
அன்புள்ள இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பே,
கண்ணாடியைப் பார்த்து, தன்னைப் பார்ப்பதை உணராத சிறு பையனைப் போல, நாம் இப்பொழுது தேவனுடைய கண்ணாடியை, அவருடைய வார்த்தையைப் பார்த்துக்கொண்டு, பிதாவே, அது நான்தான், நான் உம்முடைய வார்த்தையின் பிரதிபலிப்பாயிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம். நான் வெளிப்படுத்தப்பட்ட உம்முடைய வார்த்தையாயிருக்கிறேன். நான் ஒரு விசுவாசி, நான் உம்முடைய மணவாட்டி!
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும் நம்முடைய விசுவாசத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. விசுவாசிகள், பாவனை விசுவாசிகள் அல்லது அவிசுவாசிகள்: ஆகிய மூன்று வகைகளில் ஒன்றிற்குள் நாம் பொருந்த வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார். நாம் அவருடைய கண்ணாடியில் பார்த்தபோது, "நான் காண்கிறேன், எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமில்லாமல், நாம் விசுவாசிகள். ஒரு விசுவாசி மட்டுமே ஒரு சிறு எழுத்தையும், ஒரு சிறு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பான்; பிதாவே, அது நான்தான்” என்று நாம் சத்தமிட்டோம்.
ஒலிநாடாவில் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைத் தவிர, நம்மைத் திருப்திப்படுத்தி, ஜீவனைத் தரக்கூடியது எதுவுமே இல்லை. ஜீவன் வரக்கூடிய ஒரே வழி, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமான, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமேயாகும்.
ஆயத்தமாகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2022 அன்று இன்னும் நிறைய வரவிருக்கிறது. விளக்கைப் போடப்போகிற ஒரு மனிதன் இங்கே இருக்கிறார், அவர் அதைச் செய்யும்போது, தேவன் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசி, அவருடைய வார்த்தையைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தப்போகிறபடியால், ஆமென், அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை என்று சத்தமிட்டு, கூச்சலிடுவதனால் நம் அனைவருக்கும் தொண்டை வலி உண்டாக்கும்.
இன்றுள்ள அதே சூரிய வெளிச்சம், ஜூலை மாதத்தில் அறுவடைக்கென்று தானியத்தை முதிர்வடையச் செய்வது போல. நான் கூறுவதன் அர்த்தம் புரிகிறதா? இப்பொழுது டிசம்பர் மாதத்தில் உள்ள சூரிய வெளிச்சம் ஜூலை மாதத்தில் இருந்தால் பயனில்லை. அது அதிக வெப்பமுள்ளதாயிருக்க வேண்டும். ஏனெனில் கோதுமை முதிர்ச்சியடைந்து, அதை ஏற்றுக்கொள்ள தயாராயுள்ளது. ஆமென்! நிச்சயமாக அது அப்படித்தான் உள்ளது.
அறுவடை ஆயத்தமாயுள்ளதே! நாம் மிகவும் வளர்ச்சியடைந்து, அதை உட்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறோம். இயேசு ஒரு பந்தியை வைத்துள்ளார், அங்கே தேவனுடைய பரிசுத்தவான்கள் இந்நாளின் பரிபூரணமான ஆகாரத்தை புசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் இன்றைக்கு நம்முடன் இருக்கிறார் என்பதை சுவிசேஷ ஒளி ரூபகாரப்படுத்தி நிரூபிக்கிறது. பரிசுத்தவான்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய ஆதாரத்தைப் புசித்துக்கொண்டு, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
நம்முடைய மேய்ப்பர், பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி மூலம் பேசும்போது, அந்த திருப்பானைத் திருப்பி, வெளிப்படுத்தலின் ஒளியை பிரகாசிக்கச் செய்யும்போது, அவர் நம்முடைய நாளில் யாராயிருக்கிறார் என்று அவர் நமக்குச் சொல்வார். அவர் சத்தமிட்டு நம்மை எச்சரிப்பார், நீங்கள் உறக்கத்தில் இல்லை என்றே நான் நம்புகிறேன்.
நோவா தன்னுடைய நாளில் ஒளியாக இருந்தான். மோசே தன்னுடைய காலத்தின் ஒளியாக இருந்தான், இப்பொழுது நான் உங்களுடைய நாளில் ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியை உங்களுக்கு அனுப்பியுள்ளேன், அவர் மூலம் என்னுடைய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவர் உங்களுடைய நாளில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அவரே இந்நாளின் வெளிச்சமாய் இருக்கிறார்.
கடந்த முறை நான் இங்கே பூமியில் மாம்சத்தில் இருந்தபோது, நான் அசலான ஐந்து அப்பங்களை எடுத்து, அந்த அப்பங்களை பிட்க ஆரம்பித்தேன். அந்த அசலானதிலிருந்து, நான் அப்பமுண்டாக்கி, அதினால் ஐயாயிரம் பேரைப் போஷித்தேன்.
அதன்பின்னர் நான் ஒரு மீனைப் பெற்றுக்கொண்டு, அந்த மீனிலிருந்து இன்னொரு மீனையும் இன்னொரு மீனையும் உண்டாக்கி ஐயாயிரம் பேரைப் போஷித்தேன்.
ஆனால் உங்களுடைய நாளில், என்னிடம் எதுவுமே இல்லை. நான், "அது அங்கே உண்டாகக்கடவது என்று கூறுங்கள்" என்று உரைத்தேன், அங்கே எதுவுமே இல்லாமலிருந்தும், அது உண்டானது. எனக்கு ஒரு அணிலும் இல்லாதிருந்தது; அங்கு ஒன்றுமே இல்லாதிருந்தது. நான், “உண்டாகக்கடவது" என்று கூறின போது, அங்கே உண்டாயிருந்தது. என்னுடைய வார்த்தை தவறாதது, அது நிறைவேற வேண்டும்.
இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, அவர்கள் தங்களுடைய பிரயாணத்தின்போது, அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய மன்னாவைப் புசித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தனர். அந்த அக்கினி ஸ்தம்பம் இயேசு கிறிஸ்துவாயிருந்தது.
இன்றைக்கு அவர் அதே அக்கினி ஸ்தம்பமாய், அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற இங்கே பூமியில் இருந்தபோது செய்த அதே காரியங்களை செய்துகொண்டு மீண்டும் நம்முடன் இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00., மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 63-1229M “விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்”, என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், எங்களுடைய மேய்ப்பர், பரிசுத்த ஆவியானவர், அக்கினி ஸ்தம்பம், அவருடைய வெளிப்பாட்டின் ஒளியை பிரகாசிக்கச் செய்யவுள்ளபடியால், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
ஆதியாகமம் 1:3, அதிகாரம் 2
சங்கீதம் 22
யோவேல் 2:28
ஏசாயா 7:14, 9:6, 28:10, 42:1-7
பரி. மத்தேயு 4:12-17, அதிகாரங்கள் 24 மற்றும் 28
பரி. மாற்கு 16-ம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம்