் அவருடைய தீர்க்கதரிசியோடும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் பிரிக்க முடியாதவர்களாய் இருக்கிறோம். நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம்.

அவர் எங்களுக்கு சிறந்த வேலைபாடு 64-0705 என்ற செய்தியைக் கொண்டு வருகையில், நித்திய ஜீவ வார்த்தைகளை தேவன் பேசி எங்களுக்கு வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கையில், அது எங்களுக்குள் கொழுந்துவிட்டு எறிவது போல உங்களுடைய இருதயமும் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்று நீங்களும் கூட விரும்பினால், மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்றுசேர்ந்து கூடிவந்து அவரை எங்களுடைய வீடுகளிலும், எங்களுடைய சபைகளிலும் வரவேற்கையில், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஏசாயா 53:1-12
மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19